பெயர் : காகித மலர்கள்
ஆசிரியர்: ஆதவன்
Photo Courtesy/பதிப்பகம்/ To buy:உயிர்மை
முதலில் சில சம்பவங்கள் :
1.தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடி ஆபீஸில் கணினி மேல் பலூன் கட்டி இருந்தாங்க, எனக்கு ஏனோ அது பிடிக்கவில்லை, என்னுடைய மற்ற குழு நபர்கள் அதை ரொம்ப ரசிச்சாங்க. கொஞ்ச நேரம் கழித்து ஒரு பெண், பலூன் + நாங்கள் வேலை செய்வதை படம் பிடிக்க வந்தாங்க. யாராவது என்னை கேட்காம புகைப்படம் எடுத்தா எனக்கு கோவம் வந்துரும் - இப்ப இல்லை சில வருடங்கள் முன்பு வரை. அப்படியே பல்லை கடிச்சுகிட்டு உக்காந்து இருந்தேன். சில வருடங்கள் முன்புன்னா, ஒண்ணு, என்னை கேட்காம ஏன் புகைப்படம் எடுத்தீங்கன்னு கோபப்பட்டு இருப்பேன், இல்லைன்னா டக்குன்னு வெளியே எழுந்து போயிருப்பேன். அங்கேயே உட்கார்ந்து இருந்ததால், நானும் எல்லோரையும் போலத்தான் அப்படின்னு ஒரு பிம்பம் எனக்கே உருவாகியாச்சு.
2.என்னோட ரொம்ப நெருங்கிய நண்பர், நான் இந்த வேலையில் சேர்ந்தவுடன், நீயே இந்த வேலைக்கு வந்துட்டியா!, உன்னோட கல்யாணகுணங்களுக்கு இந்த வேலை ஒத்துப் போகாதே, அப்படின்னு ரொம்ப நேரம் லெக்சர் குடுத்துக்கிட்டு இருந்தாரு. நானும் இப்போ உஜாலாவுக்கு மாறிட்டேன் அப்படின்னு சொல்லி பேச்சைத் துண்டித்தேன். இப்போ என்னோட நெருங்கிய நண்பரிடம், எனக்கு ரெண்டு விதமான பிம்பம்.
3. ஆபீஸில் மேலாளர் + மற்றவர்கள், நீ ஏன் அதிகம் ஆங்கில படம் பார்க்கிறாய்ன்னு கேள்வி, நீ ஏன் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது இல்லைன்னு கேள்வி, இவன் பட்டாசு வெடிக்காத, ஆங்கில படம் பார்ப்பவன் அப்படின்னு ஒரு பிம்பம்.
4. இன்னொரு நண்பர், எப்ப கல்யாணம், எப்ப கல்யாணம்னு ஒரே கேள்வி. எவ்ளோ தூரம் என்னோட கருத்தை எடுத்துச் சொல்லியும், கடைசியில் விவாதத்தை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு, சரி பார்ப்போம், அப்படின்னு சொல்லி விவாதத்தை முடிச்சேன். இப்போ இந்த நண்பரிடம் ஒரு பிம்பம், இதே மாதிரி வீட்டில் என்னை பற்றி ஒரு பிம்பம், ட்விட்டர் மற்றும் ஆம்னிஸ்பஸில் வேற ஒரு பிம்பம்.











