tag:blogger.com,1999:blog-47608399348637968362024-03-14T11:43:46.956+05:30ஆம்னிபஸ்Giri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger501125tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-5349233458287103462020-07-10T07:03:00.001+05:302020-07-10T07:07:57.742+05:30ஆப்பிரிக்கக் காடுகளில் ஓர் அற்புத உலா - நீர்யானை முடியுடன் இருந்தபோது முதலிய ஆப்பிரிக்கக் கதைகள், பாவண்ணன் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<b>க.நாகராசன்</b></div>
<div style="text-align: center;">
<b> </b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுமார் 13000 ஆண்டுகளுக்கு முன்னர், நவீன மனிதனின் மூதாதையர்கள் ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றி அனைத்து கண்டங்களிலும் பரவினர் என்பது மானுடவியலாளர்களின் கணிப்பு. ஏன் முதல் மனிதன் ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்ற வேண்டும், வேறு கண்டத்தில் தோன்றி இருக்கக் கூடாதா, என்கிற கேள்விக்கு பல பதில்கள் தரப்படுகின்றன. ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் தழைத்துள்ள காடுகள் பல்லுயிரிகளின் தோற்றத்திற்கு ஆதரவாக உள்ளன என்பது அவற்றில் ஒரு பதில், மனிதக் குரங்குகளின் பல வகைப்பாடுகள் காடுகளெங்கும் காணக் கிடைக்கின்றன என்பது ஒரு சான்று ஆகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0sbNO7ONEC2zJ2fuQjD65g3iP3v7tH1hhYTp1Zs1Jap16QM7t5FU_KX9IxHhrxOtsferRPKZ68DtFMaGIGv_w8Izrt9lO5Cq6RVEIJoPE548VCdBIOBlKlk-lX8Xm0tDbADhDWi9IqQc/s1600/neeryaanai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="744" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0sbNO7ONEC2zJ2fuQjD65g3iP3v7tH1hhYTp1Zs1Jap16QM7t5FU_KX9IxHhrxOtsferRPKZ68DtFMaGIGv_w8Izrt9lO5Cq6RVEIJoPE548VCdBIOBlKlk-lX8Xm0tDbADhDWi9IqQc/s400/neeryaanai.jpg" width="310" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
வளமான காடுகள் ஆப்பிரிக்காவிற்கு இயற்கை அளித்த கொடை. கென்யா உள்ளிட்ட பல நாடுகளில் முக்கிய வருமானமே கானுயிர் சிறப்பு சுற்றுலாக்கள் தான். அத்தகைய ஆப்பிரிக்க காடுகளில் காணப்படும் அரிய விலங்குகளைப் பற்றிய சுவைமிக்க முப்பத்தாறு நாட்டுப்புற கதைகள், வண்ணத்திலும், கறுப்பு வெள்ளையிலுமான விலங்குகளின் அழகிய ஓவியங்கள், ஒவ்வொரு விலங்கின் வாழிடங்களையும் காட்டும் ஆப்பிரிக்க கண்டத்தின் வரைபடங்கள், ஒவ்வொரு விலங்கைப் பற்றியுமான ஏராளமான தகவல்கள் என ஓர் உயிரியல் கலைக்களஞ்சியமாக நூல் காட்சி அளிக்கிறது. மிகச்சிறப்பான இந்த நூல் 1997-ல் அச்சிடப்பட்டது என்று பதிப்புத் தகவல்கள் கூறுகின்றன. பிரபல தமிழ் எழுத்தாளர் பாவண்ணன் மொழி பெயர்த்திருந்தும்கூட, புகழ்மிக்க நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் வெளியிட்டிருந்தும்கூட, இந்த நூலைப் பற்றிய எந்த ஒரு மதிப்புரையோ, எவராவது பரிந்துரைத்த தகவலையோ, நான் பார்த்ததும் இல்லை, கேட்டதும் இல்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நூலின் அமைப்பு முறை அழகாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட விலங்கை எடுத்துக் கொண்டால், அதைப்பற்றி குறைந்தது ஒன்று முதல் அதிகபட்சமாக நான்கு நாட்டுப்புறக் கதைகள் முதலில் சொல்லப்படும். அதைத் தொடர்ந்து, அந்த விலங்கைப் பற்றிய அனைத்து தகவல்களும் தரப்படும் (உயிரியல் இனப்பெயர், உயரம், எடை, பிறப்பின் எடை, பால்குடி மறக்கும் வயது, கருவளர்ச்சிக் காலம், குட்டிகளின் எண்ணிக்கை, பருவம் எய்தும் வயது, ஆயுள், போன்ற எல்லா தகவல்களும் ஆண் விலங்கிற்கும், பெண் விலங்கிற்கும், தனித்தனியாகத் தரப்பட்டுள்ளன). குறிப்பிட்ட விலங்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் எங்கெங்கு வாழ்கிறது என்கிற வரைபடம் அடுத்து தரப்படுகிறது. அந்த விலங்கின் தனிப்பட்ட குணங்கள் குறைந்தது இரண்டு பக்கத்திற்காவது விவரிக்கப்படுகின்றன. இதற்கிடையில் விலங்கின் வண்ண ஓவியங்களும் கறுப்பு, வெள்ளைச் சித்திரங்களும் உள்ள பக்கங்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. [ஓவியர் ராட் க்ளெமெண்ட் மிகச் சிறப்பாக ஓவியங்களை வரைந்துள்ளார். உயிரோட்டமுள்ள ஓவியங்கள் நம் கண் முன்னே விலங்குகளைக் கொண்டுவந்து நிறுத்துகின்றன]</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலே குறிப்பிடப்பட்ட நூலின் அமைப்புமுறை ஒவ்வொரு விலங்கைப் பற்றியும் முழுமையான ஒரு சித்திரத்தை வாசகருக்கு வழங்குகிறது. நாட்டுப்புறக் கதைகளைச் சேர்க்காமல் இருந்திருந்தால் இந்த நூல் காட்டு விலங்குகளுக்கான கையேடு என்ற அளவில் இருந்திருக்கும்; விலங்குகளைப் பற்றிய சித்தரிப்பு இல்லாமல் கதைகள் மட்டும் இருந்திருந்தால், ஆப்பிரிக்க பழங்குடி இனக் கதைகளின் மற்றுமொரு தொகுப்பு என்ற எண்ணத்தை உண்டாக்கி இருக்கும். ஆனால் இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, படங்களோடு நமக்கு ஒரு ஸ்பெஷல் ஃபுல் மீல்ஸ் படைத்துள்ள நூலாசிரியரும், நியூசிலாந்து நாட்டு விலங்கியியலாளருமான நிக் க்ரீவ்ஸ் நமது வணக்கத்திற்கும், நன்றிக்கும் உரியவர் ஆகிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதைகள் மிக சுவாரஸ்யமானவை; மண்ணின் மணம் கமழ்பவை; நம் ஆழ்மனத்தை ஸ்பரிசிப்பவை; சமயத்தில் நகைச்சுவையாகவும் காட்சி அளிப்பவை. சிறுத்தையின் கன்னங்களில் கண்ணீர்ச் சுவடுகள் எதற்காக என்று ஓர் கதை. ஒரு சோம்பேறி வேட்டைக்காரன் பெண் சிறுத்தையை ஏமாற்றி அதன் மூன்று குட்டிகளையும் கவர்ந்து விடுகிறான். அந்த வேட்டைக்காரனுக்கு ஊர்க்காரர்கள் தண்டனை கொடுக்கிறார்கள் என்றாலும்கூட, குட்டிகளைப் பிரிந்த துக்கத்தில் ஓயாமல் அழுததால் சிறுத்தைகளின் கன்னங்களில் இன்றும் கண்ணீர்ச் சுவடுகள் உள்ளன என்கிறது அந்தக் கதை. அதே போல கர்வம் மிகுந்த சிங்கத்தை முயலின் தந்திரத்தால், தேனீக்கள் ஒன்று சேர்ந்து கொட்டி விடுகின்றன. அதனால் குரல் தடித்துப் போனதால் சிங்கம் கர்ஜிக்கிறது (தொண்டைக் கட்டு) என்கிறது இன்னொரு கதை. பேராசை கொண்ட முதலையின் சூழ்ச்சியை அறியாமலும், வலிக்கின்ற அதன் பல்லை சரிசெய்யும் நல்லெண்ணத்தோடும், திறந்திருந்த வாயில் குனிந்து பார்த்ததால், முதலையின் இரு தாடைகளுக்கு இடையில் அகப்பட்ட நெருப்புக் கோழியின் கழுத்து மிகவும் நீளமாக மாறிவிட்டது என்கிறது இன்னொரு கதை. உடம்பு முழுவதும் அழகான முடியுடன் திகழ்ந்தது நீர்யானை. முயலின் மோசமான தந்திரத்தால், நெருப்பில் பொசுங்கி நீர்யானையின் முடியெல்லாம் எரிந்து போய்விட்டது. நெருப்புக் காயங்களால் ஏற்பட்ட ரணங்களின் வலி தெரியாமல் இருப்பதற்குத்தான் நீர்யானை எப்போதும் நீரில் மூழ்கிக் கிடக்கிறது என்று உரைக்கிறது இன்னொரு கதை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முப்பத்தாறு கதைகளும் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த பல பழங்குடி இன மக்களிடம் வழங்கி வருபவை. ஜூலு, நெடெபெலே, ஹும்பகூழ், படோங்கா, புஷ்மேன், ஷோனா, ஸ்வாகஜூலேண்ட், ஹாட்டென்ட்டாட், ஓகாவாங்கோ போன்ற இனங்கள் அவற்றில் உள்ளடங்கும் (ஒவ்வொரு கதையின் தொடக்கத்திலும், கதை எந்த இன மக்களைச் சார்ந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது). ஆச்சரியப்படும் வகையில் இந்திய தொல் கதைகளுக்கும். ஆப்பிரிக்கக் கதைகளுக்கும் பல ஒற்றுமைகள் புலப்படுகின்றன. சிங்கம் எல்லா இடத்திலும் அரசனாகவே போற்றப்படுகிறது. நரி அங்கேயும் தந்திரம் நிறைந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அங்கும் ஆமை - முயல் கதை வருகிறது. ஓட்டப்பந்தயம் நடக்கிறது. (கதை சற்று வேறுபட்டாலும்) இறுதியில் ஆமையே வெற்றி பெறுகிறது. மான்கள் அப்பாவியாக உள்ளன. முக்கிய வேற்றுமை, முயல் ஆப்பிரிக்காவில் தந்திரம் மிகுந்ததாகக் கருதப்படுகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விலங்குகளைப் பற்றிய சித்தரிப்பில் பல புதிய மற்றும் சுவையான செய்திகளை நூலெங்கும் தெரிவிக்கிறார் நிக் க்ரீவ்ஸ். சிங்கங்கள் கூட்டமாகவே வாழும்; வளரும் ஆண் இளம் சிங்கங்களை, பெரிய சிங்கங்கள் தம் எதிரியாகவேக் கருதி தீர்த்துக்கட்ட முயல்கின்றன; நீர்யானைகள் மிகவும் அப்பாவியானவை; காண்டாமிருகங்கள் மூர்க்கமானவை; நெருப்புக்கோழிகள் மிகவும் சோம்பலானவை; வரிக்குதிரைகள் சரியான தீனிப் பண்டாரங்கள்; கழுதைப் புலிகள் கூட்டமாகச் சேர்ந்தால் சிங்கத்தையே வீழ்த்தும் அளவிற்கு வல்லமை மிக்கவை. காட்டுப்பன்றி வலைக்குள்ளே போகும்போது தனது பின்பக்கத்தைதான் நுழைக்கும், தலையை கடைசியில்தான் நுழைக்கும், மரிமான்கள் சுமார் 70 கிலோமீட்டர் வேகத்தில் ஓடி சிறுத்தையிடமிருந்து தப்பிக்க வல்லவை; ஒட்டகச்சிவிங்கிகள் சாத்வீகமானவை, இப்படி, நூலெங்கும் பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அரிதான இந்த நூலை மொழியாக்கம் செய்த எழுத்தாளர் பாவண்ணன் நமது நன்றிக்கு உரியவர். மிக இயல்பான மொழிபெயர்ப்பு ஒரு தமிழ்நூலைப் படிக்கும் உணர்வைத் தருகிறது. மூலநூலின் அருஞ் சொற்பதங்களுக்கான விரிவுரை நூலின் கடைசியில் தரப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. மூலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லையும் உருவாக்க முயற்சி செய்து இருக்கலாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தக் குறிப்பை எழுதிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், 45 ஆண்டுகளுக்கு முன்னால், ஏழு வயது சிறுவனாக இருந்த என்னை உயிர் காலேஜ் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட சென்னை உயிரியல் பூங்காவிற்கு அழைத்து சென்று, நாள் முழுவதும் களைப்பின்றி சுற்றிக் காட்டி, ஒவ்வொரு விலங்கைப் பற்றிய குறிப்பையும் கூறி, நான் கேட்ட சந்தேகங்களுக்கெல்லாம் பதில்கள் சொல்லி, இரவு உறவினர் வீட்டிற்கு வந்த பின்னர் வலித்த கால்களை நீவிவிட்ட என் தந்தையின் புன்னகை பூத்த முகம் நினைவுக்கு வருகிறது. அவர் இருந்திருந்தால், அவரிடம் "இந்த புஸ்தகத்தில் உள்ள விலங்குக் கதைகள் அந்தக் காலத்து விலங்குக் காட்சிச்சாலை பயணத்தை நினைவூட்டுகிறது நைனா," என்று கூறி இருந்தால், அதற்கும் அவர் புன்னகையே பரிசாக தந்திருக்கக் கூடும்.</div>
<i><br />(நூலின் பெயர்: நீர்யானை முடியுடன் இருந்தபோது முதலிய ஆப்பிரிக்கக் கதைகள்<br />கதை சொல்லி: நிக் கிரீவ்ஸ்<br />சித்திரங்கள்: ராட் க்ளெமண்ட்<br />ஆங்கிலத்திலிருந்து தமிழில்: பாவண்ணன்<br />வெளியீடு: நேஷனல் புக் ட்ரஸ்ட், இந்தியா, பதிப்பு: 1997</i><br />
<i>இணையத்தில் வாங்க: <a href="https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81?id=3%200958">Marina Books</a>)</i><b><br /></b></div>
நட்பாஸ்http://www.blogger.com/profile/11647556064101907512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-15658997540509389722020-06-06T12:59:00.001+05:302020-06-06T12:59:02.161+05:30சங்க சித்திரங்கள் - ஜெயமோகன்எழுதியவர்: டி.கே.காளீஸ்வரன்.<div><br></div><div><div>சங்கச் சித்திரங்கள்</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnuuSbywWV23gAZZtTTpcGdsLZVS0mNbFifaZ7s2t-7eWELHetlNKIr0IgD5xPwj3VdyGgPtSvpNDtO_M6kHuihEi9d8Ug9uVb5HnMl-x8F49WMccrz_FOgbH83HjI5_8EiAMrbwuMBDA/s1600/1591428528637378-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnuuSbywWV23gAZZtTTpcGdsLZVS0mNbFifaZ7s2t-7eWELHetlNKIr0IgD5xPwj3VdyGgPtSvpNDtO_M6kHuihEi9d8Ug9uVb5HnMl-x8F49WMccrz_FOgbH83HjI5_8EiAMrbwuMBDA/s1600/1591428528637378-0.png" width="400">
</a>
</div><br></div><div><br></div><div>“மாஸ்கோ”. </div><div><br></div><div>2007 ல் கொங்கு பொறியியல் கல்லூரியில் நான் படிக்கும்போது எங்கள் “Applied Physics” சார் பெரும்பாலும் சுட்டப்பட்டது இப்பெயரில்தான். பள்ளிக்காலம் துவங்கி, இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரிப் படிப்பு என ஏறத்தாழ 15 வருடங்களில் எத்தனையோ ஆசிரியர்களை நாம் கடந்து வந்திருப்போம். அப்படியே அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர்களையும். என்றாலும் பெயரின் சிறப்பாலோ ஆசிரியரின் தன்மையாலோ நம்மால் மீண்டும் மீண்டும் சிலர் மட்டுமே நினைவு கூறப்படுவார்கள். எனக்கு அத்தகைய ஒருவர் தான் “பாலசுப்பிரமணி” சார். </div><div><br></div><div>மொத்தமாக ஒரு செமஸ்டர் மட்டுமே அவர் எங்களுக்கு வகுப்பெடுத்திருந்த போதும், அவர் நினைவிலிருக்க காரணம், அவர் வகுப்பெடுக்கும் முறை. பெரும்பாலான விசயங்கள், எவ்வளவு சிக்கலாய் இருந்தாலும், அதை மிக எளிய உதாரணங்களோடு, நம் வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தி விளக்குவதில் கைதேர்ந்தவர். குறிப்பாக சொல்வதானால், நடிகர் விஜயகாந்தை வைத்து Semi / Super conductor களை விளக்கியது. “இப்ப நம்ம, விஜயகாந்த் சாரை பார்த்தீங்கன்னா, பெரும்பாலும் போலீசாதான் நடிப்பாரு, இடையில ஒண்ணு ரண்டு படத்துல மட்டும் மத்த வேஷங்கள்ல நடிப்பாரு. Semi/Super conductor களும் அப்படித்தான்யா, எப்பயுமே நார்மலான conductorஆ behave பண்ணிட்டு, ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் மட்டுமே super conductorஆ இருக்கும்.”. சிக்கலான விசயங்கள் என எண்ணிக்கொண்டிருப்பவைகள் கூட, சரியான விதத்தில் சொல்லப்படும்போது நமக்கு அணுக்கமாகிவிடுகின்றன என எனக்குப் புரியவைத்தது அச்சம்பவம். </div><div><br></div><div>தமிழ்ப் பாடத்தின் மனப்பாடப் பகுதிகளைத் தாண்டி, சங்க இலக்கியத்துக்கும் எனக்கு யாதொரு தொடர்பும் இருந்ததில்லை. அந்த தொட்டகுறையும் பனிரெண்டாம் வகுப்புடனேயே விட்டகுறையாகிப் போனது. இடையிடையே ஆர்வத்துடன் வாசிக்க எடுத்த முயற்சிகள், அருஞ்சொற்பொருள், விளக்கவுரை திரண்ட கருத்து ரீதியிலான வாசிப்புகளால் மிரட்சியூட்ட, முடிந்துபோயின. அவை கடலை கைக்குட்டையில் அள்ளும் முயற்சிகளாகப் போனது. சங்க இலக்கியங்களின் விரிவையும், அது காட்டும் மாபெரும் தருணங்களையும், வாழ்க்கைச் சித்திரங்களையும், மொழியழகினையும் பிறர் சொல்லிக் கேட்குந்தோறும், மீண்டும் முயற்சிப்பதும் ஓரிரு நாட்களிலேயே அம்முயற்சியில் தேங்கி நிற்பதும் வழமையாகிவிட்டது. </div><div><br></div><div>இந்நிலையில்தான், கடலின் விரிவை, அதன் ஆழத்தை, தெளிவை நடுக்கடலில் ஒரு படகில் நின்றும் பார்க்கும் அனுபவம் எனக்கு ஏற்பட்டது. ஒரு சங்கப் பாடல், அதன் பேருணர்ச்சிகளுடன் நம்மைப் பொருந்திப்போகச் செய்யும் வாழ்வியல் அனுபவங்கள், கூடவே அப்பாடலுக்கிணையான நவீனக் கவிதை வடிவம் என அருமையாக நம்மை அத்தளத்துடன் பிணைத்துக்கொள்ளும் மாயத்தை ஆசான் திரு.ஜெயமோகன் அவர்கள் எழுதிய “சங்கச் சித்திரங்கள்” நூல் செய்திருக்கிறது.<br></div><div><br></div><div>சமகாலக் கவிதைகளை எப்படி வாசிப்போமோ, சங்க காலக் கவிதைகளையும் அப்படியே வாசிக்க வேண்டும் என இந்நூலில் ஓரிடத்தில் சொல்லப்படுகிறது. சங்கப்பாடலின் நவீன வடிவமும், அப்பாடலின் தளத்தில் நம்மை இருத்தும் சமகால சம்பவங்களும் சங்க காலக் கவிதைகளை நாம் நெருங்க உதவுகின்றன. காதல், வீரம், பிரிவு, மரணம் உள்ளிட்ட உச்ச உணர்ச்சிகள் யாவுமே காலம் கடந்தவை. நம் அழுகைக்கும், பெருமைக்கும், ஆற்றாமைக்குமான சொற்களை பலநூறு வருடங்களுக்கு முன்னரே நாமறியா கவிஞன் சூல் கொண்டிருக்கிறான் என்பது எவ்வளவுக்கெவ்வளவு உண்மையோ, அச்சொற்கள் இப்பூமியின் மற்றொரு மூலையிலிருக்கும் இன்னொருவனின் வாழ்வுக்கும் பொருந்தக்கூடியவை என்பதும் அதே அளவு உண்மை. ஒரு கவிதையை நம் மனதுக்கு மிக நெருக்கமாக ஆக்குவது, நம்முடைய வாழ்பனுவத்திலிருந்து அது முளைத்தெழுகையில்தான். </div><div><br></div><div>அப்படி 40 சங்கக் கவிதைகள் முளைத்தெழுந்த ஒரு முளைப்பாரி தட்டைப் போன்றது இந்நூல். இதையே வேராகக் கொண்டு ஒவ்வொரு வாசகனும் தனக்கான விரிவை அடையவியலும். இந்நூலின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் நாம் தனித்தனி கட்டுரைகளை எழுதமுடியும் எனும் அளவுக்கு அவை சிறப்பானவை. இருப்பினும், சோற்றுப்பதக் கணக்கில் சில அனுபவக் குறிப்புகள் மட்டும் இங்கே.<br></div><div><br></div><div>என் கல்லூரி நாட்களில், 45 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் ஒரு வகுப்பில் எப்படியும் 20 லிருந்து 30 செய்திகள் துண்டுச்சீட்டுகளினூடே இருபாலர்களுக்கிடையே கடத்தப்படும். அதிகபட்சம் இரண்டு நிமிடங்களுக்குள் மறுமொழி கிடைத்துவிடும் சாத்தியக்கூறுகள் இருந்தபோதும் அவ்விரண்டு நிமிடங்கள் கழிவது ஒரு யுகம் போலத் தோன்றும். இந்த வரலாறு கொண்ட என்னால், வேலை நிறுத்தத்தால் சென்று சேராத காதல் கடிதங்கள் எழுப்பும் உணர்வையும் (“கொதிக்கும் மத்தகம்” கட்டுரை), அதனூடே நற்றிணையின் 182ஆவது பாடலையும் அணுக்கமாய் உணரமுடிந்தது. </div><div><br></div><div>“அப்புறம்” என்ற ஒற்றைச் சொல்லாலேயே பல காதல்களும், அதன் புண்ணியத்தில் செல்போன் கம்பெனிகளும் வாழ்ந்துவந்த ஒரு காலகட்டம் நம் கண்முன்னே கடந்துபோயிருக்கிறது. பேச வேண்டும் பேசுவதற்கு எதுவும் இல்லாதபோதும் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என கொளுந்து விட்டெரிந்த காதலை, “சரி சரி”, “வை”, “பாக்கலாம்” என ஒற்றை வார்த்தைகளில் சுருங்குவதில் திருமணம் பெரும்பாலும் வெற்றியடைகிறது. நெருப்பாய்த் தகித்த காதல், பெரும் சாம்பல் பூத்து, அவர்களால் மறக்கப்பட்டு, அடியாழத்தில் தன் இறுதி அனலை பொத்திப் பாதுகாக்க நேர்ந்திட்ட அவலத்தை ஒளவையாரின் குறுந்தொகைப் பாடல் காட்டுகிறது (மணலாறு). </div><div><br></div><div>இத்தொகுப்பின் முக்கியமான கட்டுரைகளில் ஒன்றான “பெற்ற நெருப்பு”, நமக்கு நாமே கற்பித்துக் கொண்ட வீரமரணம், முன் வைத்த காலை பின் வைக்காத பெருமிதம், பெருந்தியாகம் அனைத்துக்கும் இருக்கக்கூடிய மறுபக்கத்தைக் காட்டுகிறது. பலவேறு பாடல்களினூடே அறியப்பெற்று அதன் நீட்சியென உரைகளாகவும் வரிகளாகவும் நம்முள் வேரூன்றிவிட்ட சீறிவரும் வேலுக்கு மார்புகாட்டிய வீரனின் குருதியை தன்னுடைய பாலாகவே காணும் அன்னையின் அபூர்வக்குரல் ஒளவையாரின் புறநானூற்று கவிதையாய் ஒலிக்கிறது. </div><div><br></div><div>இவ்வருடம் மார்ச் மாதம் காஞ்சிக்கோவிலில் நடந்த புதிய வாசகர் சந்திப்பில் ஆசான் திரு.ஜெயமோகன் ஒரு சம்பவத்தைச் சொன்னார். காதலித்து மணம் புரிந்துகொண்ட இருவர் ஒற்றைச் சொல்லால் பிரிய நேர்ந்திடும் விசித்திரத்தின் கதை அது. அக்கதையை “உதிரச்சுவை” எனும் கட்டுரையாக இந்நூலில் படிக்க நேர்ந்தது. என்னதான் பிரிவு என்பது இருகூர் வாள்முனையாக இருப்பினும், அதிகக் காயம் அடையும் தலைவியின் துயரைப் பேசும் எயினந்தையாரின் (நற்றிணைப்) பாடலுக்கான கட்டுரை அது. </div><div><br></div><div>உலோச்சனார் எழுதிய புறநானூற்றுப் பாடலுக்கான “போராட்டமும் கொண்டாட்டமும்” கட்டுரையின் மூலமாக, அப்பாடலில் காட்டப்படும் இளைஞனின் நீட்சியாக சமகாலத்தில் நிகழ்ந்த “துப்புக்கூலி” முறையை, களவை, இது எல்லாமுமே ஒருவகை விளையாட்டாக மாறிவிடும் மானுட இயல்பை அறியமுடிகிறது.</div><div><br></div><div>காலத்துக்கும் நிலைத்து நிற்கும் குன்றா அறிவுக்கு, எப்பிறப்பிலும் கடக்கவியலாத சாபம் ஒன்றுண்டு. சாதாரண உப்பு புளி சமாச்சாரத்துக்காக, அரை மழையில் கரைந்து போகும் அதிகாரத்தின் கதவை அண்ட நேரிடுவது அது. ”பாடல் எடு பரிசில் இதோ” என்பதில் துவங்கி “ரைட்டர்னா? என்ன எழுதுவீங்க?” என்பதுவரை தொடரும் கதை அது. “நாமார்க்கும் குடியல்லோம்” என்றும் “எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே” என்றும் பிறரிடம் கூறுதல் போலவெ விட தன்னிடமும் கூற நேரிடும் அவலத்தின் தற்கால வடிவம் “மூடிய வாசல்களுக்கு முன்”.</div><div><br></div><div>மேற்சொன்ன கட்டுரைகள் எல்லாம் முதல்வாசிப்பிலேயே என்னைப் பெரிதும் கவர்ந்த கட்டுரைகளுல் சில. தொகுப்பின் 40 கட்டுரைகளும் மிகவும் முக்கியமானவை. போலவே அது சார்ந்த சங்கப் பாடல்களும். ”கவிதையின் மர்மமுடிச்சு நம்மனதில் மலர்விரிவது போல எப்போது என்று சொல்ல முடியாத ஒரு தருணத்தில் அவிழ்வதே உண்மையில் கவிதை அனுபவம் என்பது” என இந்நூலில் கூறப்பட்டுள்ள விசயத்துக்கு சாட்சியாக மிளிரும் சம்பவங்களின் தொகுப்பு இப்புத்தகம். </div><div><br></div><div>சங்கப்பாடல்கள் மீது காதல் கொண்டவர்கள், தன் அன்றாட வாழ்வின் தளத்தில் நின்று அப்பாடலின் விரிவை அனுபவிக்கும் ஆவல் கொண்டவர்கள் தவறவிடக்கூடாத புத்தகம் “சங்கச் சித்திரங்கள்”</div></div><div><br></div><div><br></div><div><br></div><div>சங்க சித்திரங்கள் <a href="https://dialforbooks.in/product/1000000004927_/">வாங்க</a></div>Giri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-80802518875147963032020-05-17T11:41:00.000+05:302020-05-17T11:41:36.730+05:30கரப்பு - இயான் மக்ஈவன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
இந்தப் பதிவை பிப்ரவரி மாதம் எழுதியபோது இருந்த சூழ்நிலை வேறு, இப்போது இருக்கும் சூழ்நிலை வேறு. அப்போது பிரெக்ஸிட் பிரச்சினை முடிவுக்கு வந்திருந்தது. அந்தச் சூழ்நிலையில் பொருத்தமாக இருக்கும் என்று தேடிப் பிடித்து இந்த நாவல் பற்றி எழுதினேன், நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டேன். அப்புறம் ஏதேதோ காரணங்களால் இதை எழுதியதையே மறந்து விட்டேன். நம்மைப் பற்றி ஏதேதோ நினைத்துக் கொள்கிறோம், அதற்கு மற்றவர்களின் சம்மதத்தையும் சம்பாதித்து விடுகிறோம். அப்புறம் ஒரு நீண்டகால நோக்கில் மட்டுமல்ல, சில மாத அவகாசத்திலேயே அதற்கெல்லாம் அர்த்தமில்லை என்பது புலப்பட்டு விடுகிறது. இருந்தாலும் பரவாயில்லை, எழுதியதை ஏன் வீணாக்க வேண்டும்? <br />
<br />
மக்ஈவன் முன்நோக்கி அனுமானித்தது போலவே கொரோனா புண்ணியத்தில் நம் மாபெரும் தொழில், சமூக, நிதி அமைப்புகளின் என்ஜின்கள் ஸ்தம்பித்து நின்று ஒரு தயக்கத்துடன், தீர்மானிக்க முடியாத இருள் கவியும் சூழலில் நகர ஆரம்பித்திருக்கின்றன, எப்போது மீண்டும் ஸ்தம்பித்து நிற்கும், அதற்கான அவகாசம்கூட இருக்குமா என்று தெரியவில்லை. இந்த பெரும் மாற்றத்தின் விளைவுகள் குறித்து மக்ஈவன் வெளிப்படுத்திய அச்சங்கள் நியாயமானவை, அவை பதிவின் பிற்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கின்றன.<br />
<br />
இனி மீட்கப்பட்ட பதிவு:<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxCKqiM1Bjy9VYUYjmzokYHJ3v_UaGyxYSYPuG4BtMWew_HfV6RKwuvSvyVX1TT806YBj-TRuZhzFcEnuuK1_bz49mzWU4v4ErppdPbLuRm52cIsYravWdn2X8HQVeuj6RKreoD80gfr0/s1600/cockroach.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="648" data-original-width="417" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxCKqiM1Bjy9VYUYjmzokYHJ3v_UaGyxYSYPuG4BtMWew_HfV6RKwuvSvyVX1TT806YBj-TRuZhzFcEnuuK1_bz49mzWU4v4ErppdPbLuRm52cIsYravWdn2X8HQVeuj6RKreoD80gfr0/s320/cockroach.png" width="205" /></a></div>
<a name='more'></a><br />
<br />
இதோ போகிறேன், இதோ போகிறேன், என்று சொல்லிக் கொண்டிருந்த பிரிட்டன் ஒரு வழியாய் ஐரோப்பிய கூட்டமைப்பை விட்டு வெளியேறி விட்டது. <a href="https://www.theguardian.com/politics/2020/feb/01/brexit-pointless-masochistic-ambition-history-done">இது நடைமுறைக்கு வந்ததையொட்டி கார்டியனில் இயன் மக்ஈவன்</a>, “அரசியலமைப்புச் சட்டத்திலும், பொருளாதாரத்திலும், கலாச்சாரத்திலும், இத்தனை பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் சங்கதி எப்படி மிகப்பெரும்பான்மை அடிப்படையில் அல்லாமல், கூடுதல் வாக்கு அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்புகிறார். இது நியாயமான கேள்வி. ப்ரெக்ஸிட் தேர்தலில் வாக்களித்தவர்கள் 72 சதவிகிதத்தினர். இவர்களில், வெளியேற வேண்டும் என்றவர்கள் 52%, நீடிக்க வேண்டும் என்றவர்கள் 48%. வெளியேற விரும்பியவர்களின் வெற்றி மிகச் சன்னமானது. மேலும், ஆலோசனை நோக்கத்தில் அமைந்த வாக்கெடுப்பு எப்படி மறுக்க முடியாத மக்கள் முடிவானது, என்றும் கேட்டுக் கொள்கிறார் மக்ஈவன். இடப்புறமிருந்தும் வலப்புறமிருந்தும் கரவொலி அரசியல்வாதிகளின் கரங்கள் வீசிய பொடி மக்கள் பார்வையை மறைத்து விட்டது. ஏதோ ஒரு சித்து வேலை அவர்கள் கண்களைக் குருடாக்கி விட்டது, அறிவைப் பழுதாக்கி விட்டது என்று கைவிரிக்கும் மக்ஈவனின் கட்டுரை தலைப்பு: “நம் தேசத்தின் அரசியல் வரலாற்றில் ப்ரெக்ஸிட் எனும் மிகவும் அர்த்தமற்ற, சுயவாதை லட்சியம் நிறைவேறி விட்டது.” உபதலைப்பு: “கரவொலி அரசியலின் மந்திரப் பொடி அறிவைக் குருடாக்கி விட்டது, இனிச் சேதமும் நலிவும் காத்திருக்கின்றன.” <br />
<br />
இதற்குச் சில மாதங்கள் முன் இதே அரசியல் உணர்வுடன், ப்ரெக்ஸிட் அரசியல்வாதிகள் மீது காழ்ப்பும் அதை ஆதரித்த மக்களின் அறிவு மீது அவநம்பிக்கையும் கொண்டு மக்ஈவன் எழுதிய நாவல், குறுநாவல் என்றுதான் சொல்ல வேண்டும், “Cockroach”, “கரப்பு.” <br />
<br />
நாவல் வெளிவந்தபோது <a href="https://www.theguardian.com/books/2019/sep/12/ian-mcewan-announces-surprise-brexit-satire-the-cockroach">இப்படிச் சொன்னார் மக்ஈவன்</a>: “ஏளனம் செய்வது மன ஆரோக்கியத்துக்கு உதவும் எதிர்வினையாய் இருக்கலாம், ஆனால் அது ஒரு தீர்வு என்று ஒருபோதும் சொல்ல முடியாது. முன்யோசனையற்ற, தனக்கே தீங்கு செய்து கொள்ளும், அவலட்சணமான, அன்னிய ஆன்மாவொன்று குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிக்கையதிபர்கள் மனங்களுக்குள் புகுந்து விட்டது. அவர்கள் தம் ஆதரவாளர்களிடம் பொய் சொல்கிறார்கள். நீதிபதிகளை, சட்டத்தின் ஆட்சியை, நீதி மரபுகளை கேவலப்படுத்துகிறார்கள். குழப்பத்தின் வழியே தம் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள விரும்புவது போலிருக்கிறது. இவர்களுக்குள் என்ன புகுந்தது? ஒன்று, அல்லது, இரண்டு கரப்புகள் என்று சந்தேகிக்கிறேன்.” <br />
<br />
இந்தக் கரப்புகள் இங்கிலாந்தில் மட்டும் தம் வேலையைக் காட்டவில்லை என்றாலும் மக்ஈவனால் மட்டுமே இப்படி ஒரு கதையை எழுத முடிந்திருக்கிறது. மிக எளிய, ஆத்திரம் ஒரு அமிலமென கதையின் கலையுணர்வை முழுமையாய்க் கரைத்து, மேற்பூச்சுக்களற்ற கரிய இதயத்தையும் அதன் எரிச்சலையும் வெளிப்படுத்தும் கதை. இதுதான் கதை என்று ஒற்றை வரியில் சொன்னால், கரப்புகள் இங்கிலாந்து பிரதமரில் துவங்கி, அவரது மந்திரிசபையில் உள்ளவர்கள் உடல்களைக் கைப்பற்றுகின்றன (ஏதோ ஒரு மாயத்தால் மனித ஆன்மாக்கள் அந்தக் கரப்பு உடல்களில் இடம் மாறி அமர்ந்து கொள்கின்றன). வேலை செய்பவர்கள், பொருள் வாங்குபவர்கள் பணம் கொடுக்க வேண்டும், வேலைக்கு வைத்திருப்பவர்கள், பொருள் விற்பவர்கள் பணம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற வினோத நிதியமைப்பின் வசீகர திட்டம் (ரிவர்சலிசம் என்று இதற்கு பெயர்), இங்கிலாந்தைப் பிளவுபடுத்தி வைத்திருக்கிறது. அதன் அரசியல்வாதிகளும் மக்களும் இப்படியும் போக முடியாமல் அப்படியும் போக முடியாமல் தடுமாறி கொண்டிருக்கும் காலகட்டத்தில் கதை, எழுதியபின் ‘GET BREXIT DONE,’ என்ற ஒற்றை கோஷத்துடன் ஆட்சியை வெற்றிகரமாக கைப்பற்றிய போரிஸ் ஜான்சனின் மூத்த சகோதரன், புனைவு இரட்டையாக, ரிவர்சலிசத்தை முடித்துக் கொடுக்கும் ஒற்றை இலட்சியத்துடன் உடல் மாறிய பிரதமர் கரப்பும் மந்திரி கரப்புகளும் தாம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாய்ச் சாதித்தபின் தம் உடல்களுக்கு திரும்புகின்றன. இதுதான் கதை.<br />
<br />
ஒரு பகடி என்று பார்த்தால்கூட இதில் ரசிக்க எதுவுமில்லை. மக்ஈவனின் அரசியல், அவரது விருப்பு வெறுப்புகள் மட்டுமே கதை நெடுக இருக்கிறது. இலக்கிய அந்தஸ்தை இதற்கெல்லாம் கொடுக்க முடியாது. ஒருவன் தன் அந்தரங்க உணர்வுகளை அப்பட்டமாய் உரித்துக் காட்டுவதில் வெற்றி பெற்று விடுவானென்றால்கூட அதில் எதுவும் ரசிக்க இருக்கும் என்று நம்புவதற்கில்லை. இலக்கியம் ஏதோ ஒரு தளத்தில் உண்மையைச் சொல்வது என்றாலும் உண்மையை மட்டும் சொன்ன காரணத்தால் எதுவும் இலக்கியம் ஆவதில்லை. அதனால் இந்தப் புத்தகத்தைப் பொருட்படுத்த முடியாது, இலக்கிய மாளிகையின் குப்பைத் தொட்டிக்கு எழுதப்பட்ட நாளே வீசப்பட்டுவிட்ட புத்தகம் என்று பெரிய மனித பாவனையுடன் சொல்ல நினைத்தாலும், மக்ஈவன் ஒரு முக்கியமான எழுத்தாளர், அடிக்குறிப்பாக மட்டுமாவது இந்த நூல் இருக்கும், அது போக கதையின் முடிவில் பிரதமர் கரப்பு ஆற்றும் உரை பிற்காலத்தில் பாடப் புத்தகங்களில் மேற்கோள் காட்டப்படக்கூடிய அசாதாரண வாய்ப்பு கொண்டது என்பதால், இந்தப் புத்தகம் பற்றி ஒரு சிறு குறிப்பாவது ஆம்னிபஸ் தளத்தில் இடம் பெற வேண்டும். <br />
<br />
போகவும், பிரதமர் கரப்பு ஆற்றும் உரையின் தமிழாக்கம் இலவச இணைப்பு:<br />
<br />
“என் அன்புக்குரிய சகாக்களே, உங்கள் இனிய கருத்துகளுக்கு நன்றி. இவை என்னை ஆழமாய்த் தொடுகின்றன. நம் சாகசத்தின் இந்த இறுதி கணங்களில், நாம் உண்மைக்கு கடமைப்பட்டிருக்கிறோம். அற்புதமான நம் குடிமக்களிடம் நாம் ஒரு போதும் மறைக்காத உண்மை ஒன்றுண்டு. நம் தொழிற்சாலைகள், நிதியமைப்பு, வர்த்தகம் ஆகியவற்றின் மாபெரும் என்ஜின்கள் பின்னோக்கி நகர, அவை முதலில் நிதானித்து, நின்றாக வேண்டும். துன்பம் இருக்கும். அது மிகக் கடுமையான வேதனை அளிக்கக்கூடும். அதைச் சகித்துக் கொள்வது இந்த மகத்தான தேசத்தின் மக்களுக்கு இன்னும் உரம் சேர்க்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் அது இனி நம் கவலையில்லை. நம் தற்காலிகமான, நம் இயல்புக்குப் பொருந்தாத உடலங்களைத் துறந்து விட்ட நிலையில், நாம் கொண்டாடத்தக்க ஆழமான உண்மைகளைப் பேசியாக வேண்டும். <br />
<br />
“நம் இனத்தின் வயது குறைந்தது முன்னூறு மில்லியன் ஆண்டுகள் இருக்கும். வெறும் நாற்பது ஆண்டுகளுக்கு முன், இந்த நகரத்தில், நாம் ஒரு விளிம்புநிலை குழுவாய் இருந்தோம். நாம் கீழ்மைப்படுத்தப்பட்டோம், ஏளனத்துக்குரிய, கேவலப்படுத்தத்தக்க நிலையில் வைக்கப்பட்டிருந்தோம். புறக்கணிக்கப்படுவதே நம் நல்ல நிலையாய் இருந்தது, அருவெறுப்பு நம் மோசமான நிலையாய் இருந்தது. ஆனால் நாம் நம் கொள்கைப் பற்றைக் கைவிடவில்லை. முதலில் மிக மெதுவாக, அதன் பின் மெல்ல மெல்ல விசை கூடி, நம் கருத்துக்கள் வேர் கொண்டன. நமது அடிப்படை நம்பிக்கை எப்போதும் உறுதியாக இருந்திருக்கிறது: நாம் எப்போதும் சுயநலத்துடன்தான் நடந்து கொண்டோம். நம் லத்தீன் பெயர், blattodea, உணர்த்துவது போல், நாம் ஒளியை வெறுக்கும் உயிர்கள். நாம் இருளைப் புரிந்து கொள்கிறோம், நேசிக்கிறோம். அண்மைக் காலத்தில், கடந்த இருநூறாயிரமாண்டு காலமாக, நாம் மனிதர்களுடன் சேர்ந்து வாழ்ந்திருக்கிறோம், அந்த இருள் அவர்களையும் குறிப்பிட்ட வகையில் ஈர்ப்பதை அறிந்திருக்கிறோம், ஆனால் நம்மளவு அவர்களுக்கு இருளின்பால் பூரண அர்ப்பணிப்பு கிடையாது. ஆனால், எப்போதெல்லாம் அந்த இயல்பு அவர்களில் மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் நாம் செழித்து வளர்ந்திருக்கிறோம். அவர்கள் எங்கு ஏழ்மையை, கழிவை, கசடை, தழுவிக் கொள்கிறார்களோ, அங்கு நாம் பலம் பெற்றிருக்கிறோம். வாதை எனத் தடுமாறிப் பல வழிகளில், பல முறை சோதனை முயற்சிகள் மேற்கொண்டு தோல்வி கண்ட பின், அத்தகைய மானுட அழிவின் முற்காரணிகள் எவை என்பதைப் பற்றி அறிவு பெற்றிருக்கிறோம். போர், நிச்சயம் புவி வெப்பமாதல், அமைதிக் காலத்தில், அசைக்க முடியாத அதிகார அடுக்குகள், செல்வம் ஓரிடம் குவிதல், ஆழமான மூடநம்பிக்கை, வதந்தி, பிளவு, அறிவியலிலும் அறிவிலும் அந்நியர்களிடத்தும் சமூக கூட்டுறவிலும் அவநம்பிக்கை. இந்தப் பட்டியல் உங்களுக்குத் தெரியும். கடந்த காலத்தில் கடும் பகைச் சூழலில் நாம் வாழ்ந்திருக்கிறோம்- சாக்கடைகள் கட்டப்பட்டிருக்கின்றன, சுத்தமான நீருக்கான ஒவ்வாச் சுவை, நோய்க் கிருமிக் கோட்பாட்டின் விளக்கம், தேசங்களுக்கு இடையே அமைதியும் நல்லிணக்கமும் இவற்றுள் அடக்கம். ஆம், இவையும் இன்னும் பிற தாக்குதல்களும் நம்மை நலிவடையச் செய்திருக்கின்றன. ஆனால் நாம் எதிர்த்து நின்றிருக்கிறோம். ஆனால் இப்போது, மறுமலர்ச்சிக்கான சூழல் உருவாகத் தேவைப்படும் துவக்கத்தை அளித்திருக்கிறோம் என்று நம்புகிறேன். ரிவர்சலிசம் என்ற அந்த வினோத பித்து, மானுட மக்கள் தொகையை வறுமைக்குள் தள்ளும்போது, இதைத் தவிர்க்க முடியாது, நாம் வளமான வாழ்வு வாழப் போகிறோம். நேர்மையான, நல்லெண்ணம் கொண்ட, சாதாரண மக்கள் ஏமாற்றப்பட்டு, துன்பத்துக்கு ஆளாகும்போது, நம்மைப் போன்ற பிற நேர்மையான, நல்லெண்ணம் கொண்ட, சாதாரணர்களின் வாழ்வில் மகிழ்ச்சி கூடுவதையும் எண்ணிக்கை அதிகரிப்பதையும் கண்டு அவர்கள் மிகவும் ஆறுதல் அடைவார்கள். உலக ஆரோக்கியத்தின் கூட்டுக்கணக்கு குறையாது. நீதி எப்போதும் மாறிலியாய்த் தொடர்கிறது. <br />
<br />
“கடந்த மாதங்களில் நம் இலட்சியத்தை வெல்ல நீங்கள் மிகக் கடுமையாக பாடுபட்டிருக்கிறீர்கள். உங்களை வாழ்த்துகிறேன், உங்களுக்கு நன்றி கூறுகிறேன். உங்களுக்கே தெரிந்திருக்கும், ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸாக இருப்பது சுலபமல்ல. அவர்களுடைய ஆசைகள் அதிகமாகவே அவர்களின் அறிவோடு முரண்படுகின்றன. நம்மைப் போல் முழுமையானவர்களுக்கு அந்நிலை இல்லை. நீங்கள் ஒவ்வொருவரும் கரவொலி அரசியலின் சக்கரத்தை நகர்த்த தோள் கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் உழைப்பின் கனியைக் கண்டு விட்டீர்கள், இப்போது அந்தச் சக்கரம் சுழலத் துவங்கி விட்டது. இதோ, நண்பர்களே, தென்புலம் நோக்கி நாம் பயணப்படுவதற்கான நேரம் வந்து விட்டது. நாம் நேசிக்கும் இல்லம் திரும்புவோம்! தயவு செய்து ஒற்றை வரிசையில் செல்லுங்கள். கதவை விட்டு வெளியேறியபின் இடப்புறம் திரும்ப மறக்க வேண்டாம்.”<br />
<br />
The Cockroach, Ian McEwan,<br />
Vintage Books, October 2019.<br />
<br />
<a href="https://www.amazon.in/Cockroach-Ian-McEwan/dp/0593082427">Amazon</a>, <a href="https://www.sapnaonline.com/books/cockroach-ian-mcewan-1529112923-9781529112924">Sapna Online</a><br />
<br />
ஒளிப்பட உதவி - <a href="https://bookmarks.reviews/reviews/the-cockroach/">Literary Hub</a> <br />
<br /></div>
நட்பாஸ்http://www.blogger.com/profile/11647556064101907512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-30918154132562464832020-03-26T08:02:00.000+05:302020-03-26T08:03:01.529+05:30பாலை நிலப் பயணம்- செல்வேந்திரன் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<b><a href="http://beyondwords.typepad.com/">- ரா கிரிதரன் - </a></b></div>
<br />
<div style="text-align: justify;">
செல்வேந்திரன் எழுதிய பாலை நிலப்பயணம் நூல் ரெண்டு வாரங்களுக்கும் குறைவான பயணத்தைப் பற்றிய குறிப்புகள் கொண்டது. ராஜஸ்தான், குஜராத் வழியே பெரும்பாலும் பாலை நிலத்தில் நண்பர்களுடன் கழித்த நாட்களைப் பற்றியவை. இந்திய நிலத்தில் சிறு பயணம்கூட எப்படியோ நம்முள்ளே செல்லும் நெடும்பயணமாக மாறும் வாய்ப்பை உள்ளடக்கியது. அதுவும், வெறும் ஐநூறு கிமீ பயணத்தில் வேறொரு நிலப்பரப்பும், உணவுப் பாரம்பரியமும், மொழியும் சகஜமாகப் புழங்கும் இடத்தில் சட்டென ஒரு விலகலும் நெருக்கமும் நம்முள் உருவாகிவிடும். அத்தன்மையை சிறிதும் விட்டுவிடாமல் எழுதப்பட்ட சிறு குறிப்புகளின் தொகையே இந்த நூல்.</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1BTmOWzyJoe7AsV0IioDoe-g7GiZNvcWwoITw3Er9IhRI_cWqfPT7bV8dyr6avpyjQFwpz03qe_ZF6JGT-V704Ib3vsITUk3zlWKeCyk5vq-DW79qthSwzADpiHE4qFoR57LNNFG4AfI/s1600/selva.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="680" data-original-width="680" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1BTmOWzyJoe7AsV0IioDoe-g7GiZNvcWwoITw3Er9IhRI_cWqfPT7bV8dyr6avpyjQFwpz03qe_ZF6JGT-V704Ib3vsITUk3zlWKeCyk5vq-DW79qthSwzADpiHE4qFoR57LNNFG4AfI/s400/selva.jpg" width="400" /></a></div>
<br />
<br />
<a name='more'></a><br />
<br />
<div style="text-align: justify;">
செல்ஃபிக்களும், கேளிக்கைகளும் மட்டுமே நிறைந்த பயணங்களை மீறி இந்திய நிலத்தின் அறிய முடியாத தடங்களைத் தேடிச் செல்வது ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கும். ஜெயமோகனும் அவரது நண்பர்களும் அப்படி ஒரு பயணக்குழுவாக இந்தியா முழுவதும் சென்றிருக்கிறார்கள். பாலை நிலங்களைக் கடந்து செல்வது என்பது வடமேற்கு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான கிமீகள் பயணம் செய்வதாகும். ஜெய்ப்பூரிலிருந்து அகமதாபாத் வரை செல்லும் பயணத்தில் செல்லுமிடமெல்லாம் நினைவுகளும் வளர்ந்த ஊரின் சூழலும் கூடவே வருகிறது. சராசரியாக நாளொன்றுக்கு 250 கிலோமீட்டர்கள் பயணம். சாலைவழியாகச் செல்லும் ஒவ்வொரு நாளும் நிலக்காட்சி நம்முன்னே மாறிக்கொண்டே வரும் சித்திரம் புத்தகத்திலும் கிடைக்கிறது. வழியில் தெரியும் பல கிலோமீட்டர்கள் நீளும் மண் மேடுகள், கானுயிர்கள், தொல்லியல் இடங்கள், வரலாற்றுச் சின்னங்கள் என நம்முன்னே நிறைத்துக் கொண்டே இருக்கிறார் செல்வேந்திரன். அதையும் அவருடைய வழக்கமான சுவாரஸ்ய நடையில் செல்வேந்திரன் எழுதியிருப்பது வாசிப்பை இனிமையாக்குகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்திரன் குறித்த தகவல்களையும், தொல்லியல் தடங்களையும் தேடுவது தனது கனவுகளில் ஒன்றெனச் சொல்லும்போது அந்த ஆர்வம் நமக்கு தொற்றிக் கொள்கிறது. பொதுவாக ஊரைச் சுற்றிப் பார்ப்பதற்காகப் பயணம் செல்வதோடு இதுபோல் வரலாற்றுச் சின்னங்களையும், மறைந்துபோன பண்பாட்டு ஆவணங்களையும் தேடுவது பயணத்தை அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜெய்ப்பூரிலிருந்து ஓசியான் செல்லும் வழியில் சண்டி கி மாதா ஆலயம் ஜெயமோகனின் ‘அருகர்களின் பாதை’யில் விரிவான அறிமுகத்தை அளித்திருந்தது. அதனுடன் வறண்ட நிலமும், முள்ளுச்செடிகளும் கூடிய பயணம் தூத்துக்குடி மாவட்டத்தினூடான பயணம் போல இருப்பதாக நினைவு படுத்திக் கொள்கிறார் செல்வேந்திரன். ஐநிலங்கள் திரிபடைந்து பாலை ஆவதை ஆவணப்படுத்தியிருந்த சங்கப்பாடல்களில் படித்த பாலைப் பயணங்களும், கடவுளர்களும் நம் நினைவுக்கு வருகின்றன. கூடவே விலங்குகளும். நீல்கே மான்களைப் பற்றிய குறிப்புகளும் பயணக்குறிப்பின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
செல்வேந்திரனின் எழுத்தில் பயணத்துக்கு இணையாக நண்பர்களுடனான உரையாடல்கள் வந்தவண்ணம் உள்ளன. உள்ளார்ந்த நட்புக்கு இலக்கணமான கேலியும் கிண்டலும் நிறைந்த பேச்சுக்கள். நெருக்கமான உள் குழுமக் குறிப்புகள் இருந்தாலும் அவையும் பேசுபவர் பற்றி மேலதிகத் தகவல்களாக வந்துள்ளன. பின்னிரவில் அவர்களுக்கிடையேயான விளையாட்டுகளும், பழைய ஞாபக அலசல்களும் நம் நண்பர்களுடன் இப்படியான பயணம் செல்லத் தூண்டுபவை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சிதம்பரம் நடராஜரை தரிசித்தவன் மூர்த்தி கபே இட்லி கொத்சுவை உண்ணாமல் முக்தி உண்டா" - இது போல் தேடித் தின்பதற்கு இப்படிப்பட்ட பயணங்களில் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. ஆனால், உணவை ருசிக்காமல் ஒரு ஊரின் பயணம் முழுமையடையாது என்பதால் முடிந்தவரை அந்தந்த ஊரின் சிறப்பு உணவுகளை சுவைக்கும் முயற்சிகள் நன்றாக எழுதப்பட்டிருக்கின்றன. எந்த உணவின் சுவையும் அவர்கள் எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும், நண்பர்களிடையே நடக்கும் சிரிப்பும் கேளிக்கையும் பயணத்தை சுவாரஸ்யமாக்கியதை உணர முடிகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அருகர்களின் பாதையைத் தொடர்ந்து செல்லும் பயணம் என்பதால் ஜெயமோகன் எழுதிய கட்டுரைத் தொகுப்பும் நினைவுக்கு வராமல் இல்லை. வணிக நகரான ஓசியான் பற்றிக் கூறும்போது அவ்வூரின் வணிகர்கள் எழுப்பிய சாஷி மாதா ஆலயத்தின் நம்பமுடியாத கலை நுட்பங்களையும் விவரித்துள்ளார். நேர்த்தியாக செதுக்கப்பட்ட தூண்களையும், கோபுரங்களையும் பின்னர் இணையத்தில் தேடிப்பார்த்தபோது பேளூர், ஹலபேடு போன்ற கலை நுட்பங்களுக்கு இணையானது என ஆசிரியர் சொல்வதோடு ஒத்துப்போகமுடிந்தது. ஜைன நகரமான ஓசியான் பற்றிய குறிப்புகள் வரலாற்றின் சில பக்கங்களை நம்முன் கொண்டு வருகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு உரையில் ஜெயமோகன், பாலை நிலம் அதிகம் உள்ள தமிழ்நிலத்தில் எழுந்த கம்ப ராமாயணத்தில் பாலை தொடர்பான குறிப்புகள் கிட்டத்தட்ட இல்லை எனக் குறிப்பிடுகிறார். சங்கப்பாடல்களுக்குப் பிறகு பாலை பற்றிய குறிப்புகள் மிகக்குறைவாகவே நம் இலக்கியங்களில் காணப்படுகின்றன. பாலை நிலப்பகுதி வழியே செல்லும்போது அங்கு தென்படும் சிங்காரா மான்கள், பறவைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். பயணம் செல்லும் நோக்கத்தில் நான் பயணக் குறிப்புகளைப் படிப்பதில்லை. இருக்கும் இடத்தை விட்டு நகராமலேயே ஒரு அகப்பயணம் செல்லக்கூடிய சாத்தியங்களை இப்படிப்பட்ட குறிப்புகள் அளிக்கின்றன. அங்குள்ள நிலத்துடன் விலங்குகளும், பறவை இனங்களும், உணவுகள், மக்களும் நெடிய பண்பாட்டுத் தகவல்களை எனக்கு அறிமுகப்படுத்துகின்றன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சாம் டூன்ஸ் பகுதி பற்றி எழுதிய குறிப்பு தனித்துவம் மிக்கது. மணலில் தடுமாறி விழுந்து விளையாடியதை மனமும் உடலும் ஒருசேர இளமைக்குள் திரும்பிய அனுபவம் என்கிறார். இது ஒரு விதத்தில் பயணத்தை மறக்க முடியாத வகையில் மாற்றுகிறது. நம் தாய், ஊர், இளமைக்கால நினைவு போன்றவற்றைத் தூண்டக்கூடிய அனுபவங்கள் நாம் கடந்து வந்த காலத்தை மீண்டும் வாழ வைக்கின்றன. கருவறைக்குத் திரும்பிச் செல்லும் பயணம் போன்றது. நம் பயணத்தில் ஒரு இடத்திலேனும் இப்படி ஓர் அனுபவம் வாய்த்தால் அது மறக்க முடியாததாகிவிடும். இருள் கவியும் மாலை நேரத்தில் பாலைவனத்தில் தன்னை மறந்து பிரமிள் கவிதைக்குள் மூழ்கி, தனது மனைவி குழந்தையின் நினைவை மீட்டு, சொல்லவியலா சிறு வயது நினைவுகளால் மனம் சிக்குண்டு ஓரிடத்தில் முட்டி நிற்கும் அனுபவம் உணர்வுபூர்வமானது. இப்படிப்பட்ட அனுபவங்களை அவர் தொடர்ந்து எழுத்தில் பதிய வேண்டும் எனும் ஆவல் உருவாகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பார்மர் நிலக்காட்சிகள் மிகவும் நிதானத்தோடு எழுதப்பட்டுள்ளன. பல நூறு கிலோமீட்டர்கள் பாலை நிலத்தில் பயணம் என்பது சாகசக்காரர்களுக்கானது. அவ்வப்போது எதிர்படும் கிராமங்கள், விலங்குகளைத் தவிர வேறு எதுவும் இருக்காது. அப்போது அந்தந்த ஊரின் அமைப்பு, உணவு முறைகள், இசை போன்றவை மட்டுமே இவர்களுக்கானத் துணை. பூகம்ப நகரான பூஜ் பற்றிய சித்திரம் கொண்டாட்டங்களையும், சுவையான உணவைப் பற்றியதுமாக இருக்கிறது. ஹிம்சார் ஏரிக்கு அருகே இருக்கும் சட்டார்டி அதிகம் பிரபலமில்லாத இடம். அங்கிருக்கும் சிற்பங்களும், தூண்களும் மிகப்பழைய பண்பாட்டின் எச்சங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கானமயில், மண்ணுள்ளி, கிரேட் இந்திய பஸ்டாட் எனப் பலவற்றைப் பார்த்துச் செல்வதோடு கிச்சானில் அங்குள்ள ஊர்ச் சிறுவர்களுடன் விளையாடிய கிரிக்கெட், உணவு கிடைக்காமல் ஒரு சாராயக்கடையில் சாப்பிட்டது, நண்பர்களுடனான அதிகாலை வரையிலான பாட்டுக் கச்சேரி, வெண்மணல்களில் கால் புதைய நடந்தபடி தன்வயம் இழக்கும் தருணங்கள் என மிகவும் கலவையான அனுபவத்தை இந்த நூல் வழங்குகிறது. சிறு நூலானாலும் கட்டாயம் வாசிக்க வேண்டிய பயண நூல்.</div>
