A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

5 Sept 2016

The Gathering - by Anne Enright


 முப்பதொன்பது வயதான வெரோனிகா ஹெகார்ட்டி தன்னைவிட ஒரு வயதே மூத்தவனான சகோதரன் லியம் ஹெகார்ட்டியின் தற்கொலைச் செய்தியைத் தெரிவிக்க தன் பிறந்த வீட்டிற்குச் செல்கிறார். பொறுமையே வடிவான அப்பாவியாகக் கருதப்பட்ட தன் தாயிடம் அவர்தான் இந்த துயரச்செய்தியைப் போட்டுடைக்க வேண்டும். ஆனால் அவரது தாய் மீது அவருக்கு ஆத்திரம்தான் வருகிறது, சற்றும் இரக்கம் வர மறுக்கிறது. பன்னிரண்டு பிள்ளைகள், இடையில் நான்கு குறைப் பிரசவங்கள்: ஒரு ஆதர்ச ஐரிஷ் கத்தோலிக்க மனைவி, சமையலறையிலும் பிரசவக் கூடத்திலுமே ஆயுளைக்கழித்தவர், எதிர்பேச்சு பேசாதவர், பிள்ளைகளின் பரிதாபத்தை சம்பாதித்தவர், நினைவு கலங்கியவர் போல வெறித்திருப்பவர், பார்வைக்கு இனியவர், மெலியவர். இருந்தும் ஏன் ஆத்திரம் வருகிறது? எதையோ எதிர்க்க மறுத்தவர் என்பதாலா, எதையுமே வெளிப்படுத்தாதவர் என்பதாலா? வெரோனிகாவின் பெயரைக் கூட நினைவில் வைத்திருக்காமல் மழுப்பியழைப்பதாலா? “மறதியே உருவானவள்” என்பதாலா?


8 Aug 2016

The Age of Wrath- A History of the Delhi Sultanate, Abraham Eraly


https://drive.google.com/open?id=0B3ZpZAys0pHCRV9lZENPUmhuX1VRVWZPR19WTmJNZnlxZ3Nz
இக்கட்டுரையை மின்னூல் வடிவில் வாசிக்க

ஆபிரஹாம் எராலியின் இந்திய வரலாற்றுத் தொடர் நூல்களின் முதல் மூன்று நூல்களைப் பற்றி சொல்வனம் இணைய இதழில் நான் எழுதியிருந்த கட்டுரையின் இறுதியில் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன்-

    "இந்த மூன்று நூல்களின் தொடர்ச்சியாக அடுத்து வருவது இந்தியாவின் தற்காலத்தையும் மிக வலுவாகத் தீர்மானித்துக் கொண்டிருக்கும் காலகட்டமான 11ம் நூற்றாண்டிலிருந்து 16ம் நூற்றாண்டு வரைக்குமான ஒன்று. இந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்தவைகளின் தாக்கம் இன்றைய இந்தியாவிலும் அரசியல் விளைவுகளை உண்டாக்குவதை நாம் அறிந்திருக்கிறோம். அந்தப் புத்தகமான The Age of Wrath ஒரு தனிக் கட்டுரையைக் கோரி நிற்பது".

தில்லி சுல்தான்களின் ஆட்சிக் காலத்தை ஆபிரஹாம் எராலி, "Age of Wrath," என்ற இந்த நூலில் விவரிக்கிறார்- “A historian sees with impersonal eyes. But speaks with a personal voice. A historian cannot be bothered with political correctness,” என்பதே அவரது பார்வையாக இருக்கிறது.


3 Aug 2016

நடந்தாய் வாழி காவேரி - தி. ஜானகிராமன், சிட்டி

கே. சண்முகதாஸ்

சென்ற தலைமுறையினருக்கு, ‘வாசகர் வட்டம்’ என்ற பெயர் மிக அறிமுகமானது. அதன் நிறுவனர்களான திருமதி லக்ஷ்மியும், கணவர் கிருஷ்ணமூர்த்தியும் 1971-ல் வெளியிட்ட ‘நடந்தாய் வாழி காவேரி’ மீண்டும் காலச்சுவடு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. திரு தி. ஜானகிராமன், திரு . சிட்டி ( பெ. கோ. சுந்தரராஜன்) கைவண்ணத்தில் வந்த எழுத்தோவியம், ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பு. இளமையில் என்னை மிகவும் ஈர்த்த, எனக்குள் பாதிப்பு உண்டாக்கிய நூல்களை வாழ்க்கைப் பயணத்தில் இழந்த எனக்கு இது போன்ற மறுபதிப்புக்கள் அளப்பரிய இன்பத்தை தருகின்றன. இன்றைய அரசியல், கலாசார சூழ்நிலைகளின் பின்னணியில் மீண்டும் மீண்டும் இந்நூலை படிக்கும்போது, மாறுபட்ட உணர்ச்சிகள் மனதில் அலையடிக்கின்றன.
“கன்னட நாடு மட்டுமல்ல; மகாராஷ்டிரம், குஜராத், வங்காளம், உத்திரப்ரதேசம், என்று எங்கு போனாலும் புற வேறுபாடுகளையெல்லாம் கடந்து நம் நாட்டு மணம் வீசிக்கொண்டுதானிருக்கும். மொழி, பிராந்தியம் என்ற பெயர்களில் நம் நாட்டை இன்னும் சின்னபின்னபடுத்திக் கொண்டிருக்கும் அறிவிலிகளைக் கண்டு, இந்த இந்திய உணர்வு ஊமை அழுகை போல் எங்களுக்கு ஒலித்தது. ஆற்று நீரும், மண்ணும், கன்னடம், மராட்டி, தெலுங்கு, என்று ஏதோதோ மொழி பேசுவது போலவும், அது அந்தந்த மொழிக்காரர்களின் வயிற்றுக்குள்ளேயே புகுந்து கிடக்க வேண்டும் என்பது போலவும், மனதில் குட்டிச்சுவர்களை எழுப்பி வேரறுக்கும் அறிவிலிகளைக் கண்டு இந்த கிராம எழில் அழுகிறது.”  


