A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label பெருமாள் முருகன். Show all posts
Showing posts with label பெருமாள் முருகன். Show all posts

16 Jan 2015

பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் 3 - பைராகி




கேள்வி- இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் அன்று எழுதிய மதிப்பீட்டில் இன்று என்ன சேர்ப்பீர்கள்?

சமூகக் கட்டுப்பாடுகளையும் மனித நாகரிக வளர்ச்சி எனும் மாயவலையினாலும் வெறுப்பாகி வரும் சில நிகழ்வுகளையும் அவற்றைக் கையாளும் விதங்களைப் பற்றியும் இக்கதைகள் சிந்திக்க வைப்பதாக எழுதியிருந்தேன். நீர் விளையாட்டு தொகுப்பில் வரும் புகலிடம் எனும் கதை என்னை அப்படி எழுத வைத்திருக்கலாம். நதியில் விளையாடும்போது தீண்டாமை தன்னைத் தீண்டுவதில்லை என உணரும் சிறுவன் நதியில் தனது இருப்பை அறிகிறான்.

திட்டமில்லாமல் நடக்கும் நிகழ்வுகள் புது உலகைத் திறக்கும் சக்தி படைத்தவை. அவரது புனைவின் தன்மையும் அப்படிப்பட்டதே. புதிதாக எதுவும் சேர்க்கத் தோன்றவில்லை.

15 Jan 2015

பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் 2 - வெ சுரேஷ்




கேள்வி- இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் அன்று எழுதிய மதிப்பீட்டில் இன்று என்ன சேர்ப்பீர்கள்?

பதில்- சாதியும் நானும் தொகுப்பு பற்றி எழுதியபோதே அந்த நூல் பெரியாருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டதை ஒரு முரண் என்று  குறிப்பிட்டிருந்தேன். அநேகமாக அந்த நூலில் இருந்த கட்டுரைகள் எல்லாமே கொங்கு மண்டலத்தில் உள்ள ஆதிக்கச் சாதிகளால் பாதிப்புக்கு ஆளாகும் தாழ்த்தப்பட்ட சாதியினர் எழுதியது. பெரியார் மற்றும் திராவிட இயக்கத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் என்று தாம் கருதிய பிராமணரல்லாத சாதியினரின் ஆதிக்கத்தை வேண்டியே இயக்கம் நடத்தினர். அவ்வப்போது தலித் மக்களுக்கு ஆதரவாக வாய் வார்த்தைகள் சொன்னதோடு சரி, செயல்பாட்டு அளவில் வேகம் இல்லை. இதை கோவை அய்யாமுத்துவின் சுயசரிதையில் காணலாம். மேலும், அரசியல் சட்டத்தில், அம்பேத்கர் தலித் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதை பெரியார், அவர் தன் மக்களுக்கு வசதி செய்து கொண்டுவிட்டார், என்றே விமர்சிக்கிறார். பெரியாரின் other என்பதில்தான் தலித் மக்களும் இருந்தனர். அவர் வேண்டியதெல்லாம், இடையில் ஒரு 100 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக, இன்றுள்ள OBC பிரிவினர் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பிராமணர்களிடம் இழந்திருந்த முற்றாதிக்கத்தை மீட்பது குறித்துத்தான். பெரியாரும் திராவிட இயக்கத்தவரும் ஊட்டி வளர்த்த இந்தச் சாதி வெறிதான் இன்று பெருமாள் முருகனையும் தாக்கியிருக்கிறது. இந்தக் கோணத்திலிருந்து, இந்தப் புரிதல் அவர் தொகுத்த சாதியும் நானும் நூலில் உள்ள அவரது முன்னுரையில்  இல்லை என்பதையே நான் மீண்டும் குறிப்பிடுவேன்.

பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் 1 - அஜய்





ஆளண்டா பட்சி நாவல் குறித்து மதிப்பீடு எழுதிய அஜய் அளிக்கும் பதில்கள்-


கேள்வி- இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் அன்று எழுதிய மதிப்பீட்டில் இன்று என்ன சேர்ப்பீர்கள்?

