A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

29 Dec 2015

சுஜாதாவின் '"சிறு சிறுகதைகள்"


சமீபத்தில் சுஜாதாவின் 'சிறு சிறுகதைகள்'  நூலை வாசித்தேன். முன்பு சுஜாதா 2003 வாக்கில் குமுதத்தில் தொடராக எழுதியதன் தொகுப்பு இது.  வெளியிட்டவர்கள் விசா ப்ப்ளிகேஷன்ஸ். புத்தகம்கூட சிறியதுதான் 96 பக்கங்கள். எளிதான, விரைவான வாசிப்பனுபவம்.



24 Nov 2015

வாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவியுலகம்

"கலைக்கு உள்ள விஷேசம் என்னன்னா, அது எதைத் தொட்டாலும் அதை (Formless) ஆக மாற்றி விடும்." – தேவதச்சன்{1} 


Image result for தேவதச்சன்

சில ஆண்டுகளுக்கு முன்னர் என் பிரியத்துற்குரிய எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்காக கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் ஒரு கூடுகை ஏற்பாடு செய்திருந்தார் ஜெயமோகன். தமிழின் முக்கிய கவிஞர்களை ஒரு சேர சந்தித்தது அதுவே முதல்முறை. அந்த கூடுகைக்கு சுகுமாரன், கலாபிரியா, தேவதேவன் ஆகியவர்களுடன் தேவதச்சனும் வந்திருந்தார். நவீன கவிதையை தயங்கித் தயங்கி பரிச்சயம் செய்துகொண்ட காலகட்டமும் அதுதான். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசித்து வைத்திருந்தேன். எவரிடமும் தனித்து பேசவும் கவிதை பற்றிய அபிப்ராயங்களை சொல்லவும் கூச்சம். எது கவிதை? அல்லது மடக்கி எழுதப்பட்ட வரிகள் எப்போது கவிதையாகிறது? குறிப்பிட்ட ஒரு கவிதையை ஏன் எல்லோரும் சிறந்த கவிதை என கொண்டாடுகிறார்கள்? அல்லது சிலவற்றை நிராகரிக்கிறார்கள்? என குழம்பி திரிந்த காலமது (இப்போதும் பெரிதாக மாறிவிடவில்லை. மோசமான கவிதைகளை இனங்காண முடியவில்லை என்றாலும், ஓரளவு நல்ல கவிதைகளை அடையாளம் காண முடிகிறது). அந்தக் கூடுகை கவிதை குறித்தான எனது புரிதல்களை விரிவாக்கியது. தேவதச்சன் தமிழின் முக்கியமான கவிஞர். கோவில்பட்டியில் இயங்கிய முக்கியமான இலக்கிய மையம் என்பதைத் தாண்டி அவருடைய கவிதைகளை ஒருசேர வாசித்தது விஷ்ணுபுர விருது அறிவிப்பிற்கு பின்னர் தான். ஒட்டுமொத்தமாக வாசிக்கும் போது நிறைவான அனுபவத்தை அளித்தது. 

21 Sept 2015

தேக்கடி ராஜா - பதிப்ப​கங்களுக்கு ஒரு வேண்டுகோள்



ஆம்னிபஸ் பதிவுகள் குறித்து வரும் வாசகர் கடிதங்களை தளத்தில் இடுகையிடும் வழக்கம் இதுவரை இல்லை. ஆனால் ஒரு அவசர, அத்தியாவசிய நிலையை உத்தேசித்து இப்போது செய்யப்படுகிறது.

ஆம்னிபஸ் தளத்தில் ஒரு குறுகிய காலம், நண்பர் சரவணன் தொடர்ந்து சில பதிவுகளை எழுதினார்- முதல் பதிவைப் பார்க்கும்போதே, "இது தேர்ந்த கை" என்பது தெரிந்துவிட்டது அந்த ரகசியம் இன்றும் என்னோடு  இருக்கிறது.

அவரது பதிவுகளில் ஒன்று, எம். பி. சுப்ரமணியன் எழுதிய "தேக்கடி ராஜா" நாவலின் அறிமுகக் கட்டுரை.

அதன் பின்னூட்டத்தில், "சார்! எனக்கு தேக்கடி ராஜாவின் பிரதி/ஒளிநகல் கிடைக்குமா?," என்று கே. ரமேஷ் பாபு கேட்டிருந்தார் .