30 Jul 2016

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர்


 போகன் சங்கரின் கவிதைகளையும் அவரது முக நூல் பதிவுகளையும் தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். அவரது சிறுகதைகளையும் அவ்வப்போது அவை வெளியான இதழ்களில் படித்துள்ளேன். ஆனால் ஒரு தொகுப்பாக வாசிக்கும் வாய்ப்பு இப்போது 'கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்'  (உயிர்மை பதிப்பகம்) தொகுப்பு மூலம் கிடைத்தது. இதுவே அவரது முதல் தொகுப்பு.
இந்தத்  தொகுப்பில்  உள்ள கதைகள் ஓரிரண்டைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அவை வெளியானபோதே படித்துவிட்டிருக்கிறேன் . இப்போது மொத்தமாக படிக்கும்போது உடனடியாக மனதில் Humiliated and Insulted  என்ற வரி ஓடியது. இப்போது அதிகம் பேசப்படாமல் போயிருக்கும்  தாஸ்தாவெஸ்கி நாவலின்  தலைப்பு அது. போகனின் இந்தத் தொகுப்புக்கும் அந்தத் தலைப்புப் பொருந்தும்.



21 Jul 2016

ஒரு வேட்டைக்காரனின் நினைவலைகள் - கேடம்பாடி ஜட்டப்பராய்


கன்னட சாகித்ய அகாடமி விருது பெற்ற கேடம்பாடி ஜட்டப்பராய் எழுதிய இந்நூலை,
சுமார் நூறாண்டுகளுக்கு முன்னால் இருந்த இந்திய சமூகத்தின் ஒரு பிரிவினரின் நிலைமையை அன்றைய சமூகத்தின் நம்பிக்கைகள், சடங்குகள், உணவுப்பழக்கங்கள், வேட்டைக்கான சட்டங்கள், ஆங்கிலேய எஜமானர்களுக்கும் உள்நாட்டுக் குடிகளுக்கும் இடையே நிலவிய உறவுகள் என அனைத்தையும் சித்தரிக்கிறது” 
என்ற அறிமுகத்துடன்  என் மகளுக்காகவே ஒரு குழந்தைகள் புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். வாசிக்கத் தொடங்கியதும் இந்நூல் என்னை முழுமையாக இழுத்துக் கொண்டது எனலாம். மலைகள் காடுகள் விலங்குகள் என அது தனி உலகமாக நம்மை மாற்றிவிடுகிறது.
       
“இப்புத்தகத்தில்  நான் விவரிக்கப்போகும் நிகழ்ச்சிகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் நடந்தவை. இன்று வனவிலங்குகளைப் பாதுகாப்பது  நமது கடமையாகும். பண்டைய காலங்களில் மலைப்பிரதேச விவசாயிகளின் பயிர்களையும் கிராமத்தினரையும் காக்கும் பொருட்டு வன விலங்குகள் வேட்டையாடப்பட்டன.
        
தற்கால நவநாகரீக உலகிலிருந்து, எழிலமிகு இயற்கைச் சூழலுக்கு, உங்களை அழைத்துச் செல்கிறேன்,“ 
என்று இதன் முகவுரையில் திரு. ராய் குறிப்பிடுகிறார். அது உண்மை. மலைகளும் காடுகளும் விலங்குகளும் நிறைந்த காலத்திற்கு நம்மை இழுத்துச்செல்கிறது இந்நூல். வேட்டையின் நுணுக்கங்களும் பயணங்களும் நிறைந்த சாகசக்கதைகள் என்றாலும் இவை கூறப்பட்ட விதத்திலேயே இலக்கியமாகின்றன. கி. ராஜநாராயணனின் எழுத்துடன் தமிழில் இவரது எழுத்துகளை ஒப்பிடலாம். அத்தகைய அந்தரங்க மகிழ்வினை உணர்த்தக்கூடியவை ராவின் வேட்டை அனுபவங்கள்.
 

8 Jul 2016

A House for Mr Biswas - V. S. Naipaul, 1961


“வீடு பகற்கனவுகளின் புகலிடம், வீடு கனவு காண்பவனை அடைகாக்கிறது, வீடு ஒருவரை அமைதியில் கனவு காண அனுமதிக்கிறது." - காஸ்டன் பாஷெலார்ட், இடவெளிகளின் கவித்துவம்.*

