தேநீரின் வரலாற்றையும் தேநீர் புத்தமதத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதையும் அறிய கண்டிப்பாக இந்த புத்தகத்தை படிக்கலாம். 1906ல் எழுதப்பட்டது இப்புத்தகம் சிறியது தான்; ஆனால் பல விஷயங்களைச் சொல்கிறது இந்தப் புத்தகம். தேனீரைப் பற்றி நாம் அறியாத தகவல்கள் புத்தகம் முழுவதும் கிடைக்கின்றன.
இந்த புத்தகம் ஒரு ஜப்பானியரால் எழுதப்பட்டது. மேற்குலகத்திற்காக எழுதப்பட்டது. ஆசிரியர் மேற்குலகம் கிழக்குலகத்தை பார்க்கும் விதம் பற்றி கடுமையான கோபத்தில் இருக்கிறார். எப்போது மேற்குலகம் எங்களைப் புரிந்து கொள்ளும்? குறைந்தபட்சம் புரிந்து கொள்ளவாவது முயலுமா? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார். ஒட்டுமொத்த கிழக்குலகத்தின் குரலாக தன்னுடைய குரலை நிறுவுகிறார்.
இந்தியாவைப் பொறுத்தவரை இன்றைக்கும் கூட மேற்கின் பார்வை கொண்டு நம்மை நாமே பார்த்துக் கொள்ள வேண்டியதில்லை என்பதை பலர் ஒத்துக் கொள்வதில்லை. எனவே, மேற்குலகை இவர் சாடுவது படிக்க ஜாலியாக இருக்கிறது. முதல் பகுதி முழுக்க மேற்குலகிற்கான பதிலும், தேநீரின் வரலாறும் தான். தேநீர் குடித்தால் பெண்களுக்கு அழகு போய்விடும் என்று கூட எழுதியிருக்கிறார்களாம்.
இந்த புத்தகம் ஒரு ஜப்பானியரால் எழுதப்பட்டது. மேற்குலகத்திற்காக எழுதப்பட்டது. ஆசிரியர் மேற்குலகம் கிழக்குலகத்தை பார்க்கும் விதம் பற்றி கடுமையான கோபத்தில் இருக்கிறார். எப்போது மேற்குலகம் எங்களைப் புரிந்து கொள்ளும்? குறைந்தபட்சம் புரிந்து கொள்ளவாவது முயலுமா? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார். ஒட்டுமொத்த கிழக்குலகத்தின் குரலாக தன்னுடைய குரலை நிறுவுகிறார்.
Indian spirituality has been derided as ignorance, Chinese sobriety as stupidity, Japanese patriotism as the result of fatalism. It has been said that we are less sensible to pain and wounds on account of the callousness of our nervous organisation!
இந்தியாவைப் பொறுத்தவரை இன்றைக்கும் கூட மேற்கின் பார்வை கொண்டு நம்மை நாமே பார்த்துக் கொள்ள வேண்டியதில்லை என்பதை பலர் ஒத்துக் கொள்வதில்லை. எனவே, மேற்குலகை இவர் சாடுவது படிக்க ஜாலியாக இருக்கிறது. முதல் பகுதி முழுக்க மேற்குலகிற்கான பதிலும், தேநீரின் வரலாறும் தான். தேநீர் குடித்தால் பெண்களுக்கு அழகு போய்விடும் என்று கூட எழுதியிருக்கிறார்களாம்.