பதில்- மன்னிக்க வேண்டும், அந்த நாவல் பற்றி எழுதியதை இப்போது மீண்டும் பேச விரும்பவில்லை, இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதே இரக்கமற்ற செயலாகத் தெரிகிறது. தற்போது பெருமாள் முருகனுக்குத் தேவை, சுதந்திரமாய் இருப்பதற்கான வெளி. இனியும் நாம் பெருமாள் முருகன் என்ற தனியொரு எழுத்தாளரின் பிரச்சினையாக இதை அணுகிக் கொண்டிருக்கக் கூடாது, மனித உரிமைகள்/ கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதலாகக் கருதியே வினையாற்ற வேண்டும்.

கேள்வி - புனைவுகளைக் கண்டு அஞ்சுபவர்களுக்கும் ஆத்திரப்படுபவர்களுக்கும் நீங்கள் விடுக்கும் வேண்டுகோள் என்னவாக இருக்கும்?

பதில்- பெருமாள் முருகனின் படைப்பை முழுமையாக ஒரு முறை வாசித்துப் பார்க்கும்படி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன், சாதீய சக்திகளால் விநியோகிக்கப்படும் ஒன்றிரண்டு பக்கங்களைப் படித்து உங்கள் முடிவுகளை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். முழுதும் படித்து, அவதூறாக நீங்கள் கருதும் பகுதிகள் எப்படிப்பட்ட சூழலில் இடம் பெறுகின்றன என்பதைப் புரிந்து கொண்டு, அதன் பின்னர் தங்கள் எதிர்ப்பு நியாயமானதுதானா என்று அவர்கள் பரிசீலிக்க வேண்டும். அப்படி ஏதேனும் தவறாக எழுதப்பட்டிருப்பதாக அவர்கள் கருதினால், நாவலில் ஏற்றுக் கொள்ள முடியாத பகுதிகளை மறுத்து கட்டுரைகளும்/ புத்தகங்களும் எழுதலாம், அறிவுத் தளத்திலேயே உங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாம். 

17 Jul 2014

வேப்பெண்ணெய்க் கலயம் - பெருமாள் முருகன்

சிறப்புப் பதிவர்: ஷாந்தி   

சிறுகதை தொகுப்புகள் படிக்க எண்ணி நூலகத்தில் தேடியபோது, இணைய நண்பர்கள் பரிந்துரையான பெருமாள் முருகன் பெயரே முதலில் ஞாபகம் வந்தது. .

இது பெருமாள் முருகனின் நான்காவது சிறுகதை தொகுப்பு. பல்வேறு இதழ்களில் வெளியான 23 கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. சிறுகதை வாசிப்பு வார/மாத இதழ்கள் தாண்டி அதிகம் இல்லாததால் தொடக்கத்தில் கதையோட்டம் அத்தனை சுவாரஸ்யமாக இருக்கவில்லை. ஆனால் ஒரு கதை படித்து முடிந்ததும் அந்த எண்ணம் காணாமலே போனது. மிக நிதானமான நுண்ணிய விவரிப்புகள், நான் கண்டிராத கிராமத்தை, பொறுமையாக என் கற்பனையில் கொண்டுவர உதவுவதாகவே இருந்தன, உரையாடல்கள் வழி மெல்லிய உணர்வுகளும் புலப்படுவது சுவாரஸ்யம்.