"வருகைக்கு நன்றி திரு. ரமேஷ் பாபு. உங்கள் முகவரியை எனக்கு மின்னஞ்சல் செய்தால் ஜெராக்ஸ் பிரதி அனுப்பி வைக்கிறேன். என் மின்னஞ்சல் முகவரி என் புரொஃபைல் பக்கத்தில் உள்ளது. நன்றி!", என்று பதிலிறுத்தார் சரவணன். அது அத்தோடு போயிற்று.

4 Sept 2015

காதுகள் – எம் வி வெங்கட்ராம்


காதுகள்

அகச்சந்தைக்கும் புறச்சந்தைக்கும் இடையே உள்ள “நான்”.ஆசிரியரின் தன்வாழ்க்கைக் குறிப்பும் அகவய அனுபவங்களும் கலந்த ஒரு புதினம். நிறைவை அடைய தொடர்ந்து முயன்ற ஒரு தனிமனிதனின் வேட்கையை சாட்சியாய் நின்று பார்த்துப் பதிவு செய்த இலக்கியப் பிரதி.

எந்த ஒரு ஆன்மீக மனமும் எழுப்பும் எளிய கேள்விகள் இவை - கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம், புலனடக்கம் குறித்த ஐயங்கள், சொந்த அனுபவங்கள் உணர்த்தும் விஷயங்களுக்கும், தத்துவக் கோட்பாடு சொல்லும் உச்ச தரிசனங்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி-. இந்தப் புதினம் இவ்வனைத்து தளங்களிலும் வாசகனைச் சிந்திக்க வைக்கிறது.



31 Aug 2015

Tuesdays with Morrie - Mitch Albom


தினமும் அலுவலகத்துக்கு வெகுதூரம் பயணம் செய்யவேண்டியதாக இருப்பதால் இப்பொழுதேல்லாம் பெரும்பாலும் ஆடியோ புத்தகங்கள்தான்  துணை.

அச்சடித்த புத்தகங்கள் போலின்றி இதில் குறைந்த நேரத்தில் அதிகம் பெற முடிகிறது. எல்லாம் வல்ல மலையாள பகவதி அருளால் பெரும்பாலான நேரம் நல்ல புத்தகங்களாகவே எனக்கு அமையும்.   சமீபத்தில் அப்படி நான் கேட்ட ஆங்கிலப் புத்தகம் மோரியுடனான செவ்வாய்க் கிழமைகள் ('Tuesdays with Morrie').மொத்தமாக மூன்றரை மணி நேரம்தான்.

இது மோரி ஸ்க்வார்ட்ஸ் (Morrie Schwartz) எனும் 78 வயதான சமூகவியல் பேராசிரியரின் தன்நினைவுக் குறிப்பு நூல் (Memoir). இதை எழுதியவர் அவர் மாணவர் மிட்ச் அல்போம் (Mitch Albom).

வாழ்வின் மிகப்பெரிய படிப்பினைகளை, இறக்கும் தருவாயில் உள்ள பேராசிரியர் மோரி தன் மாணவரிடம் சொல்வதாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.



8 Aug 2015

The Buried Giant - Kazuo Ishiguro


ஆர்த்தர் மன்னரின் காலத்தில் ப்ரிட்டன் (Britons) – சாக்ஸன் (Saxons) சமூகத்தினர் இடையே நடந்த போரில் சாக்ஸன்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். போருக்குப்பின் இரு சமூகத்தினரும் ஒன்றாக வாழும் சூழலில் நடக்கும் கதை.

அந்த நிலப்பரப்பில் வாழ்வோர் அனைவருமே ட்ராகன் ஒன்றின் மூச்சில் வெளிப்படும் ‘மிஸ்ட்’டால் பெரும் மறதிக்கு ஆளாகியிருக்கின்றனர்.

ஆக்ஸில், பியாட்ரிஸ் என்ற வயதான ப்ரிட்டன் தம்பதிகள் தங்கள் மகனைத் தேடி தம் கிராமத்திலிருந்து ஒரு சாக்ஸன் கிராமம் வழியாக வேறொரு பிரிட்டன் கிராமத்துக்குப் பயணப்படுகிறார்கள்.

விஸ்டன் என்ற சாக்ஸன் வீரன் தன் மன்னரின் சில கட்டளைகளை நிறைவேற்றும் பொருட்டு அதே பாதையில் பயணிக்கிறான்.

எட்வின் என்ற சாக்ஸன் சிறுவன் சிறுவயதில் தன் தாயை இழந்தவன், அவளை மீட்கும் எண்ணத்தோடிருக்கும் அவனைப் பெரிய வீரனாக்க வேண்டுமென எண்ணி விஸ்டன் தன்னோடு கூட்டிச் செல்கிறான்.

