A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label குறுநாவல். Show all posts
Showing posts with label குறுநாவல். Show all posts

17 Jun 2013

வெண்ணிற இரவுகள் – ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி


ரஷ்ய இலக்கியங்களைப் படிக்கவேண்டுமென்று ஒரு ஆசை சில நாட்களாகவே இருந்து கொண்டேதான் இருக்கிறது. பொதுவாகவே எல்லோரும் சொல்லிச் சிலாகிக்கும் ஒரு பெயர் தஸ்தயேவ்ஸ்கி. அதில் அப்படி என்னதான் இருக்குமென அறியும் ஆர்வம் எந்தக்கணம் உட்புகுந்ததெனத் தெரியவில்லை. முழுக்க முழுக்க லேபிளை மட்டுமே வைத்து வாங்கிய சரக்கு இது. ஒரு குறு நாவல்தான் எனினும் இப்புத்தகம் தந்த தாக்கம், ஒரு உணர்வு சமீபத்தில் நான் வாசித்திருந்தவற்றில் எதிலும் கிடைத்திருக்கவில்லை.

நிறைய நண்பர்கள் வேண்டும், பெண்கள் நம்மிடம் சரி சமமாக, தோழமையுடன் பேச வேண்டும். இதெல்லாம் பொதுவாகவே இளைஞர்களுக்கு இருக்கும் ஆசைகள், விருப்பங்கள். ஆனால் நாம் காணும் அனைவருமே ஒருபோல இருப்பதில்லை. நாமும் எல்லோரிடமும் ஒரேபோல் நடிப்பதுமில்லை. எல்லோரிடமும் இருக்கும் அவரவர் சுயம் வெளிப்படும் தருணங்களில் உடனிருப்பவர் எவ்வாறு பதில்வினையாற்றுகிறார் என்பதில்தான் நட்பு காதல் போன்ற மற்று உறவுகளும். மனம் முழுக்க அன்பும், தம்மை வெளிப்படுத்திக் கொள்ளத் தெரியாத ஒரு சுபாவமும் கொண்டவருக்கு இப்படியாக உறவுகள் அமைவது மிகச் சிரமமே.

இந்தக் கதையில் தஸ்தாயேவ்ஸ்க்கியின் நாயகன் இதுபோலொருவன் தான். பீட்டர்ஸ்பர்க் நகரில் எட்டு ஆண்டுகளாக வசித்தும் ஒருவரைக் கூட நண்பராக பெற்றிடாத ஒருவன். தன்னைத்தான் சோகத்திலோ அன்று கண்ட எதோ ஒரு காட்சியின் மகிழ்ச்சியிலோ ஆழ்த்திக்கொண்டு தனக்கு யாரும் நண்பர்களாய் இல்லததினால் அங்கிருக்கும் தெருக்களில் நடமாடும் ஒவ்வொருவரையும் கவனித்தவாறே, அந்த இயற்கையில் தன்னை கரைத்துக் கொண்டு நடமாடுகிறான். எல்லோரும் அவரவர் கிராமத்துக் குடிலுக்குச் செல்வது இவனுக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. எல்லோரும் தன்னைப் பிரிவதாக எண்ணிக் கொள்கிறான். “என்னுடன் வா” என்றழைக்க யாருமில்லாத தனிமை இவனை மேலும் நோகடிக்கிறது.

இது போலான ஒரு இரவு நேர நடை பயணத்தில் இளம் பெண்ணொருத்தியைக் காண்கிறான். அவள் அழுதவாறு இருக்கிறான். ஆறுதல் சொல்லலாமா என்றெண்ணியவன் குறைந்தபட்சம் அவள் ஏன் அழுகிறாள் என்றாவது கேட்கலாமென நெருங்கிச்சென்று தயக்கத்தினால் தன் முடிவைக் கை விடுகிறான். அவள் அழுதவாறே நடந்து செல்கிறாள். ஒரு முரடனொருவன் அவளைத்தொடர்ந்து செல்ல இவன் அவளை காப்பாற்றுகிறான். முதல்முறையாக ஒரு பெண்ணிடம் பேசும் வாய்ப்பையும் பெறுகிறான். அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். அவள் அழுத காரணத்தைக் கேட்கிறான். ஆறுதல் கூறுகிறான். தான் அவளுடன் பேசியதில் மகிழ்ச்சி என்றும், இதுவரையிலும் பெண்களிடம் பேசிப் பழகியதில்லை என்றும் கூறுகிறான். அவளுக்குப் பிடித்தமானவனாக இருக்க விரும்புவதாகவும் கூறுகிறான். நாளையும் அதே இடத்தில் அவளுக்காக காத்திருப்பதாக சொல்கிறான். தன்னைக் காதலிக்ககூடாது என்னும் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டால் அவளும் அடுத்தநாள் அங்கு வருவதாக் உறுதியளிக்கிறாள். இப்படியாக முதல் நாள் இரவு முடிகிறது.

