1972ம் வருடம், ஆல் இந்தியா ரேடியோவில் ரோமிலா தாப்பர் ஆற்றிய மூன்று உரைகளின் தொகுப்பே இந்தச் சிறிய புத்தகம். புத்தகம் சிறியது, ஆனால் பேசும் விஷயங்கள் கனமானவை. வரலாற்றை குறிப்பாக இந்திய வரலாற்றைப் படிப்பவர்கள் இந்தப் புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும். வரலாற்றை எந்தப் பார்வை கொண்டு பார்க்கிறோம் என்பது முக்கியம்.
முதல் உரையில், இந்த வரலாற்றுப் பார்வை பற்றித்தான் பேசுகிறார். நிறைய ஆச்சரியமான விஷயங்கள். கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக எழுதப்பட்ட இந்திய வரலாற்றுக் குழப்பங்களிலிருந்து நம்மை விடுவிடுத்துக் கொண்டு, நம்முடைய வரலாற்றையும் நாகரிகத்தையும் நாமே ஆராய வேண்டும் என்கிறார். இந்தியாவின் மொத்த வரலாற்றை, கடந்த இருநூறு ஆண்டுகளில் புரிந்து கொள்ளப்பட்ட இந்திய வரலாற்றின் மூலமே அணுகுவது சரியல்ல என்பது அவருடைய எண்ணம்.