ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்
ஆசிரியர் : சுஜாதா
பக்கங்கள் : 158
விலை : ரூ.80
கிழக்கு பதிப்பகம்.
***
தமிழ்ப் பற்று உள்ளவரா? ஆழ்வார்கள் தமிழை எப்படி கையாண்டுள்ளார்கள் என்று படிக்க வேண்டுமா?
அல்லது
பக்தியில் ஈடுபாடு உண்டா? ஆழ்வார்கள் இறைவனை, திருமாலை எப்படியெல்லாம் வர்ணித்து, அவனை புகழ்ந்து பாடி, போற்றி துதித்தார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
அல்லது
சங்க காலத்தில் சைவ மற்றும் இதர சமயங்கள் எப்படி இருந்தன? வைணவ ஆழ்வார்கள் யாரெல்லாம் மற்ற சமயத்தாரோடு எப்படியெல்லாம் வாதாடி வென்றார்கள் என்ற விவரங்கள் வேண்டுமா?
இதெல்லாம் தெரிந்து கொள்வதற்கு, ஆழ்வார்கள் பற்றி, அவர்களின் பாடல்களை படிக்க வேண்டும். ‘ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்’ என்று அழைக்கப்படும் மொத்தம் நாலாயிரம் பாடல்கள்.
