A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

8 Apr 2013

Zen - Images, Texts and Teachings, edited by Miriam Levering and Lucien Stryk

ஒரு காலத்தில், என் இருபதுகளின் ஆரம்பங்களில், எக்கச்சக்கமான ஜென் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தேன். இருத்தல் குறித்த கொதிப்பான அந்த நாட்களில் ஒரு நாள் இரவின் கனவில் ஜென் குரு ஒருவர் காட்சியளித்து, "Am I absurd or profound?" என்று ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்டு, துரிதமான மூன்று ட்ரம் பீட்களில் என் கவனத்தைச் சின்முத்திரையிட்ட தன் இடக்கரத்தின்பால் ஈர்த்து ஞானத்தை வழங்கினார். அதன்பின் என் நாட்கள் இன்னும் கொதிப்பாயின. வழக்கமாகக் காப்பி குடித்ததும் வாசிக்கும் ஹிந்து பேப்பரில் "இந்த இடம் எந்த இடம்?" என்ற கேள்வியை திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருந்தேன். குமிழ் மண்டை கொண்ட சின்னஞ்சிறு பச்சை மனிதர்கள் எவரும் "ஆத்துக்குப் போலாம் வாடா கண்ணு!" என்று என்னை அழைத்துச் செல்ல அண்டவெளியிலிருந்து வருகை தரவில்லை. ஐந்தரை மணிக்கே தண்ணீர் வரிசையில் குடத்தைப் போட்டு இடம் பிடித்து பம்ப் அடிப்பது, ஏழரை மணிக்குள் ரயில் பிடிப்பது, முதல் மூன்று தேதிகளில் மளிகை சாமான் பில்லை செட்டில் செய்வது, ரேஷன் கடையில் அரிசி வந்திருக்கிறதா என்று பார்ப்பது என்பது மாதிரியான அன்றாட கவலைகள் என் இருத்தலியல் கொதிப்பை முடிவுக்குக் கொண்டு வந்தன.

இன்றைக்குக் கொஞ்ச நாட்களாக ஜிமெயில் சாட்டில் ஒரு நண்பர் பச்சை விளக்கைப் பொருத்திக் கொண்டு "Do Something" என்று எப்போதும் ஆணையிட்டிருப்பதைக் காண்கிறேன். கொந்தளிப்பெல்லாம் அடங்கி சமர்த்தாக அலுவலகம் போய் வந்து அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த என்னைப் பார்க்கும்போது, "இதென்னடா மரவட்டை வாழ்க்கை!" என்று அப்போது அமெரிக்கா சென்றிருந்த என் அத்தானுக்கும் அதுபோல் தோன்றியிருக்க வேண்டும். கர்ம சிரத்தையாக Miriam Levering and Lucien Stryk தொகுத்த "Zen - Images, Texts and Teachings" என்ற இந்த காபி டேபிள் புத்தகத்தை வாங்கி வந்து அதில், "Do Something! Anything!" என்று செவ்வெழுத்துகளில் எழுதி பரிசளித்தான் அவன். அழுகையைக் காட்டிக் கொள்ளாமல் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டேன். வழக்கமான ஜென் புதிர்கள் ஹைக்கூகள் காமெடி கதைகள் போக அவ்வளவு அருமையான புகைப்படங்கள் இதில் இருப்பது தனிச் சிறப்பு. 