ஆர்த்தரின் நைட்களில் (Knight) மிச்சமிருக்கும் ஒரே நபரான சர் கவாய்ன் வயதானாலும் தன் மன்னனிட்ட பணியைத் தொடர்ந்து செய்தபடி சுற்றி வருகிறார்.

இவர்களல்லாமல், இவர்கள் கடந்து செல்லும் கிராமங்களின் தலைவர்கள், மதகுருக்கள் இப்படிப் பல சிக்கலான கதாபாத்திரங்களின் பாதைகள், குறிக்கோள்கள் குறுக்கிட்டுக் கொள்கின்றன. சிலர் நினைவின் சூதால் தங்கள் குறிக்கோளைத் தெளிவாக அறியாது பயணத்தின் வழியில் தொடர, சிலர் வெவ்வேறு காரணங்களால் மற்றவரிடம் உண்மை நோக்கத்தை வெளிப்படுத்த இயலாது பயணிக்கின்றனர்.


12 Jun 2015

கடற்துளி- தெளிவத்தை ஜோசப்பின் 'குடை நிழல்'


தீவிர இலக்கியம் எனும் கலை வடிவுக்குள் நுழைவதற்கு பல வாசல்கள். பால்யம் தொட்டு சிறுவர் இலக்கியம் துவங்கி, தொடர் வாசிப்பினூடே   தீவிர இலக்கியத்துக்குள் நுழைவது ஒரு வாசல்.

இயக்கங்களின் வகுப்புகள் வழியே இலக்கியத்தில் பலர் நுழைந்தது ஒரு காலம். 

நேரடியாக பொழுதுபோக்கு வாசிப்பில் துவங்கி சுஜாதா, பாலகுமாரன் சுட்டுதலின் வழியே தீவிர இலக்கியத்தின் அறிமுகத்தை  தொண்ணூறுகளில் பலர் அடைந்தனர்.

கணினி வந்தபிறகு வாசிப்பிலும், புத்தக அச்சாக்கங்களிலும் சீரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. இரண்டாயிரத்துக்குப் பிறகு இணைய வாசிப்பின் வழியே தீவிர இலக்கியத்துக்குள் நுழையும் புதிய வாசல் திறக்கிறது.

இந்த புதிய தலைமுறை வாசகர்கள் இலங்கை எழுத்தாளர்கள் என  முதன்மையாக அறிவது மூவரை. முதலாவதாக, அ. முத்துலிங்கம்.    சரளமான எழுத்தாலும், நுட்பத்தாலும், கனிந்த நகைச்சுவையாலும்  தனித்த இடம் வகிப்பவர். ஆனால் இவரது படைப்புலகில் இலங்கையின் போர்ச் சூழல், போரில் சிதையும் குடும்பம், புலம்பெயர் வாழ்வின் துயரம், இவற்றை நேரடியாகப் பேசும் இடம் மிகக் குறைவே.

ஷோபா சக்தியின் படைப்புலகில் இலங்கையின் வரலாற்று ஒழுக்கில் முக்கிய பங்காற்றிய வன்முறை இயக்கங்களின், அதற்குள் இயங்கும் அதிகார ஆட்டங்களின், அபத்த முகங்களை காண முடியும்.

எஸ்பொ. அவரது எழுத்துக்களால், அரசியல் செயல்பாடுகளால் ஈழத்து ஜெயகாந்தன் என்றே இங்கு வகுக்கப்பட்டிருக்கிறார்.

செழுமையான ஆளுமைகள் இன்னும் பலர் இருப்பினும், தமிழக வாசகர்கள் அதிகமும் அறியாத தெளிவத்தை ஜோசப் விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா வாயிலாக இங்கு கவனம் பெற்றார்.



4 Jun 2015

அவஸ்தை - யு ஆர் அனந்த மூர்த்தி


கடந்த பயணத்தில் வாசிக்க கைக்குச் சிக்கிய ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து வழமை போல் பைக்குள் பத்திரப்படுத்தினேன். நெல்லை- கடலூர் பன்னிரண்டு மணி நேர பகல் பாசெஞ்சர் பயணம். புத்தகத்தை எடுத்தேன். யு ஆர் அனந்தமூர்த்தியின் அவஸ்தை நாவல்.

