A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

5 Dec 2013

அலெக்ஸ் - பியர் லிமாதே


அலெக்ஸ் அழகிய இளம் பெண். அவள் போகுமிடமெல்லாம் ஒருவன் தன்னைத் தொடர்ந்து வருவதை அவள் கவனிக்கிறாள். எதற்காக அவன் தன் பின் வருகிறான் என்பது அவளுக்குக் குழப்பமாக இருக்கிறது. ஒரு நாள் இரவு அவள் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வரும் வழியில் அவளைப் பின்தொடர்பவன் ரோட்டில் வைத்தே அவளை அடித்து உதைத்து ஒரு வேனுக்குள் தள்ளி ஓட்டிச் செல்கிறான். இந்தக் கடத்தலைப் பார்த்த ஒருவர் போலீசுக்கு குற்றச்சம்பவத்தைத் தெரிவிக்கிறார்.

பயன்பாட்டில் இல்லாத, ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கும் பாக்டரி மாதிரியான இடத்துக்கு அலெக்ஸ் கொண்டு செல்லப்படுகிறாள். கடத்தியவன் அவளை ஒரு மரக்கூண்டுக்குள் தள்ளி பூட்டி வைக்கிறான். அந்தக் கூண்டு மெல்ல மெல்ல மேலே உயர்த்தப்படுகிறது. கூரையிலிருந்து தொங்கும் அலெக்ஸிடம், நீ கொஞ்சம் கொஞ்சமாகச் சாவதை நான் பார்க்க வேண்டும், என்று சொல்கிறான் அவன்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் போலீஸ்காரர்கள் கடத்தல் நடந்த இடத்துக்கு வந்து துப்பு துலக்குகிறார்கள். ஆனால் அவர்களால் உருப்படியான எதையும் தெரிந்து கொள்ள முடிவதில்லை. கடத்தப்பட்டது யார், கடத்தியது யார் என்ற அடிப்படைத் தகவல்கள்கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை. கமி வர்ஹூவன் தயக்கத்துடன் இந்தக் குற்றத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறார். விசாரணையின் எதிர்பாராத திருப்பங்கள் கமாண்டன்ட் வர்ஹூவனையும் நம்மையும் உள்ளிழுத்துக் கொள்கின்றன.


3 Dec 2013

நமக்குத் தெரியாத பேக்கர்


எலிசபெத் பேக்கர் எழுதியிருக்கும் ‘பேக்கரின் மறுபக்கம்’ எனும் நினைவு குறிப்பு பேக்கரின் சுவாரசியமான வாழ்க்கைக்கு நல்ல சாட்சியமாகும். கோட்டயத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, வேலூர் கிறித்தவ மிஷன் கல்லூரியில் டாக்டர். இடா ஸ்கட்லரின் கீழ் மருத்துவம் பயின்றவர் எலிசபெத். டாக்டர். இடாவின் ஆளுமையால் உந்தப்பட்டு கிராமப்புறங்களில் மருத்துவ சேவையில் ஈடுபட்டார். லாரி பேக்கரை மணப்பதற்கு முன் கரீம் நகரில் (ஆந்திரம்) மிஷன் மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார். திருமணத்திற்கு பின்னரும் கூட இமாலய மலையடிவாரத்தில் இருந்த ஒரு கிராமத்தில் மருத்துவ சேவையை தொடர்ந்தார், பின்னர் கேரளாவின் மேற்குச் தொடர்ச்சி மலை கிராமங்களிலும் தொடர்ந்தது அவருடைய மருத்துவ சேவை. 


பேக்கர் அவர் உருவாக்கிய கட்டிடங்களுக்காக என்றும் நினைவுகூரப்படுபவர். பெருந்திரள் மக்களை மனதில் கொண்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், சூழியல் பிரக்ஞையுடன், மகத்தான லட்சியத்தை மனதில் சுமந்து, நம் மண்ணுக்கு உகந்த தனித்துவமான கட்டிடக்கலை பாணியை உருவாக்கியது இந்திய மக்களுக்கு அவருடைய மகத்தான் பங்களிப்பு. இந்நூல் கட்டிடக்கலை ‘நிபுணர்’ பேக்கரின் நிபுணத்துவத்தை, கட்டிடக்கலை நுட்பங்களைப் பற்றி அதிகம் தொட்டு காட்டவில்லை (அதனால் தான் இது பேக்கரின் மறுபக்கம்!). மாறாக, அவருடைய நிறை வாழ்வை அண்மையில் நின்று அவதானித்த அன்பு ததும்பும் கண்கள் விட்டு செல்லும் எளிய சித்திரமே இந்நூல். இதனூடாக நினைவுகளைப் பதியும் எலிசபெத்தின் சித்திரமும் உயிர் பெருகிறது.

