சிறப்புப் பதிவர் R.கோபி.
ஏதோ விக்ரமன் பட டைட்டில் மாதிரி இல்லை?! நமக்கு விக்ரமன் டைப் படங்கள் பிடிப்பதில்லை. இணையத்தில் எப்போதாவது கொஞ்சம் உணர்ச்சிவயப்பட்டு ஒருவரைப் பற்றிக் கொஞ்சம் நன்றாக எழுதிவிட்டாலும் போதும். சம்பந்தப்பட்டவரே வந்து ‘போதும் மாப்ள, நெஞ்சை நக்கிட்ட’ என்றோ மற்றவர்கள் ‘லாலா லாலா லாலா’ என்றோ கருத்தூட்டம் இடுகிறார்கள். நானும் இட்டிருக்கிறேன்:-)
அட, கொஞ்ச நேரம் கூட நல்லதை மட்டுமே நாம் பார்ப்பதில் எவருக்கும் விருப்பமில்லை. நாமும் அடுத்தவரை அவ்வாறு இருக்க விடுவதில்லை. இது நம் பிரச்சனையே அன்றி விக்ரமன் போல உள்ளவர்கள் பிரச்சனை இல்லை.