<br />
தலைப்பு - பாலை நிலப்பயணம், செல்வேந்திரன் <br />
நூல் சுட்டி - <a href="https://www.amazon.co.uk/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-Payanam-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-ebook/dp/B0855GH66F/ref=sr_1_fkmr0_1?keywords=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&qid=1585090054&sr=8-1-fkmr0">amazon</a></div>
நட்பாஸ்http://www.blogger.com/profile/11647556064101907512noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-49391970348829010632020-02-09T07:29:00.002+05:302020-02-09T07:29:43.307+05:30அருந்தவத்தால் அற்பம் பெற்ற கணங்கள்- கண்டராதித்தனின் 'திருச்சாழல்’ <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<b><a href="http://omnibus.sasariri.com/search/label/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF">பைராகி</a></b></div>
<br />
<br />
<div style="text-align: justify;">
‘<i>வாரச்சந்தை</i>’ எனும் கவிதை மூலமே நான் கண்டராதித்தனின் உலகுக்குள் முதலில் நுழைந்தேன். அதை என் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். ரசிக்கத்தக்க கவிதையோடு உள்ளே நுழைவது தொடக்கத்திலேயே கவிஞனின் அக உலகத்தை நமக்குத் திறந்து வைத்துவிடுகிறது. விக்ரமாதித்தன் கதையில் வரும் ஓவியன் சிறு நகத்திலிருந்து பெண்ணைத் தத்ரூபமாக வரைவது போலத்தான் கவி உலகும். சிறு படிமத்தை நாம் அறிந்த காட்சியில் பொருந்திக் காட்டியதும் நமக்கான வாசல் திறந்துவிடுகிறது.</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsIiT-L8hbfBOZIjWgoO3hxR8ltjVCxmxikfPC5g5UgGcXwpImP11nUY8bCFfePxfQEl0c_VdqlB8oM3TziDOx2yf2R29iIt5W_BEu56I6LvjIXdrpk_ZU6xhtmRGWJ7BCoqOItSb4czw/s1600/%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25B4%25E0%25AE%25B2%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="595" data-original-width="842" height="282" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsIiT-L8hbfBOZIjWgoO3hxR8ltjVCxmxikfPC5g5UgGcXwpImP11nUY8bCFfePxfQEl0c_VdqlB8oM3TziDOx2yf2R29iIt5W_BEu56I6LvjIXdrpk_ZU6xhtmRGWJ7BCoqOItSb4czw/s400/%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25B4%25E0%25AE%25B2%25E0%25AF%258D.jpg" width="400" /></a></div>
<br />
<br />
<a name='more'></a><br />
<br />
<div style="text-align: justify;">
<blockquote class="tr_bq">
வாரச்சந்தைக்கு காய்கறி<br />
வாங்க வந்த பெண்ணிற்கு<br />
நான்கைந்து பிள்ளைகள்.<br />
நாலும் நாலுதிசையை<br />
வாங்கித்தர கைகாட்டின.<br />
அவள் குழந்தைக்கு<br />
பொரியுருண்டை வாங்கித்தந்தாள்.<br />
பொடிசுகள் பின்னேவர<br />
பொரியுருண்டை கீழே விழுந்து<br />
பாதாளத்தில் உருண்டது.<br />
ஏமாந்த குடும்பம் எட்டிப்பார்க்க<br />
பாதாளபைரவி மேலெழுந்து<br />
குழந்தையின் கன்னத்தைக்கிள்ளி<br />
நல்லசுவை நல்லசுவை என<br />
நன்றி சொன்னது.</blockquote>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது கிட்டத்தட்ட இசையின் உலகை எட்டிப் பார்க்கும் காட்சியைக் கொண்டிருக்கிறது. கடைசி நான்கு வரிகளில் கிடைக்கும் சித்திரம் நமது கற்பனையை சாதாரணத்திலிருந்து அசாதாரணத்துக்கு இட்டுச் செல்கிறது. பாதாளபைரவி கூட வறியவளாக இருக்கும் நிலை. நாலு திசையைக் கைக்காட்டிய குழந்தைகளுக்கு பொரி உருண்டையை மட்டுமே வாங்கித் தர முடிந்த சித்திரம் கன்னத்தைக் கிள்ளும் பாதாளபைரவிக்குத் தெரியாது. தெரிந்தாலும் அவள் அலட்டிக் கொள்ள மாட்டாள். ந.ஜயபாஸ்கரன் கவிதையில் வரும் மதுரை மீனாட்சி கோயில் சிற்ப மோகினி வெறுமையான அகப்பையை நீட்டும் சித்திரத்தை மீறும் ஒரு அவலம் இங்குண்டு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தச் சித்திரத்திலிருந்து வேறொன்றைத் தொடும் பயணத்தை தொகுப்பில் நிகழ்த்தியிருக்கிறார். ரப்பர் பந்தை இலவசமாகக் கேட்டவளுக்கு அந்தரத்துக்கும் அந்தரத்துக்கும் இடையே குதிக்கும் பந்தைத் தந்துவிட்டு விலகும் இடம் பெரிய கனவு நனவாகும் இடம். பாதாளபைரவி இருக்கும் அதே ஊரில்தான் பந்து விற்பவனும் ஊராரின் கனவுகளை சாத்தியமாக்கிவிட்டுப் போகிறான். இப்படி நம்பிக்கை கொடுக்கும் சித்திரம் ஒரு சில கவிதைகளில் மட்டுமே வெளிப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவரது முந்தைய தொகுப்பான ‘<i>சீதமண்டல</i>’த்தில் இல்லாத வகையில் ‘<i>திருச்சாழல்</i>’ தொகுப்பில் மரபிலிருந்து சுட்டும் வரிகள் சரியான இடத்தில் பொருந்திப் போயுள்ளன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலகினில் பொருட்களுக்கு விலையுண்டு. தக்க விலை. வாங்குபவர் தீர்மானிக்கிறாரா? தொடர்ந்து அதையே வாங்குபவர் தனது தகுதியை நிலைநாட்டி விடுகிறார். பிழையான அரசியலை அரவணைப்பதும் அதுபோலத்தான் என்கிறார் கண்டராதித்தன். திடுமென வந்து நிற்கிறது ஒரு வரி-</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<blockquote class="tr_bq">
இன்ன விலை<br />
இன்ன பொருள்<br />
பார் முழுதும்<br />
விற்க <br />
இது வேண்டும்<br />
கற்றது ஆரொடு சொல்லுதி விரைந்து.</blockquote>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடைசி வரி இரணிய வதைப்படலத்தில் வருவது. மன்னவன் என்றும் பிழையானவன் அல்ல, மக்களின் பிழையே தவறான மன்னனை அரியணையில் உட்காரவைக்கிறது எனும் பொருள் வரும்படியான இடத்தில் வரும் வரி. கம்பனிலிருந்து ஒரு நேர்க்கோடு இட்டுக் காட்டுகிறார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கண்டராதித்தனின் மொழி படிமங்களால் ஆனது. அதை அவர் அன்றாட வாழ்விலிருந்து எடுத்துக் கொண்டாலும் எங்கோ ஓர் அழைப்பு அவரது கவிதையை மரபின் ஒலி நயத்துக்குள்ளும், தொன்ம காட்சியினோடும் ஒடுங்க வைக்கிறது. அதனால், இயல்பாக யதார்த்த தளத்தில் இருக்கும் கவிதைகள்கூட பாடும்படியான ஒலி அழகோடு அமைந்திருக்கிறது. இன்று கவிதைகளைச் உரக்கச் சொல்லிக் காட்டுவது வழக்கொழிந்து போன மரபு என்றாலும், கவிதை ஒரு மந்திரத்தொனியை அடைவதற்கு ஓசை நயம் அவசியமானது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
..</div>
<div style="text-align: justify;">
<blockquote class="tr_bq">
சொல்வது சொல்<br />
சொன்னது சொல்<br />
சொல்<br />
சொல்</blockquote>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கண்டராதித்தனின் கவிதைகளில் சில பகடியை மிக இயல்பாகக் கடத்துகின்றன. தொன்ம நிகழ்வுகளோடு இணைக்கும் சரடை இழக்கும்போது அவரது கவிதைகள் அன்றாடத்தனத்துக்குள் புகுந்துவிடுகின்றன. உயர் தளத்திலிருந்து கீழே இறங்கும் இது போன்ற கவிதைகளை மென்மையான பகடி மூலம் அவர் சமன் செய்கிறார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘<i>இன்று அரசியலற்றவன் யாரும் கிடையாது</i>’ எனும் பின்நவீனத்துவப் போக்கை சீண்டிப் பார்க்கும் கவிதை ஒன்று. அரசியல் என்பது காகிதத்தில் எழுதிப் பார்க்க மட்டுமாகவும், பாவனை அறமாகவும் ஆகிப்போன இச்சூழலில் தனிமனித சுதந்திரம் என்பது இழப்பதற்காக மட்டுமே என்பதைச் சொல்லும் கவிதை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<blockquote class="tr_bq">
அரசியல் பிடிக்காதென்பதே<br />
அரசியல்தானென்றார்<br />
..<br />
மரவட்டையைத் தள்ளுவது போலத்<br />
தள்ளிவிட்டார்<br />
பண்பட்டவர்தான்<br />
பண்பட்டவரென்றால்<br />
எந்நேரமும்<br />
பண்பட்டேயிருக்க முடியுமா?</blockquote>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கம்பனிடம் அரசியல் இல்லை எனச்சொல்லிவிடமுடியாது. கம்பனின் அன்றாட வாழ்வின் விழுமியங்களுக்கும், சீர்கேடுகளுக்கும் பதில் தேடும் விதமாக ராம காதையையும், தொன்மப் படிமங்களையும் இணைத்துப் பார்க்க அவர் எடுத்துக் கொண்டது ராமாயணம் எனும் இதிகாசம். சிறந்த உதாரணம் அதில் வரும் பிரகலாதன் கதை. நேரடியாக ராமாயணத்துக்குத் தொடர்பில்லாத சரடு. பக்தியை முன்னிறுத்தி இணைக்கப்பட்டது. கம்பரின் காலத்தைக் கணக்கில் வைத்தால் அன்றைய நிகழ்ச்சிகளையும், மரபையும் இணைத்துக் காட்டிய கவிதைகள் என்றே சொல்லலாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நிழல் விளையாட்டு போல சிறு படிமமும் பெரும் உருவம் கொள்ளும் காவிய காலத்திலிருந்து, பெரிய சித்திரங்கள் சிறு விளையாட்டுகளாக மாறும் களம் கண்டராதித்தனின் கவிதைகள். அவ்வுருவங்களுக்கு காரண காரிய தொடர்பு கிடையாது. மரபில் அவர்களது இடம் பெரியது. பிரம்மாண்டமான நிகழ்வுகளுக்குக் காரணமாக இருப்பது. இவரது கவிதைகளில் அவை சுட்டிச் செல்லும், எட்ட நின்று பார்க்கும் வடிவங்கள் மட்டுமே. மரபிலிருந்து விலகி கண்டராதித்தன் கவிதைகள் இன்றைய காலத்துக்கு இவ்வழியே பொருந்திப் போகிறது. இது ஒரு வழிப்பாதையல்ல. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<blockquote class="tr_bq">
<blockquote class="tr_bq">
வெளிச்சங்கள்</blockquote>
<br />
குச்சி மிட்டாய் சுவைக்காக<br />
அழுது கொண்டிருக்கிறது குழந்தை<br />
கழுநீர்ப்பானைக்குள் தலைவிட்டுக்<br />
குடிக்கிறது தெருநாய்<br />
மணியோசைக்கு முன்னும் பின்னும்<br />
இருந்துகொண்டிருக்கிறது மரணம்<br />
சாரையும் கருவிழையானும்<br />
இழைய எழுகிறது மகுடியோசை<br />
கல்லறைக்குள்ளிருந்தபடியே வேடிக்கை<br />
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்<br />
திரிபுவனச் சக்கரவர்த்திகள்</blockquote>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மகுடியோசை, குச்சிமிட்டாய் கிடைக்காமல் அழுது கொண்டிருக்கும் குழந்தை எனப் பெரிய சித்திரங்களை எட்டிப் பார்க்கும் திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஆபத்பாந்தவர்கள் அல்லர். கல்லறைக்குள்ளிலிருந்து எட்டிப் பார்ப்பவர்கள் மட்டுமே. இன்றைக்கான விமர்சனம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘<i>சாழல்</i>’ என்பது சொல்விளையாட்டுப் பாடல் என்பதையும் தாண்டி அது புராணக் கதையையும தத்துவத்தையும் ஒன்றாகத் திரட்டிப் பெரியதாகக் காட்டும் ஒரு கேள்வி-பதில் / உரையாடல் வடிவம் என்றும் சொல்லலாம். ஒரு பெண் சிவனின் பெளதிக உடலை கேலி செய்வதும், மற்றொருவள் அதற்கு தத்துவ விளக்கம் அளிப்பதுமாக அமைந்த பாணியிலிருந்து தொடர்ந்து தனக்கும் உலகுக்குமான உரையாடலாக கண்டராதித்தன் கவிதை மாறியிருக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<blockquote class="tr_bq">
என் அப்பன், எம்பிரான், எல்லார்க்கும் தான் ஈசன்;<br />
துன்னம் பெய் கோவணமாக் கொள்ளும்அது என்? ஏடீ!<br />
மன்னு கலை, துன்னு பொருள் மறை நான்கே, வான் சரடா,<br />
தன்னையே கோவணமா, சாத்தினன், காண்; சாழலோ!<br />
<br />
(திருவாசகம், திருச்சாழல், 2)</blockquote>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கண்டராதித்தன் கவிதைகளில் வரும் தெய்வங்கள் நின்று கொல்வதுமில்லை, வரம் தருவதுமில்லை. நம்மைத் தனியே விட்டுச் சென்ற உலகினுள் அவர்களும் இப்போது விருந்தாளியாக வந்து ஏமாற்றமும், தரித்திரமும் பிடுங்கித் தின்னும் சிலரது வாழ்வைக் களிக்கிறார்கள். அவல நிலையில் இருக்கும் வாழ்வை கடத்துபவர்களான நம்மால் இந்த நிலைக்கான காரணத்தை விளக்க முடியாது. சிறு புன்னகையை வாயோரம் தேக்கி வைத்திருக்கும் தெய்வங்கள் நம் இயலாமையையும் தரிசனம் செய்கின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<i><b>திருச்சாழல் (கவிதைகள்)</b></i></div>
<div style="text-align: justify;">
<i><b>ஆசிரியர் - கண்டராதித்தன்</b></i></div>
<div style="text-align: justify;">
<i><b>பதிப்பு - டிசம்பர் 2018</b></i></div>
<div style="text-align: justify;">
<i><b>வெளியீடு - வியன்புலம்</b></i></div>
<div style="text-align: justify;">
இணையத்தில் - <a href="https://www.commonfolks.in/books/d/thiruchchazhal">Common folks </a></div>
</div>
நட்பாஸ்http://www.blogger.com/profile/11647556064101907512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-55814809336726468192020-02-04T10:34:00.001+05:302020-02-04T10:34:16.574+05:30எஸ்தர் - வண்ணநிலவன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<blockquote class="tr_bq" style="text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI", sans-serif;"><span style="font-size: x-small;">புதுமைப்பித்தனுக்குப்
பிறகு சிறுகதையில் கணிசமான அளவு பங்களிப்புச் செய்திருப்பவர் வண்ணநிலவன் என்பதைத் தமிழ்
இலக்கிய உலகம் நன்கு அறியும்: விக்ரமாதித்தியன் - திண்ணை நவம்பர் 28, 1999.</span></span></blockquote>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaXybntPNQzDWrwSf3j1kw2mNo5RL1gt1UfHWgJ__-cjdL0xZnX5VJYWm_VIcdsnE4iO_dmglXLWQccQtRGjAs9_7ZvXXrOv5Ad_h3qkOxyZdiXmdRT6otGPthIUn9vE-XEpMb4SKggBQ/s1600/5827862.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="266" data-original-width="176" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaXybntPNQzDWrwSf3j1kw2mNo5RL1gt1UfHWgJ__-cjdL0xZnX5VJYWm_VIcdsnE4iO_dmglXLWQccQtRGjAs9_7ZvXXrOv5Ad_h3qkOxyZdiXmdRT6otGPthIUn9vE-XEpMb4SKggBQ/s1600/5827862.jpg" /></a></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "Nirmala UI",sans-serif;"><o:p><span style="font-size: x-small;"><br /></span></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "Nirmala UI",sans-serif;"><o:p><span style="font-size: x-small;"><br /></span></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI", sans-serif;">நாம் சோகமயமான பாடல்களை கேட்பது, சோகமயமாக திரைப்படங்களைத் தேடிப் பார்ப்பது, சோகம் ததும்பும் கதைகளை வாசிப்பது. இவற்றின் பின்னே உள்ள உளவியல்தான் என்ன?<o:p></o:p></span></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI", sans-serif;">கூகுள் ஆண்டவரைக் கேட்டால் அவர் பலவகை விசித்திர ஆய்வு முடிவுகளை எடுத்து நம் முன் தந்தாலும் - நான் இப்படி நினைக்கிறேன். வாழ்க்கையில் நாம் எப்போதும் ஒரு துயரின் பிடியில் அகப்பட்டுக் கொண்டு தவிப்பதாகவே மனம் நினைக்கிறது. துயரம் என்பது எனக்கானது மட்டுமல்ல; மற்றவர்களுக்கும் இது உள்ளது என்று நம் மனதை நம்ப வைக்க இத்தகைய சோகச் சித்திரங்களில் நாம் ஆழ்கிறோம் என்று நான் நினைக்கிறேன்.<o:p></o:p></span></div>
<div>
<br /></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI",sans-serif;">தனது
"பின்நகர்ந்த கால"த்தில் எஸ்தர் சிறுகதை உருவான கதையைக் குறிப்பிடுகிறார்
வண்ணநிலவன். ஒருமுறை நெல்லை சென்றுவிட்டுத் திரும்புகையில் வழியில் ராமநாதபுரம் மாவட்ட
மக்கள் பலர் வண்டி வண்டியாக பஞ்சம் பிழைக்க ஊர்விட்டு வெளியேறுவதைக் காண்கிறார் வண்ணநிலவன்.
அந்த நிகழ்வு அவர் மனதை அடுத்த சில நாட்களுக்கு நீங்காத சோகமாய் நின்றாட்ட, அதன் வேகத்தில்
அவர் எழுதியதுதான் எஸ்தர்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI",sans-serif;">எழுத்து எல்லோருக்கும்
வாய்த்துவிடுவதில்லை என்று க்ளிஷேவாகத்தான் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. எல்லாமுமே
எழுத்துதான் எனினும், நமக்கு இப்படியெல்லாம் வாய்க்குமா என்று ஏங்கும் எழுத்து சிலருடையது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI",sans-serif;">லா.ச.ரா.'வின்
அபிதா ஒரு அழகு என்றால், 'கனகாம்பர'த்தில் சாரதாவின் சாதுர்யம் சொல்லும் கு.ப.ரா. வேறோரழகு.<span style="mso-spacerun: yes;"> </span>சாலம்மாளாகவே நம்மைக் கொண்டு சென்று நிறுத்திவிடும்
அழகிய பெரியவனின் 'வனம்மாள்' ஒரு வகை என்றால், கி.ரா'வின் கோமதி (அது ஆண் கோமதிதான்
என்றாலும்), இன்றைய தமிழ் நடையில் சொல்ல வேண்டும் என்றால், வேறே லெவல். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI",sans-serif;">வண்ணநிலவனின்
எஸ்தர் இவற்றுள் அப்படி ஒரு தனிச்சுவை. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI",sans-serif;">மழை பொய்த்து,
வயல் ஒழிந்து, கால்நடைகள் அழிந்து, ஊர் மொத்தமும் காலியான போதினில்; தாங்களும் ஊரைவிட்டுச்
செல்வோம் என முடிவெடுக்கும் ஒரு குடும்பத்தின் கதைதான் - <span style="mso-spacerun: yes;"> </span>நிறைந்த சோகம் நிறைந்த கதைதான் எஸ்தர். எனினும்
- பசியை, பஞ்சத்தைப் பெரும் தரித்திர விவரணைகள் வழியே பிழியப் பிழியச் சொல்லாமல்; கதையின்
வழி நம் அருகினில் ஒருவர் அமர்ந்து நிதானமாய்க் கதைப்பதாய் நமக்கு அதன் வீரியத்தை விளங்கச்
செய்வதுவும் ஒரு பெரும் எழுத்துக் கலைதான் இல்லையா?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI", sans-serif;">சுமார் மூன்றாயிரம்
வார்த்தைகள் கொண்ட எஸ்தர் சிறுகதையில் மிஞ்சிப் போனால் ஒரு ஐம்பது வார்த்தைகள்தான்
மனிதர்கள் கொள்ளும் சம்பாஷணைகள். மற்றவை மொத்தமும் கதை வழியும், கதை மாந்தர் வழியும்
வண்ணநிலவன் நம்மிடம் நடத்தும் சம்பாஷனைதான். இப்படி ஒரு நடையில் வெளிவந்த கதையை இதன்முன்
வாசித்த நினைவில்லை.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI",sans-serif;">இருந்த ஒரேயொரு
வத்திப்பெட்டியின் மிச்சக் குச்சிகளில் ஒன்றை பீடி பற்ற வைக்க உபயோகித்துவிட்டு தலைதாழ்ந்து
தட்டில் வைக்கப்பட்ட யாருக்கும் போதாத உணவையும் மறுக்கும் டேவிட்டைப் பார்த்து இதைச்
சொல்கிறாள் எஸ்தர் சித்தி:<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<blockquote class="tr_bq" style="text-align: justify;">
<span style="mso-ascii-font-family: "Nirmala UI"; mso-bidi-font-family: "Nirmala UI"; mso-hansi-font-family: "Nirmala UI";">“</span><span style="font-family: "Nirmala UI",sans-serif;">ஏய் சாப்பிடுடே. ஒங் கோவமெல்லாம் எனக்குத் தெரியும்</span><span style="mso-ascii-font-family: "Nirmala UI"; mso-bidi-font-family: "Nirmala UI"; mso-hansi-font-family: "Nirmala UI";">”</span></blockquote>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI",sans-serif;">இருளுக்கு எத்தனையோ
விவரணைகளை வாசித்திருக்கிறோம். இருள் தரும் மருட்சியைப் பலவாறு பலர் எழுத வாசித்திருக்கிறோம்.
மழை பொய்த்து, பஞ்சம் சூழ்ந்து, மக்கள் எல்லாம் ஊரைவிட்டு வெளியேற; படிப்படியாக அந்த
ஊரில் இரவின் இருட்தன்மை பெருகுவதை; அவர்களுக்கான அந்த கிராம வாழ்க்கையின் இறுதி எல்லையைத்
அவர்கள் அடைந்துவிட்டனர் என்பதை அந்த இருள் விவரணையின் வழியாகவே சொல்கிறார் வண்ணநிலவன்.<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI",sans-serif;">வெளிச்சமே இல்லாத
ஊரிலும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற சிறு விஷயம் கூட அந்த இருட்டை மனதினை விட்டு
விரட்டப் போதும் இல்லையா?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI",sans-serif;">எஸ்தர் சித்தி
இப்படிச் சொல்கிறாள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<blockquote class="tr_bq" style="text-align: justify;">
<span style="mso-ascii-font-family: "Nirmala UI"; mso-bidi-font-family: "Nirmala UI"; mso-hansi-font-family: "Nirmala UI";">“</span><span style="font-family: "Nirmala UI",sans-serif;">இந்த மாதிரி மையிருட்டு இருக்கவே கூடாது, இது ஏன் இம்புட்டு
இருட்டாப் போகுதுன்னே தெரியல இது கெடுதிக்குத்தான்</span><span style="mso-ascii-font-family: "Nirmala UI"; mso-bidi-font-family: "Nirmala UI"; mso-hansi-font-family: "Nirmala UI";">”</span></blockquote>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI",sans-serif;">கதையின் நிறைவுக்கு
முந்தைய இரவில் எஸ்தர் சித்தி சொல்வதுவும்; டேவிட் எதிர்க்கேள்வியாகக் கேட்பதுவும்
இவை: <o:p></o:p></span></div>
<blockquote class="tr_bq" style="text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI",sans-serif;"><o:p> </o:p></span><span style="mso-ascii-font-family: "Nirmala UI"; mso-bidi-font-family: "Nirmala UI"; mso-hansi-font-family: "Nirmala UI";">”</span><span style="font-family: "Nirmala UI",sans-serif;">நீங்க ரெண்டு பேரும் ஒங்க வீடுகளுக்குப் போயி இரிங்க. புள்ளயளயுங்
கூட்டிக்கிட்டுப் போங்க</span><span style="mso-ascii-font-family: "Nirmala UI"; mso-bidi-font-family: "Nirmala UI"; mso-hansi-font-family: "Nirmala UI";">”</span><span style="font-family: "Nirmala UI",sans-serif;"><o:p> </o:p></span><span style="mso-ascii-font-family: "Nirmala UI"; mso-bidi-font-family: "Nirmala UI"; mso-hansi-font-family: "Nirmala UI";">“</span><span style="font-family: "Nirmala UI",sans-serif;">நீங்க ரெண்டு பேரும் எங்கூட வாங்க, மதுரையில போய் கொத்த வேல
பாப்போம், மழை பெய்யந்தன்னியும் எங்ஙனயாவது காலத்தே ஓட்ட வேண்டியது தானே? ஈசாக்கும்
வரட்டும்</span><span style="mso-ascii-font-family: "Nirmala UI"; mso-bidi-font-family: "Nirmala UI"; mso-hansi-font-family: "Nirmala UI";">”</span><span style="font-family: "Nirmala UI",sans-serif;"><o:p> </o:p></span><span style="mso-ascii-font-family: "Nirmala UI"; mso-bidi-font-family: "Nirmala UI"; mso-hansi-font-family: "Nirmala UI";">“</span><span style="font-family: "Nirmala UI",sans-serif;">பாட்டி இருக்காளா?”<o:p></o:p></span></blockquote>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI",sans-serif;">அவ்வளவுதான்
கதையில் வரும் மொத்த வசனங்களும். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI",sans-serif;">பஞ்சம், பட்டினி
பேசும் எஸ்தர் சிறுகதை சில மேலான்மைப் பாடங்களை நமக்கு எடுக்கிறது என்றால் நீங்கள்
நம்பித்தான் ஆக வேண்டும். சென்ற வார மத்தியில் ஒருநாள் அலுவலகப் பணி சார்ந்த<span style="mso-spacerun: yes;"> </span>ஒரு அகச்சிக்கலில் தவித்துக் கொண்டிருந்த எனக்கு
எஸ்தர் வாசித்த பின் ஒரு தீர்வு கிடைத்தது நிஜமோ நிஜம். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த
மதிப்புரையை இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Nirmala UI, sans-serif;">ரொம்பவும் பேச ஒன்றுமில்லை. எஸ்தர் வாசியுங்கள். </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI",sans-serif;"><o:p><br /></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI",sans-serif;">வண்ணநிலவனின்
கடல்புரத்தில் என் மனதுக்கு அத்தனை நெருக்கமான புதினம் இல்லைதான். ஏனோ, இதைக் கொண்டாடும்
மற்றோரைப் போல என் மனம் கடல்புரத்தில் புதினத்தைக் கொண்டாடவில்லை. </span><span style="font-family: "Nirmala UI", sans-serif;">ஆனால், எஸ்தர்.....
வாசிப்பினில் நல்-அனுபவம். முந்நூற்றறுபது டிகிரியில் நிறைய பாடம் எடுக்கிறது. நன்றி
வண்ணநிலவன் சார்.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI",sans-serif;">எஸ்தர் - அமேசானில்
வாங்க / வாசிக்க:<span style="mso-spacerun: yes;"> </span><a href="https://www.amazon.in/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-Tamil-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-ebook/dp/B0814WRKPS/ref=sr_1_1?keywords=esther+vannanilavan&qid=1580786908&sr=8-1">இணைப்பு</a>
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI",sans-serif;">எஸ்தர் (வண்ணநிலவனின்
முதல் சிறுகதைத் தொகுப்பு) வாங்க: <a href="https://www.natrinai.in/index.php?_route_=%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D">நற்றிணை</a></span></div>
</div>
Giri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-91124436657517311712020-01-27T08:48:00.000+05:302020-01-27T08:48:52.281+05:30ஒரு சிற்பியின் சுயசரிதை - எஸ். தனபால்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
எஸ். தனபால் எழுதிய, “ஒரு சிற்பியின் சுயசரிதை,” 126 பக்கங்கள் மற்றும் 16 வழுவழு தாள்களின் இருபுறம் (பெரியார், திரு. வி. க., பாரதிதாசன், எஸ். ராதாகிருஷ்ணன், என்று தனபால் வடித்த சிற்பங்கள் மற்றும் சில ஓவியங்களும் அவர் தன் நண்பர்களோடும் கிருஷ்ணர், மீனவர், புத்தர் வேடத்திலும்) என 32 புகைப்படங்கள் கொண்ட புத்தகம். காலச்சுவடு பதிப்பகம் இது மாதிரியான நூல்களை வெளியிடுவதில் தன்னை முதன்மை பதிப்பகமாய் நிறுவிக் கொண்டிருக்கிறது (மேற்கத்திய ஓவியங்கள் குறித்த பி.ஏ. கிருஷ்ணனின் இரு நூல்களும் இவ்வகையில் உயர் முன்மாதிரிகள்). சந்தாதாரர்களுக்கு மாதம் ஒரு புத்தகம் அனுப்பும் சிறுவாணி வாசகர் மையம் இந்தப் புத்தகத்தை வெளியிடத் தேர்ந்தெடுத்ததில் ஒரு முக்கியமான இடத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறது. சிறுவாணி வாசகர் மையம் அளிக்கும் விற்பனை உத்திரவாதம், காலச்சுவடு பதிப்பகத்தின் தரமான அச்சு மதிப்பீடுகள் என்ற இரண்டும் சேர்ந்து பாதுகாத்து வைத்திருக்கத்தக்க ஒரு புத்தகம் நம் கைகளில் வந்திருக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSQOAbP7xXv0UqC2tSjLRu1yv7DouNxGJe5RzkCCf2C2WyPE1w8EkPpFG2Xq0fnP8VWCzAD8QTNczTw1dr6ghavyblmrlr7O2fl11mVXV1O-WGPwTrz6vew_iY5FfM4hJ9oLJLHvHKOiU/s1600/dhanapal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="958" data-original-width="616" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSQOAbP7xXv0UqC2tSjLRu1yv7DouNxGJe5RzkCCf2C2WyPE1w8EkPpFG2Xq0fnP8VWCzAD8QTNczTw1dr6ghavyblmrlr7O2fl11mVXV1O-WGPwTrz6vew_iY5FfM4hJ9oLJLHvHKOiU/s400/dhanapal.jpg" width="256" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
17.1.1993 முதல் 31.8.1993 வரை எட்டு மாதங்கள் ஒவ்வொரு வாரமும் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் வெளியான தொடர் கட்டுரைகளை தொகுத்து ஒரு நூலாக வெளியிடும் முயற்சிகள் மேற்கொண்ட இதன் பதிப்பாசிரியர் நண்பர் கிருஷ்ண பிரபு நம் நன்றிக்குரியவர். அவரிடம் இது குறித்து பேசியபோது, நுண்கலைகள் குறித்து சில புத்தகங்கள் தொடர்ந்து வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகவும், அந்த வரிசையின் முதல் நூல்தான் இது என்றும் சொன்னார். இந்தப் புத்தகத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அவரது முயற்சி வெற்றி பெறும் வாய்ப்பை அதிகரித்திருக்கும் என்று நம்புகிறேன். எஸ். தனபால் குறித்துமே, வெவ்வேறு கலைஞர்கள் எழுதிய கட்டுரை தொகுப்பு ஒன்றை விரைவில் பதிப்பிக்க இருக்கிறார், அவர். அதற்கு இதைவிட நல்ல வரவேற்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.<br />
<a name='more'></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனந்த விகடன் தொடர் என்பதால் புகழ் பெற்ற ஆளுமைகளுடன் பழகிய அனுபவங்களே விரிவாக பேசப்படுகின்றன, சுவாரசியம் என்பது அத்தியாய முடிவில் எழும் கேள்வியில் தொக்கி நிற்பதில்தான் அதிகம் (“நான் விரும்பியோ விரும்பாமலோ, தெரிந்தோ தெரியாமலோ புத்தர் என் வாழ்வில் நிறையவே வந்து விட்டார். நான் காப்பி எடுத்த கொரிய பெயிண்டிங்கிலும் புத்தச் சார்பு உண்டு. அது...”). சிற்பி தனபாலின் அகமோ, அவர் வாழ்ந்த உலகின் சித்திரமோ நினைவில் நினைவில் நிற்கும் வகையில் வெளிப்படும் சாத்தியங்கள் முயற்சிக்கப்படவில்லை. ஒரு சில தெறிப்புகளில் இதன் இழப்பை நம்மால் உணர முடிகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புத்தக ஆரம்பத்திலேயே தனபால் மிக முக்கியமான அவதானிப்பை அளிக்கிறார்:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<blockquote class="tr_bq">
<i>“19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலெல்லாம் அந்தக் கல்லூரியினுள்... ‘ஓவியக் கலை’ என்பது எங்கோ ஒரு மூலையில்தான் ‘கொஞ்சூண்டு’ இருந்தது. மாறாக, மரத்தைக் குடைந்து செய்யும் மர, தச்சு வேலைகளும் பருத்தித் துணியில் அச்சிடப்படும் டிஸைன்களும் கார்பெட் உருவாக்கமும் நகை செய்தலும் கலம்காரி கைவண்ணமும்தான் கல்லூரியின் முக்கியமான அம்சங்களாக இருந்தன. </i></blockquote>
<blockquote class="tr_bq">
<i>“கல்லூரியில் செய்யப்பட்ட நாற்காலி, மேஜை போன்ற மர அயிட்டங்கள் அப்போதே சற்று மாடர்ன் பாணியில் இருந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் படமெடுத்து இரண்டாவது உலகப் போரின்போது ஒரு புத்தகமாகவேகூட வெளியிட்டிருக்கிறார்கள். </i></blockquote>
<blockquote class="tr_bq">
<i>“ஜப்பான் அச்சகத்தில் பிரிண்ட் ஆகிற அளவுக்கு மிக உயர்ந்த இடத்தில் இருந்தது நம் ஓவியக் கல்லூரியின் மரவேலைத்துறை. இன்று அது போன்ற ஒரு துறையே அங்கில்லை என்றால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்குமா? ஆனால் உண்மை அதுதான்! </i></blockquote>
<blockquote class="tr_bq">
<i>“மர வேலைப்பாடு மட்டுமல்ல... அலுமினியப் பாத்திரங்கள் செய்வது, மெட்டல் வொர்க், நகை செய்யும் கலை, போன்ற பல துறைகள் நமது ஆதிக்க வர்க்கமான அரசாங்க அதிகாரிகளால் சென்னை ஓவியக் கல்லூரியில் மூடப்பட்டு வந்திருக்கின்றன.”</i></blockquote>
</div>
<div style="text-align: justify;">
ஜப்பானைக் குறிப்பிடுவதால் சொல்லவில்லை, அங்கு பாரம்பரியமாகச் செய்யப்படும் கத்திகள், மரச் சாமான்கள் போன்றவற்றில் ‘ஸ்டேட் ஆப் தி ஆர்ட்’ என்று சொல்லக்கூடிய உயர்ந்த தொழில்நுட்பம் வெளிப்படுவது நினைவுக்கு வருகிறது. அடிப்படை தொழிலறிவுக்கும் உயர் கலைக்கும் தொழில் நுட்பத்துக்கும் உள்ள உறவு மிகவும் நுட்பமானது, இடையறாத் தன்மை கொண்டது (“நான் அந்தக் கல்லூரிக்குள் மாணவனாய் நுழைந்த காலகட்டத்தில் நுண்ணிய வேலைப்பாடுகளின் (crafting) காலம், இப்படித்தான் ஒருவித முடிவுக்கு வந்து கொண்டிருந்தது,” என்று தனபால் வருந்துவதில் நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியாத தரிசனம் இருக்கிறது). இது குறித்து இங்கு அதிகம் விவாதிப்பதற்கில்லை, தொழில்நுட்ப வளர்ச்சி வரலாற்றில் ஆர்வமுள்ள <a href="https://danwang.co/how-technology-grows/">Dan Wang தன் தளத்தில் Process Knowledge என்பதன் அவசியம் குறித்து மிக விரிவாகவே எழுதியிருக்கிறார்</a>. நுண்கலைகளை மட்டுமல்ல, தொழில்நுட்பத்தையும்கூட நாம் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. பாரம்பரிய கலைகளை காப்பாற்ற வேண்டியது மரபு மீதுள்ள பற்றுதலால் மட்டுமல்ல, எதிர்கால தொழில்நுட்பம் அதிலிருந்துதான் கிளைக்கிறது என்பதை உணராதவரை, நாம் வளர்ச்சிப் பாதையில் படியெடுப்பவர்களாகவே இருப்போம். நிற்க. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தனபால் அந்தக் கால சென்னை குறித்து அளிக்கும் சித்திரம் ஒரு சில வாக்கியங்களிலேயே நம் கற்பனையை விரித்து, இன்னும் எழுதாமல் விட்டுவிட்டாரே, என்று ஏங்கச் செய்கிறது. தன் தந்தை குறித்து இப்படி எழுதுகிறார்:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<blockquote class="tr_bq">
<i>“மளிகைக்கடை வைத்திருந்த என் அப்பா சுப்புராயுலு அடிக்கடி டவுன் வரை சென்று கடைக்குச் சாமான்கள் வாங்கி வருவார். </i></blockquote>
<blockquote class="tr_bq">
<i></i>
<i>“டவுனிலிருந்து வருகிற ட்ராம் வண்டி எங்கள் வீட்டுக்கு முன்னால் நிற்கும். அநேக வேளைகளில் அதிலிருந்து அப்பா மட்டும்தான் இறங்குவார். கும்பல் கிடையாது. ட்ராம் போன பிறகு இடுப்பில் கட்டியிருக்கும் சிவப்பு நிற பட்டு வேட்டியில் ருத்ராட்ச பார்டர் கண்ணைப் பறிக்க... ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக அப்பா ரோட்டை ‘க்ராஸ்’ பண்ணி நடந்து வரும்போது பார்ப்பதற்கே ஏதோ தெய்வீகமாய் இருக்கும்.” </i></blockquote>
</div>
<div style="text-align: justify;">
தனபால் வீடு இருந்த இடம்- மயிலாப்பூர் கச்சேரி ரோடு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தனபாலும் நண்பர்களும் ஒரு திருமணத்துக்கு சென்னையிலிருந்து பெங்களூருக்கு சைக்கிள் ஓட்டிக் கொண்டே செல்கிறார்கள். இதைச் சொல்லும் இரு பத்திகளில் வேறொரு காலம் மட்டுமல்ல, வேறொரு உலகே திறந்து கொள்கிறது:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<blockquote class="tr_bq">
<i>“பூந்தமல்லி வந்தபோதே இருட்டிவிட்டது. அங்கு கோர்ட் வாசலில் சைக்கிளைப் பூட்டி நிறுத்திவிட்டு படுத்துக் கொண்டோம். அடுத்த இரண்டு இரவுகளும்கூட அப்படித்தான்- நெடுஞ்சாலையோரத்தில் சற்றே பெரிய கட்டடமாய் இருந்தால் அங்கேயே தலை சாய்த்துவிடுவோம். வழி நெடுக பழம், பால், பிஸ்கட்டுகள், சில கிராமத்து ஆப்பக்கடை இட்லிகள் எங்கள் பசியை ஆற்றின. </i></blockquote>
<blockquote class="tr_bq">
<i>“அடித்த காற்றின் வேகத்திலும், கிருஷ்ணகிரி சாலையின் ஏற்ற இறக்கத்திலும் பல முறை சைக்கிள் வால் ட்யூப் பிய்த்துக் கொண்டு போயிற்று! கையோடு கொண்டு வந்திருந்த பெட்டியிலிருந்து மற்றொரு வால் ட்யூபை மாட்டுவான் என் அத்தை மகன்.”</i></blockquote>
</div>
<div style="text-align: justify;">
தனபால் தன் சமகாலத்தில், 1993ஆம் ஆண்டு நிகழ்ந்த அனுபவத்தை எழுதுகிறார்- அதுவும்கூட நமக்கு வேறோர் உலகம்தான் (மயிலை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி உற்சவம்): </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<blockquote class="tr_bq">
<i>“உற்சவ அமர்க்களத்துக்கும் உற்சாகப் பக்தர் கூட்டத்துக்கும் நடுவே மாட வீதியில் அமைந்துள்ள அந்த முதலியார் சங்கச் சத்திரம் ஒன்றைச் ‘சித்திரக்கூடம்’ என்றார்கள். எட்டிப் பார்த்தேன். </i></blockquote>
<blockquote class="tr_bq">
<i>“உள்ளே ஒரிஜினல் தஞ்சாவூர் பெயிண்ட்டிங்கில் சிவபுராணக் காட்சிகள், தயிர்க்காரி, குறவன்-குறத்தி என அந்தக் கால மரத்தில் உருவாக்கப்பட்டிருந்த காரெக்டர் கட்-அவுட்டுகள், சில சீனக் கண்ணாடி வேலைப்பாடுகள், என்று பலவிதமான கலைப் பொக்கிஷங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ‘எல்லாம் நூற்றைம்பது வருடப் பழசு,’ என்றார்கள். அத்தனையையும் வெகு சீராக பராமரித்து வந்திருக்கிறார்கள். சரியாகச் சொல்வதானால், புதுமை செய்கிறோம் பேர்வழியென்று எந்தப் புதுப் பாணியையும் புகுத்தாமல், அந்தப் பொக்கிஷங்களைக் கெடுக்காமல், வைத்திருக்கிறார்கள். </i></blockquote>
<blockquote class="tr_bq">
<i>“ஓவிய காலரிகள் இல்லாத அந்தக் காலத்தில், பக்தி அடிப்படையில் அமைந்த சைவ வழி ஓவியங்களை ஆதரித்து வாங்கி வைத்திருக்கிறது இந்தச் சித்திரக்கூடம். அவற்றைத்தான் இன்று வரையிலும் கட்டிக்காத்து வந்திருக்கிறார்கள். ஓவிய ஞானமும் ரசனையும் உடையவர்கள் ‘சபாஷ்’ சொல்லாமலோ பிரமிக்காமலோ இருக்க முடியாத புராதனக் கண்காட்சி அது.” </i></blockquote>
</div>
<div style="text-align: justify;">
மயிலை கச்சேரி ரோட்டில் பிறந்து வளர்ந்த தனபாலும்கூட அதே பகுதியில் மாட வீதியில் உள்ள இந்தச் சித்திரக் கூடத்தை அவரது எழுபத்து மூன்றாவது வயதில்தான் அறிந்து கொள்கிறார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தியா சுதந்திரமடைவதற்கு முன், பழைய சத்தியமூர்த்தி பவன் இருந்த இடத்தில் சத்தியமூர்த்தியும் பின்னர் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் காமராஜரும் ஓவியக் கண்காட்சிகள் நடத்திருக்கிறார்கள் என்று தனபால் வேறோரிடத்தில் குறிப்பிடுகிறார் (தொடர்ந்து இருபது நாட்கள் நீடித்த காமராஜரின் ஓவியக் கண்காட்சி மேளாவில் தனபாலும் சக மாணவர்களும் பங்கேற்றிருக்கிறார்கள்). சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் முதலியார் சத்திர சித்திரக்கூட ஓவியங்களைச் சேகரித்தவர்களையும் சத்தியமூர்த்தி, காமராஜர் போன்ற கலை நாட்டமுள்ள அரசியல் தலைவர்களையும் விட்டு நாம் வெகு தூரம் வந்து விட்டோம். இப்போது இதை எல்லாம் யார் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது போன்ற சரிதைகள், கலை மற்றும் கலைஞர்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்புகள், நம் கலையுணர்வு தூண்டப்படவும் அவற்றுக்குரிய முக்கியத்துவத்தை நாம் அளிக்கவும் உதவலாம். அவ்வகையில் இது அவசிய புத்தகம்.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
<b>ஒரு சிற்பியின் சுயசரிதை, </b></div>
<div style="text-align: justify;">
<b>எஸ். தனபால், </b></div>
<div style="text-align: justify;">
<b>சிறுவாணி வாசகர் மையம், காலச்சுவடு பதிப்பகம். </b></div>
<div style="text-align: justify;">
<b><a href="https://www.commonfolks.in/books/d/oru-sirpiyin-suyasarithai">CommonFolks</a>, <a href="https://www.panuval.com/oru-sirpiyin-suyasarithai-10015289">பனுவல்</a>. </b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
நட்பாஸ்http://www.blogger.com/profile/11647556064101907512noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-31489313602667731342020-01-20T11:06:00.001+05:302020-01-20T11:19:16.421+05:30கண்டடைதலின் பேருவகை- அரூ அறிவியல் புனைவுகள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="line-height: 1.3800000000000001; margin-bottom: 10pt; margin-top: 0pt; text-align: justify;">
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஒருவன் ஒருத்தியை
விரும்பினான். அவளை இழந்தான். பிறகு அவளை உருவாக்கினான்- உலகின் மிகச்சிறிய
அறிவியல் புனைவு. </span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><span style="mso-spacerun: yes;"> </span>என் மூன்றரை வயது மகனுக்கு அண்மையில்
நியுசிலாந்து எரிமலை நிகழ்வை செய்தியில் காட்டி எரிமலையையும் நெருப்பு பிழம்பையும்
விளக்கிக் கொண்டிருந்தேன். கேட்டுக்கொண்டான். இப்போது விடுமுறைக்கு எங்கு
செல்லவேண்டும் எனக் கேட்கையில் “வல்கனோவிற்கு” என்றான். அங்கே நெருப்பு சுடுமே
என்ன செய்வாய் என்றேன். சில நொடிகள் யோசித்தான். பிறகு ‘ஏ.சி ஷூ போட்டு
இறங்குவேன்.. அப்ப கால் சுடாது’ என்றான். அறிவியல்புனைவு பற்றிய கட்டுரையை எழுதத்
தொடங்கும்போது அவனுடனான இந்த உரையாடல்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. இது ஒரு
அறிவியல் புனைவா என்றால் இல்லைதான் ஆனால் அவனளவில் அறியமுடியாததை தன்னறிவைக்
கொண்டு அறிய முற்படும் குழந்தைத்தனமான கற்பனை. அறிவியல் புனைவின் அடிநாதமான உணர்வு
இதுதான் எனத் தோன்றியது. <span style="mso-spacerun: yes;"> </span></span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><span style="mso-spacerun: yes;"><br /></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அறிவியல் புனைவு
எனும் சொற் சேர்க்கையே சற்று விநோதமானதுதான். ஏனெனில் அறிவியலை நாம் எப்போதும்
தர்க்கப்பூர்வமானது, புறவயமானது, நிரூபணத்திற்கு உட்பட்டது, கறாரானது என்றே வரையறை
செய்துவருகிறோம். நேரெதிராக புனைவை உணர்வுப்பூர்வமானது, அகவயமானது, நெகிழ்வானது,
கற்பனைக்கு முக்கிய இடம் அளிப்பது, உள்ளுணர்வு சார்ந்தது என்றே வரையறை செய்வது
வழக்கம். அறிவியலில் புனைவிற்கு இடமில்லை, புனைவில் அறிவியலுக்கான இடம்
இரண்டாம்பட்சம் என்பதே பொதுக்கருத்து. ஆனால் மகத்தான கண்டுபிடிப்புகள் அனைத்துமே
உள்ளுணர்வின் எழுச்சியில் நிகழ்ந்தவை. புனைவுத் தருணத்தில் நிகழ்பவை. நமக்கு நன்கு
தெரிந்த, ஆர்சிமிடிஸ் குளியல் தொட்டியிலிருந்து யுரேகா என கூவியபடி எழுவதாகட்டும்,
தலைமீது ஆப்பிள் விழுந்து புவியீர்ப்பு விசையை நியூட்டன் கண்டடைவதாகட்டும், விஞ்ஞானி
கேக்யுள் கனவில் வால் பற்றும் பாம்பைக் கண்டு பென்சீனின் வடிவத்தை
கண்டடவைதாகட்டும், டாவின்சியின் குறிப்பேடுகளில் உள்ள படங்கள் ஆகட்டும், இவையாவும்
மகத்தான புனைவுத் தருணங்கள்தான். புனைவும் கூட சில தர்க்க ஒழுங்குகள் சட்டகங்கள்
சார்ந்தே இயங்க முடியும். மாய யதார்த்தம், மிகு புனைவு என்றாலும் அவற்றுக்கென சில
தர்க்க சட்டகங்கள் உள்ளன. புறவயத்தன்மை மற்றும் அகவயத்தன்மை ஆகிய இரண்டும்
முயங்கும் வெளியே அறிவியல் புனைவின் களம் என கொள்ளலாம். </span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அறிவியல் புனைவின்
தோற்றமும் வளர்ச்சியும் அறிவியலுடன் இணை வைக்கத்தக்கது. ஐரோப்பிய மத்திய காலகட்ட
வரலாறு முடிவுக்கு வந்து மறுமலர்ச்சி காலகட்டத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள்
நிகழத் தொடங்கின. நம் புலனறிவை பெருக்கும் கண்டுபிடிப்புகள் நிகழ நிகழ மானுட அறிவு
பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. நுண்நோக்கியும் தூரநோக்கியும் விழியின் எல்லையை
கடக்கச் செய்தது. நுண்ணுயிர்களும் தொலைதூர கோள்களும் நம் அறிதல் வட்டத்திற்கு
வந்து சேர்ந்து நம்மை திகைக்கச் செய்தன. இவை மானுட வரலாற்றையே மாற்றின. பின்னர்
புத்தொளி காலகட்டத்தில் அறிவியல் மனிதர்களின் பல சிக்கல்களுக்கு நம்பிக்கையான
விடைகளை அளிக்கத் தொடங்கியது. பெரும் மக்கள் தொகையை அழித்தொழித்த அம்மை நோய்க்கு
தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுகிறது. கிருமிகொல்லி மிக முக்கியமான கண்டுபிடிப்பு.
அறிவியலால் எல்லாவற்றையும் வெற்றிகொள்ள முடியும் எனும் நன்னம்பிக்கை எங்கும்
நிலவியது. அறிவியல் வளர்ச்சி மதத்தின் இருப்பை வெகுவாக கேள்விக்குள்ளாக்கியது.
