பொன்னாளை கல்யாணம் கட்டிய புதிதில், மொட்டையாக மரங்கள் எதுவுமின்றி இருந்த தன் மாமனார் வீட்டு வாசக்களத்தில், ஒரு பூவரசங்கொம்பை கொண்டு நட்டுவைத்த காளி, இந்த பன்னிரெண்டு வருடத்தில் அது வளர்ந்து, கிளைபடர்ந்து, நிழல்பரப்பி, பூச்செறிந்து நிற்பதை, அதன்கீழ் போட்ட ஒரு கயிற்றுக்கட்டிலில் படுத்தபடி தனிமையில் ரசித்துக்கொண்டிருப்பதாக ஆரம்பிக்கும் அந்த முதல் அத்தியாயத்திலேயே நாவலின் கதை தொடங்கிவிடுகிறது.
26 Feb 2014
மாதொருபாகன் - பெருமாள் முருகன்
பொன்னாளை கல்யாணம் கட்டிய புதிதில், மொட்டையாக மரங்கள் எதுவுமின்றி இருந்த தன் மாமனார் வீட்டு வாசக்களத்தில், ஒரு பூவரசங்கொம்பை கொண்டு நட்டுவைத்த காளி, இந்த பன்னிரெண்டு வருடத்தில் அது வளர்ந்து, கிளைபடர்ந்து, நிழல்பரப்பி, பூச்செறிந்து நிற்பதை, அதன்கீழ் போட்ட ஒரு கயிற்றுக்கட்டிலில் படுத்தபடி தனிமையில் ரசித்துக்கொண்டிருப்பதாக ஆரம்பிக்கும் அந்த முதல் அத்தியாயத்திலேயே நாவலின் கதை தொடங்கிவிடுகிறது.
23 Feb 2014
அசீஸ் பே சம்பவம் - அய்ஃபர் டுன்ஷ்
சிறப்பு பதிவு- கடலூர் சீனு
கொண்ட கலைக்கும், அதன் கலைஞர்களுக்குமான உறவை, அதன் முரண் இயக்கங்களை கருப்பொருளாக கொண்ட கதைகள் என்றுமே முக்கிய எழுத்தாளர்களின் அகம் குவியும் களம்.
தமிழில் உடனடியாக நினைவில் எழுவது இரு துருவங்களின் பிரதிநிதியாக, அசோகமித்திரனின் புலிக் கலைஞன் மற்றும் ஜெயமோகனின் லங்கா தகனம். இன்றைய உலக இலக்கிய வரிசையில் இக் கருப்பொருளுடன், மனித அக விசித்திரங்களின், புரிந்துகொள்ள இயலா மர்ம இயல்புகளின், கலை வெளிப்பாடாக வெளிவந்திருக்கும், சித்தரிப்பின் செறிவும், உணர்சிகரத்தின் ஆழமும் கூடிய துருக்கிதேச குறுநாவல் 'அஸீஸ் பே சம்பவம் '.
6 Feb 2014
பெத்ரு பாராமொ - வொன் ரூல்ஃபோ
வொன் ரூல்ஃபோவின் உலகப் புகழ்பெற்ற 'பெத்ரு பாராமொ' நினைவுகளின் புத்தகம்.
அதன் துவக்கத்தில், மரணப்படுக்கையில் இருக்கும் தொலோரெஸ் என்ற பெண், தன்
மகன் வொன்னிடம் கொமாலா என்ற ஊருக்குச் சென்று அவன் தன் தந்தை பெத்ரு
பாராமொவைச் சந்திக்க வேண்டுமென்று சொல்கிறாள். வொன் தன் பயணத்தைத் துவக்கி,
வெறிச்சோடிக் கிடக்கும் கொமாலா சென்று சேர்கிறான். வாழ்பவர்கள்,
இறந்தவர்கள் என்று இருவகைப்பட்ட பலரின் நினைவுகளைக் கொண்டும் தன் தந்தையை
அறிந்து கொள்கிறான்.
இந்த நாவல் விவாதிக்கும் பெரிய விஷயங்களைப் பேசுவதற்குமுன் இந்த நாவலின் நடையைப் பேசுவது பொருத்தமாக இருக்கும். மாய யதார்த்தத்தின் போக்கைத் தீர்மானித்த முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் ரூல்ஃபோ என்று சொல்லப்படுகிறது. இந்த நூலில் அருமையான முறையில் மாய யதார்த்த பாணி கதைசொல்லலை நிகழ்த்தியிருக்கிறார் இவர். பெத்ரு பாராமொ என்ற மனிதனின் முழுக்கதையும் துண்டுத் துணுக்குகளாக, காலக்கணக்கு கலைக்கப்பட்ட வரிசையில் சொல்லப்படுகிறது. ஏதோ நாம் இருளில் இருப்பது போலவும் நாமிருக்கும் அறையின் சுவற்றில் ஒரு அழகிய ஓவியம் இருப்பதைப் பார்ப்பது போலவும் ஒரு அனுபவத்தை இந்தக் கதை தருகிறது. அறையில் ஒரு ஜன்னல் திறந்து கொள்கிறது. ஒளிக்கீற்று ஒன்று ஓவியத்தின் ஒரு பகுதியை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அந்த ஜன்னல் மூடிக் கொள்கிறது, வேறொன்று திறக்கிறது. இப்போது ஓவியத்தின் வேறொரு பகுதி வெளிச்சமிடப்படுகிறது. ஓவியம் அதன் முழுமையான வடிவில் மெல்ல மெல்ல நம் மனக்கண்ணில் துலக்கம் பெறத் துவங்குகிறது.
இந்த நாவல் விவாதிக்கும் பெரிய விஷயங்களைப் பேசுவதற்குமுன் இந்த நாவலின் நடையைப் பேசுவது பொருத்தமாக இருக்கும். மாய யதார்த்தத்தின் போக்கைத் தீர்மானித்த முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் ரூல்ஃபோ என்று சொல்லப்படுகிறது. இந்த நூலில் அருமையான முறையில் மாய யதார்த்த பாணி கதைசொல்லலை நிகழ்த்தியிருக்கிறார் இவர். பெத்ரு பாராமொ என்ற மனிதனின் முழுக்கதையும் துண்டுத் துணுக்குகளாக, காலக்கணக்கு கலைக்கப்பட்ட வரிசையில் சொல்லப்படுகிறது. ஏதோ நாம் இருளில் இருப்பது போலவும் நாமிருக்கும் அறையின் சுவற்றில் ஒரு அழகிய ஓவியம் இருப்பதைப் பார்ப்பது போலவும் ஒரு அனுபவத்தை இந்தக் கதை தருகிறது. அறையில் ஒரு ஜன்னல் திறந்து கொள்கிறது. ஒளிக்கீற்று ஒன்று ஓவியத்தின் ஒரு பகுதியை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அந்த ஜன்னல் மூடிக் கொள்கிறது, வேறொன்று திறக்கிறது. இப்போது ஓவியத்தின் வேறொரு பகுதி வெளிச்சமிடப்படுகிறது. ஓவியம் அதன் முழுமையான வடிவில் மெல்ல மெல்ல நம் மனக்கண்ணில் துலக்கம் பெறத் துவங்குகிறது.