பள்ளிப் பருவத்தில் எதேச்சையாக ஒரு முறை தூர்தர்ஷனில் பாலு மஹேந்திராவின் ‘வீடு' படம் பார்க்க நேர்ந்தது. அப்போது வீட்டு மாடியில் இன்னொரு வீடு கட்டிகொண்டிருந்தார்கள். அந்த சூழலில் பார்த்ததோ என்னவோ, படம் தந்த பயமும் மனத்தளர்ச்சியும் இன்றும் நினைவிலிருக்கிறது. மீண்டும் அதைப் பார்க்கவும் எந்த ஆர்வமும் ஏற்படவில்லை. ஒரு நடுத்தர வர்க்க சம்பளக்காரருக்கு வீடு கட்டுவதென்பது சென்ற தலைமுறை வரை எவ்வளவு பெரிய பிரம்மயத்தனம்! கடன்கள், கட்டுமானத்தைப் பற்றிய முழு அறியாமையினால் ஏற்படும் பின்னடைவுகள், மனித உறவுகளில் சிக்கல்கள், முன்பின் அறிந்திராத புதிய சிறு- குடும்ப முறையின் பரிச்சயமற்ற தேவைகள், ஆசைகள்; ஒரு வகையில் எந்த வழிகாட்டுதலுமற்ற அசம்பவப் பாதை போன்றது அந்த முயற்சி. பிள்ளைகள் முதன்முதலில் அவர்களது பெற்றோர்களின் சாமர்த்தியமின்மையைக் கணித்து வருந்த ஆரம்பிக்கும் சில வாழ்க்கை நொடிகளில் வீடு கட்டும் படலமும் அடங்கும். இந்த அனுபவங்களிருக்க ‘திரு.பிஸ்வாஸிற்கு ஒரு வீடு' என்ற தலைப்பே ஒரு வகையில் பரிச்சயமாக ஒலித்தது. பெயரும் இந்தியப் பெயர். எழுதிய நைபால், இப்புத்தகத்தை எழுதிய பல வருடங்கள் கழித்துத் தான் இந்தியாவை முதன்முதலில் பார்த்தார் என்பதையே மறக்கச்செய்யுமளவு இந்திய அனுபவத்தை நினைவூட்டும் தலைப்பு. நாவலும் அவ்வளவு நெருக்கமான  அனுபவமாகப் படிந்தது; எங்கோ மரகத அட்லாண்டிக் கடலில் மிதக்கும் கரீபியத் தீவுகளின் சாகசக் கதையாகவல்ல.







16 Jun 2016

சஞ்சாரம் - எஸ். ராமகிருஷ்ணன்



சமீபத்தில் எஸ்.ரா.வின் "சஞ்சாரம்" நாவல் வாசித்தேன். நாவலுக்குள் செல்லும் முன் எனக்கும் இசைக்குமான பரிச்சயத்தைச் சொல்லிவிடுகிறேன்.

நான் வளர்ந்த திருவாரூருக்கும் இசைக்கும் நெருங்கியத் தொடர்பிருக்கிறது.  கர்னாடக சங்கீதத்தின் முன்னோடிகளாகக் கருதப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சதர், சியாமா சாஸ்திரி எனும் மும்மூர்த்திகள் பிறந்த ஊர் திருவாரூர்.

தஞ்சாவூரை அடுத்த திருவையாற்றில் வருடாவருடம் நடைபெறும் புகழ்பெற்ற தியாகராஜ ஆராதனை விழா இசை நிகழ்ச்சியைப் போல திருவாரூரில் மும்மூர்த்திகளின் நினைவாக வருடாவருடம் மும்மூர்த்திகள் ஆராதனை விழா நடைபெறும்.  சுமார் ஓரு வாரம் நிகழும் அந்த விழாவுக்குச் சிறுவயதில் தினமும் என்னுடைய பாட்டனாருடன் சென்றிருக்கிறேன்.

அதுபோல் திருவாரூரில் உள்ள தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வருடாவருடம்  தெப்பத்திருவிழா நடக்கும். அப்போது பின்னிரவு வரை கலைஞர்களின்  இசைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். இப்படிதான் ஜேசுதாஸ், பாம்பே சகோதரிகள், நித்யஶ்ரீ, கன்னியாக்குமரி, குன்னக்குடி, விக்கி வினாயக்ராம்  போன்ற பல புகழ் பெற்ற இசைக்கலைஞர்களின் இசையை நேரடியாக கேட்டும் பார்த்தும் அனுபவித்திருக்கிறேன்.

தஞ்சை மண்ணில் வளர்ந்த எனக்கு இப்படி பல இசை அனுபவங்கள் இருந்தாலும் நாதஸ்வரம்  அன்னியமில்லாத, மனத்துக்கு நெருக்கமான ஒன்று.

சரி, சஞ்சாரம் நாவலின் கதைக்கு வருவோம். நாவலின் கதைக்களம் கரிசல் மண். கதை அங்குள்ள இரு நாதஸ்வரக் கலைஞர்களைப் பற்றியது.



9 Jun 2016

ரோலக்ஸ் வாட்ச் - சரவணன் சந்திரன்


"ஸ்கூல்  அட்மிஷன் ஒன்னு,  EBல யாராவது தெரியுமா? TNPLல? திருவான்மியூர் RTOல? SBIல? ஆள் தெரிஞ்சா ஒரு சின்ன வேலையாவனும். கொஞ்சம் செலவு பண்லாம், தெரிஞ்சா சொல்லுங்க"  - இப்படி சதா யாருக்காவது வலை வீசி,  கெஞ்சி,  குழைந்து, சரி கட்டி  எதாவது ஒரு புரோக்கரை தேடி, எதாவது ஒரு காரியத்தை சாதித்துக்  கொண்டே இருக்கும் பிரஜைகள் நாம். இவ்வகை புரோக்கர்களிலிருந்து சற்றே உயர் ரக, பொருளாதார மேல் தட்டு வர்க்கத்தின், அரசியல் வியாபார கணக்குகளின்,  மறைமுக  வலைப் பின்னலின் ஒரு கண்ணி, இளம் அரசியல் புரோக்கர்  ஒருவனின்  கதா காலாட்சேபம் " ரோலக்ஸ் வாட்ச்.


