சுஜாதாவுக்குத் தன் அபார மேதைமையைக் காட்ட வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. ‘வாசகருடைய ஆர்வத்தைத் தூண்ட வேண்டும், மீதியை அவராகவே தேடிப் படித்துக்கொள்வார்’ என்பது
அவர் கொள்கை.
- அ.முத்துலிங்கம்
உலக இலக்கியத்தின்
வெற்றிகரமான சிறுகதைகளாக
நமக்குக் கிடைக்கும்
கதைகளில் எவற்றுக்கும்
குறையாத பத்து
கதைகளையேனும் சுஜாதா
எழுதியுள்ளார் - ஜெயமோகன்
எண்பதுகளின் துவக்கத்தில்
சுஜாதாவைப் படிக்கத்
துவங்கிய நாட்களில்
அவர் தான்
நண்பர்களுக்கு வாத்தியார்.
எது தொடர்பான
சந்தேகம் உண்டானாலும்
வாத்தியார் ஏதாவது
எழுதியிருப்பார் பாரேன்
என்று உடனே
சுஜாதாவின் புத்தகத்தைத்
தேடி ஒடுவார்கள்.
அநேகமாக எழுதியிருப்பார்.
அல்லது எழுதிக்
கொண்டிருப்பார்.
- எஸ்.ராமகிருஷ்ணன்
**
தமிழ் எழுத்துலகின் மாஸ்டர்களில் ஒருவரான சுஜாதா அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை ஆம்னிபஸ் தெரிவித்துக்கொள்கிறது!
நவீனத் தமிழின் வயது 79.
கடந்த பிப் 28ஆம் தேதி ஒரு பதிவு போடலாமே என ஆம்னிபஸ் நண்பர் கேட்டபோது, சாகாவரம் பெற்ற சுஜாதாவின் சாதனைக்கு பிறந்தநாள் மட்டுமே முக்கியம் என ஒட்டுமொத்தமாக ஆம்னிபஸ் நண்பர்கள் கூறிவிட்டனர்.

