ஆம்னிபஸில் குழும விவாதத்தின் போது
அவர்கள் படித்த புத்தகங்களில் மிகவும் விரும்பியவை குறித்து ஒரு பட்டியல்
வந்தது. அதில் ஒருவர் ஜார்ஜ் ஆர்வேல் பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். இந்த
தடவை வாடகை நூலகம் சென்று நிரம்ப நேரம் தேடிக்கொண்டிருந்தபோது, ஆர்வெல்
பற்றிய நினைவு வந்தது, ஆர்வெல் எழுதிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா, என்று
கேட்டபோது இந்தப் புத்தகத்தை நூலகர் எடுத்துத் தந்தார். ஆர்வெல் /
புத்தகத்தை பற்றிய எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் படிக்க ஆரம்பித்தேன்.
இந்த
கருத்துகள் தற்காலத்துக்கு எப்படி பொருந்துகிறது? எனக்கு புரிந்த வரையில்
ஒப்பிட்டு எழுத முற்படுகிறேன். நாவல் எழுதப்பட்ட காலம் 1948. நாவலில்
சொல்லப்படும் காலம்- Dystopian Future. 1950-60களில் ஏற்பட்ட உலகப் போரில்
உலகம் முழுவதும் மூன்று நாடுகளின் கட்டுப்பாட்டுக்கு வருகிறது. ஓஷியானியா
(Oceania) நாட்டின் பிடியில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இங்கிலாந்து
வருகிறது. நாவல் முழுவதும் லண்டனில் வசிக்கும் வின்ஸ்டன் ஸ்மித்தைச் சுற்றி
சொல்லப்படுகிறது. ஒரு மூன்றாம் மனிதனின் பார்வையில் நாவல்
விவரிக்கப்படுகிறது.
நாட்டின்
தலைவராக “பிக் பிரதர்” இருக்கிறார். அவர்தான் இந்நாட்டை தோற்றுவித்ததாக
வரலாறு கூறுகிறது. இவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது யாருக்கும்
தெரியாது. அவரை பற்றி கேள்வி கேட்பதும் தவறாக நினைப்பதும் கடும்
தண்டனைக்குரிய குற்றங்கள். மக்கள் எப்போதும் “Telescreen”என்ற டிவி மற்றும்
உளவு பார்க்கும் கருவியோடு வாழ்கின்றனர். இங்க்சாக் (Ingsoc) என்பது
கட்சியின் பெயர். இந்த கட்சி எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில்
வைத்திருக்கிறது. மினிஸ்ட்ரி ஆப் ட்ரூத் (Truth) கீழ் செய்தி, கல்வி,
பொழுதுபோக்கு மற்றும் ஃபைன் ஆர்ட்ஸ். மினிஸ்ட்ரி ஆப் பீஸ் (Peace) போர்
(War) பற்றியும், மினிஸ்ட்ரி ஆப் லவ் (love) சட்டம் மற்றும் ஒழுங்கு
பற்றியும் மினிஸ்ட்ரி ஆப் ப்ளேன்டி (Plenty) நாட்டின் பொருளாதாரத்தை தத்தம்
கட்டுபாட்டில் வைத்திருக்கின்றன.