25 May 2016

ஒற்றையடித் தடத்தின் பாதங்கள் : யாதுமாகி - எம். ஏ. சுசீலா


ஒரு படைப்பினை உருவாக்கும் காரணிகள் எவை என்ற கேள்விக்கான விடை முடிவற்ற சாத்தியங்களைக் கொண்ட விவாதத்தை உருவாக்கும். ஆனால், எது ஒரு உருவாக்கத்தை படைப்பாக மாற்றுகிறது என்பதைக் கூர்ந்து  அவதானித்து விடலாம் என்றுதான் நினைக்கிறேன். "யாதுமாகி" தேவி - உள்ளபடியே மனதில் நிறைந்துவிட்டிருக்கிறார் . வாசிக்குந்தோறும் தனது பாட்டியை, தாயை, சகோதரிகளை எண்ணாமல் எவராலும் புத்தகத்தை மூடிவிட இயலாது. நேரடியாகப் பார்த்து உடன் வளர்ந்த விதத்தால் இந்தக் கதைசொல்லிக்குக் கிடைத்திருக்கும் ஒரு கதைப்போக்கு படைப்புக்கு வலுவூட்டுகிறது. தான் கடந்து வந்த வாழ்க்கையின் மொத்தத்தையும் முழுப்பார்வையாக பார்க்க முடிந்தவனின் லௌகீக விவேகம் அவனது வார்த்தைகளுக்கு மந்திரம் போன்ற கனத்தைக் கூட்ட முடியும். அப்படி ஒரு வாழ்க்கையை விளக்கிய விதத்தில் "யாதுமாகி" தன்னை ஒரு படைப்பாக நிறுவிக் கொள்கிறது.



23 May 2016

தொலைந்து போனவர்கள் - சா. கந்தசாமி


வேகமாக சாலையில் சென்றுக் கொண்டிருக்கிறீர்கள். கடந்து செல்லும் மனித முகங்களில் ஒன்று உங்களை ஒரு கணம் ஸ்தம்பிக்கச் செய்கிறது. கிட்டதட்ட  இருபது ஆண்டுகளுக்கு முன் பிரிந்துவிட்ட உங்கள் பால்யகால ஆத்ம நண்பன்தான் அது. உடனே என்ன செய்வீர்கள்? ஓடி போய் கட்டித்தழுவி, நலம் விசாரித்து, வீட்டுக்கு அழைத்து நட்பை புதுப்பித்துக் கொள்வீர்களா? அல்லது கண்டும் காணாதது போல் அவ்விடத்தை விட்டு நழுவி விடுவீர்களா?   இந்த இடத்தில் உங்கள் செய்கையை பெரிதும் தீர்மானிக்கப்போவது உங்களின் தற்போதைய வாழ்க்கை நிலைதான் என்ற யதார்த்தத்தை விவரிப்பதே சா.கந்தசாமி எழுதிய “தொலைந்து போனவர்கள்” நாவல்.


18 May 2016

Why Be Happy When You Could Be Normal? - Jeanette Winterson



(ஆசிரியர் குறிப்பு: ஜியனெட் வின்டர்ஸன், பி.1959, மான்செஸ்டர், இங்கிலாந்து. எழுத்தாளர், பத்திரிகையாளர், கல்லூரியாசிரியர், சிறு தொழில்முனைவர். முதல் நாவல் மற்றும் பி.பி.சி. தொடர் ’Oranges Are Not The Only Fruit’ தனது 25 வயதில் எழுதினார். Officer of the Order of the British Empire உட்பட பல சம்மானங்களயும் விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் பார்க்க: விக்கிபீடியா )

முன்னாள் பி.பி.சி. தொலைக்காட்சி நடத்துனர் ஆலன் யெந்தோபின் (Alan Yentob) ஆவணப்படங்கள் என்னை மிகவும் கவர்ந்த சமீபகால கலாச்சார நிகழ்வுகளுள் ஒன்று. அவற்றின் மூலமாக பல சமகாலக் கலை-இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் கிடைத்தது; கிடைத்துக் கொண்டிருக்கிறது. அவற்றில் ஒரு படத்தில் ஜியனெட் வின்டர்சன் 2011ல்  எழுதிய சுய-சரிதை ‘Why Be Happy When You Could Be Normal?’ என்ற புத்தகத்தை ஒட்டி, ஆசிரியை பிறந்து வளர்ந்த இங்கிலாந்தின் தொழிற்கூடமான மான்சென்ஸ்டரின் வட்டாரங்களும், அதற்கு நேர்மாறாக அவர் படித்து வெற்றி பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையும், அவரது நெருங்கிய நண்பர்களின் நேர்காணலும் தொலைகாட்சியில் சித்தரிக்கப்பட்டன