20 Nov 2013

The Daughter of Time - Josephine Tey


நண்பர் எஸ். சுரேஷ் முன்னொரு மதிப்பீட்டில் இப்படி எழுதினார் : "ஒரு கொலை வழக்கின் விடையைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல, ஸ்காட்லாந்தின் அழகைக் கண்டுபிடிப்பதும்தான் நாவலின் கருப்பொருள். பார்த்துப் பார்த்து எழுதப்பட்ட விவரணைகளால் தான் அறியாத இடங்களுக்கும் வாசகர் கொண்டு செல்லப்படுகிறார் - நாவலின் முடிவில், ஸ்காட்லாந்துடன் தனக்கு நெருங்கிய ஒரு பந்தம் இருப்பதான உணர்வு வாசகரின் மனதில் ஏற்பட்டுவிடுகிறது. சிறந்த எழுத்தாளர்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும். தே அவர்களில் ஒருவர்."

இதைப் படித்ததிலிருந்தே தே (Josephine Tey) எப்படி எழுதுவார் என்ன என்று அறிந்து கொள்ள ஒரு ஆர்வம் வந்து விட்டது - எனவே அவரது The Daughter of Time கிடைத்தபோது மறுயோசனையின்றி படிக்க எடுத்துக் கொண்டுவிட்டேன். தே ஏமாற்றவில்லை என்பது மட்டுமல்ல, இந்த ஆண்டு நான் படித்த நாவல்களில் மிகச் சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று என்று கொஞ்சம்கூட யோசிக்காமல் சொல்லுவேன். பக்கத்துக்கு பக்கம் பரபரப்பு, விறுவிறுப்பு, எதிர்பாராத திருப்பங்கள். இத்தனைக்கும் இது நமக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத பிரிட்டிஷ் அரசர்களைப் பற்றிய கதை. அதுவும் ஐநூறு ஆண்டுகளுக்கும் முந்தைய அரதப்பழசான ராஜா ஒருவன் மீது பிரிட்டிஷ் வரலாற்றில் பதியப்பட்ட அவதூறுகளை மறுத்து, அவன் நல்லவன் என்று நிறுவும் கதை. அதிலும் இது சீரியஸ் கதைகூட இல்லை - ஒரு திருடனைத் துரத்திக் கொண்டு ஓடும் இன்ஸ்பெக்டர் ஆலன் கிராண்ட் ஒரு பாதாள அறைக்குள் தடுக்கி விழுந்து காலை உடைத்துக் கொள்கிறான்; அதன்பின் மருத்துவமனையில் படுத்தபடியே தன் புலன் விசாரணையை நடத்தி நடந்தது என்ன என்ற உண்மையை அவன் கண்டுபிடிப்பதாகச் செல்கிறது கதை.

இருந்தாலும், இது இந்த ஆண்டு நான் படித்த நாவல்களில் மிகச் சிறந்தவற்றுள் ஒன்று.


18 Nov 2013

The Thief - Fuminori Nakamura


பலமுறை ஜப்பானுக்கு சென்று வந்தவன் என்ற முறையில், இந்த நாவலில் என்னை வசீகரித்த முதல் விஷயம் ஜப்பானில் பிக்பாக்கெட்டுகள் இருக்கிறார்கள் என்ற தகவல்தான். மிக நெரிசலான ரயில் பயணங்களில்கூட என் பாக்கெட்டில் பர்ஸ் பத்திரமாக இருக்கிறதா என்று நான் கவலைப்பட்டதில்லை. ஜப்பான் மிகவும் பாதுகாப்பான இடம் என்பதில் எனக்கு அத்தனை நம்பிக்கை இருந்திருக்கிறது. இதுவரை என் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும்படியாக எதுவும் நடக்கவுமில்லை. எனவேதான் ஒரு ஜேப்படி திருடனை நாயகனாகக் கொண்ட ஃபூமிமோரி நகமுராவின் "The Thief" நாவலைப் படிப்பது ஒரு ஆச்சரியமான அனுபவமாக இருந்தது.

இத்தனை நாட்கள் எங்கு ஒளிந்து கொண்டிருந்தானோ தெரியாது, நிஷிமுரா டோக்கியோவுக்குத் திரும்புகிறான். அவன் அங்கு தனக்கு நன்றாகத் தெரிந்த தொழிலைத் தொடர்கிறான் - பிக்பாக்கெட் அடிப்பது. நிஷிமுராவுக்கே தான் ஏன் டோக்கியோவுக்குத் திரும்ப வந்தோம் என்று குழப்பமாக இருக்கிறது - அவன் தன் தொழிலைத் தொடர்வதர்காகத் திரும்பி வருகிறானா, அல்லது ஒரு காலத்தில் தனக்கு ஆசானாகவும் நண்பனாகவும் இருந்தவன் என்ன ஆனான் என்பதைக் கண்டுபிடிக்கத் திரும்புகிறானா? திரும்பிய நோக்கம் எதுவாக இருந்தாலும், இப்போது கடந்த காலத்தில் நடந்தது என்ன என்று முழுமையாக அறிந்து கொள்ள விரும்புகிறான். ஆனால் அவன் கனவிலும் நினைத்துப் பார்க்காத வகையில் கடந்த காலம் சமகால நிகழ்வுகளைக் கைப்பற்றிக் கொள்கிறது - இதனால் நிஷிமுரா கடும் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியதாகிறது.




