சிறப்புப் பதிவர்: ஆர்.அனுராதா
யாமம் என்னும் வசீகரமான தலைப்பைப் போலவே விதவிதமான இரவுகளின் வசீகரமான வர்ணனைகள் கதை நெடுகிலும்.
சுதந்தரத்திற்கு முன் பிரிட்டிஷார் இந்தியாவில் காலூன்ற ஆரம்பித்த காலமே கதைக்களம். ஆனால் பிரிட்டிஷாரின் அடக்குமுறையோ, சுதேசிகளின் போராட்டமோ என எதையும் தொடாமல், தேர்ந்தெடுத்த... ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாத சில சாமானியர்களின் (மத்யமர்!) வாழ்வை சொல்லுகிற கதை.