13 May 2016

புவியிலோரிடம் - பா. ராகவன்


 1989-91 ஆண்டுகள் இந்திய அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் முக்கியமான, கொந்தளிப்பான காலகட்டம். மத்தியில் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் தோற்று வி.பி. சிங் தலைமையிலான ஐக்கிய முன்னணி இடது மற்றும் வலதுசாரிகளின் ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்தது. அந்த அரசு மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமலாக்குவதாக அறிவித்தது. வட மாநிலங்கள் எங்கும் அதற்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. அந்த சமயத்தில்தான் நாடெங்கும் இட ஒதுக்கீடு என்பது சலுகையா, உரிமையா, தகுதி என்றால் என்ன, அது சிலருக்கு மட்டுமே  உரித்தானதா என்பது போன்ற பல கேள்விகள் பொதுவெளிகளில் பெரிதும் விவாதிக்கப்பட்டன. ஆனால் தமிழகத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்கு எதிரான நிகழ்வுகளும் விவாதங்களும் அவ்வளவாக இல்லை என்றே சொல்ல வேண்டும். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, இங்கு முற்பட்ட வகுப்பினர் எனப்படும் சாதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. இரண்டு, தமிழகத்தில் சமூக ஆதிக்கம் செலுத்தக்கூடிய முக்கியமான சாதிகள் அனைத்தும் 70களின் இறுதியிருலிருந்தே, பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற அடையாளத்தைப் பெற்று இட ஒதுக்கீட்டிற்கு தகுதி பெற்றிருந்தன. இங்கு மண்டல் குழு  பரிந்துரைத்த அளவுக்கு மேலேயே பிற்படுத்தப்படோருக்கான இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது. அதனால் மண்டல் பரிந்துரைகள் பெரிதாக தமிழகத்தின் சமூக அரசியல் தளங்களில் எதிர்ப்பைச் சந்திக்கவில்லை.


6 May 2016

ஒரு மணியின் பல ஒலிகள் - பாரதிமணியின் ''புள்ளிகள் கோடுகள் கோலங்கள்''


ஒரு வார கெடுவுக்குள் திருப்பித்தர வேண்டியிருந்த்தால் நானூறு பக்கத்திற்கு மேல் உள்ள இந்த புத்தகத்தை முழுதாக படிக்கும் எண்ணமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் கட்டுரைகளை படித்தபோது நிச்சயமாக எதையோ  தவற விடுகிறோம் என்று தோன்ற வைத்து, பிறகு முழுதும் படிக்கச் செய்தது..

அனுபவம் கனிந்த மனிதனே புத்தகம் ஆகிறான் என்பதை ருசுப்பிக்கும் புத்தகம் இது. அனுபவ அறிவு கட்டுரைகளாக மாறும்போது டைரிக் குறிப்பாகவோ தகவல் களஞ்சியமாகவோ மாறிவிடும் அபாயம் அதிகம். பாரதி மணி இதை மிக லாகவமாக கையாண்டிருக்கிறார். அவரது நாடக மனம் இதற்கு அஸ்திவாரம் எனலாம். பிரத்யேக மொழி நடை எதுவும் இல்லை. ஆங்கில வார்த்தைகள் பல கலந்த சகஜமான உரையாடல் பாணி. சுவாரசியங்கள் மிகுந்த தொகுப்பு.




12 Apr 2016

எங் கதெ- இமையம்



தனது முதல் புதினத்தில் இலக்கிய உலகின் கவனத்தைப் பெற்ற எழுத்தாளர்கள் மிகக்குறைவு. அப்படி பரவலான கவனம் பெற்றவர் எழுத்தாளர் இமையம் என எங்கோ படித்த நினைவு.

தனது முதல் படைப்பான கோவேறு கழுதைகள் (1944) நாவலுக்குப்பின் தனித்துவத்துடன் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவருபவர். அவருடைய  "எங் கதெ"யை சமீபத்தில் வாசித்தேன்.

நான் வாசிக்கும் முதல் நூல் என்பதால் எழுத்தாளர் பற்றிய எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் வாசிக்கத் தொடங்கினேன். இந்த புத்தகத்தில் இரண்டு அம்சங்கள் குறிப்பாக கவனத்தைக் கவர்ந்தன. ஓன்று அவரின் மொழி நடை. இரண்டாவது அவர் எடுத்துக் கொண்ட கதைக்கரு.




13 Mar 2016

கெடைகாடு -ஏக்நாத்


தமிழில் இன்றைய  வாசிப்புச் சூழல் பற்றி பெரிதாக சொல்லத் தேவையில்லை. இருபத்தி நான்கு மணிநேரமும் ஓளிபரப்பாகும் நூற்றுக்கணக்கான தனியார் தொலைக்காட்சிகள். அவற்றைத் தாண்டி திரைப்படங்கள், சமூக வலைதளங்கள் என மக்களுக்கு பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள். அச்சில் வெகுஜன ஊடகங்களாக தினசரிகளும், வாராந்திர பத்திரிகைகளும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையிலும் கட்டுரைகள், அரசியல், சுய முன்னேற்றம், பொது அறிவு புத்தகங்களைத் தாண்டி தமிழில் கதைகளை வாசிக்க சிறிய கூட்டம் ஓன்று இருக்கத்தான் செய்கிறது.

அந்த வாசகர்களை கருத்தில் கொண்டு வருடம்தோறும் நூற்றுக்கணக்கான படைப்புகள் வெளிவருகின்றன.  அவற்றில் பிரபலமான எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகங்களின் படைப்புகள் ஏதோ ஓரு வகையில் வாசகர்களின் கவனத்தைப் பெற்றுவிடுகின்றன. மற்ற படைப்புகளில் தரமானதை அடையாளம் காண வாசகனுக்கு பெரும் வழிகாட்டலாக இருப்பது மூத்த எழுத்தாளர்கள் தான்.

அப்படி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனால் சமீபத்தில் அடையாளம் காட்டப்பட்டது ஏக்நாத்தின் "கெடைகாடு" புதினம் (நாவல்). நாவலாசிரியர் ஏக்நாத் எனக்கு அறிமுகம் இல்லாதவர். அவரைப் பற்றிய குறிப்புகளும் இந்தப் புத்தகத்தில் பெரிதாக இல்லை. அதனால் எதிர்பார்ப்புகள் ஏதுமின்றியே இந்த நூலைப் படித்தேன்.