மதம் எனும் கட்டுமானம் கதைகளாலும் நெறிகளாலும் கட்டப்பட்டது. பைபிள் கதைகளோ,
ஜாதகக் கதைகளோ, புராண கதைகளோ பல அடுக்குகள் கொண்டவை. பெரும்பாலும் அவை சாகசத்தன்மை
கொண்ட அற்புத கதைகள். சிங்கமும், புலியும், கரடியும், நரியும் மானுட வடிவங்களை
ஏற்று, அவர்களின் குரலிலேயே அவர்களின் வாழ்வைப்பற்றிய நீதியை கதைகளாக
எடுத்துரைத்தன. இன்னல்களில் வாடுவோருக்கு தேவதைகள் உதவின. விசுவாசம் உள்ளவர்கள்
எப்படியும் இறுதியில் மீட்கப்பட்டார்கள். மனிதனின் தலையாய சிக்கல்கள்
அனைத்திற்கும் அறிவியளிடம் தீர்வு இருக்கும் என நம்பினார்கள். அறிவியல் மதத்தின்
இடத்தை கேள்விக்குள்ளாக்கி, கடவுளின் பரப்பை மானுட உள்ளங்களில் இருந்து வெகுவாக
சுருக்கியது. அறிவியல் மதத்திற்கு மாற்றாக மானுட உள்ளத்தில் நிலைகொள்ளத்
தொடங்கியது.. அறிவியல் நம்பிக்கை மீட்புக்கான சாதனமாக கருதப்பட்டது. மனிதகுலத்தின்
அத்தனை நூற்றாண்டு கேள்வியான மரணமின்மையை அல்லது மரணத்திற்கு பின்பான வாழ்வை மதம்
உறுதி செய்தது போலவே அறிவியலும் பூடகமாக ஆசை காட்டியது. யோசித்துப்பார்த்தால்
மனிதகுலத்தின் அத்தனை அறிவியல் முன்னெடுப்புகளும் மரணமின்மையை அடைவதற்கான
முயற்சிகள்தான் எனத் தோன்றுகிறது. அறிவியல் மதத்தின் இடத்தை எடுத்துகொண்டபோது
கடவுளர்களும் தேவதைகளும் கதைகளில் இருந்து மறையத் தொடங்கினர். அந்த பீடத்தில்
அறிவியலும், தொழில்நுட்பமும் அமர்ந்து ஆசி வழங்கின. அறிவியல் புனைவுகள்
அப்படித்தான் உருவாயின. அறிவியல், கடவுளின் சர்வ வல்லமையை பிரகடனம் செய்வதை
நோக்கமாக கொண்டன. அறிவியலை எளிதாக புரியவைப்பதையே தொடக்கக்கால அறிவியல் கதைகள்
இலக்காகக் கொண்டிருந்தன. அறிவியல் கதைகள் பலவகையிலும் முந்தையகால தேவதை கதைகளின்
நீட்சியே. </span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அறிவியல் வளர்ச்சி
அறிவியல் மதத்தையும் அதற்குகந்த அறிவியல் கதைகளையும் உருவாக்கியது போலவே அறிவியல்
மறுப்பையும் உருவாக்கியது. இயற்கை –மனித அறிவு எனும் எதிரீடை உருவாக்கியது. மனிதன்
இயற்கையின் ஒரு பகுதி என்பது மறைந்து மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான போராட்டமாக
மானுட வரலாறு உருவகப்படுத்தப்பட்டது. இந்த இயற்கை- மனிதன் போட்டியில் இயற்கையே
இறுதியில் வெல்லும். பகுத்தறிவு என்பது சாத்தானின் கனி என்று நம்பப்பட்டது. இந்நம்பிக்கை
எதிர் அறிவியல் புனைவை உருவாக்கியது. உலகின் முதல் அறிவயல் புனைவு என பரவலாக
அறியப்படும் மேரி ஷெல்லியின் ஃபிராங்கைன்ஸ்டீன் ஒரு எதிர் அறிவியல் புனைவு என்பது
சுவாரசியமான முரண். ஒரு செயற்கை மனிதனை உருவாக்கி அவனுக்கு உயிரளித்து அவன்
பேரழிவை உருவாக்குவதையே ஃப்ராங்கின்ஸ்டீன் சொல்கிறது. அன்று தொடங்கி இன்று
வந்திருக்கும் எந்திரன் வரை பல அறிவியல் புனைவு திரைப்படங்களின், கதைகளின்
பொதுச்ச்சரடு இதுதான். மனிதன் உருவாக்கும் தொழில்நுட்பம் அவனுக்கு எதிராகவே
திரும்புவது இறுதியில் இயற்கை வென்று சமநிலையை நிலைநிறுத்துவது. நெறி பிறழும் அசுரனை
வதம் செய்ய அவதாரம் செய்யும் பரம்பொருள் மீண்டும் அறத்தை நிலைநாட்டுவது எனும் புராணக்
கதையின் அதே வடிவம்தான். அறிவியல் புனைவுக்கும் எதிர் அறிவியல் புனைவுக்கும்
இடையிலான வேறுபாடு என்பது அறிவியல் புனைவு அறிவியலின் மீது நன்னம்பிக்கை கொண்டது,
அறிவியலால் தீர்க்க முடியாத சிக்கல் ஏதுமில்லை என கருதுவது, எதிர் அறிவியல் புனைவு
இதற்கு நேர்மாறான திசையை தேர்கிறது. பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டு மிகுபுனைவு
இலக்கியங்களில் விந்தையான இடங்களுக்கு பயணிப்பது ஒரு பொதுவான கருப்பொருள். ஜூல்ஸ்
வேர்ன்ஸ் பூமியின் மையத்திற்கு பயணிப்பதை எழுதி இருப்பார். காலனியாதிக்க
காலகட்டத்தில் ஐரோப்பா முழுவதும் பயணப் பித்து பீடித்தது. அறியா நிலங்களை,
மனிதர்களை, புதிய கதைகளை தேடி அவர்கள் பயணித்தபடி இருந்தார்கள். </span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அறிவியல்
புனைவுகளுக்கு என சில இயல்புகளை அளிக்க முடியும். பொதுவாக புனைவிற்கு என விதிமுறை
வகுக்கப்படுவதுண்டு. புனைவு ஒரு கருதுகோள் அல்லது கோட்பாடு அல்லது யோசனை சார்ந்து
எழுதப்படக்கூடாது. ஆனால் அறிவியல் புனைவு எப்போதுமே ஒரு அற்புதமான யோசனையை முதலில்
உருவாக்கிக்கொண்டு அதற்கேற்ப கதைகளை உருவாக்கிக்கொள்கிறது. முதன்மையாக அது ‘இப்படி
நடந்தால் என்ன ஆகும்?’ எனும் கேள்வியை எழுப்புகிறது. எல்லாகாலத்து, எல்லா வகையான
அறிவியல் புனைவுகளுக்குமான பொதுத்தன்மை என ஒன்றைக் குறிப்பிடலாம் என்றால் அது
நம்மை வியப்புக்குள்ளாக்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. எனினும் ஒரு மேம்பட்ட
அறிவியல் புனைவுக்கு பிளந்த வாயைக் கடந்து உள்ளத்தில் ஊடுருவும் ஆற்றல் இருக்க
வேண்டும். வெறும் வியப்புடன் நிற்காமல் மானுட வாழ்வின் ஆதார கேள்விகளை நோக்கி
அறிவியல் புனைவு பயணிக்கும்போது மகத்தான ஆக்கங்களை உருவாக்க முடியும். அறிவியல்
புனைவு அறிவியல் ஆய்வுக்கட்டுரை அல்ல. நம்பகமான உலகத்தை உருவாக்கப் போதுமான
அறிவியல் தகவல்களை எளிய மொழியில் கடத்தினால் போதும். அறிவியல் புனைவு வெற்றிபெற
அதன் கதை மாந்தர்களோடு உணர்வுரீதியாக வாசகருக்கு பிணைப்பு ஏற்படவேண்டும். விமர்சகர்கள்
அறிவியல் புனைவுக்கு இரண்டு இயல்புகளை வகுக்கிறார்கள். Cognitive estrangement-
பரிச்சயமற்ற வினோத அந்நியத்தன்மையை அளிப்பது மற்றும் nouvvum என்று சொல்லக்கூடிய
பிறிதொன்றில்லாத புதுமை.<span style="mso-spacerun: yes;"> </span></span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><span style="mso-spacerun: yes;"><br /></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அறிவியல் புனைவில்
கட்டற்ற புனைவுச் சுதந்திரம் உண்டுதான் ஆனால் வெறும் மிகு புனைவிலிருந்து அறிவியல்
புனைவை பிரித்துகாட்டுவது ‘என்ன நிகழ்ந்தது என்பதையும் சொல்லி அது எப்படி
நிகழ்ந்தது என்பதையும் அறிவியல்பூர்வமாக கோடிட்டு காண்பிக்க வேண்டும். அறிவியல்
சாத்தியத்தை எடுத்துக்கொண்டு கற்பனையை பறக்க விடலாம். மனிதனின் மரபணு தொடர்ந்து
பரிணாமம் அடைந்தபடி இருக்கிறது. நாம் பிழைகள் என வகுக்கும் மியுடேஷன் வழியாக அவை
நிகழ்கிறது. இந்த ஒற்றைவரி அறிவியல் செய்தியைக்கொண்டு பல்வேறு சாத்தியங்களை எக்ஸ்.மென்
படக்கதைகள் உருவாக்கிக் காட்டுவதை ஒரு உதாரணமாக கொள்ளலாம். </span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அறிவியல் புனைவு மைய
இலக்கியத்துடன் தொடர்பற்ற தனித்த வகைமாதிரியாக தனித்த வாசக பரப்பை கொண்டதாகவே
திகழ்ந்து வந்தது. தொடக்ககாலத்தில் அறிவியல் புனைவுக்கென தனித்த இதழ்கள் வெளிவந்தன.
ஹெச்.ஜி. வெல்ஸ்’ கால இயந்திரத்தை’ 1895 ஆம் ஆண்டு எழுதுகிறார். இன்று அறிவியல்
நூல்களில் அதுவொரு செவ்வியல் முன்மாதிரியாக கருதப்படுகிறது. அதாவது ஐன்ஸ்டீனின்
சார்பியல் கோட்பாடு உலகிற்கு தெரிவதற்கு முன்பே. ஒரு முன்மாதிரி கால இயந்திரத்தை
உருவாக்கிக் காட்டுகிறார். அறிவியல் புனைவு வரலாற்றில் இது ஒரு பெரும் திறப்பு.
அதுவரையில் புனைவில் காலத்தை கடக்க வேண்டும் என்றால் கனவின் வழி அதை நிகழ்த்தி
காட்டுவதையே வாடிக்கையாக கொண்டிருந்தார்கள். கனவு அகவயமானது. இதற்கு மாற்றாக
புறவயமாக வரலாறை நோக்கும், வேறு காலத்தில் பயணிக்கும் இயந்திரத்தை வெல்ஸ்
உருவாக்கிக் காட்டியுள்ளார். சார்பியல் கோட்பாடும் குவாண்டம் இயற்பியலும் அறிவியல்
புனைவின் பொற்காலத்தை தோற்றுவித்தன. இரண்டாம் உலகப்போர், குறிப்பாக அணுகுண்டு
நிகழ்த்திய சேதம் அறிவியல் மீதிருந்த கண்மூடித்தனமான பற்றை கேள்விக்குள்ளாக்கியது.
ஹிட்லர், முசோலினி, ஸ்டாலினின் எழுச்சிகள் முற்றாதிகாரம் குறித்த அச்சங்களை
படைப்பாளிகளில் விதைத்தது. ஆல்டஸ் ஹக்ஸ்லி, ஜியார்ஜ் ஆர்வேல் போன்ற தீவிர
இலக்கியவாதிகள் கட்டமைப்பு உடைதல் (dystopian) படைப்புகளை உருவாக்கத்
தொடங்கினார்கள். மிகைல் புல்ககோவ் எழுதிய ‘heart of<span style="mso-spacerun: yes;"> </span>a dog’ ஒரு சுவாரசியமான கற்பனை. மனிதனின்
பிட்யுடரி சுரபியை நாய்க்கு பொருத்தும்போது ஏற்படும் அக மாற்றங்களை பேசுகிறது.
எந்த தூய அறிவியல் புனைவைக் காட்டிலும் ஆர்வெல்லின் 1984 அபாரமான முன்னறிவிப்புகளை
செய்திருக்கிறது என இன்று வாசிக்கும் ஒருவர் சிறிய துணுக்குறலுடன் அறிய முடியும்.
இரண்டாம் உலகப்போருக்கு பின்பான அறிவியல் புனைவுகள் நவீனத்துவ காலகட்டத்தை
அடைகிறது என சொல்லலாம். அறிவியலின் அழிக்கும் ஆற்றல் பல்வேறு வகைமாதிரி கதைகளை
உருவாக்கியது. பிலிப் கே. டிக், ரே பிராட்பரி போன்றவர்கள் இலக்கியவாதிகளின்
வரிசையிலேயே இன்று நினைவுகூரப்படுகிறார்கள். அதிமானுட சாகச கதைகள் பின்னுக்கு
சென்று சாமானியர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்கள் அறிவியல் புனைவுகளில்
பேசு பொருளாகின. </span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அறிவியல் புனைவுகளில்
சில பொதுவான பேசு பொருட்களை காண முடியும். விந்தையான, அறிய முடியாதவற்றை நோக்கியே
அறிவியல் புனைவு செயல்படும். காலம் அறிவியல் புனைவின் சாசுவதமான பேசுபொருட்களில்
ஒன்று. காலத்தை வலைபப்து, அதை வெல்வது, அதில்<span style="mso-spacerun: yes;">
</span>பயணிப்பது என அறிவியல் புனைவு காலத்துடன் ஊடாடியபடி இருக்கிறது. பூமிக்கு
மேலே, பூமிக்கு வெளியே என்பது ஒரு முக்கிய கற்பனை. சொர்க்க நரகங்களை மதம் கற்பனை
செய்தது என்றால் அறிவியல் புனைவு வேற்று கிரகங்களை நாகரீகத்தில் மனிதர்களை விடவும்
கீழான வேற்றுகிரக வாசிகளை உருவாக்கி அவர்களை நாகரீகமற்ற முரடர்களாக சித்தரித்து
காலனியாதிக்க கதையாடலின் நீட்சியை தொடக்க காலங்களில் உருவாக்கினார்கள். விநோதமானவை
எல்லாம் ஆபத்தானவை ஆகவே அழித்தொழிக்கப்பட வேண்டியவை எனும் சிந்தனையோட்டம் புவியில்
பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. சூழல் சமநிலையை வெகுவாக குலைத்தது. பிற்கால வேற்றுகிரக
வாசிகளின் கதைகள் மனிதர்களை பலவீனர்களாக பாவிகளாக சித்தரித்தது. வாளெடுத்து
நீதிகோர வரும் கிறிஸ்துவின் பிம்பம் கதைகளில் ஊடுருவியது. மீட்பரிடம் மன்னிப்பை
கோரி உலகை நாயகர்கள் மீட்டார்கள். எம்.ஐ.பி, ஈ.டி போன்ற திரைப்படங்களில்
வேற்றுகிரகவாசிகளின் சித்தரிப்பு சிக்கலான தளங்களை நோக்கி பயணித்தது. அறிவியல்
புனைவின் இந்த கிரகங்களுக்கு இடையேயான மோதல் என்பது காலனிய காலங்களில் நிகழ்ந்த
நாகரீகங்களுக்கு இடையேயான, பண்பாடுகளுக்கு இடையேயான மோதல்களின் நீட்சியாய்
உருக்கொள்கிறது. </span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அறிவியல் புனைவு
காலத்தில் மிகவும் செல்வாக்கு செலுத்தக்கூடிய அடுத்த பேசு பொருள் இயந்திரங்கள்
மற்றும் செயற்கை நுண்ணறிவு. டெட் சியாங்கின் ‘lifecycle of software objets’
அவ்வகையில் அபாரமான பாய்ச்சல். கணினி விளையாட்டிற்குள் உருவாகிவரும் பாத்திரங்களை
கொண்டு உயிர் என்றால் என்ன எனும் கேள்வியை நோக்கி சென்றிருப்பார். மேற்கத்திய
அறிவியல் புனைவு ஆசிரியர்கள் ஒருவகை என்றால் கீழைத்திய புனைவாசிரியர்கள் இந்திய
மனதிற்கு நெருக்கமானவர்கள். டெட் சியாங், கென் லியு, சிக்சின் லியு, சார்லஸ் யு
போன்றவர்கள் அவ்வகையில் நாம் வாசிக்க வேண்டியவர்கள். அறிவியலையும் கீழைத்திய
ஆன்மீகத்தையும் ஒருங்கிணைக்கும் புள்ளிகளை கதைகளாக்கியவர்கள். செயற்கை நுண்ணறிவு
சார்ந்த கதைகளில் மானுட மேலாதிக்கம் மற்றும் விடுதலை பேசுபொருள் ஆகிறது. Cli-fi
என்று சொல்லக்கூடிய சூழலியல் மாற்றங்கள், குறிப்பாக பருவநிலை மாற்றங்கள்
கொண்டுவரும் சிக்கல்களை பேசும் புனைவுகள் இன்று வளர்ந்து வருகின்றன. வெறும்
அச்சுறுத்தலை கடந்து வேறு தளங்களுக்கு இக்கதைகள் பயணிக்க வேண்டும். ராபின்சனின் நியுயார்க்
2140 நீரில் பாதி மூழ்கிய வாழ்வில் மனிதர்கள் வாழ பழகுவதை கற்பனை செய்வதாக விமர்சக
கட்டுரை குறிப்பிடுகிறது. அழிவிற்கு பின்னர் எஞ்சியிருப்பவர்களின் வாழ்க்கை பற்றிய
கற்பனை ‘பேரழிவுக்கு பின்’ வகை அறிவியல் புனைவுகளை உருவாக்குகிறது. இதன்
தொல்படிமம் நோவாவின் கப்பல்தான். மிகச் சிறிய குழுவிலிருந்து உலகை உருவாக்க
முனைகிறார்கள். அங்கு நிலவும் அதிகார போட்டிகள், வளங்களை பங்கிடுதலில் உள்ள
அநீதியான முறைமைகள் என இவைப் பேசப்படுகின்றன. இது அணு ஆயுத <span style="mso-spacerun: yes;"> </span>அழிவு போன்ற மனிதன் உண்டாக்கிய அழிவிற்கு
பின்னரும் இருக்கலாம் அல்லது இயற்கையின் ஆற்றல் பெருகி அழித்ததாகவும் இருக்கலாம்.
மரபணு மாற்றம், உயிரிதொழில்நுட்பம், கிருமிகள் மற்றொரு பேசுபொருள். பரிணாமவியல்
சார்ந்த அடிப்படைகளைக்கொண்டு படைப்புகளை உருவாக்க முடியும். வருங்கால மனிதன்
பற்றிய கற்பனைகளை தொடர்ந்து எழுதி வருகிறார்கள். அவனுடைய மூளை செயல்திறன், கூட்டு
நனவிலி, டெலிபதி, பிரக்ஞையின் வெளி சார்ந்து கதைகள் எழுதப்படுகின்றன. சமூகவியல்
நோக்கில் பால் அடையாளங்கள் அறிவியல் புனைவு அளவிற்கு வேறு எதிலும்
கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. பல்வேறு சாத்தியங்கள் முயன்று பார்க்கப்பட்டுள்ளன.<span style="mso-spacerun: yes;"> </span></span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><span style="mso-spacerun: yes;"><br /></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">தமிழில் என்னவிதமான
அறிவியல் புனைவுகள் உருவாகியுள்ளன? கால சுப்பிரமணியம் மொழியாக்கம் செய்து
தொகுத்திருக்கும் ‘காலமே வெளி’ ரே பிராட்பரி, ஆல்பர்ட் பெஸ்ட் போன்ற எழுத்தாளர்களை
தமிழுக்கு அறிமுகம் செய்யும் மிகமுக்கிய தொகுப்பு. ந. பிச்சமூர்த்தி கூட ஒரு
இயந்திர மனிதன் பற்றிய கதையை எழுதி இருக்கிறார். சுஜாதா ஒரு தொடக்கத்தை அளித்தார்.
அறிவியல் புனைவு அளிக்கும் வியப்பு அம்சத்தை அவருடைய என் இனிய இயந்திரா, மீண்டும்
ஜீனோ போன்றவை நிச்சயமாக அளித்தன. ஆர்னிகா நாசர் போன்றோர் அறிவியல் புனைவுகளை எழுதி
வருகிறார்கள். <span style="mso-spacerun: yes;"> </span>ஜெயமோகனின் விசும்பு தொகுதி
தமிழில் குறிப்பிடத்தக்க அறிவியல் புனைவு தொகைநூல்.. ‘விசும்பை’ சூழலியல் அறி
புனைவாக வகைப்படுத்தலாம். ‘உற்றுநோக்கும் பறவை’ உளவியல் மற்றும் பிரக்ஞை தளத்தில்
எழுதப்பட்ட மிகச்சிறந்த கதைகளில் ஒன்று. டெட் சியாங் கீழை ஆன்மீக மரபை அறிவியலுடன்
இணைத்து உருவாக்க முயன்ற வெளியின் முதல் வடிவம் ஜெயமோகனின் விசும்பு தொகுதியின்
வழியாகவே தமிழில் சாத்தியமாகியது. ‘நாக்கு’ ‘ஐந்தாம் மருந்து’ போன்ற கதைகள்
பரிணாமவியலை அடிப்படையாகக் கொண்டவை. </span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சுதாகர் கஸ்தூரி
அறிவியல் புனைவு நாவல்களை எழுதியுள்ளார்.சந்தோஷ் நாராயண் அஞ்ஞான சிறுகதைகள் எனும்
தொகுப்பை கொண்டு வந்துள்ளார். இவைத் தவிர்த்து சுனில் கிருஷ்ணனின் ‘திமிங்கிலம்’
ஜீவ கரிகாலனின் ‘கிளவுட் வார்’ பற்றிய கதை, சித்திரனின் ‘விசும்பின் மொழி’
சித்துராஜ் பொன்ராஜின் ‘மீன்முள் கட்டுமானம்’ அனோஜனின் ‘சிவப்பு மழை’ போன்ற கதைகளை
குறிப்பிடத்தக்க முயற்சிகள் என அடையாளப்படுத்தலாம். இந்த பின்புலத்தில் தான்
அரூவின் அறிவியல் புனைவு போட்டியையும் அதில் தேர்வான கதைகளின்
முக்கியத்துவத்தையும் கவனிக்க வேண்டும்.<span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span></span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">2 <span style="mso-spacerun: yes;"> </span></span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பரிசுக்குரிய கதைகள்
மூன்றுமே மிகச்சிறப்பான கதைகள். ஆழமும் செறிவும் பலதள வாசிப்பும் அளிப்பவை. அவைத்
தவிர்த்து ‘நிறமாலைமானி’<span style="mso-spacerun: yes;"> </span>‘அவன்’
‘மூக்குத்துறவு’ ‘மின்னெச்சம்’ஆகிய கதைகளும் மிக நல்ல கதைகள் தான். எல்லா கதைகளும்
முழுமையானவையா என்றால், இல்லை என்றே சொல்வேன். முன்னரே கூறியதுபோல்
ஆச்சரியத்திற்கு அப்பால் அறிவியல் புனைவு ஆழமான கேள்விகளையும் எழுப்ப வேண்டும்
என்பது ஒரு எதிர்பார்ப்பு. மற்றொன்று ஒரு கதை தனக்கான விளக்கத்தை அதனுள்ளேயே
கொண்டிருக்க வேண்டும். கதையை விளங்கிக்கொள்ள வெளித்தரவுகளை நாடக்கூடாது.
மூன்றாவதாக, வாசகரின் மீதான அவநம்பிக்கையால் கோட்பாடை தேவைக்கு அதிகமாக விளக்க
வேண்டியதில்லை. கோட்பாடு எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்கு பேசப்பட்டால் போதும்.
அதன் விளைவுகளையும், அது சார்ந்த கேள்விகளையும் தான் அறிவியல் புனைவு
எழுப்புகிறது. </span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">‘ பல்கலனும் யாம்
அணிவோம்’, ‘யாமத்தும் யாமே உளேன்’ ‘ம்’ ‘மின்னெச்சம்’ ஆகிய கதைகளில் ஒரு பொதுச்சரடை
கண்டுகொள்ள முடிகிறது. இவையாவும் மானுட இருப்பை உடலை கடந்த ஒன்றாக ஆக்க முடியும்
எனும் கருத்தை முன்வைக்கின்றன. உடலை கடப்பதும், மரணமற்ற பெருவாழ்வும்
மனிதர்களுக்கு எப்போதுமிருக்கும் ஆர்வம்தான். எனினும் இக்காலக்கட்டத்தில் இந்த
கேள்வியின் பெருக்கம் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய ஒன்று. நவீன வாழ்வின்
அர்த்தமின்மையின் உபவிளைவுதான் இந்த உடலை துறக்கும் விழைவா என்றொரு கேள்வி
எழுகிறது. மற்றுமொரு பொதுச்ச்சரடு இந்த கதைகள் யாவும் மானுட பிரக்ஞை, நனவிலி
குறித்த தேடலை கொண்டுள்ளன. நரம்பியல், மூளை சார்ந்த சிந்தனைகளை முன்வைக்கின்றன.
ஒருவகையில் யுங், ஆலிவர் சாக்ஸ் மற்றும் வி.எஸ்.ராமச்சந்திரனின் தாக்கத்தை தமிழ்
அறிவியல் புனைவுலகில் திண்ணமாக உணர முடிகிறது என்றே தோன்றுகிறது. <span style="mso-spacerun: yes;"> </span>‘</span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இப்போட்டியில் முதல்
பரிசு பெற்ற ரா. கிரிதரனின் ‘பல்கலனும் யாம் அணிவோம்’ தமிழில்<span style="mso-spacerun: yes;"> </span>எழுதப்பட்டுள்ள மிகச்சிறந்த அறிவியல்
புனைவுகளில் ஒன்று என தயங்காமல் சொல்வேன். அசலான இந்திய சிந்தனைகளை அறிவியலுடன்
இணைத்து இக்கதையை உருவாக்கியிருக்கிறார். மனிதனின் ஒரு பகுதி இயந்திரமாக மாறுவது
அறிவியல் புனைவில் தொடர்ந்து பேசப்படும் ஒன்றுதான். இத்தகைய உயிரிகளை ‘சைபார்க்’
என்றழைப்பார்கள். சைபார்க் ஒரு அதிமானுடன். மனிதனின் புலன் மற்றும் செயல் எல்லையை
அவனுடன் இயைந்து பொருந்தும் இயந்திரத்தின் துணைக்கொண்டு கடப்பவன். சைபார்க் பற்றிய
கதைக்கு திருப்பாவையிலிருந்து ‘பலகலனும் யாம் அணிவோம்’ என தலைப்பிட்டிருக்கிறார்.
பிரக்ஞை மற்றும் நனவிலி சார்ந்த விவாதத்தின்போது நம்மாழ்வாரின் கதை
சொல்லப்படுகிறது. கதைகளமே கடற்கோளில் இந்தியாவை விட்டு தனித்துண்டாக உருவாகி
இருக்கும் புதிய மதுரையில் தான் நிகழ்கிறது. கதைசொல்லியான சைபோர்கின் பெயர் ஜனனி.
அவள் அன்னையாகிறாள். தான்<span style="mso-spacerun: yes;"> </span>நேசிக்கும்
தம்பி விநாசை தனது பிரக்ஞையின் ஒரு பகுதியாகவே ஆக்கிக்கொள்கிறாள். புதிய மதுரையில்
இயந்திரம்- மனிதன் கூட்டு செயல்பாடு ஆய்வு நிறுவனத்திற்கு தளையசிங்கத்தின்
பெயரிடப்பட்டுள்ளது. ஒரு பக்கம் மனித மனதை, பிரக்ஞையை அதன் நனவிலியை ஆல்பாக்கள்
நகலெடுக்க முடியாமல் திணறுகிறது. மனிதனாக இருப்பது என்றால் என்ன எனும் ஆதார
கேள்வியை, மனிதனின் தனித்துவத்தை வரையறை செய்ய முயல்கிறது. மற்றொரு தளத்தில் இது
எப்படி தொழில்நுட்ப மேலாதிக்கத்தை கொணரும் பணிவான சர்வாதிகாரத்திற்கு
இட்டுச்செல்லும் என விரிகிறது. இது வெறும் கருத்துகளாக, கோட்பாடுகளாக சுருங்காமல்
காப்பது ஜனனிக்கும் வளர்ச்சி குன்றிய அவளுடைய தம்பி வினாசுக்கும் இடையிலான
உணர்வுரீதியான பிணைப்புதான். இந்தக் கதையே டெட் சியாங்கின் கதையுலகிற்கு மிக
நெருக்கமாக இந்திய மெய்யியலையும் அறிவியலையும் இணைக்கும் வகையில் உருவாகியுள்ளது.
பல தளங்களையும் அடுக்குகளையும் கொண்டிருக்கிறது. </span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சுசித்ராவின்
‘யாமத்தும் யானே உளேன்’ ஒரு திருக்குறள் வரி. கதைக்கு கச்சிதமாக பொருந்திவருகிறது.
ஒருவகையில் இதை பேரழிவுக்கு பின்பான அறிபுனைவு என வகைப்படுத்தலாம். அழிந்து
கொண்டிருக்கும் பூமியை விண்கலத்திலிருந்து பார்க்கிறார்கள். இக்கதையும் பல தளங்களை
கொண்ட செறிவான கதை தான். இயந்திர மனிதன், செயற்கை நுண்ணறிவு கொண்டு மனிதனாக
இருப்பதன் சாத்தியத்தை, எல்லைகளை, இயல்புகளை பற்றி விசாரணை செய்கிறது. கௌதமனுக்கும்
அன்னைக்கும் இடையிலான உணர்வுரீதியான பிணைப்பு கதையை வலுப்படுத்துகிறது.
பதின்மத்தின் பெற்றோர் பிள்ளை உறவுச்சிக்களையும் ஒரு சரடாக கொண்டிருக்கிறது. கதைக்குள்
கர்ணனின் கதை சொல்லப்படுகிறது. கதைகளால் ஆன பிரபஞ்சம் உருவகிக்கப்படுகிறது.
மேற்கத்திய தொன்மத்தில் ‘ஜீனியஸ்’ என்பது ஒரு சுவாரசியமான தொன்மம். படைபூக்கத்தை
அளிப்பது ஜீனியஸ் எனும் இறக்கைகொண்ட புலனுக்கு அகப்படாத உயிர் என்றே
நம்பப்படுகிறது. மனிதன் ஜீனியசின் கருவியாக கலையை வெளிப்படுத்துகிறான். உருவமற்ற
கௌதமன் கதைகளை நமக்கு கொண்டு சேர்க்கிறான். </span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நகுல்வசனின்
‘கடவுளும் கேண்டியும்’ நரம்பியல்- பிரக்ஞை சார்ந்து செயற்கை நுண்ணறிவு தளத்தில்
நிகழும் கதை. இந்தக் கதையின் படைப்பூக்கம் என்பது புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமியும்’
கதையை அடித்தளமாகக் கொண்டு தற்காலத்தில் அதை மீள் நிகழ்த்தி ஒருவித காலாதீதத்
தன்மையை அளிப்பது. அறிவியல் புனைவுகளில் இந்தக் கதையில் உள்ள ‘ஸ்மார்ட் மங்கியை’
போல அதிசெயல்திறன் கணினிகள் உலவுவது வழக்கம். எல்லாவற்றையும் கணினியால் வகுத்துவிட
முடியாது, அப்படி முடிந்தால் மனிதனின் தனித்தன்மைக்கும் இருப்பிற்கும் என்ன பொருள்
எனும் தரப்பிற்கும் வகுத்துவிட முடியும் என நம்பும் தரப்பிற்குமான உரையாடலும் கூட.
கடவுள் படைத்தான் என்பதற்கும் கடவுளை படைத்தான் என்பதற்கும் இடையிலான முரணும் கூட
கதையின் பேசுபொருள் ஆகிறது. </span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ரூபியா ரிஷியின்
‘மின்னெச்சம்’ சுவாரசியமான கற்பனை. உடலை துறந்து மரணத்திற்கு பின் தேவையான
நினைவுகளை மட்டும் கொண்ட அழிவற்ற வாழ்வு வாழ்வதை கற்பனை செய்கிறது.. செயற்கை
நுண்ணறிவு இதற்கு உதவுகிறது. சாகாவான் எனும் செயல்திட்டத்திற்காக தன்னையே
பலிகொடுக்கிறான் பார்த்திபன். அவன் எதை விழைந்தானோ அது தலைகீழாகிறது. சாகாவரத்தை
மறுக்கிறான். பலகுரல் தன்மை கொண்ட இக்கதையின் மொழி மிகவும் கவித்துவமானது. செறிவான
வாசிப்பனுபவத்தை அளித்தது. </span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">கிரிதரன் கவிராஜாவின்
‘ம்’ அறிவியல் புலத்தில் நிகழும், நெடிய தன்னுரையாடல் கொண்ட ஆன்மீக கதை என
சொல்லலாம். இந்திய மரபில் உள்ள லய யோகம் பிரபஞ்சத்தின் மூல ஒலியாக ஓம்காரத்தை
முன்வைக்கிறது. அதிலிருந்தே பிரபஞ்சம் உருவாகிறது எனும் நம்பிக்கை. இக்கதையில்
அறிவியல் அம்சம் குறைவாகவும் ஆன்மீக அம்சம் கூடுதலாகவும் உள்ளது. பேரூரு கொள்ளல்
அணுவளவு குறைதல் போன்ற சித்தர் மரபில் உள்ள அட்டமா சித்திகளை ஒத்த அனுபவங்களை
கதைசொல்லி அடைகிறான். உடலற்ற இருப்பு நிலையை அடைகிறான்.</span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">தன்ராஜ் மணியின்
‘அவன்’ ஒரு நரம்பியல்- பிரக்ஞை தளம் சார்ந்த கதை. மிர்ரர் நியுரான் சார்ந்த
கருத்தை அவரால் எளிதாக புரியும்படி விளக்க முடிகிறது. நம் தகவல்கள் சேகரிக்கப்
படுகின்றன. சமூக ஊடகங்களில் நமக்குரிய தேடல்கள் சார்ந்த விளம்பரங்களை காண
முடிகிறது. மனிதனை முழுமையாக கண்காணிக்கும்போது அவனுடைய நடத்தையை வரையறை செய்துவிட
முடியும் எனும் நம்பிக்கையை இக்கதை பேசுகிறது. அண்மையில் பொருளாதாரத்தில் நோபல்
கிடைத்தது ‘நடத்தையியல் பொருளியலுக்கு’தான். மனித நடத்தையை குறிப்பிட்டவகையில்
தூண்டி அவனை விரும்பும் வகையில் வழிநடத்தமுடியும் என்கிறது. இந்த சிந்தனைகளைத்தான்
தன்ராஜ் மணி 2080 ஆம் ஆண்டு குற்ற புலனாய்வுக்கு பயன்படும் ஆய்வு பின்புல கதைக்கு
பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். கதை இறுதியில் இலெனின் இலன் உளெனின் உளன் எனும்
இடத்திற்கு செல்வது சுவாரசியமான வாசிப்பை அளிக்கிறது. </span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">விஷ்ணுகுமாரின்
‘நிறமாலைமானி’ முற்றிலும் வேறுவகையான அறிவியல் புனைவு என சொல்லலாம். புதிய
கருவிகளோ, புதிய கோட்பாடுகளோ அற்ற, வருங்காலம் சார்ந்ததாக இல்லாமல் அறிவியல்
புனைவு எழுதுவது சாத்தியமா எனும் கேள்விக்கு விஷ்ணுகுமாரின் கதை
விடையளித்திருக்கிறது. நிறமாலைமானி என நாமறிந்த கருவியைக்கொண்டு நிகழ்காலத்தில்
கதையை எழுதி இருக்கிறார். மாலீக்யுளர் ஸ்பெக்ட்ரோஸ்கோபி பற்றிய அடிப்படை
அறிந்தவர்களுக்கு கதை மேலதிகமாக திறக்கக்கூடும். (இது குறித்து அவரிடம் நேரடியாக
விளக்கம் கேட்டு அறிந்துகொண்டேன்). பிரியத்தின் பித்து தான் நிறமாலைமானி.
விஷ்ணுகுமாரின் கதை ஒருவகையில் அபத்தத்தை முன்வைக்கும் காஃப்காத்தனமான கதை என
சொல்லலாம். </span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">கமலகண்ணனின்
‘கோதார்த்தின் குறிப்பேடு’ உளவியல் கதை. கோதார்த் பத்தொன்பதாம் நூற்றாண்டில்
வாழ்ந்த உளவியல் ஆய்வாளர். உயிருடன் இருக்கும்போதே தான் உயிர்வாழ்கிறேன் என்பதை
மறுக்கும் உளவியல் சிக்கலுக்கு கோதார்த்த் மனமயக்கு என்று பெயர். ராம்சேயின் கதையை
நம்மால் இந்த விளக்கத்தை மனதில் கொண்டால் புரிந்துகொள்ள முடியும். ஒரு அசல் ஆளுமை
அவருடைய கண்டடைதலை அறிந்த கனத்தை புனைவாக்க முயன்றுள்ளார் கமலக்கண்ணன். கோதார்த்
யார் என கதைக்கு வெளியே தேடி அறிந்துகொண்டால் இக்கதை சரியாக வாசகருடன்
தொடர்புறும். </span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பாலமுருகனின்
மூக்குத் துறப்பு இந்த தொகுதியில் வந்துள்ள மிகச்சிறந்த டிஸ்டோபிய கதை. பருவநிலை/ சூழலியல்
புனைவு என்றும் சொல்லலாம். காற்றுமாசுபடுகிறது. சுவாசிக்கும் பிராணவாயு குறைகிறது
எனும் ஒற்றைவரியைக்கொண்டு கதையை பின்னி செல்கிறார். இந்திய யோக மரபில்
மூச்சிற்கும் ஆயுளுக்கும் நேரடி தொடர்பு உள்ளதாக அறிவுறுத்தப்படுகிறது.. அந்தக்
கூற்றையே நவீன முறையில் பாலமுருகன் இக்கதையில் கையாள்கிறார்.<span style="mso-spacerun: yes;"> </span>சாகாக்கலை என பலதளங்களை தொட்டுச் செல்கிறார்.
டிஸ்டோபிய கதைகள் அரசியல் உள்ளடக்கத்தை கொண்டிருப்பவை. அரசின்மைவாதத்தை பேசுபவை.
இந்த இயல்புகள் பாலமுருகனின் கதைகளுக்கும் பொருந்தி வருகிறது. </span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அஜீக்கின் தியானி-
கிபி 2500 வருங்காலத்தில் உலகம் முழுக்க டிஜிட்டல் மயமானதும் கையால் எழுதுவதே
இல்லாத, தாள்களோ மையோ அல்லாத சூழலை கற்பனை செய்கிறது. இந்தசூசல் வெகு தொலைவில்
இல்லை என்றே தோன்றுகிறது. டிஜிட்டல் யுகத்தில் எழுதும் பயிற்சி என்பது தியானத்தில்
சேர்ந்ததாக கருதப்படுவது சுவாரசியமான கற்பனை. </span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பலகதைகளிலும் மரபு
ஒரு தளத்தில் கதையை ஊடறுப்பது சுவாரசியமான பொதுத்தன்மை. மேற்கத்திய கிழக்கத்திய
அறிவியல் புனைவுகள் வேறுமாதிரியானவை. இந்திய/ தமிழ் அறிவியல் புனைவு கிழக்கத்திய
அறிவியல் புனைவின் திசையையே சரியாக தேர்கிறது என்பதற்கு இத்தொகுதி ஒரு சான்று. இத்தொகுதியின்
முக்கியத்துவத்தை இப்போது நாம் உணராமல் இருக்கக்கூடும். என்னைப்பொறுத்தவரை தமிழ்
நவீன இலக்கிய வரலாறில் ஒரு மைல்கல் தொகுப்பாகவே இத்தொகுதி நினைவுக்கூரப்படும் என
நம்புகிறேன். பரிசுபெற்ற, தேர்வான,, எழுதிய அனைத்து சக எழுத்தாள நண்பர்களுக்கும்
நன்றிகளும் வாழ்த்துக்களும். அரு தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு தமிழில் இவ்வகை
எழுத்துக்களுக்கு தளம் அமைத்து கொடுக்க வேண்டும்</span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சுனில் கிருஷ்ணன் </span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">26-12-19 </span><span style="mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">. <span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></div>
<br /></div>
</div>
suneel krishnanhttp://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-59424333363156303232020-01-19T10:15:00.000+05:302020-01-19T10:15:21.546+05:30பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும் - இளங்கோ கிருஷ்ணன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8WNwcqgxntYbgBwjT1GYYLxtBkzx3XO-7BcvNgBfw5xVQVw6oFQBcW8SMgo-3InIveX-M8JtV3dq6JW1qk8c1_e_aw3Vy017uNVvOhqL6gvLP7aByacB304QMB1FE1JAb09hgDwVTKlw/s1600/basheer+%25282%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="270" data-original-width="208" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8WNwcqgxntYbgBwjT1GYYLxtBkzx3XO-7BcvNgBfw5xVQVw6oFQBcW8SMgo-3InIveX-M8JtV3dq6JW1qk8c1_e_aw3Vy017uNVvOhqL6gvLP7aByacB304QMB1FE1JAb09hgDwVTKlw/s1600/basheer+%25282%2529.jpg" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="Normal1" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";"><br /></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";"><br /></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">பொதுவாக ஆம்னிபஸ் தளம்
புத்தகங்களை வாசிக்க நம்மவர்களை ஊக்குவிக்கும் ஒரு தளமே</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">.
<span lang="TA">இங்கே இருக்கும்</span><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">சுமார் ஐநூறு புத்தக மதிப்புரைகளில்</span><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">தேடோ தேடென்று தேடினாலும் ஒன்றோ அல்லது
இரண்டோ மட்டுமே எதிர்மறை விமர்சனங்கள் தேறும்</span>. <span lang="TA">வாசிப்பு</span><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">தேய்ந்து வருகிறது என்கிற குற்றச்சாட்டுகள்
பரவலாகி வரும் இவ்வேளையில்</span>, <span lang="TA">புத்தகம் வாசிக்க விழையும் அன்பர்களை
மேலும்</span><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">பதறடித்து ஓட
வைக்கும் வேலையை நாம் பார்க்க வேண்டாம் என்பதே ஆம்னிபஸ் தோழர்களின் ஒத்த கருத்துக்கள்
சிலவற்றுள் பிரதான கருத்து</span>.<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">நிற்க</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">,
<span lang="TA">இதையெல்லாம் இப்படி நான் முன்னோட்டமாகச் சொல்ல ஏதும் காரணம் உளது எனின்
உளது</span>. <span lang="TA">இல்லை எனின் இல்லை</span>.<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">நேற்று சென்னை புத்தக
விழாவிற்கு சென்று ஒரு பதினைந்து புத்தகங்களை அள்ளி வந்தேன்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">.
<span lang="TA">அள்ளி வந்தவைகளில் வாசிக்க நான் முதலில் கையில் எடுத்தது இந்தப் புத்தகமே</span>.
<span lang="TA">நண்பர்கள் தந்த பத்து புத்தகங்களின் பரிந்துரைப் பட்டியலை வாட்ஸாப்பில்
வைத்துக் கொண்டு அங்கே கடைகடையாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன்</span>. <span lang="TA">பரிந்துரைகளுள் இந்தப் புத்தகமும் இருந்தது</span>.<span style="mso-spacerun: yes;"> </span>"<span lang="TA">யாவரும்</span>" <span lang="TA">பதிப்பகத்தில் இந்தப் புத்தகத்தை மட்டும் ஏனோ தலைகீழாய் வைத்திருந்தனர்</span>.<span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">புத்தகம் தேடித் கொண்டிருந்த என்
கண்ணுக்கு இரண்டரை அடி தூரத்திலேயே புத்தகம் இருந்தும் தென்படவில்லை</span>.
"<span lang="TA">யாவரும்</span>" <span lang="TA">பதிப்பகத்தில் எல்லா புத்தகங்களையும்
வாசிக்கவும் செய்யும் ஒரு அண்ணன்</span>, "<span lang="TA">அந்தா உங்க கண்ணெதிர்லயே
இருக்கேத்தா</span>", <span lang="TA">எடுத்துத் தந்தே விட்டார்</span>.<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின்
மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">. <o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">"<span lang="TA">கவிதை என்றால் என்னவென்று
இப்போது வரை எனக்குப் புரியவே இல்லை</span>. <span lang="TA">எது நல்ல கவிதை</span>?'