14 Nov 2013

Revolver - Marcus Sedgwick



Marcus Sedgwick எழுதிய Revolver (2009) நாவல் அலாஸ்காவிலும் ஸ்வீடனிலும் நிகழ்கிறது. கதை 1910ஆம் ஆண்டில் சொல்லப்படுகிறது - இடையிடையே வரும் பகுதிகள் பத்தாண்டுகளுக்கு முன்னர் அலாஸ்காவில் நடந்த ஒரு தங்க தள்ளுமுள்ளுவின்போது நடந்ததைப் பேசுகின்றன. வில்லன் கடந்த காலத்திலிருந்து உயிர் பெற்று எழும் கதை, மனிதனின் புத்திசாலித்தனத்தைப் பற்றிய கதையும்தான்.

கதையின் துவக்கத்திலேயே புத்திசாலித்தனத்துக்கு வேலை வந்து விடுகிறது.  ஆர்க்டிக் வட்டத்தின் பனி வனாந்தரத்தில் கதையின் பிரதான பாத்திரம் தனியாக இருக்கிறான், அவன் ஒரு சிறுவன் - உதவிக்கு ஆள் வேண்டுமானால் பல மைல்கள் தேடிப் போக வேண்டும். அவன் இறந்த அப்பாவின் பிரேதத்தோடு கேபினில் இரவின் இருளில் தனித்து விடப்பட்டிருக்கிறான் - விடியலில் துப்பாக்கியும் கையுமாக முரட்டு ராட்சதன் வுல்ஃப் அவனுக்குத் துணையாக வந்து சேர்கிறான் - ஆனால் அவன் வந்திருப்பது சோகத்தில் பங்கேற்கவோ உதவி செய்யவோ அல்ல, எங்கே இருக்கிறது, இருக்கிறதா என்ன என்றே தெரியாத தங்கத்தில் பங்கு கேட்டு வந்திருக்கிறான். அது கிடைக்காவிட்டால் அப்பா செய்த துரோகத்துக்கு பிள்ளையைக் கொன்று பழி தீர்த்துக் கொள்வான். ஆனால் நம் இளம் ஹீரோ ஸிக்குக்கோ தங்கம் பற்றி எதுவும் தெரியாது. தங்கம் எங்கே என்று கேட்கும் வுல்ஃபிடமிருந்து தப்பிப்பது எப்படி?  "நீ எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும், அறிவைப் பயன்படுத்த வேண்டும்," என்று அப்பா அவனுக்குச் சொன்ன அறிவுரையே கடைசி வரைக்கும் ஸிக்க்கு நம்பிக்கை தருவதாக இருக்கிறது.


7 Nov 2013

Black Seconds - Karin Fossum


காரின் ஃபோஸ்சுவின் "Black Seconds' நாவலின் பின்னட்டை வாசகம், பத்தே வயதான ஒரு பெண் காணாமல் போவதைப் பற்றிய கதை இது, என்று சொல்கிறது - சிறு குழந்தைகள் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்படும் உலகை விவரித்தாலும் வழக்கமான மர்ம நாவல்களின் பாதையில்தான் இதுவும் பயணிக்கும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் நான் ஆச்சரியப்படும் வகையில் ஃபோஸ்சுவின் கதை வழக்கமான தடத்தில் செல்லவில்லை, மாறாக மிகவும் நிறைவளிக்கும் மாற்றுப் பாதையொன்றினுள் நுழைகிறது.

பின்னட்டை வாசகம் சொன்னபடிதான் கதை துவங்குகிறது - இன்னும் பத்து நாட்களில் பத்தாம் வயது பிறந்த நாள் கொண்டாடப்போகிற ஐடா, தன் அம்மாவுக்கு டாட்டா காட்டி கையசைத்தபடியே சில இனிப்புகள் வாங்கிக் வர சைக்கிளை ஓட்டிக் கொண்டு ஊரின் மையப்பகுதியை நோக்கிச் செல்கிறாள். மாலை இரவாகிறது, மகள் திரும்பி வருவதில்லை. அவளது நண்பர்களை தொலைபேசியில் அழைத்துப் பேசுகிறாள் அம்மா, ஆனால் ஐடா இந்த நண்பர்கள் எவர் வீட்டிற்கும் செல்லவில்லை. அதன் பின் தனது இளைய சகோதரியை அழைக்கிறாள். இருவரும் ஐடா எங்காவது விளையாடிக் கொண்டிருக்கிறாளா என்று காரோட்டிக் கொண்டு தேடிச் செல்கின்றனர். அவள் எங்காவது நேரம் காலம் மறந்து விளையாடிக் கொண்டிருக்கலாம். ஆனால் அது வீண் தேடல். கடைசியில் காவல்துறையை உதவிக்கு அழைக்கிறார்கள். இதையடுத்து குற்றத்தை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் சயிர் இவர்கள் வீட்டுக்கு வந்து தகவல்களைச் சேகரித்துச் செல்கிறார்.




