பெயர் :அங்கே இப்ப என்ன நேரம்
ஆசிரியர் : அ. முத்துலிங்கம்
உள்ளடக்கம் : கட்டுரைகள்
முகவரி :67, peters road, Royapettai.
Chennai-14.
Phone : +91-9884196552
E-mail :tamizhininool@yahoo.co.in
இப்ப
வரைக்கும் , நிறைய தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் நாட்டில் இருந்து எழுதின புத்தகம்
படிச்சு இருந்தாலும், இலங்கை தமிழ் எழுத்தாளர் எழுதின புத்தகம் ஒண்ணுகூட
படிச்சது இல்லை. கொஞ்சம் தயக்கத்தோடுதான் அ. முத்துலிங்கம் எழுதின "அங்கே
இப்ப என்ன நேரம்" புத்தகம் படிக்க ஆரம்பிச்சேன், சில இடங்களில், நான்
படித்திராத தமிழ் வார்த்தைகள் உபயோகப்படுத்தி இருந்தாலும், படிச்சு முடிச்ச
உடனே மனதில் ஆழமா தங்கிவிட்டார்.
இந்த புத்தகத்தில் கனடா வாழ்க்கை, சந்திப்பு, ரசனை, பயணம், கண்டதும் கேட்டதும், மொழிபெயர்ப்பு, விமர்சனம், அனுபவக் கதை, சிந்திப்பதற்கு என்ற ஒன்பது தலைப்புகளில் 48 கட்டுரைகள், ஒவ்வொரு தலைப்பிலும் 5 முதல் 8 கட்டுரைகள்.
"கனடா
வாழ்க்கை" என்ற தலைப்பில் கனடாவில் கடன் அட்டை பெறுவதில் இருந்து, வீடு
வாங்குவது, ஓட்டுனர் உரிமம் வாங்குவது உள்ள சிரமம்களை சொல்கிறார்.
உதாரணத்திற்கு,
"
நான் கார் ஓட்டுவதற்கு பத்து
விரல்களையும் பாவிக்கிறேன். கனடாவில் ஒன்பது விரல்களில் தான் கார் ஓட்ட
வேண்டும். அப்படித்தான் பலர் செய்கிறார்கள் . வலது கையின் நடுவிரலை எதிரே
வருபவர்களையும், பின்னுக்கு இருந்து வந்து வேகமாக முன்னேறுபவர்களையும்
, குறுக்கே மறிப்பவர்களையும் வசை பாடுவதற்கு தனியே வைத்திருக்க வேண்டும்.
என் குரு அதையும் படிப்பிக்கவில்லை".
"கனடாவில் சூப்பர் மார்க்கெட்"என்ற கட்டுரையில் அங்கு இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் தினமும் சுற்றுவது,
கண்ணில் படும் பொருட்களை வாங்குவது, அங்கு கிடைக்கும் இலவச சாம்பிள்களை
ருசி பார்ப்பது என்றெல்லாம் எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்கிறார், ஆனால்
மனைவி வாங்கிவர சொன்ன பொருட்களை மட்டும் மறந்துவிடுகிறார்.
"சந்திப்பு" தலைப்பில் சுந்தர ராமசாமியை கலிபோர்னியாயில் சந்தித்ததும், டேவிட் பெஸ்மொஸ்கிஸ் என்ற எழுத்தாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக முன்னாள் தமிழ் துறை பேராசிரியர் தொ .பரமசிவன், கனடாவில் புகழ் பெற்ற நாடக நடிகர், நெறியாளர், "Dean gilmour" பற்றி எழுதுகிறார்.
நடிகை பத்மினி கனடாவில் நடந்த
விழாவிற்கு சிறப்பு விருந்தினரராக வருகிறார், அ . முத்துலிங்கம் வீட்டில்
தங்குகிறார். நிறைய பேர் பத்மினியிடம் நீங்கள் ஏன் சிவாஜி கணேசனை திருமணம்
செய்துக் கொள்ளவில்லை என கேட்கும்போது அமைதியாக இருந்து விடுகிறார். ஆனால்
நிகழ்ச்சி எல்லாம் முடிந்து, யாரும் அதை பற்றி கேட்காத போது, "நான் நாயர் பொண்ணு, அவர் கள்ளர் ஜாதி" என்று அதன் காரணம்
சொல்லும் போது , ஒரு சின்ன அதிர்ச்சி ஏற்படுகிறது.
