tag:blogger.com,1999:blog-4760839934863796836.post1910962525743324836..comments2024-01-17T08:52:15.595+05:30Comments on ஆம்னிபஸ்: சுஜாதாவின் குறுநாவல்கள் -மூன்றாம் தொகுதி -கணேஷ்-வசந்த்Giri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-78090323066906901502013-04-05T21:26:33.852+05:302013-04-05T21:26:33.852+05:30வழக்கம்போல பால ஹனுமான் கலக்கிவிட்டார்! சுஜாதா என்ற...வழக்கம்போல பால ஹனுமான் கலக்கிவிட்டார்! சுஜாதா என்றவுடன் அவருக்கு ஹனுமான் பலம் வந்துவிடுகிறது!<br /><br />//உன்னைக் கண்ட நேரமெல்லாம்: ‘ப்ரியா‘ படித்தவர்கள் இந்த கதையை அதன் தொடர்ச்சியாக பார்க்கலாம். மற்றவர்கள் புதிய பார்வையோடு நோக்கலாம். ஒரு நடிகையை மிரட்டும் கடிதங்கள் கணேஷ்-வசந்த்தை எங்கெல்லாம் இழுத்துச் செல்கின்றது என்பதே கதை.<br />//<br />இந்த கதையில்தானே வசந்த் கதையின் ஆரம்பத்தில் "பாஸ், பஞ்சு அருணாசலம் மேல கேஸ் போடணும் பாஸ் (ப்ரியா கதையை சொதப்பினதிற்காக!)" என்று சொல்வார்!<br />//<br />மீண்டும் ஒரு குற்றம்: சுஹாசினி தயாரித்த தொடர்களில் இந்த கதை இடம் பெற்றது. மர்மங்களுக்கும் திகிலுக்கும் பஞ்சம் இல்லாத கதை.<br />//<br />இந்த தொலைக்காட்சி தொடரில் நடிகர் சுரேஷ் கணேஷாகவும் ஆதிராஜ் வசந்தாகவும் நடித்தார்கள்.<br />முதலில் என்னவோ போலிருந்தது. அப்புறம் சரியாகவே பொருந்தினார்கள். இதுவரை வந்த கணேஷ், வசந்திற்கு இவர்கள் எவ்வளவோ பரவாயில்லை.<br />Essex Sivahttps://www.blogger.com/profile/15425385325707150277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-66972752992432077532013-03-27T10:21:01.640+05:302013-03-27T10:21:01.640+05:30Thanks Balhanuman, there are some comments from pe...Thanks Balhanuman, there are some comments from people, that i dwell too much into story without writing the review, So i told myself not to get carried away by the stories, write the concepts that tethers the 13 stories. Once again thanks for your comments :-)Balajihttps://www.blogger.com/profile/16416807883515554844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-30376456691668300492013-03-26T22:18:29.055+05:302013-03-26T22:18:29.055+05:30உன்னைக் கண்ட நேரமெல்லாம்: ‘ப்ரியா‘ படித்தவர்கள் இந...உன்னைக் கண்ட நேரமெல்லாம்: ‘ப்ரியா‘ படித்தவர்கள் இந்த கதையை அதன் தொடர்ச்சியாக பார்க்கலாம். மற்றவர்கள் புதிய பார்வையோடு நோக்கலாம். ஒரு நடிகையை மிரட்டும் கடிதங்கள் கணேஷ்-வசந்த்தை எங்கெல்லாம் இழுத்துச் செல்கின்றது என்பதே கதை.<br /><br />மீண்டும் ஒரு குற்றம்: சுஹாசினி தயாரித்த தொடர்களில் இந்த கதை இடம் பெற்றது. மர்மங்களுக்கும் திகிலுக்கும் பஞ்சம் இல்லாத கதை. விடுமுறைக்காக மெர்க்காரா செல்லும் கணேஷ்-வசந்துக்கு ஒரு சவால் காத்திருக்கிறது. அவர்கள் ஜெயித்தார்களா என்பது….படித்து தெரிந்து கொள்ளுங்கள். சதுரங்க ஆட்டம் போல சிந்தனைக்கு வேலை வைக்கும் கதை இது.<br /><br />அம்மன் பதக்கம்: அம்மன் கோவிலில் இருக்கும் ஒரு விலை உயர்ந்த பதக்கம் காணாமல் போகிறது. பதக்கதோடு ஒரு பெண்ணும் ஒரு பைத்தியக்காரனும் சம்பந்தப் படுகிறார்கள். பதக்கத்தை கணேஷ் வசந்த் கண்டு பிடித்து மேலும் முடிச்சுக்களை அவிழ்க்கும் சுவாரசியங்கள் நிறைந்த கதை.