ஜெயகாந்தன் முன்னுரையில் எழுதுகிறார் பாருங்கள், இதைப் படிப்பவர்களுக்கு ஜெயகாந்தனின் ஆணவத்தைப் பார்த்து பயங்கர கோபம் வரலாம் -
இதைவிட அகங்காரமாக எழுதக்கூடியவார்கள் இங்கே ஒருவர் இருவர்தான் உண்டு. அவர்களும்கூட ஜெயகாந்தன் "இந்த இடத்தில் இருந்து," என்ற கதையில் செய்கிற அளவுக்கு யாரும் தங்களைத் தாங்களே போற்றிப் பேச முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது -
"இலக்கியமும் எழுத்தும் இந்தப் பத்திரிகைகளை அண்டியில்லை என்றே இப்போதும் நான் நம்புகிறேன். எழுத்தையும் இலக்கியத்தையும் நம்பி நமது பத்திரிகைகள் உயர வேண்டும் என்றே விரும்புகிறேன். மேலும் அபிமானமுடைய எழுத்தாளர்களும், தேர்ந்த ரசனையுடைய வாசகர்களும் நமது தமிழ் பத்திரிகைகளில், இலக்கியம் தேடுவதை இன்னும் விட்டபாடில்லை. அவர்கள் என்னையேனும் கண்டு ஓரளவு ஆறுதல் பெறட்டும் என்ற இலக்கியப் பொறுப்பினால் செய்யப்படும் நிஷ்காம்ய கர்மமாகவே நான் இந்த அச்சு வாகனத்தின்மீது ஆரோகணித்திருக்கிறேன்.
ஆனால் தரிசனம் என்பது இந்த ஊர்கோலம் மட்டும் அல்ல. அது விஸ்வரூபம்."
இதைவிட அகங்காரமாக எழுதக்கூடியவார்கள் இங்கே ஒருவர் இருவர்தான் உண்டு. அவர்களும்கூட ஜெயகாந்தன் "இந்த இடத்தில் இருந்து," என்ற கதையில் செய்கிற அளவுக்கு யாரும் தங்களைத் தாங்களே போற்றிப் பேச முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது -
"நீர் பிரதிபாவான்! பிரதிபை என்பது வெறும் மேதாவிலாசம் அன்று. அது புதிது புதிதாய்ப் பளீர் பளீரென்று ஸ்புரித்துப் பிரகாசிக்கிற பிரக்ஞை. பிரக்ஞா நவ நவோன் மேஷ சாலினீ... விசுவரூபமெடுக்க நின்ற வாமன!" என்று இரண்டு கரங்களையும் அவனது சிரத்தின் மேல் உயர்த்தி அவன் பொருட்டு அவர் கடவுளை ஸ்தோத்திரம் செய்தார்.
அவன் தன் கையிலிருந்த புகைக் குழாயைப் பக்கத்தில் தள்ளி வைத்து 'குரவே நமஹ' என்று அவரை நமஸ்காரம் செய்து கொண்டான்."