25 Feb 2016

ஆ. மாதவனின் இலக்கியச் சுவடுகள்




ஒவ்வொரு முறையும் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்படும்போது நிச்சயம் அது ஒரு சர்ச்சையை உருவாக்கும். முதல் வகை சர்ச்சை, விருது வாங்கும் எழுத்தாளர் தேர்வை எதிர்மறையாக விமரிசிப்பதாக இருக்கும். தகுதியானவர் என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படும் ஒருவருக்கு மிகச்சில சமயங்களே இந்த விருது  கிடைத்திருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது. ஒரு முறை, வணிக இதழ்களில் அதிகம் எழுதியவரும் தமிழக அரசின் உயர் பதவி ஒன்றில் இருந்தவருமான ஒருவர் விருது பெற்றபோது, நல்ல வேளை, இந்த முறை துணி வியாபாரிக்கும் துணைவேந்தருக்கும் தராமல் ஒரு எழுத்தாளருக்கு விருதுத் தந்தார்களே என்று சுஜாதா விளையாட்டாக எழுதி சொல்லடிபட்டார்.

இரண்டாம் வகை சர்ச்சை, தகுதியான எழுத்தாளருக்கு விருது கொடுக்கப்பட்டாலும், அதை அவரது சிறந்த ஆக்கத்துக்குத் தராமல், சுமாரான அல்லது அவர் எதில் சிறந்து விளங்கினாரோ அந்த வகைமைக்கு மாறான வேறொன்றுக்குக் கொடுக்கப்படுவது குறித்து எழுவது. கவிதைகளுக்காக அல்லாமல் ஒரு தொடர்கதைக்கு கண்ணதாசன் விருது பெற்றதை நினைவு கூரலாம். அது போலவே தி.ஜானகிராமன், அசோகமித்திரன், நாஞ்சில்நாடன் முதலானவர்களுக்கும் இவ்விருது அவர்களின் சிறந்த படைப்புகளுக்காக வழங்கப்படவில்லை என்ற குறை உண்டு.
      
இந்த முறை சாகித்ய அகாடமி விருது மூத்த எழுத்தாளர் திரு. ஆ. மாதவன் அவர்களுக்கு அளிக்கப்பட்டபோது அநேகமாக யாருமே அதைப் பழிக்கவில்லை. முற்றிலும் தகுதியான ஒருவருக்கு இவ்வளவு காலம் தாழ்த்தியாவது விருது வழங்கினார்களே என்ற மகிழ்ச்சிதான் பரவலாக இருந்தது. ஆனால் அதிலும் ஒரு குறை. முன்னர் செய்தது போலவே ஆ. மாதவன் அவர்களின் சிறந்த நாவல்களுக்கோ, சிறுகதைகளுக்கோ இந்த விருது அளிக்கப்படாமல் அவரது அதிகம் அறியப்படாத ஒரு கட்டுரைத் தொகுப்பிற்காக வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கான முக்கிய காரணம், நடப்பாண்டில் விருது பெறும் தகுதி கொண்ட நூல்கள் எவை என்பதை வரையறை செய்யும் விதிமுறைகள்தான்.

17 Feb 2016

காலகண்டம் – எஸ். செந்தில்குமார்


நூற்றைம்பது கால விஸ்தீரணத்தில் ஆசாரிமார் சமூகத்தின் வாழ்க்கை வரலாறாக, ஒரு காலப் பனுவல் போல் அமைந்திருக்கும் புதினம். பென்னி குக் அணை கட்ட தொடங்குவதற்கு முன்னாலிருந்து, நாடெங்கும் சுயராஜ்ய அலை எழுந்து, ‘வெள்ளையனே வெளியேறு’ என்று அறைகூவி, சுயராஜ்யம் பெற்று, எம்ஜியார், சிவாஜி, ரஜினி என்பது வரையிலான கால வரையறையில், தென் மாவட்டத்தில் போனூர் என்னும் சிறு கிராமத்தையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் களமாக கொண்ட புதினம்.  கிருஷ்ணப்ப ஆசாரி என்னும் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆசாரி வழி வந்த குடும்பத்தின் கதை.

சாமான்யர்களின் வரலாறு என்ற புள்ளியிலிருந்து இந்த நாவலை அணுகத் தொடங்கலாம்.  சாமானியன்   என்று சொல்லத் தொடங்கும் பொழுதே அரசியல் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருப்பினும் நாவலின் இலக்கு முற்றிலும் வேறான ஒன்றாக இருக்கிறது. படிக்கையில் திடீரென “இந்தச் சீட்டை எடு” என்று வாசகனைச் சீண்டும் அரசியல் இந்த நாவலில் இல்லை. இருப்பதெல்லாம் தினப்படி நிகழ்வுகள், வருடாந்திர திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், துக்கங்கள், பல்வேறு கதைமாந்தரின் ஆயுட்கால தினப்படி பரிவர்த்தனைகள், இருபதுக்கும் மேற்பட்ட கதைமாந்தர்தம் கனவுகள், ஆசைகள், தவறுகள், முடிவுகள், வலிகள். 