<br /><br />மெரீனா: மெரீனா கடற்கரையை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை. மெரீனாவில் பொழுது போக்கிற்காக செல்லும் ஒரு பணக்கார இளைஞன் கொலை குற்றத்தில் மாட்டிக்கொள்கிறான். சாதாரணமாக இதை அணுகும் கணேஷ்-வசந்த் இதில் இன்னும் புதை குழிகளைக் கண்டு பிடிப்பதே கதை. இறுதி முடிவு நம்மை திருப்திபடுத்தும் விதமாக இருக்கும்.<br /><br />புகார்..புகார்..புகார்: ஒரு pipe ரிப்பேர் விஷயம் கணேஷ்-வசந்தை பாடாய் படுத்தும் சுவாரசியமான கதை. அள்ள அள்ள குறையாத பணம் போல் இதில் அள்ளக் குறையாத பிணங்கள் நம்மை பயமுறுத்தும். Raskol Nikov Syndrome என்ற சிந்தாந்தத்தை வைத்து பின்னப்பட்ட கதை. சட்டம் படித்தவர்கள், சட்டம் பயிலுவோர் இந்தக் கதையை அதிகம் ரசிப்பார்கள்.<br /><br />ஐந்தாவது அத்தியாயம்: மர்மக் கதையில் வரும் சம்பவங்கள் நம் வாழ்க்கையில் நடந்தால்? அதுவும் வரிக்கு வரி நடந்தால்? இது தான் இந்தக் கதையின் முடிச்சு. பிரபல இருதய மருத்துவர் ஒருவரின் மனைவிக்கு இப்படி ஒரு நிலை வருகிறது. அதுவும் அவள் வாசிக்கும் மர்மக் கதையின் ஐந்தாவது அத்தியாயம் முடிவதற்குள் அவள் கொலையுண்டு போவாள் என்கிறது கதை. அந்த கொலை நடப்பதற்குள் கணேஷ் -வசந்த் அதை தடுத்து நிறுத்துவார்களா என்பது suspense. விறுவிறுப்பு கம்மி என்றாலும் (என்னை பொறுத்தவரையில்) இறுதியில் முடிச்சுக்கள் அவிழும்போது கணேஷின் மூளை இன்சூர் செய்யப்பட்டதோ என்னும் கேள்வி நம் மனதில் எழுவது என்னவோ நிஜம்.<br /><br />இப்படி சுவாரசியம் குறையாத பதிமூன்று கதைகள் இந்த தொகுப்பில்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-14941754026621922412013-03-26T22:17:06.318+05:302013-03-26T22:17:06.318+05:30இனி கதைகளைப் பற்றி பார்ப்போம்.
பாதி ராஜ்ஜியம்: நை...இனி கதைகளைப் பற்றி பார்ப்போம்.<br /><br />பாதி ராஜ்ஜியம்: நைலான் கயிற்றில் அறிமுகம் ஆன கணேஷை நாம் மறுபடியும் டெல்லியில் சந்திக்கிறோம். நீரஜா என்னும் பெண் அவனைத் தேடி வருகிறாள்-அவள் பணக்கார அப்பாவின் சார்பாக. மோதலில் ஆரம்பிக்கும் கதை போக போக ஒரு blackmail நாடகத்தில் சங்கமித்து இறுதியில் ஒரு எதிர்பாராத திருப்பதோடு முடிகிறது. பாதி ராஜ்ஜியம் அந்த பணக்காரர் கணேஷுக்கு கொடுக்கும் பரிசு. தனியாக இருந்தாலும் கணேஷ் காட்டும் சாமர்த்தியம், ஒவ்வொரு நூலாக அலசி ஆராய்ந்து அவன் முடிவை யூகிக்கும் தேர்ச்சி நம்மை வியக்க வைக்கும்.<br /><br />ஒரு விபத்தின் அனாடமி: டெல்லியின் பரபரப்பான சந்து பொந்துகளில் ஒன்றில் ஒரு கோர விபத்து நடக்கிறது. விபத்தில் பாதிக்க பட்டவரும் அந்த விபத்தை பார்த்த ஒரே சாட்சியும் கணேஷின் உதவியை நாடுகிறார்கள். எந்த தடயமும் இல்லாமல் கணேஷ் விபத்திற்கு காரணமானவனைக் கண்டுபிடிக்கும் கதை இது. வெறும் கற்பனையாக மட்டும் இல்லாமல் மூளைக்கு நல்ல வேலை கொடுக்கிறார் சுஜாதா. ஒவ்வொரு செங்கல்லாக கணேஷ் நகர்த்தும்போதும், இறுதியில் குற்றவாளியைக் கண்டுபிடித்து அவனை அணுகும் பொது குடுக்கப்படும் poetic justice நம்மை நிமிர்ந்து உக்கார வைக்கும். A very excellent story.<br /><br />மாயா: இது போலி சாமியார்களின் காலம். இந்தக் கதையும் ஒரு ஆசிரமத்தில் நடக்கிறது. வழக்கு ஒன்றை நடத்துவதற்காக ஒரு ஆசிரமம் செல்லும் கணேஷ் அங்கு எதிர்கொள்ளும் சவால்களே கதை. கூடுதல் ஊக்கமாக இதில் வசந்த் அறிமுகமாகிறான். முதல் கதையிலேயே வசந்த்தின் குறும்புத்தனங்கள் நம்மை ‘அட’ போட வைக்கின்றன. உதாரணமாக:<br /><br />“ஒன்று: வாசுதேவனை போய் பார்க்க வேண்டும்”.<br /><br />“ஒ.கே.”<br />.<br />“இரண்டு: இந்த கேஸ் சம்பந்தப்பட்ட எல்லா தகவல்களும் வேண்டும்”.<br /><br />“ஒ.கே”<br /><br />“மூன்று: ஒரு பாட்டில் பீர்”.<br /><br />“பீரா? எப்பொழுது?”