23 Oct 2013

Demystifying Kashmir - Navnita Chadha Behera


நவநிதா சந்திர பெஹெரா அவர்களின் Demystifying Kashmir நூல் அற்புதமான ஒரு முயற்சி எனலாம். பெயருக்கு ஏற்றார் போலவே காஷ்மீர் பற்றி நமக்கிருக்கும் பொதுவான பிம்பங்களை நெருக்கமாக காஷ்மீர் பற்றிய விவரிப்பால் தகர்க்கிறார் ஆசிரியர். காஷ்மீர் சிக்கலை மதரீதியான சிக்கலாக பார்க்கிற போக்கிலிருந்து விலகி ஆராய்கிறார் நவநிதா.

ஒரு டைப் ரைட்டர் மற்றும் ஒரே ஒரு ஸ்டெனோவை வைத்துக்கொண்டு பாகிஸ்தானை அடைந்து விட்டதாக பெருமிதம் கொண்ட ஜின்னா காஷ்மீர் பற்றி முதலில் கவலைப்படவே இல்லை, படேலும் காஷ்மீர் பாகிஸ்தானுக்கு போனால் ஒன்றும் சிக்கலில்லை என்கிற மனோநிலையில் தான் இருந்திருக்கிறார். ஜின்னா தனக்கு கிடைத்த பாகிஸ்தான் எதிர்பார்த்த அளவில்லை என்கிற கடுப்பில் காஷ்மீர் பக்கம் கண் பதிக்கிறார். ஜூனாகரில் ஹிந்து மக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதியை தன் வசப்படுத்திக்கொள்ள பார்க்கிறார். இது போல இன்னும் சில ஹிந்து பெரும்பான்மை அரசுகளையும் கைப்பற்றிக்கொள்ள பார்க்கிறார். படேல் அப்பொழுது தான் விழித்துக்கொள்கிறார். காஷ்மீர் நோக்கி பழங்குடியினரின் தாக்குதல் நடப்பதும் அதற்கு பிறகு காஷ்மீரின் வடக்கு பகுதி, கில்கிட் பல்டிஸ்தான் பாகிஸ்தான் பக்கம் போவதும் எல்லாருக்கும் தெரியும். இங்கிலாந்தின் பாகிஸ்தான் சார்பு கொள்கை அப்பகுதிகளை அப்படியே காத்தது ஐ.நா. சபையில் என்றால், நேருவும் அப்படிப்பட்ட பிரிவினையை ஏற்றுக்கொண்டார் என்பது வரலாறு. காரணம் அப்பகுதியில் பலமாக இருந்த முஸ்லீம் மாநாட்டு கட்சி பாகிஸ்தான் ஆதரவு நிலையை எடுத்திருந்தது என்கிற உண்மையையும் ஆசிரியர் காட்டுகிறார்.

4 Oct 2013

மாவீரன் செண்பகராமன் - யோகா பாலச்சந்திரன்


இந்திய விடுதலைக்காக அகிம்சைக்கு எதிரான முறையில் இயங்கியவர்கள் மிகச் சிலரே. இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு காந்திய அகிம்சைப் போராட்ட வரலாறாக இருக்கிறது. அப்படியில்லாமல் ஆயுதம் ஏந்திப் போராடிய சிறுபான்மை போராளி ஒருவரின் சுருக்கமான வரலாறு இந்த நூல். சுருக்கம் என்றால் பொடிச்சுருக்கம். முன்னுரை, சில விளம்பரப் படங்கள் கழிய மொத்தமே 34 பக்கங்கள் மட்டுமே. வேகமாக வாசிப்பவர்கள் பதினைந்து நிமிடங்களில் வாசித்து கீழே வைத்துவிடலாம்.