இந்திய பயணத்தில் ஒரு முறை நண்பர்கள் அனைவரும் ஒவ்வொரு மாநிலமாக தாண்டத் தாண்ட அந்த நிலத்தின் எழுத்தாளர்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். இப்போது பேசிக் கொண்டிருக்கையில் ஷிமோகா அருகில் இருந்தோம். ஜெயமோகன் அனந்த மூர்த்தி அவர்களை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். எனக்கு இங்கே மெல்லிய பேச்சொலி கேட்டது.  அவர் குரல் எப்படி இருக்கும் தெரியாது. ஆனால் அவர் நினைவுடன் எழுந்து வந்தான் அவஸ்தை நாவலின் கிருஷ்ணப்பா. சில வருடங்கள் முன்பு கடினமான மொழி பெயர்ப்பில் அதை வாசித்திருக்கிறேன். இப்போது வாசிப்பது காலச்சுவடு வெளியீடாக  நஞ்சுண்டன் மொழி பெயர்ப்பு.

12 Apr 2015

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.- ஜெயகாந்தன்


"உங்களுக்கு நான் ஏதோ பழமைவாதம் பேசுவது போலத் தோன்றும்.. நீங்கள் சொல்லுங்கள், அதோ அந்த விளக்கு அழகாயில்லை?.. வெளிச்சத்துக்கு அது போதாது? சரி. உங்களுக்கு ஒரு வேளை அது அழகாக இல்லாமலும் இருக்கலாம். நீங்கள் செய்கிற வேலைக்கு அந்த வெளிச்சம் போதாமலும் இருக்கலாம். ஆனால் எனக்கு அது போதும். எனக்கு அதுதான் வேண்டும். என் வீட்டில் எனக்கு இந்த வெளிச்சமும் இந்த அமைதியும் நிலவட்டும்"- - - ஹென்றி, ஒரு மனிதன் ஒரு வீடு  ஒரு உலகம்.

ஜெயகாந்தனின் "ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்" நாவலைப் படிக்கத் தொடங்குமுன் முற்போக்கு எண்ணங்களில் வலுவாக ஊன்றிய படைப்பு எனும் எண்ணம் மட்டுமே எனக்கு இருந்தது. குறிப்பாக, சமூக முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகளாக அமையும் எண்ணங்களை, தனித்தன்மை வாய்ந்த கதாபாத்திரங்களைக் கொண்டு தகர்க்கும் கதைப்போக்கு கொண்டிருக்கும் என நினைத்தேன். 



15 Mar 2015

அறிவிப்பு: இலக்கிய விமரிசகர்களுக்கு காலச்சுவடு அளிக்கும் இலவச நூல்கள்

காலச்சுவடு வெளியிடும் புத்தகங்களை அறிமுகம்/ மதிப்பீடு/ விமரிசனம் செய்ய விரும்பும் எழுத்தாளர்களுக்கு புதிய வெளியீடுகளை அன்பளிப்பாய் வழங்க முன்வந்துள்ளது காலச்சுவடு நிறுவனம்.

இது குறித்து காலச்சுவடின் அஞ்சல்-

நண்பர்களுக்கு,

காலச்சுவடு வெளியீடுகளின் வாசகப் பரப்பை அதிகரிக்கும் பொருட்டும், கருத்துப்  பரிமாற்றங்களை மேம்படுத்தும் நோக்கத்தோடும்  சில புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளோம். அவற்றில் முதலாவதாக, இணையத்தில் காலச்சுவடு வெளியீடுகளை  அறிமுகம் /விமர்சனம்  எழுதும் நண்பர்களுக்கு எமது புதிய வெளியீடுகளை அன்பளிப்பாக வழங்க உள்ளோம்.

தமது வலைப்பூக்களில், வேறு தளங்களில் எமது புத்தகங்கள் குறித்து எழுதியிருப்பவர்கள், அவற்றின் சுட்டியுடன் எமது மற்ற வெளியீடுகளில் தமக்கு ஆர்வமுள்ள நூல்களைக் குறிப்பிட்டு  மின்னஞ்சலில்  தெரிவிக்கவும். புதிதாத எழுத விரும்புபவர்களும் தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் விரும்பும் நூல்களின் கையிருப்பு  போன்றனவற்றை கருத்தில்கொண்டு முடிந்தவரை அவற்றை அனுப்பிவைப்போம்.

உங்கள்  ஆர்வத்தையும் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.

