ஆடிஸம் (Autism) குழந்தைகளிடையே
தோன்றும் ஒருவகை மனவளர்ச்சிக் குறைபாடு. இது தீவிர மனநலக் குறைபாடு அல்ல. இந்தவகைக்
குழந்தைகள் தம் வயதையொத்த பிற குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் சற்றே “கற்றல்’ விஷயத்தில்
பின் தங்கியிருப்பார்கள்.
சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆனந்த
விகடனில் ”ஆயிரம் ஜன்னல்கள்” தொடர் எழுதியபோது ‘கடவுளின் குழந்தைகள்: என்றொரு அத்தியாயம்
எழுதினார். அவர் அந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டது தீவிர மனவளர்ச்சிக் குறைவு கொண்ட
குழந்தைகள் குறித்து. ஒருவரை ஒருவரோடு ஒப்பிடுதல் என்பதே ஒரு கிரிமினல் குற்றம் என்பதான
தொனியில் இருந்தது அந்த அத்தியாயம். யாரோ இன்னொருவருடன் ஒப்பிட்டு ஒரு குழந்தையை சிறப்புக்
குழந்தை, கடவுளின் குழந்தை என்று ப்ராண்ட் செய்யும் நீங்கள், உங்களை விட அறிவில் சிறந்தவரோடு
உங்களை ஒப்பிட்டு நீங்களும் மனநலக் குறைபாடு உள்ளவர், ஊனமுற்றவர் என்று ஒப்புக் கொள்வீர்களா
என்பது ஜக்கியின் கேள்வி.