இலங்கை சிந்தாமணி இதழில் 1967ல் வெளிவந்த கட்டுரைத் தொடரை நூல் வடிவில் கொண்டு வர முயற்சித்திருக்கிறார்கள். வரலாற்றையும் அதில் வாழ்ந்த ஒருவரையும் மறந்துவிடக்கூடாது என்பதன் அடிப்படையில் இந்த நூலை எழுதியிருப்பதாக நினைக்கிறேன். இல்லை செண்பகராமனைப் பற்றி நாமறிந்த தரவுகளின் ஆழம் அவ்வளவுதானா தெரியவில்லை. அதாவது சொல்வதற்கு அதிகமாக எதுவும் இல்லை என்ற நிலை இருக்கிறதா என்ற கேள்வி பிறக்கிறது.




3 Oct 2013

கோவில்-நிலம்-சாதி: பொ.வேல்சாமி

சிறப்புப் பதிவர்: ஆனந்தராஜ்

”உங்கள் வீட்டில் உணவு வீணாகிவிட்டதா? 1098 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் வீடு தேடிவந்து அந்த உணவை ?குழந்தைகள் ஹெல்ப்லைன்”காரர்கள் பெற்றுச் செல்வார்கள்” என்றது ஒரு ட்விட்டர் செய்தி.

”மெண்டோஸ்” என்னும் மிட்டாயை குழந்தைகளுக்குத் தராதீர். கேன்ஸர் வருதாம் - என்று ஒரு குறுஞ்செய்தி வருகிறது. 

முதற்செய்தி போகிற போக்கில் அடித்துவிடப்படும் செய்தி என்றால் இரண்டாவது செய்தி வியாபார எதிரிகளால் பரப்பப்படும் வகையறா.




2 Oct 2013

மணக்கும் எழுத்து- நளபாகம்

- ந.ரா.சேதுராமன்  (@chandsethu)

அமரர் தி.ஜானகிராமனின் "சிலிர்ப்பு" கதையை சில வாரத்திற்கு முன்பு படிக்க நேர்ந்தது. அப்போதுதான் கையில் இந்த புத்தகம் இருந்தது நினைவிற்கு வந்து "அம்மா வந்தாள்" படித்த சுமார் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு திஜாவை கையிலெடுத்தேன். சில அலுவல்கள் காரணமாக தொடர்ந்து படிக்க முடியாமலிருந்து, நேற்றுதான் ஒரே மூச்சாக படித்தும் முடித்தேன்.

அப்புறம் பேசிக்கொண்டிருக்கும்போது, திஜாவின் படைப்புகளில் அதிகம் பேசப்படாத நாவல் இது என்று புத்தகத்தை எனக்களித்த நண்பர் மகேஷ் ஜெயராமன் தெரிவித்தார். அது தவிர, இணையத்தில் படித்த சில மேம்போக்கான விமர்சனங்களும், பொதுவாகவே திஜா மீது இருக்கும் கருத்துக்களும்தான் நான் இதைப் பற்றி எழுதக் காரணம்.  இங்கு "ஜானகிராமனப் படிச்சா நடு வயசு பெண்கள் மீது நமக்கு ஒரு ஈர்ப்பு வந்துடும் சார்" என்று  திஜாவின் எழுத்துகளைப் படித்த முதிர்ந்த தமிழாசிரியர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவர் எழுத்தைப் படிக்க ஒரு காரணம் இருக்கும். இப்படிப்பட்ட காரணங்களால்கூட சிலர் திஜாவை படிப்பார்களா என்று வியப்பாகவும், வருத்தமாகவும் இருந்தது.

உறவு, பாலியல்  கிளுகிளுப்புகள் மட்டுமே நிறைந்த  எழுத்தாக திஜாவைப் பார்ப்பது எவ்வளவு தவறான கண்ணோட்டம் என்பது நளபாகத்தை உன்னிப்பாக படித்தவர்களுக்குத் தெரியும், ஏன் அம்மா வந்தாளை புரிந்து படித்தவர்களுக்குக் கூட‌. எளிமையான நடையும், தேங்கி நிற்காமல் போகும் கதையம்சமும்,  ஆழ்பொருளை காற்றைப் போல லேசாக சொல்லிச்செல்லும் பாங்கும் எத்தனை வியப்புக்குரியவை! 