இந்த செய்தியை தங்கள் பதிவர்கள், நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளவும்

நன்றி

Regards,
காலச்சுவடு | kalachuvadu@kalachuvadu.com

23 Jan 2015

பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் 4 - ஷாந்தி


கேள்வி: இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் அன்று எழுதிய மதிப்பீட்டில் இன்று என்ன சேர்ப்பீர்கள்?


எனது அன்றைய மதிப்பீட்டில் எந்த மாற்றமும் செய்ய தோன்றவில்லை.பெருமாள் முருகன் படைப்புகள் ,கதைகள் எப்போதும்போல் மனதிற்கு நெருக்கமாகவே இருக்கிறது .



கேள்வி: புனைவுகளைக் கண்டு அஞ்சுபவர்களுக்கும் ஆத்திரப்படுபவர்களுக்கும் நீங்கள் விடுக்கும் வேண்டுகோள் என்னவாக இருக்கும்?


புனைவுகளில் வரும் கதை மாந்தர்களும் ,கதைக் களமும்,காலமும் நம் கற்பனையை எளிதாக்கி கதையின் தீவிரத்தை /செறிவை(intensity) உணர்த்த துணை புரிபவை ,அவை அப்படித்தான் பார்க்கப்பட வேண்டும் என நினைக்கிறேன் .புனைவு என்றானபின் இவ்வகை ஆராய்சிகள் தேவையற்றவை என்றே தோன்றுகிறது. நிஜ வாழ்வில் அவலங்கள் ஏதுமே இல்லை என்பதுபோல் ஒரு புனைவிற்கு அஞ்சுவதும் ,ஆத்திரப்படுவதும் அவசியமற்றது

21 Jan 2015

மொட்டு விரியும் சத்தம்- பி. லங்கேஷ், தமிழாக்கம் கா. நல்லதம்பி

நண்பர் ஒருவர், விழிகள் பதிப்பகம் பதிப்பித்துள்ள, "மொட்டு விரியும் நேரம்", என்ற புத்தகத்தை, "இது ரொம்ப நல்ல மொழிபெயர்ப்பு" என்ற பரிந்துரையோடு கொடுத்தார். கன்னட மொழியில் பி. லங்கேஷ் எழுதிய "நீலு காவ்ய" மூன்று தொகுப்புகளாக வந்திருக்கின்றன. இவற்றில் சில தேர்ந்தெடுத்த கவிதைகளை கா. நல்லதம்பி மொழிபெயர்த்து பதிப்பித்திருக்கிறார்கள். குறுகிய வடிவம் கொண்ட இந்தக் கவிதைகள், நல்லதம்பியின் அழகிய கருப்பு வெள்ளை புகைப்படங்களின் பின்னணியில் அச்சிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் பதிப்பாளர் தி. தி. நடராசனின் பதிப்புரையும் புத்தகத்தை அலங்கரிக்கிறது ("ஆங்கிலத்திலிருந்து மூன்று நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டோம். மூன்று நூல்களில் இரண்டு நூலுக்குத் தமிழ்நாட்டரசின் சிறந்த நூலுக்கான விருது கிடைத்தது"). 


16 Jan 2015

பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் 3 - பைராகி




கேள்வி- இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் அன்று எழுதிய மதிப்பீட்டில் இன்று என்ன சேர்ப்பீர்கள்?

சமூகக் கட்டுப்பாடுகளையும் மனித நாகரிக வளர்ச்சி எனும் மாயவலையினாலும் வெறுப்பாகி வரும் சில நிகழ்வுகளையும் அவற்றைக் கையாளும் விதங்களைப் பற்றியும் இக்கதைகள் சிந்திக்க வைப்பதாக எழுதியிருந்தேன். நீர் விளையாட்டு தொகுப்பில் வரும் புகலிடம் எனும் கதை என்னை அப்படி எழுத வைத்திருக்கலாம். நதியில் விளையாடும்போது தீண்டாமை தன்னைத் தீண்டுவதில்லை என உணரும் சிறுவன் நதியில் தனது இருப்பை அறிகிறான்.

திட்டமில்லாமல் நடக்கும் நிகழ்வுகள் புது உலகைத் திறக்கும் சக்தி படைத்தவை. அவரது புனைவின் தன்மையும் அப்படிப்பட்டதே. புதிதாக எதுவும் சேர்க்கத் தோன்றவில்லை.

15 Jan 2015

பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் 2 - வெ சுரேஷ்




கேள்வி- இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் அன்று எழுதிய மதிப்பீட்டில் இன்று என்ன சேர்ப்பீர்கள்?

