தஞ்சை பிரகாஷின் சிறுகதைகள் படித்ததில் இருந்து அவருடைய மற்ற படைப்புகளையும் படித்துவிட வேண்டும் என்ற உந்துதலில் வாங்கிய புத்தகம் இது.
பாலியல் உணர்வு தரும் கதைகளை நிறையப் படித்திருக்கிறேன். அதை வெளிப்படையாகச் சொல்வதில் தயக்கமேதும் இல்லை. அந்தக் கதைகள் ஒரு எல்லைக்குள் நின்றுவிடும். பதின்வயதில் அவற்றைப் படித்தபோது ஒரு கிளுகிளுப்பு உண்டாகும். கற்பனையில் அந்தக் கதைகளின் சம்பவங்கள் விரியும்போது சிறிது நேரத்திற்கு ஒரு இன்பத்தைக் கொடுக்கக் கூடியவை. அந்தக் கதைகள் போகக்கூடிய தூரம் அவ்வளவே.
மீனின் சிறகுகள் நாவலும் அவை போன்ற ஒன்றுதான் என்றால் பத்தோடு பதினொன்றாகப் போயிருக்கும். இவற்றில் இருந்து இந்த நாவலைத் தனித்து நிற்கச் செய்வது எது? அல்லது இந்த நாவல் எந்தப் புள்ளியில் இருந்து அவற்றைத் தாண்டிச் செல்கிறது?
தஞ்சை பிரகாஷ்