1 Oct 2013

கடல்புரத்தில் - வண்ணநிலவன்


வண்ணநிலவன் - மனைவியின் நண்பர் எனும் சிறுகதையின் மூலம் ஆச்சர்யப்படுத்தியவர். இரு வெவ்வேறு குடும்ப உறவில் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்பு ஏற்படுவது என்பது நம் சமூகத்தில் எளிதான விஷயம் இல்லை. அப்படி ஏற்படும் உறவுக்குள் இயல்பாகவே இரு பாலினதுக்கு உண்டான காமம் சார்ந்த ஈர்ப்பு இருக்கும். ஆனால் அவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி, பிறன்மனை நோக்காதே எனும் நமக்கு நாமே ஏற்படுத்தி கொண்ட நாகரிக கோட்பாடுகளுக்கு பயந்து, அவற்றின் பால் ஏற்படும் குற்ற உணர்வால் அந்த காம எல்லையை தொட முயற்சிப்பதில்லை. இப்படி, கனவில் நாம் எதையோ பிடிக்க முயன்று அது நம் கைகளுக்கு அகப்படாததும் விழித்து நிஜ உலககிற்கு வருவதுபோல் காமத்தின் பால் ஈர்ப்பு கொண்டு ஆனால் அதை தொடாமல் இயங்கும் எத்தனையோ உறவுகள் எங்கும் விரவிக் கிடக்கின்றன. அவற்றை அப்படியே எழுத்துக்குள் கொண்டு வர இயலுமா என்று தெரியவில்லை. ஆனால், அதை எழுத்தில் ஓவியமாகவே தீட்டி இருப்பார் வண்ணநிலவன்.

கடல்புரத்தில் நாவல் மணப்பாடு ஊர் மக்களின் வாழ்வியலை குரூஸ் குடும்பத்தை முன்வைத்து நமக்கு காட்சிபடுத்துகிறது. குரூஸ் மிக்கேல், அவரின் மனைவி மரியம்மை, மூத்த மகள் அமலோற்பவம், மகன் செபஸ்தி, இளைய மகள் பிலோமி என்று ஐவர் உள்ள குடும்பத்தில் மரியம்மையும், பிலோமியும் நமக்கு முதன்மையானவர்களாக படுகிறார்கள். மரியம்மைக்கும் அந்த ஊரில் வசிக்கும் வாத்தியாருக்கும் "மனைவியின் நண்பர்" சிறுகதையில் வருவது போன்ற ஓர் உறவு ஏற்படுகிறது. அந்த ஊர் அதை வழக்கம்போல் காமம் சார்ந்த உறவாகவே பார்க்கிறது. ஆனால் அதை பற்றியெல்லாம் மரியம்மை கவலைப்படவில்லை. நாம் செய்யாத தவறை செய்வதாக பிறர் கூறும்பொழுது நமக்குள் இயல்பாகவே ஒரு திமிர் ஏற்படும். இந்த இடத்தில் குற்றம் சாட்டுபவனை விட குற்றம் சாட்டப்பட்டவன் உயர்ந்து நிற்கிறான். அதனால் ஏற்ப்படும் திமிர் அது. இந்த திமிர் நம்மை விளக்கம் கொடுக்க கூட அனுமதிக்காது. இதனால் மரியம்மையின் கணவன் குரூஸ் வாத்தியார் வீட்டு முன் குடித்துவிட்டு சத்தம் போட்டாலும் கூட அதைப்பற்றி கவலைப்படாமல் மரியம்மை இந்த உறவை தொடர்ந்தபடியே இருக்கிறாள். சமூகத்திற்கு இந்த உறவை அன்பு சார்ந்த உறவாக பார்க்க முயல்வதில்லை என்பதை விட விருப்பபடுவதில்லை என்று சொல்லலாம். காரணம், அப்படி காமம் சார்ந்த உறவாக பார்ப்பதில் அவர்களுக்கு ஒரு மன லயிப்பு கிடைக்கிறது. உண்மையில், இதுபோன்ற உன்னதமான உறவை அன்பின் கண்கொண்டு பார்க்கும்போதுதான் நம் மனம் அதிக நெகிழ்ச்சியை அடையும். ஆனால் அன்பை விட காமத்திற்குதான் அதிக கவர்ச்சி இருக்கிறது இல்லையா. இதை வேறு வகையில் பார்க்கப் போனால் இந்த சமூகம் இப்படி நினைப்பதால்தான் இந்த உறவுகள் கவித்துவம் பெற்று உன்னத நிலையை அடைகிறது எனலாம். அந்த வகையில் பார்த்தால் இந்த சமூகம் செய்வது சரிதான். இந்த உலகமே இதன்பொருட்டுதானே இயங்குகிறது. எதுவுமே தவறில்லை. எல்லாமே சரி. தவறு என்பது இன்னொரு சரி.

