பாரதியின் கவிதைகளைப் புரிந்து கொள்ள அவரது கட்டுரைகளை வாசிக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்த்தும் புத்தகம் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனின் பாரதிக் கல்வி. சீனி விஸ்வநாதனின் காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகளைப் பிரதானமாகக் கொண்டே மோகனரங்கன் பாரதியின் கவியாளுமை மற்றும் கருத்தாளுமை குறித்த தன் முடிவுகளை நிறுவுகிறார். கவிதைகளைப் போலவே பாரதியின் கட்டுரைகளும் சுவையானவை, அவற்றை வாசிப்பது குறித்து நமக்கு ஏதும் புகார் இருக்க வாய்ப்பில்லை. மோகனரங்கன் எழுதும் விஷயங்கள், கையாளும் மேற்கோள்கள் முதலியவற்றைப் பார்க்கும்போது நமக்கும் சீனி விஸ்வநாதனைப் படிக்க ஆசையாகத்தான் இருக்கிறது, ஆனால் பத்து தொகுதிகள் கொண்ட வரிசை அது என்பதைப் பார்க்கும்போது பாரதியின் மீதுள்ள பிரமிப்புடன் விலை குறித்த கவலையும் சேர்ந்து கொள்கிறது.
பாரதி எழுதிய பாடல்களில் காலத்தைக் கடந்து - அதென்னவோ நமக்கு இப்படி ஒரு பித்து பிடித்திருக்கிறது, சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் வரும் ரயில்கள் இவ்வளவு நேரம் என்ற கணக்கு இல்லாமல் பேசின் பிரிட்ஜில் நிற்கிற மாதிரி, இந்த காலம் என்ற இடத்தைக் கடப்பதுதான் இலக்கியத்தில் பெரும்பாடாக இருக்கிறது, இதைக் கடந்து விட்டால் சேர வேண்டிய இடத்தைச் சென்று சேர்ந்து விடலாம் போல -, இலக்கியத்தின் லட்சியமான நித்திய சமகாலத்துவத்தை அடையக்கூடியவை கண்ணன் பாடல்களாகதான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது. தேச பக்தி, மொழிப் பற்று போன்ற சங்கதிகளெல்லாம் இன்ன தேதிக்கு மேல் இதைப் பயன்படுத்தினால் கெட்டுப் போகும் என்று லேபில் ஒட்டின மாதிரி காலாவதியாகி விடுகின்றன, ஆனால் கண்ணன் பாடல்களில் இருக்கும் காதலும் நேசமும் நன்றியுணர்த்தலும் இன்னபிற மானுட உறவின் தேவ லட்சணங்களும் எந்நாளும் கெட்டுப் போகப் வாய்ப்பில்லை.
பாரதி எழுதிய பாடல்களில் காலத்தைக் கடந்து - அதென்னவோ நமக்கு இப்படி ஒரு பித்து பிடித்திருக்கிறது, சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் வரும் ரயில்கள் இவ்வளவு நேரம் என்ற கணக்கு இல்லாமல் பேசின் பிரிட்ஜில் நிற்கிற மாதிரி, இந்த காலம் என்ற இடத்தைக் கடப்பதுதான் இலக்கியத்தில் பெரும்பாடாக இருக்கிறது, இதைக் கடந்து விட்டால் சேர வேண்டிய இடத்தைச் சென்று சேர்ந்து விடலாம் போல -, இலக்கியத்தின் லட்சியமான நித்திய சமகாலத்துவத்தை அடையக்கூடியவை கண்ணன் பாடல்களாகதான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது. தேச பக்தி, மொழிப் பற்று போன்ற சங்கதிகளெல்லாம் இன்ன தேதிக்கு மேல் இதைப் பயன்படுத்தினால் கெட்டுப் போகும் என்று லேபில் ஒட்டின மாதிரி காலாவதியாகி விடுகின்றன, ஆனால் கண்ணன் பாடல்களில் இருக்கும் காதலும் நேசமும் நன்றியுணர்த்தலும் இன்னபிற மானுட உறவின் தேவ லட்சணங்களும் எந்நாளும் கெட்டுப் போகப் வாய்ப்பில்லை.