<span lang="TA">என்பன போன்ற திரேதா யுகத்து அனும வாலை அகற்றும் வலிமையும் என் சிற்றறிவுக்கு
இல்லை</span>",<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">என்று கவிதை நூலின்
முன்னுரையிலேயே கையை உயர்த்தி விடுகிறார் கவிஞர்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">. <span lang="TA">அதாவது
கல்யாணத்திற்கு முந்தின நாள் வடவிந்தியர்கள் மாப்பிள்ளையை, தப்பிச்சு போயிடுடா மாப்பு,
என்று குதிரை ஏற்றி விடுவர்</span>, <span lang="TA">அப்படி</span>. <o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">சரி</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">,
<span lang="TA">அது ஒருபுறம் இருக்கட்டும்</span>. <span lang="TA">எது நல்ல கவிதை என்று
என்னைக் கேட்டால் நான் என்ன சொல்வேன்</span>? It depends <span lang="TA">என்பதுதான்
என் பதில்</span>. <span lang="TA">வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நல்ல கவிதைகளை</span><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">அளவிட நான் வெவ்வேறு அளவுகோல்களை
வைத்து இருந்திருக்கிறேன்</span>.<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">"<span lang="TA">ஆடிக்குப் பின் </span><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">ஒரு ஆவணி</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">;<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">என் </span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">தாடிக்குப் பின் </span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">ஒரு தாவணி</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">"<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">விடலைப் பருவத்தில்
கவிதை என்பதற்கு இது போதும் என்று நினைத்ததுண்டு</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">.<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">கொஞ்சம் விவரம் தெரிந்த
விடலை ஆன பொழுதினில்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">:<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">இமைப்பொழுது அறிமுகத்தில்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">இதயத்தை ஈதல்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">விரகமெனும் நரகத்தில்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">அனுதினமும் நோதல்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">இரவெல்லாம் தூங்கிடாமல்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">இணையின் பெயர் ஓதல்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">பற்றி எறியும் நினைவுத்தீயில்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">பற்றுடனே தீதல்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">பூவுக்குத் தவமிருந்து</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">சருகாகிப் போதல்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">தவங்கள் செய்து செய்து</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">தவணை முறையில் சாதல்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">இவ்வுலகில் இவற்றுக்கெல்லாம்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">இன்னொரு பெயர் காதல்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">.<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">(<span lang="TA">க</span>.<span lang="TA">சரவணன்</span>
- <span lang="TA">விகடன் பவளவிழா கவிதைப் போட்டி</span>)<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">இது போன்ற கவிதைகள்
போதுமாய் இருந்தன</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">.<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">பின்னர் வாசித்தவைகள்
நா</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">.<span lang="TA">முத்துக்குமாரின் சில கவிதைத் தொகுப்புகள் மட்டும் எனலாம்</span>.<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">இணையம் வந்து வாசிக்கத்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";"><span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">துவங்கியதும் இங்கே புழங்கும் பலர்
போல் நமக்கும் கவிதை ஒவ்வாமை ஏற்பட்டது என்னவோ உண்மைதான்</span>.<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">"<span lang="TA">உன்னைப் பத்தியே பேசிட்டு
இருந்தா</span>? <span lang="TA">கவிதை நூல் பத்தி சொல்லு</span>", <span lang="TA">எனும் உங்கள் உட்குரல் கேட்கிறது</span>. <span lang="TA">இன்னும் இரண்டே உதாரணங்கள்
மட்டுமே</span>. <span lang="TA">முடித்து விடுகிறேன்</span>.<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">என்னதான் ஆசான் என்றாலும்
அவருக்கு மிகவும் உவப்பான தேவதேவன் கவிதைகளும் எனக்குப் பிடிபடவில்லை</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">.<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">ஆனால் இது
அப்படியில்லை-</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">”<span lang="TA">ஈரமற்ற இரும்பு</span>”<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">----------------------------<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">நீளமான முகம்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">முகம் முழுக்கக் கண்கள்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">கண்முழுக்கத் தூக்கம்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">.<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">ஒளிக்க ஒளிக்க</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">ஓயாமல்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">எட்டிப் பார்த்து இளிக்கிறது</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">இன்னமும் பிரித்துக் கட்டப்படாத மஞ்சள் கயிறு</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">ஈரமற்று</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">,<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">எல்லோரையும் போல் அவளையும்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">நகர எல்லையைத் தாண்டி</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">தரதரவென இழுத்துச் செல்கிறது</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">மின்சாரக்கம்பியில்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">மாட்டிக் கொண்டிருக்கும் ரயில்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">.<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">(<span lang="TA">மாமல்லன்</span>)<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">இதுபோன்ற நிஜ தரிசனக்
கவிதைகள் எப்போதும் என் விருப்பப் பட்டியலில் உள்ளன</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">. <o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">மிகச் சமீபத்தில் மிகமிக
ரசித்து வாசித்தது பிரான்சிஸ் கிருபாவின்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";"> "<span lang="TA">ஞாயிற்றுக்கிழமைகளில்
டீச்சராகும் சிறுமி</span>".<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">ஆக</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">;
<span lang="TA">கவிதை என்பது என்ன</span>, <span lang="TA">நல்ல கவிதைக்கான அளவீடுகள்
என்னென்ன என்பது ஆளுக்கு ஆள் என்றில்லாமல்</span> - <span lang="TA">ஒரே ஆளுக்கு வெவ்வேறு
காலகட்டத்தில் வெவ்வேறாகவும் இருந்து தீர்க்கிறது</span>.<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">சரி</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">,
<span lang="TA">இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு வருவோம்</span>:<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">இந்தக் கவிதைத் தொகுப்பை வாசிப்பதற்காக உங்களது
அலுவலகத்துக்கு ஒரு நாள் விடுப்பு எடுத்தால்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 10.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">, <span lang="TA">ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுப்பதை ஒரு நாள் தள்ளி
வைத்தால்</span>;<span style="mso-spacerun: yes;"> </span><span lang="TA">இந்தக் கவிதைகளின்
வாசகனாக நான் மகிழ்வேன்</span><o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">புத்தகத்தைப் பற்றி
இப்படி ஒரு பின்னட்டைக் குறிப்பைத் தருகிறார் கவிஞர் வெய்யில்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">.<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">நான் இந்தப் புத்தகத்தைக்
கையில் எடுத்தது சனிக்கிழமையான வாரயிறுதி விடுமுறை நாள் ஆகிவிட்ட படியாலும்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">;
<span lang="TA">மேலும் நான் ஆதார் கார்டு வாங்கி வைத்தும் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள்
ஆகிவிட்டதாலும் வாசகர் வெய்யில் நம்மை மன்னிப்பார் என்றே தோன்றுகிறது</span>.<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">ஆனால்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">,<o:p></o:p></span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="margin-left: .5in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";">எதைக் கேட்டாலும் உருளைக்கிழங்குகளையே தரும்
கடவுளை பற்றி ஒருமுறை சொன்னேன் நினைவுள்ளதா நேற்று ஒரு சமையல் கலைஞரை சந்தித்தேன்</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; font-size: 9.0pt; line-height: 107%; mso-fareast-font-family: "Nirmala UI";"> (<span lang="TA">அவரேதான் உருளைக்கிழங்கு பொடிமாஸ்
கவிதையின் நாயகனேதான்</span>) <span lang="TA">நான் மிகுந்த பசியோடு இரண்டு இட்லிகள்
கேட்டேன் அவர் உருளைக்கிழங்கு குருமாவை ஊற்றினார் இட்லி வேண்டும் என்றேன் மேலும் கொஞ்சம்
குருமா ஊற்றினார் கடும்பசியில் அதைக் குடித்துவிட்டு ஐயா இட்லி வேண்டும் என்றேன் மேலும்
கொஞ்சம் குருமா ஊற்றினார் குருமா போதும் இட்லி வேண்டும் என்றேன் மேலும் கொஞ்சம் குருமா
ஊற்றினார் உனக்கு அறிவில்லையா முட்டாளே என்றேன் மேலும் கொஞ்சம் குருமா ஊற்றினார் பளார்
என்று அறைவிட்டேன் மேலும் கொஞ்சம் குருமா ஊற்றினார் கோபத்தில் கா</span></span><span style="font-family: "Nirmala UI", sans-serif; font-size: 12px;">றி</span><span style="font-family: "Nirmala UI", sans-serif; font-size: 9pt;"> உமிழ்ந்தேன் மேலும்
கொஞ்சம் குருமா ஊற்றினார் சோர்ந்து போய் கெஞ்சத் தொடங்கினேன் மேலும் கொஞ்சம் குருமா
ஊற்றினார் ஏதோ புரிவது போல் இருந்தது ஆனந்தம் பெருக்கெடுக்க நன்றி நன்றி என்று வணங்கினேன்
மேலும் கொஞ்சம் குருமா ஊற்றினார்</span></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<br /></div>
<div class="Normal1" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">இப்படிப்பட்ட ஒரு வார்த்தைக்
கூட்டத்தை, ஒரு இருபத்தியாறு என்ட்டர்கள் அடித்துக் கவிதை எனும் தோரணையில் கொடுத்திருந்ததை</span><span style="font-family: "Nirmala UI",sans-serif; mso-fareast-font-family: "Nirmala UI";">,
<span lang="TA">எந்த வகையினது இது என்று புரிந்து கொள்ள இயலாதவனாக நான் என்னை உருவாக்கி
வைத்திருப்பதைக் கவிஞர் வெய்யில் எப்படி மன்னிப்பார் என்றுதான் எனக்குப் புரியவில்லை</span>.<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></div>
<br /></div>
Giri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-45239556033968969762019-10-25T08:26:00.002+05:302019-10-26T13:49:56.793+05:30ஜி. கார்ல் மார்க்ஸ்சின் ‘வருவதற்கு முன்பிருந்த வெயில்’, மற்றும் ‘ராக்கெட் தாதா’<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<b>- <a href="http://sureeven.wordpress.com/">வெ சுரேஷ்</a> - </b></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdC81ZBDwlIjDvVbT92eD3UtfgP3JoHvGwu0Rkskf4L_tJ38A54RJad9L2OcJkaoZsiwFNECCUboDsLVVGBMQn8fyggANAX6dUDoC17_VZuJteo1r-2g9dnxpmLzhvkboa2ZVMlc7rbA4/s1600/veyil.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="520" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFHhjKNEj8FiQzafrcE7WwA89CuFCI3L0CA7d1HVldku48PG6T5QdrmI-uMW_AK3ZGRmUvc9JYLXV9hAMfadEURuP6KEEv3XNBmAGnHv6Kqq2qNMpOFxP8woNdxLaYenYHHxi7Dy_yoeo/s320/rocket+dada.jpg" width="208" /><img border="0" data-original-height="346" data-original-width="227" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdC81ZBDwlIjDvVbT92eD3UtfgP3JoHvGwu0Rkskf4L_tJ38A54RJad9L2OcJkaoZsiwFNECCUboDsLVVGBMQn8fyggANAX6dUDoC17_VZuJteo1r-2g9dnxpmLzhvkboa2ZVMlc7rbA4/s320/veyil.jpg" width="209" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
<div style="text-align: justify;">
ஜி. கார்ல் மார்க்ஸ் நான் ரசிக்கும் முகநூல் பதிவர்களில் ஒருவர். எந்த விஷயமானாலும், அழகாகவும் தெளிவாகவும், பக்கச் சார்பின்றியும் பேசக் கூடியவர். என்ன, அப்பப்ப கெட்ட வார்த்தைகள் சில ஏதாவது எழுதிவிடுவார். அதை மட்டும் கொஞ்சம் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அது இப்போது கொஞ்சம் ட்ரெண்ட் ஆகிவிட்டதால் அவரும் பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறேன். அவரது கதைகள் சிலவற்றை சில இதழ்களில் படித்திருக்கிறேன். ஆனால், அவர் பெயரோடு பொருத்திப் பார்த்த நினைவில்லை. அவரது இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா ஒன்றின் காணொளி காட்சியில்தான் அந்தக் கதைகள் அவர் எழுதியது என்று தெரிய வந்தது. அந்த நிகழ்ச்சியில் பல கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களும் அவற்றை அளித்த விதமும் எனக்குப் பிடித்திருந்தது. அதன் பின்னரே அவரது இரு சிறுகதை தொகுதிகளான ‘வருவதற்கு முன்பிருந்த வெயில்’, மற்றும், ‘ராக்கெட் தாதா’, இரண்டையும் படிக்க வேண்டும் என எடுத்து படித்து முடித்தேன். ஒருவரைப் பற்றிய அபிப்ராயம் ஏற்பட்ட பின்னர் அவரது முதல் படைப்புகளை வாசிப்பது, ஒரு வகையில் தவறான ஒன்றும்கூட. ஆனால், வாசித்து முடிந்தபின் அந்த முடிவில் தவறில்லை என்று தெரிந்தது. ஏனென்றால், கட்டுரைகள் எழுதும் கார்ல் மார்க்ஸும், இந்தக் கதைகளை எழுதியுள்ள கார்ல் மார்க்ஸும் வேறு வேறு ஆசாமிகள் என்பதை இந்தக் கதைத் தொகுதிகள் காட்டுகின்றன. </div>
<a name='more'></a><div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரண்டு தொகுதிகளிலும் சேர்த்து, கதைகள் பல்வேறு களங்களில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நினைவேக்கம் மட்டுமோ இளம்பருவத்து காதல் மட்டுமோ இல்லாமல், ஏழ்மை, இன்றைய சமூகத்தின் ஆண் பெண் உறவுச் சிக்கல்கள், மணவாழ்வின் சிக்கல்கள், பெருநகர இளைஞர்களின் வாழ்க்கை முறை, ஆகியவற்றின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்டுவுதாகவும், மனிதர்களின் ஒளியும் இருளும் நிறைந்த ஆழங்களை அலசுகின்ற ஒன்றாகவும், இந்தக் கதைகள் அமைந்திருக்கின்றன. இவ்வளவு வெரைட்டியை அண்மையில் நான் படித்த எந்த இளம்/ புதிய சிறுகதையாசிரியரும் தரவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒப்புநோக்க முதல் தொகுதியான, 'வருவதற்கு முன்பிருந்த வெயில்' ஆழமான கதைகளை கொண்டதாக இருக்கிறது. அதில் இடம் பெற்றுள்ள, ‘வருவதற்கு முன்பிருந்த வெயில்’ (இந்த தலைப்பு, சற்றே குழப்பமாகவும், புரியாததாகவும் இருந்தாலும்) ‘காட்டாமணக்கு’, ‘உப்புச் சுவை’, ‘மகிழம்பூ’, எல்லாமே, மிக தீவிரமான உணர்வு நிலைகளை, சம்பவங்களை, சொல்லும் கதைகள். அதிலும் ‘உப்புச் சுவை’ மிகச் சிறந்த ஒன்று. மற்ற கதைகளில் ‘ஆட்டம்’, ஒரு வித்தியாசமான கதை. அதில் ஒரு சிறப்பு, கதையின் மையம் என்று நாம் நினைக்கும் ஒன்றிலிருந்து கதைசொல்லி வெகு இயல்பாக விலகி வேறொன்றில் கவனத்தைக் குவித்து அதில் வெற்றியும் பெற்று விடுகிறார். அதே சமயம், கதையின் துவக்கத்தில் போடும் முடிச்சு, அப்படியே அவிழாமல் இருக்கிறதே என்ற ஏமாற்றமும் ஏற்படுகிறது. ஆனால், மொத்தத்தில் திருப்திகரமான படைப்புதான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு சிறுவனின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கும் ‘சிவப்பு ஓணான்’ எனது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை என் நினைவுக்கு கொண்டு வந்தது. இந்தக் கதை அளித்த உந்துதலால், ஒரு சிறுகதை எழுதிவிடலாமா என்றே யோசித்துக் கொண்டிருக்கிறேன்.இதுவரை குறிப்பிட்ட கதைகள் அளவுக்கு, ‘டிராகன் டாட்டூ’வும் ’கட்டுத் தரை’யும் எனக்கு ரசிக்கவில்லை. இதிலும், முதலாவது, நகர்ப்புறத்தின் அதிநவீன வாழ்க்கையை காட்டும் கதை, இன்னொன்று கிராமிய பின்னணியில், ஒரு சம்பிரதாயமான மெல்லுணர்ச்சிக் கதை. கணவனை விட்டுப் பிரிந்து வீட்டுக்கு வந்துவிட்ட மகளை கணவன் வீட்டில் கொண்டு விடும் 'அப்போது அது வேறாக இருந்தது' கதை கொள்ளும் திருப்பமும், மீண்டும் எதிர்பாராத வகையிலும், மிக திருப்திகரமுமாகவே அமைந்திருக்கிறது. ஒரு இளம் படைப்பாளியிடமிருந்து இந்தக் கதை வந்திருப்பதும் ஒரு ஆச்சர்யம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு எழுத்தாளன் தனது சமகால நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து, அதன் பாதிப்புகளிலிருந்து படைப்புகளைச் சமைப்பது முக்கியமானதும் அவசியமானதும்கூட. உடனடியாக பத்திரிகைச் செய்தி கவிதை மாதிரியா என்று நினைக்க வேண்டாம். அன்றாட அனுபவத்தில் துவங்கி என்றுமுள்ள பெரும் சிக்கலான கேள்விகளுக்குப் போவது நுட்பமான கலை. ‘ராக்கெட் தாதா’ தொகுப்பில், அப்படியான இரு முயற்சிகள் இருக்கின்றன. ஒரு காலத்தில், பெற்ற பிள்ளைகளை பசியிலிருந்து காக்க முடியாமல், கிணற்றில் எறிந்து கொல்லும் நல்ல தங்காள் கதை ஒரு அதிர்ச்சியளிக்கும் சோக காவியம். ஆனால், அண்மைக் காலத்தில், பெற்ற பிள்ளைகளை அவர்களின் அன்னைகளே கொல்லும் செய்திகளை அடிக்கடி காண நேர்கிறது. ‘ராக்கெட் தாதா’ தொகுதியில், ‘லட்டு’, மற்றும் ‘சுமை’ எனுமிரு கதைகளிலும் கரு இதுதான். ‘லட்டு’ சிறுகதையில், பிள்ளையின் இறப்புக்கு தாய் மட்டுமே அல்லாமல், தந்தையும் காரணமாகிறார். மேலும், அது ஒரு விபத்து என்று வாசிப்பதற்கும் இடம் இருக்கிறது. ஆனால், அந்த தாயின் மனநிலை, நாம் கண்டிருக்கும், மரபான ஒரு தாயின், மனநிலை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இது போலில்லாமல், ‘சுமை’ எனும் இன்னொரு கதையில், தாய் மட்டுமே பிள்ளை இறக்க காரணமாகிறார். ‘சுமை’யில் அதற்கான பின்னணியும் அந்த தாயின் செயலில் இருக்கக்கூடிய நியாயமும் தர்க்கமும் மிக நுட்பமாகவும் நம்பகமாகவும் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ‘லட்டு’ கதையில் அது கைகூடி வரவில்லை. தவிர, அதில், ஆசிரியரின் எள்ளல் மிகுந்த இடையீடு ரசிக்கும்படியாக இருந்தாலும், கதையின் கனத்தை குறைத்து விடுகிறது. 'சுமை' சமகாலத்தில் எழுதப்பட்ட அபாரமான, மிகச் சிறந்த கதைகளில் ஒன்று. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘ராக்கெட் தாதா’ தொகுப்பில் ‘சுமை’க்கு அடுத்த சிறந்த கதைகள் என்று, ‘சுமித்ரா’, ‘படுகை’, ‘ராக்கெட் தாதா’, மூன்றையும் சொல்லலாம். ‘சுமித்ரா’ அபூர்வமான ஒரு கதை. இங்கும் நாம் நினைத்திருக்கும் முடிவுக்கு மாறான ஒரு முடிவினை அளிக்கிறார் காரல் மார்க்ஸ். அது ஆறுதலையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ‘ராக்கெட் தாதா’, பிரிவின் துயரை மிக இலகுவான முறையில் விளையாட்டாகச் சொல்கிறது. ஆனாலும், அதன் அடிப்படை உணர்வை வாசகனுக்கு கடத்துவதில் வெற்றி பெறுகிறது. ஒரு புன்னகையின்றி முடிக்க முடியாத கதை இது. 'படுகை' உயிர்மையில் வந்தபோதே படித்திருக்கிறேன். இப்போதுதான் இவருடையது என்று தெரிந்தது. மனதை உலுக்கும் ஒரு கதையிது. குறிப்பாக ஒரு வன்புணர்விலிருந்து அந்தப் பெண் தன்னை காத்த்துக் கொள்ளும் இடமும் விதமும் தமிழ் சிறுகதைகளில் வந்திராத ஒன்று. அதற்குப் பின் ‘கற்படிகள்’, ‘நிழல்’, ஆகியவை, ஒரு தளத்திலும், ‘கா’ஃபி ஷாப்’ எனும் கதை வேறொரு தளத்திலும் இருக்கின்றன. மொழியழகு மிக்க ‘பிரார்த்தனை’ எனும் கதை பகடியா என்று எனக்கு புரியவில்லை. ‘நிழல்’, ஏதோ ஒரு வகையில், யதார்த்தமாக, நம்பும்படி அமையவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த தொகுப்பிலும் கதைகள் எல்லாவற்றிலுமே கூறுமுறை, மொழி, நடை, வார்த்தை வளம், ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. (இதில் ‘நிழல்’ எனும் கதையில் பிராமண பேச்சு வழக்கு முழுமையாக கைவரவில்லை என்று சொல்ல வேண்டும்.) ஆனால், ‘சுமித்ரா’, ‘சுமை’, ‘படுகை’, ‘லட்டு’ இந்த நான்கு கதைகளைத் தவிர, மீதிக்கதைகளின் பேசுபொருள் கனமாக இல்லை என்பதை குறையாக காண்கிறேன். இக் கதைகள் மிகச் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கின்றன. கதையில் புறத் தகவல்கள் (Detailing and Cataloguing), பாத்திரங்களின் எண்ணவோட்டங்கள், எல்லாமே மிக அருமையாக கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், இக்கதைகள் முடியும்போது இதற்குத்தானா இவ்வளவும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது. ஏனோ ஒரு அற்ப விஷயத்துக்கு இவ்வளவு அழகையும் உழைப்பையும் கொடுத்திருக்க வேண்டாமோ என்றும் தோன்றுகிறது. இதைச் சொல்லும்போதே இது ஒரு அகவயமான உணர்வு என்பதை உணர்கிறேன். எனக்கு முக்கியமில்லாததாக தோன்றும் ஒரு விஷயம் இன்னொருவருக்கு முக்கியமாக தோன்றலாம். சொல்முறையும் நேர்த்தியும் கைகூடி வருவதே முக்கியமானதும் அரிதானதுமாகும். அது இந்த இரு தொகுதிகளிலுமே மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதுவே, இன்னும் தொடர்ந்து பல சீரிய படைப்புகளை இவரிடமிருந்து எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. முகநூலில் பல துறைகளைப் பற்றியும், மிகத் தீவிரமாக உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் கார்ல் மார்க்ஸ். அதை தாண்டி, அதனையும் உள்ளீடாக்கி, வருங்காலத்தில் ஒரு படைப்பாளியாக அவர் எப்படித் தொடர்ந்து செயல்படப் போகிறார் என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.</div>
<br />
<i>ஜி. கார்ல் மார்க்ஸ் கணபதி-</i><br />
<i>வருவதற்கு முன்பிருந்த வெயில், எதிர் வெளியீடு</i><br />
<i><a href="https://www.amazon.in/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-Varuvatharku-Munbiruntha-ebook/dp/B07BYHQ88W">அமேசான்</a>, <a href="http://marinabooks.com/detailed?id=4%201006">மரீனா புக்ஸ்</a></i><br />
<br />
<i>ராக்கெட் தாதா, எதிர் வெளியீடு </i><br />
<i><a href="https://www.panuval.com/rocket-dada-10015212">பனுவல்</a>, <a href="https://www.commonfolks.in/books/d/rocket-dada">காமன் ஃபோக்ஸ்</a></i></div>
நட்பாஸ்http://www.blogger.com/profile/11647556064101907512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-84869530647763871512019-10-13T11:22:00.000+05:302019-10-13T11:22:56.806+05:30தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்- ஜெயமோகன் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<b>- <a href="http://sureeven.wordpress.com/">வெ சுரேஷ்</a> - </b></div>
<br />
தமிழில் நல்ல பேய்க்கதைகள் மிகக்குறைவே. பி.டி. சாமியின் கதைகள் எல்லாம் ரொம்ப அமெச்சூரிஷ் ஆக இருப்பதாகவே உணர்ந்திருக்கிறேன். பேய்க்கதைகள்/ அமானுஷ்யமான கதைகள் என்றளவில், நல்ல படைப்புகள் என்று சொன்னால், ஜாவர் சீதாராமனின், ‘உடல் பொருள் ஆனந்தி’, ராஜேந்திரகுமாரின், ‘இறந்தவன் பேசுகிறேன்,’ மற்றும், ‘இன்னமும் இருக்கிறேன்,’ இரண்டும் நல்ல படைப்புகள். இவை ஆங்கில ஆக்கங்களின் தழுவலாக இருக்கலாம். சுஜாதாவின் ‘கொலையுதிர்காலம்’, மற்றும், ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ இரண்டுமே அவுட்ரைட் பேய்க்கதைகள் இல்லை என்றாலும், அமானுஷ்யமான சூழலை எழுத்தில் பிரமாதமாகக் கொண்டு வந்திருப்பார். 'ஆ' எனும் தொடரும் நினைவுக்கு வருகிறது. இவை போக,குமுதத்தில் கிருஷ்ணகுமார் (அநேகமாக எஸ்.ஏ.பி. அண்ணாமலை) எழுதிய ‘கோஸ்ட்’ எனும் தொடரில் சில கதைகள் மிக நன்றாக அமைந்தன. என் நினைவில் இவைதான் உள்ளன. தீவிர இலக்கிய பரப்பில் என்றால், புதுமைப்பித்தனின் 'காஞ்சனை' ஒரு மறக்க முடியாத படைப்பு.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1c8i8jwJwKbZGaQAwSJ971A23jtWGowuRkvfSZSOEQ1bTVJSIZDHVJYY6He-rA3wOoj-FCYmFmnll-5olYTm9q_UL9QwTHLybPnsjR4LSkUZg1vN-z32cHhLqhddLVMVQND7qr12xbio/s1600/deivangal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="618" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1c8i8jwJwKbZGaQAwSJ971A23jtWGowuRkvfSZSOEQ1bTVJSIZDHVJYY6He-rA3wOoj-FCYmFmnll-5olYTm9q_UL9QwTHLybPnsjR4LSkUZg1vN-z32cHhLqhddLVMVQND7qr12xbio/s320/deivangal.jpg" width="206" /></a></div>
<br />
<br />
<a name='more'></a>அதன் பிறகு வந்த பேய்/ அமானுஷ்ய கதைகள் என்றால் ஜெயமோகனின் ‘நிழல்வெளிக் கதைகள்’தான். அதில் ஒவ்வொன்றுமே மிக நன்றாக அமைந்திருக்கும் அசலான ஆக்கங்கள். ‘தம்பி’ என்ற ஒரு கதை மட்டும் சுஜாதாவின் ‘விளிம்பு’ எனும் குறுநாவலை நினைவூட்டுவதாக இருந்தது என்று அப்போது படிக்கும்போது நினைத்துக் கொண்டேன். பேய்க்கதைகள் என்றல்லாமல், அமானுஷ்ய, யதார்த்த உலகை மீறிய அனுபவங்களை கலாபூர்வமாக வெற்றிகரமாக பதிவு செய்த இன்னொரு எழுத்தாளர், யுவன் சந்திரசேகர். அவரது, ‘குள்ளச்சித்தன் சரித்திரம்’, இவ்வகையிலான நாவல். (க.நா.சு.வின் ‘அவதூதரு’ம் நினைவுக்கு வருகிறது). ‘பகடையாட்டம்’, ‘வெளியேற்றம்’, ‘பயணக்கதை’, போன்ற நாவல்களிலும், ‘நீர்ப்பறவையின் தியானம்,’ மற்றும் பல சிறுகதைகளிலும், இந்த தன்மை உண்டு. பின் இரா. முருகனின் ‘அரசூர் வம்சம்’ தொடர் நாவல்களிலும், வேறு சில சிறுகதைகளிலும் இந்த அமானுஷ்யமான அம்சங்கள் நன்றாகவே வந்திருக்கின்றன. ஆனால், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தமிழின் தீவிர இலக்கிய பரப்பில் பேய்க்கதைகள் சொற்பம் என்றுதான் சொல்ல வேண்டும்.<br />
<br />
அதன் பிறகு இப்போது ‘ஜன்னல்’ இதழில் வெளிவந்த அவரது கதைக் கட்டுரைத் தொடரின் கதைகள், ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’ எனும் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இது தமிழின் தீவிர இலக்கிய பரப்பில் நல்ல பேய்க்கதைகள் இல்லை எனும் குறையைப் போக்குகின்றது. பேய்க்கதைகள் வெறும் த்ரில்லையும் திகிலையும் மட்டும் உருவாக்கினால் அவற்றுக்கு இலக்கிய அந்தஸ்து கிட்டாது. அவற்றையும் இலக்கியமாக்குவது எது என்று யோசித்தால், ஒரு மனிதனின் பெளதீக இருப்பு முடிவுக்கு வந்த பின்னும், அவன் /அவள் அரூப வெளியில் இருக்கக்கூடும், அல்லது இருக்க வேண்டும் என்று நம்ப, அல்லது விழையச் செய்யும் காரணங்களை இந்தக் கதைகள் சொல்லுகின்றன. அந்தக் காரணங்கள் மூலமாக, அந்தக் குறிப்பிட்ட மனிதனின் அகம் மட்டுமல்ல, அவன் இருந்த சமூகத்தின் அகமும் அதன் ஆழ்மனமும் செயலாற்றும் விதத்தை பேசுகின்றன. கூடவே, இயல்பாகவே, அறம் என்பது என்ன, அறம் அல்லாதது என்ன, எனும் கேள்விகளையும் இக்கதைகள் எழுப்புகின்றன.<br />
<br />
நான் மேலே சொன்ன பிற எழுத்தாளர்களின் கதைகளுக்கும், ஜெயமோகனின் இந்தக் கதைகளுக்குமான குறிப்பிடத்தகுந்த வித்தியாசம், இவை ஏற்கனவே வழங்கி வந்துள்ள கதைகள். எனவே இது ஒரு retelling, மறுகூறல்தான். ஆனால், யதார்த்த உலகின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாத நிகழ்வுகளைக் கொண்ட இந்தக் கதைகள் எந்த அளவுக்கு நம்பகமாக சொல்லப்பட வேண்டுமோ அந்தளவுக்கு நம்பகமாகவும், பல இடங்களில், மிகுந்த கவித்துவத்துடனும் சொல்லப்பட்டிருக்கின்றன. அதுவே இதன் வெற்றி. <br />
<br />
மனிதர்கள் பேய்களாகும் கதைகள், பேய்கள் தெய்வங்களாகும் கதைகள், படிக்கும்போது நம் முதுகுத் தண்டை சில்லிட வைக்கும் கதைகள், விதியின் வலிமையான தவிர்க்கவியலாத ஆட்டத்தில் வாழ்வைத் தொலைத்தாலும், தாபங்களையும் தாகங்களையும் இழக்க முடியாத பாவப்பட்ட ஜீவன்களின் வேதனை கதைகள், பேயாக மாறி பழி கொண்டலைந்தாலும் பாசம் வைத்துவிட்டவர்களை மட்டும் பழி தீர்த்துக் கொள்ள முடியாமல் தவித்தலையும் ஆத்மாவின் கதைகள், என்று வகை வகையாக வாசிப்புச் சுவைகளைத் தந்து, மெய்ம்மை என்பதுதான் என்ன என்று யோசிக்கவும் வைக்கும் கதைகள். சாதாரண மக்களின் மனதில் அறத்தின் பாற்பட்டு நிற்பவர்களும் தெய்வமாகிறார்கள், அக்கிரமக்காரர்களும் தெய்வமாகி வழிபடப்படுகிறார்கள் என்ற முரணையும் உணர்த்துகின்றன இக்கதைகள். இங்கு வழிபடப்படுவது அறம் மட்டுமல்ல ஆற்றலும்கூடத்தான். அந்த ஆற்றல் அறத்துக்கு எதிராகவே நின்றாலும்கூட.<br />
<br />
கவித்துவம் மிக்க ஜெயமோகனின் எழுத்தில் தமிழக கேரள எல்லை குமரி மாவட்டம் அப்படியே உயிர்பெற்று எழுந்து கண் முன் விரிகின்றது. இது அவருடைய Home Turf, வேறு எப்படியும் இருக்க வழியில்லை. மேலும் நான் மேலாங்கோட்டு அம்மன், கள்ளியங்காட்டு நீலி போன்றோர் இருக்கும் இடங்களையெல்லாம் அண்மையில் நேரில் பார்த்து வந்ததும் இந்தக் கதைகளை நன்றாகவே ரசிக்க வைத்தன என்பதையும் சொல்ல வேண்டும். அந்த நிலப்பரப்பு குறித்து அ.கா. பெருமாள், தெய்வங்கள் முளைக்கும் நிலம் என்று ஒரு புத்தகமே எழுதியிருப்பார். தெய்வங்களுக்கு முன்னரே பேய்கள் முளைக்கும் நிலங்கள்தாம் அவை. அப்படிப்பட்ட ஒரு Other worldly ambience அந்த இடங்களுக்கு உள்ளது. <br />
<br />
இந்தத் தொகுப்பின் குறைகளாக சில விஷயங்களை சொல்வேன். ஒன்று, தொடராக எழுதப்பட்ட தனித்தனிக் கதைகள் என்பதால், கூறியது கூறல் மிகுதியாக இருக்கிறது. உதாரணமாக, இரணியல் எனும் ஊரின் பெயர் இரணிய சிங்க நல்லூர் என்ற தகவல் அநேகமாக நூலின் மூன்று நான்கு இடங்களில் வருகின்றது. அதே போல வேறு சில வரலாறுகளும் சம்பவங்களும்கூட. கதைகள், கட்டுரைகளை நூலாக தொகுக்கும்போது ஒரு சாதாரண கூர்ந்தாய்விலேயே இது போன்ற குறைகளைக் களையலாம். இன்னொரு குறை, இந்தக் கதைகள் அவை குறித்த ஆசிரியரின் குறிப்புகள் கருத்துகளோடும் எழுதப்பட்டிருப்பதால், கதைகளை பற்றி நாம் யோசிக்கும் முன்னரே கதைகளின் முடிவில் ஆசிரியரே யோசித்து அவற்றைப் பற்றி எழுதிவிடுகிறார். பெரும்பாலும் அவை நன்றாகவே இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவற்றைத் தாண்டி நாம் இந்த கதைகள் பற்றிய நமது எண்ணங்களை தொகுத்துக் கொள்ள சிரமப்பட வேண்டியிருக்கிறது. அதற்கு இந்தக் கதைகளை நம் மனதில் இன்னும் கொஞ்ச காலம் ஊற வைத்து, அசை போட வேண்டும் என்று நினைக்கிறேன். பின், எந்த நாட்டார் சிறுதெய்வத்தை எடுத்துக் கொண்டாலும், அவை முதலில் நாட்டார் மரபில் இருந்தவை, பின் பவுத்த சமண சமயங்களால், குறிப்பாக அதிகமும் சமண சமயத்தால், உள்ளிழுக்கப்பட்டு, பின் மறைந்தபோது இந்து மதத்துக்குள் இழுக்கப்பட்டவை என்று மீண்டும் மீண்டும் கூறப்படுவது. இதற்கெல்லாம் எந்த ஆதாரத்தையும் ஜெயமோகன் தருவதில்லை. வெறும் கதைகள் என்றால் ஆதாரங்கள் அனாவசியம். ஆனால், கட்டுரைகளாகவும் இருப்பதால், ஆதாரங்கள் இருந்திருக்கலாம்.<br />
<br />
இவை ஒரு புறம் இருந்தாலும், மும்பை நகரின் தனிமை தாங்க முடியாமல் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வீட்டில், இறந்து போன உறவினர்களுடன் இயல்பாக வாழும் அந்த முதியவரின் கதை, ஓடி எனும் மந்திரவாதி நாயைக் கண்டு பயந்து தப்பி ஓடி வரம் கிருஷ்ணப்பிள்ளையின் கதை, சாஸ்தாவின் நாய் குதிரை போல காட்சியளிக்கும் கதை, அறத்தால் வீழ்ந்த சிதம்பர நாடாரின் கதை, காதல் கொண்டவனைக் கொல்ல முடியாமல் அவனை சூழ்ந்து இருப்பவர்களைக் கொன்று பழிவாங்கும் உம்மிணிக் குட்டியின் கதை, திருவட்டாறின் ஆதிகேசவனின் கீழ் அழுந்திக் கிடக்கும் கேசி கேசிகன் கதை, இவையெல்லாம் என் நினைவில் வெகு காலம் வாழும்.<br />
<br />
தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்- ஜெயமோகன் <br />
நற்றிணை பதிப்பகம்,<br />
<a href="https://www.amazon.in/Deivangal-Peigal-Devargal-Tamil-ebook/dp/B07B2F4Z8W">அமேசான்</a>, <a href="https://www.commonfolks.in/books/d/deivangal-peigal-devargal">காமன்ஃபோக்ஸ்</a></div>
நட்பாஸ்http://www.blogger.com/profile/11647556064101907512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-57113420036875103642019-10-02T11:04:00.002+05:302019-10-02T11:04:49.842+05:30 Memoirs Of A Woman Of Pleasure: Fanny Hill by John Cleland: காமம் செப்பி கண்டதை மொழிந்த - வரைவின் மகளிரின் வரையா ஓவியம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<b><a href="http://solvanam.com/?author_name=ramesh_kalyan">ரமேஷ் கல்யாண்</a></b></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgilYVOEuhSgBpAk7bHwDMEKrp33tRvzFSGFLiMk-MBUHHOrujfhkA5r8LyFjiaxo15NeBwWDo37eNBoz1qxY5Lg-kvfZ_QbktBP3PoUrF3BzkXi9YGt2LzjGvgtbhnpDEB1j7iuT9jkQc/s1600/Fanny-Hill-Memoirs-of-a-Woman.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="460" data-original-width="288" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgilYVOEuhSgBpAk7bHwDMEKrp33tRvzFSGFLiMk-MBUHHOrujfhkA5r8LyFjiaxo15NeBwWDo37eNBoz1qxY5Lg-kvfZ_QbktBP3PoUrF3BzkXi9YGt2LzjGvgtbhnpDEB1j7iuT9jkQc/s320/Fanny-Hill-Memoirs-of-a-Woman.jpg" width="200" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<br />
'மெம்வார்ஸ் ஆஃப் அ உமன் ஆஃப் ப்ளஷர்' (<i>Memoirs Of A Woman Of Pleasure, 1749</i>), ஜான் க்ளீலேண்ட் எழுதி, இங்கிலாந்தில் சுமார் 250 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த நாவல். பலவிதத்தில் தொடர்ந்து தடை செய்யப்பட இந்த நாவல், முழுதும் ஃபானி ஹில் ( <i>Fanny Hill</i>) எனும் சிறுமி - தன்னுடைய மடந்தைப் பருவத்தில் - தான் பாலியல் உலகில் தள்ளப்பட்டு அலைக்கழிந்ததும், அனுபவித்ததும் உட்பட்ட எல்லாவற்றையுமே இரண்டு கடிதங்களின் மூலமாக எழுதுவதாக, தன்மை ஒருமையில் எழுதப்பட்ட 'நான்' வகை நாவல்.<br />
<br />
நாவல் முழுக்க பாலுறவு வேட்கைகளின் வெக்கைதான். ஜான் எழுதுகிறார் என்பதே தெரியாமல் ஃபானி - அவளே எழுதுகிறாள் என்று தோன்றுகிறது. நாவல்படி அதுதான். இது எந்த அளவுக்கு பாலியல் சார்ந்த எழுத்து என்றால் ஃபானி என்கிற பெயரே பெண் பாலுறுப்பு என்பதற்கு ஜாடைமாடையான ஆங்கிலக் கொச்சைச் சொல் என்று சொல்வோரும் உண்டு. 1700-களில் தடை செய்யப்பட்டதில் வியப்பேதும் இல்லை.<br />
<br />
பாலியல் படங்களை/ கதைகளை வாசிக்கத் தயங்குபவர்களுக்கு அல்லது சமூக உன்னத மதிப்பீடு சார்ந்து அவற்றின்பால் முகச்சுளிப்பு கொள்பவர்களுக்கு இந்த நாவல் (இக் கட்டுரையும்கூட ) எதையும் அளிக்க இயலாது. இருளில் கையிலிருந்து நழுவித் தப்பிய கருப்புப் பூனை போல நாவல் தனது பாதையில் சென்று கொண்டே இருக்கும்.<br />
<br />
* * *<br />
<br />
பாலியல், உடல் வேட்கை, பாலுறுப்புகள் குறித்து இவ்வளவு விரிவாக, நுட்பமாக, விவரணைகளுடன் எழுதப்பட்டிருந்தாலும், புத்தகம் வாசிக்கையில் சிறிதும் மலினமாகத் தோன்றாமல் இருப்பதற்கு காரணம் மொழி நடை. இதை மொழி பெயர்ப்பது பெரிய சவாலாக இருக்கும் என்றே தோன்றுகிறது. <br />
<br />
இருவகைப் பாலுறுப்புகளை, அவற்றின் தன்மை, இயக்கம் குறித்து எல்லாமே ஒருவித குழூஉக்குறி போல அல்லது மாற்றுச் சொல்முறைகள் போல பதனமாக எழுதிவிடுகிறார். முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைகளோ விவரிப்புகளோ இல்லை. ஒரு சமயத்தில் இப்படியும் இதையெல்லாம் சொல்லிவிட முடியுமா என்று ஆச்சரியத்தில் நமக்குள் முறுவல் உடைகிறது. நாவலின் சிறப்பு என்றால் மொழியும், சொல்முறையும்தான். அதே சமயம் மொழி மயக்கத்தை தாண்டி தன்னுடைய வாழ்நிலையை ஃபானி சமரசமின்றி எழுதிவிடுகிறாள்.<br />
<br />
காம இச்சை என்பது ஒரு திருட்டு விருந்தாளி போல உள்ளே நுழைந்து, உபசரிப்பவனாக மாறி பிறகு தலைவராக ஆகிவிடுகிறது என்பது கலீல் ஜிப்ரானுடைய ஒரு வரி.<br />
<br />
* * *<br />
<br />
தமிழில் புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த குப்ரிக்கின் 'பலிபீடம்', ஜி நாகராஜன் கதைக்களம், வா மு கோமு வின் 'மங்கலத்து தேவதைகள்', நளினி ஜமீலாவின் 'கதை' (கேரள நாவலின் மொழிபெயர்ப்பு ) போன்ற படைப்புகள் நினைவில் வந்தன. ஆனால் எதுவுமே இந்த நாவலுக்கு அருகில் வைக்க போதுமானதாக இல்லை என்றே தோன்றுகிறது. அதே சமயம் மேற்சொன்ன எல்லாமே ஒரேவிதமான கதைக்களன் என்றாலும் இதில் அதன் பரிமாணம் வேறு.<br />
<br />
ஒரு பெண்ணுடைய சுயஅனுபவ நினைவுக்குறிப்பாக ஒரு ஆணால் எழுதப்பட்டுள்ள இந்த நாவலின் கூறுமுறையில், ஒரு பெண் இப்படியானதொரு நுகர்ச்சிப் பார்வை கொண்டிருப்பாளா என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. ஆனால் அந்த கேள்வி படிக்கும்போது உணரமுடிவதே இல்லை என்பதே நாவலின் விசேஷம். (கவபட்டாவின் <i>House of Sleeping Beauties</i> படிக்கும்போதும் - அது ஒரு ஆணுடைய பார்வை என்றபோதும் -இதே கேள்வி என்னுள் எழுந்தது. )<br />
<br />
* * *<br />
<br />
நாவலை எழுதிய ஜான் க்ளீலேண்ட் லண்டனில் வறுமையின் கடன் காரணங்களுக்காக சிறையில் வைக்கப்பட்டார். (போக்கிரித்தனத்துக்காக என்போரும் உண்டு) அங்கு சிறையில் எழுதியதே இந்த நாவல். சிறையிலிருந்து எழுதப்பட்ட சிறந்த நாவல்கள் வரிசையில் இதை சேர்க்கிறார்கள். நாவல் வெளி வந்த உடன் இவரையும் வெளியிட்டவரையும் தூக்கி ‘உள்ளே’ வைத்துவிட்டார்கள். நீதிமன்றத்திடம் தனது வறுமையே காரணம் என்றபோது அவருக்கு நிதி உதவி அளித்து, இனி நல்ல விஷயமாக எழுதச்சொல்லி நீதிபதி விடுவிக்கிறார் (இது கட்டுக்கதை என்போரும் உண்டு). ஆனால் அதற்குள்ளாக இந்த நாவல் அரசல் புரசலாக பிரபலம் அடைந்து விட்டது. அதன் பிறகு நாவலின் சூட்டைக் குறைத்து திருத்தி வெளியிட்டார். ஆனால் அதுவும் மோசம் என்று கண்டிக்கப்பட்டார். தடை செய்யப்பட்டது. இதனிடையே இதனுடைய அங்கீகரிக்கப்படாத பிரதிகள் சட்டத்துக்கு புறம்பாக விற்பனை ஆக தொடங்கிவிட்டன. பிறகு ஒருவழியாக அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். <br />
<br />
இவர் 12 வருடம் இந்திய பாம்பேயில் இருந்திருக்கிறார். இந்த நாவல் இரண்டு பகுதிகளாக ஓராண்டு இடைவெளியில் வந்தது. எண்பது வயது வரை வாழ்ந்த ஜான் ஏறக்குறைய தனது 39 ஆவது வயதில் இதை எழுதி இருக்கிறார். பிறகு இரண்டு நாவல்கள் எழுதினர். எடுபடவில்லை. பிரெஞ்சைத் தழுவி எழுதிய ‘<i>டிக்ஷ்னரி ஆப் லவ்</i>’ மட்டும் சுமார் என்கிறார்கள். தான் பாம்பேயில் இருந்தபோது நண்பர் ஒருவரிடம் விலைமாதர் பற்றி எழுத, அதை ஆபாசமாக எழுதவேண்டியதில்லை என்று சவாலாக இதை எழுதியதாக பின்னால் சொல்லி இருக்கிறார். சவால்தான். வெற்றி பெற்றிருக்கிறார். முறையற்ற பால் உறவு முறை கொண்டவர் என்று பேசப்பட்ட இவர் பிரம்மச்சாரியாக லண்டலின் இறந்தார்.<br />
<br />
ஆணின் பாலுறுப்பு குறித்து ஒரு பெண் ஆச்சரியமாகவும் பெரு விருப்போடும் எழுதியதிலிருந்தே அவர் சுயபால் ஆசாமி என்பது தெரிகிறது என்போரும் உண்டு. நாவலை படிக்கும்போது இந்த எண்ணம் எழத்தான் செய்கிறது. நாவலுக்குள்ளேயே பின் பாதியில் இரு ஆண்கள் சேர்ந்து உறவு கொள்ளுவதை ஃபானி கள்ளமாக பார்க்க நேர்வதாக ஒரு பகுதியும் வருகிறது. ஆனால் அதெல்லாம் நாவலின் செறிவுக்கோ போக்குக்கோ வெளிப்பாட்டுக்கோ எந்தவித ஊறும் செய்யவில்லை.<br />
<br />
* * *<br />
<br />
<b>நாவலின் களமும் காலமும்</b><br />
<br />
1740-களின் காலப்பின்னணி கொண்ட இந்த நாவலில் பெண் போகப்பொருளாகவேதான் இருக்கிறாள். பெண் என்பவள் உடல் மட்டுமே. சற்று ஆவேசமாக சொல்லப்போனால் வெறும் புழை மட்டுமே. வசதி படைத்த ஆணுக்கு பெண் கிடைக்கிறாள். தற்காலிகமாகவோ, உடனிருந்து சிலகாலம் வாழவோ. தெருவில் பெண் நடந்து போகும்போது அவள் கவனிக்கப்படுவதும் தொடரப்படுவதும், தான் அப்படி தான் கவனிக்கப்படுகிறோமா என்கிற அவளது விழியோர பார்வைகளும், அன்றைக்கும் அப்படியேதான் இருந்திருக்கிறது.<br />
<br />
பாலுறவு சார்ந்த பதங்களை, காட்சிகளை, உணர்வுகளை, வேட்கைகளை எல்லாம் ஒரு பெண் எவ்வித தயக்கமோ சங்கடமோ இல்லாமல் எழுதுவதில் பெரிய சிக்கலொன்றும் இல்லை என இன்று நாம் காணும் நிலையை, 1700களில் பெண்ணின் சுய அனுபவம் குறித்த நினைவுக்குறிப்பு நாவலாக க்ளீலேண்ட் என்ற ஆண் எழுதி இருப்பதை கவனிக்கவேண்டும். ஒரு பெண் அப்படி தன்னை தான் விரும்பியவண்ணம் வெளிப்படுத்திக் கொள்ளுவது அவளது முழுச் சுதந்திரம் என்று அந்த ஆண் எழுத்தாளர் முழுமையாக நம்பியிருந்தால் ஒழிய இப்படி ஒரு நாவல் பிறந்திருக்கும் சாத்தியம் உண்டா என்று நாம் கேள்வி எழுப்பிக்கொள்ளலாம். அதனாலோ என்னவோ கொச்சைத்தனம் இதில் இல்லை. <br />
<br />
இந்த நாவலில் முழுக்க முழுக்க திமிறித் தளும்பும் காமம் ஊறிய உடல்கள்தான் களம். வாழ்க்கை குறித்து சொல்லப்படும் விபரங்கள் கூட அந்த உடலின் மீதே வரையப்படுகின்றன. இந்த நாவலே ஒரு பெண் உடலின் மீது மைக்ரோ எழுத்துக்களால் எழுதப்பட்டதாக உருவகிக்கலாம். உடலை தவிர்த்து விட்டு படித்துவிட முடியாது. அவ்வளவும் உடல் மற்றும் பாலுணர்ச்சிகள். ஆனால் மலினமில்லாத எழுத்து. ஆணுடைய உடலை பெண் பார்ப்பதும் ரசிப்பதுமாகவும், பெண்ணுடலை பெண் ரசிப்பதாகவும் விரவும் நாவலில் அன்றைய சமூக வாழ்வின் கூறுகளை நாம் அடையாளம் காணலாம். <br />
<br />
அதை சமூகமும் பெண்ணுலகும் ஏற்றுக்கொண்டே நகர்கிறது. நாவலில் ஃபானி- யிடம் எங்கேயும் குற்ற உணர்வோ பெரிய புகார்களோ இல்லை. பாலியல் தொழிலை ஒரு அங்கீகரிக்கப்பட்ட கௌரவமான (அந்த காலத்து அளவீடுகளில்) தளத்தில் வைத்து செயல்படும் நிலையில்தான் இந்த நாவல் நகர்கிறது. பெண்ணை அனுமதி கேட்டோ, விழைவைச் சொல்லியோதான் ஆண் அணுகுகிறான். பாலியல் விடுதியின் தலைவிகள் (பெரும்பாலும் பெண்களே அதை நடத்தும் தலைவிகளாக இருக்கிறார்கள்) தொழிலுக்காக பெண்களை கவர்ந்து வந்தாலும் அவர்களது நலன் குறித்து பரிவுள்ளவர்களாகவே இருக்கின்றனர். இத்தகைய தொழில்முறை காமத்தில் உழலும் பெண்களுக்கு உரிய விளையாட்டுத்தனத்தில் அவர்கள் ஆபத்தான விளிம்புகளுக்கு சென்றுவிடாமல் எச்சரித்து ஒரு தாய்ப்பூனை போல கவ்வி கொண்டுவந்து விடுகிறார்கள். <br />
<br />
ஒரு வசதி படைத்தவனுடைய ஆசை நாயகியாக அவனுடனே இருப்பது முதல், வணிக வளாகம் என்ற இடத்தில் சப்தமில்லாமல் ரகசிய விடுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்களுக்கு 'பணிவிடை' செய்வது வரை பலவும் நிகழ்கிறது. ஆனால் முகமறியா ஆண்களுக்கு உடன்செல்லும் காமத்திபுரா வகை இதில் இல்லை. அதுவேறு உலகம். இதனாலேயே என்னவோ இந்த நாவலில் புகார்களோ, பரிதாபங்களோ, கதறல்களோ இல்லை. சொல்லப்போனால் ஃபானி மிகவும் வியப்புடனும், ஆசையுடனும் வேட்கையுடன்தான் அத்தனை கூடலிலும் வெளிப்படுகிறாள். சலிப்பு என்பது ஏற்படுவதோ, சுய பச்சாதாபமோ, வெறுப்போ எதுவும் இருப்பதில்லை. நதிக்குள் மீன்குஞ்சு போலவே நீந்துகிறாள். <br />
<br />
* * *<br />
<br />
<b>நாவல்</b><br />
<br />
தனது கணவன் சார்ல்ஸ் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் ஃபானி என்ற பெண், 'மேடம்' என்று விளித்து யாருக்கோ எழுதும் இரண்டு நீண்ட கடிதங்கள்தான் நாவல். தனது 14 வயதில் பெற்றோர்களை அம்மை நோயில் இழந்து நிற்கும் சிறுமி ஃபானி. தெரிந்த பெண்மணியுடன் லண்டனுக்கு செல்கிறாள். வீட்டு வேலைக்காக என்று செல்பவள் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகிறாள். அங்கே வளர் சிறுமியான அவள் மூத்த இணைகள் இருவர் இணைவதை பார்த்துவிடுகிறாள். அதை சக தோழியிடம் சொல்லும்போது உனக்கு இதில் விருப்பம் இருக்கிறது அல்லவா. சமயம் வரும்போது வேறு ஒன்றை காட்டுகிறேன் என்று சொல்லி இளம்பருவத்து இணைகள் இருவர் இணைவதை மறைந்திருந்து உடனிருந்து காட்டுகிறாள். அந்த பெண் அதே விடுதியில் உள்ள தோழிதான். தனியறைக்கு பின்னால் உள்ள மூடிய இருள் சந்தின் கதவு துவாரம் வழியாக அவள் முதன்முறையாக இரு உடல்கள் இணைவதை பார்க்கிறாள். அந்த செயலுக்கு அவர்கள் தயாராவதை செயலுருவதை பார்க்கிறாள்.. இத்தனை நோவு மிகுந்த ஒரு நிலையில் இருந்து மீண்ட பிறகும் அந்த பெண் சுகமாக எப்படி அவனோடு இருக்கிறாள் என்று வியப்பு அவளுக்கு ஏற்படுகிறது. இந்த காட்சி முழுதும் சாவி துவாரத்தில் பார்க்கும் கண்ணின் காமிரத்தன்மையோடு மாறாத பார்வைக் கோணத்தில் சொல்லப்படுகிறது. அவர்களது இயக்கம் மற்றும் கலவி நிலைகளுக்கு ஏற்ப அவளும் அவனும் மாறி மாறி தெரிகிறார்கள். ஆண் குறி அவளுக்கு அப்போது வியப்பைத்தவிர வேறொன்றையும் ஏற்படுத்தவில்லை. இப்படி பார்த்துக்கொண்டே இருக்கையில் உடனிருக்கும் வயதில் மூத்த சக தோழியின் கைகள் இவள் மீது மெல்ல ஊறத் தொடங்குகிறது. அது முறையல்ல என்று தெரிந்தாலும் அதை மீறி, அப்போதுதான் தனது பருவத்தின் மொழியை உணரத்தொடங்குகிறாள். அன்றிரவு அந்த பெண் இவளை தனது இச்சைக்கு உட்படுத்துகிறாள். வெறுக்கவும் முடியாத மறுக்கவும் முடியாத ஒரு நிலையில் ஃபானி அங்கிருக்கிறாள். ஆனால் அவளுக்கு அதன் மேல் சொல்லமுடியாத ஒரு ஈர்ப்பு உருவாகிறது. தனது கிராமத்தில் இதையெல்லாம் அவள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்த குற்ற உணர்வு அவளுக்கு லேசாக தோன்றினாலும் அவளது உடல் மனதை நகர்த்திவிட்டு பேசத்துவங்குகிறது. நாவல் முழுக்க வெவ்வேறு பருவங்களில் வெவ்வேறு ஆண்களுடன் வெவ்வேறு வகையாக அவளது பெண்ணுடல் களிப்புடன் உரையாடிக்கொண்டே இருக்கிறது. <br />
<br />
ஒரு நாள் அங்கு வரும் சார்ல்ஸ் எனும் இளைஞனிடம் பரிச்சயம் உண்டாகி - தொடர்ந்து - அவன் அவள் தப்பித்து செல்வதற்கு உதவுகிறான். அவள் தனது முதல் உறவை அவனிடம் பெறுகிறாள். தருகிறாள். அவனிடம் காதல் அரும்புகிறது. ஆனால் எதிர்பாராத விதமாக அவன் தொலைதூரம் பயணப்பட்டு விட நிர்கதியில் நிற்கும் இவளுக்கு Mr.H என்ற ஒரு வசதி படைத்த நல்ல மனிதன் கிடைக்கிறான். அவன் ஏற்படுத்திக்கொடுத்த வீட்டில் இவள் அவனுக்கு ஆசைநாயகியாக வாழ்கிறாள். அவனோடான காம லீலைகள் விலாவரியாக சொல்லப்படுகிறது. எப்பொழுதும் கூடலுக்கு தயாரான இயந்திரமாகவே அவள் இருக்கிறாள். ஒரு நாள் அவன் வேலைக்காரியுடன் வலுக்கட்டாயமாக உறவு கொள்ளுவதை கதவுத்திறப்பின் இடைவெளி வழியாக ஃபானி காண்கிறாள். அவளை வற்புறுத்துவது முதல் புணர்ந்து முடித்து வெளியே வரும்வரை அனைத்தையும் அவள் வேடிக்கையை பார்ப்பது ‘அப்படியே’ எழுதப்படுகிறது. வசீகர மொழி இல்லாமல் ஒரு வித இயக்கமாக அது சொல்லப்படுகிறது. அவன் வெளியே வரும்போது இவள் அடுத்த ஹாலில் இருக்கிறாள். அவன் ஒன்றுமே நடக்காதது போல நடந்து கொள்கிறான். அவள் அப்போது சொல்வது அருமையான ஒன்று – “ இத்தனை நடப்பதையும் நான் சலனம் இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்க முடிந்தது ஏனென்றால் இதுவரை அவனிடம் எனக்கு இருப்பது காதல் இல்லை. வெறும் உடலியக்கம் மட்டுமே. இல்லாவிட்டால் உள்ளே சென்று கலாட்டா செய்திருக்க கூடியவள் நான் என்கிறாள். பெண், மனம் ஒப்பாதபோது உடல்ரீதியாக தன் மீது நிகழ்த்தப்படும் கேளிக்கைகளை , பொருட்படுத்துவது இல்லை. <br />
<br />
ஆனால் இப்போது அவளுக்கு ஒரு வன்மம் உருவாகிறது. பழி தீர்க்க. Mr H- சிடமிருந்து அவ்வப்போது இவளுக்கு கடிதம் கொண்டுவரும் ஒரு அப்பாவியான பணியாள் ஒருவனை இவள் தனது அழகின் மூலம் வயப்படுத்துகிறாள். அவன் மனதில் இச்சையூட்டி அவனோடு பலமுறை ரகசிய உறவு கொள்கிறாள். யதேச்சை போல துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய மனதை உசுப்பி எதிர்பாராமல் உணர்ச்சி வேகத்தில் கொண்டுவிடும் உறவு போல தான் நடிப்பதை கச்சிதமாக ஃபானி எழுதுகிறாள். ஆனால் அவள் காமத்தை சுகிக்கிறாள். அவளை பொறுத்தவரை ஒரே போதையூட்டும் திரவத்தை வெவ்வேறு கொள்கலனில் வெவ்வேறு வடிவில் அனுபவிக்கிறாள். ஒரு நாள் இவர்கள் சேர்ந்து இருப்பதை Mr.H பார்த்து விடுகிறான். ஃபானி வெளியேற்றப்படுகிறாள்.. அதில் அவளுக்கு வருத்தமொன்றும் இருப்பதில்லை. அந்த இளைஞன் தண்டிக்கப்படுகிறான்.<br />
<br />
வெளியேறிய அவள் ஒரு வீடு பார்த்து சமாளிக்கையில் திருமதி கோல் எனும் பெண்மணியை சந்திக்கிறாள். அவளுடைய பாலியல் விடுதிக்குள் நுழைகிறாள். அங்கே இவளது பிரத்யேக அழகு உடனிருக்கும் பிற பெண்களை கூட கவருகிறது. இவள் விடுதியின் பெரிய ஈர்ப்பு என்பதை திருமதி.கோல் உணர்ந்து கொள்கிறாள்.<br />
<br />
அந்த விடுதியின் செயல்பாடு விசித்திரமானது. பெண்களைக் காண தேர்ந்தெடுக்கப்பட்ட வசதிபடைத்த ஆண்கள் வந்து இருப்பார்கள். ஒரு இரவு சாப்பாடு விருந்து போல ஒரு கூடத்தில் அனைவரும் கூடுவார்கள். பெண்கள் தம்மை காமத்தை தூண்டும் விதமான தம் உச்சபட்ச அழகோடு அலங்கரித்துக்கொண்டு வந்திருப்பார்கள். நிர்வாண நிலையில் ஒவ்வொரு பெண்ணும் தனக்குரிய ஆணுடன் நடனமும் இறுதியில் புணர்ச்சியும் கொள்ளவேண்டும். அதனை பிறர் கண்டு அதன் நளினம் மற்றும் அழகு குறித்து பாராட்டுவார்கள். சாதாரணமாக துவங்கும் நடனம் ஆணை கவர வேண்டிய நிர்பந்தம் இருக்கும் போது அந்தப் பெண் நளினமாகவும் சாகசமாகவும் நடந்து கொள்ளவேண்டிய நிலை. அதே சமயம் பாலுறவைத்த தூண்டி உறவும் கொண்டு விடவேண்டும். பிற இணைகள் கலவி கொள்ளுவதயும் இவள் பார்க்கிறாள். பிறகு இவளே அரங்கின் மையத்துக்கு தள்ளப்படுகிறாள். நோபர்ட் என்பவன் இவளுக்கு கிடைக்கிறான். இவள் அரங்கின் மொத்த கவனத்தையும் பெறுகிறாள். <br />
<br />
விடுதியில் இவள் மட்டுமல்ல எமிலி உள்ளிட்ட வேறு மூன்று பெண்களின் நிலைமை மற்றும் காம செயல்பாடுகளும் பேசப்படுகின்றன. இதில் - திருமதி கோல் – ஃபானி-யிடம், தான் இன்னும் தொடப்பட்டிருக்காத பெண் என்பதாக நடந்து கொள்ளவேண்டும் என்றும் அதுதான் அவளுக்கு நல்ல தொகையையும் நீடித்த உறவையும் பெற்று தரும் என்று அறிவுறுத்துகிறாள். பலமுறை உறவில் திளைத்த ஃபானிதான் ஆணின் ஸ்பரிசம் அறியாத கன்னிமை சிதறாதவள் என்பதைப்போன்று இப்போது நடந்து கொள்ளவேண்டும். தனது போலி வெட்கம் மற்றும் அச்சங்களை அவன் நம்பிவிட்டானா என்பதையும் அவனை கவனித்தபடியே நடிக்கிறாள். ஆச்சரியமூட்டும் வகையில் எழுதப்பட்டிருக்கும் பகுதிகள் இவை. <br />
<br />
தன் குடும்பத்துக்கு தெரிந்த ஒருவரை பார்ப்பதற்காக வர, அவர் இறந்து போக வேறு வழி இல்லாமல் இங்கே வந்து விட்டதாகவும் அச்சமுறுவதாகவும் சொல்கிறாள். அவளது அச்சம் அவனுக்கு போதையூட்டுகிறது. இதுதான் திருமதி கோல் எதிர்பார்த்தது. தொடும்போதே நாணமும் பயமும் கொள்ளும் அவளை நோபர்ட் முதல் முறையாக சுகிக்கும் நேர்த்தியை நடித்து முடிக்கிறாள். எதிர்பாராமையின் அச்சத்தில் துவங்கி பிறகு அவனது ஆண்மையின் கரங்களால் தான் கரைந்து வழிவிடுவது போல உடலியக்கங்கள் செயற்படுவதை எழுதுகிறாள். அவன் களைத்து உறங்கும்போது மெதுவாக கட்டிலின் தலைப்பக்கமாக இருக்கும் ரகசிய இழுப்பரை ஒன்றிலிருக்கும் சிவப்பு நிற திரவம் தோய்ந்த பஞ்சை எடுத்துக்கொள்கிறாள். அவன் விழிக்கும்போது தான் மிகவும் அவதிப்படுவதாக சொல்கிறாள். அவன் ரத்தம் தோய்ந்த அவளது தொடைகளைக் கண்டு திருப்தியும் மகிழ்ச்சியும் கொள்கிறான். அவளை தனது இதயத்தில் முழுதாக நிரப்பிக்கொள்கிறான். தொடர்ந்த வாடிக்கையாளனாக அவனுடன் காலம் கழிகிறது.<br />
<br />
