கிழக்கு பதிப்பகம்
ஆசிரியர்கள்: பி.சி.பாலசுப்ரமணியன் / ராஜா கிருஷ்ணமூர்த்தி
பக்கங்கள்: 132
விலை: ரூ.80
***
Toastmasters பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். பேச்சுத் திறன் உட்பட ஒட்டுமொத்த communication skillsகளை வளர்க்க உதவும் ஒரு அமைப்பு. அதில் Table Topics என்று ஒரு பகுதி. ஏதேனும் ஒரு தலைப்பு கொடுப்பார்கள். உடனடியாக அதைப் பற்றி இரு நிமிடங்கள் பேச வேண்டும் என்பது விதி. சில மாதங்கள் இதில் பங்குபெற்றாலும் அவன் Table topics பகுதி வரும்போது பயங்கர பரபரப்பு ஆகிவிடுவான். அவ்வளவு தேர்ந்த பேச்சாளரா என்று யாரும் ஆச்சரியப் படவேண்டாம். சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எதையாவது பேசிவிட்டு, இறுதியில் அந்த தலைப்பைக் கொண்டு சேர்ந்து விட்டால் ஆச்சு என்னும் ஒரு குறுக்குவழியை கண்டுபிடித்திருந்தான். இதே போல், நம் ஊர் உதாரணமும் ஒன்று உண்டு. தேர்வுக்கு தென்னை மரத்தைப் பற்றி படித்துக் கொண்டு போயிருந்தான் ஒருவன். ஆனால், அங்கே மாட்டைப் பற்றி கேள்வி கேட்டார்கள். இவனும், தென்னையைப் பற்றி முழுக்க எழுதிவிட்டு, இப்படிப்பட்ட மரத்தில்தான் மாட்டைக் கட்டுவார்கள் என்று எழுதிவிட்டான்.
