தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்று, பால்யம் தொடங்கி பதின் பருவம்,வாலிபம் வரையிலான ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணம் என்ற வகையில், மதம் சார்ந்த, அரசியல் சார்ந்த பெரு நிறுவன அமைப்புகளின் முன் தனி மனிதனின் ஆற்றல் மற்றும் ஆளுமை அடையும் வளர்ச்சி அல்லது சிதைவு பற்றிய சித்திரம் என்ற வகையில் இருபத்தைந்து வருட தனி மனிதனின் வரலாற்றை சமூக வரலாற்றோடு சேர்த்து வாசிக்க விஸ்தீரண மான களம் இந்தப் புதினம்.
14 Jan 2018
1 Jan 2018
சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம் - ந. ஜயபாஸ்கரன் கவிதைகள்
ந. ஜயபாஸ்கரன் பற்றிய முதற்பக்க குறிப்பு, "ந. ஜயபாஸ்கரன், 1947 மார்ச் 16 அன்று மதுரையில் பிறந்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்," என்று ஆச்சரியத்தக்க வகையில் துவங்கி, "மதுரை வெண்கலக் கடைத் தெருவில் வெண்கலப் பாத்திரக் கடை நடத்தி வருகிறார்," என்று அதிர்ச்சியளிக்கும் வகையில் முடிகிறது. இடைப்பட்ட வரிகள் அவரது சம்ஸ்கிருத பயிற்சி, எமிலி டிக்கின்சன் கல்வி ("ஒரு நாள் இரவு எமிலி டிக்கின்சன் குறித்து எஸ்.ஆர்.கே. நிகழ்த்திய உரை, ஜயபாஸ்கரனது வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது"), மற்றும் பக்தி இலக்கியம் உட்பட மரபுத் தமிழ் பரிச்சயத்தைச் சொல்கின்றன (இவை போக, "நகுலனின் எழுத்துகள் மீதான ஈடுபாடும் அவற்றின் தாக்கமும் இவரிடம் உண்டு").
இப்பேற்பட்ட மேதை (விளையாட்டாய்ச் சொல்லவில்லை) மிகக் குறைவாகவே எழுதியிருக்கிறார்- நூற்றைம்பது ரூபாய்க்கு இவர் எழுதிய கவிதைகள் அத்தனையும் விலை கொடுத்து வாங்கி விடலாம். கயல் கவின் பதிப்பித்துள்ள இந்தப் புத்தகம், “சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம்”, விலை ஐம்பது ரூபாய். இன்னொன்று, உயிர் எழுத்து பதிப்பித்துள்ள, "அர்த்தநாரி அவன் அவள்". அதன் விலை நூறு ரூபாய். விலைமதிப்பில்லாத சில கவிதைகள் இந்த இரு புத்தகங்களில் உள்ளன. தேர்ந்த விமரிசகர்களால் அங்கீகரிக்கப்பட்ட கவிஞரான இவர் இதைவிட பிரபலமாக இல்லாதது புதிர்தான் ("கு.ப. ராஜகோபாலன், மௌனி மற்றும் லா.ச.ராவின் வரிசையில் பிரமீள் வகுப்பது போல் ஜயபாஸ்கரன் பூரண அக உலகக் கலைஞர்" என்று இதன் பின்னுரையில் எழுதுகிறார், கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன். புத்தகத்தின் பின்னட்டையில், "முதன் முதலாகத் தமிழ்க் கவிஞர் தன் மூல ஆதாரத்தைத் தமிழ் இலக்கிய மரபைக் கொண்டு நிர்ணயிக்கும் முயற்சி," என்ற நகுலன் குறிப்பு இருக்கிறது).
இப்பேற்பட்ட மேதை (விளையாட்டாய்ச் சொல்லவில்லை) மிகக் குறைவாகவே எழுதியிருக்கிறார்- நூற்றைம்பது ரூபாய்க்கு இவர் எழுதிய கவிதைகள் அத்தனையும் விலை கொடுத்து வாங்கி விடலாம். கயல் கவின் பதிப்பித்துள்ள இந்தப் புத்தகம், “சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம்”, விலை ஐம்பது ரூபாய். இன்னொன்று, உயிர் எழுத்து பதிப்பித்துள்ள, "அர்த்தநாரி அவன் அவள்". அதன் விலை நூறு ரூபாய். விலைமதிப்பில்லாத சில கவிதைகள் இந்த இரு புத்தகங்களில் உள்ளன. தேர்ந்த விமரிசகர்களால் அங்கீகரிக்கப்பட்ட கவிஞரான இவர் இதைவிட பிரபலமாக இல்லாதது புதிர்தான் ("கு.ப. ராஜகோபாலன், மௌனி மற்றும் லா.ச.ராவின் வரிசையில் பிரமீள் வகுப்பது போல் ஜயபாஸ்கரன் பூரண அக உலகக் கலைஞர்" என்று இதன் பின்னுரையில் எழுதுகிறார், கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன். புத்தகத்தின் பின்னட்டையில், "முதன் முதலாகத் தமிழ்க் கவிஞர் தன் மூல ஆதாரத்தைத் தமிழ் இலக்கிய மரபைக் கொண்டு நிர்ணயிக்கும் முயற்சி," என்ற நகுலன் குறிப்பு இருக்கிறது).