இதற்கு இடையே ஒரு நாள் லேசாக தொந்தி பெருத்த ஒருவனுடன் உறவு கொள்ள நேர்கிறது. அவனையும் ஒரு ஆணாக கண்டு ரசிக்கிறாள். ஆனால் அவனது காமத்தின் தேர்வு வேறு விதமாக இருக்கிறது. அவன் தன்னை நிர்வாணமாக்கி கைகளை கட்டி குப்புற படுக்க வைத்து மிலாறுகளான குச்சியால் புட்டத்தில் தன்னை அடித்து துன்புறுத்துமாறு வேண்டுகிறான். மாசோகிஸ்ட் வகையான உறவை அவள் புதிதாக காண்கிறாள். அவனது சதைகள் துடிக்க அவனை அடிக்கிறாள். பிறகு அவன் அவளிடம் தானும் அப்படி அடிப்பதாகவும், ஆனால் அவள் போதும் என சொல்லும்போது நிறுத்தி விடுவதாகவும் சலுகையாக சொல்கிறான். ஆனால் அவள் வலியை பொறுத்துக்கொண்டு மேலும் மேலும் அடியுற விரும்புவதை அவன் ஆச்சரியமாக காண்கிறான். (மாசோ எழுதிய காதல் தேவதை நாவல் நினைவுக்கு வந்தது ). பிறகு அடிபட்ட வீக்கத்தோடு உட்காரமுடியாத வலிகளோடு பிணைகிறார்கள். கணப்புக்கு அருகில் இருந்தபடி முற்றிலும் வழக்கத்துக்கு மாறான முறையில்/ ‘நிலை’யில் அவளோடு உறவு கொள்கிறான். இது அவள் முற்றிலும் அறியாத ஒன்று.<br />
<br />
பிறகு ஒரு முறை தங்கும் அறையில் இருந்து இரு ஆண்கள் உறவு கொள்வதை பார்க்க நேரிட்டு அடிபட்ட உணர்வில் மயங்கி விழுகிறாள். இதனிடையே எமிலியும் இவளும் தத்தம் ஆண்களுடன் ஒரு நீச்சல் குளத்தில் உடைகளற்று இறங்கி களிப்புறுவதையும், எமிலி ஜோடி நடந்து கொள்ளும் முறை கண்டு சீண்டி இவர்கள் கிளர்ச்சி கொள்வதும் சொல்லப்படுகிறது. <br />
<br />
தவிர நாவலின் போக்கில் ஒரு சமயத்தில் ஃபானி உடன் சேர்ந்து கொண்டு எமிலியின் காமச் சீண்டல் குறித்த சம்பவம் ஒன்று நிகழ்கிறது. வீதியில் வழக்கமாக பூங்கொத்து விற்கும் பையன் ஒருவன் - (சற்றே மன நலம் பிறழ்ந்தவன் போல காணப்படுகிறான்) நேர்த்தியற்ற உடையும் முடியுமாக இருப்பவனை சீண்ட நினைத்து (அவனுக்கு ‘ டிக்’ என்று குறும்பான செல்லப் பெயர் வைக்கிறார்கள் ) அவன் வீட்டிற்கு வந்து பூங்கொத்து விற்க வரும்போது பாலியல் ரீதியாக அவனை சீண்டி உடைகளை களைந்து விளையாட்டாக சீண்டுகிறார்கள். எமிலி அவனை சபலமுற வைக்கிறாள். அப்போது அவனிடம் தெரியும் உடலியல் மாற்றத்தை இவர்கள் கவனிக்கும் சமயம், அவன் எமிலியோடு மிருகத்தின் தீவிரமாக உறவு கொள்கிறான். சற்றும் எதிர்பார்க்காத அவனது காமத்தை எமிலி ஒரு நிலையில் உடன்பட்டு சுகிக்கத் துவங்கி விடுகிறாள். மன நலம் இல்லாதவனும் காமத்தூண்டல் பெறும்போது மனதை விலக்கிய வெறும் உடல் சீண்டப்பட்டு விடுகிறது. காமம் என்பது உடலா மனமா எனும்படியான குழப்பத்தை தெறிக்கும் இடமாக இது இருக்கிறது.<br />
<br />
நோபர்ட்டும் விலகிப் போன பின்பு வயதான ஒருவனை கண்டு அவனோடு இணைகிறாள். அவர் இவளுக்கு தனது சொத்துக்களை உயில் எழுதி வைக்கிறார். எட்டு மாதத்தில் தீவிர குளிர் நோயால் இறந்துவிட, சொத்துக்களுடன் இவள் தனது ஊரை நோக்கி ஒரு உதவியாள் பெண்மணியுடன் திரும்புகிறாள். ஓரிடத்தில் தங்க நேரும்போது குதிரையில் இரண்டு பேர் அந்த விடுதிக்கு வந்து இறங்குகினார்கள். ஆச்சரிய படும் படியாக அது சார்ல்ஸ். நாவலின் முடிவை நோக்கி செல்லும் நாடகத்தன்மை கொண்டுவிடும் பகுதிகள் இவை. ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டுவிடுகிறார்கள். விடுதியின் பெண்மணி அவர்களை தம்பதிகளாக நினைத்து ஒரே அறையை தருகிறாள். ஐந்தாண்டுகள் கழித்து எதிர்பாராத விதமாக தனது காதலன் தோன்றி அதுவும் தனியறையில் இருக்கையில் ஒருவரை ஒருவர் உடல் வழியாக உணர்ந்து கொள்கிறார்கள். <br />
<br />
இதுவரை அவளது உடல் உணர்ந்த காமத்திற்கும் இப்போது காதலனிடம் உணரும் காமத்திற்கும் இருக்கும் வித்யாசத்தை அவள் உணருகிறாள். சொல்கிறாள். அதை கிளர்ந்த மனதோடு அனுபவிக்கிறாள். தன்னை தனது கடந்த காலத்தோடும், அதன் அடையாளங்களாகிப்போன குழந்தைகளுடனும் ஏற்றுக்கொண்ட சார்ல்சுடன் அவர்கள் பயணம் தொடருகிறது. ஊரை நோக்கி.<br />
<br />
* * *<br />
<br />
ஃபானி உட்பட பெண்கள் எவரும் காமத்தை சுவைக்க தயங்குவதே இல்லை. விளையாட்டாக அதனுடன் பரிச்சயப்பட்டு பிறகு அது தம் மேல் விளையாடுவதை அனுமதித்து பரவசம் கொள்கிறார்கள். உதைபட்டாலும் அதற்காகவே பிறந்ததை போல துள்ளும் கால்பந்தைப் போன்ற காமத்தின் அலைக்கழிப்பில் தங்களை ஒப்புவித்துக் கொண்டுவிடுகிறார்கள். கற்பு அச்சம் என்று ஒடுங்கி பெண்கள் இருந்த காலகட்டத்தில் இப்படி ஒரு நாவல் எத்தகைய கலகத்தை உண்டு பண்ணி இருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது.<br />
<br />
கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலில் உபன்யாஸர் இந்திரன் பற்றி சொல்லும் கதை இருக்கும். அதில் அனைவருமே காமத்தின் வாசனை பற்றி தவிப்பதும் பெண்களில் காம நுகர்ச்சியும் நாவலின் ஒரு பகுதியாக பூடகமாக சொல்லப்பட்டிருக்கும். ஆனால் இங்கே ஃபானி நாவலில் முழுக்க உடலியல் சார்ந்த காமம் ததும்புகிறது. அவற்றை அவள் கலவியின் பிசுக்குகளோடு எழுதுகிறாள். காமம் என்பது அர்த்தம் என்றால், உடல் என்பது சொல்லாகிறது. அதுசார்ந்த மயக்கமும் முயக்கமும் மொழியாகிறது. அந்த மொழியின் மொழிதான் இந்த நாவல் முழுதும்.<br />
<br />
ஒரு தங்கும் விடுதியில், சார்ல்ஸ் எதிர்பாராமல் திரும்ப கிடைக்கும் இரவன்று அவனோடு உறவு கொள்ளும் ஃபானி மிகுந்த மன நிறைவு கொண்டவளாக இருக்கிறாள். ஒரு முதலிரவாகவே மயங்குகிறாள். ஏனென்றால் அவள் கண்டடைவது ஒரு ஆணை அல்ல. வயதானவரின் விதைவை மனைவியாக தனது பத்தொன்பது வயதில் எல்லாம் முடிந்து போயிற்று என்று நினைக்கும்போது, ஆச்சரியமாக கிடைத்த நம்பகரமான புது வாழ்க்கையை.<br />
<br />
தனது இன்னல்கள் அனைத்தையும் கேட்டுக்கொண்டு இது நாள்வரை பிறர் மூல நேர்ந்த குழந்தைகளையும் ஏற்று அதற்கும் தந்தையாக இருக்க சம்மதிக்கும் சார்ல்ஸ், அவளது புது வாழ்வு. எந்த கன்னிமை கொண்டவளும் முதலிரவு படுக்கையில் தரமுடியாத நாணத்தை குற்றமற்ற அவனது அப்பாவித்தனத்துக்கு முன் கொண்டேன். அவனுக்கு நான் தகுதியற்றவள் என்ற எண்ணமே எப்போதைக்கும் வராத அளவுக்கு அவனை நான் காதலிக்கிறேன் என்கிறாள் ஃபானி.<br />
<br />
காமத்தை எதேச்சையான சிறு பொறியாக பார்த்து அதனை தகிக்கும் தீக்கொழுந்தாக்கி அதையும் அதன் வியாபகத்தில் பார்த்து விடுகிறாள். தண்மையான நெருப்புக்குள் சுகமாக எரிகிறாள். எரிக்கிறாள். <br />
இது ஒரு புறம் இருக்க காமம் என்பதை சரியானவரிடம் இனம் கண்டு சரியாக பிரயோகித்து அதற்கு தகுதியான ஆளிடம் தந்து தொழில் முறையில் பணமாக்கும் முதிய விடுதிப் பெண்களின் சாகசமும் நேர்த்தியும் ஆச்சரியமூட்டுவன. பழம் வாங்க கடைக்கு செல்லும் ஃபானி யை உடன் தொடரும் ஒருவன் அவளை விடுதியில் வந்து பார்க்கும்போது விடுதியின் உரிமையாளர் திருமதி கோல் அவனை நடத்தும் விதம், அவனுக்கு மறுப்பை சொல்லி அதே சமயம் ஒரு சபலத்தை ஏற்படுத்தும் நைச்சியம், விரைவில் அவனுக்கு விழுந்து விடாதே - அவன் நல்லவனா என்று விசாரிக்க வேண்டும் என்று இவளிடம் சொல்லி - அவர்களது தொழில் நேர்த்தி இப்படி பல இடங்களில் சொல்லப்படுகிறது.<br />
<br />
ஃபானி அழகானவள். வசீகரமானவள். அவளுடைய கிராமத்து உடற்கட்டு ஒரு பெரும் சொத்து. அவளுக்கு வாடிக்கையாளர்கள் பணத்தை ஏகமாக தரும் போதும் திருமதி கோல் அன்போடு அதை அவளுக்கே தருகிறாள். இது உனக்கானது என்கிறாள். உறிஞ்சிப் பிழைக்கும் தன்மை இதில் எங்கேயும் இல்லை. ஆரம்பத்தில் வரும் ஒரு விடுதி பெண்மணி சற்று கறாராக இருக்கிறாள். ஆனால் வஞ்சங்கள் இல்லை.<br />
<br />
குப்ரிக்கின் பலிபீடத்தில் பாலியல் தொழிலாளிகளின் கஷ்டம் சொல்லப்பட்டிருக்கும். ஜி நாகராஜன் அவர்களது வலிகளை அந்த சமூகத்தின் சூழலை படம் பிடித்திருப்பார். பாலியல் பெண்ணோடு குடும்பம் நடத்த விரும்பும் கந்தன் மனநிலை இங்கே பெண் ஃபானி க்கு இருக்கிறது ஓரளவு. ஆனால் கனிவில் அல்லது விருப்பத்தில் அது நிகழ்வதாக இல்லை. விளையாட்டாகவே நடக்கிறது. அல்லது அடிமையிடம் நடந்து கொள்ளும் குரூரம் இருக்கிறது. விடியற்காலையில் அசதியாக உறக்கத்தில் இருக்கும் போது, அவன் உள்ளே நுழைந்த சப்தம் கேட்டு முழுதாக விழிப்பதற்குள், அவளது உடைகள் மேல்நோக்கி விலக்கப்படுகின்றன. களையப்படுவது கூட இல்லை.<br />
<br />
'மங்கலத்து தேவதை'யில் வறிய நிலை நிலவும் குடும்ப சூழலில் தொடர்ந்து அங்கே பாலியல் உறவுகள் நடந்து கொண்டே இருக்கும். நளினி ஜமீலாவில் அவள் தான் விரும்பியே தனது நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களோடு இருப்பாள். அங்கே அவளுக்கு குடும்ப சூழல்தான் இந்த தொழிலுக்கு வந்ததற்கு காரணமாக இருக்கும் அவளுக்கு சுய பச்சாதாபமோ இரக்கம் ஏங்கி நிற்கும் மனமோ இல்லை. குறைந்த உழைப்பில் நிறைய வருமானம் என்கின்ற மனநிலையே அவளுக்கு இருக்கும் (நமது இலக்கிய உலகம் அதை சோக ரசமாக அல்லது அநியாயத்தில் பிடிபட்டு தவிக்கும் பெண்ணாக அறிமுகப் படுத்த முனைந்ததாக நினைவு ). ஆனால் மிகவும் தட்டையான மொழியில் எழுதப்பட்டது சுய சரிதப் புதினம் அது. ஒரு இரவுக்குப் பிறகு வாடிக்கையாளரை அனுப்பிவிட்டு சற்றே தனிமையில் இருந்துவிட்டு வெளியே வந்து குளிரில் படுத்துக்க கிடைக்கும் சாலையோர சிறுவர்களுக்கு டீ வாங்கி தரும் பிரபஞ்சமினி சிறுகதை - வாடிக்கையாளராக செல்லும் ஒருவன் அவள் முன்னாள் துணை நடிகை என்பதை அடையாளம் கண்டு நெகிழும் ஜெயமோகனின் சிறுகதை - பாலியல் தொழிலாளியான அவள் வாடிக்கையாளரின் நோயுற்ற உடலும் சகிக்க முடியாத ஆணுறுப்பு பிரதேசமும் கண்டு அவனை தள்ளி விட தலை மோதி அவன் இறந்து போகும் சம்பவத்தை வைத்து ஷங்கர் ராம சுப்பிரமணியன் எழுதிய கட்டுரையும் - இந்த பாலியல் பிரதேசத்து சில படைப்புகள். ஆனாலும் எனக்குத் தெரிந்தவரை நாவல் என்ற வகையில் விரிவு கொண்ட தமிழ் நாவல்களில் காணக்கிடைக்காத ஒரு பிரதேசம் ஃபானி ஹில் நாவலில் இருப்பதாக கருதுகிறேன்.<br />
<br />
ஒரு வகையில் வசதியான பிரமுகர்களுக்கான அந்தரங்க நாயகியாக இருந்த தஞ்சை கும்பகோணம் பிரதேசத்து தேவதாசிகளைப் போன்ற அடுக்கில் உள்ள பெண் இவள். இசை மற்றும் நாட்டியம் என்பதை கடவுளுக்கு காணிக்கை என்று உண்டாகிய சமூகம் மெல்ல மெல்ல சிதைந்து வைப்பாட்டிகளாக கீழிறங்கி விட்டாலும் அவர்கள் வேசைகள் அல்லர். மோகமுள் யமுனாக்கள் உண்டு. ஒரு வகையில் ஜப்பானிய பிற்காலத்து கெயிஷாக்கள் கூட கலையின் மூலம் பாலியலுக்கு தொடர்ப்பூட்டுபவர்கள். ஆனால் இந்த நாவலில் பாலியலுக்கு விழைவுக்கு நேரடியாக குதிப்பவர்கள்தான். அதில் தள்ளப்பட்டாலும் அங்கே நீந்தி விளையாடுவதை கேளிக்கை தொழிலாக கொண்டுவிட்டவர்கள். சற்றேனும் அன்புக்காக எதிர்பார்க்கும் அவர்கள் கருணைக்காக கையேந்தி நிற்பதே இல்லை. அதே சமயத்தில் அவர்கள் வசதியான காமுகர்களை எளிதாக பிச்சைக்காரர்களாக்கி விடுகின்றனர். இதில் ஈடுபடுவதில் பாதி நிர்பந்தமும் பாதி விருப்பமும் இணைந்தே உள்ளது என்று எழுதுகிறார்.<br />
<br />
* * *<br />
<br />
<br />
<br />
சில மொழிப்பயன்பாடுகள் எளிமையாகவும் பொருத்தமாகவும் அமைந்திருக்கின்றன. ஒன்றிரண்டைச் சொல்லவேண்டுமென்றால் -<br />
<br />
"எனது நரம்புகளிலெல்லாம் திரவ நெருப்பை ஓடச்செய்து விட, மூச்சுத் திணறும் அளவுக்கு உணர்ச்சி, வேகம் கொண்டு விட்டது"<br />
<br />
"பேரின்பத்தின் பெரும்துயரில் செத்துவிட்டது போல இருந்தாள்"<br />
<br />
"இரண்டாம் முறையின் போது தாங்கமுடியாத அளவுக்கு பித்தேறியிருந்த நான் அவளை இறுக்கத்தழுவி கவ்விக் பற்றிக்கொண்டுவிட்டேன், என்னை ஆசுவாசப்படுத்தி மீட்டெடுக்கும் விசை அவளிடம்தா'ன் இருப்பதைப் போல"<br />
<br />
'ஆனால் அவன் மறுமுறையும் நோகும்படி இயங்கியபோது, ஒரு முனகல் கூட இல்லாமல் தீவிரமான வலியைப் பொறுத்துக்கொண்டேன், தீவிரமான காதலால் "<br />
<br />
'அவனை கொடியின் நுனிச்சுருள் போல வளைத்துப் பற்றியிருந்தேன்"<br />
<br />
'அபரிமிதமான வலியினூடே அபரிமிதமான சந்தோஷத்தை அடைந்திருந்தேன்'<br />
<br />
'நமது நல்லொழுக்கங்களை தீயொழுக்கங்களும் பெருமளவு நமது சூழ்நிலையை பொறுத்து அமைந்துவிடுகின்றன'<br />
<br />
<br />
சில ஆங்கிலப் பிரயோகங்கள் அந்த மொழிக்கே உரித்தான அழகுகளைக் கொண்டிருக்கின்றன-.<br />
<br />
<i>- riot of Joys</i>, <i>itching fires</i>, என்கிறார் ஒரு இடத்தில். <br />
- உணர்ச்சி மேலிட கண்ணீர் துளி உகுப்பதை, <i>bedewing my hands with his tears</i>. <br />
- ஸ்பரிசத்தில் வேதனையை, <i>incendiary touch</i>. <br />
- தன் உடலை தனது விரல்வழி அறிகையில், <i>I deflower myself</i>, என எழுதுகிறார்.<br />
<i>- that instance, there is no dress like an undress</i>, என்று ஒரு வரி. இதை மொழிபெயர்க்கும்போது அதன் அர்த்தம் நமக்கு புரியும். ஆனால் அதில் உள்ள அந்தரங்க ஓசைநயம் விடுபட்டு போய்விடும். இப்படியான பல மெய்ப்பாடுகளின் மொழி வெளிப்பாடுகள் இதில் உண்டு.<br />
<br />
இந்த நாவலில் ஆங்கில மொழி ஒரு இனிய சலுகையாக அல்லது சமாதானமாக தோன்றுகிறது. ஏனென்றால் பகிர்ந்து கொள்ள சற்று அதி அந்தரங்கமான அல்லது லஜ்ஜைக்குரிய பிரயோகங்களை அந்நியப்பொது மொழியில் சொல்லிவிடும்போது அது சௌகரியமாக அமைந்துவிடுகிறது. மேலும் இதில் சில பிரயோகங்கள் அதன் தமிழ்ப்படுத்தலை மீறிய அல்லது அடங்காத வெளியில் உலவுகின்றன. அவற்றை தமிழ்படுத்தும்போது சற்று கொச்சை கலந்துவிட வாய்ப்புண்டு. உதாரணமாக <i>balsemic injection</i>, <i>intromission</i>. <i>Inamorata</i>, <i>inamorato </i>போன்றவை மொழி மாற்றத்துக்கு உட்பட முரண்டு பிடிக்கும் எழுத்துக்கள். அவற்றுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் இருக்கலாம். அதற்காகவேயான சொற்கள் உண்டா என்று தெரியவில்லை. இப்படியானவற்றால் இந்த நாவல் முழுவதையும் அதன் அர்த்தங்கள் தெரிந்துகொண்டபோதும் முகச்சுளிப்பின்றி படித்து கடந்துவிட முடிகிறது. <br />
<br />
ஒருவகையில், அலுப்பூட்டாமலும் அல்லது தயக்கம் இருந்தாலும் இந்த நாவலை வாசிக்கும்படி ஆக்குவது ‘அப்பட்ட’த்தை தவிர்த்த இந்தவித வசீகர மொழியாடலே.<br />
<br />
<br />
<b><i>Fanny Hill: Memoirs of a Woman of Pleasure,
John Cleland (1709 - 1789) </i></b><br />
<i>இணையத்தில் வாசிக்க-</i><b><i> <a href="https://www.gutenberg.org/files/25305/25305-h/25305-h.htm">Gutenberg</a>, <a href="https://librivox.org/fanny-hill-memoirs-of-a-woman-of-pleasure-by-john-cleland/">LibriVox</a></i></b><br />
<br />
Image Credit : <a href="http://www.loyalbooks.com/book/fanny-hill-memoirs-of-a-woman-of-pleasure-by-john-cleland">Books Should be Free</a> </div>
நட்பாஸ்http://www.blogger.com/profile/11647556064101907512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-59609925208987582482019-03-17T18:52:00.000+05:302019-03-19T06:39:29.314+05:30அபிதா - லா.ச.ரா.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">என்ன</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">எழுதுவது</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">என்று</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">தெரியவில்லை...</span><o:p></o:p></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">ஆம்னிபஸ்சில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">லாசரா.</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">எழுதிய</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "arial unicode ms" , sans-serif;">‘</span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">அபிதா’</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">நாவலுக்கு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">இதற்கு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">முன்னமே</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">ஒரு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">விமர்சனப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">பதிவு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">வந்திருக்கிறது</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">நம்ம</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">நட்டு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">ஏற்கனவே</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">எழுதியது</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">விமர்சனம்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">என்ற</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">வகையில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">நிச்சயம்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">வராது</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">புத்தகத்தைப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">படித்தவுடன்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">தனக்குத்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">தோன்றிய</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">நாற்பது</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">வார்த்தைகளையும்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">புத்தகத்தில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">இருந்து</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">சில</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">மேற்கோள்களையும்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">காட்டி</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">ஒரு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">வியப்புடன்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">அந்த</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">பதிவை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">முடித்திருந்தார்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">நட்டு</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">லாசரா</span>'<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">வின்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">விவரணைகளுக்கு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">நம்மால்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">விமர்சனமெல்லாம்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">எளிதில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">எழுத</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">ஏலாது</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">என்று</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">சிலிகான்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">ஷெல்ப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">அண்ணன்கூட</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">சொல்கிறார்</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">நானும்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">ஒன்றும்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">விதிவிலக்கல்ல</span>.<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">இந்த</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">பதிவின்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">ஆரம்பத்தில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">நான்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">எழுதித்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">தொடங்கிய</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">அந்த</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">மூன்று</span>-<span lang="TA" style="font-family: "arial unicode ms" , sans-serif;"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">நான்கு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">வார்த்தைகள்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">கூட</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">நட்டு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">அந்த</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">விமர்சனப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">பதிவிற்குக்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">கொடுத்த</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">தொடக்க</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">வார்த்தைகளான</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">அதே</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">மூன்று</span>-<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">நான்கு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">வார்த்தைகள்தான்</span>.<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;"></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;"><br /></span></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioMZMvO-7daUsr4P3HiAtXalx-NWRZ61aLK7lxoVyly8L4ZMXA2izst28PdB4XLuzvbxL-cQ6FPJyb3mB7qqBI62TXfcPL2n0075TIYm4UIFzwP6uaIM6jSJAgp4trA1KECtCJKD5XqNU/s1600/abhitha.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="400" data-original-width="274" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioMZMvO-7daUsr4P3HiAtXalx-NWRZ61aLK7lxoVyly8L4ZMXA2izst28PdB4XLuzvbxL-cQ6FPJyb3mB7qqBI62TXfcPL2n0075TIYm4UIFzwP6uaIM6jSJAgp4trA1KECtCJKD5XqNU/s320/abhitha.jpg" width="219" /></a></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">சரி</span>, <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">விஷயத்திற்கு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif;">வருவோம்</span>.</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">எனக்கு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அம்மாவின்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வழியில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஒரு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கொள்ளுத்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தாத்தா</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இருந்தார்</span> - <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">சென்ற</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நூற்றாண்டின்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இருபதுகளில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அல்லது</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அதற்கு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">சற்றே</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">முந்தைய</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">காலகட்டத்தில்</span>.
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அவர்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பெண்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பார்க்கப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">போய்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இருக்கிறார்</span>.
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பார்த்த</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இடத்தில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இவருக்குப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பெண்ணை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பிடிக்கவில்லை,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அல்லது</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பெண்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வீட்டாருக்கு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இவரைப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பிடிக்கவில்லை</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அந்த</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இடம்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தட்டிப் </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">போய்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">விட்டது</span>.<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="mso-spacerun: yes;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அதன்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பின்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வேறொரு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பெண்ணைப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பார்த்தார்</span>,
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">மணந்தார்</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">சில</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வருடங்களுக்குப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பிறகு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இவர்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">மணந்த</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அந்தப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பெண்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நோய்வாய்ப்பட்டு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">மறைந்துவிட்டார்</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அந்த</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">மனைவியின்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">மூலமாக</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">குழந்தைகள்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஏதுமில்லை</span>.<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இப்போது</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இரண்டாவது</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">திருமணத்திற்கு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வீட்டில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பார்த்தார்கள்</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஒரு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பெண்ணைப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பார்க்கப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">போகிறார்</span>.
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பார்க்கப்போன</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இடத்தில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தன்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">முதல்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கல்யாணத்திற்கு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">முன்னதாகத்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தான்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பார்க்கப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">போய்</span>, <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தட்டிப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">போன</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இடத்தின்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அதே</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பெண்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நின்று</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கொண்டிருக்கிறார்</span>.
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இப்போது</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">மணப்பெண்ணாக</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அல்ல</span>; <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">மணப்பெண்ணின்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தாயாக</span>. <o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அந்தப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பெண்ணை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இப்போது</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இரண்டாம்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">மணம்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">புரிகிறார்</span>.
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அதாவது</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தான்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">முதன்முதலில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பார்த்த</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பெண்ணின்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">மகளை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இப்போது</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இரண்டாவதாக</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">மணமுடிக்கிறார்</span>.<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கேட்பதற்கு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">எந்த</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">விதத்திலும்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">உவப்பாக</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இல்லாத</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஒரு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கதை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இது</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இல்லையில்லை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கதை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இல்லை</span>; <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நிஜம்தான்</span>.
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்றாலும்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கேட்பதற்கு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அத்தனை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">உவப்பாக</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இல்லை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பாருங்கள்</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தர்க்கரீதியாக</span>, <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நியாய</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ரீதியாக</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அல்லது</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தர்ம</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ரீதியாக</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஏதும்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கேள்விகள்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இருந்தால்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இங்கே</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">விடை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">சொல்ல</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">சொல்ல</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">முகம்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இருக்குமா</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்று</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தெரியவில்லை</span>.
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஆனாலும்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நிஜக்கதை</span>. <o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இந்தக்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கதைக்கும்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அபிதாவுக்கும்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்ன</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தொடர்பு</span><span lang="TA" style="font-family: "arial unicode ms" , sans-serif; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">?</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இருக்கிறது</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்றால்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இருக்கிறது</span><span lang="TA" style="font-family: "arial unicode ms" , sans-serif; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இல்லை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்றால்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இல்லை</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அபிதாவை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வாசித்துவிட்டுத்தான்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">சொல்லுங்களேன்</span>.
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">முன்னமே</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வாசித்தவர்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்றாலும்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">சொல்லுங்கள்</span>.<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அபிதாவில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">லாசரா.</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">சொல்லும்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கதை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ரொம்பச்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">சின்னது</span>.
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">உண்மையாகப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பார்த்தால்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இந்தக்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கதையை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஒரு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">சிறுகதையாக</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கூட</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அவர்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">எழுதி</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இருக்க</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">முடியும்</span>.
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஆனால்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">சிறுகதையாக</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இதை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">எழுதி</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இருந்தால்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அபிதாவிற்கு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்று</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தமிழ்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நாவல்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">உலகில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஒரு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இடம்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கிடைத்து</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இருக்குமா</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்று</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தெரியவில்லை</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஏனெனின்</span>, <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அபிதாவின்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">விஷய</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கனம்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கதையில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இல்லை</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">லாசரா</span>'<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வின்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">விவரணையில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தான்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இருக்கிறது</span>. <o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கதை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">முழுக்கவே</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கதையின்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நாயகன்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பேசிக்கொண்டே</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நம்முடன்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இருக்கிறார்</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நம்முடன்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்றா</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">சொன்னேன்</span>? <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இல்லை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இல்லை</span>...
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தன்னுடன்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பேசிக்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கொண்டே</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இருக்கிறார்</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அந்தப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பேச்சின்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">விஷயங்கள்தான்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஒட்டுமொத்த</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அபிதாவுமே</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கதையின்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நாயகன்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தனக்குத்தானே</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பேசிக்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கொள்ளும்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">விஷயத்தில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஓராயிரம்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">விஷயங்கள்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">உள்ளன</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நான்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">படித்து</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">விழி</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">விரித்துப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">புருவங்கள்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">உயர்த்தி</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வியந்தவைகள்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பத்து</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அல்லது</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பதினைந்து</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">விஷயங்கள்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இருக்கக்கூடும்</span>.<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இந்தக்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கதைக்கு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">விமர்சனம்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">எழுதும்போது</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இந்தக்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கதைக்கான</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இணைப்பைத்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தந்து</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஒரு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">மணி</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நேரத்தில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">படித்து</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">விட</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">முடியும்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்று</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">எழுதியிருந்தார்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நட்டு</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நிச்சயம்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஒரு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">மணி</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நேரத்தில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">படித்துவிடக்கூடிய</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அளவுதான்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அபிதா</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நாவல்</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஆனால்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கதையின்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நாயகன்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பேசும்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பேச்சும்</span>,
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">விவரணைகளும்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பல</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">முறைகள்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">படித்து</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">உள்வாங்கிக்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கொள்ளத்தக்கது</span>.<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கமல்ஹாசனின்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நகைச்சுவைத்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">திரைப்படங்களைப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">போல</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">லாசரா</span>'<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வின்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஒரே</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">படைப்பைப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பலப்பல</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">முறைகள்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">படித்துக்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கொண்டே</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இருக்கலாம்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">போல</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஒவ்வொரு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வாசிப்பிலும்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஒவ்வொரு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பிம்பம்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">உங்களுக்கு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வெளிப்படலாம்</span>;
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஒவ்வொரு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">விஷயம்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">உங்களுக்கு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">விளங்கலாம்</span>.<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கதிரில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">லாசரா</span> '<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">சிந்தாநதி</span>'
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்ற</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அனுபவத்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தொடரை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">எழுதினார்</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">உங்களுக்கு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வாரம்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ரெண்டு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பக்கம்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஒதுக்கறேன்</span>, <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஏதாவது</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">எழுதுங்க,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்று</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஆசிரியர்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கேட்டுக்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கொள்கிறார்</span>.
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஆசிரியர்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அறைக்கு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நுழையும்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">முன்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தினமணி</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கதிரில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">லாசரா.</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">எழுதிய</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">சிறுகதைக்கு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வந்த</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கடிதங்களை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஊழியர்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஒருவர்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">லாசரா.</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கைகளில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தருகிறார்</span>.<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
"<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">லாசரா</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்னத்தை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">எழுதுகிறார்</span>? <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஒண்ணும்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">புரியலை</span>.
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தலையைப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பிய்த்துக்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கொள்ளலாம்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">போலத்தான்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இருக்கிறது</span>",
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்கிறது</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அவற்றுள்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஒரு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கடிதம்</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அடுத்த</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நிமிடம்,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">உங்களுக்கு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அடுத்த</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வாரத்தில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இருந்து</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இரண்டு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பக்கங்கள்,</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்கிறார்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஆசிரியர்</span>.<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">லாசராவின்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தயக்கத்திற்கு</span>
- "<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தலையைப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பிய்த்துக்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கொள்வோர்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பிய்த்துக்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கொள்ளட்டும்</span>.
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">புரிவோர்க்குப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">புரியட்டும்</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">புரியவில்லை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்றால்தான்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்ன</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கெட்டுப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">போச்சு</span>.
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இரண்டு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பக்கங்கள்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தானே</span>",
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்கிறார்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஆசிரியர்</span>.<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">‘சிந்தாநதி’</span><span lang="TA"> <span style="font-family: "nirmala ui" , sans-serif;">தொகுப்பாக</span></span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வெளிவந்த</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">போது</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அதன்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">முன்னுரையில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இப்படி</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">எழுதுகிறார்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">லாசரா</span> - " <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">புரிந்தது</span>, <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">புரியாதது</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்ற</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இரண்டு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நிலைகளும்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தற்காலிகமானவை</span>.
