A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label குயில் பாட்டு. Show all posts
Showing posts with label குயில் பாட்டு. Show all posts

20 Dec 2012

பாரதியின் குயில் பாட்டு - 2

தலைவியின் விரக தாபம் போல தன்னிடம் காதலைச் சொன்ன குயிலின் மனமாற்றத்தில் குழம்பி பரிதவிக்கும் நமது கவிஞர் கடுந்துகிலில் ஆழ்ந்துவிடுவதை முதல் பகுதியில் பார்த்தோம். நான்கு நாட்களுக்குப் பிறகு தன்னைச் சந்திக்க வரச்சொன்ன குயில் இடைப்பட்டவேளையில் குரங்கு, காளை எனப் புது காதல் முயற்சிகளில் ஈடுபட்டுவிட்டதைக் கண்டு கவிஞரின் மனம் பித்து பிடித்தலைந்தது. ஆனாலும் காலை புலர்ந்ததும், புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கி மண்ணத் தெளிவாக்கிய ஜோதி கவிஞரையும் தெளிவடையச் செய்துவிட்டதாம். `குயிலென்னை எய்துவிட்ட தாழ்ச்சியெல்லாம்` சற்றே ஒதுக்கிவைத்தவர், தன்னருகே பறந்த கரும்பறவை ஒன்றைக் கண்டார்.
 
மாஞ்சோலையைத் தேடிப் போகும் வழியில் இதென்ன புது குழப்பம்? காலை வெளிச்சத்தில் சரியாகத் தெரியாத காரணத்தால் வீதிக்கு வந்து கரும்பறவையைத் தொடரத் தொடங்குகிறார். ஒருவேளை இதுதான் நமது குருவியோ? மாரீசனைப் போல் ஏதேனும் கபடநாடக வேசத்தை பூண்டு தன்னை மீண்டும் வசப்படுத்தப் பார்க்கிறதோ எனும் குழப்பத்தில் கரும்பறவையைப் பார்த்து நிற்கிறார். தேவதூதனின் பிறப்பை அறிவித்த நட்சத்திரம் போல எதை அறிவிப்பத்ற்காக கரும்பறவை அவரை வலம் வருகிறது?
 
யான் நின்றால் தான் நிற்கும் யான் சென்றால் தான் செல்லும்


கரும்பறவையைத் தொடர்ந்தால் தனது மாஞ்சோலைக்கு சென்றுசேர்கிறார். ஆங்கு மரக்கிளையில் வீற்றிருந்த தனது `நீசக்` குயிலை பொய்வேஷம் போட்டதற்குக் கொன்றுவிடலாமோ எனும் எண்ணம் கவிஞருக்கு உதிக்கிறது. உடனடியாக அழத்தொடங்கும் குயில், தன் கதையைக் கேட்டபின்னும் நம்பிக்கை வராவிட்டால் நீயிற் தன்னை அழித்துவிடவேண்டுமெனக் கெஞ்சுகிறது.
 
 
 