1 Feb 2013

சகோதர சகோதரிகளே - சுவாமி விவேகானந்தர்


சுவாமி விவேகானந்தர் குறித்து ஆழமாக இதற்கு முன்னர் நான் எதையும் வாசித்ததில்லை. ராமகிருஷ்ண மடத்தை சார்ந்த நடமாடும் புத்தக விற்பனை நிலையம் அவ்வப்போது எங்கள் பகுதியை கடந்து செல்லும். நானும் அது வரும்போதெல்லாம் சென்று புத்தகங்களை நோட்டமிட்டு வருவேன். அப்படி அண்மையில் அந்த வண்டி வந்திருந்த சமயத்தில், 11 பகுதிகள் கொண்ட விவேகானந்தரின் மொத்த எழுத்துக்கள் அடங்கிய ஞான தீபம் தொகுப்ப்பு கண்ணில் பட்டது. மிக குறைந்த  விலையில் அவை கிட்டியது எனினும் முழுமையாக வாசிக்க நேரம் கிடைக்குமா என்றொரு ஐயம் எனக்கு. ‘சகோதர சகோதரிகளே’ எனும் இந்த 642 பக்க நூல் எழுபத்தைந்து  ரூபாய்க்கு கிட்டியது. ஒட்டுமொத்த தொகுப்பில் இருந்து முக்கியமான தேர்ந்தெடுத்த பகுதிகளை கொண்ட நூல் இது. விவேகானந்தர் ஆற்றிய உரைகள், எழுதிய கடிதங்கள், கட்டுரைகள், தனிப்பட்ட உரையாடல்கள், கவிதைகள் என பல வகையான எழுத்துக்களை இத்தொகுப்பு தாங்கி வெளிவந்துள்ளது.  



31 Dec 2012

உள்ளது நாற்பது - ஆ. சிதம்பரகுற்றாலம் விளக்கவுரையுடன்

எனக்கு மிகவும் வேண்டப்பட்ட புத்தகங்களில் ஒன்றாக இருப்பது திரு ஆ. சிதம்பரகுற்றாலம் அவர்களின் 'உள்ளது நாற்பது'. "84 பக்கங்கள், விலை : மதிப்பிட முடியாதது" என்று குறிப்பிட்டிருக்கிறது என்னிடமுள்ள 2011ஆம் ஆண்டு பதிப்பில். என் தந்தை கோவையில் ஒரு கோயிலுக்குச் சென்றிருந்தபோது அங்கே எவரோ ஒருவர் இந்தப் புத்தகத்தின் சில பிரதிகளை அடுக்கி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். இந்த காலத்தில்கூட இப்படியும் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அள்ளிவிட்டார்கள் நம் மக்கள்.

ரமணர் இயற்றிய 'உள்ளது நாற்பது' என்ற நூலின் நாற்பது வெண்பாக்களுக்கு மிக எளிய, எவரும் புரிந்துகொள்ளக்கூடிய உரை. உபநிடதங்கள், திருக்குறள், பத்திரகிரியார் மெய்ஞானப் புலம்பல், தாயுமானவர், குகை நமசிவாயர், செங்கோட்டை ஆவுடையக்காள் பாடல்கள், ஒழிவில் ஒடுக்கம், ரிபு கீதை, அவதூத கீதை, அஷ்டவக்ர கீதை, சிவகீதை, விவேகசூடாமணி, யோக வாசிட்டம் மற்றும் திருமந்திரம் ஆகிய நூல்களிலிருந்து தகுந்த மேற்கோள்களுடன் ரமணரின் பாடல்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளன. 



19 Nov 2012

விட்டோபா - போளூர் செக்கடி மேட்டுச் சித்தர் - மலர்மன்னன்


எதுவும் வேண்டாம் என்று ஓடிப் போகிறவர்களைக்கூட நம் மக்கள் எல்லாம் தரக்கூடிய மகானாக வழிபட்டு அவரைச் சுற்றி ஒரு பெருங்கூட்டமாய் கூடிச் சிறை பிடித்துவிடுகிறார்கள்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள திருவட்டீஸ்வரன்பேட்டைதான் சென்னையின் வரைபடத்தில் பிரதானமாக இருந்தது - நூற்றைம்பது ஆண்டுகளுக்குமுன்.  சென்னையிலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் உள்ள போளூர் ஒரு காலத்தில் அங்குள்ள சம்பத் கிரி என்ற மலையையொட்டி பொருளூர் என்று அழைக்கப்பட்டது, அதன் அருகாமையில் உள்ள பர்வத மலை சங்க காலத்தில் நவிர மலை என்று பாடப்பட்டிருகிறது, நாம் சாதாரணமாக செங்கம் என்று அறியும் ஊர் செங்கண்மாநகராக வெளிர் குடி மன்னர்களின் தலைநகரமாக இருந்தது என்பன போன்ற உபரி தகவல்கள் மலர்மன்னன் எழுதிய, "விட்டோபா - போளூர் செக்கடி மேட்டுச் சித்தர்." என்ற புத்தகத்தில் கிடைக்கின்றன.