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஒருவருக்கு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஒருவகைப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">புரிதல்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இருக்கலாம்</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">மற்றவருக்கு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வேறொன்று</span>.
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அதே</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">மனிதருக்கே</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வேறொரு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">சந்தர்ப்பத்தில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அதே</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">விஷயம்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வேறொன்றாகப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">புரியலாம்</span>."<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">உங்களுக்கு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இது</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">புரியவில்லையா</span>? – “<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">விட்டுத்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தள்ளுங்கள்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நட்டமில்லை</span>” <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்பதுதான்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அது</span>.<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கதையைப்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பாதி</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வாசித்துக்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கொண்டிருந்த</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">போது</span>, <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இதை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இன்னமும்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">யாரும்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">சினிமாவாக</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">எடுக்க</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஏன்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">முயலவில்லை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்று</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">யோசித்துக்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கொண்டேன்</span>.
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஒருவேளை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">எடுத்து</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நமக்குத்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தெரியாமற்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">போனதோ</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்னவோ</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்றும்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">எண்ணம்</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">முழுக்க</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வாசித்தபின்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தோன்றியது</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்னவென்றால்</span>,
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இதையெல்லாம்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">சத்தியமாக</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">எந்தக்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கொம்பனாலும்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">படமாக்க</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">முடியாது</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்பதுதான்</span>.<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ருத்ரன்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அபிதாவை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நாடகமாக்க</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">முயன்று</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">படுதோல்வி</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கண்டதாகத்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தெரிகிறது</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நாடகம்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">எல்லா</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">விதத்திலும்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தோல்வி</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்று</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தன்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">பதிவில்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">குறிப்பிடுகிறார்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ருத்ரன்</span>. <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஆச்சர்யம்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஏதுமில்லை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">எனக்கு</span>.<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அப்புறம்</span>... <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">எழுதினால்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">எழுதிக்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கொண்டே</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இருக்கலாம்</span>.
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">அபிதா</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வாசிக்காதவர்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">நீங்கள்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்றால்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">முதல்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வேலையாக</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">புத்தகத்தை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வாங்கி</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வாசியுங்கள்</span>.
<span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">முன்னமே</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வாசித்தவர்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">என்றால்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">ஃபேஸ்புக்</span>, <span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வாட்சாப்புகளை</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">கொஞ்சம்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">எறிந்து</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">தொலைத்துவிட்டு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">இன்னொரு</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">முறைதான்</span><span lang="TA"> </span><span lang="TA" style="font-family: "nirmala ui" , sans-serif; mso-bidi-language: TA;">வாசியுங்களேன்</span>.<o:p></o:p></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Giri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-26441968215888434012019-02-20T08:28:00.001+05:302019-02-20T08:28:57.187+05:30நானும் சினிமாவும்– ஏ.வி.எம். சரவணன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<b>-செமிகோலன்-</b></div>
<br />
அந்த பெரிய தயாரிப்பு நிறுவனம் எடுத்த படத்திற்கு முதலில் மக்களிடையே சொல்லிக் கொள்ளுமளவு வரவேற்பு கிடைக்கவில்லை. சுமாராக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அதை மதுரையில் வெளியிட்ட திரையரங்க உரிமையாளர் படத்தின் இரண்டாம் பகுதியை முதலிலும், ஆரம்பத்தை இடைவேளைக்கு பிறகும் வருமாறு ரீல்களை மாற்ற படம் அதிகமாக மக்களைக் கவர்ந்தது. தமிழ் திரையுலகின் முதல்/ ஒரே பின்-முன் நவீனத்துவ படைப்பாக இருக்கக்கூடிய அந்தத் திரைப்படம் 'மெல்லத் திறந்தது கதவு'.<br />
<br />
அதனுடன் தொடர்புடைய மற்றொரு செய்தி, எம்.எஸ்.விக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் படம் தயாரிக்க வேண்டுமென்றும், அதற்கு எம்.எஸ்.வியையே இசையமைக்கச் சொல்லலாமென்றும் அந்த நிறுவனத்தை அணுகினார் இளையராஜா என்பது. தன் முன்னோடிக்கு உதவ வேண்டும், அதே நேரம் அவருடைய சுயமரியாதைக்குச் சிறிதும் பங்கம் வரக்கூடாது என்பதிலும் ராஜா கவனமாக இருந்துள்ளார். <br />
<br />
இந்த இரண்டு செய்திகளும் தன் திரையுலக அனுபவங்கள் பற்றி ஏ.வி.எம். சரவணன் தினத்தந்தியில் தொடராக எழுதி, புத்தகமாக வெளிவந்திருக்கும் 'நானும் சினிமாவும்' நூலில் கிடைக்கிறது. <br />
<br />
<div style="text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmZJoZmwYWeVU-ZSCZqK6y87LpNpTOC3kMgYGdxdQWJF8gSv80kHViGajYkQSeCRXvAp-HNzBlvOIWpeuzIJ9Ke34cV3s_ry0hmvCK594pgnQtWhg6SySsLQ3UI4OLVPXJEtJ61qZtKdc/s1600/avm.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="499" data-original-width="324" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmZJoZmwYWeVU-ZSCZqK6y87LpNpTOC3kMgYGdxdQWJF8gSv80kHViGajYkQSeCRXvAp-HNzBlvOIWpeuzIJ9Ke34cV3s_ry0hmvCK594pgnQtWhg6SySsLQ3UI4OLVPXJEtJ61qZtKdc/s320/avm.jpg" width="207" /></a></div>
<br />
<br />
<a name='more'></a>வாரமொரு முறை தொடராக வந்தபோது சுவாரஸ்யமாக இருந்திருக்கக்கூடிய அத்தியாயங்கள், ஒரு படத்தின் துவக்கம், தயாரிப்பின்போது ஏற்பட்ட சிக்கல், அதை எதிர்கொண்ட விதம் என்று மீண்டும் மீண்டும் வருவதால் புத்தகமாக படிக்கும்போது நூறு பக்கங்களுக்குள் சலிப்பு தட்டத் தொடங்குகிறது. அது போக, யாரைப் பற்றியும் எதிர்மறையாக எதுவும் கூறிவிடக் கூடாது என்ற கவனத்துடன் எழுதியிருக்கிறார் சரவணன். <br />
<br />
இந்த நூலைக் கொண்டு ஏ.வி.எம். என்ற நிறுவனத்தை புரிந்து கொள்ள இரு விஷயங்கள் உள்ளன. முதலாவது, தாங்கள் தயாரிக்கும் படத்தின் அனைத்து அம்சங்கள் மீதும் அவர்கள் செலுத்திய ஆதிக்கம். பாதி படம் எடுத்து முடித்த பின், ரஷ் பார்த்து விட்டு அதை ஏ.வி.எம். மெய்யப்பன் கைவிடச் சொல்கிறார், மொத்த படப்பிடிப்பும் முடிந்தபின் இறுதி காட்சியை மாற்றுகிறார்கள், அல்லது புதிய பாத்திரங்களை சேர்க்கிறார்கள். ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் மனோரமா பாத்திரம் ஷூட் முடிந்த பின் சரவணன் சொல்லி சேர்க்கப்பட்டிருக்கிறது. இப்படி சொல்லப்படும் மாற்றங்கள் இதற்கு முன் வெற்றிப் படங்களாக முடிந்திருக்கின்றன என்பதால் இயக்குனர்களும் இவற்றை ஏற்றுக் கொள்கிறார்கள். ஏ.வி.எம்.மிற்கு இயக்குனரைவிட தன் விருப்பப்படி செயல்படுத்துபவர் தான் தேவைப்பட்டிருக்கிறார். இதை முற்றிலும் எதிர்மறையாக பார்க்கத் தேவையில்லை. ஏனென்றால் இந்த மாற்றங்கள் படத்திற்கான செலவை அதிகரிக்கத்தான் செய்கின்றன என்பதால் இதில் ரிஸ்க்கும் உள்ளது. ஆனால் படம் வெற்றியடைய அதில் வேறு விஷயம் தேவை என்று நினைத்தால் அதைக் கொண்டு வருவதில் எந்த சுணக்கமும் ஏ.வி.எம். காட்டுவதில்லை. <br />
<br />
பலரின் ஆலோசனைகளைக் கொண்டு படமியக்குவது எளிதும் அல்ல. ஓடாத ஹிந்தி திரைப்படத்தை பார்க்கும் சரவணன், அதன் க்ளைமாக்ஸ் காட்சியை மட்டும் ரசித்து, அதை அப்போது தாங்கள் தயாரிக்கும் தமிழ் திரைப்படத்தில் உபயோகப்படுத்த முடியுமா என்று இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் கேட்கிறார். வேறொரு கதையின் இறுதி சண்டைக் காட்சிகளை, மற்றொரு படத்தில் எப்படி பொருத்த முடியும்? ஆனால் இதை முத்துராமன் சாதித்து காட்டுகிறார். குறிப்பிட்ட நாட்களுக்குள், முடிந்த வரை குறைந்த செலவில் படத்தை எடுத்துக் கொடுப்பது, திடீரென கேட்கப்படும் மாற்றங்களை கச்சிதமாக படத்தினுள் கொண்டு வருவது என இயங்கும் முத்துராமனே ஏ.வி.எம். நிறுவன இயக்குனர்களின் வகைமாதிரி எனலாம். படைப்பாளியின் சுதந்திரம் என்றெல்லாம் பேசலாம், ஆனால் ஏ.வி.எம்.மிற்கு இது தொழில், ஒரே தோல்வியில் நகுஷன் போல் அதல பாதாளத்திற்கு செல்லக்கூடிய பரமபத ஆட்டம், அதில் வெற்றியடைய என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்கிறார்கள். <br />
<br />
பல மாற்றுமொழி படங்களை முறையாக உரிமை பெற்று ரீமேக் செய்யும் ஏ.வி.எம். அது இயலாதபோது 'போலச் செய்தலுக்கு' தயங்குவதில்லை. ஒரு வங்காளப் படத்தை பார்த்துவிட்டு ரீமேக் செய்ய எண்ணும் சரவணன், மொழிமாற்ற உரிமைக்கு கேட்கப்படும் தொகை அதிகம் என்றும் நினைக்கிறார். அப்போது அவர் நிறுவன ஊழியரொருவர், வங்காள படத்தை தழுவி மாற்றங்கள் செய்து 'புதிய' கதையை தயார் செய்து விடலாம் என்று கூற அப்படியே செய்கிறார்கள். ஒரு படத்திற்கு போடப்பட்ட செட் கதைக்கு பொருந்தாது என்பதால் அதை வேறு இடத்தில் படம் பிடிக்கிறார்கள். ஆனால் போட்ட செட்டும் வீணாகக் கூடாது. எனவே, மர்மக் கதைக்கு அது பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்து, பல ஹிந்தி மர்மப் படங்களைப் பார்த்து அவற்றைக் கலந்து கட்டி ஒரு வாரத்தில் 'அதே கண்கள்' படத்தின் கதையை தயார் செய்தோம் என்று சொல்கிறார். <br />
<br />
மற்ற படைப்புக்களிலிருந்து உரிமையின்றி எடுத்துக் கொள்வதை சரவணன் வெளிப்படையாக கூறுவதற்கும் 'தொழில்' தான் காரணம். அறிவுச் சொத்து குறித்தெல்லாம் அவரோ/ ஏ.வி.எம்.மோ கவலைப்படுவதில்லை. எல்லா உணவு விடுதிகளிலும் இட்லி, தோசை கிடைப்பது போல்தான் திரைப்படங்களையும் அணுகுகிறார்கள். வங்காள படம் ஒரு நுகர்வுப் பண்டம், அங்கு நன்றாக விற்கிறது, எனவே தமிழிலும் அதே பண்டம் தயார் செய்து விற்க வேண்டும், அவ்வளவே.<br />
<br />
‘உயர்ந்த மனிதன்’ படத்தில், சிறிய பாத்திரமென்றாலும், நாயகனுக்கு இணையான சோகமும், வலுவும் கொண்ட, அசோகன் ஏற்ற பாத்திரத்தில்தான் சிவாஜி நடிக்க விரும்பினார் என்று சரவணன் சாதாரணமாகச் சொல்லிச் செல்கிறார். நமக்கு நடிப்பாற்றலை வெளிப்படுத்த விரும்பும் சிவாஜி என்ற நடிகரின் சித்திரம் கிடைக்கிறது, ஆனால் சரவணனுக்கோ சிவாஜி ஹீரோ, எனவே அவர்தான் முதன்மை பாத்திரமாக இருக்க வேண்டும். இப்படி தாங்கள் ஈடுபட்டிருப்பது கலை அல்ல தொழில் என்பதில் ஏ.வி.எம். தெளிவாக இருந்ததும் விரிவான திட்டமிடுதலுடன் படத்தை ஆரம்பித்தாலும், எந்நேரமும் மாற்றங்களுக்கு அவர்கள் தயாராக இருந்ததும், வெற்றி தோல்வியை உறுதியாக கணிக்க முடியாத இந்தத் துறையில் அவர்கள் குறிப்பிடத்தக்க சதவீத வெற்றியை பெற காரணமாக இருந்திருக்கின்றன. <br />
<br />
<i>'நானும் சினிமாவும்' - ஏ.வி.எம். சரவணன்,</i><br />
<i>தினத்தந்தி வெளியீடு.</i><br />
<i><a href="https://www.amazon.in/Naanum-Cinimaavum-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-V-M-Saravanan/dp/B07CVLRX9G">அமேசான்</a>, <a href="https://www.commonfolks.in/books/d/naanum-cinemavum">காமன் ஃபோக்ஸ்</a></i><br />
<br /></div>
நட்பாஸ்http://www.blogger.com/profile/11647556064101907512noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-72856806884893783412019-02-16T11:26:00.000+05:302019-02-16T11:27:54.832+05:30நாலுகெட்டு – எம்.டி. வாசுதேவன் நாயர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<i><b><a href="http://mysteryofbooks.wordpress.com/" target="_blank">எஸ். சுரேஷ்</a> (<a href="http://twitter.com/raaga_suresh" target="_blank">@raaga_suresh</a>)</b></i></div>
<br />
பல நூற்றாண்டுகளாக எழுத்தாளர்களின் கற்பனையைத் தூண்டும் இரு கருப்பொருட்களை ஒருசேர எம்.டி. வாசுதேவன் நாயரின் ‘நாலுகேட்டு’ பேசுகிறது: பருவமெய்துதல், குடும்பம் சிதைதல்- இந்தக் கதையில் ஒரு கூட்டுக் குடும்பம் அழிகிறது (‘நாலுகெட்டு’ என்ற தலைப்பு பாரம்பரிய கேரள வீட்டினைச் சுட்டுகிறது). பள்ளி செல்லும் சிறுவன் அப்புண்ணி கதையின் வளர்ச்சியுடன் தானும் வளர்ந்து முடிவில் முழு ஆடவனாகிறான். கதை பெரும்பாலும் அவன் பார்வையில் சொல்லப்படுகிறது. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgROYWw22Gy1tR3qetOEWdUXu_WdEKmynDCVQFKiWaHm3tnCZE136b8IDCpkqvQzqczIgMj7YDITlCNiiCUKZgR0fKiFEXY-m7KtP4rsH2rVLp0C9hg0jouHiXWRzSIYDVvH-XDk4RID9Y/s1600/nalukettu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="500" data-original-width="500" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgROYWw22Gy1tR3qetOEWdUXu_WdEKmynDCVQFKiWaHm3tnCZE136b8IDCpkqvQzqczIgMj7YDITlCNiiCUKZgR0fKiFEXY-m7KtP4rsH2rVLp0C9hg0jouHiXWRzSIYDVvH-XDk4RID9Y/s320/nalukettu.jpg" width="320" /></a></div>
<br />
<a name='more'></a>துவக்கத்தில் கதை ‘நாலுக்கட்டு’ பற்றியது என்பது நமக்கு தெரிவதில்லை. அப்புண்ணியும் அவனது தாயும் எதிர்கொள்ளும் சோதனைகளை நாவலின் துவக்க பகுதிகள் விவரிக்கின்றன. அன்றாட சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையிலும் அப்புண்ணி எப்படியாவது கல்வி கற்க வேண்டும் என்பதில் அவனது அம்மா உறுதியாய் இருக்கிறார். அப்புண்ணிக்கு அப்பா இல்லை. அவருடன் இணைந்து தொழில் செய்தவர் விஷம் வைத்து அவரைக் கொன்றிருக்கலாம் என்று ஊகிக்க இடமிருக்கிறது. முறைப்படி முடிவான மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளாமல் தான் விரும்பிய காதலனோடு ஓடிப் போய் திருமணம் செய்து கொண்ட பாவத்துக்காக அப்புண்ணியின் அம்மாவை அவரது குடும்பம் விலக்கி வைத்திருக்கிறது (போதாக்குறைக்கு, அப்புண்ணியின் அப்பா ஒரு சூதாடியும்கூட). எனவே அப்புண்ணியின் அம்மா பலர் வீட்டுக்குப் போய் பாத்திரம் தேய்த்துக் கொடுக்கிறாள், படாத பாடுபட்டு அப்புண்ணியை ஆளாக்கி அவன் கல்வி கற்க வசதியும் செய்து கொடுக்கிறாள்.<br />
<br />
சங்கரன் நாயருடன் தன் அம்மாவுக்கு தொடர்பு இருக்கிறது என்ற சந்தேகம் அப்புண்ணியின் மனதில் எழும்போது கதை ‘நாலுக்கட்டு’ வீட்டுக்கு நகர்கிறது. சங்கரன் நாயர் இரக்க உள்ளம் கொண்ட மனிதர். பணக்கார வீட்டில் குழந்தையாய் வளர்ந்த காலத்திலேயே அப்புண்ணியின் அம்மாவை அவருக்கு தெரியும். அவள் வேலைக்காரியாய் இருப்பதைப் பார்க்க அவர் மனம் சங்கடப்படுகிறது. தன்னால் முடிந்த வகையில் அவர் உதவி செய்வது ஊர் வாய்க்கு அவலாகி இறுதியில் அப்புண்ணியின் மனதில் தன் அம்மா மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது. அவன் அம்மாவைப் பிரிந்து தன் பாட்டியின் ‘நாலுக்கட்டு’ வீட்டுக்குப் போகிறான். அங்குதான் அவனது அம்மா உள்ளே நுழையக்கூடாது என்று தடை செய்யப்பட்டிருக்கிறது, அங்கிருந்துதான் அவனும் விரட்டப்பட்டிருந்தான். இப்போது, ஒரு மாமாவின் ஆதரவோடு அவன் அந்த வீட்டில் வசிக்கச் செல்கிறான். ஆனால் அவனுக்கு அங்கு ஒரு கூட்டுக் குடும்பம் சிதைவதைப் பார்க்கத்தான் கொடுத்து வைத்திருக்கிறது.<br />
<br />
எம். டி. வாசுதேவன் நாயர் கதையை எளிமையான மொழியில் நேரடியாகச் சொல்கிறார். பாம்பு திருவிழாவாகட்டும் அப்புண்ணி அம்மாவின் வீட்டை விழுங்கும் வெள்ளமாகட்டும் நிகழ்வுகளை விறுவிறுப்பாகச் சித்தரிக்கிறார். அப்புண்ணி தன் உறவுக்கார பெண்ணுடன் கொள்ளும் உறவு கிட்டத்தட்ட கலவி நிலைக்குச் செல்வது கவித்துவ மொழியில் விவரிக்கப்பட்டிருக்கிறது. கூட்டுக் குடும்ப அமைப்பு சுவாரசியமாக விவரிக்கப்படுகிறது, அதனுள் நிகழும் அதிகார மோதல்களும் சிறப்பாக வெளிப்படுகின்றன.<br />
<br />
உள்விவகாரங்கள் காரணமாகவே இங்கு குடும்ப அமைப்பு சிதறுகிறது. அப்புண்ணியின் வருகையால் மனம் வெதும்பும் அவனது மாமா ஒருவரின் வெறுப்பை வெளிக்காட்ட முடியாத வன்மத்தால் ‘நாலுக்கட்டு’ குடும்பம் சிதையத் துவங்குகிறது. இந்த அழிவில் புறச்சூழலுக்கு எந்த பங்குமில்லை, அப்புண்ணி வீட்டை விட்டு வெளியேற ஊர் வம்பு காரணமாக இருந்தது என்பதை வேண்டுமானால் ஒரு மறைமுக காரணமாய்ச் சொல்லலாம். குடும்ப அமைப்பினுள் நிலவும் அதிகாரச் சமநிலையின்மை அதன் அழிவுக்கு காரணமாவது மிகச் சிறப்பாய் விவரிக்கப்பட்டுள்ளது, நடப்பது அனைத்தும் தவிர்க்க முடியாதவை என்று நம்பச் செய்கிறது.<br />
<br />
அப்புண்ணியின் அப்பாவைக் கொன்றவர் என்று சொல்லப்படுபவருக்கும் அப்புண்ணிக்கும் இடையேயுள்ள உறவு தெளிவாகச் சொல்லப்படவில்லை. அவர் வெவ்வேறு காலகட்டங்களில் அப்புண்ணிக்கு உதவவும் செய்கிறார். முதலில் அவரைப் பழி வாங்க வேண்டுமென்று அப்புண்ணி நினைத்தாலும், இறுதியில் அவர் உதவியை அவன் நாடுகிறான். அவர்தான் அப்புண்ணிக்கு வேலை வாங்கித் தருகிறார். அவர் தவறாய் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார் என்று நாம் நினைக்கும் தருணத்தில் ஒரு திருப்பம் நிகழ்கிறது. இந்த தெளிவின்மை கதையில் உள்ள மானுட உணர்வுகளின் சிக்கல்களில் மேலும் ஒரு சிடுக்கைச் சேர்க்கிறது.<br />
<br />
இருந்தாலும் நாவலில் ஓரிரு விஷயங்கள் திருப்தியாக இல்லை. அப்புண்ணி அம்மாவின் கதை பாதியிலேயே கைவிடப்படுவது ஒரு விஷயம். நாவலின் துவக்கத்தில் அவர்தான் பிரதான பாத்திரமாக இருக்கிறார், கதை அவரது போராட்டங்களைச் சுற்றியே பின்னப்படுகிறது, ஆனால் கதை ‘நாலுக்கட்டு’க்கு நகர்ந்ததும் அவர் கிட்டத்தட்ட மறக்கப்படுகிறார். இரண்டாவது, நாவலின் இறுதி கட்டம். அதன் அவசர முடிவில் ஒரு சினிமாத்தனமே வந்துவிடுகிறது. அதுவரை கூட்டுக் குடும்பத்தின் சித்தரிப்பாகவும் அந்த அமைப்பினுள் நிலவும் மௌன அடக்குமுறையின் பதிவாகவும் இருக்கும் நாவல் திடீரென்று பழிவாங்கும் நாடகக் கதையாக மாறுகிறது. இது நாவலின் தொனிக்கு பொருந்தவில்லை என்று எனக்கு தோன்றுகிறது. இப்படிப்பட்ட சில நெருடல்கள் தவிர ‘நாலுகெட்டு’ நாவல் வாசிப்பதற்கு நன்றாகவே இருக்கிறது.<br />
<br />
நான் இதன் தமிழாக்கம் வாசித்தேன். காலச்சுவடு பதிப்பு. எனக்கு மலையாளம் தெரியாது என்பதால் மொழிபெயர்ப்பின் தரம் குறித்து ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால் தன் தமிழாக்கத்தில் கேரள மண்ணின் பழக்க வழக்கங்கள் மற்றும் மரபினை கண் முன் கொண்டு வருவதில் குளச்சல் யூசுப் வெற்றி பெற்றிருக்கிறார். மொத்தத்தில் வாசித்து அசை போடத்தக்க புத்தகம்.<br />
<br />
மலையாள நாவலான 'மணியன் பிள்ளையுட ஆத்ம கதா' என்ற மலையாள நாவலை `திருடன் மணியன்பிள்ளை’ என தமிழாக்கம் செய்ததற்காக குளச்சல் யூசுப்புக்கு சிறந்த தமிழாக்கத்துக்கான சாகித்ய அகாடமி விருது இவ்வாண்டு வழங்கப்பட்டுள்ளது. விருது பெறும் குளச்சல் யூசுப்புக்கு வாழ்த்துகள்.<br />
<br />
நாலுகெட்டு,<br />
எம்.டி. வாசுதேவன்நாயர்,<br />
தமிழாக்கம் குளச்சல் யூசுப்,<br />
காலச்சுவடு பதிப்பகம்.<br />
<a href="https://www.udumalai.com/naalukettu.htm">உடுமலை</a>, <a href="https://puthinambooks.in/naalukettu">புதினம் புக்ஸ்</a><br />
<br />
(மொழியாக்க உதவி – நட்பாஸ்) <br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
நட்பாஸ்http://www.blogger.com/profile/11647556064101907512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-48051913384680987032019-01-26T06:00:00.000+05:302019-01-26T06:00:01.438+05:30அதனினும் இனிது அறிவினர் சேர்தல் – இசை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
2008 முதல் 2013 வரை கவிஞர் இசை எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு (பெரும்பாலும் கவிதை நூல்கள் குறித்து). நிறைய இருக்கும் என்று பார்த்தால் இந்த ஆறு ஆண்டுகளில் எண்ணி பதினைந்து கட்டுரைகள்தான் எழுதியிருக்கிறார். அவையும் நெடுங்கட்டுரைகள் அல்ல, எல்லாம் சேர்ந்து நூறு பக்கங்கள்கூட வரவில்லை.<br />
<br />
‘<i>மதுரையிலிருந்து கோவைக்கு... வழி: கரூர், சேலம்</i>,’ என்ற தலைப்பிட்ட முன்னுரையில், கோணங்கி துவங்கி சுகுமாரன் வரை, முப்பத்து ஏழு பேரை தன் படைப்பூக்கத்துக்கு உடன் அழைத்துக் கொள்கிறார். துவக்கத்திலும் முடிவிலும் வரும் இளங்கோவையும் இசையின் தொழுகைக்குரிய அவ்வையையும் சேர்த்தால் முப்பத்து ஒன்பது. 39+1, வோல்வோ பஸ் போலிருக்கிறது!<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIotHN0o-CEDb0XWOiXdZMOKpxF-9MKlOcu942ykW7vxtLf8cV91E589tWMTgGIqQfo6X-qJ3digWtT0s601RdnSBvn3BxuKUg7JvT37GM2CyqNWtfOZCDo4FhFupMk08y-8AgIkCsBl0/s1600/isai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="520" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIotHN0o-CEDb0XWOiXdZMOKpxF-9MKlOcu942ykW7vxtLf8cV91E589tWMTgGIqQfo6X-qJ3digWtT0s601RdnSBvn3BxuKUg7JvT37GM2CyqNWtfOZCDo4FhFupMk08y-8AgIkCsBl0/s320/isai.jpg" width="208" /></a></div>
<br />
<a name='more'></a><br />
வெவ்வேறு கவிஞர்களைப் பற்றியும் அவர்கள் எழுதிய கவிதைகள் பற்றியும் என்ன எழுதினாலும் ஒரு இடத்தில்கூட இசை அவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்வதில்லை- இது போன்ற தருணங்களில் மிக எளிதாக கறாரான விமரிசனத் தோரணையோ நாலுமறிந்த ஆசிரியத் தோரணையோ கைப்பற்றிக் கொள்வது எளிது, அதுதான் எப்போதும் நடப்பதும்கூட: ஆனால் இசை ஒவ்வொரு வார்த்தையையும் ஒரு சகாவாக, உடன் வரும் பயணியாகவே எழுதியிருக்கிறார். தான் மிகவும் வியந்தோத்தும் கல்யாண்ஜி பற்றிய கட்டுரையில்கூட விமரிசனத்தை தயக்கத்துடனே செய்கிறார், வணங்கும்போது வெளிப்படும் வினயமும் இயல்பாக அமைந்து விடுகிறது. இந்த இணக்கமான, தோளில் கை போட்டுப் பேசும் தொனி விமரிசனப் பரப்பில் மிக அபூர்வமானது. அது இசைக்கு அமைந்திருக்கிறது. எனவேதான், ‘<i>அதனினும் இனிது அறிவினர் சேர்தல்</i>’, என்ற தலைப்பும் அவரைக் கவர்ந்திருக்க வேண்டும்.<br />
<br />
தன் கட்டுரைகளுக்கு இசை வைத்திருக்கும் தலைப்புக்கள் வித்தியாசமானவை. அவற்றைப் பட்டியலிடுவதும்கூட சுவாரசியமானது (இந்த நூல் அறிமுக நோக்கமும் இதனால் நிறைவேறும்): ‘<i>மைக்ரோஸ்கோப்பில் கண்டறியப்படும் நுண்ணுயிரி</i>’ (கடல் நினைவு – தூரன் குணா), ‘<i>இந்தக் கட்டுரைக்குப் பத்துத் தலைப்புக்கள் சூட்ட ஆசை</i>’ (வான்குருவியின் கூடு – பெருமாள் முருகன்), ‘<i>கரிசல் நிலத்தில் அனலாடும் சொற்கள்</i>’ (நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள் – மு. சுயம்புலிங்கம்), ‘<i>சிக்கலான அல்ஜீப்ரா கணக்குகளுக்குத் திணறும் எளிய மூளை...</i>’ (காயசண்டிகை, இளங்கோ கிருஷ்ணன்), ‘<i>புரட்சி கேரளத்திலிருந்து பாலக்காடு, ஆற்றுப்பாலம், உக்கடம் வழியே இருகூருக்கு வந்து கொண்டிருக்கிறது</i>’ (என்று தானே சொன்னார்கள் – சாம்ராஜ்), ‘<i>ஏரிக்கரையில் ஒலிக்கும் அம்மணனின் தனிப்பாடலும் கொஞ்சம் சேர்ந்திசையும்</i>’ (ஏரிக் கரையில் வசிப்பவன் – ஸ்ரீ நேசன்), ‘<i>காதல், விசித்திரம், விசித்திரங்களின் மீதான காதல்</i>’ (மீன்கள் துள்ளும் நிசி – நிலாரசிகன்), ‘<i>அதி அன்பின் தற்குறிப்பேற்றம் அல்லது கல்யாண்ஜி என்கிற நன்நோய்த் தொற்று</i>’ (பூனை எழுதிய அறை – கல்யாண்ஜி), ‘<i>யதார்த்தத்தின் சலிப்பிலிருந்து புத்தொளியின் வெளிக்கு...</i>’ (முன் சென்ற காலத்தின் சுவை – எஸ். செந்தில்குமார்), ‘<i>அதிகம் புழங்காத வழியில் ஒரு திமிரான பயணம்</i>’ (உபரி வடைகளின் நகரம் – லிபி ஆரண்யா), ‘<i>ஆட்டுக்குட்டி மீது ரயில் மோதி ஒன்றும் ஆகவில்லை</i>’ (நான் ராணிதிலக் பேசுகிறேன் – ராணிதிலக்), ‘<i>அன்பே நீ கலையாகும்போது இன்னும் அதிகமாக அரசியலாவாய்</i>’ (வெள்ளைத் தோல் வீரர்கள் – திசேரா), ‘<i>சத்தியலோகத்து வீணைக்கு இரத்தப்பலி கொடுப்பவன்</i>’ (பெருந்திணைக்காரன் – கணேசகுமாரன்). இவை போக, ‘<i>ஏன் எழுதுகிறேன்</i>,’ என்ற சிறப்பான அறிமுகம், ‘<i>எம்.கே.டி. சித்தத்துள் இனிக்கும் தேன்</i>’ என்ற ஒரு சுவாரசியமான கட்டுரை, ‘<i>எக்ஸ்க்யூஸ் மீ மகத்தான லட்சியங்களே</i>,’ என்ற அதிசயிக்க வைக்கும் நேர்காணல்.<br />
<br />
இசை யாரைப் பற்றி என்ன எழுதுகிறார், அவர்கள் கவிதைகள் பற்றி என்ன எழுதுகிறார் என்று பலவும் சொல்லலாம். ஆனால் இந்தத் தலைப்புகளே அவர் எப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதக்கூடும் என்பதைத் தெரிந்து கொள்ளப் போதும்- இதற்கு மேல் கருத்துகள் என்று துழாவிச் செல்ல வேண்டிய தேவையில்லை. இசை சொல்ல வரும் விஷயங்கள் அவசியமானவை, ஆனால் அவற்றை அவர் வசீகரமான மொழியில், நம்மை நிராயுதபாணியாக்கும் சிரிப்புடன் சொல்கிறார். அவர் என்ன சொல்கிறாரோ அதில் நாம் உடன்படாமல் இருக்கலாம், ஆனால் அவரது தோழமையை நிராகரிக்க முடியாது. <br />
<br />
* * *<br />
<br />
‘ஏன் எழுதுகிறேன்”, என்ற முன்னுரையில் இப்படி எழுதுகிறார் இசை: <br />
<br />
<blockquote class="tr_bq">
“ஈழத்தில் நடைபெற்ற இன அழித்தொழிப்பின்போது 10 வரிகளை அடுக்கி கவிதை எழுத பெரும்பாலும் யாரும் விரும்பவில்லை. அப்படி எழுதி விட முடியும்தான். அதில் சில நல்ல கவிதைகளும் கிடைத்திருக்கும்தான். ஆனால் இன்றைய எழுத்தாளன் அப்படிச் செய்யாததற்கு அவன் படைப்பு வறுமை காரணம் இல்லை என்று நான் நம்புகிறேன். அவன் தன் அந்தரங்கத்தை மிக நேர்மையாக எதிர் கொண்டதின் விளைவே இது. அவனுக்குத் தெரியும் குடித்து விட்டு விடுதி அறைகளை கண்ணீரால் மிதக்க விட்டது தவிர தான் வேறொன்றும் செய்யவில்லை என்று. வேறொன்றும் செய்ய முடியாது என்றும்”.</blockquote>
<br />
கவிஞர்கள், ஆணியே புடுங்க வேணாம் என்று வாளாவிருந்ததில் கவிதையின் கையாலாகாத்தனத்துக்குப் பொருத்தமான நேர்மை இருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டால், இது மட்டுமல்ல, சொந்தக் கதை சோகக் கதை தவிர பக்கத்து வீட்டுக்காரன் எதிர் வீட்டுக்காரன் துக்கத்தைகூட கவிதையில் எதிர்கொள்ள எந்த முகாந்திரமும் இருக்காது. “தனியொரு...” என்று சினந்த பாரதி வேண்டாம், கூண்டிலடைபட்டுத் தவிக்கும் சிட்டுக்குருவியின் சிறகடிப்பு தாளாது இவ்வுலகே அலறுகிறது, என்று கரைந்த பிளேக்கும் சும்மனாச்சிக்குமா கவிஞன் என்று சொல்லிக் கொண்டான்? முதலில் கவிதை என்ன செய்யும் என்ற கேள்வியே விவாதத்துக்குரியது; இருக்கட்டும், அது வேறொரு நாளுக்கானது.<br />
<br />
இந்த புத்தகத்தின் பல கட்டுரைகளில் இசை மீண்டும் மீண்டும் சொல்லும் விஷயங்கள் இரண்டு என்னைக் கவனிக்கச் செய்தன. இரண்டும் கல்யாண்ஜி பற்றிய கட்டுரையில் அடுத்தடுத்து வருகின்றன:<br />
<br />
<blockquote class="tr_bq">
“எத்தனையோ விஷயங்களால் இயக்கப்பட்டாலும் ஒரு கலைஞனுக்கு தன் கலை எதைப் பேச வேண்டும் என்பதில் விரும்பியோ விரும்பாமலோ ஒரு தேர்வு நேர்ந்து விடுகிறது. ஏன் இதை மட்டுமே பேசுகிறாய் என்றவனை வினவுவதோ, ஏன் நீ இதைப் பேசவில்லை என்றவனை மிரட்டுவதோ அறிவுடைமை ஆகாது. இளங்கோவிற்கும், இசைக்கும் ஏனோ அவலச்சுவை மீது அப்படி ஒரு கண். இவர்கள் இருவரும் மாத்திரம் அல்ல, எழுதுகிறவர்களில் முக்கால்வாசிப் பேருக்குத் தன் எழுத்தில் கண்ணீரை ஆறாகப் பெருக்குவதில் அப்படியொரு ஆனந்தம்”.</blockquote>
<br />
பல கட்டுரைகளில் இந்தக் கட்டாய தேர்வு குறித்தும் தமிழ்க் கவிஞர்களின் துக்க கவிதைகள் பற்றியும் திரும்பத் திரும்ப எழுதுகிறார். நவீன கவிதை வாசிப்பவர்கள் பொருட்படுத்தத்தக்க விஷயம் இது.<br />
<br />
கவிதை என்ன செய்யும் என்பதைவிட கவிதை எழுதிய நான் என்னத்தை கிழித்துவிடப் போகிறேன் என்ற நிதர்சன உண்மையே கழிவிரக்க, துக்கப் பார்வையைக் கட்டமைத்திருக்கிறது என்று தோன்றுகிறது. இச்சூழலில் சுயபகடியை இசை தேர்வு செய்திருப்பதில் ஒரு அசல்த்தன்மை இருக்கிறது:<br />
<br />
<blockquote class="tr_bq">
“குடும்பம் என்கிற வலிய தாம்புக் கயிற்றால் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் 72 கிலோ எடையுள்ள நாய் நான். எனவேதான் நான் முழங்குவதற்கு பதில் அழுகிறேன். என் சில படைப்புகளில் குடும்பம் என்கிற தளையில் இருந்து வெளியேறத் தவிக்கிற ஒரு மனிதனின் விசும்பலைக் காதிருந்தால் நீங்கள் கேட்கலாம். அப்புறம், என்னைப் போன்றவர்களுக்காகத்தான் சே குவேரா டி-சர்ட்டுகளை மலிவு விலையில் ரோட்டில் விற்கிறார்கள்.”</blockquote>
<br />
தன்னை ஒரு போர் வீரன் என்று கற்பனை செய்த மறு கணமே தன் கத்தியின் கூர் முனை தன் நெஞ்சை நோக்கியே நிற்பதைக் கண்டு விக்கித்தவனின் சொற்கள் இவை. வேறெப்படியும் இருக்க முடியாது. முழக்கங்கள் வேண்டுமென்றால், உன்னதங்கள் தொடப்பட்டு கடந்து செல்லப்பட வேண்டுமென்றால், அந்தக் கத்தியில் மீண்டும் மீண்டும் மோதுபடவும் அதனால் குற்றுயிரும் குலையுயிருமாய்ச் சிதையுறவும் துணிந்து, அதற்கு பலியாகும் கவிஞர்கள் நமக்கு வேண்டும். அந்தச் சாபத்தை அளிக்க நம்மில் யாருக்கு உரமிருக்கிறது?<br />
<br />
இசை கவிதை பற்றி எழுதுவது, கவிதை எழுதுவதற்கான காரணங்கள், வெவ்வேறு கவிதை, கவிஞர்களின் தனித்தன்மைகள் என்று எழுதுவது எல்லாமே படிக்க சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் அவை எல்லாவற்றுக்கும் மேல் நேற்று வீட்டுக்கு வந்த சற்று நேரத்தில்<br />
<br />
<i>தேவதாசகம்</i><br />
<br />
நாளுக்கு நூறு முறை<br />
அபத்தங்களை அப்டேட் கவிதைகளாக்கி<br />
லைக்குகளை அள்ளும் நீ <br />
உன் ஆன்ம தனிமையை, உலகின் அர்த்தமின்மையை,<br />
நீள்கவி புனைவதிலும் லைக்க <br />
எனக்கு என்ன ஒரு இது இருக்க வேண்டும்!<br />
<br />
என்றும்,<br />
<br />
<i>எகத்தாளம்</i><br />
<br />
சாக்லேட் உறை போர்த்த பெண்<br />
தன் சொல்லெல்லாம் தித்திப்பு<br />
என்று சிரிப்பாய்ச் சிரிக்கிறாள்<br />
சுற்றியுள்ளவர்கள் சிரிக்கிறார்கள்<br />
ஊர் சிரிக்கிறது<br />
உலகம் சிரிக்கிறது<br />
புவனங்களைப் படைத்த பிரமன் சிரிக்கிறான்<br />
பாரளந்த பெருமாள் சிரிக்கிறான்<br />
பரமன் சிரிக்கிறான் பார்வதியும் சிரிக்கிறாள்<br />
<br />
என்றும் ஒரே நாளில் அடுத்தடுத்து எழுதத் தோன்றிற்று. <br />
<br />
எதையோ விரட்டிச் செல்கிறோம், எதிலிருந்தோ தப்பி ஓடுகிறோம், அந்த அவசரத்தில் எதையும் கண்கொண்டு பாராமல் தவற விடுகிறோம். நம் வாழ்வு மொக்கைதான், நம் பார்வை மொக்கைதான், நம் மொழி மொக்கைதான், ஆனால் ஒரு நல்ல கவிதையால், ஒரு நல்ல கவிஞனால் அனைத்தும் நொடிப்பொழுது கூர் கொள்கின்றன. கவிதை என்ன செய்கிறதோ இல்லையோ, அன்றாட கணங்கள் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் கொடுக்கிறது- ஆக, பொருள் கொள்ளும் கவி மன நிலையே கவிஞன் நமக்கு அருள்வது. இசையின் கட்டுரை தொகுப்பை வாசித்து முடித்தபின் அது ஒரு அரை மணி நேரத்துக்காவது சாத்தியமாகிறது. <br />
<br />
<i>அதனினும் இனிது அறிவினர் சேர்தல் – இசை,</i><br />
<i>முதற்பதிப்பு – 2013,</i><br />
<i>விலை ரூ.75,</i><br />
<i>சந்தியா பதிப்பகம், சென்னை – 83</i><br />
<i>04424896979</i><br />
<i>இணையத்தில் பெற: <a href="https://www.commonfolks.in/books/d/athaninum-inithu-arivinar-serthal">காமன்போக்ஸ்</a>, <a href="http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=296">சந்தியா பதிப்பகம்</a></i><br />
<br />
<br /></div>
நட்பாஸ்http://www.blogger.com/profile/11647556064101907512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-16740119022330453302019-01-22T18:30:00.000+05:302019-01-22T18:30:36.917+05:30Yasunari Kawabata: The Sound of the Mountain<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<i><b><a href="http://mysteryofbooks.wordpress.com/" target="_blank">எஸ். சுரேஷ்</a> (<a href="http://twitter.com/raaga_suresh" target="_blank">@raaga_suresh</a>)</b></i></div>
<i><b> </b></i><br />யசுனாரி கவாபட்டாவின் நாவல், ‘தி சவுண்ட் ஆப் தி மௌண்டன்’, குடும்பம், முதுமை மற்றும் மரணம் பற்றிய சிக்கலான கதையைச் சொல்கிறது. துல்லியமான, மினிமலிச பாணி நடை கொண்ட கவாபட்டாவின் எழுத்து, ஓகாடா ஷிங்கோவின் குடும்பத்தில் நிலவும் சிடுக்குகள் மிகுந்த உறவுகளின் ஆழங்களுக்குள் அழைத்துச் செல்கிறது. ஓகாடா ஷிங்கோவும் அவரது மனைவி யாசுகோவும் தங்கள் மகன் ஷியுச்சி மற்றும் மருமகள் கிகுகோவுடன் காமகுராவில் வசிக்கிறார்கள். முதல் பார்வையில் வசதியாகவும், நெருக்கமாகவும் இருப்பது போல் தோன்றுகிற இந்தக் குடும்பத்திலும் அவர்களுக்கே உரிய ரகசியங்கள் இருக்கின்றன. போரில் மரணமடைந்த ராணுவ வீரன் ஒருவனின் மனைவியுடன் அவரது மகன் ஷியுச்சோ கள்ள உறவு வைத்திருக்கிறான். அவரது மகள் ஃபுசாகோவின் இல்லற வாழ்வும் முறியும் நிலைக்கு வந்து விட்டது. தன்னைச் சுற்றி நடப்பதை ஷிங்கோ எப்படி எதிர்கொள்கிறார் என்பதையும் எதையும் மாற்ற முடியாத அவரது இயலாமையையும் இந்த நாவல் விவரிக்கிறது.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/5/5b/TheSoundOfTheMountain.jpg/220px-TheSoundOfTheMountain.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="324" data-original-width="220" height="320" src="https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/5/5b/TheSoundOfTheMountain.jpg/220px-TheSoundOfTheMountain.jpg" width="217" /></a></div>
<br />
<a name='more'></a> கவாபட்டாவின் நாவல் எழுப்பும் முக்கியமான கேள்விகளில் ஒன்று இது- “மனிதனின் பார்வையில் எது வெற்றி?”. ஷிங்கோ தன்னை தோற்றுப் போனவனாக நினைத்துக் கொண்டிருக்கிறார். காரணம், அவரது குழந்தைகள் எல்லாருக்கும் ஏதோ ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது. அவர்களின் குறைகளுக்கு தன்னையே காரணமாக்கி நொந்து கொள்கிறார் அவர். ஷிங்கோ தன் மகனை நேசிக்கிறார், மகளுடன் அவ்வளவு நெருக்கமான உறவில்லை. அவள் தன் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு அவரைத்தான் பொறுப்பாக்குகிறாள். அவளது கணவன் உண்மையில் போதை மருந்துகளை வாங்கி விற்பவன், அவனை விவாக ரத்து செய்வதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லை. மகள் நிலைமை இப்படி இருக்க, ஷிங்கோ தன் மருமகள் மீது பாசமாய் இருந்தாலும் மகனிடம் கள்ளத் தொடர்பை முறித்துக் கொள்ளச் சொல்லும் துணிச்சல் அவருக்கு இல்லை. அவர் பிரச்சினைகளுக்கு வேறு வழியில் தீர்வு காண முயற்சி செய்கிறார், ஆனால் அந்த முயற்சிகள் எல்லாவற்றிலும் தோற்றுத்தான் போகிறார்.<br /><br />
இந்தப் பாத்திரங்கள் ஒவ்வொருவரையும் உயிரோட்டத்துடன் படைத்திருப்பதுதான் கவாபட்டாவின் வெற்றி. இந்திய திரைப்படங்களில் வருவது போல் மருமகள் திகட்டத் திகட்ட தித்திக்குமளவு இனிமையானவளாக இருக்கிறாளே என்று முதலில் சந்தேகிக்கிறீர்கள். ஆமாம், அவள் உண்மையில் அந்த அளவு நல்லவள்தான், ஆனால் அவள் சுயமரியாதை உள்ளவள். தன் மாமனாருக்கும் மாமியாருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவள் எடுக்கும் மிக முக்கியமான முடிவு, திடீரென்று அவளது பாத்திரத்தின் தன்மைக்கு மிக அருமையாக ஒளியூட்டுகிறது. அவள் மட்டுமல்ல, பிற பாத்திரங்களுடனும் நாம் ஒன்றிவிடும் வகையில் கவாபட்டா இந்த நாவலை எழுதியிருக்கிறார். தன்னால் முடிந்த அளவு இந்தக் குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்று நினைக்கும் காரியதரிசி ஏய்க்கோவும் இவர்களில் ஒருத்தி. <br /><br />
‘தி சவுண்ட் ஆப் தி மௌண்டன்’ முதுமை மற்றும் மரணத்தின் மீதான தியானமும்கூட. ஷிங்கோ தன் வீட்டு வேலைக்காரியின் பெயரை நினைவுக்கு கொண்டு வர தடுமாறிக் கொண்டிருக்கும்போது மலையின் முழக்கம் கேட்பதாய் கதை துவங்குகிறது. தன் வாழ்வில் உள்ள வெவ்வேறு நபர்களைப் பற்றி வினோதமான கனவுகள் மீண்டும் மீண்டும் அவருக்கு வந்து கொண்டேயிருக்கின்றன. இந்தக் கனவுகள் ஷிங்கோவின் இதயத்துக்கு நம்மைக் கொண்டு செல்லும் திறவுகோல்கள். அவரது நண்பர்கள் ஒவ்வொருவராக இறக்கத் துவங்குகிறார்கள், ஷிங்கோ மரணம் குறித்து அதிகம் சிந்திக்கத் துவங்குகிறார். அவரது நண்பர்களில் ஒருவர், புற்றுநோயால் செத்துக் கொண்டிருப்பவர், பொட்டாசியம் சயனைட் கொடுக்கக்கூடிய வேறொரு நண்பரைத் தொடர்பு கொள்ளும்படி அவரிடம் இறைஞ்சுகிறார். புற்று நோயின் வலி தாளாமல் தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறார் அந்த நண்பர். “முதுமையை எப்படி எதிர்கொள்வது?”, “ஒரு நிகழ்ச்சியில் தொடர்புடையவர்கள் அத்தனை பேரும் மறைந்த பின்னும் அதன் நினைவு வாழ முடியுமா?” என்பது போன்ற கேள்விகளுடன் மரணம், முதுமை குறித்த கேள்விகளும் நாவலில் மீண்டும் மீண்டும் எழுகின்றன. இவற்றில் சில கேள்விகள் நமக்கும் வாதையாக இருக்கின்றன.<br /><br />
வேறொரு தளத்தில் இந்த நாவல், நினைவு பற்றியது. தான் தன் மனைவின் சகோதரி குறித்து பிரமிப்பு கொண்டிருந்ததும் அவள் மீது உள்ளூர காதல் கொண்டிருந்ததும் ஷிங்கோவின் நினைவை விட்டு அகல மறுக்கின்றன. அவரது மனைவியின் சகோதரி, அழகானவள், அவளுக்கேற்ற அழகு கொண்ட ஒருவனை மணந்தபின் இளமையிலேயே இறந்து போனவள். அறுபது வயது கடந்தபின்னும் ஷிங்கோவால் அந்த கணவன் முன் தான் எவ்வளவு போதாமையாக உணர்ந்தோம் என்பதை மறக்க முடியவில்லை. ஷிங்கோவின் கனவுகளும் துர்ஸ்வப்னங்களும்கூட நினைவு குறித்தே. சில நினைவுகள் ஏன் விழிப்பு நிலைக்கு உயர்ந்து வருகின்றன, மறந்தே போன ஒருவர் ஏன் தன் கனவில் உயிர் பெற்று எழுகிறார் என்ற கேள்விகள் அவருக்கு விடை காண முடியாத புதிராய் இருக்கின்றன.<br /><br />
நாவலில் மறைந்திருக்கும் கருப்பொருட்களில் போர் நினைவுகளும் ஒன்று. ஷியூச்சி தொடர்பு வைத்திருக்கும் பெண் போரில் இறந்த ராணுவ வீரனின் விதவை. தன் கணவனை இளம் வயதிலேயே பலி கொண்ட போர் தனக்கு அநீதி இழைத்திருப்பதாக அந்தப் பெண் நினைக்கிறாள். அக்காலத்தில் போர்க் கைம்பெண்கள் எதிர்கொண்ட சவால்களை நாவல் சுட்டுகிறது. தன் கணவனின் குடும்பத்தினருடன் இணைந்திருக்கவும், தன் பெற்றோரிடம் திரும்பவும் அவள் மறுத்து விடுகிறாள். மாறாய், சுதந்திரமாய் இருப்பதென்று முடிவு செய்கிறாள், தன் சுதந்திரத்தை நிலைநாட்டிக் கொள்ள வேலைக்கும் போகிறாள். அவள் கதையில் சிறிது காலம்தான் இருக்கிறாள். இருந்தாலும் அவளது குணம் என்ன என்பதும் அவளது மனநிலையும் நமக்கு நன்றாகவே விளங்குகிறது. கவபாட்டா அவ்வளவு சிறப்பாய் அவளது பாத்திரத்தைச் சித்தரித்திருக்கிறார்.<br /><br />
நாவல் சீரான வேகத்தில் நகர்கிறது. அதன் பெரும்பாலான பொழுதுகள் வீட்டு விவகாரங்களைப் பேசுவதில், செய்தித்தாள் வாசிப்பதில், பூக்களைக் கொண்டு அலங்கரிப்பதில் என்று கழிகின்றன. ஆனால், கவபாட்டா எதையும் வீணாக்குவதில்லை. ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு பொருளும் நோக்கமும் இருக்கிறது, பார்ப்பதற்கு சராசரியான உறவாடல்கள் போல் தெரிவதும்கூட ஆழத்தில் அர்த்தம் பொதிந்திருக்கின்றன. அவ்வப்போது பெருநிகழ்வுகள் நடக்கின்றன, ஆனால் அவை எதையும் கவபாட்டா பூமியைப் புரட்டிப் போடும் விஷயங்களாக விவரிப்பதில்லை. மாறாய், கவபாட்டா கதையைக் கொண்டு செல்லும் வேகத்துக்கு அவையும் சமனப்பட்டு கூடி வருகின்றன.<br /><br />
இயற்கை வர்ணனைகள் நிறைந்த நாவல். பருவநிலையை அறிய முடிகிறது, மரங்கள் பூத்துக் குலுங்குவதைப் பார்க்கிறோம், காற்றின் ஓசையைக் கேட்கிறோம். இவற்றில் பலவற்றுக்கும் குறியீட்டு மதிப்புண்டு, ஆனால் குறியீட்டு பொருள் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும்கூட நீங்கள் இந்த விவரணைகளை வர்ணனைகளாகவே வாசித்து மகிழ்ச்சியடைவது நிச்சயம். <br /><br />
நான் வாசித்த புத்தகம் பெங்குவின் பதிப்பித்தது. ஆங்கில மொழியாக்கம் செய்திருப்பவர் எட்வர்ட். ஜி. செய்ன்டென்ஸ்டிக்கர். மிக அருமையான மொழியாக்கம். காமகுராவின் தனிச்சூழலை சிறப்பான வகையில் கைப்பற்றுகிறது. ஜப்பானின் பழக்க வழக்கங்களையும் அன்றாட வாழ்வில் அவர்கள் கடைபிடிக்கும் நடைமுறை ஒழுக்கங்களையும் நன்றாகவே கொண்டு தருகிறது, கவபாட்டாவின் நடை துல்லியமாக இருக்கிறது, மினிமலிச இயல்பு கொண்டது என்பதை முன்னமே சொல்லிவிட்டேன்.<br /><br />
இருநூற்றுச் சொச்ச பக்கங்கள்தான் என்றாலும் அதில் அடர்த்தியான சிந்தனைகளும் பண்பாட்டுச் சிக்கல்களும் பொதிந்திருப்பதால் சிக்கலான நாவல்தான். நோபல் பரிசு பெற்ற ஒருவரிடம் நாம் இத்தகைய நாவல்களையே எதிர்பார்க்கிறோம், இந்த நாவல் நம்மை ஏமாற்றவில்லை.<br />
<br />
<br />
<br />The Sound of the Mountain, Yasunari Kawabata,<br />
Penguin Classics, 1970<br />
<a href="https://www.flipkart.com/the-sound-of-the-mountain/p/itmfbfd483kffzyx">Flipkart</a>, <a href="https://www.amazon.in/Sound-Mountain-Yasunari-Kawabata/dp/0394446283">Amazon </a><br />
<br />
<br />
ஒளிப்பட உதவி - <a href="https://en.wikipedia.org/wiki/The_Sound_of_the_Mountain">விக்கிப்பீடியா</a><br />
<br />
(மொழியாக்க உதவி – நட்பாஸ்)<br /><br /></div>
நட்பாஸ்http://www.blogger.com/profile/11647556064101907512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-77621946679630799802018-10-21T19:32:00.000+05:302018-10-21T19:32:03.886+05:30வேலைசூழுலகு - பணியிடக் கதைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="text-align: center;">
<b><a href="http://solvanam.com/?author_name=ramesh_kalyan">ரமேஷ் கல்யாண்</a></b><br />
</div>
<div style="text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMKxU0b0ZTKKVjHXY0o1VqRUA4pwwks6R9AAGKt4Vx6BDr_GB9GolG-oIFhtJwDgVlKWRzzEU5VO1CZhnkkXt7WmJyr4ZHH0ySltwt_C0sM9DyaKktvMtfbIkuCcleXgWoeIFu5sRZdsU/s1600/IMG_20180909_191717.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1118" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMKxU0b0ZTKKVjHXY0o1VqRUA4pwwks6R9AAGKt4Vx6BDr_GB9GolG-oIFhtJwDgVlKWRzzEU5VO1CZhnkkXt7WmJyr4ZHH0ySltwt_C0sM9DyaKktvMtfbIkuCcleXgWoeIFu5sRZdsU/s320/IMG_20180909_191717.jpg" width="223" /></a></div>
<div style="text-align: center;">
</div>
<br />
<div style="text-align: justify;">
'<i>வேலைசூழுலகு</i>' என்று அலுவலகங்கள் சார்ந்த பணியிடங்களை மையப்படுத்திய வெவ்வேறு எழுத்தாளர்களுடைய கதைகள் கொண்ட இந்த எஸ். சங்கரநாராயணன் தொகுப்பு சுவாரசியமானது. அதற்கு இரண்டு காரணங்கள். ஒரே பொருளை குறித்து பலருடைய கவனிப்புகள் அனுபவங்கள் என்பது ஒன்று. மற்றொன்று இந்த பணியிடம் என்பதே மாறிக்கொண்டு வருகிறது. எதிர்காலத்தில் இப்படி ஒன்று இருப்பதே கூட அரிதாகிப் போகலாம் - ஏற்கெனவே ‘<i>work from home</i>’ என்பது அதிகம். </div>
<a name='more'></a><br />
<br />
<div style="text-align: justify;">
பணியிடங்களுக்கு ஒரு தனித்த தன்மை உண்டு. குறிப்பாக அரசு அலுவலங்கங்களுக்கு. அரசு அலுவலங்களில் சற்றும் கவன மரியாதை இல்லாமல் ஒரு கண்ணாடி குண்டு, அல்லது மரச்சட்டம் ஒன்று பேப்பர் வெயிட்டாக வைக்கப்பட்டு தூசியுடன் இருக்கும் காகிதங்கள் அதிமுக்கியமானவையாக இருக்கும். அந்த 'சீட்'டுக்கு உரியவர் தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் அந்த காகிதத்தை எடுத்து கொடுத்துவிடுவார். அவருக்கு தர விருப்பம் இல்லை என்றால் அதே மேசையில் ஒரு மணி நேரம் தேடியும் "கிடைக்கவில்லை" என்றும் சொல்லுவார். அவர் சொல்லுவது உண்மையா என்று அவருடைய உயர் அதிகாரியால்கூட முடிவு செய்ய முடியாது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்று நகரங்களில் பெருநிறுவனங்கள் ஒரே மாதிரியான கேபின் அமைப்பைக் கொண்டு செயல்படுகின்றன. அது ஒரு அலுப்பு. எல்லாம் ஒரே மாதிரி இருக்கின்றன. பிறப்பு இறப்பு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், சமீபமாக பதிவுத்துறை எல்லாமே கணினிமயம் ஆகிவருகிறது. அலுவலகங்கள் வேறு உருவம் கொள்ள ஆரம்பித்துவிட்டன. ஆனால் சற்று முந்தைய சூழல் அப்படி இருந்திருக்கவில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<i><b>தொகுப்பிலுள்ள சிறுகதைகள் </b></i></div>
<div style="text-align: justify;">
<br />
இதில் அழகிய சிங்கர் எழுதிய ‘<i>லாக்கர்</i>’ என்ற கதை அருமையான ஒன்று. வங்கியில் பணிபுரிபவர்களைப் பற்றி பொதுவாக ஒரு அபிப்ராயம் - அவர்கள் கை நிறைய சம்பாதிப்பவர்கள். நமது பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு நம்மை கவுண்டரில் காய விடுபவர்கள் என்று. இதில் பாதி உண்மை. அவர்களுடைய பணி நிமித்தம் சிக்கலானதும் இழுபறியானதும் ஆகும். வாடிக்கையாளரை தனிப்பட்ட முறையில் தெரியும் என்கிற மாதிரி நட்புறவு கொண்டிருப்பவர்கள் உண்டு. இது உங்களது பேங்க் என்ற விளம்பரம் பிரசித்தம். இன்றுதான் வாடிக்கையாளர் வங்கிக்குப் போகும் வேலையே இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த கதையில் லாக்கரை நிர்வகிக்கும் ஒருவருடைய ஒரு நாள் நிகழ்வு பற்றிய கதை. சனிக்கிழமை இரண்டு மணிவரைதான் வேலை என்றாலும் அதற்கு பிறகும் வேலை நீளும். மறுக்க முடியாது. குறிப்பாக அதிக தொகை வைத்திருப்பவர்கள் முக்கியமானவர்கள். தனது மனைவியின் பிறந்த நாள் அன்று - அதுவும் ஞாயிறு - முக்கிய வாடிக்கையாளர் ஒருவரின் புதுமனை புகுவிழாவிற்கு அன்பளிப்புடன் காலையில் நான்கு மணிக்கு கிளம்பி செல்லும் வங்கி மேனேஜரை பார்த்திருக்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சனிக்கிழமை மதியம் எல்லோரும் போய்விட உதவியாளன் ஒருவருடன் வயது முதிர்ந்த அம்மாள் ஒருவர் லாக்கர் திறக்க வேண்டும் என்று சொல்ல இவர் முகம் சுளிக்காமல் சேவை செய்கிறார். லாக்கர் மாடிக்கு படி இறங்கி போவதும் வருவதும் (ஒருவர் பின் ஒருவராக வருவார்கள்) மூச்சு இரைக்கும். சனிக்கிழமை நிம்மதியாக கிளம்ப முடியவில்லை. வேலை பொறுப்பு அப்படி. இறுதியாக தாமதமாக கதவை மூடும்போது ஏதோ சப்தம் கேட்கிறது. உதவியாளன், ‘அதெல்லாம் ஒன்றுமில்லை’, என்று சொல்ல கதவை மூடிவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு திடீர்ன்னு அந்த முதிய அம்மாள் நினைவு வருகிறது. அந்த அம்மாள் போனதாக தெரியவில்லையே. உள்ளேயே வைத்து பூட்டிவிட்டோம் என்று தோன்றுகிறது. பதறிக்கொண்டு மேனேஜரிடம் அனுமதி கேட்டு கதவை திறந்து லாக்கர் ரூம் சென்று பார்த்தால் அந்த அம்மாள் மயக்கமாகி கிடக்கிறாள். பதைப்புடன் உயிர் இருக்கிறதா என்று பார்க்கும்போது அவர் மனம் என்ன பாடுபடும் என்பதை வாசகனிடம் சொல்வதே இல்லை. ஒரு வழியாக மருத்துவரிடம் அழைத்துப் போய், பிறகு அந்த அம்மாள் சாதாரணமாக அவரை அலுத்துக் கொண்டு போகிறாள். புகார் ஏதுமில்லை. ஆனால் அவரது கணவர் போலீஸ் அது இது என குதிக்கிறார். கதையின் இறுதி வரியில் அந்த வாடிக்கையாளர் வேறு இடத்துக்கு தனது கணக்கை மாற்றி விடுகிறார். எச்சரிக்கப்பட்டு இவரும் வேறு வங்கிக்கு கட்டாய மாற்றலில் அனுப்பப்படுகிறார். </div>
<div style="text-align: justify;">
