A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label சா. கந்தசாமி. Show all posts
Showing posts with label சா. கந்தசாமி. Show all posts

23 May 2016

தொலைந்து போனவர்கள் - சா. கந்தசாமி


வேகமாக சாலையில் சென்றுக் கொண்டிருக்கிறீர்கள். கடந்து செல்லும் மனித முகங்களில் ஒன்று உங்களை ஒரு கணம் ஸ்தம்பிக்கச் செய்கிறது. கிட்டதட்ட  இருபது ஆண்டுகளுக்கு முன் பிரிந்துவிட்ட உங்கள் பால்யகால ஆத்ம நண்பன்தான் அது. உடனே என்ன செய்வீர்கள்? ஓடி போய் கட்டித்தழுவி, நலம் விசாரித்து, வீட்டுக்கு அழைத்து நட்பை புதுப்பித்துக் கொள்வீர்களா? அல்லது கண்டும் காணாதது போல் அவ்விடத்தை விட்டு நழுவி விடுவீர்களா?   இந்த இடத்தில் உங்கள் செய்கையை பெரிதும் தீர்மானிக்கப்போவது உங்களின் தற்போதைய வாழ்க்கை நிலைதான் என்ற யதார்த்தத்தை விவரிப்பதே சா.கந்தசாமி எழுதிய “தொலைந்து போனவர்கள்” நாவல்.


19 Aug 2012

தொடரும் நினைவுகளுக்கு எதிராக : சா கந்தசாமியின் "வேலையற்றவன்"




"நீ புறப்படு ரேணு. பிரண்ட் ரொம்ப நேரமா நிற்கிறார்"

இவன் காரில் ஏறி உட்கார்ந்தான். பக்கத்தில் அவள் அமர்ந்தாள். டிரைவர் கதவை அடித்துச் சாத்தினான். வந்தனாதேவி கை அசைத்தாள்.  கார் புறப்பட்டுச் சென்றது.

கொஞ்ச நேரம் வரையில் அவள் ஒன்றும் பேசவில்லை. கன்னத்தில் கைவைத்து, யோசனையில் மூழ்கி இருப்பது மாதிரி இருந்தாள். கார் பள்ளத்தில் இறங்கி மேட்டில் ஏறியது. இவன் மேலே சாய்ந்தாள். அப்புறம் நிமிர்ந்து உட்கார்ந்து, "பிரசாத் எப்படி?" என்று கேட்டாள்.

"ஒன்னும் தெரியல"

"அவன் ரொம்ப நல்லவன். பெரிய திறமைசாலி. பணத்தைப் பணம் என்று பார்க்கவே மாட்டான். குடிக்கும் பெண்ணுக்கும் என்ன வேண்டுமானாலும் செலவு செய்வான். எங்கள் சொந்தத்தில்தான் கல்யாணம் பண்ணிக் கொண்டான். நாலு வருஷம் வரையிலும் ஒரு பிராப்ளமும் இல்லை. அப்புறம் மனைவி இவனை விட்டுவிட்டுப் போய் விட்டாள். பிரசாத் அப்புறம் எங்கெல்லாமோ சுற்றினான். ஒரு வருஷம் பாரீசில் இருந்தான். பாரீசில்தான் சுசீலாவைப் பிடித்தான். இவன் கெட்ட குணத்தை எல்லாம் பொறுத்துக் கொண்டு சுசீலா கூட இருக்கிறாள். அவள் மட்டும் இல்லை என்றாள் இவன் இல்லை... அழிந்து போயிருப்பான்"

கார் வேகம் குறைந்தது.

"மனித மனதின் விசித்திரம் பற்றி யார் என்ன சொன்னாலும், அது சரியா இருக்கறது இல்ல..."

இவன் பதிலொன்றும் சொல்லாமல் அவளையே பார்த்தபடி இருந்தான்.




மூன்று குறுநாவல்கள் - வேலையற்றவன், ஏரிக்கரையில், எட்டாவது கடல்.  இந்தக் கதைகள். தனி மனிதன் சமூகத்துடனும், பிழைப்பு மண்ணுடனும், நிகழ்வுகள் நினைவுடனும் பிணைந்திருப்பதைப் பேசுவதாகக் கொள்ளலாம் : முதல் இரண்டு கதைகளில் தொழில்நுட்ப வளர்ச்சியால்  உருவாகும் சமூக நிர்பந்தங்கள் கடந்த காலத்தை கடந்து செல்லப்பட வேண்டியதாக்குகின்றன : முதுகைத் திருப்பிக் கொள்ளுதல் இயல்பான தேர்வாகிறது.  கடைசி கதையில் கருணையால் இந்த முதுகைத் திருப்பிக் கொள்ளுதல், நினைவுகளைவிட்டு, தன்னியல்பைவிட்டுத் திரும்பி நிற்றல் நிகழ்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...