சிறப்புப் பதிவர் - R.கோபி
மொத்தம் பதினைந்து கதைகள். ஒன்று கூட சம்பிரதாயமான கதை இல்லை. சில கதைகள் ஆசிரியரின் அந்த நேரத்து மன ஓட்டத்தின் பதிவுகள் போல இருக்கின்றன.
‘சம்பிரதாயமான, வெளிப்படையான இருப்பின் சட்டகத்தைக் கனவினாலும், பிரக்ஞையாலும் தொடர்ந்து கலைத்துக் கொண்டிருப்பவை யுவன் சந்திரசேகரின் கதைகள். கதையின் ஆதார அழகியலையும் சுவாரசியத்தையும் விரித்தபடியே அதன் வழக்கமான வழிமுறைகளைக் கலைத்து மாற்றியமைக்கும் யுவன் சந்திரசேகரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது.’
- பின்னட்டையில் வருவது