வங்கிகளில் கவனப்பிசகாக தவறுகள் நடந்து விடுவதுண்டு. ஆனால் அதற்கு பணியாளர்கள் தரும் விலை சங்கடமானதொன்று. இந்த தொகுப்பின் தலைப்புக்கு முழுதும் நியாயம் செய்வது இவருடைய கதை எனச் சொல்வேன். பா.கண்மணி கூட இதே போன்ற வங்கிபணியிடப் பிரச்னையை வைத்து "பிசகு" என்று கணையாழியில் ஒரு கதை எழுதி இருந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘<i>ஒரு புதிய நூற்றாண்டை நோக்கி</i>’ என்ற அசோகமித்திரனின் முத்திரை கொண்ட மிகையற்ற அவரது கதை. காலையில் கோவிலுக்கு கிளம்பும் ஒரு தொழிற்சாலை சிப்பந்திக்கு ஒரு போன் வருகிறது. (மொபைல் இல்லாத காலம்) அதில் ஒரு குறிப்பிட்ட ரிவிட் அழுத்தம் தாங்காமல் சிதறுகிறது என்று சொல்கிறார்கள். இவர் அது என்னுடைய பணிவரம்புக்கு உட்பட்டது அல்ல என்கிறார். இதற்கு முன்பும் உங்கள் ஆலோசனைதான் உதவியது அதனால் அழைக்கிறோம், என்கிறார். இப்படி அந்த புகாரின் தீவிரத்தை அதிகப்படுத்திக்கொண்டே போக அதை சப்ளை செய்த நிறுவனம் யார் என்று கேட்க அவர்கள் சொல்லும் ஈஸ்வரி நிறுவனம் இவருடைய அண்ணனின் நிறுவனம். இந்த உள் அரசியலுக்குத்தான் இத்தனை நேரம் பேசியது. காரில் உட்கார்ந்துகொண்டு பயண மகிழ்ச்சிக்கு குழந்தைகள் காத்திருக்கின்றன, இவர் கோவிலை நோக்கி காரை செலுத்திக்கொண்டே நினைவலைகளாய்ச் சில சொல்லப்படுகின்றன. அதில் தொழில்நுட்பம் முன்னேறி கணினிகளால் எல்லா விவரங்களையும் எளிதாக காட்டிவிட முடியும் என்றாலும் மனிதனின் விசேஷ உழைப்பை, அர்ப்பணிப்பை. திறமையை, ரகசியமாக அனுபவிக்கும் இழிவுகளை, அதனால் காட்ட முடியாது என்று தன்னுடைய முத்திரை வரியை எழுதியிருப்பார். உயர் அதிகாரிகளிடம் தலை குனிந்து நிற்கவேண்டும் என்று சொல்லி அப்போது கோவிலுள் கும்பிட்டுக் கொண்டு தலை குனிந்து இருப்பதை அதே வரியில் எழுதுவார். வெளியே குழந்தைகள் கால் வீசி விளையாடிக் கொண்டிருந்தன என்று முடியும். அவர்களுடைய அந்த சந்தோஷத்துக்குத்தான் இந்த எல்லாவித தலைகுனிவுகளும் என்பது எழுதப்படாத கதை வரி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘<i>படி</i>’ (அலவன்ஸ்) என்கிற பாவண்ணன் கதை. நான்காம் சம்பள கமிஷன் வந்தபோது அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு படி உயர்கிறது என்பதை தெரிந்து கொள்ள பேராவல். நியாயம்தானே. அது என்ன சதவீதம் என்பதை அறிய உயர் அலுவலகத்தை நாட ஒவ்வொருவரும் ஆசைப்பட்டு அதற்கென திறமை உள்ள ஒருவரை நாட அவர் ரகசியக் கசிவுகளை அறிந்து சொல்கிறார். அதை வைத்து ஒவ்வொருவரும் தமக்கு எவ்வளவு வரும் என்று மனதுக்குள் கணக்கு போட்டுக் கொள்கிறார்கள். ஆனால் ஒருவர் மற்றவரிடம் அது பற்றி வெளிப்படையாக சொல்லிக் கொள்வதில்லை. பணியாளர்களின் மனநிலை மற்றும் குணங்கள் பற்றி நுட்பமாகச் சொல்லும் கதை. இறுதியில் நேரடியாக உள்ளூர் அலுவலகம் சென்று ஆணையை வாங்கி வர ஒருவரை அனுப்பி வைக்க அவர் மாலை திரும்பி வந்து, “நேரில் தரக்கூடாது என்பது சட்டம். ஆகவே பதிவு தபாலில் அனுப்பியாயிற்று,” என்று சொல்லி பதிவு எண்ணை கொடுத்து அனுப்புகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் மனம் தளர்ந்து போகிறது. இன்னும் மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டும். கதையின் இடையே முதிய பணியாளர் ஒருவர் அப்போதெல்லாம் இப்படி அடிக்கடி படி உயர்வு எல்லாம் கிடையாது. எப்போதோ ஒன்றுதான். விலைவாசி கட்டுக்குள் இருந்தது என்று - அலவன்ஸ் அதிகமாகிக் கொண்டே செல்வது அப்படி ஒன்றும் நன்னிமித்தம் இல்லை என்று - ஒரு முக்கியமான வரியை சொல்கிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆதவனின் ‘<i>ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்</i>’ சிறுகதை நிறைய பேசப்பட்டுவிட்ட சிறுகதை. டெல்லி அலுவலக பின்னணியில் ஒருவாறு தன்னோடு இருக்கும் அகர்வால் தன்னை திருப்திப்படுத்த அல்லது உகந்தவனாக காட்டிக்கொள்ள முயலுவதாக அவர் நினைப்பதும் அவருடனேயே ஒரே அறையில் பணி புரியவேண்டிய சிக்கலும்தான் கதை. நண்பராக வரும் ராமுவின் “பிடிக்கவில்லை என்றால் தவிர்க்கவேண்டியதுதானே” என்ற எளிமையான தீர்வை இவரால் செய்ய முடியவில்லை. காரணம் ராமுவே சொல்வதுபோல “நீ ஒரு வழவழா”. இறுதியில் இரண்டு பேருக்கும் தடுப்பு அமைக்கும் வேலையை செய்ய வருபவன் தனது கதைகளை சொல்ல ஆரம்பிக்கிறான். இவருக்கு தன் மேலேயே கோபம் வருகிறது. நடப்பியலின் முகமூடிகளை உளவியலாக சொல்லும் நீண்ட கதை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கந்தர்வன் எழுதிய ‘<i>கவரி</i>’ கதை பென்ஷன் ஆபீசில் வேலை செய்யும் ஒருவருடைய அனுபவம் சொல்லும் கதை. வயது முதிர்ந்த அப்பாவை வசதியாக இருக்கும் மகனும் முதியவரின் மனைவியும் நேரில் அழைத்துவந்து இவருக்கு மாதாமாதம் பென்ஷன் அனுப்புவது அரசாங்கம்தான் என்று சொல்ல வைக்கிறார்கள். முதியவர் தனது பென்சன் நின்றுபோய் பிள்ளைகள்தான் பென்சன் என்று சொல்லி அவரை சமாதானம் செய்கிறார்கள் என்று நினைக்கிறார். பதட்டமாக நாற்காலியில் சரிகிறார். கோப்புகளை பார்த்து நிஜ பென்சன்தான் என்றவுடன் திருப்தியாக போகிறார். தூர்தர்ஷன் நாடகத்தன்மையோடு தட்டையாக போய்விட்ட கதை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிந்துஜா எழுதிய ‘<i>ஆள்பவர்</i>’ கதை அரசாங்கத்தில் கேசவன் ஐ.ஏ.எஸ். ஒருவர் எதிர்கொள்ளும் சிக்கல். மிகவும் சிறப்பாக அவர் தயாரித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தை விரும்பி ஒரு புத்திசாலி அமைச்சர் தனது துறைக்கு அவரை நிர்ப்பந்தமாக மாற்றிக் கொள்கிறார். இதனிடையே கேசவனின் காதலி ஆண்டாள் அவரை அலுவலகத்திலேயே பார்த்து பேச வருகிறாள். அப்போது மந்திரியின் கண் அவள் மீது விழ அவள் பணியை தனது துறைக்கு மாற்றச்சொல்லி வேறொரு பெண் மூலம் தூது விடுகிறார். கேசவன் அவள் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டதாக சொல்கிறார். கேசவன் ஒரு தண்ணியில்லா காட்டுக்கு மாற்றப்படுகிறார். அப்போது ஒரு போன் வருகிறது. எதிர்க்கட்சி மாஜி மந்திரி, “நம்ம பக்கம்தான் வருகிறாய். நகர்ப்புற மேம்பாடு திட்டம் நீதான் செய்து தரவேண்டும். அடுத்த ஆட்சி நம்முடையதுதான்,” என்கிறார். இவர், “அதனாலென்ன, சரி,” என்கிறார். இதில் அரசியல் அதிகாரம் என்ற தேய்வழக்கை தவிர்த்து பார்க்கவேண்டும். மேல் அதிகாரிகள் நிலைமை ரோஜாப்பாதை அல்ல என்பதும், ஆனால் அவர்கள் தங்களது திறமையால் எந்த சூழலிலும் வேலை செய்யக்கூடியவர்கள் என்பதுமே செய்தி. இப்படியான கதைகளை ஐ.ஏ.எஸ். பணி புரிபவர்கள் எழுதினால் இன்னும் நுணுக்கமான விஷயங்கள் வரும். அவர்கள் என்னமோ பிரசங்க கதைகளும் கட்டுரைகளும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மணி ராமலிங்கத்தின் ‘<i>வருகை மற்றும் புறப்பாடு</i>’ கதையில் ரயில்வே ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் ஒரு நாள் புறநகர் ரயிலில் ஒரு பெண் சென்று வரும் அவதியைப் பற்றிய சாதாரணமான கதை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எம்.ஜி.சுரேஷின் ‘<i>ஷமீலா நடித்த படம்</i>’ கதை அவரது பாணி போல இல்லாத - ஆனால் வித்யாசமான கதை. ஆங்காங்கே கொஞ்சம் சுஜாதா நெடி தெரிகிறது. ஒரு சினிமா சென்சார் குழு உறுப்பினர் "ஆபாச பிட்" படம் ஓட்டியதாக தியேட்டர் உரிமையாளர் மேல் போடப்பட்ட வழக்கில் அரசு தரப்பில் சாட்சி சொல்ல கோர்ட்டில் காத்திருக்கிறார். ஆபாசப்படம் ஓட்டியே கோடீஸ்வரர் ஆனவர் அந்த உரிமையாளர். கோர்ட்டில் யாருமே இல்லை. ஒவ்வொருவராக வர இறுதியில் ஒரு பெண் நீதிபதி வருகிறார். இவர் நிலை தர்மசங்கடம். கூண்டில் நின்று சாட்சி சொல்கிறார். ஆனால் ஒரு வயது முதிர்ந்த வக்கீல் மிக சர்வ சாதாரணமாக இந்த கேஸை நீர்க்கடிக்கிறார். ஆபாசப் படத்தை போலீஸ் சீல் வைத்து கொண்டு வந்ததை இவர் மற்றும் எடிட்டர் ஒரு தனி அறையில் வைத்து பார்த்து பரிசீலித்து, ஆமாம், இது ஆபாசம்தான், என்று சான்று தரவேண்டும். அப்போதுதான் கேஸ் நிற்கும். கோர்ட்டில் காத்திருக்கும்போது, இவர் இரண்டு ஆண்டுக்கு முன் அந்த படத்தை பார்த்ததை நினைத்துப் பார்க்கிறார். ஷமீலா குளிக்கும் காட்சி. தாராளமாகவே அவள் குளிப்பதை கேமிரா விழுங்குகிறது. அப்போது கேமரா மேல்நோக்கி ஜன்னலை பார்க்க அங்கே இரண்டு கண்கள் தெரிகின்றன. அங்கிருந்து ஒரு டாப் அங்கிள் ஷாட். பிறகு கதவு தட்டப்படுகிறது. இவள் பதறி திறக்க முரட்டு ஆள் வந்து இம்சிக்கிறான். அவள் திமிர முயல... (இனி- நிவேதா பதிப்பகம். விலை 150 ) இந்த காட்சியில் காமிரா கோணங்கள், பின்னணி இசை, காமிராவின் நகர்வு என்று அனைத்தும் சொல்லப்படுகின்றன. எந்த ரீலில் எத்தனையாவது அடியில் எந்த எண் உள்ள இடம் ஆட்சேபனைக்குரியது என்று அவர் சொல்லவேண்டும் அல்லவா? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எதிர்பாராத தலைவலி இந்த சாட்சிக் கூண்டு. வக்கீல்கள். பெண் நீதிபதி. இவருக்கு சங்கடமாக இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கூண்டில் நிற்பவரிடம் முதிய வக்கீல் கேட்கிறார். “எதை ஆபாசம் என்கிறீர்கள்?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“நிர்வாணமாக குளிக்கும் காட்சி ஆபாசம்,” என்கிறார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“குளிக்கும்போது அப்படித்தானே இருக்க முடியும். இதிலென்ன ஆபாசம்,” என்று பெரிதாய் சிரிக்கிறார். அப்போதே இவர் கலகலத்து போகிறார். இன்னும் பிற விவரணைகளுக்குப் பின் சீல் செய்த பெட்டியில் உள்ள சீல்களின் எண்ணிக்கை எத்தனை என்று கேட்க - பெட்டி வரும்போது நான்கு போகும்போது ஐந்து என்று ஒரு பதிவில் இருக்க, மற்றொன்றில் வரும்போது ஐந்து போகும்போது நான்கு என்று இருக்க இந்தக் குழப்பத்தை வைத்து தியேட்டர் உரிமையாளர் வேண்டுமென்றே இப்படி செய்யவில்லை. யாரோ விரோதிகள் இப்படி நடுவில் ஒட்டி இவரைப் பழி வாங்கிவிட்டார்கள். உள்நோக்கமற்றது. ஆகவே சரியான குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் இவருக்கு தண்டனை தருவது முறையல்ல என்று சர்வ சாதாரணமாக கேஸை ஒன்றுமில்லாமல் அடிக்கிறார். சாட்சி சொல்ல வந்தவர் வெளியே போகும்போது ஒரு போஸ்டரை பார்க்கிறார். அது ஷமிலா நடித்த ஒரு படம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சென்சார் போர்டு உறுப்பினர் கதை என்பது வழக்கமில்லாத கதைக்களம். கோர்ட்டு சூழல்கள், வக்கீல்களின் அணுகுமுறை, பழக்கமில்லாதவன் போகும்போது உண்டாகும் பதட்டம், குழப்பம் என்று நுணுக்கமாக எழுதப்பட்ட கதை. பிட் படம் பற்றிய விவரணை மெல்லிய நகைச்சுவையோடு சாமார்த்தியமாக எழுதப்பட்டிருக்கிறது. (உதாரணமாக, தனி அறையில் காட்சிகளை போட்டு பார்க்கும்போது குப்பென்று வியர்த்துவிட்டது. உதவி வட்டார அலுவலர் கையிலிருந்த பேனாவை நழுவ விட்டுவிட்டார் )</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுப்ரபாரதி மணியனின்–‘<i>அதிகாரம்</i>’ சிறுகதை, ஒரு அரசு தொலைபேசி அலுலவலகத்தில் தண்ணீர் பிரச்சனை பற்றியது. தொலைபேசி கட்டணம் கட்டாததால் நகராட்சி தொடர்பை துண்டிக்க அவர்கள் பதிலுக்கு தண்ணீர் தொடர்பை துண்டிக்க, பிறகு சிபாரிசின் பேரில் சரி செய்யப்படுவது. இரு அதிகாரங்களுக்கு நடுவில் நடக்கும் நிழல் சர்ச்சை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எஸ்.சங்கரநாராயணனின் ‘<i>கவாஸ்கர்</i>’ கதை எனக்கு உவப்பானவற்றில் ஒன்று. பணி ஓய்வு பெறும் கணேசன் என்பவரின் கடைசி இரண்டு நாட்கள் கதை. மிகவும் சுறுசுறுப்பு, பணி அர்ப்பணிப்பு, நேரம் தவறாமை எல்லாம். புதிதாக வரும் மேனேஜர் சிவாஜி ராவிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். நுனி உதட்டில் சிகரெட்டை வைத்துக்கொண்டு ஜாலியாக பேசும் இளைஞன் அவன். பேச்சு எங்கெங்கோ சென்று கவாஸ்கர் இந்தியா லெவன் அணியில் அடித்த 73 ரன் பற்றி பேச்சு வர அவர் இனி விளம்பரங்களில் நடிக்கப் போகவேண்டியதுதான். பார்ம் போய்விட்டது. இளைஞர்கள் வந்துவிட்டார்கள் என்று போகிறது பேச்சு. மறுநாள் மதிய சாப்பாடு இவனோடு என்பதால் சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் கணேசன் வந்துவிடுகிறார். அவர் இருந்த அறை ஒரே இரவில் முற்றிலும் மாறி இருக்கிறது. அவர் பணிபுரிவர்களை அறிமுகப்படுத்தி பேசிவிட்டு கிளம்புமுன் பழைய பொருட்கள் போடப்படும் அறையை பார்க்கும்போது அவர் இதுநாள் வரை உபயோகித்து வந்த நாற்காலி கிடக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புதியவர்கள் வரவும் பழையவர்களின் நகர்வும் அழகாக சொல்லப்பட்ட கதை. இதில் இளைஞர்கள் வேகம் மட்டுமல்ல விவேகமும் கொண்டவர்களாக உருவாகி மேலே வருகிறார்கள். வேலைகளை சரியாக செய்து முடிப்பதுவே முக்கியம். மற்றபடி பிற அலுவலக நிமித்தங்கள் இறுக்கங்கள் தேவையில்லை எனும் எண்ணம் மேலெழுந்து வருவதை எந்த பிரச்சார தொனியும் புகாரும் இல்லாமல் மென்மையாக சொல்கிறார். முன்னுரையில் கல்யாணராமன் சொல்லி இருப்பதைப் போல சிவாஜி கணேசன் ரஜினி தலைமுறை இடைவெளியை கூட உணர்த்துகிறாரோ என்று தோன்றுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழ்மகன் எழுதிய ‘<i>தகவல்</i>’ சிறுகதை மிகச் சாதாரணமான கதை. அலுவலத்தில் பணியாள் தெருவில் செல்லும் சைக்கிள்காரன் மீது விளையாட்டாக காகிதத்தை கிழித்து வீசுகிறான். அவனுக்கு தெரியாது, அது முக்கியமான டெண்டர் ரகசிய கோப்பு என்பது. தகவல் கசிகிறது என்று அவன் கைது செய்யப்படுகிறான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுஜாதாவின் ‘<i>நிலம்</i>’ கதை ஏற்கெனவே நன்கு அறியப்பட்ட கதை. டெல்லியில் அரசு அலுவலகத்தில் உள்ள ஒருவர் கிருஷ்ணசாமி - தனது மேலதிகாரிகள் தொடர்பின் மூலம் பிளாட் ஒதுக்கீடு நடந்ததில் உள்ள குழப்படியை சரிசெய்து தரவேண்டிய நிர்பந்தம். மல்ஹோத்ரா, கிச்சாமி, பார்த்தசாரதி என்று டெல்லி வாசம் வீசும் அலுவலக சூழல். பிளாட் ஒதுக்கும் எண்ணை போடுவதில் குழம்பி கோவில் கட்டுவதற்காக உதவி கேட்பவரும் பெரிய அதிகாரி. கோப்புகள் மற்றும் பதிவுகள் இருப்பதை மாற்றி எதுவும் செய்ய முடியாது எனும் நிலைமை. அரசாங்க வழிமுறை சிக்கல்கள் பேசப்படுகின்றன கதையில். வேறு வழியே இல்லாத நிலையில் உயர் மூத்த அதிகாரியை சமாளிக்க ஒரே வழி. ஹோட்டலில் ரூம் ஏற்பாடு செய்வது. செய்து விடுகின்றார். சில நாட்கள் கழித்து பிளாட் ஒதுக்கீடு ஆகிவிட்ட சந்தோஷத்தில் எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள். இந்த கலியுகத்தில் எல்லாத்தையும் அந்த கிருஷ்ணன்தான் நடத்தி வைக்கிறான் என்று. “கிருஷ்ணசாமி லேசாக சிரித்துக்கொண்டார்” என்று முடியும் கதையில் பாத்திரத்தின் பெயரை கிருஷ்ணசாமி என்று வைத்தது யதேச்சை அல்ல என்பதை கவனிக்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மதியழகன் சுப்பையாவின் ‘<i>இரங்கல்</i>’ சிறுகதை - அலுவலகத்தில் உடன் பணிபுரியும் ப்ரதிமா என்ற பெண்ணின் அப்பா இறந்துவிட துக்கம் விசாரிக்க சென்று திரும்புவதுதான். அலுவலகத்தில் மேனேஜர் உட்பட பலரும் அவளுக்கு கூடுதல் அனுசரணையாகவும் அதிக கவனமும் கொள்வது என்பது இப்போது படிக்கும்போது மிகவும் தேய்ந்து போனதாக இருக்கிறது. போன இடத்தில் என்ன பேசுவது யார் துவங்குவது என்று நிலவும் மெல்லிய குழப்பமும் ஒருவழியாக கிளம்பி திரும்புவதும் கதை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சாந்தனின் ‘<i>கிருஷ்ணன் விடு தூது</i>’ இலங்கை தமிழ் பின்னணியின் கதை. ஒரு நன்செய் நிறுவனம் தனது லெட்டர் ஹெட்டில் பெயர்களை எல்லாம் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதி தமிழை தவிர்த்திருக்கும். இதற்கு ப்ரூப் பார்க்க நேர்கையில் ஒருவர் இதை குறிப்பிட்டு விவாதிக்க மேல்மட்ட உறுப்பினர்கள் பிறகு பார்த்துக் கொள்ளலாம் நேரமில்லை என்று சமாதானம் சொல்ல, அதையும் மறுத்துக் கேட்க, ஏற்கெனவே அச்சானது எல்லாம் வீண் என்று அவர்கள் சொல்ல, அந்தச் செலவை நாங்கள் ஏற்கிறோம் ஆனால் தமிழ் சேர்த்து அச்சடிக்கலாம் என்று இவர்கள் சொல்ல, அதற்கும் அவர்கள் கால தாமதம் என்று சொல்ல, இறுதியாக இவர்கள் இருபத்தாறு பேரும் ராஜினாமா செய்வதாக முடிகிறது கதை. தமக்கான அடையாளங்களை இழக்கப் பொறுக்க முடியாத மக்களின் நிலையை சொல்லும் இந்த கதைக்கு வைத்த தலைப்பு பொருத்தம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><i>இன்றைய பணிச்சூழலும் இலக்கியமும் </i></b></div>
<div style="text-align: justify;">
<br />
தற்போதைய சூழலில் வேலைசூழுலகு இருப்பதை இப்போது இருப்பவர்களின் புதிய கதையாக கொண்டுவர வேண்டும். மாறிவரும் உலகை எளிதாக காட்டிவிடும் அது. உதாரணமாக ஐடி துறையில் இருக்கும் வேலைசூழ் உலகு என்பது எழுதப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அங்கே இருப்பவர்கள் எழுதுவதில் புகுவதில்லை. எழுதும் சிலரும் சித்தாந்தங்களை சுமந்து கொண்டு இம்சிக்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரண்டு வருடங்கள் முன்பு ஒரு தெலுகு மொழியாக்க கதை படித்திருந்தேன். அலுவலகம் செல்லும் பெண், தாய்ப்பாலை புகட்டும் பாட்டிலில் வார்த்து ப்ரிட்ஜில் வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை மனமில்லாமல் பார்த்துக்கொண்டே கிளம்பும் அந்த கதையைப் படித்தேன். குறைந்தபட்சம் ஒரு வரி கூட கனமான வரிகளோ வார்த்தை ஜாலங்களோ இல்லை. ஆனால் கதை இம்சிக்கும். கதைக்களனின் கனம் அது. சமீபமாக மிருக காட்சி சாலையில் புலியை கவனித்துக் கொள்ளும் பணியாள் பற்றிய கதை தினமணியில் வந்திருந்தது. புதிய களங்கள் வேண்டும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்று சிறுகதைகள் மிகச்சில களங்களில் உழலுகிறது. போலி பெண்ணியங்கள், உரத்த குரலில் கத்தும் கதைகள், இறுதியில் சுபம் கதைகள், வயதானவர்கள் கைவிடப்படும் கதைகள், எதிர்பாலின ஈர்ப்பு, சுயபாலின பரிசோதனை, நொதித்து நுரைக்கும் வெளிப்படைக் காமம், அதிர்ச்சி தரும் உறவுகள் அல்லது எதிர்த்தன்மை கொண்டவை. இவையெல்லாம் பழையதாகிக் கொண்டு வருகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொழில்நுட்ப வியாபகத்தில், சிறுகதைகள் எழுதுவது மிக எளிதாக இருக்கிறது. படிப்பதுதான் கஷ்டமாக ஆகி வருகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தற்போதைய அலுவலக சூழல் முற்றிலும் மாறிய ஒன்று. நிறைய சம்பளம் என்பது தவிர வேறு எதையுமே அறியாத தலைமுறை. இறுக்கங்களை தளர்த்திக்கொள்ள கேளிக்கைகளைகூட அலுவலகமே நிர்ணயிக்கிறது. இவை ஏன் எழுதப்படுவதில்லை என்று திலீப் குமாரிடம் கேட்டபோது "அதை அவர்கள்தான் எழுதவேண்டும். இல்லாவிட்டால் செயற்கை ஆகிப்போகும்," என்கிறார். முழு உண்மை. அந்த வகையில் ஆர்.வெங்கடேஷின் ‘<i>இடைவேளை</i>’ நாவல் எனக்கு கொஞ்சம் சம்மதமாக இருந்தது. வேறு சிலரின் கதைகள் கூட வந்திருக்க கூடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐடி துறையில் பணிபுரிபவர்கள், ஊடகத்துறை, ஈ-காமர்ஸ் துறை, எம்டெக் படித்துவிட்டு உணவு டெலிவரி நிறுவனத்தில் இரு சக்கரத்தில் அலைபவர்கள், ஐடி வேலையை உதறிவிட்டு விவசாயம், ஆர்கானிக் பால் என்று இறங்குபவர்கள், பகுதி நேர விரிவுரையாளர்கள், என்னும் எத்தனையோ - இன்றைய புதுமுக பணியாளர்கள் உள்ளனர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த தொகுப்பிலுள்ள கதைகளுக்கு கதை பிரசுரம் ஆன ஆண்டு மற்றும் பத்திரிகை பெயர் போட்டிருக்கலாம். சற்று மேற்சொன்ன காரணமாக 'வேலைசூழுலகு பகுதி II' - சங்கரநாராயணன் தொகுக்கவேண்டும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<i>வேலைசூழுலகு </i><br />
<i>தொகுப்பு: எஸ்.சங்கரநாராயணன் </i><br />
<i>நிவேதா பதிப்பகம்</i><br />
<i>டிசம்பர் 2017</i></div>
நட்பாஸ்http://www.blogger.com/profile/11647556064101907512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-40547267572162606042018-06-22T05:31:00.000+05:302018-06-22T05:31:18.605+05:30கொமோரா - லக்ஷ்மி சரவணகுமார் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<a href="http://clearlakes.blogspot.in/">வை. மணிகண்டன்</a></div>
<br />
கதிர் என்ற தனிமனிதனின் கதை வழி கிழக்கும் மேற்கும் இணையும் காத்திரமான ஒரு படைப்பு ‘கொமோரா’, லட்சுமி சரவணகுமார் அவர்கள் ‘பேர் சொல்ல ஒரு பிள்ளை’, ‘கானகன்’, புதினத்தின் பலமாக இருந்த நிகழ்த்திக் காட்டும் அம்சம் ‘கொமோரா’வில் மெருகேறி இருக்கிறது. பல்வேறு நிலக்காட்சிகளின் ஊடே கதிர் என்ற மையக் கதாப்பாத்திரனின் மனவெளி தெளிவாக பதிவாகி இருக்கிறது. மையக் கதையின் வீச்சும், கிளைக் கதைகள் ஏற்படுத்தும் தாக்கமும் இந்த நாவலை ரத்தமும் சதையும் கொண்ட உயிரோட்டமான படைப்பாக மாற்றுகின்றன. சிறைச்சாலை மன்னிப்பும் நன்னடத்தையும் விற்கப்படும் இடமாகவும், "தொழில்" பழகும் கேந்திரமாகவும் மாறியுள்ள அவலச் சித்திரம் நாவலை வாசிக்கையில் கிடைக்கிறது. <br />
<br />
<br />
<br />
<div style="text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5JEJbGrTIOELvv1X4IkL-Dqk8KVsBgfcPy8dvKO6v56nfcqC5ztCur0dS3MdnZBD7rpOiLbrkH9BdtwAINAFwRocayKqyQHP9WQK5TgjOHGXQY7DPLm_aUJwgmlApdfOEDcCEZhp4QUM/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25AE%25E0%25AF%258B%25E0%25AE%25B0%25E0%25AE%25BE.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="500" data-original-width="331" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5JEJbGrTIOELvv1X4IkL-Dqk8KVsBgfcPy8dvKO6v56nfcqC5ztCur0dS3MdnZBD7rpOiLbrkH9BdtwAINAFwRocayKqyQHP9WQK5TgjOHGXQY7DPLm_aUJwgmlApdfOEDcCEZhp4QUM/s320/%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25AE%25E0%25AF%258B%25E0%25AE%25B0%25E0%25AE%25BE.jpg" width="211" /></a> </div>
<br />
<a name='more'></a>கைவிட்ட தந்தை, அரவணைப்பில்லாத பால்யம், பாலியல் வன்முறைகள், சாதிப் பாகுபாடு, பொருளாதார நெருக்கடி என பல்முனைகளில் அநாதரவான நிலையில் வாழ்க்கையைத் தொடங்கும் ஒரு தனிமனிதனின் அகத்தேடலுக்கான விடையாக உள்ளது இந்தப் புதினம். அந்தத் தனிமனிதனை கைவிடாது தொடர்ந்து வழிகாட்டும் உள்ளுறையும் ஆற்றல், தொடர்ந்து அவனுக்கு உதவிக்கொண்டே இருக்கும் சகமனிதர்களின் அன்பும் அரவணைப்பும், ஒன்றை ஒன்று உந்தி புதினத்தின் முடிவில் அவனது தீராத கேள்விகளுக்கு விடை தர முயல்கின்றன. "தகப்பன்" என்ற கருத்தாக்கம், "தகப்பன்" என்கிற ஸ்தானம் மரபின் தொடர்ச்சியாக, காலத்தின் கனிந்த ஞானமாக, அன்பின் வழியாக, வெற்று வீம்பாக, அப்பட்டமான சுயநலமாக என பல பரிமாணங்களில் தன் அடுத்தத் தலைமுறையான கதிர் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.<br />
<br />
இங்குதான் கிழக்கும் மேற்கும் என்று பரவலாக சொல்லப்படுகிற இருமையை ஒரு வாசகன் பொருத்திப் பார்க்க இயல்கிறது. மேற்கின், ஸ்திரமாக நம்பப்படுகிற தகப்பன் குறித்த ஓடிபஸ் மற்றும் பிராய்ட் கோட்பாடுகள், கிழக்கில் போதுமானவையா என்பது இன்றைய தலைமுறை வாசகன் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி. இறுதியில் கதிர் எடுக்கும் முடிவு, ஒரு இருத்தலிய நாடகத்தின் முடிவுப் பகுதியாக, ஒரு நவீன ஐரோப்பிய சினிமாவின் இறுதிக் காட்சியாக முதல் வாசிப்பிற்கு தெரிந்தாலும், ஏற்கனவே மரபின், கூட்டான மனசாட்சியின் நீட்சியாக வழி வழி வந்த நடைமுறை மூலம் எடுக்கப்பட்ட முடிவு என்றே கருத இயல்கிறது. இறுதியில் வெறுப்பின் இருப்பை உறுதி செய்யும் விதமாக, இறுதிக்குச் சற்று முன் அன்பின் பிரவாகமாக நிகழும் காட்சிகள் இந்த இருமையை நமக்கு தெளிவுபடுத்துகின்றன. <br />
<br />
ஏகாதிபத்தியத்தின் வழி ஏற்பட்ட பூடகமான ஒரு சுயநலப் போக்கும், அது விதைத்த அன்பற்ற, ஊதியக் கணக்கிற்கும் லாபக் கணக்கிற்குமான போட்டியை நிராகரிக்கும் நிலைப்பாடும் கொண்ட ஆளுமையாக இந்த நாவலின் நாயகன் கதிரை நாம் உருவகப்படுத்தலாம், பயணமும் துறவு எண்ணமும் அவன் மனவெளியில் இடையறாது ஓடிக் கொண்டே இருக்கின்றன. கதிரின் வெறுப்பு அவசரத்தினாலோ மடமையினாலோ கையாலாத்தனத்தினாலோ விளைந்த ஒன்று அல்ல, மனிதன் தொடர் போராட்டத்தின் வழி அடைந்த பக்குவத்தின் அணையா கனல் இந்த வெறுப்பு. தன்னிடம் உள்ள வெறுப்பின் இருப்பை, அதன் நியாயத்தை, முடிந்தவரை புரிந்து கொள்ள கதிர் முயல்கிறான். கதிர் எடுக்கும் முடிவு ஏற்கனவே வாசகன் மனதளவில் உணர்ந்தே இருக்கும் இந்த விஷயத்தை மரபின் தொடர்ச்சியாகவும், ஆயிரம் ஆண்டுகள் தாண்டி வந்து கொண்டிருக்கும் அறத்தின் குரலாகவும் வாசகன் கருதுவான். <br />
<br />
எழுத்தாளர் சாருநிவேதிதா அவர்கள் துருக்கி பற்றிய கட்டுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார் <br />
<br />
“துருக்கியைக் காட்டிலும் இந்தியா ஏழை நாடு. ஆனால் இந்தியாவில் அந்த ஹூசுன் இல்லை. இங்கே எல்லாவிதமான பிரச்சினைகளும் இருந்தன, இருக்கின்றன. வறுமையால் தற்கொலைகூட செய்துகொள்கிறார்கள். ஆனால் ஹூசுன் இல்லை. ஏனென்றால், இங்கே இருக்கும் பிரச்சினைகள் தூலமானவை (physical). எத்தனைதான் பிரச்சினை என்றாலும் முனீஸ்வரனுக்கு சாராயத்தைப் படைத்துவிட்டு ஒரு ஆட்டத்தைப் போட்டால் மறுநாளின் துயரத்துக்கான வலு கிடைக்கும். ஆனால் ஐரோப்பா அப்படி இல்லை. அந்த பூமியின் மீது நூற்றாண்டுகளாய்க் கவிந்து கொண்டிருக்கும் பனியைப் போல் கவிகிறது அவர்களின் துயரம். …”<br />
<br />
எந்த ஒரு புதிய தத்துவமும் அதுவரை இருந்த சித்திரத்தை அழித்து புதிய ஒன்றை வரைய முற்படும்போது ஏற்படும் பேரழிவை நாவலின் கம்போடியா பக்கங்கள் நமக்கு சொல்லுகின்றன . எந்த ஒரு முன்னெடுப்பும் ஏற்கனவே உள்ள ஒரு உரையாடலின் தொடர்ச்சியாக இருக்க வேண்டியதன் நியாயத்தை நமக்கு உணர்த்துகின்றன. <br />
<br />
நாவலில் அழகர்சாமி கடைசி வரை தன்னை மட்டுமே தன் சுயநலத்தை மட்டுமே கவனத்தில் கொள்பவன், இது எதேச்சையாக வார்க்கப்பட்ட குணாதிசயம் அல்ல - ஏகாதிபத்தியத்தின் விளைவில் ஏற்பட்ட தீவிர தன்முனைப்பும் சுயநலமும் கலங்கிய ஒரு குணவார்ப்பாக நாம் அழகர்சாமியை உருவகப்படுத்தலாம். அழகர்சாமி போன்ற தனிமனிதனின் சுயநலமும், மரபான கூட்டு வாழ்க்கையில் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கும், கதிர் போன்றவர்களின் வெறுப்பும் சந்திக்கும் இடம் கொமோரா. முன்னது ஏகாதிபத்தியத்தின் குழந்தை. பின்னது ஆயிரம் ஆண்டு கூட்டு வாழ்க்கை கொடுத்த பக்குவதின் கனல். <br />
<br />
‘டுன்கிர்க்’ திரைப்படம் இந்த நாவலுடன் இணைத்து பார்க்கச் சிறப்பு - தனித்து விடப்பட்டோம் என்று உணரும் தனி மனிதன் - இதை கடலுக்கும், தீவில் அகப்பட்ட வீரர்களுக்கும் இணையாக கருதலாம் - அந்த தனி மனிதன் தன் கற்பனா சக்தி வழியும் உள்ளார்ந்த ஆற்றல் வழியும் சக மனிதர்களின் உதவி வழியும் கரை சேர்கிறான் - கற்பனைக்கும் ஆற்றலுக்கும் இணையாக விமானப் படையையும் வீரர்களின் போராட்டத்தையும் பாலத்தையும் இணையாக உணரலாம். கதிரின் வாழ்க்கையும் ஒரு வகை சாராம்சத்தில் இதையே உணர்த்துகிறது.<br />
<br />
<br />
லக்ஷ்மி சரவணகுமார், கிழக்கு பதிப்பகம்<br />418 பக்கங்கள், ரூ.350<br />இணையத்தில் வாங்க- <a href="https://www.amazon.in/Gomorrah-Lakshmi-Saravanakumar-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/dp/B07928X54N/ref=sr_1_2?s=books&ie=UTF8&qid=1529625586&sr=1-2&keywords=Lakshmi+Saravanakumar">Amazon</a>, <a href="https://www.commonfolks.in/books/d/komora">CommonFolks</a>, <a href="http://puthinambooks.in/komora">Puthinam Books</a><br /><br />
<br /></div>
நட்பாஸ்http://www.blogger.com/profile/11647556064101907512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-70063433972486976722018-06-01T04:03:00.000+05:302018-06-01T04:06:08.994+05:30துலங்கிவரும் உயிர்க்கோலம் - அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதிய சதைகள் சிறுகதைத் தொகுப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<style type="text/css">
p.p1 {margin: 0.0px 0.0px 0.0px 0.0px; font: 12.0px 'Tamil Sangam MN'}
p.p2 {margin: 0.0px 0.0px 0.0px 0.0px; font: 12.0px 'Tamil Sangam MN'; min-height: 12.0px}
span.s1 {font: 12.0px Helvetica}
</style>
<br />
<div class="p1" style="text-align: justify;">
அனோஜன்<span class="s1"> </span>பாலகிருஷ்ணன்<span class="s1"> </span>பற்றி பதாகையில் <a href="https://padhaakai.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/" target="_blank">சுனில் கிருஷ்ணன் எழுதிய விமர்சனம்</a> மற்றும் எடுத்த பேட்டி மூலமாக முதல் முறை அறிந்தேன். அதற்கு முன்னரே ஜெயமோகன் தளத்தில் அவரது படைப்புகளைப் பற்றிய குறிப்புகள் படித்திருந்தாலும் சுனில் கிருஷ்ணன் எழுதிய அறிமுகம் வழியாகத்தான் அனோஜனின் கதைகள் பற்றி ஒரு முழுமையான சித்திரம் கிடைத்தது. புதுக்குரல்கள் எனும் தொடரின் வழியாகத் தெரிந்த அவரது கதையுலகம் கதைகளைப் படிப்பதன் வழி பெரியதாகத் தொடங்கியது. “சதைகள்” அவரது முதல் தொகுப்பு. பதாகை பேட்டியில் அவரது ரெண்டாவது தொகுப்பான “பச்சை நரம்பு” சிறுகதையின் வாசலைத் தட்டுவதற்கானத் தனிப்பட்ட குரலை உடையது எனக் குறிப்பிட்டார்.<span class="Apple-converted-space"> </span></div>
<div class="p2" style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhX3pZ6qxaJHv1qxgQpapb3kJtQk7QkfVwco7QL2Pb2HaJ_SgMuXpu6n9LEFClKkUJOXRNLxLkIa1dFGXfqXTD5ZnAKZle5DUK3HMqZE2WVv6yiaZCJYORuNIjORWZyC7tw9i-LJombbfw/s1600/%25E0%25AE%259A%25E0%25AE%25A4%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D.jpeg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="275" data-original-width="183" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhX3pZ6qxaJHv1qxgQpapb3kJtQk7QkfVwco7QL2Pb2HaJ_SgMuXpu6n9LEFClKkUJOXRNLxLkIa1dFGXfqXTD5ZnAKZle5DUK3HMqZE2WVv6yiaZCJYORuNIjORWZyC7tw9i-LJombbfw/s1600/%25E0%25AE%259A%25E0%25AE%25A4%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D.jpeg" /></a></div>
<div class="p1" style="text-align: justify;">
<br /></div>
<div class="p1" style="text-align: justify;">
சதைகள் தொகுப்பில் பெரும்பாலானக் கதைகள் ஒரேமாதிரியானக் கட்டமைப்பில் அடங்காதவை. ஒரு அறிமுக எழுத்தாளரின் கரடுமுரடான முயற்சிகள் என்றே அதைச் சொல்லலாம். அனோஜனும் அப்படித்தான் அதைப் பற்றி தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். என் வாசிப்பில் மிக முதிர்ந்த வகை இலக்கிய எழுத்தைப் போலச் செய்வதை விட இப்படிப்பட்ட தொடக்க எழுத்தில் கலாபூர்வமான கீற்றுகள் ஜோலிக்கும். எவ்விதமான பூடகமும், இலக்கிய வகைமைக்குள் அடக்கவேண்டிய கட்டாயமும் அல்லாது எழுதப்பட்ட ஒரு தொகுப்பாக இதைப் பார்க்கிறேன்.இதுவே இந்தத் தொகுப்பின் மிகப்பெரிய பலம்.</div>
<div class="p2" style="text-align: justify;">
<br /></div>
<div class="p1" style="text-align: justify;">
தொகுப்பின் முதல் கதையான <b>வேறையாக்கள்</b> கதை ஒரு பையனின் முறிந்த காதலைப் பற்றிய விவரணையாகச் சம்பிரதாயமாகத் தொடங்குகிறது. நேரடியாகச் சொல்லிக்கொள்ளாவிட்டாலும் ஒருவருக்குள்ளும் கிடந்த காதலை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் வீட்டில் சொல்ல நேர்கிறது. இருவேறு ஜாதி ஆட்களாக இருப்பதால் சந்திப்பதும் கூடத் தடையாகப்போகும்போது காதலைப் பரிமாறிக்கொள்ளாமலேயே இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். சொந்தத்துக்குள் செய்துகொள்ளும் திருமணத்தில் பிறக்கும் குழந்தைக்கு உடல் ஊனத்திற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் எனும் முடிவை நோக்கிக் கதையை நகர்த்தியிருந்தாலும் கடைசி வரி இதை மேம்பட்ட கதையாக மாற்றியிருக்கிறது. என் பிள்ளை ஊனமாகப் பிறந்துவிட்டது எனும் வரி அதுவரை இல்லாத ஒரு நெருக்கத்தை நமக்கு அவர்களோடு உருவாக்கிவிடுகிறது. எவ்விதமான ஆட்களையும் ஆட்டிப்படைக்கும் மானுட கரிசனத்தைத் தொட்டுக்காட்டும் வரி. வேறையாக்களாக எப்படி ஆவர்?</div>
<div class="p2" style="text-align: justify;">
<br /></div>
<div class="p1" style="text-align: justify;">
தலைப்புக் கதையான <b>சதைகள்</b> மிகவும் சம்பிரதாயமான கதைக் கருவைக் கொண்டது. மனதின் சாயலுக்கேற்ப ஒவ்வொரு சமயத்தில் வெவ்வேறு வித உணர்வுகளை எழும்பும். அதுவே, பெண்களைத் தமக்கையாகவும், தாயாகவும், மனைவியாகவும் நம் மனதைப் பலவிதப் பிளவுகளாக ஆக்கிக்கொண்டு சமூகத்தில் இயங்கச் செய்கிறது. நிர்தாட்சிண்யமாக நாம் அப்பிரிவுகளை ஏற்றுக்கொண்டு, சமூகம் அங்கீகரித்த கோட்டுக்குள் மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம். ஏதோ ஒரு குலவிதிக்குக் கட்டுப்படும் அமைப்பின்படி நடப்பவர்கள் ஆகிறோம். சதைகள் நாயகன் நம்மைப் போல சராசரியானவன். வேலை விஷயமாக கொழும்புக்குப் பயணம் செய்பவன் அங்கு ஒரு விபச்சாரியிடம் செல்கிறான். அவனது காம ஆசைக்குக் கட்டுப்படும் பெண்களைத் தேடுவதில் அவனுக்கு எந்த மனத்தடையும் இல்லை. எல்லாரும் செய்வதை தானும் செய்தால் என்ன? அதுவும் அவன் குடும்பத்துக்கு இது தெரியப்போகிறதா எனும் இலேசான கேள்விகளைக் கேட்டுக்கொண்டு மனதைச் சமாதானப்படுத்திக்கொள்கிறான். ஒரு வேளை இந்த வேலைக்கு வரப்போவதற்கு முன்பே அவனது திட்டமாக இது இருக்கலாம். விபச்சாரி<span class="Apple-converted-space"> </span>மார்பில் “மாமிசத்தின் மீது பாயும் புலி போல” பாய்கிறான். அவனது வேட்கை தீர்ந்தபின் அறைக்குத் திரும்புகிறான். அதுவரை பெண் உடலினால் எழுச்சி அடைந்தவன் பிற பெண்களைப் பார்த்து சலிப்படைகிறான். பர்ஸை அங்கேயே விட்டு வந்தவன் மீண்டும் அவளது அறைக்குச் செல்லும்போது அவளது முலைக்காம்பில் ஒரு குழந்தை பால் குடித்துக்கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்து திடுக்கிட்டுப்போகிறான். மீண்டும் அறைக்குத் திரும்புபவனின் மனம் சதைகளின் மீதான அசூயையை அடைகிறது. கைவிடப்பட்ட மூதாட்டிகள், பிச்சை எடுப்பவர்கள், தொய்வடைந்த சதைகள் கொண்டவர்கள் என அவனது பார்வை நிஜத்தின் மீது படிகிறது. ஆனால் இதுவும் மாயை தான். பின்னர் வீடு திரும்பும் பயணத்தில் கச்சிதமான உடலைக் கொண்ட பிற சிங்களப் பெண்களைப் பார்த்து மனக்கிளர்ச்சி அடைகிறான். ஆனால் இம்முறை அவனே இந்த மன ஊசலாட்டத்தை வெறுக்கிறான். சதை என்பது வெறும் திரட்சியின் தொகையல்ல. அது எங்கோ மனதின் ஆழத்தோடு தொடர்பு கொண்டிருக்கிறது. கூர்நோக்கியைக் கொண்டு பார்க்கும்போது சதையில் திளைக்கும் வெண்புழுக்கள் அருவருப்பூட்டுபவை. வீட்டுக்குத் திரும்பியபோது அவனது ரெண்டு வயது மகன் முலைப்பால் குடிப்பதைப் பார்க்கிறான். அலைபாயும் சிறுவனின் கண்களை அவன் காண மறுக்கிறான். குற்ற உணர்ச்சியினால் அல்ல என்பது மட்டும் நிச்சயம்.</div>
<div class="p2" style="text-align: justify;">
<br /></div>
<div class="p1" style="text-align: justify;">
இக்கதையுடன் அனோஜனின் அடுத்த தொகுப்பில் வெளியான <b>பச்சை நரம்பு</b> கதையைச் சேர்த்து படிக்க முடியும். மனதின் பலவிதமான போலச்செய்யும் மாறுவேஷங்களை ஆண் பெண் தேக உறவின் பிணைப்பு வழியாகக் காட்டுகிறார். சதை திரட்சி என்பது ஒருவிதத்தில் மனதில் வெறி கொண்டு நிற்கும் காமத்தின் புற உருவம். பசித்தவனுக்குச் சோறு போல இது மனதின் தேவையைப்பூர்த்தி செய்யும். அதனால் மனதின் வேகத்தை உடலுக்குக் கொடுக்கிறது. மனம் பலவித சமாதானங்களின் வழி அந்த வேட்கையைத் தணித்துக்கொள்ளப்பார்க்கிறது. சதைகளின் நாயகன் அடுத்த பயணத்தின் போதும் இதே வரிசையில் நிகழ்வுகளை எவ்விதமான குற்ற உணர்ச்சிக்கும் ஆட்படாமல் செய்துவிடுவான் என்பது எந்த சந்தேகமும் இல்லை. மனிதன் என்றென்றும் ஆட்கொள்ளும் வலை இது. அதனாலேயே அன்றைய புதுமைப்பித்தன் முதல் இன்றைக்கு அனோஜன் வரை எல்லாரும் ஒருமுறையேனும் எழுதித்தீர்க்கும் கருப்பொருளாக இது அமைந்துவிடுகிறது.</div>
<div class="p2" style="text-align: justify;">
<br /></div>
<div class="p1" style="text-align: justify;">
<b>ஃபேஸ்புக் காதலி</b> - எளிமையானக் கதையாக இது இருந்தாலும் ஆண் பெண் உறவுகளுக்குப் பின்னால் இருக்கும் உரிமை கோரல், பொறாமை மற்றும் ஆசை பற்றிய நல்லதொரு சித்திரம் அமைந்திருக்கிறது. திருமணமான தம்பதிகள் தங்களது திருமணமாகாத நண்பர்களைச் சந்திக்க நேரும் சங்கடங்கள் பல. ஓரிரு வருட திருமண வாழ்விலேயே பல காலங்கள் கடந்து எங்கோ வந்துவிட்ட உணர்வும், சுதந்திரம் மீதான ஏக்கமும் நிறைந்திருக்கும். இதில் பழைய காதலியோட சாட் செய்யத் தொடங்கும் கணவன் மீது பொறாமை கொள்ளும் மனைவியைப் பார்க்கும் அதே வேளையில், அவனது இயல்பான சந்தோஷங்களையும் குறும்புகளையும் விட்டுத்தர இயலா மனைவி இயல்பாக ஒரு செல்லக் கோபத்துடன் தான் உடைத்த மடிக்கணினியைச் சீர் செய்து கொடுப்பதும் மிகவும் நுட்பமான இடம். தங்களுக்குள் இருக்கும் உறவு சாகக்கூடாது என்பதற்காகவும், ஏதோ பறிபோனதாகக் கிடந்த கணவனின் உணர்வுகளை மீட்கவும் அவள் ஒரு எல்லைக் கோட்டைத் தாண்டி அவனை அனுமதிக்க சம்மதிக்கிறாள். நாளை இதுவே கூட அவர்களது உறவுக்குப் பாதகமாக அமையலாம். ஆண் பெண் உறவில் இருக்கும் சிறு சிறு ஊடல்கள் வெயிலில் உணரும் நிழலின் அருமை போல கூடலின் அருமையைக் காட்டிவிடும். இதற்காக பெண் தனது சுதந்திரக்கயிறை சிறிது தளர்த்திக்கொள்ள தயாராவாள் - அவனது குதூகலத்துக்காக அல்ல அது, அவர்களிடையே இருந்த உறவின் உயிர்ப்பை கையகப்படுத்தும் அவளது சுயநலத்தின் காரணமாக. இது ஒரு ரிஸ்கியான பயணம் என்றாலும் கூட பெண் மனம் அந்த ஆழத்தைத் தொட்டுப்பார்க்கத் தயங்குவதில்லை. அனோஜன் இதை மிக சுலபமாகக் கையாண்டுள்ளார்.</div>
<div class="p2" style="text-align: justify;">
<br /></div>
<div class="p1" style="text-align: justify;">
<b>அண்ணா</b> - சிறுகதை இந்தத் தொகுப்பில் யுத்த காலத்தை நினைவூட்டும் சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட கதை. தனது விமர்சனத்தில் சுனில் கிருஷ்ணன் குறிப்பிட்டது போல இலங்கை யுத்தத்தை மையக் கருப்பொருளாகக் கொண்டு எழுதும் பெரும்பாலான இலங்கை எழுத்தாளர்களில் அனோஜன் தனித்து இருக்கிறார். இதற்குப்பல காரணங்கள் இருக்கலாம். அவரது வயதும், வளர்ப்பும், ஊரில் பார்த்த சம்பவங்களும் யுத்தத்திலிருந்து விலகலான மனோபாவத்தை அவருக்குத் தந்திருக்கலாம். இந்தக் கதை அப்படிப்பட்ட யூகங்களைத் தகர்க்கிறது. யுத்த காலத்திலேயே நேரடியாக இயங்கி, கேள்விப்படும் கதைகள், பார்த்த சம்பவங்கள் குறித்து எழுதுவது ஒரு வகை. எல்லாம் முடிந்த பிறகு நிதானமாக யோசித்து யுத்தத்தினால் ஏற்பட்ட சமூக பாதிப்புகளைக் குறித்து எழுதுவது ரெண்டாவது வகை. அனோஜன் இதில் ரெண்டாம் வகையிலான கதையை இதில் எழுதியிருக்கிறார். அண்ணனின் வரவை நோக்கிக் காத்திருக்கும் பெண். தனியாக வெள்ளவத்தையில் வேலை செய்கிறார். கார் ஓட்டுகிறார். கணினி வேலையில் இருக்கிறார். தனது அப்பார்ட்மெண்டிலும் தனியாகத் தங்கியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு சித்திரமே கூட பின் யுத்த காலத்திய உணர்வை கனமாக நமக்குக் கடத்திவிடுகிறது. அவள் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண் அல்ல. அவள் தன்னையே தனிமைப்படுத்திக்கொண்டவள். ஏனோ அவளுக்குத் தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தைப் பற்றிய விலகல் இருக்கிறது. அதற்கான காரணங்களை ஒரு பூ இதழைப் பிரிப்பது போல கதாசிரியர் கையாண்டிருக்கிறார். வெளிநாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு திரும்ப வரும் அண்ணனை வரவேற்கத் தயாராகிறாள். ஐரினுடன் அவள் நடத்தும் உரையாடல் கதையின் மையத்தை நோக்கி நகர்த்துகிறது. தனியாக வாழும் அப்பா ஏன் விலகி இருக்கிறார் எனும் காரணங்கள் அம்மாவின் சாவில் எழுந்த குற்ற உணர்ச்சிக்கு இட்டுச் செல்கிறது. தன்னால் அம்மா இறக்க நேர்ந்தது எனும் குற்ற உணர்வு. அப்பாவுக்குத் தன்மீது உருவான கோபம் என பல அடுக்குகளில் யுத்தத்தின் கோரம் ஓரிரு பத்திகளில் சொல்லப்பட்டுவிடுகிறது. எல்லாவற்றையும் சேர்க்கும் கேள்வி ள்வி- அவள் ஏன் தன் குற்ற உணர்வை பிறர் மீதான கோபமாக மாற்றிக்கொள்ளவில்லை? நம் அன்றாட உலகிலேயே இது சாத்தியமாகும்போது யுத்தத்தில் எதிரிகளை நாமே கற்பனையிலோ, நனவிலோ உருவாக்கிக்கொள்வது சுலபம் தான். இலங்கை யுத்தம் இதை போராளிகளின் மீதான கோபமாக தங்கள் இயலாமைகளை மாற்ற விடவில்லை. ஏனென்றால் அம்மாவைக் கொன்றது பிற அண்ணாமார்கள் தான் என அவள் சொல்லும் இடம் யுத்தத்தினால் பாதிக்கப்படுபவர்கள் முழுமையான எதிரிகளைச் சுலபமாக உருவாக்கிச் சாடிவிட முடியாது எனும் உண்மையை சட்டெனக் காட்டிவிடுகிறது.</div>
<div class="p2" style="text-align: justify;">
<br /></div>
<div class="p1" style="text-align: justify;">
<b>ஜூட்</b> - காதலின் மலர்தல் மற்றும் உதிர்தல் பற்றிய கதை. வேறையாக்கள் கதையைப் போல் மற்றொரு கதை. பலருக்கும் இந்த கதை பிடிக்கும்படியான கூறுமுறை இதில் உள்ளது. ஆனால் வேறையாக்கள் கதையில் இருக்கும் மானுட கரிசனம் இதில் இல்லை என்பது என் வாசிப்பு.</div>
<div class="p2" style="text-align: justify;">
<br /></div>
<div class="p1" style="text-align: justify;">
<b>சிவப்புமழை</b> ஒரு விஞ்ஞானக் கதை. 2049ஆம் ஆண்டு நடக்கும் கதை என்றாலும் சம்பவங்களும் அறிவியலும் இன்றைக்கு நாம் அறிந்த உலகைச் சுற்றி இருப்பதால் எதிர்கால சமூகத்தைப் பற்றிக் கூறுவதாக நமக்குக் கடத்தப்படுவதில்லை. அவ்வகையில் இது மேலும் அதிக கற்பனையையும் மொழி மூலம் உருவாக்கும் சித்திரங்களையும் கைக்கொள்ள வேண்டிய நிலையில் எளிமையான சிறு கதையாக நின்றுவிட்டது.</div>
<div class="p2" style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXITJ4QZl9UsFxKqC8v9DA6pNxpOpVnoFO6ehZSYiFcBD4c7nGcVxQTrIfzuEuqpPLwpunlrwrB09tOKuisbw7Kaona9f8HjsydNFcrASGNNH9TqB0ipcs4Q2quzBilgH6UVM01VsQXTo/s1600/%25E0%25AE%2585%25E0%25AE%25A9%25E0%25AF%2587%25E0%25AE%25BE%25E0%25AE%259C%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="900" data-original-width="720" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXITJ4QZl9UsFxKqC8v9DA6pNxpOpVnoFO6ehZSYiFcBD4c7nGcVxQTrIfzuEuqpPLwpunlrwrB09tOKuisbw7Kaona9f8HjsydNFcrASGNNH9TqB0ipcs4Q2quzBilgH6UVM01VsQXTo/s200/%25E0%25AE%2585%25E0%25AE%25A9%25E0%25AF%2587%25E0%25AE%25BE%25E0%25AE%259C%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg" width="160" /></a></div>
<div class="p1" style="text-align: justify;">
அனோஜனின் கதைகளில் சிங்களவர்களும் தமிழர்களும் மிகச் சகஜமாக வலம் வருகிறார்கள். நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ அல்ல. மனிதர்களாக. சந்தர்ப்பச் சூழ்நிலை அவர்களை வெவ்வேறு தரமான வாழ்க்கையை வாழ வைத்திருக்கிறது என்றாலும் அவர்களது குழப்பங்களும் மனச்சஞ்சலங்களும் பெருவாரியாக வித்தியாசப்படவில்லை. மனிதர்களாக அவர்களது உணர்வுகளைப் படம் பிடித்திருப்பதில் அனோஜன் வெற்றி பெற்றுள்ளார். சம்பவங்களைக் கதையாக்குவதில் அவருக்கு ஒரு பாணி தெரிகிறது. ரெண்டாவது தொகுப்பான பச்சை நரம்பில் கதைகள் ஒரு கட்டுக்கோப்பான மொழியில் அமைந்திருந்தாலும், முதல் தொகுப்பான சதைகளில் கலைத்தன்மை அதிகம் கூடியுள்ளது. கதைக்கருப்பொருளின் பெறுமதியால் இயல்பாக உருவகங்களும் படிமங்களும் இவரது எழுத்தில் உருவாகிவிடுகிறது. வேறெந்த தன் முனைப்பும் இல்லாது இப்படி உருவாவதை அவர் இலக்கிய நயத்துக்காகக் கைவிடக்கூடாது. எந்த ஒரு பாணிக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல், புதுப் புது களங்களில் இயல்பான கற்பனையையும், ஸ்பார்க்கையும் அவர் கைவிடாமல் தொடர்ந்து எழுதுவார் என நம்புகிறேன்.</div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b>தலைப்பு</b> - சதைகள்</div>
<div style="text-align: justify;">
சிறுகதைத் தொகுப்பு</div>
<div style="text-align: justify;">
<b>வெளியீடு</b> - புதியசொல், யாழ்ப்பாணம்</div>
<div style="text-align: justify;">
puthiyasol@gmail.com<br />
கிடைக்குமிடம் - <a href="https://www.amazon.co.uk/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-sathaikal-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Annogen-Balakrishnan-ebook/dp/B077Z42QV6" target="_blank">கிண்டில் அமேசான்.</a></div>
</div>
ரா.கிரிதரன்http://www.blogger.com/profile/05531891697875033621noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-6225048847965580622018-01-14T13:47:00.003+05:302018-01-14T21:04:26.073+05:30சிலுவைராஜ் சரித்திரம் - ராஜ் கௌதமன் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<a href="http://clearlakes.blogspot.in/">வை. மணிகண்டன்</a></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்று, பால்யம் தொடங்கி பதின் பருவம்,வாலிபம் வரையிலான ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணம் என்ற வகையில், மதம் சார்ந்த, அரசியல் சார்ந்த பெரு நிறுவன அமைப்புகளின் முன் தனி மனிதனின் ஆற்றல் மற்றும் ஆளுமை அடையும் வளர்ச்சி அல்லது சிதைவு பற்றிய சித்திரம் என்ற வகையில் இருபத்தைந்து வருட தனி மனிதனின் வரலாற்றை சமூக வரலாற்றோடு சேர்த்து வாசிக்க விஸ்தீரண மான களம் இந்தப் புதினம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHbdn7LbV5MQa10fL8TzWvx0_eq6DxkvPHqXhbUg4NSEYC_NfAfjFxrAKcS-9OQjnHSlsU1c7ZxSQMSpjwZmVCWNHqrYDm0P7Sqxqc9oGClZFkf5na2eA5kroLt0JcfyLjJmESUF43GEE/s1600/sr.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="900" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHbdn7LbV5MQa10fL8TzWvx0_eq6DxkvPHqXhbUg4NSEYC_NfAfjFxrAKcS-9OQjnHSlsU1c7ZxSQMSpjwZmVCWNHqrYDm0P7Sqxqc9oGClZFkf5na2eA5kroLt0JcfyLjJmESUF43GEE/s400/sr.jpg" width="225" /></a></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<a name='more'></a><div style="text-align: justify;">
சிலுவைராஜ் பிறந்தது முதல் முதுகலை பட்டம் பெற்று வேலை தேடத் துவங்குவது வரையிலான வாழ்க்கைப் பயணம். பால்ய காலங்களின் குறும்பு குதியாட்டம் உயிரோட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பக்கத்துக்கு வீட்டு சிறுவனை அருகிலிருந்து காணும் சித்திரம் மிகவும் உன்னதமான மனஎழுச்சியை அளிக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்பாவின் அடி உதை, வாத்தியாரின் அடி, அம்மாவின் திட்டு, நண்பர்களின் குறும்புகள், வகுப்பறை சேட்டைகள், தியானம், பிரசங்கம், பாதரின் கண்டிப்பு, பங்கு சாமி, தேவாலய வழிபாடுகள், ஊரின் ஊர்வன, பறப்பன, கரட்டாண்டி, மீன், குரங்கு, நாய், பல்லி, பாம்பு குறித்த ஆராய்ச்சிகள், பார்த்த சினிமாக்கள், தெருச் சண்டைகள், பேய்கள், கிணற்று குளியல்கள், கம்மாய் குளியல்கள், பஜார் வேடிக்கை, நிழலைப் போல சாதி, இயேசு கதைகள், பைபிள் கதைகள், உடன் விளையாடிய சிறுமிகள், அக்காக்கள், பாதர், பிரதர், சிஸ்டர், விடுதி வாழ்க்கை என குறிப்பிட்ட ஒரு சூழலில் வளரும் சிறுவனின் பார்வைக்கு அகப்பட்ட சித்திரத்தை நாவல் நிகழ்த்திக் காட்டுகிறது. ஒழுக்கம் சார்ந்த கேள்விகளுக்கோ, அரசியல் சரி தவறுகளுக்கோ மதம் சார்ந்த சிடுக்கான விவாதங்களுக்கோ வாய்ப்பிருந்தும், சிறுவனின் கண்ணோட்டத்தை மீறி இந்தப் புதினம் எதையும் விளக்க முயலவில்லை. இந்தக் கண்ணோட்ட ஒருமையே புதினத்தை ஒரு குறிப்பிடத்தக்கப் படைப்பாக்குகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிலுவை அடி வாங்கும் மகாத்மியம், படிக்கும் எவரையும் தங்கள் பால்யகாலங்களை அசைபோட வைக்கும். தெரிந்து வாங்கும் அடிகள், திடீரென விழும் அடிகள், அடி விழும் என்று நினைத்த நேரங்களில் சடாரென ஒரு காட்சி மாற்றம் என ஆசிரியர் அடி புராணத்தை அபாரமாக விவரித்து இருக்கிறார். எந்த அளவுக்கு அடி சிலுவையை பக்குவப்படுத்தியது, மனம் மாற்றியது என்பது போன்ற அபிப்ராயங்கள் படிப்பவர்க்கு ஏற்படலாம் - அடியின் கணக்குகள் எண்ணிலடங்காதவை, வாத்தியாரிடம், அப்பாவிடம், அம்மாவிடம், என ஒரு சிறுவன் தன் பால்யத்தில் தோராயமாக வாங்கும் அடிகளின் கணக்கை ராஜ் கௌதமன் போட்டிருக்கிறார். நினைத்தால் மலைப்பாக இருக்கிறது, இத்தனை அடிகளையும் தாங்கி மிளிரும் பால்யத்தின் சேட்டைகளும் குறும்புகளும் குதியாட்டங்களும் பொக்கிஷங்கள். எல்லா நல்ல விஷயங்களைப் போலவே பால்யமும் முடிவுக்கு வரும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆசிரியர் தேர்ந்தெடுத்துள்ள வட்டார நடை நாவலுக்கு பலம். சிலுவையின் வரலாற்றை ஆசிரியர் அருகில் அமர்ந்து சொல்ல சொல்லக் கேட்பது போல், புராணக்கதைகளின் சாயலை ஒத்து, அத்தியாயம் அத்தியாயமாக, விதவிதமான மனிதர்கள், சம்பவங்கள், பேசுபொருள்கள் என்று விரிகிறது. சிலுவையின் மனப்போராட்டங்களை குறிப்பிட்ட கதையின் சட்டகத்திற்குள் சிக்க வைக்காது நனவோடை முறையில் வெவ்வேறு காலகட்டங்களில் சிலுவையின் எண்ணங்கள் - சமநிலையில் ஒரு எளிய நடுத்தர வாழ்க்கைக்கு ஆசைப்படும் இளைஞனாக, செயலூக்கம் மிகுந்த தருணங்களில் புதிய தத்துவங்கள், புதிய கோட்பாடுகள் கண்டுபிடிக்க எத்தனிக்கும் இளைஞனாக, கழிவிரக்கம் மிகுந்த தருணங்களில் ஒரு வெட்டி வீரனாக என முழுமையான பரிமாணம் படிப்பவர்களுக்கு புலப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீளம் காரணமாக, வளவளவென்று என்று இருப்பது போல் தோன்றினாலும், குறிப்பிட்ட காலகட்டத்தின் தனி மனித வரலாறும் சமூக அரசியல் போக்கும் பின்னி பிணைந்து - சாதியும் அரசியலும் தனி மனிதனின் வாழ்வில் மறைவாய் செலுத்தும் பலமான அழுத்தம் பதிவாகி இருக்கிறது. கிறிஸ்துவ மதம் மாறிய பிறகும் சாதியை விடாத நிறுவன அமைப்புகளும், அதன் பொறுப்பாளர்களும், அவர் தம் பாவனைகளும் எள்ளலும் கிண்டலுமாக பதிவாகி இருக்கின்றன. திமுக அனுதாபியான சிலுவையின் திராவிட அரசியல் குறித்த அபிப்ராயங்கள் சற்று எதிர்மறையாகவே உள்ளன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கிராமத்திற்கே திரும்பும் கொடுங்கனவு (தலைகீழ் பாரதிராஜா) - பேராசிரியர் தருமராஜ் அவர்களின் கட்டுரை இந்த நாவலுடன் இணைத்து வாசிக்க தகுந்தவை. படிப்பு கிராமத்திலிருந்து சிலுவையை விரட்டுகிறது, கூடவே வரும் சாதியும் மதமும் எங்கேயும் காலூன்ற விடாது வாரி விடுகின்றன. சாதி தவிர்த்து, சிலுவை போல் படிப்புதான் முக்கியம் படித்து முன்னேற வேண்டும் என்ற கிராமத்து இளைஞர்களின் லட்சிய கனவை சிலுவையையும் சுமக்கிறான். சிலுவையின் அடுத்தகட்ட முயற்சிகள் என்ற தொனியில் நாவல் முடிந்தும்,” தொடரலாம்.." என்ற வரி இருக்கிறது - அந்த நாவல்” காலச் சுமை" (சிலுவைராஜ் சரித்திரம் போலவே இந்த நாவலும் பதிப்பில் இல்லை), ராஜ் கௌதமன் எழுதிய" லண்டனில் சிலுவைராஜ்" என்று இன்னொரு புத்தகமும் இதன் தொடர்ச்சியே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாவலின் அடி நாதம்”எள்ளலும் பகடியும்".”பிரசாதத்தை யேசுவையே சாப்பிடுவது போல் சாப்பிட்டான்", - பெருமாள் கோவில் பிரசாதம் நினைவுக்கு வருகிறது-,”டிரினிட்டி குறித்த மூன்று ஒண்ணாவதை விளக்கு விளக்கென்று விளக்கினார் - சிலுவைக்கு மூன்று எப்படி ஒன்றாகும் என்று புரியவில்லை”,”கருணை உள்ளம் கொண்டவரிடம் நிதி பற்றி கேட்டார்”, “ஆத்திகத்திலிருந்து விவஸ்தை கேட்ட நாத்திகத்திற்கு சென்றது அவன் துர்அதிர்ஷ்டம்",”கம்யூனிஸ்டு ஆனால் எட்டு ஏக்கர் சொந்தக்காரர்”, எனச் சில வரிகள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிலுவைக்கு எல்லாமே விளையாட்டு, சிலுவைக்கும் அதெல்லாம் எதுவும் தெரியாது, சிலுவை பின்னாடி தெரிஞ்சுக்கிட்டான், பார்க்க அருசுவமா இருக்கும், அண்டசண்டாளமா வரும், சிரிப்பு தான் வந்தது, சிலுவைக்கு குழப்பமா இருக்கும், மனசுக்குள்ள நெனைச்சுகிட்டான், ஏன்தான் இப்படியெல்லாம் இருக்கோ?, சிலுவை ஒரு முடிவுக்கு வந்தான், என சிலுவையின் மன ஓட்டங்களை கச்சிதமாக படம் பிடிக்க மேற்கண்ட சொல்லாடல்கள் திரும்பத் திரும்ப வருவதன் மூலம் புதுப்பட்டி, RC தெரு, பாலகன் சிலுவைராஜ் மேலும் வாசிப்பவரை நெருங்கி வருகிறான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அகத்தே பாலகனாய் கடலைக் காட்டில் கண்ட இயற்கை காட்சியின் சலனம், இளைஞனாய் கோடை மழையில் பஞ்ச பூதங்களின் ஆட்டத்தில் மறந்த தன்னிலை, தவறி விழுந்து சேற்றிலிருந்து விடுபடத் தோன்றாத மந்த நிலை, இயேசுவின் கதைகள் மூலம் சிலுவையின் மனதில் என்றும் இடம் பிடித்த சிலுவையின் இயேசு, இதற்குச் சமனாக புறத்தே ஒழுக்க ஒறுத்தல்கள், சாதியின் சாட்டை, பொருளாதார நெருக்கடி, வார்த்தைகள் துணை கொண்ட தத்துவ விசாரம், லட்சிய அரசியல் அறைகூவல், நிறுவன பாவனைகளின் வெற்றி என்ற அகமும் புறமும் நிறைக்கும் சாகரத்தில் நீந்தியபடியே சிலுவைராஜ் நம் மனதில் என்றும் நீங்காத இடம் பிடிக்கிறான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிலுவைராஜ் சரித்திரம், ராஜ் கௌதமன் ,</div>