இத்தொகுப்பின் கதைகள் பெரும்பாலும் கணநேர உணர்ச்சி வெளிப்பாட்டினை மையமாக கொண்டதாகவே இருக்கின்றன. சிறுசிறு வார்த்தைகள், செயல்கள் எப்படி படிப்படியாக ஒரு பெரும் விளைவினை உண்டாக்குகின்றன என்பதை விவரிக்கும் கதைகள்.. கணநேரத்தில் பெரும் கோபம், சோகம், விரக்தி போன்றவற்றை ஒரேயொரு நிகழ்வு கொடுத்து விடுவதில்லை. நம் மனநிலை,படிப்படியாக உருவாகும் உணர்ச்சிகள் அதன் போக்கை  தீர்மானிக்கும் மற்றவரது செயல்கள் என நம் கட்டுப்பாடுகளை தாண்டி நம் செயல்கள் ,எதிர்வினைகள் வெளிப்படும் அந்த தருணங்களை கதைகள் பதிவு செய்கின்றன.

Courtesy: Thinnai


23 Apr 2014

கோட்பாட்டுக் கலப்பற்ற வாழ்வனுபவங்கள்.- பெருமாள் முருகனின் "சாதியும் நானும்" தொகுப்பு


அண்மையில் ஜெயமோகன் எழுதிய, 'நேருக்கு நேராகப் பேசும்போது'  கட்டுரை படித்தபோது பெருமாள் முருகன் தொகுத்து வெளிவந்த 'சாதியும் நானும்' கட்டுரை நூல் நினைவுக்கு வந்தது. இந்த நூல் பற்றி முதலிலேயே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் ஜெயமோகன் எழுதிய கட்டுரையின் உள்ளடக்கத்தைப் படித்தபின்தான் இதைச் செய்வதற்கான உந்துதல் கிடைத்திருக்கிறது.

'சாதியும் நானும்' தொகுப்பு நூலை ஒரு புதுமையான, துணிச்சலான முயற்சி என்று சொல்லலாம், பெருமாள் முருகனையும் சேர்த்து 32 பேர் தங்கள் சாதியையும் இளவயதிலிருந்து அது தங்கள் வாழ்வில் தங்களை பாதித்த விதத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

பெரும்பாலும் தலித் மற்றும் மிகவும் பின்தங்கிய (சேவை) சாதிகளில் பிறந்தவர்களே கட்டுரையாளர்களில் அதிகம். இவர்களில் நிறைய பேர் கல்வித்துறையில் பணியாற்றுபவர்கள். பெரும்பாலும் 1970களிலும் 80களிலும் பிறந்தவர்கள். 60களில் பிறந்தவர்கள் பெருமாள் முருகனோடு சேர்ந்து மிகச் சிலரே. ஒரே ஒரு பிராமணர்தான் இதில் உண்டு, அதில் ஒன்றும் வியப்பில்லை. மூன்றே மூன்று பெண் கட்டுரையாளர்கள்தான் இந்தத் தொகுப்பில் உள்ளனர் என்பதிலும் வியப்பதற்கு எதுவும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.


26 Feb 2014

மாதொருபாகன் - பெருமாள் முருகன்

பதிவர் : Paval MV (@paval)


பொன்னாளை கல்யாணம் கட்டிய புதிதில், மொட்டையாக மரங்கள் எதுவுமின்றி இருந்த தன் மாமனார் வீட்டு வாசக்களத்தில், ஒரு பூவரசங்கொம்பை கொண்டு நட்டுவைத்த காளி, இந்த பன்னிரெண்டு வருடத்தில் அது வளர்ந்து, கிளைபடர்ந்து, நிழல்பரப்பி, பூச்செறிந்து நிற்பதை, அதன்கீழ் போட்ட ஒரு கயிற்றுக்கட்டிலில்  படுத்தபடி தனிமையில் ரசித்துக்கொண்டிருப்பதாக ஆரம்பிக்கும் அந்த முதல் அத்தியாயத்திலேயே நாவலின் கதை தொடங்கிவிடுகிறது.