11 Feb 2016

ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்


அண்மையில் துறைவன் நாவல் எழுதிய எழுத்தாளர் க்றிஸ் அந்தோணியின் நேர்காணல் வாசிக்க நேர்ந்தது. நெய்தல் பரப்பை பற்றியும் பரதவர் வாழ்வை பற்றியும் நமக்கிருக்கும் பிழையான புரிதல் பற்றி குறைபட்டிருந்தார். என்ன செய்ய, நாம் நமக்குத் தேவையானதற்கு அப்பால் எல்லாவற்றையும் ‘ஸ்டீரியோடைப்’களாக பதிந்து வைத்திருக்கிறோம். 

Image result for ஆழி சூழ் உலகு

ஆனால் ஆழி சூழ் உலகு பரதவர்கள் பற்றிய நம் முன்முடிவுகளை உடைக்கிறது.  நம் மண்ணின் அனைத்து சமுதாயங்களைப் போலவே வரலாற்று நீரோட்டத்தில் பல விசைகள் பிணங்கியும் இணங்கியும் உருவாக்கிய திரளே இன்றுள்ள பரதவர்கள். அவர்களது வரலாற்றில் மறைந்திருக்கும் பல்வேறு முரண்களையும் வளர்ச்சி மற்றும் சிதைவுகளையும் இந்நாளைய பழக்க வழக்கங்கள் மற்றும் சமுதாய அமைப்பையும் விவரிக்கும் சமூக ஆவணம் என்று இந்த நாவலைச் சொல்லலாம். அது மட்டுமல்ல, ஆழி சூழ் உலகு பரதவர் கிராமங்களில் வாழும் பல்வகைப்பட்ட மனிதர்களின் தனித்துவத்தை விவரிக்கும் இலக்கியப் படைப்பாகவும் விளங்குகிறது  மனிதனை நுண்மையாகவும் அவன் வாழும் சமூகத்தின் உள் பொதிந்திருக்கும் வரலாற்று தடத்தை முழுமையாகவும் விவரிப்பதால்தான் இது தமிழில் எழுதப்பட்ட சிறந்த நாவல்களில் ஒன்றாகிறது..

9 Feb 2016

நடிகையர் திலகம் சாவித்திரி- கற்பனையையும் மீறிய வாழ்க்கை


தமிழக மக்களுக்கும் சினிமா நடிக நடிகையருக்கும் இடையான உறவை எளிதில் விளக்கிவிட முடியாது. ஒரு நடிகரை அல்லது நடிகையை ஏன் கொண்டாடுகிறார்கள் என்றோ, அப்படிக் கொண்டாடப்படுபவர்கள் எந்த கணத்தில் வரலாற்றின் மறதிக் குழிக்குள் வீசப்படுவார்கள் என்றோ, அப்படி வீசப்பட்டவர்கள் சில காலங்கள் கழித்து, அவர்களில் எவர் மீண்டும் கண்டடையப்பட்டுக் கொண்டாடப்படுவார்கள் என்றோ ஒருபோதும் கணிக்க முடியாது. இது ஒருபுறமிருக்க  ரசிகர்களின் ஆதரவு  இருந்தும், புகழின் உச்சத்தை அடைந்தும், அங்கு நிலைத்திருக்க முடியாமல் வீழ்ந்து  மறைந்தவர்களும் உண்டு. இந்த வரிசையில் முக்கியமான, அற்புத கலைஞர்களும் உண்டு. நடிகர்களில் தியாகராஜ பாகவதர், சந்திரபாபு ஆகியோர் உடனடியாக நினைவுக்கு வருகிறார்கள். இவர்கள் மீது மக்களுக்கு என்றும் ஒரு அனுதாபமும் அன்பும் உண்டு என்றாலும், அவர்களின் மறுவாழ்வுக்கு அது ஒருபோதும் துணை நிற்கவில்லை.


4 Feb 2016

அறிவியலும் அற்புதமும் - "உன் வாழ்க்கையின் கதைகள் மற்றும் பிற" - டெட் சியாங், சிறுகதைத் தொகுப்பு



Stories of Your Life and Others by Ted Chiang

நவரசங்களில் அற்புத-ரசத்திற்கென்று ஒரு தனியிடம் உண்டு; அழகியலில் மட்டுமல்ல, ஆன்மீகத்திலுமே. 'தனது பிரபஞ்சத்தின் சுபாவத்தையே உற்று நோக்கி வியப்பவன் சம்சாரத்தின் அற்ப சுக துக்கங்களில் எப்படி உழல முடியும்?' என்று முறையிடுகிறது ஒரு புராதனத் தாந்திரீக நூல். நவீன யுகத்தில், பிரபஞ்ச இரகசியங்களையும், மானுட சுபாவத்தின் வினோதங்களையும் நொடிதோறும் அவிழ்த்துக் காட்டிக்கொண்டே இருக்கிறது அறிவியல் /விஞ்ஞானம்; ஆனால் தகவல்களின் வெள்ளத்தில் நீந்திச்செல்லும் நமக்கு ஒரு நொடி நிதானமாக நின்று அந்த வெள்ளத்தின் விசையை வியக்கக் கூட முடிவதில்லை. ஊடகங்கள் உருவாக்கும் சம்சாரத்தின் மாயையை ஊடுறுவி அறிவியலை நேராகக் கண்டு கொள்ளும் வாய்ப்புகள் கடினமாகிக்கொண்டே இருக்கின்றன.

