சிறப்பு பதிவர் : ரா. கிரிதரன்
காப்பியங்களில் உயர்ந்ததான இரட்டைக் காப்பியங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஆடற்கலையை அறிந்துகொள்ள கலைக் கருவூலங்களாக அமைந்திருக்கின்றன. ஆடற்கலையின் மேன்மையை உணர்த்தும் வகையில் ஆடல்வகைகள், அரங்க அமைப்பு, ஆடல் ஆசிரியன் (நட்டுவனார்) தகுதி, குழல், யாழ், தண்ணுமை ஆகியவற்றை இயக்கும் கலைஞர்களின் இயல்பு போன்றவற்றை விரிவாக விளக்கும் நூலாக சிலப்பதிகாரமும் மணிமேகலையும் திகழ்கின்றன. நாட்டிய நன்னூல், ஓவியச் செந்நூல் போன்றவை அந்த காலத்தில் நோக்கு நூலாக இருந்துள்ள செய்திகளை இவற்றின் மூலம் அறியமுடிகிறது.
சங்க காலம் தொடங்கி இசை நாடகம் இயல் போன்ற மூவகை மரபுகள் தமிழர் வாழ்வோடு இணைந்துள்ளதை மிகத் தெளிவாக நமது பண்டைய நூல்கள் முன்வைக்கின்றன. பல சங்கக்கவிதைகளைப் படிக்கும்போது அவை நிகழ்த்துவதற்கான களத்தையும் தன்னுள்ளே கொண்டுள்ளதோ எனச் சந்தேகம் வருமளவு ‘பாவங்கள்’ நிறைந்ததாக அமைந்துள்ளன. பக்தி காலகட்டத்தில் கோயில்களில் பொலிவுடன் தொடர்ந்த ஆடற்கலை, அந்நிய படையெடுப்பு காரணமாகவும், கோயில் ஆடற்கன்னியரது வாழ்க்கைக்கு பங்கம் விளைவிக்க நடந்த சம்பவங்களாலும் நலிந்த கலையாக மாறத்தொடங்கியது நமது வரலாற்றில் முக்கியமான காலகட்டம். மெல்ல தேவதாசிகளின் தொண்டு கோயிலைத் தாண்டி ஊர் பெரியவர்களது வீட்டுப் படியேறியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேவதாசிகள் தொழிலை ஆங்கிலேய ஆட்சி தடை செய்யுமளவு நமது பண்டைய கலை வீழ்ச்சி அடைந்தது.
சங்க காலம் தொடங்கி இசை நாடகம் இயல் போன்ற மூவகை மரபுகள் தமிழர் வாழ்வோடு இணைந்துள்ளதை மிகத் தெளிவாக நமது பண்டைய நூல்கள் முன்வைக்கின்றன. பல சங்கக்கவிதைகளைப் படிக்கும்போது அவை நிகழ்த்துவதற்கான களத்தையும் தன்னுள்ளே கொண்டுள்ளதோ எனச் சந்தேகம் வருமளவு ‘பாவங்கள்’ நிறைந்ததாக அமைந்துள்ளன. பக்தி காலகட்டத்தில் கோயில்களில் பொலிவுடன் தொடர்ந்த ஆடற்கலை, அந்நிய படையெடுப்பு காரணமாகவும், கோயில் ஆடற்கன்னியரது வாழ்க்கைக்கு பங்கம் விளைவிக்க நடந்த சம்பவங்களாலும் நலிந்த கலையாக மாறத்தொடங்கியது நமது வரலாற்றில் முக்கியமான காலகட்டம். மெல்ல தேவதாசிகளின் தொண்டு கோயிலைத் தாண்டி ஊர் பெரியவர்களது வீட்டுப் படியேறியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேவதாசிகள் தொழிலை ஆங்கிலேய ஆட்சி தடை செய்யுமளவு நமது பண்டைய கலை வீழ்ச்சி அடைந்தது.