14 Dec 2012

பாரதியின் குயில் பாட்டு - 1

பாரதி வாரத்தை ஆம்னிபஸ் கொண்டாடும் வேளையில் பாரதிக்கு வந்த சோதனையாக, ‘குயில் பாட்டு’ பற்றி எழுதுகிறேன் என இறுமாப்போடு சொல்லிவிட்டேனே தவிர என்ன எழுதுவதென்று இப்போது வரைக்கும் தெரியவில்லை. என் முன்னே ‘பாரதியார் கவிதைகள்’ நூலின் 385 ஆம் பக்கம் விரிந்து கிடக்கிறது. மறுபக்கம் பாரதி கருவூலம் நூல். கணினித் திரையின் ஓரத்தில் ஹரிமொழி. இவர்கள் எல்லாரும் எழுதியதைத் தவிர பாரதி பற்றி யார் என்ன எழுதிவிட முடியும்? ஒன்று நிச்சயமாகச் சொல்லலாம் - குயில் பாட்டு கவிதையை தமிழ் அறிந்த எல்லாரும் படித்துப் புரிந்துவிட முடியும் - அப்படித்தான் நானும் படித்துப் புரிந்துகொண்டேன். ஆனால், வருடக்கணக்காகப் படித்தால் மட்டுமே பாரதியின் கவிதைகளை நாம் உண்மையாக ரசிக்க முடியும் எனத் தோன்றுகிறது. அதாவது, ஒரு எழுத்தாளனின் படைப்புகள் அத்தனையையும் ஒருசேர படிக்கும்போது நமக்கு ஏதேனும் ஒரு ஒற்றுமை ஆங்காங்கே தென்படும். வாக்கியப் பிரயோகங்கள், வார்த்தைகள், கருத்துகள் எனப் பலதரப்பட்ட வகையில் நம்மால் எழுத்தாளரின் மொழி உலகுக்குள் பயணம் செய்ய முடியும். அப்படி செய்யும் பயணங்களில் நமக்குப் பிடித்த கரைகளில் ஒதுங்கி இளைப்பாறி கற்பனையை விரித்து வளர்க்கும்போதே உண்மையான ரசனை கைகூடும்.
 
 


பாரதியைப் பற்றி எப்போது என்ன சந்தேகம் வந்தாலும் நான் உடனடியாக ஹரி கிருஷ்ணன் அவர்களது கட்டுரைகளைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவேன். கண்டிப்பாக நமது சந்தேகங்களை நிவர்த்தி செய்யும்விதமான விளக்கத்தை எழுதியிருப்பார். தென்றல் இதழிலும், தமிழோவியத்திலும் அவர் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகள் பாரதியை ரசிக்க/ புரிந்துகொள்ள நமக்கிருக்கும் சாதனங்கள் எனச் சொன்னால் அது மிகையாகாது. சங்கக் கவிதைகளைப் போல், பாரதியின் கவிதைகளுக்கும் நமக்கும் கூட கால அளவில் இருப்பதை விட கருத்தளவில் அதிக இடைவெளி வந்துவிட்டதே இதற்குக் காரணம். பல பிரயோகங்களுக்குப் புது அர்த்தத்தை அவர் விளக்கியிருப்பார் (காணி நிலம் என்றால் எவ்வளவு? உண்மையை அறிந்தால் நமக்கு ஆச்சர்யமாக இருக்கும்)
 

கவிஞர்களுக்கு எப்போதும் ஒன்றுக்கும் மேற்பட்ட குரல்கள் இருக்குமெனத் தோன்றும். அவர்களது கனவுகளும் கற்பனைகளும் பீடமேறும் தளத்தில் ஒரு குரலும்,  தமக்குள் இருக்கும் சஞ்சலங்களுக்கும் தேடல்களுக்கும் மற்றொரு குரலும் அமைந்திருக்கும். பாரதி கருவூலம், புழுதியில் வீணை பதிவுகளில் இதைப் பற்றி நாம் படித்தோம். இந்திரா பார்த்தசாரதி தனது ‘மீண்டும் பாரதி’ எனும் பதிவில் இதைப் பற்றித் தொட்டுப் பேசுகிறார். புனைவாசிரியராக இல்லாமல், சங்கப்பாடல்களின் ரசிகனாக நின்று அவர் பேசும் கட்டுரைகள் எப்போதும் எனக்குப் பிடிக்கும். சாதாரணமாகத் தெரியும் இடத்தில் கூட திடுமென அவரால் நாம் யோசிக்காத கோணத்தை முன்வைக்கமுடியும். இந்த கட்டுரையில், அகம்/புறம் என்பவற்றுக்கு புது அர்த்தத்தைக் கொடுக்கிறார். அகம் என்பது அந்தரங்கக் குரல் என்றும், புறம் என்பது பகிரங்கக் குரல் என்றும் புது விளக்கம் கொடுக்கிறார். இப்படி யோசிக்கும்போது நமக்குத் தெரிந்த எல்லா படைப்பாளிகளின் படைப்புகளையும் இப்படிப் பிரித்துப் பார்த்துவிட முடியும் எனத் தோன்றியது.

Related Posts Plugin for WordPress, Blogger...