<div style="text-align: justify;">
தமிழினி</div>
<div style="text-align: justify;">
இணையத்தில் - <a href="https://www.commonfolks.in/books/d/siluvai-raaj-sariththiram">CommonFolks</a>, <a href="http://marinabooks.com/detailed?id=2170&name=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">Marina Books</a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
நட்பாஸ்http://www.blogger.com/profile/11647556064101907512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-51322416726247638162018-01-01T09:00:00.000+05:302018-01-01T09:00:36.710+05:30சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம் - ந. ஜயபாஸ்கரன் கவிதைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ந. ஜயபாஸ்கரன் பற்றிய முதற்பக்க குறிப்பு, "<i>ந. ஜயபாஸ்கரன், 1947 மார்ச் 16 அன்று மதுரையில் பிறந்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்</i>," என்று ஆச்சரியத்தக்க வகையில் துவங்கி, "<i>மதுரை வெண்கலக் கடைத் தெருவில் வெண்கலப் பாத்திரக் கடை நடத்தி வருகிறார்</i>," என்று அதிர்ச்சியளிக்கும் வகையில் முடிகிறது. இடைப்பட்ட வரிகள் அவரது சம்ஸ்கிருத பயிற்சி, எமிலி டிக்கின்சன் கல்வி ("<i>ஒரு நாள் இரவு எமிலி டிக்கின்சன் குறித்து எஸ்.ஆர்.கே. நிகழ்த்திய உரை, ஜயபாஸ்கரனது வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது</i>"), மற்றும் பக்தி இலக்கியம் உட்பட மரபுத் தமிழ் பரிச்சயத்தைச் சொல்கின்றன (இவை போக, "<i>நகுலனின் எழுத்துகள் மீதான ஈடுபாடும் அவற்றின் தாக்கமும் இவரிடம் உண்டு</i>"). <br />
<br />
இப்பேற்பட்ட மேதை (விளையாட்டாய்ச் சொல்லவில்லை) மிகக் குறைவாகவே எழுதியிருக்கிறார்- நூற்றைம்பது ரூபாய்க்கு இவர் எழுதிய கவிதைகள் அத்தனையும் விலை கொடுத்து வாங்கி விடலாம். <i>கயல் கவின்</i> பதிப்பித்துள்ள இந்தப் புத்தகம், “<i>சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம்</i>”, விலை ஐம்பது ரூபாய். இன்னொன்று, <i>உயிர் எழுத்து</i> பதிப்பித்துள்ள, "<i>அர்த்தநாரி அவன் அவள்</i>". அதன் விலை நூறு ரூபாய். விலைமதிப்பில்லாத சில கவிதைகள் இந்த இரு புத்தகங்களில் உள்ளன. தேர்ந்த விமரிசகர்களால் அங்கீகரிக்கப்பட்ட கவிஞரான இவர் இதைவிட பிரபலமாக இல்லாதது புதிர்தான் ("<i>கு.ப. ராஜகோபாலன், மௌனி மற்றும் லா.ச.ராவின் வரிசையில் பிரமீள் வகுப்பது போல் ஜயபாஸ்கரன் பூரண அக உலகக் கலைஞர்</i>" என்று இதன் பின்னுரையில் எழுதுகிறார், கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன். புத்தகத்தின் பின்னட்டையில், "<i>முதன் முதலாகத் தமிழ்க் கவிஞர் தன் மூல ஆதாரத்தைத் தமிழ் இலக்கிய மரபைக் கொண்டு நிர்ணயிக்கும் முயற்சி</i>," என்ற நகுலன் குறிப்பு இருக்கிறது).<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8xKkeA5Sj6WtHuHrFeADVMZBh_28XtRhIxSfIV5LTA3RCQENncWyv8gErIOzhPPxBlwYSNryOBYaejFAaESrk03ZO1d7_tEtLQlm_BSVscaVTplNHdBNrNUWDNWI6Zt66jwXhl12HJR0/s1600/jayabaskaran.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="520" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8xKkeA5Sj6WtHuHrFeADVMZBh_28XtRhIxSfIV5LTA3RCQENncWyv8gErIOzhPPxBlwYSNryOBYaejFAaESrk03ZO1d7_tEtLQlm_BSVscaVTplNHdBNrNUWDNWI6Zt66jwXhl12HJR0/s320/jayabaskaran.jpg" width="208" /></a></div>
<a name='more'></a><br />
<br />
இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் கடையில் உட்கார்ந்தபடியே தெருவைப் பார்த்து எழுதப்பட்ட கவிதைகளோ என்ற சந்தேகம் வராமலில்லை. அந்த அளவுக்கு வெண்கலக் கடையும் அதற்கு வெளியே இருக்கும் தெருவும் இந்தக் கவிதைகளில் வருகின்றன. இது போல் வேறு எந்த கவிஞராவது தான் இருக்கும் இடத்தை, அல்லது, தன் பணியிடத்தை எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும், இவரளவுக்கு உடலும் உயிரும் இருக்கும் இடம் ஒன்று, மனமும் உணர்வும் இருக்கும் இடம் ஒன்று என்று காலவெளிகளைக் கடந்து யாரும் எழுதியிருக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.<br />
<br />
இதில் உள்ளவை எல்லாம் தலைப்பு வைக்கப்படாத கவிதைகள். அவற்றில் முதல் கவிதையே இதுதான்: "<i>சீதையின் முலையைக் கொத்தும்/ வனக் காக்கையாய்/ மனம்/ கடை வெளியில்//</i>" (முலையும் கவிதைகளில் வருகிறது- அதிலும் மூன்றாம் முலை-, இது போக மதுரையும் வைகையும் இவை சார்ந்த புராணங்களும் இடம் பெறுகின்றன, எல்லாவற்றுக்கும் மேலாய் எமிலி டிக்கின்சன் அவ்வப்போது தலை காட்டுகிறார் (ஓரிடத்தில் ஜெரார்ட் மான்லி ஹாப்கின்ஸ்கூட!)). மேற்கண்ட கவிதையில் மனம் ஒரு வனக்காக்கையாய் கடைவெளியில் இருக்கிறது என்று சொல்கிறார், ஆனால் அது சீதையின் முலையைக் கொத்த புராண காலம் போய் விடுகிறது (அல்லது, அங்கிருந்து வருகிறது). இது போல், தன் இருப்பு வாய்த்த இடம் ஒன்று, தான் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் இடம் வேறொன்று என்பது இவர் கவிதைகளில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க உணர்வாகவே வருகிறது. இந்த இரட்டைமை ஒரு வகையில் விடுதலை என்றால் இன்னொரு வகையில் தளையாகிறது (அவரும் முன்னுரையில் இதனை, “<i>சில சமயம் சிறை ஆகவும், சில சமயம் தாயின் கருப்பை ஆகவும் உருக் காட்சி கொள்கிற கடை</i>," என்று குறிப்பிடுகிறார்).<br />
<br />
மூன்றாம் முலை ஜயபாஸ்கரனுக்கு ஒரு தனிப்பட்ட அர்த்தம் தருகிறது (நம்மால் ஊகிக்க மட்டுமே முடிகிறது- "<i>கடைவீதி நெடுக/ கைகொட்டி காசு கேட்டுவரும்/ அவனு/ளுக்குக் கொடுக்க/ மூன்றாம் முலைக் காம்பு/ மட்டும்//</i>" என்று ஒரு கவிதை. இதை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வது என்று தெரியவில்லை. கையில் காசில்லை என்ற அவமானத்தை இப்படிச் சொல்கிறாரா என்று சந்தேகிக்கிறேன். பொதுவாக மூன்றாம் முலைக்காம்பு என்பது முன்னம் இருந்து இப்போது இல்லாது போன ஒன்று என்று நினைத்துக் கொள்ளலாம். வேறொரு கவிதையில், "<i>வையை முலையாய்/ வியாபாரம் சுருங்கிய கடையில்/ வேலை செய்ய விதிக்கப்பட்டவர்கள்/</i>" என்று எழுதுகிறார் (வைகை எப்போதும் காய்ந்து கிடக்கிறது என்பதை நினைவுகூரும்போது, "<i>The Mammaries of the Welfare State</i>" என்ற உபமன்யு சாட்டர்ஜி தலைப்பு நினைவுக்கு வருகிறது). இங்கு முலை காமத்துக்கு உரிய பொருளாக இல்லாமல், செழுமையின் சாத்தியமாக, வறட்சியின் நிதர்சனமாக இருக்கிறது- வேறொரு கவிதை, "<i>சிதிலமடைந்த படித்துறைகளில்/ தவழ்ந்து/ மணல் வைகையில்/ மூழ்கிப் போகிறான்/</i>/" என்று முடிகிறது.<br />
<br />
ஜயபாஸ்கரனின் வெற்றி பெற்ற கவிதைகளில் இது ஒன்று- "<i>கை இருப்பு இல்லாமல்/ கடன் வாங்கிக்/ கேத வீட்டுக்குச் சுமந்து செல்லும்/ பித்தளை அண்டா/ சீதேவி மரக்கால்/ நீர்மாலைச் சொம்பு/ காமாட்சி தீபம்/ எல்லாம் எரிகின்றன/ கடைவெளி வெயிலில்</i>". பிற கவிதைகள் போலவே நிராசை, தோற்றுப் போன உணர்வு, பாத்திரங்கள் குறித்த நுண்தகவல்கள் எல்லாம் இருந்தாலும், "<i>எல்லாம் எரிகின்றன/ கடைவெளி வெயிலில்//</i>" என்பது தனி மனித அனுபவம் மற்றும் உணர்வுகளைக் கடந்து நாமரூபங்கள் மற்றும் காலவெளிகளுக்கு அப்பால் மீபொருண்மை உலகுக்கு நம்மைக் கொண்டு சென்று விடுகிறது. இந்த நெருப்பு எப்போதும் எரிகிறது, எங்கும் எரிகிறது, இதில் எல்லாமும் எரிகின்றன. இதே உணர்வுதான், "<i>அமில ஆவி பறக்கிறது/ கடையைச் சுற்றிலும்// ரசாயனப் பொடியின் வெண்மை நெடி/ கடை முழுவதும்// கறுத்துக் கொண்டிருக்கின்றன/ பித்தளை வெண்கலப்/ பாத்திரங்கள்// அரித்துச் செல்கிறது அனைத்தையும்/ திருகல் காமம்//</i>" என்ற அசாதாரண கவிதையைப் படிக்கும்போதும் எழுகிறது. கவிதைகளுக்குப் பஞ்சமில்லாத தமிழில்கூட இது போன்ற ஒரு கவிதை மிக அபூர்வமாகவே எழுதப்படுகிறது. <br />
<br />
ஜயபாஸ்கரன் இன்னும் விரிவாகவே, இன்னும் அதிகமாகவே, குறிப்பிட்டுப் பேசப்பட வேண்டிய கவிஞர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தனி மனித உணர்வுகளைப் பதிவு செய்யும் <i>confessional poems </i>சில, அவ்வளவு ரசிக்கும்படியாய் இல்லை- "<i>என்று சொன்னாராம் க நா சு/ கவிதை இருக்கும் இடத்தில்/ வறுமை இல்லை/ இல்லவே இல்லை// 'வாய் செத்த பய'/ கல்லாப் பெட்டியில்/ வெட்டுப்பட்ட நாணயங்களாய்/ எள்ளலில் உறைந்த சொற்கள்//</i>" என்ற கவிதை, "<i>விண்மீன்களின் எண்ணிக்கையைச்/சிறு காகிதத்தில் எழுதிப்/ பெட்டகத்தில் பத்திரமாகப் பூட்டும்/ குட்டி இளவரசனின் பிஸினஸ்மேன்// சொற்ப இருப்புத் தொகையை/ மீண்டும் மீண்டும் சரி பார்த்துக் கட்டிக்/ கல்லாவில் இறக்கி வைக்கும்/ சிறு வெளி வியாபாரி//</i>" என்ற கவிதை, போன்றவை ஜயபாஸ்கரன் அடையும் உயரங்களுக்கு சிறிதும் பொருந்தாதவையாய் இருக்கின்றன. இதே உணர்வில் எழுதப்பட்ட இந்தக் கவிதையைப் பாருங்கள், "<i>அச்சுறுத்தல் பாதுகாப்பு/ அறியாத காலத்தில்/ பார்த்துத் தீராத/ மீனாட்சி கோவில் சிற்ப மோகினி/ ஆரா அமுது பரிமாறிய பின்/ இடை குழைந்து/ நீட்டும் அகப்பையின் வெறுமை/ இவனை நோக்கி//</i>". இதற்கு இணையாய் இன்னொன்று சொல்ல முடியுமா? தன்னைக் குறித்து எழுதும்போது ஜயபாஸ்கரன் வெற்றி பெறுவது மிகக் குறைவாகவே, ஆனால், தான்-ஐக் குறித்து எழுதப்படும் அவரது கவிதைகள் அசாத்திய ஆழங்களைத் தொடுகின்றன. <br />
<br />
"<i>புராதனப் பேரேடுகளின் மௌன சாட்சியம். இந்தக் குறுகிய வெளியில் இருந்து புறப்படும் கவிதைகள் இப்படித்தான் இருக்கும்</i>," என்று எழுதும் ஜெயபாஸ்கரன் இன்னும் தன் மதிப்பை அறியவில்லை என்றுதான் தோன்றுகிறது. குறுகிய வெளியில் இருந்து புறப்பட்டாலும் அவரது சொற்கள் புராதனப் பேரேடுகளை உயிர்ப்பித்துப் பேசச் செய்கின்றன: "ஒ<i>ன்றாம் எண் சந்துக்கும்/ பிட்சாடனர் சந்நிதிக்கும்/ நேர்கோட்டு வழி இருக்கிறது/ சிறு குறி உருவப் பால் கொழுக்கட்டை/ நிவேதன துணையுடன்// ரசம் போய்விட்ட வெண்கல உருளிகளில்/ சுயத்தையே படைக்க வந்து கொண்டிருக்கும்/ திருப்பூவணத்து பொன்னனையாளுக்கும்// ஆலவாய்ச் சித்தருக்கும்// இடையே// கடக்க முடியாத வைகை மணல்//</i>" என்ற கவிதையாகட்டும், "<i>அழகு மீனாளுக்கு ஒரு மழை/ அழகு மலையானுக்கு ஒரு மழை// ஈரம் தாங்காத/ கடைவாசல் அடியை மட்டும்/ கழுவிச் செல்லும் மழை நீர்// வேருக்கு மழை வேண்டித் தவித்த/ ஹாப்கின்ஸின் இருண்ட ஸானட் வரிகள்/ மிதந்து வருகின்றன// கடைவீதியின் பிளாஸ்டிக் கழிவுகளுடன்//</i>" என்ற கவிதையாகட்டும், அவர் நிகழ்த்தும் உருமாற்றத்தை எத்தனை பேரால் நிகழ்த்த இயலும்?<br />
<br />
சென்ற நூற்றாண்டின் சிறந்த ஆங்கில கவிஞர்களில் ஒருவராக கொண்டாடப்படும் பிலிப் லார்கின் லண்டனில் வாழவில்லை. அதைவிட்டு வெளியே, இருநூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நூலகராக பணியாற்றினார். அது எதுவும் அவருக்கு குறையாய் அமையவில்லை. ஆனால், தமிழ் மொழியின் வரலாற்று மையமான மதுரையில் வாழும் ஜயபாஸ்கரன், "<i>விரைவுத் தொடர்பு நூற்றாண்டில்/ அவனை என்ன தான் செய்ய/ கடைக்குள் பாத்திரங்களுடன்/ பத்திரமாக வைத்துப்/ பூட்டிச் செல்வதைத் தவிர//</i>" என்று எழுதுகிறார். அப்படியெல்லாம் பூட்டிக் கிடக்கும் நிலை அவருக்கு எழாது என்று தோன்றுகிறது. தமிழ்க் கவிதையின் மையவெளியில் அவருக்கென்று ஒரு இடம் இருக்கிறது. அது பிரகாசமானது, உயிர்ப்பு கொண்டது- அவரது கவிதைகளில் அதிசயமாய்த் திறந்து கொள்ளும் காலம் போல், மகத்தான நினைவாய் எழுந்து வரும் தொன்மம் போல்.<br />
<br />
<b><i>சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம் - ந. ஜயபாஸ்கரன், </i></b><br />
<b><i>64 பக்கங்கள், ரூ.50,</i></b><br />
<b><i>கயல் கவின் புக்ஸ், திருவான்மியூர், சென்னை.</i></b><br />
<b><i>தொலைபேசி: 99445 83282, 99529 72557.</i></b><br />
<b><i>இணையத்தில் - <a href="https://www.commonfolks.in/books/d/siruveli-viyaabaariyin-oruvazhi-payanam">CommonFolks</a>, <a href="https://www.panuval.com/siruveli-viyapariyin-oru-vazhi-payanam-10000060">Panuval</a></i></b><br />
. <br />
<br />
<br />
<br /></div>
நட்பாஸ்http://www.blogger.com/profile/11647556064101907512noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-28696832916030850382017-11-24T11:18:00.000+05:302017-11-24T11:18:16.479+05:30கடல் குதிரைகள் - ஜானிஸ் பாரியாட் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
‘ஒருகால்,இதன் பொருட்டே மக்கள் எப்போதும் எழுதுகிறார்கள் போலும். ஏனெனில் நாம் எப்போதும், மாற்றமே இல்லாமல், கற்பனைக்கு அப்பாற்பட்ட இழப்பின் விளிம்பிலேயே நிற்கிறோம்’- ஜானிஸ் பாரியாட், sea horses</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: center;">
<img alt="Image result for seahorse janice pariat" height="320" src="https://images-na.ssl-images-amazon.com/images/I/81EyBOuzQkL.jpg" width="209" /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கற்பனையின் திமில்களின் மீதேறி சறுக்கி விளையாடும் படைப்புகள், நிகழ்வுகளை பின்னிச் செல்லும் படைப்புகள் என இலக்கிய படைப்புகளை பொது புரிதலுக்காக இருவகையாய் வகுக்கலாம். செவ்வியல் மற்றும் பின் நவீனத்துவ எழுத்துக்கள் முந்தைய போக்கை பிரதிபலிக்கின்றன. உலக வாழ்வின் ஆதார இயங்குவிசையை கண்டடைந்து தங்கள் எழுத்துக்களில் வசப்படுத்த முயல்கின்றன. இரண்டாம் வகை எழுத்து தனி மனிதனின் பிடிவாதமான காலத்துக்கு எதிரான போராட்டம். அணுவணுவாக அவனை அரித்து கண் முன் நழுவி செல்லும் காலத்தை ஒரு சட்டகத்தில் நிறுத்தும் பேராசையின் வெளிப்பாடு. தேவதச்சன் நேர்ப்பேச்சின் போது, ‘ வாயில் மென்று கொண்டிருக்கும் ஆரஞ்சு மிட்டாய் கரைந்து விடுமே என அஞ்சுவேன்,’ என்கிறார். கலைஞன் தன் வாழ்வின் இனிமைகளை, துயரங்களை காலத்துக்கு அப்பால் விட்டுச் செல்ல முனைகிறான். இவை வெறும் நினைவேக்க எழுத்துகள் என புறம் தள்ளிவிட முடியாது. ஜானிஸ் அதிகமும் இரண்டாம் வகையை சேர்ந்தவர். எனினும்கூட பரந்துபட்ட மெய்யியல் அறிதலும், அரசியல் நோக்கும், பரந்த இலக்கிய வாசிப்பும் உள்ளவர் என்பது புலப்படுகிறது. அவருடைய சிறுகதைகளிலும் நாவலிலும் இத்தன்மையை நாம் அடையாளம் காண முடியும். ‘கலை படைப்புகள் உண்மையில் அழகிய தழும்புகள்’ என்று எழுத அவரால் முடிகிறது. </div>
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேகாலயாவை சேர்ந்த ஜானிஸ் பாரியாட் 2013ஆம் ஆண்டு அவருடைய முதல் சிறுகதை தொகுதியான ‘boats on land’ க்காக சாகித்திய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது பெற்றவர். மேகாலயாவிலிருந்து ஆங்கிலத்தில் எழுதி விருது பெற்ற முதல் எழுத்தாளர் எனும் பெருமையும் அவருக்கு உண்டு. ஜானிசின் முதல் நாவல் ‘sea horses’ (Random house வெளியீடு) டெல்லியையும் இங்கிலாந்தையும் களமாக கொண்டது. மேகாலயாவிலிருந்து டெல்லி பல்கலைகழகத்தில் இலக்கியம் படிக்க செல்லும் நெம் எனும் இளைஞனின் குரலில் நாவல் துவங்குகிறது. அவனுடைய வாழ்க்கை பயணத்தை சொல்லி செல்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெண் எழுத்தாளராக ஒரு ஆணின் வாழ்வை, அதுவும் தற்பால் ஈர்ப்புள்ள ஆணின் வாழ்வை பிசிறின்றி எழுத முடிந்திருக்கிறது. அமைதியும் அழகும் ததும்பும் மொழி ஜானிசுடையது. சிக்கலான சொற் பிரயோகங்கள், அலங்காரங்கள் இல்லை. நிதானமாக உரையாடும் தொனியில் கதை நகர்கிறது. ஜானிஸ் ஒரு ‘ஸ்டைலிஸ்ட்’. எழுத்தில் இசைத்தன்மை வெளிப்படுகிறது. புறக்காட்சி விவரணைகள் அவருடைய மொழியின் மிகப்பெரிய பலம். சிறுகதைகளிலும்கூட மிக அழகாக மேகாலயாவை காட்சிப்படுத்துகிறார். லண்டனின் நெரிசல் மிகுந்த தெருக்கள், குளிர்காலத்து இங்கிலாந்தின் நாட்டுப்புற சித்தரிப்புகள் நாவலின் உயிர்ப்பான பகுதிகளில் ஒன்று. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><img alt="Image result for janice pariat" height="320" src="http://www.pontas-agency.com/wp-content/uploads/2017/07/JANICE-PARIAT-2017.gif" style="margin-left: auto; margin-right: auto;" width="234" /></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Janice Pariat - P.C - Pontas agency</td></tr>
</tbody></table>
<div style="text-align: justify;">
‘நாம் இன்மையால் வடிவமைக்கப்படுகிறோம். நாம் பயணிக்காத இடங்கள், நாம் புரியாத செயல்கள், நாம் இழந்த மனிதர்கள். நாம் காலந்தோறும் பயணிக்கும் அளிகதவின் இடைவெளிகள் அவர்கள்.’ நாவல் மானுட உறவுகளின் சிக்கலான ஊடுபாவை, உறவுகளின் இழப்பை பேசுகிறது. லெனி, நிகோலஸ், மைரா ஆகிய மூவருடன் நெம்முக்கு இருக்கும் உறவுச் சிக்கலே நாவலின் மைய பேசுபொருள். மூன்றும் மூன்றுவிதமான உறவு நிலைகளை குறிக்கின்றன. லெனி தற்பால் ஈர்ப்புடையவன் எனினும் இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு என்பது ஆழ்ந்த நட்பாகவும், ஒருவித சகோதர உணர்வு கூடியதாகவும் திகழ்கிறது. நெம் – நிகோலஸ் உறவு தற்செயலான சந்திப்பிலிருந்து முழு தற்பாலின உறவாக மலர்கிறது. நிகோலசை தேடி அவனுடைய உறவை புதுப்பித்துக் கொள்ளும் முயற்சியில் மைராவை அடைகிறான். அவர்களுக்குள் எதிர்பாலின உறவு அமைகிறது. </div>
<div style="text-align: justify;">
நெம் கூச்சமும் தயக்கமும் உடைய உள்ளொடுங்கிய இளைஞன். பள்ளிப் பருவத்தில் அவனைக் காட்டிலும் வயதில் மூத்த லெனியுடன் நட்புறவு கொள்கிறான். லெனி கலைஞர்களுக்கு உரிய நிலையின்மையும் தவிப்பும் கொண்டிருப்பவன். இளமையில் லெனியின் அலைபாய்தல் நெம்மிற்கு பெரும் கனவாக இருக்கிறது. அவனுடன் அலைகிறான், அவன் அறையிலேயே இருக்கிறான். லெனி கலைஞனாக மலரவில்லை. அவன் வேறொரு நண்பருடன் தற்பால் உறவு கொள்வது தெரியவருகிறது. அது ஒரு நோய் என முடிவு செய்து அவனை மனநோய் விடுதியில் சேர்க்கிறார்கள். லெனி நெம்முடனும் உறவு கொண்டானா என நெம்மின் தந்தை அவனை விசாரிக்கிறார். அப்படி ஏதும் நிகழவில்லை என்பதும் ஆசுவாசம் கொள்கிறார். லெனி விடுதியிலிருந்து அவனுக்கு அவ்வப்போது கடிதங்கள் எழுதுகிறான். லெனி மெல்ல குலைந்து நொறுங்கி விடுதியிலேயே மரிக்கிறான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
லெனியின் மரணம் தந்த வெறுமையை கடக்க முற்படும்போதுதான் அவனுடைய கல்லூரியில் பவுத்த சிற்பவியல் குறித்து ஆய்வு செய்ய வந்திருக்கும் நிகோலசை சந்திக்கிறான். நிகோலசை சந்திக்கும் முன்பு வரை நெம் தற்பால் ஈப்புடையவன் என அடையாளப்படுத்தப்படவில்லை. லெனியின் மரணம், குறிப்பாக அவன் தற்பால் உறவாளன் என்பதற்காக தனிமைப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டது நெம்மிடம் ஒரு மீறலை விதைத்திருக்க வேண்டும். நிகோலசின் இல்லத்திலேயே தங்குகிறான். அவர்களுக்குள் இயல்பாக நட்பும் பின்னர் தற்பால் உறவும் நிகழ்கிறது. விரசத்தின், ஆபாசத்தின் எல்லைகளை தொடாமல் மன உணர்வுகள் மற்றும் அழகியல் சித்தரிப்புகள் வழியாக இவ்வுறவுப் பகுதிகளை ஜானிஸ் கையாண்டிருப்பது மிக சிறப்பாக வந்திருக்கிறது. பவுத்த சிற்பவியல் குறித்து நிகோலஸ் தனது கோட்பாடுகளை வகுத்துச் சொல்வது, கிரேக்க தொன்மங்கள், மேற்கத்திய செவ்வியல் இசை சார்ந்த உரையாடல்கள் என நிகோலஸ் – நெம் உரையாடல் பகுதிகள் மிகச் செறிவாக உள்ளன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் மைரா நிகோலசின் ஒன்றுவிட்ட சகோதரியாக நெம்முக்கு அறிமுகம் செய்யப்படுகிறாள். கொஞ்ச காலம் அவர்களுடன் இருந்துவிட்டுச் செல்கிறாள். மேற்கத்திய செவ்வியல் இசைக் கலைஞராக அறிமுகம் ஆகிறார். நெம் லண்டனில் வசிக்கும் போது நிகோலசை தேட முயன்று மைராவை அடைகிறான். பல திருப்பங்கள் நேர்கின்றன. அவளுடைய அழைப்பின் பேரில் லண்டன் நாட்டுப்புறத்தில் உள்ள அவளுடைய வீட்டிற்கு கிறிஸ்துமஸ் விடுப்பு சமயத்தில் செல்கிறான். மைராவின் மகனையும், இறுக்கமான கடினமான மனிதரான அவளுடைய தந்தையையும் சந்திக்கிறான். பல கண்டடைதல்கள் திருப்பங்கள் வழியாக வழுக்கிச் சென்று அவன் மீண்டும் லண்டன் திரும்புவதோடு நாவல் முடிவுக்கு வருகிறது. நிகோலஸ் தனது இருப்பை அறிவித்துக் கொள்ளும் கணத்திலிருந்து நெம் அவனை தேடி அலையும் நாவலின் பிற்பகுதிகள் ஒரு த்ரில்லருக்கு சமமான விறுவிறுப்பான வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாவல் உறவுச் சிடுக்குகளை பற்றி பேசுவது என கொண்டாலும், பாலியல் மீறல்களை, அதன் நிற பேதங்களையே அதிகம் பேசுகிறது. நெம் தவிர நாவலின் பிற்பகுதியில் வரும் பாத்திரங்கள் வழியே மனித நடத்தையின் பல்வேறு விநோதங்களை ஜானிஸ் பதிவு செய்கிறார். இங்கிலாந்தில் நெம்முக்கு ஈவாவின் நட்பு கிடைக்கிறது. அவளுடைய காதலன் அவனுடைய பணியின் காரணமாக அவளை பிரிந்து வேறொரு தேசத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அவளுக்காக ரோஜாக்களை அனுப்புகிறான். அவர்களுடைய நட்பு வட்டத்தில் அவர்களின் காவிய காதல் எப்போதும் நண்பர்களால் அண்ணாந்து நோக்கப்படுகிறது. ஆனால் ஈவா மனம் தளர்ந்து நெகிழ்ந்த ஒரு தருணத்தில் அவளுக்கும் அவளுடைய தோழி தஸ்மின்னுக்கும் இடையிலான உறவை பற்றி நெம்மிடம் பகிர்கிறாள். எங்கோ இருக்கும் காதலனை எண்ணி எத்தனை நாள் தான் மருகுவது என்கிறாள். அவனனுப்பும் ரோஜாக்கள் இப்போது வெறும் முட்களாக அவளை குத்தி காயப்படுத்தி கொண்டிருக்கின்றன என நெம் அறிந்து கொள்கிறான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நெம்மின் கல்லூரி காலத்தில் அறிமுகமாகும் சந்தனுவை பின்னர் இங்கிலாந்திலும் சந்தித்து நட்பு கொள்கிறான். அவர்களின் நட்பு வட்டத்தில் உள்ள யாராவின் மீது சந்தனு காதல் கொள்கிறான். எங்கும் எப்போதும் காதலர்களாகவே வலம் வருகிறார்கள், அறியப்படுகிறார்கள். யாராவின் நம்பிக்கைகள் வேறு மாதிரியானவை. அவள் தன்னை ஒரு ‘polyamorist’ என சந்தனுவிடம் அறிவித்து கொள்கிறாள். ஓர் உறவில், ஒரு காதலில் நிலைக்காதவள். ஒரே சமயத்தில் பல்வேறு நபர்களுடன் ஆழ்ந்த உறவு கொள்ள முடியும் எனும் நம்பிக்கை கொண்டவள். அவளுடைய அன்பும் உடலும் எவர் ஒருவருக்கும் மட்டும் சொந்தமானதல்ல. கவிதை வாசிப்பு நிகழ்வில் அப்படியான தனது தோழனை சந்தனுவிற்கு அறிமுகம் செய்ய விழைகிறாள். அவனைக் காணும்போது எப்படி எதிர்வினை ஆற்றுவது என்றறியாமல் திகைக்கிறான் சந்தனு. நெம் சந்தனுவை பற்றி எண்ணிகொள்கிறான், ‘பெருங்கடலையும் வானையும் பிரிக்கும் கோடு ஒன்றே தான் பலதும்தான். எப்போதும் ஓய்வின்றி நிகழும் அழித்தொழிப்பும் மறு கட்டுமானமும். எவருக்கும் உரித்தாகாத ஓர் அன்பு’. எதிர் பாலின ஆடை அணிந்தவர்களுக்காக நடத்தப்படும் க்ளப்புக்கு தற்செயலாக செல்கிறான். கட்டுப்பாடான இறுக்கமான மனிதராக வலம்வரும் மைராவின் தந்தை பிலிப் பற்றிய ரகசியத்தை நெம் அறிந்துகொள்கிறான். அவருடைய மிடுக்கின் மறு எல்லையை காண்கிறான். தனது நடத்தையால் தான் தன் தந்தை இத்தனை இறுக்கமாக இருக்கிறார் என நம்பிக்கொண்டிருந்த மைராவிற்கு இது அதிர்ச்சி அளிக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாவலின் பலவீனமான சித்தரிப்பு என்பது மைராவின் மகன் எலியாட்டினுடையது என தோன்றியது. ஏனோ பிற பாத்திரங்கள் அளவுக்கு அவன் வார்க்கப்படவில்லை. சிறுகதைகளில் ஜானிஸ் தான் வாழ்ந்த தன் மண்ணை ஆவணப்படுத்துகிறார். ஆனால் இந்நாவலில் மேகாலயாத் தன்மை, அல்லது இந்தியத்தன்மை என எதுவுமே இல்லை. டெல்லியை பற்றிய விவரணைகள் கூட அந்நியத்தன்மையுடன் தான் திகழ்கின்றன. நாவலில் கிரேக்க தொன்மங்களும், மேற்கத்திய செவ்வியல் இசையும் விரிவாக பேசப்படுகின்றன. மேற்கத்திய வாசக பரப்பை மனதில் வைத்துக்கொண்டு எழுதப்பட்ட ஒன்றோ எனும் ஐயம் எழாமல் இல்லை. எனினும் நாவலின் களத்திற்கு வலு சேர்க்கும்படியே இவை அமைந்திருக்கின்றன என்பதினால் பெரும் குறை என சொல்லிவிட முடியாது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாவலின் தலைப்பும், அதன் மைய படிமமுமான கடல் குதிரைகள் இந்த வினோத உறவு நிலைகளை பிரதிநிதப்படுத்துகிறது. நிகோலஸ் ஒரு கடல் குதிரை ஜோடியை தனது வீட்டு மீன் தொட்டியில் வளர்க்கிறான். அவை நடனமிடுவதை காண்பதற்காக நெம்மும் நிகோலசும் காத்திருக்கிறார்கள். ‘உலகில் ஆண் கருத்தரிக்கும் வெகு அரிதான இனங்களில் அவையும் ஒன்று. எல்லாவற்றையும் விட அவை நடனமாடும். புலரியில் ஒரு சடங்கை போல் சேர்ந்து ஆடும். வால்களை பிணைந்து, ஒன்றாக மிதந்து, நீரில் நளினமாக சுழலும். நிறம்மாறும். ஆழ சென்று மீளும், நெடுநேரம் விரிவாக தினமும் ஆடும் பாலே நடன ஜோடிகளை போல்.’ உலகெங்கிலும் கடல் குதிரைகள் பால் மாற்று மற்றும் பால் திரிபு நிலைகளின் குறியீடாக அறியப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நெம், லெனி, நிகோலஸ், பிலிப். ஈவா, தஸ்மின், யாரா, சந்தனு, மைரா என நாவலின் அனைத்து பாத்திரங்களுமே ஏதோ ஓர் வகையில் கடல் குதிரைகள் தான். பாலியல் அடையாளம் மற்றும் தேர்வும் இறுதியானதும் இறுக்கமானதும் அல்ல என்பதே நாவலின் மிக முக்கியமான பேசு பொருள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நெம் தன்னை தொகுத்து, தனது அடையாளங்களை கண்டடையும் ‘coming of age’ வகையிலான நாவலாகவும் இப்பிரதியை வாசிக்கலாம். தன்மையில் கூறப்படும் கதை, நெம்மின் தத்தளிப்புகள், அவன் தந்தையுடன் கொள்ளும் உறவுச் சிக்கல்கள், பணியிட மாற்றங்கள், அலைகழிப்புகள், நேசத்திற்கான தேடல் என இவ்வகைப்பாட்டு நாவலுக்குரிய அனைத்து அம்சங்களும் கொண்டதாகவே இந்நாவல் உருவாகியிருக்கிறது. அவ்வகையில் நல்ல இனிமையான வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
Sea horses</div>
<div style="text-align: justify;">
Janice Pariyat</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
suneel krishnanhttp://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-42221285421895655012017-11-19T12:51:00.000+05:302017-11-19T16:08:48.206+05:30தேவகானம் - கவிக்கோ அப்துல் ரகுமான் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
கனியும் நீ படைத்தனை </div>
<div style="text-align: center;">
கையும் நீ கொடுத்தனை </div>
<div style="text-align: center;">
கனியை நான் பறிக்கவும் </div>
<div style="text-align: center;">
கைய சைக்கச் செய்தனை </div>
<div style="text-align: center;">
கனியில் உள்ள சுவையும்நீ </div>
<div style="text-align: center;">
கனியை உண்ட மகிழ்வும்நீ </div>
<div style="text-align: center;">
கனியையா சுவைத்தனன்?</div>
<div style="text-align: center;">
கனியுனைச் சுவைத்தனன் </div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<b><br /></b>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaA6mjDO0KHC3q75peDZBVdPfj-oNrCy7tC61lai3fryh-nHdNfIMtKwDO6l6U9lE0tA5pRQ-UTr9PUlR2hacgEhBukps-8AYj3GaCa18GHj88qRZ-cQBybCUN2-q2NeJBrz41gb3Oebk/s1600/Kavikko.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="678" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaA6mjDO0KHC3q75peDZBVdPfj-oNrCy7tC61lai3fryh-nHdNfIMtKwDO6l6U9lE0tA5pRQ-UTr9PUlR2hacgEhBukps-8AYj3GaCa18GHj88qRZ-cQBybCUN2-q2NeJBrz41gb3Oebk/s400/Kavikko.jpg" width="376" /></a></div>
<br />
<div style="text-align: justify;">
துவங்கும் முன்னதாகவே.....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1) சமீபத்தில் நான் வாசித்தவைகளுள் மிகச்சிறந்த புத்தகம் என்று இந்தப் புத்தகத்தைக் குறித்து உரக்கச் சொல்லுவேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2) நல்ல கவிதைகளின் அபிமானிகள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது என்றும் பரிந்துரைப்பேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
3) மரபுக் கவிதைகளைப் பரிச்சயம் செய்ய விரும்புவோர் முயற்சி செய்ய வேண்டிய முக்கியப் புத்தகம் இது என்றும் சொல்லுவேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
4) இறைவன் இருக்கிறான்; அவன் ஒருவனே என்று நம்புபவர் நீங்கள் என்றால் இந்த புத்தக மதிப்புரை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். நேரடியாக நான் கீழே கொடுத்துள்ள சுட்டியைத் தட்டிப் புத்தகத்தை வாங்கிப் படிக்கத் துவங்கி விடுங்கள்.</div>
<br />
<br />
<div style="text-align: center;">
--- x ---</div>
<div style="text-align: justify;">
பக்கத்திற்கு இரண்டு கானங்கள் என நூற்று எண்பது பக்கங்களுக்குத் திகட்டத் திகட்டத் தித்திக்கும் கவிதைகள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தேவனைப் பற்றிய கானங்கள் என நமக்குக் கிடைக்கும் இவை தனக்கு தேவனால் உணர்த்தப்பட்ட கானங்கள் என்கிறார் கவிக்கோ. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒருவர் ஒவ்வொரு புத்தகம் வாங்குவதற்கும் பின்னாலேயே கூட ஒரு கதை இருக்கிறது என்று என் முந்தைய விமர்சனப் பதிவில் சொல்லியிருந்தேன். புத்தகம் வாங்கவே கதை உண்டு என்றால், புத்தகம் எழுதிட ஒரு சரித்திரமே இருக்கும் அல்லவா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தப் புத்தகம் எழுத ஏற்பட்ட உந்துதலை கவிக்கோ இப்படிச் சொல்லுகிறார்.</div>
<div>
<br /></div>
<blockquote class="tr_bq">
<div style="text-align: justify;">
<span style="color: #0b5394; font-size: x-small;"><b><i>" சந்தையில் சாமான்கள் வாங்கி கொண்டிருந்த காலத்திலேயே எங்கிருந்தோ ஒரு புல்லாங்குழல் இசை என்னை அழைத்துக் கொண்டே இருந்தது.<span style="text-align: left;"> </span></i></b></span></div>
</blockquote>
<blockquote class="tr_bq">
<div style="text-align: justify;">
<span style="color: #0b5394; font-size: x-small;"><b><i>சந்தையும் சாமான்களும் தேவைப்படாத காலம் வந்ததும் அந்தப் புல்லாங்குழல் இசை உரத்து ஒலித்தது.<span style="text-align: left;"> </span></i></b></span></div>
</blockquote>
<blockquote class="tr_bq">
<div style="text-align: justify;">
<span style="color: #0b5394; font-size: x-small;"><b><i>அதன் ஈர்ப்பைத் தவிர்க்க முடியாமல் நான் அந்த இசையின் மூலம் நோக்கிப் பயணம் புறப்பட்டேன்."</i></b></span></div>
</blockquote>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படித்தான் துவங்குகிறது இந்தப் புத்தகத்தின் சரித்திரம். இந்தப் புத்தகம் உருவாகினதற்கான தேவை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: center;">
----x ---</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzcNuAUwQHqPZMHaESV7Bf7R_5oKVvqoHM7thylLI9J5rTNAT0PdCDbhhJXAeZbkI5AjTVOxzcoWimg3NwGF7vVWaZo3a0KC1tIbiVSgzWyWZzqzQlbuW6bhYs19w2KXdpb4bWUgHAVyA/s1600/Devaganam.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="588" data-original-width="363" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzcNuAUwQHqPZMHaESV7Bf7R_5oKVvqoHM7thylLI9J5rTNAT0PdCDbhhJXAeZbkI5AjTVOxzcoWimg3NwGF7vVWaZo3a0KC1tIbiVSgzWyWZzqzQlbuW6bhYs19w2KXdpb4bWUgHAVyA/s640/Devaganam.JPG" width="394" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு மாம்பழத்தைச் சுவைத்து முடித்தவனிடம், "என்னய்யா, பழம் எப்படி இருந்துச்சி?", என்று கேட்டால் என்ன சொல்லுவேன்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நல்லா இனிப்புங்க"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"மாம்பழம்ன்னாலே இனிப்புதானய்யா. அதென்ன புதுசா. பழம் எப்படி இருந்துச்சி. அத்தைச் சொல்லு"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நல்லாதாங்க இருந்துச்சி"</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"நல்லா-ன்னா எப்படிய்யா, அதைக் கொஞ்சம் விளக்கிச் சொல்லேன்", என்று கேட்டால் எப்படி ஒரு மாம்பழத்தின் சுவையை விவரிப்பேன்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மல்கோவாவும், நீலம் மாம்பழமும் ஒன்றேவா? பூவனும் பேயனும் வெவ்வேறா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படித்தான் இந்தப் புத்தகம் முழுக்க விதம் விதமான மா, பலா, வாழை என சுவைக்கச் சுவைக்க வகைவகையாய் ஒவ்வொரு பக்கத்திலும் இருந்து தேஞ்சுவையூறும் பாக்கள்; தேவகானங்கள்.</div>
<div>
</div>
<div>
<div style="text-align: center;">
----x ---</div>
</div>
<div>
<br /></div>
<div style="text-align: justify;">
சம்பவாமி யுகே யுகே என்று பகவத் கீதையில் சொல்லும் கிருஷ்ண பரமாத்மா யுகத்திற்கு ஒருக்கா புல்டோசர் எதனையேனும் கொண்டு வந்து லோகத்தைச் சமன் செய்து விட்டுப் போனால் என்ன, வருடாவருடம் சென்னையில் டிசம்பர் மாதத்தில் மட்டும் இப்படி என்னத்திற்காய்ப் படுத்தியெடுக்கிறான். என்று யோசிப்பவனுக்கு...</div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
அல்லவை தினம்தினம் </div>
<div style="text-align: center;">
அதிக மாகிப் பூமியில் </div>
<div style="text-align: center;">
நல்லவை குறைந்து ஞாலம் </div>
<div style="text-align: center;">
நலிவுறும் பொழுதெலாம் </div>
<div style="text-align: center;">
வல்லவன் பிறப்பெடுத்து </div>
<div style="text-align: center;">
வருவதில்லை நேரிலே </div>
<div style="text-align: center;">
வெல்லுகின்ற இயற்கையின் </div>
<div style="text-align: center;">
விதிஅதைச் செய்யுமே </div>
<div>
<br /></div>
<div>
...என்கிறார் கவிக்கோ. </div>
<div>
<br /></div>
<div>
<div>
<div style="text-align: center;">
----x ---</div>
</div>
</div>
<div>
<br /></div>
<div>
அன்பு செய்தல், கடவுள் மீதான காதல், அவனை எல்லாவற்றிலும் காணும் முயற்சி, அருளைத் தா தா என்னும் இறைஞ்சுதல், தான் பெற்றவைகளுக்கு நன்றி நவிலல், ஏற்றத் தாழ்வுகள் குறித்த கேள்விகள், கொடைத்தன்மையின் சிறப்பு என்று பலப்பல தலைப்புகளில் அழகான தமிழில், மரபுக்கவிதை வடிவில் முந்நூற்று சொச்ச கவிதைகள். </div>
<div>
<br /></div>
<div style="text-align: center;">
காணும் கண்கள் தந்த உன்னைக் </div>
<div style="text-align: center;">
காணு கின்ற ஆசையால் </div>
<div style="text-align: center;">
காணும் காட்சி யாவி லும்.. என் </div>
<div style="text-align: center;">
கண்களால் துளாவினேன் </div>
<div style="text-align: center;">
காணும் காட்சி நானடா </div>
<div style="text-align: center;">
காணும் கண்ணும் நானடா </div>
<div style="text-align: center;">
காணும் பார்வை வந்திடின் </div>
<div style="text-align: center;">
காண்பை எங்கும் நீயென்றான் </div>
<div style="text-align: center;">
<br /></div>
<div>
<br /></div>
<div>
கடவுள் மறுப்புப் பேசுவோருக்கு அருகினில் உலாவி வந்தவர்தாம் கவிக்கோ. அவர்களையும் அங்கங்கே ஒரு பிடி பிடிக்கிறார்.</div>
<div>
<br /></div>
<div style="text-align: center;">
அறிவெனும் விளக்கொளிக்கு </div>
<div style="text-align: center;">
ஆண்டவன் அகப்படான் </div>
<div style="text-align: center;">
அறிவை நீ அணைத்திடின் </div>
<div style="text-align: center;">
அவனைக் காண லாகுமே </div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
----x ---</div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே என்கிறார் குலசேகர ஆழ்வார். திருவேங்கட மலையில் மலராகவோ, மரமாகவோ, உன் கோயிற்கதவாகவோ இல்லை உன் அடியார்கள் மேலேறி நடக்கும் படிக்கல்லாகவோ ஆகியுன்னை அனுதினம் கண்டு உய்வேன் என்கிறார் பெருமாள் திருமொழியில் குலசேகரர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
செதுக்கி வைத்த கல்லாவதனினும், ஒதுக்கி வைத்த கல்லாய்க் கிடைக்க நினைக்கும் குலசேகரரின் இந்தப் பாடல் எனக்கு எப்போதும் ஓர் வியப்பே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தக் கருத்தின் இன்னொரு முகத்தை....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
துதிக்கும் தெய்வம் எங்குமே </div>
<div style="text-align: justify;">
தோன்றுவான் எனில்க ழித்து </div>
<div style="text-align: justify;">
ஒதுக்கி வைத்த கல்லிலும் </div>
<div style="text-align: justify;">
இருப்பன் அன்றோ ஈசனே </div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
...என்கிறார் கவிக்கோ.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<div style="text-align: center;">
----x ---</div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
மரபுக் கவிதைகள்தாம் எனினும் நிரம்பவும் சிக்கலான வார்த்தைகள் கொண்டெல்லாம் கவிதைகளைப் புனையவில்லை கவிக்கோ என்பதனால் நல்ல தமிழ் வாசிக்கத் தெரிந்த எவரும் வாங்கி வாசிக்கும் வண்ணம் உள்ள புத்தகம். கீழ்கண்ட முகவரியிலோ அல்லது <a href="https://www.udumalai.com/devaganam.htm">உடுமலை</a> பதிப்பகத்திலோ இந்தப் புத்தகத்தை வாங்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நேஷனல் பப்ளிஷர்ஸ், 2 வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17. 044-2834 3385 < national_publishers@yahoo.com ></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Giri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4760839934863796836.post-24996074864409824922017-11-02T11:19:00.003+05:302017-11-02T11:19:56.385+05:30மண்புழுக்களின் தேசத்திலிருந்து எழுந்த ராஜநாகம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
தமிழ் புலம்பெயர் எழுத்துக்களை இரண்டாக வகைப்படுத்தலாம், தன் அடையாளங்களை கடந்து வேறொன்றாகும் முயற்சி, அதன் சிக்கல்கள் என்பது ஒரு வகை, தன் அடையாளத்தை இறுகப் பேணி தற்காத்துக்கொள்ளப் போராடுவது மற்றொரு வகை. முந்தைய எழுத்திற்கு மிகச்சிறந்த பிரதிநிதி அ. முத்துலிங்கம். இரண்டாம் போக்கை பிரதிநிதிப்படுத்தும் எழுத்தே மிகக் குறைவு. தெளிவத்தை ஜோசப்பை முன்னோடியாக கொண்டால், சீ. முத்துசாமி இவ்வரிசையில் அவருக்கு அடுத்த இடத்தை அடைபவர். </div>
<div style="text-align: center;">
<img alt="Image result for மண்புழுக்கள் முத்துசாமி" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfmNVtqxn8oG2DfAp6jxrph5Vju_l7xWgH4vKauQ61rgcaz_CXddZmFhQNrW3ls_u-CSG9or9Sq4w4wFzp2uwwB2FiWuEaeGBLnHK28EstnulFqpSHibp2ty-kPbYhs3mUcA0PGbgScOE/s320/Image0792%25282%2529.jpg" width="240" /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2006 ஆம் ஆண்டு மலேசியாவில் நிகழ்ந்த நாவல் போட்டியில் முதற்பரிசு வென்ற நாவல் இது. முத்துசாமி 1970 களிலிருந்தே எழுதி வந்தாலும், ஏறத்தாழ இருபது வருடங்கள் இடைவெளிக்கு பிறகு எழுதிய நாவல். இவ்வகையிலும் கூட தெளிவத்தையுடன் ஒப்புமை உள்ளவரே. அவரும் சில ஆண்டுகள் எழுதாமல் மீண்டும் எழுத வந்தார். </div>
<div style="text-align: justify;">
</div>
<a name='more'></a><br /><br />
<div style="text-align: justify;">
மண்புழுக்கள் நாவலின் முன்னுரையில் இதைத் தெளிவாக குறிப்பிடுகிறார்- “இம்மலை நாட்டில், நம் இனத்தின் வேர்கள் என்பது, ஒரு நூற்றாண்டு கால வரலாற்றைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டுள்ள, ரப்பர் காடுகள் சூழ்ந்த நம் தோட்டப்புறங்கள்தான். அதனைத் துறந்து, நமக்கொரு வரலாறு இல்லை. மிகத் துரிதமாக மாறி வரும் இன்றைய உலகமயமாக்கல் மாயையில் சிக்குண்டு, நமது வேர்கள் மறக்கப்படவும், மறைக்கப்படவும் ஆன சாத்தியங்கள் அனந்தம். ஒரு பொறுப்புள்ள தலைமுறை அதனைப் பதிவு செய்வதன் வழி, அதனைப் பாதுகாப்புடன் அடுத்து வரும் தலைமுறைகளின் கைகளில் கொண்டு சேர்க்க இயலும். அதன் வழி, தன்னை அடையாளம் கண்டுகொள்ளவும், தன் தனித்தன்மையை நிலைநாட்டிக் கொள்ளவும், பன்முகம் கொண்ட நம் சமுதாய அமைப்பில் சுயமிழந்து கரைந்து காணாமல் போய்விடாமல் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், ஒரு நூற்றாண்டுக் கால, இந்த வேர்களின் வாழ்வியல் வரலாறு, வரப்போகும் நமது சந்ததியினருக்கு துணைபுரியும் என்பது என் திடமான நம்பிக்கை.”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><img alt="Image result for மண்புழுக்கள் முத்துசாமி" src="" style="margin-left: auto; margin-right: auto;" /></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">சீ. முத்துசாமி </td></tr>
</tbody></table>
<div style="text-align: justify;">
தெளிவத்தையின் படைப்புலகத்துடன் நெருக்கமான தொடர்புடையது முத்துசாமியின் படைப்புலகம். தமிழகத்திலிருந்து பண்ணை அடிமைகளாக ஆங்கிலேய தோட்டங்களுக்கு சென்றவர்கள்தான் இருவரின் கதைமாந்தர்களும். லயம் வீடுகள், ரப்பர் காடுகள், கங்காணிகள், ஆங்கிலேய தொரைகள் என ஏறத்தாழ ஒரே உலகத்தை கண்முன் நிறுத்துகிறார்கள். ஆனால் தெளிவத்தைக்கும் முத்துசாமிக்கும் இடையிலான மிக முக்கியமான வேறுபாடாக நான் எண்ணுவது தெளிவத்தையிடம் இருக்கும் வருங்காலத்தைப் பற்றிய நேர்மறை நம்பிக்கை மற்றும் கதைகளில் இழையோடும் மெல்லிய அங்கதம். முத்துசாமி இறுக்கமாக இருண்மையைத்தான் காட்டுகிறார். அவருடைய மிக முக்கியமான பலமென்பது எளிய சொற்கள் மூலம் சூழலை காட்சிப்படுத்திவிட முடிகிறது என்பதே. நாவலின் பாதிக்குப் பாதி சூழல் விவரணைகள்தான். அதை மிகச் சிறப்பாகவும் செய்கிறார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அறுபது, எழுபதுகளின் மலேசிய ரப்பர் தோட்டத்தை களமாக கொண்டது இந்நாவல். ஒப்பந்தக் கூலிகளாக (சஞ்சி கூலிகள் எனும் சொல்லையே முத்துசாமி பயன்படுத்துகிறார்) ரப்பர் தோட்டங்களில் உழலும் பூர்வீக தமிழர்களைப் பற்றிய கதை. தொர, மேலாளர், கங்காணி, தண்டல் என உருவாகி நிலைபெற்று தொழிலாளிகளைச் சுரண்டும் அமைப்பை, அதன் ஒடுக்குமுறைகளை விவரிக்கிறது. பிழைக்கச் சென்ற அந்நிய தேசத்தில்கூட மேலகுச்சி கீழகுச்சி என சாதி ரீதியாக பிரிந்து கிடப்பதையும் சொல்கிறது. நாவலின் ஒரு பகுதியில் வெளிப்படையாக வன்னிய கவுண்டருக்கும் வெள்ளாள கவுண்டருக்கும் இடையிலான அரசியலைப் பதிவு செய்கிறார். மலம் அல்லும் வாசக்கூட்டி அம்மாசியின் கதையை ஆதங்கத்துடன் பதிவு செய்கிறார். அந்நிய சூழலில் மக்கள் எதிர்கொண்ட இடர்களை இவரது எழுத்து பதிவு செய்கிறது. மலேரியா போன்ற தொற்று நோய்கள் ஒருபுறம், ஓல குப்பான், ராஜநாகம் என விஷப் பிராணிகள் மறுபுறம், காட்டுப்பன்றிகள், அகால மரணமடைந்தவர்களின் ஆவிகள், பெருமழை, ராணுவங்கள்,போர்கள் என தொடர்ந்து நசுக்கப்பட்டச் சித்திரத்தை அளிக்கிறது. இத்தனைக்கும் நடுவில் திருமணம் செய்து, பிள்ளைகள் பெற்று,கோவில் திருவிழாக்கள் கொண்டாடி, கூத்து நாடகங்களைப் பார்த்து, ஒன்றாகச் சேர்ந்து ஆற்றில் மீன் பிடித்து என தங்களுக்கென ஒரு வாழ்வை அமைத்துக் கொள்கிறார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாவலில் ஆட்டுக்காரர் நினைவின் ஊடாக அவரின் தந்தையின் வாழ்வு சொல்லப்படுகிறது. நாட்டில் தருமபுரிக்கு அருகே விட்டு வந்த முதல் மனைவியின் கதை போல அநேகமாக பல கதைகளை நாம் கேட்டிருப்போம். புட்டுக்காரர் ஈரோட்டுக்கு அருகிருந்து ஆங்கிலேயர்களை நம்பிப் பிழைக்க வந்த கதையைச் சொல்கிறார். இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் ராணுவம் மலேயாவை வென்று சில ஆண்டுகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதிருந்த அடக்குமுறையையும் சூழலையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கிறார். சியாம் தாத்தா ஜப்பான் காரர்கள் தமிழகக் கூலிகளை அள்ளிச்சென்று இருப்புப் பாதை போடுவதற்காகச் செய்த கொடுமைகளை பதிவு செய்கிறார். ‘புயலிலே ஒரு தோணி’ நாவலில் சிங்காரம் இப்பகுதியை ஆவணப்படுத்தியிருக்கிறார். இந்நாவலில் வெகு சில பக்கங்களையே இவை ஆக்கிரமித்தாலும் முக்கியமான வரலாற்று பதிவாக எஞ்சுகிறது. நாவலின் இறுதியில் கம்யூனிச எழுச்சி பற்றிய கனவையும் சொல்கிறது. ஜின் பண்டி (காட்டுப் பன்றி) கடி, செம்போத்து குருவிக் கூடுக்கான தேடல், ராக்காசி கொசுக் கடி, கொள்ளிவாய் பிசாசின் நடமாட்டம், சாமி கெடா என அம்மக்களின் அன்றாட வாழ்வின் சிறு சிறு சுவாரசியங்களை நாவல் பதிவு செய்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாவலில் அனேக பாத்திரங்கள் இருந்தாலும் கூட ஆட்டுக்கார சின்னக்கருப்பன், அவருடைய மகள் சின்னப்புள்ள, அவளை வன்புணர்ந்து கொல்லும் கசியடி முனியப்பன், புட்டுக்கார கிழவன் போன்ற சில பாத்திரங்கள் மனதில் நிற்கின்றன. நாவல் ஆட்டுக்காரனின் கதையைச் சொல்வதாகத்தான் துவங்குகிறது. புட்டுக்காரர், சியாம் தாத்தா, மாட்டுக்காரர், பழனியம்மா, கசியடி முனியப்பன் என பல கதைசொல்லிகள் நாவலுக்குள் வருகிறார்கள். அனைவரின் குரலும் ஒன்று போலவே ஒலிக்கிறது. ஒரே அத்தியாயத்தில் பல்வேறு கதை சொல்லிகள் வருகிறார்கள். கவனமாக வாசிக்கவில்லை என்றால் இந்த மாற்றம் பிடிபடாமல் போகக்கூடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாவல் இரண்டு பாத்திரங்களின் எழுச்சி வீழ்ச்சி வழியாக பயணிக்கிறது. ஆட்டுக்காரன் இழந்த காதலைப் பற்றி ஏக்கத்துடன் இருந்தாலும்கூட எளிமையான இனிமையான வாழ்க்கை வாழ்பவனாகவே இருக்கிறான். மனைவியும் மூன்று பெண் பிள்ளைகளும், கோட்டில் நிறைய ‘ஈத்தும் பேத்துமாக’ ஆடுகளும் என நிம்மதியாக வாழ்கிறான். தந்தையின் சாதிப் பிடிவாதத்தால் தற்கொலை செய்துகொண்டு ஆவியாகச் சுற்றும் தங்கை அஞ்சலையைப் பற்றிய பகுதிகள், தந்தையுடன் சேர்ந்து ரெட்டமல காட்டுக்குள் சென்று ஆற்றின் ஊற்றை கண்டு வருதல், புதுத்துணி எடுக்க அவருடன் பட்டணத்திற்குச் செல்லுதல் என அவனுடைய பார்வையிலேயே நாவலின் பெரும் பகுதி நகர்கிறது. கங்காணியிடம் கசியடி முனியப்பன் மற்றும் அவனுடைய கோஷ்டி ஆங்கிலேயர்களின் நடனத்தை ஒளிந்து பார்த்ததாக போட்டுக் கொடுக்கிறான். முனியப்பன் சிறுவனாக இருந்தபோது அவனுடைய தந்தை அவனை வதைக்கிறார். தாயின் அரவணைப்பில் வளர்கிறான். ஆனால் தந்தையின் கொடுமை தாங்காமல் அவள் இறக்கிறாள். எல்லாவற்றின் மீதும் வெறுப்பு கொள்கிறான். ஆடுகளுக்கு கசியடிக்கும்போது (காயடித்தல்) அவை அலறும் ஒலி அவனை இன்புறச் செய்கிறது. அதையே தொழிலாக செய்கிறான். இளம் மனைவியைக்கூட எப்போதும் கடித்து குதறுகிறான். ஆட்டுக்காரனை பழிவாங்க அவனது பதினைந்து வயது மகளான சின்னப்புள்ளயை வன்புணர்ந்து கொல்கிறான். அதற்காக சிறை செல்கிறான். சிறையில் சீன கம்யுனிச கேப்டன் ஒருவனோடு நட்பு ஏற்படுகிறது. சில ஆண்டுகளுக்குப்பின் அவர்களோடு சேர்ந்து சிறையிலிருந்து தப்பி அவனை மிதித்து அவமதித்த டன்லப் தொரையை சுட்டுக் கொல்கிறான். அவனுடைய துணிவின் பொருட்டு நாவலின் முடிவில் பெருவீரனாக புகழப்படுகிறான். மகளை இழந்து, ஒரு காலும் முடமாகி, மனைவியின் அன்பையும் இழந்து, வெறுமை சூழ்ந்த பயனற்ற மனிதனாக உணர்கிறான் ஆட்டுக்காரன். இரண்டாம் பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கிறாள். நாவலின் இறுதியில் தன்னை மாய்த்துக் கொள்கிறான். ஆட்டுக்காரர் எளிய நேர்மறை பாத்திரம்தான், ஆனால் கசியடி முனியப்பன் போன்ற ஒரு சிக்கலான பாத்திர வார்ப்பைக் கையாண்டிருப்பது முத்துசாமியின் படைப்பூக்கத்திற்கு சான்று என்றே சொல்லலாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாவலின் துவக்கத்தில் கித்தா காட்டில் கண்ட ராஜநாகத்தைப் பற்றிய விவரணை வருகிறது. ராஜ நாகத்தின் அச்சுறுத்தும் வசீகரம், அதன் விரிந்த பத்தி, மினுங்கும் தோல். என அவன் ஒரு முறை கண்ட அனுபவத்தை விவரிக்கிறான் பாம்பு பாலா. “ராஜநாகம் மாதிரி ஒரு புள்ள பொறக்கணும்னு ரொம்ப நாளா ஆசண்ணே... இந்தத் தோட்டத்துல அப்படியொரு மனுஷன் பொறக்கணும்ணே... அவனைப் பாத்த வாக்குல இந்த வெள்ளத்தோலு தொர, இங்கிலீஷ் பேசுற கிராணிங்க, நம்மள வேலக்காட்டுல ஓட ஓட தொரத்துர கங்காணிங்க அத்தன பெரும் சிலுவாரோட ஒண்ணுக்குப் போவனும்ணே”. நாவலின் இறுதியில் கசியடி முனியப்பன் தொரையைச் சுட்டுக் கொன்றதும் அவனைப் பற்றி ஊரார் பேசிக் கொள்கிறார்கள். “நம்ம மலக்காடுல சுத்துற ராஜநாகம்டா அவன்... ரெட்ட மல காட்டுல சுத்தற புலிடா அவன்... சாமிக்கு நாலு கெடா வெட்டி நாளைக்கே விருந்து போடணும்டா”. மண்புழுக்களாக வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்திலிருந்து நூறு வருடங்களில் அபூர்வமாக பத்தி விரித்து எழுகிறது ஒரு ராஜநாகம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாவலில் சில கவனமின்மைகள் காலப்பிழைகள் சட்டெனப் புலப்படுகின்றன. நாவலின் துவக்கத்தில் ஆட்டுக்காரர் சாலபலத்தானை மரியாதையுடன் அணுகுகிறார். சாலபலத்தான் மூத்தவர் போலவும் ஆட்டுக்காரர் இளையவர் போலவும் தோற்றம் கொண்டுள்ள உரையாடல்கள் நாவலின் இறுதியில் தலைகீழாகிறது. ஆட்டுக்காரரின் தந்தை மற்றும் கசியடி முனியப்பன் போன்றவர்களின் பாத்திரப்படைப்புகளில் கூட சில ஏற்றத்தாழ்வுகள், குழப்பங்கள் உள்ளன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாவல் முழுக்க பேச்சு மொழியில் இருப்பதால் துவக்கத்தில் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. மேலும் அத்தியாயங்கள்தோறும் புதிய கதாபாத்திரங்கள் புகுந்து புறப்பட்டு பக்கங்களை நிறைக்கிறார்கள். மண்ணில் மறைந்த தம் மனிதர்களை காலத்துற்கு அப்பால் நிறுவ வேண்டும், அவர்களுடைய வாழ்வை ஆவணப்படுத்தியாக வேண்டும் எனும் ஆவேசத்தோடு இயங்குகிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. நினைவுச்சரட்டைப் பற்றியபடி செல்வதால் அத்தியாயங்கள் ஒழுங்கின்றி கட்டற்ற நினைவுப்பெருக்காக திகழ்கின்றன. நாவல் என்பதைக் காட்டிலும் நினைவுத் தொகை என கூறலாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சீ. முத்துசாமிக்கு தனது படைப்புலகத்தின் எல்லைகள் புரியாமல் இல்லை. “இன்றைய எனது படைப்புலகம் என்பது, புனைவுக்குள் ஆங்காங்கே கலையின் தெறிப்புகளைக் கொண்டு வரும் சிறு முயற்சிகளே. இச்சிறு முயற்சியிலும், கவனச் சிதறல் தவிர்க்க இயலாமல் போய், சில வேளைகளில், படைப்பின் முழுமைக்குத் தேவையான பிற உறுப்புகள் முடமாகும் விபத்தும் நேர்ந்து விடுகிறது,” என நாவலின் முன்னுரையில் தெளிவாக எழுதுகிறார். </div>
<div style="text-align: justify;">
பிரித்தானிய எழுத்தாளர் ஹிலாரி மாண்டெல் வரலாற்று புனைவுகள் பற்றி ஆற்றிய ரெய்த் உரையில் முன்னோர்களை நினைவுகூர்வது எத்தனை முக்கியமானது எனக் குறிப்பிடுகிறார். “மனிதராக இருப்பதற்கான மிக நெருங்கிய இலக்கணமாகவே இதைக் கொள்ளலாம், நாம் துக்கம் அனுஷ்டிக்கத் தெரிந்த மிருகங்கள். இனப்படுகொலையின் மிக முக்கியமான குரூரங்களில் ஒன்று வெகுமக்களின் சவக்குழி, நேசத்துற்குரிய, நம்முடன் வாழ்ந்த மனிதர்கள் பெயரிழந்து பிரிக்கமுடியாத மாமிசப் பிண்டத் தொகுப்பாக மாறுதல் அது.” மண்புழுக்கள் கண்ணுக்கு தெரியாமல் மண்ணுக்கடியில் வாழ்கின்றன. வாழ்ந்து மண்ணை வளமாக்கி எவரும் அறியாமல் மண்ணுக்கு உரமாகி சாகின்றன. இந்த ரப்பர் தோட்டங்கள், தேயிலை தோட்டங்கள் என கண்காணா நாடுகளில் ஒப்பந்தக் கூலிகளாக பிழைக்கச் சென்ற மக்களுக்கு அந்நாடேகூட ஒரு பெரும் வெகுமக்கள் சவக்குழிதான் என எனக்குத் தோன்றியது. புழுக்களைப் போல் அடையாளமிழந்து மொத்தமாக மண்ணுக்கடியில் மரித்தவர்களின் சிலரின் நினைவுகளை, வாழ்வின் அடையாளங்களை காலத்துக்கு அப்பால் நிறுத்துவதற்கான முயற்சியே இந்நாவல். அனைத்திற்கும் அப்பால் அம்முயற்சியில் முத்துசாமி வெற்றியடைந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதினை பெரும் எழுத்தாளர் சீ. முத்துச்சாமி அவர்களுக்கு வணக்கங்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மண்புழுக்கள் </div>
<div style="text-align: justify;">
தமிழினி வெளியீடு </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: right;">
<b>-சுகி </b></div>
<div style="text-align: right;">
<br /></div>
</div>
suneel krishnanhttp://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.com0