7 Sept 2013

தற்செயல்களின் ரசவாதம்


முற்றலும் புதிய ஒரு பாதையில், பார்த்துப் பழகியிராத மனிதர்களுடன் பேருந்தில் பயணிக்கும்போது, திடீர் என்று இந்த இடத்தையும் இந்த மனிதர்களையும் நாம் இதற்கு முன் பார்த்த மாதிரியும் பழகிய மாதிரியும் உங்களில் எவருக்கேனும் தோன்றியிருக்கிறதா? அது மட்டுமல்லாமல் இன்ன இடத்தில் ஒரு வேகத்தடையோ பள்ளமோ இருந்து, முன்பு எப்போதோ கடைசி சீட்டில் அமர்ந்திருக்கும்போது எகிறியடித்து புடறி வலித்த அனுபவம் நினைவுக்கு வந்து, சுதாரிப்புடன் அமரும் அந்தக் கணத்தில் உண்மையிலேயே அங்கு ஒரு வேகத்தடை வந்தால் மனம் கொள்ளும் பரபரப்பு இருக்கிறதல்லவா- . யுவனின் சிறுகதைகளை வாசித்த அனுபவத்தை இப்படித்தான் விளங்கிக்கொள்ள முடியும். யுவனின் கவிதைகள் மீது கொஞ்சம் அறிமுகம் உண்டு என்றாலும் அவருடைய  சிறுகதைகளை வாசிப்பது இதுவே முதல்முறை. உண்மையில் அபாரமான வாசிப்பனுபத்தை அளித்தது.



30 Aug 2013

பயங்கரவாதம் : நேற்று இன்று நாளை - பி. ராமன்

புதிதாக வெளிவந்திருக்கும் கிழக்கு பதிப்பக வெளியீடு `பயங்கரவாதம்: நேற்று இன்று நாளை` புத்தகத்தின் முன்னுரையை இணையத்தில் முதல்முறையாக வெளியிடுவதில் ஆம்னிபஸ் பெருமை கொள்கிறது. உடனுக்குடன் அனுப்பிவைக்கும் கிழக்கு பதிப்பக நண்பர்களுக்கு மிக்க நன்றி.

பயங்கரவாதம் : நேற்று இன்று நாளை

பி. ராமன்
தமிழில் ஜே.கே. இராஜசேகரன்
கிழக்கு பதிப்பகம்
424 பக்கம்,  விலை ரூ.290

முன்னுரை



இன்றைய உலகில், தொடர்ந்து வளர்ந்து வரும் பெரிய அச்சுறுத்தலாகப் பயங்கரவாதம் உள்ளது. கைகளால் பயன்படுத்தப்படக் கூடிய ஒற்றைப் பரிமாண அபாய ஆயுதங்களில் தொடங்கி, சட்ட  ரோத வெடி பொருட்கள், மனித வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள், நாசத்தைத் தூண்டும் கரு களாக செல்போன்கள்,  மானக் கடத்தல், இணையதளம் வாயிலான தாக்குதல் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக இன்று உருவெடுத்துள்ளது.

இன்றைய பயங்கரவாதம், நேற்றைய பயங்கரவாதத்திலிருந்து வேறு-பட்டிருக்கிறது. நாளைய பயங்கரவாதம், இன்றைய பயங்கரவாதத்-திலிருந்து பெரிதும் மாறுபட்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இன்றைய நிலையில், ஒடுக்கப்பட்ட குடும்பங்களிலிருந்தோ பொருளாதார, சமூகரீதியில் நலிவடைந்த குடும்பங்களிலிருந்தோ பயங்கரவாதிகள் உருவாவதில்லை. சமூக அந்தஸ்து உள்ள, வசதியான குடும்பங்-களிலிருந்துதான் பெரும்பாலும் தோன்றுகின்றனர். அவர்கள் நல்ல கல்வி  அறிவு பெற்றிருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய தலைவர்கள் இப்போது அவர்களைத் தமது  விருப்பத்துக்கு ஏற்றாற்போல் கையாள முடியாது.

பயங்கரவாதிகளில் பலர் மருத்துவர்களாகவோ பொறியியல் வல்லுனர்-களாகவோ தகவல் தொழில்நுட்ப நிபுணர்களாகவோ உள்ளனர். பெருவாரியான மக்களைப் படுகாயப்படுத்துவது சரியா தவறா என்று மூளையைப் பயன்படுத்திச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. அதேநேரம் தாக்குதல்களை நன்கு திட்டமிட்டு, கச்சிதமாக அரங்கேற்றுகின்றனர். நவீனத் தொழில்நுட்பங்களில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர். எனினும், அதற்கு அவர்கள் அடிமையாக இருப்பதில்லை. நாளுக்கு நாள் அவர்கள் செயல்படும்  விதம் மாறிக்கொண்டே இருக்கிறது.

9/11 சம்பவம் நமக்குக் கற்றுக் கொடுத்த பாடங்கள் ஏராளம். இது போன்ற இன்னொரு சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேண்டுமானால், பயங்கரவாத நிகழ்வுகளை எதிர்பார்க்கவும், அதனை எதிர்கொள்ளவும் நம்மை நன்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பு நடவடிக்கைகள் தோல் யடையுமானால், பயங்கரவாத சம்பவத்தின்  ளைவுகளைத் திறம்படச் சமாளிக்கும் வகையில் நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வது அவசியம்.