<br /><br />“இப்பொழுதே!”<br /><br />“ரெடி”. என்றான் சிரித்துக்கொண்டே.<br /><br />இந்தக் கதை நிறைய விமர்சனங்களை சந்தித்ததாக சொல்வார்கள். ஆனால் ஒரு விறுவிறுப்பான கதை என்பதைத் தாண்டி ஒன்றும் ஏடாகூடமாக நமக்கு இதில் தெரிவதில்லை-கூர்ந்து வாசித்தால்.<br /><br />காயத்ரி: இந்த பெயரில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்த படம் பற்றி நான் அறிவேன். ஆனால் கதை இன்னும் சுவாரசியமாக இருந்தது. கதாசிரியரே சொல்லுவதாக அமைந்திருக்கும் இந்தக் கதையில் கணேஷ்-வசந்த்திற்கு வேலை கம்மிதான். ஆனால் இறுதியில் ஈடு கொடுக்கிறார்கள் அபாரமாக. அவர்கள் இருவரையும் விட கதாநாயகி காயத்ரி நம் மனத்தில் அதிக இடம் பிடிக்கிறாள்.<br /><br />விதி: ஒரு பஸ் விபத்து, காணாமல் போன ஒரு அண்ணன், அழகான தங்கை, இதில் என்ன முடிச்சுக்கள் இருக்கும்? உண்டு என்கிறது விதி. சம்பந்தமே இல்லாத முடிச்சுக்களை வைத்துக்கொண்டு கணேஷ் ஓட்ட வைக்கும் இடங்கள் புத்திசாலித்தனத்தின் ஆச்சர்ய உதாரணங்கள்.<br /><br />மேற்கே ஒரு குற்றம்: கணேஷை ஒரு நடனக் குழுவை சேர்ந்த பெண் காண வருகிறாள். ஆனால் எதுவும் சொல்லும் முன் கொல்லப் படுகிறாள். விசாரணை கணேஷ்-வசந்த்தை ஜெர்மனி பக்கம் ஒரு போதை மருந்து கடத்தல் கும்பலிடம் கொண்டு செல்கிறது. அவர்கள் அதை சமாளிக்கும் விதமே இந்த கதை. காகிதத்தில் வரையப்படும் வட்டங்கள், கணேஷ் அதை வைத்து ஆடும் ஆட்டம் அருமையான இடங்கள்.<br /><br />மேலும் ஒரு குற்றம்: ஒரு அனாமநேய டெலிபோன் அழைப்பு வருகிறது கணேஷுக்கு. பிறகு அழைத்தவர் கொலையுண்டு போகிறார். ஒரே சாட்சி கணேஷ்! எப்படி இருக்கும்? கொலையாளியின் சாதுர்யமான அணுகுமுறைகள் கணேஷை குழப்ப வைக்கின்றன, நம்மையும் சேர்த்து.<br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-36128429206251863772013-03-26T22:14:55.674+05:302013-03-26T22:14:55.674+05:30அன்புள்ள சிவா,
இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள்...
...அன்புள்ள சிவா,<br /><br />இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள்...<br /><br />1-பாதி ராஜ்ஜியம்<br />2-ஒரு விபத்தின் அனாடமி<br />3-மாயா<br />4-காயத்ரி<br />5-விதி<br />6-மேற்கே ஒரு குற்றம்<br />7-மேலும் ஒரு குற்றம்<br />8-உன்னைக் கண்ட நேரமெல்லாம்<br />9-மீண்டும் ஒரு குற்றம்<br />10-அம்மன் பதக்கம்<br />11-மெரீனா<br />12-புகார்..புகார்..புகார்<br />13-ஐந்தாவது அத்தியாயம்<br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-55688942671112123222013-03-25T10:33:04.811+05:302013-03-25T10:33:04.811+05:30Thanks Siva,Will update next week, the plan was to...Thanks Siva,Will update next week, the plan was to write the review without telling the story, So forgot to update the story names, and i have to thank Natbas for significant inputs in the reviewBalajihttps://www.blogger.com/profile/16416807883515554844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4760839934863796836.post-84976067939796376672013-03-23T15:34:42.602+05:302013-03-23T15:34:42.602+05:30சுவாரசியம். இந்த தொகுதியில் இருக்கும் கதைகள் பெயர...சுவாரசியம். இந்த தொகுதியில் இருக்கும் கதைகள் பெயரைச் சொல்லியிருக்கலாமே ஸார். எந்தெந்த கதைகள் இருக்கின்றன என்று தெரிந்துகொள்ள குறுகுறுப்பு!<br /><br />சிவா கிருஷ்ணமூர்த்திEssex Sivahttps://www.blogger.com/profile/15425385325707150277noreply@blogger.com