பதில்- சாதியும் நானும் தொகுப்பு பற்றி எழுதியபோதே அந்த நூல் பெரியாருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டதை ஒரு முரண் என்று  குறிப்பிட்டிருந்தேன். அநேகமாக அந்த நூலில் இருந்த கட்டுரைகள் எல்லாமே கொங்கு மண்டலத்தில் உள்ள ஆதிக்கச் சாதிகளால் பாதிப்புக்கு ஆளாகும் தாழ்த்தப்பட்ட சாதியினர் எழுதியது. பெரியார் மற்றும் திராவிட இயக்கத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் என்று தாம் கருதிய பிராமணரல்லாத சாதியினரின் ஆதிக்கத்தை வேண்டியே இயக்கம் நடத்தினர். அவ்வப்போது தலித் மக்களுக்கு ஆதரவாக வாய் வார்த்தைகள் சொன்னதோடு சரி, செயல்பாட்டு அளவில் வேகம் இல்லை. இதை கோவை அய்யாமுத்துவின் சுயசரிதையில் காணலாம். மேலும், அரசியல் சட்டத்தில், அம்பேத்கர் தலித் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதை பெரியார், அவர் தன் மக்களுக்கு வசதி செய்து கொண்டுவிட்டார், என்றே விமர்சிக்கிறார். பெரியாரின் other என்பதில்தான் தலித் மக்களும் இருந்தனர். அவர் வேண்டியதெல்லாம், இடையில் ஒரு 100 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக, இன்றுள்ள OBC பிரிவினர் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பிராமணர்களிடம் இழந்திருந்த முற்றாதிக்கத்தை மீட்பது குறித்துத்தான். பெரியாரும் திராவிட இயக்கத்தவரும் ஊட்டி வளர்த்த இந்தச் சாதி வெறிதான் இன்று பெருமாள் முருகனையும் தாக்கியிருக்கிறது. இந்தக் கோணத்திலிருந்து, இந்தப் புரிதல் அவர் தொகுத்த சாதியும் நானும் நூலில் உள்ள அவரது முன்னுரையில்  இல்லை என்பதையே நான் மீண்டும் குறிப்பிடுவேன்.

பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் 1 - அஜய்





ஆளண்டா பட்சி நாவல் குறித்து மதிப்பீடு எழுதிய அஜய் அளிக்கும் பதில்கள்-


கேள்வி- இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் அன்று எழுதிய மதிப்பீட்டில் இன்று என்ன சேர்ப்பீர்கள்?

பதில்- மன்னிக்க வேண்டும், அந்த நாவல் பற்றி எழுதியதை இப்போது மீண்டும் பேச விரும்பவில்லை, இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதே இரக்கமற்ற செயலாகத் தெரிகிறது. தற்போது பெருமாள் முருகனுக்குத் தேவை, சுதந்திரமாய் இருப்பதற்கான வெளி. இனியும் நாம் பெருமாள் முருகன் என்ற தனியொரு எழுத்தாளரின் பிரச்சினையாக இதை அணுகிக் கொண்டிருக்கக் கூடாது, மனித உரிமைகள்/ கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதலாகக் கருதியே வினையாற்ற வேண்டும்.

கேள்வி - புனைவுகளைக் கண்டு அஞ்சுபவர்களுக்கும் ஆத்திரப்படுபவர்களுக்கும் நீங்கள் விடுக்கும் வேண்டுகோள் என்னவாக இருக்கும்?

பதில்- பெருமாள் முருகனின் படைப்பை முழுமையாக ஒரு முறை வாசித்துப் பார்க்கும்படி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன், சாதீய சக்திகளால் விநியோகிக்கப்படும் ஒன்றிரண்டு பக்கங்களைப் படித்து உங்கள் முடிவுகளை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். முழுதும் படித்து, அவதூறாக நீங்கள் கருதும் பகுதிகள் எப்படிப்பட்ட சூழலில் இடம் பெறுகின்றன என்பதைப் புரிந்து கொண்டு, அதன் பின்னர் தங்கள் எதிர்ப்பு நியாயமானதுதானா என்று அவர்கள் பரிசீலிக்க வேண்டும். அப்படி ஏதேனும் தவறாக எழுதப்பட்டிருப்பதாக அவர்கள் கருதினால், நாவலில் ஏற்றுக் கொள்ள முடியாத பகுதிகளை மறுத்து கட்டுரைகளும்/ புத்தகங்களும் எழுதலாம், அறிவுத் தளத்திலேயே உங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாம். 

Related Posts Plugin for WordPress, Blogger...