சிறப்பு பதிவர் : மாதவ சோமன்.
தி.ஜா. வாரத்தில் நேற்று பைராகி கோயமுத்தூர் பவபூதி பற்றி எழுதியதில் இப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தார்:
"ஒரு படைப்பைப் பற்றி எழுதி என்னவாகப்போகிறது? ஏனோ வேஷம் கட்டின நடிகர்களாட்டம் சில மனிதர்கள் வருவதும் பேசுவதும், மூக்கைச் சிந்துவதும், கோவப்பட்டு கத்துவதும் - ஏதோ சினிமா போல நடிப்புதானே? நமக்கும் பொழுது போக ஐந்தாறு பக்கங்களில் அவர்களை எல்லாம் உலவவிட்டு கதைபண்ணிவிட்டுப் செல்பவர்தானே எழுத்தாளர்?"
ஆனால் பார்த்தீர்களேயானால், சில கதைகளை வாசிக்கையில் அதில் உலா வரும் கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் நாம் நேரில் சந்திக்கும் சிலரின் குணாதிசயங்களை ஒத்தே இருக்கின்றது என்பது தெரியும். பெரும்பாலான நேரங்களில் அந்தக் கதைகள் நம் மனதோடு ஒட்டிவிட அதுவே காரணமாகவும் அமைந்து விடுகிறது. தி.ஜானகிராமனின் அக்பர் சாஸ்திரி'யின் நாயகரான கோவிந்த சாஸ்திரி அப்படிப்பட்டவர் எனக்கு.