21 Mar 2013

நீர் விளையாட்டு - பெருமாள் முருகன்

'வாழ்வின் பல்வேறு அடுக்குகளிலும் தான் எதிர்கொண்ட அனுபவங்களைச் சிடுக்குகளற்ற கதைகளாக்கியுள்ளார் பெருமாள்முருகன். தமிழ்க் கதையுலகம் இதுவரை தொடத் தயங்கிய சில கூறுகளை அனாயாசமாகக் கையாண்டு, தமிழ் இலக்கியத்தின் எல்லையைத் தன்னளவில் விரிவுபடுத்தும் பெருமாள்முருகன், சொற்களை மீறிய மனித மனோபாவங்களை வாசகர்களுக்கு உணர்த்துவதில் வெற்றிபெற்றுள்ளார். பாசாங்கின் சுவடுகள் பதியாத சிறுகதைகள் இத்தொகுப்பில் கிடைக்கின்றன'


பெருமாள்முருகனின் `நீர் விளையாட்டு` சிறுகதைத் தொகுப்பை சில வருடங்களுக்கு முன்னர் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வழக்கம் போல படிக்க வேண்டிய சிறுகதைகள் எனும்  கடந்த பத்து வருடங்களில் வெளியான வரிசையில் அவரது நீர் விளையாட்டு, பீ கதைகள் இடம்பெற்றிருந்தன. அவரது ஒரு கதையை (`எருக்கஞ்செடிகள்`) சிறுபத்திரிக்கையில் படித்த நினைப்பு இருக்கிறது. அது தவிர வேறெந்த கதையையும் நான் படித்ததில்லை. அவரது சிறுகதைகள் உலகத்தைப் படிக்கத் தொடங்கையில் ஒட்டுதல் இல்லாதது போன்ற உணர்வு ஏற்பட்டது. அது சகஜம் தான். சிறு நகரில் வளர்ந்த எனக்கு பெருமாள்முருகனின் உலகம் மிகவும் புதிது. கதை சொல்லப்பட்ட சுவாரஸ்யத்தில் மன விலக்கம் மறைந்தது. இலக்கியத்தைப் படிப்பதே நமக்குத் தெரியாத உலகைப் புரிந்துகொள்ளும் முயற்சி மட்டும்தான் எனும் எண்ணம் வலுத்தது.


இத்தொகுப்பில் அமைந்திருக்கும் கதைகள் திட்டமிட்ட நிகழ்வுகளைச் சுற்றி நடப்பவை அல்ல. மாறாக, வாழ்வின் பாதையில் எங்கோ எவரோ தொட்டுச் சென்ற உணர்வினைப் பிந்தொடர்ந்து ஒரே ஒரு கணத்தில் எழுந்த உணர்வுப்பொறியைப் பதிவு செய்ததால் உருவான கதைகள். இக்கதைகளை எழுதும்போது அவருக்கு படைப்பெழுச்சியை மிகுவித்த செயலாக இதை முன்னுரையில் குறிப்பிடுகிறார்.


17 Feb 2013

சிறகுகளும் கூடுகளும் - பெருமாள் முருகனின் ஆளண்டாப் பட்சி

சிறப்பு பதிவர் : அஜய்

பெருமாள் முருகன்  நாவல்களின் அமைப்பை நான் இரண்டு விதமாக பார்க்கிறேன் - ஒன்று, அதன் களம், சூழல் சார்ந்து. விளைநிலங்கள் விற்கப்படுவதாகட்டும், மாதாரிகளின் வாழ்நிலமாகட்டும், திரையரங்காகட்டும், அதன் களம் துல்லியமாகப் பதிவாகியிருக்கும். இரண்டாவது, மனிதர்கள், உறவு சார்ந்து  - மனித உறவுகளில் உள்ள பாசமும் பிணைப்பும், அதற்கு நேர்மாறாக, அவற்றில் உள்ள வன்முறையும் பொறாமையும்; காலம் மனிதர்களின் உள்ளத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும் அதனால் உறவுகளில் ஏற்படும் இயல்பான நெருக்கங்களும் விலகல்களும். இவை ஒன்றாக இணைவதையே பெருமாள் முருகனின் நாவலாக பார்க்கிறேன்,  அவருடைய சமீபத்திய நாவலான ஆளண்டாப் பட்சி வரை.



Related Posts Plugin for WordPress, Blogger...