காவலாளி தோதாவின் உடம்பை அழுந்தத் துடைத்துவிட்டதும், சிவந்த சருமத்தில் மஞ்சள் வெயில்பட்டு அவன் பொற்சிலை போலப் பிரகாசிக்கலானான். கூட்டத்தில் ஒரு பொற்கொல்லனும் இருந்தான். சொக்கத் தங்கமா ஜொலிக்கற இந்த சாமி கைபட்டதெல்லாங்கூட தங்கமாயிடுமா என்று மனதுக்குள் வியந்துகொண்டான் அவன். இவ்வாறு அவன் நினைத்த மாத்திரத்தில் அதுவரை வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்த தோதா சட்டெனப் பொற்கொல்லனைப் பார்த்துப் புன்னகைத்தான். பொற்கொல்லன் சிறிது துணிவு வரப்பெற்றவனாக தோதாவின் அருகில் சென்றான். தன் இடுப்பில் செருகியிருந்த சுருக்குப் பையில் கையை நுழைத்து ஒரு செப்புக் காசை வெளியில் எடுத்தான். தோதாவின் வலது உள்ளங்கையில் அதை வைத்து அழுத்தினான். தோதா அதை ஒரு பார்வை பார்த்தான். உடனே செப்புக் காசை வாயில் போட்டுக்கொண்டு குதப்பத் தொடங்கினான். சில நிமிடங்களுக்குப் பிறகு 'தூ' என்று அதைத் துப்பினான். அது வெளியே சிறிது தொலைவில்போய் விழுந்தது. 

 "தோதா துப்பிய செப்புக் காசை அனைவரும் பார்த்தனர். அது இப்போது ஒரு பொற்காசாக மின்னிக் கொண்டிருந்தது! 'ஆ' என்று ஒரு வியப்புக் குரல் கூட்டத்திலிருந்து வீறிட்டெழுந்தது. பொற்கொல்லன் ஓடிச் சென்று அந்தக் காசைப் பொறுக்கி எடுத்துக் கொண்டான். அங்கிருந்தவாறே தோதாவை நோக்கி விழுந்து வணங்கி எழுந்தான். எங்கே யாராவது தன்னிடமிருந்து அதைப் பிடுங்கிக்கொண்டுவிடுவார்களோ என்று அஞ்சியவன் போல் அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடி மறைந்தான். அதைப் பார்த்த தோதா தூ, தூ என்றான். முகத்தில் ஏளனம் படர்ந்தது. அங்கே இருக்கப் பிடிக்காமல் எழுந்து சத்திரத்தைவிட்டுப் புறப்பட்டான். 'சாமீ, சாமீ' என்று அனைவரும் அவனைப் பின் தொடர்ந்தனர். தோதா அருணாசலத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தான்."



25 Oct 2012

பெரிய கடவுள் : அரிய தகவல்கள் - சந்திரசேகர சர்மா

இது விஜயதசமிக்கு அடுத்த நாள் இடப்படும் பதிவு என்பதால் பிள்ளையார் -  "பெரிய கடவுள் - அரிய தகவல்கள்" என்ற புத்தக அறிமுகம். சந்திரசேகர சர்மா எழுதியது. இதுபோன்ற அபுனைவுகளைக் குறித்து புத்தகச் சுருக்கத்துக்கு அப்பால் பெரிய அளவில் எதுவும் எழுத முடியாது. "நான் எதையும் எழுத ஆரம்பிக்கும்போதும் பிள்ளையார் சுழிதான் முதலில் எழுதுவது வழக்கம்," என்பது போன்ற அனுபவ பகிர்வுகளுக்கு இங்கு இடமில்லை என்று நினைக்கிறேன்.




Related Posts Plugin for WordPress, Blogger...