2001 செப்டம்பர் 11-ம் தேதியிலிருந்து, அது போன்ற பெரும் அழிவு ஏற்படுத்தக் கூடிய அபாயங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. அவையனைத்தும் கடல்சார் பயங்கரவாதம், எரிசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், பேரழிவு தரும் ஆயுதங்கள் கொண்ட பயங்கரவாதம், சக்தி வாய்ந்த தகவல் தொடர்புக் கட்டமைப்புகள் தகர்க்கப்படும் அபாயம் சார்ந்தவையாக உள்ளன.

1993 பிப்ரவரியில் நியூயார்க் உலக வர்த்தக மையத்தைத் தகர்க்க முயற்சி நடந்தது. அன்றிலிருந்து உலகம் முழுவதுமாகப் பழைய, புதிய பயங்கரவாதம் குறித்த  வாதங்கள் நடைபெற்று வருகின்றன. இனம், கருத்தியல், மதம் போன்ற காரணங்களுக்காகப் பயங்கரவாத வழிமுறையைத் தேர்வு செய்த பழைய பயங்கரவாதிகள், ஒருலட்சுமண ரேகையைஏற்படுத்திக் கொண்டு செயல்பட்டனர். இந்தக் கோட்டைத் தாண்டி வர அவர்கள் முயற்சி செய்ததில்லை. அவர்களுடைய செயல்பாடுகள், பொதுமக்களால் எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்பதில் அக்கறை கொண்டவர்களாக இருந்தனர்.

1993-லிருந்து, ஒரு புதிய வகை பயங்கரவாதிகளை இந்த உலகம் எதிர்கொண்டு வருகிறது. இவர்கள் ஜிஹாதி பயங்கரவாதிகள் என்றழைக்கப்படுகின்றனர். இவர்களுக்குலட்சுமண ரேகைபோல் எந்த தக் கட்டுப்பாட்டுக் கோடும் கிடையாது. பெருவாரியான மக்களுக்குக் காயம் ஏற்படுத்துவதிலும் சர்வ நாசம்  விளைவிக்கக் கூடிய பயங்கரவாதத்திலும்தான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.

மனிதர்களைக் கொல்வது மட்டுமல்லாமல், பொருளாதார, தொழில்நுட்ப, சமூகக் கட்டமைப்புகளையும் சீர்குலைக்கின்றனர். பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பெறுதல், அவற்றைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்காக மத உரிமை, கடமை போன்றவை பற்றிப் பேசுகின்றனர். தேவைப்பட்டால், மதத்தையும், அதன் லட்சியங்களையும் பாதுகாக்கும் வகையில் அந்த ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றனர்.

அவர்களுடைய மனப்பான்மை, சிந்தனை முறை, திட்டமிடுதல், அவற்றைச் செயல்படுத்துவதற்கு அவர்களிடம் உள்ள வசதிகள் ஆகியவை குறித்து நாம்  ழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டியது மிக முக்கியமாகும்.  ழிப்பு உணர்வுடன் இருப்பது என்றால் தயாராக இருப்பது என்று பொருள். அவர்களைப் பற்றிய விழிப்பு உணர்வை எவ்வாறு உருவாக்குவது? அவர்களை மக்கள் முன்னாலும் ஆட்சியாளர்கள் முன்னாலும் கொண்டு போய் நிறுத்துவது எப்படி? முட்டாள்தனமாக அவர்களுடைய சமூகத்தைத் தீய சக்தியாகச் சித்திரிக்காமல் அவர்களைத் திறம்படக் கையாள்வது எப்படி? இவையே இன்று நம் முன்னால் உள்ள மிகப் பெரிய கேள்விகள்.

இன்று அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களின் சில முக்கிய பரிமாணங்கள் குறித்து ஆராய்வதும் அதன் மூலம்  ழிப்பு உணர்வை ஏற்படுத்து-வதுமே இந்த நூலின் பிரதான நோக்கங்கள். இதற்காக, நான் எனது முந்தைய நூல்களிலிருந்தும் சர்வதேச மாநாடுகளில் நான் ஆற்றிய உரைகளிலிருந்தும் சில பகுதிகளை எடுத்து இங்கே தந்துள்ளேன். அவையனைத்தும் காலவாரியாகப் புதுப்பிக்கப்பட்டுத் தொகுக்கப்-பட்டுள்ளன. சில புதிய அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அத்தியாயத்தையும் முழு  ளக்கம் கொண்டதாக அமைக்கப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டுள்ளேன். எனவே, வாசகர்கள் சில  விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்ள, நூலை முன்னும் பின்னும் புரட்டிப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. எனினும், இந்த நோக்கத்தை நிறைவேற்றும் போது சில குறிப்புகள் திரும்பத் திரும்ப இடம் பெறுவதைத் தவிர்க்க இயலவில்லை.

வணக்கம்.
பி. ராமன்
சென்னை 


Related Posts Plugin for WordPress, Blogger...