அறிவியல், தொன்மங்களைவிட வினோதமாக மாறிய பொழுது உதயமானது அறிவியல்-புனைகதை என்னும் இலக்கியவகை. கூடவே அறிவியல் சமய நம்பிக்கைகளின் போதாமைகளையும் நிரப்ப நேரிட்டது மேற்கில் துவங்கிய சரித்திரம். ஆனால் அடிப்படைவாதங்கள் தலைதூக்கிய நமது புது நூற்றாண்டில், வணிக விஞ்ஞானத்தின் போதாமைகளையும் சுமந்து நிற்கும் அறிவியல், புனைகதைகளில்கூட தனது அற்புதத்தை இழந்து நிற்பது நிதரிசனம்.

24 Jan 2016

நடன மங்கை – சுரேஷ்குமார் இந்திரஜித்


சுரேஷ்குமார் இந்திரஜித் எழுதி உயிர்மை வெளியிட்டுள்ள ‘நடன மங்கை’ எனும் சிறுகதை தொகுப்பில் மொத்தம் பத்து கதைகள் உள்ளன. எண்பது பக்க அளவில் சிறிய புத்தகம்தான்.  

தமிழ் தி இந்து தீபாவளி மலரில் அவருடைய ஒரு கதையை படித்தது நினைவில் இருக்கிறது. விஷ்ணுபுர விழா ஒன்றில் அவருடன் கலந்துரையாடல் நிகழ்ந்ததும் நன்றாகவே நினைவிருக்கிறது. கதைகளின் வழி அவர் எதை நிகழ்த்த முயன்றார் என விரிவாக பேசினார். குறிப்பாக, கதைகளில் இருந்து கதையை வெளியேற்றுவது, எனும் தனது தற்கால முயற்சிக்கு தான் வந்து சேர்ந்த பாதையை பற்றிப் பேசினார். 

Image result for நடன மங்கை


7 Jan 2016

சாயாவனம் - சா.கந்தசாமி




இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான பிணைப்பு, போராட்டங்கள் பற்றிய படைப்புகள் தமிழில் குறைவானவையே. அவ்வகையில் சாயாவனம் மிக நுட்பமான விவரங்கள் கொண்ட நாவல். சுதந்திரத்திற்கு முன்பான  தமிழக கிராமங்களில் இருந்த வாழ்வு முறைகள், சாதிய கட்டமைப்புகள், பொருளாதாரச் சிக்கல்கள், உறவுகள் பற்றிய சுவாரசியமான பதிவு . வாசிப்பவரை கானகத்தின் உள்ளே அழைத்துச் சென்று அதன் ரகசியங்களை அறிந்நு கொள்ள வைக்கும் அற்புத அனுபவத்தை அளிப்பது இப்படைப்பின் உண்மையான வெற்றி. ஆசிரியரின் குரல்  ஒலிக்காமல் வாசிப்பவரின் மனதில் கதைக்களம் விரிந்து ஒட்டுமொத்த தரிசனத்தைப் பெறுவது நல்ல இலக்கிய அனுபவம்.



மிகச்சிறிய வயதிலிருந்தே வாசிப்புலகில் ஆழ்ந்துவிட்ட எனக்கு இலக்கியங்கள் காண்பிக்கும் கனவுலகும் தரிசனங்களும் நுண்மைகளும் என்றென்றுமான மனவுலகு. ஒரு விதத்தில் புத்தகங்கள் மட்டுமே நான் வாழும் முழுமை என்று எண்ணுவதுண்டு. தீவிர வாசிப்புலகிற்குள் நான் வந்தபோது வாசித்த முக்கிய புத்தகங்களில் சாயாவனமும் ஒன்று. கானகமும் செடிகளும் என்னை மூழ்கடித்து என்னுள் பரவசத்தை உண்டாக்கிய நூல் இது. 



தஞ்சையின் ஒரு சிறு ஊரான சாயாவனத்திற்கு இலங்கையிலிருந்து வரும் சிதம்பரம் , அவ்வூரின் ஒரு வனத்தை கொஞ்சங் கொஞ்சமாக அழித்து கரும்பாலை ஒன்று கட்டுவதே கதைக்களம். சிதம்பரத்தின் அம்மாவின் சொந்த ஊர் அது என்றாலும் அவன் இலங்கையிலே பிறந்து வளர்ந்தவன் என்பதால் அனைத்து பழக்கங்களும் மனிதர்களும் அவனுக்கு விநோதமாகவே தெரிகின்றனர்.

5 Jan 2016

After the Crash – மிஷேல் புஸ்ஸி




பிரெஞ்சு எழுத்தாளர் மிஷேல் புஸ்ஸியின் ‘After the Crash’ ('Un avion sans elle'- ஆங்கில மொழியாக்கம் சாம் டெய்லர்) ஒரு த்ரில்லர்தான், ஆனால் அதில் நல்ல கற்பனையைப் பார்க்க முடிகிறது. கதையின் அடிப்படையில் முதற்கோள் (premise) ஒன்றுண்டு, அது இந்த நாவலை ஒருங்கிணைக்கும் சரடாய் அமைந்திருக்கிறது.

1980ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரிலிருந்து பாரிஸ் செல்லும் விமானம் ஒன்று பிரெஞ்சு- ஸ்வட்ஸர்லாந்து எல்லைப் பகுதியில் உள்ள மலை மீது மோதி வீழ்கிறது. அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் இறக்கின்றனர்- பிறந்த மூன்று மாதங்களே ஆன பெண் குழந்தை ஒன்றைத் தவிர. அவள் விமானத்திலிருந்து வெளியே தூக்கி வீசப்படுகிறாள். எலும்பை உறைய வைக்கும் குளிரில் அவளை எரியும் விமானத்தின் வெம்மை பாதுகாக்கிறது.



Related Posts Plugin for WordPress, Blogger...