"புலியின் கண்களின் உள்ளே காடு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது என்ற போர்ஹேயின் வரி உண்மை என்பதை கென்னத்தின் எழுத்தை வாசிக்கையில் அறிந்துகொள்ள முடிகிறது - எஸ். ராமகிருஷ்ணன்
சில குறிப்பிட்ட இடங்களைத் தவிர காடு மிகவும் பாதுகாப்பான இடம் என்று எழுதுகிறார் கென்னத் ஆண்டர்சன். 1960களிலேயே, மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையைக் கடப்பதைவிடவும் காட்டுக்கு நடுவில் வாழ்வது பாதுகாப்பானது என்று குறிப்பிட்டிருக்கிறார் அவர். எஸ். சங்கரன் மொழிபெயர்த்த அவரது 'ஏலகிரியில் சிறுத்தை வேட்டை' என்ற புத்தகத்தைப் படிப்பது ஒரு வித்தியாசமான அனுபவம்.
