10 Jul 2020

ஆப்பிரிக்கக் காடுகளில் ஓர் அற்புத உலா - நீர்யானை முடியுடன் இருந்தபோது முதலிய ஆப்பிரிக்கக் கதைகள், பாவண்ணன்

க.நாகராசன்
 

சுமார் 13000 ஆண்டுகளுக்கு முன்னர், நவீன மனிதனின் மூதாதையர்கள் ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றி அனைத்து கண்டங்களிலும் பரவினர் என்பது மானுடவியலாளர்களின் கணிப்பு. ஏன் முதல் மனிதன் ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்ற வேண்டும், வேறு கண்டத்தில் தோன்றி இருக்கக் கூடாதா, என்கிற கேள்விக்கு பல பதில்கள் தரப்படுகின்றன. ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் தழைத்துள்ள காடுகள் பல்லுயிரிகளின் தோற்றத்திற்கு ஆதரவாக உள்ளன என்பது அவற்றில் ஒரு பதில், மனிதக் குரங்குகளின் பல வகைப்பாடுகள் காடுகளெங்கும் காணக் கிடைக்கின்றன என்பது ஒரு சான்று  ஆகும்.