செய்பவன் நான் இல்லை, திருமலைத் தலைவனே
ஆசிரியர்: P.V.R.K.பிரசாத். இ.ஆ.ப (ஓய்வு)
தமிழில்: கலைமாமணி டாக்டர் P.B.ஸ்ரீனிவாஸ்
பக்கங்கள்: 410
விலை: ரூ.150
வானதி பதிப்பகம்
PVRK.பிரசாத்.இ.ஆ.ப(ஓய்வு). இந்தியாவில் பல்வேறு இடங்களில் பற்பல பதவிகள் வகித்தவர். 1979-84 வரை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர். அந்த காலகட்டத்திற்கு முன் அவர் இருந்த விதம் - சிகரெட், குடி, சீட்டுக்கட்டு - ஜாலியான வாழ்க்கை. திருப்பதி பாலாஜி முன் பதவியேற்றதிலிருந்து அடுத்த இருபது ஆண்டுகள் (இன்று) வரை அவருடைய வாழ்க்கை - தலையில் குடுமி, நெற்றியில் நாமம். ஒரு நாளைக்கு சுமார் ஐந்து மணி நேரம் வரை பூஜை, பக்தி, பாடங்கள். இவரது சக-கல்லூரி மாணவர்கள், இன்றைய கோலத்தைப் பார்த்து, நம்ம பிரசாத் இப்படி மாறுவான்னு நான் நினைக்கவேயில்லை என்று சொல்கிறார்களாம். மேலும் இவரது குடும்பம், குழந்தைகள் அவர்களின் திருமணங்கள் ஆகியவற்றைப் பற்றி இந்தப் புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம்.