அடுத்த நாள் அவள் வருகிறாள். அவள் வருகையில் மகிழ்வுற்றவன் தன்னைப்பற்றி அவளிடம் கூறுகிறான். ஒரு நல்ல நண்பர்களைக்கூட பெற்றிடாதவன் என்றும் தன் வாழ்க்கை நிலையைப்பற்றியும் தனிமையின் கொடுமையில் வாழ்வதாகவும் கூறுகிறான். அவள் தன்னை நாஸ்தென்கா என அறிமுகப்படுத்திக் கொள்கிறாள். தனக்கு ஆதரவென்று ஒரு பாட்டி மட்டும்தான் என்றும், கண் தெரியாத பாட்டி, நாஸ்தென்கா பெரியவளானதும் தன் ஆடையை அவள் ஆடையோடு ஊக்கு குத்திக்கொண்டு எங்கும் போக விடமாட்டாள் என்றும் புத்தகங்கள் படிக்க கூட அனுமதிப்பதில்லை என்றும் கூறுகிறாள். அந்த சமயத்தில் தங்கள் வீட்டு மாடியில் குடியிருந்த ஒருவரைத் தான் நேசித்ததாகவும், ஒரு வருடத்திற்குப்பின் வந்து தன்னை அழைத்துப் போவதாய் சொல்லியிருக்கிறார் என்றும் அவருக்காக காத்திருப்பதாகவும் சொல்கிறாள். அவர் இன்னும் வராததை எண்ணி வருந்துகிறாள். அவருக்கு ஒரு கடிதம் எழுதித்தந்தால் அவரிடம் கொண்டு சேர்ப்பதாகச் சொல்கிறான் இவன். அவளுக்குப் பிடித்தமானவனாக, ஒரு நண்பனாக இரண்டாம் இரவும் முடிகிறது. பகலிலும் கூட அடர்ந்த தனிமை இருளில் வசித்திருப்பவனுக்கு தன் வாழ்வில் ஒரு பெண்ணின் வருகை, இரவில் அவளின் சந்திப்பு அவனது இரவுகளை உறக்கமற்றதாக்குகிறது. வெறும் இரவுகள் அவனுக்கான வெண்ணிற இரவுகளாகிறது.

மூன்றாம் இரவும் இருவரும் சந்திக்கின்றனர். அவருக்காக காத்திருக்கின்றனர் இருவரும். அவர் அன்றும் வரவில்லை. இருவருக்குமிடையேயான புரிதல் இன்னும் அதிகரித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அவள் கூறுகிறாள் “என்மீது நீங்கள் காதல் கொண்டுவிடாமல் இருப்பதால்தான் நான் உங்களை மிக நேசிக்கிறேன்”. அவளறியாமலே அவளுக்கு அவன் மீது ஒரு பற்றுதல் வந்து விடுகிறது. தானும் அவ்வாறு உணர்வதாய்க்கூறி இருவரும் நாளை சந்திப்பதாய்க் கூறி பிரிகின்றனர்.

நான்காம் இரவும் வருகிறது. இத்தனைக்குப்பிறகு அவளின் விம்மல்கள் கண்டு அவன் நொடிந்து போகிறான். அவளைக் காதலிப்பதாக உரைக்கிறான். பல குழப்பங்கள் அவளை சூழ்கின்றன. இருந்தும் ஒரு தீர்க்கமான முடிவெடுக்கிறாள். அந்த சமயத்தில் அவளின் காதலன் வந்து நாஸ்தென்காவை அழைத்துச்செல்கிறான்.

இருவிதமான முடிவுகளே சாத்தியம் எனும்போது, அவை தெரிந்திருந்தும் அந்த நான்காம் இரவின் பக்கங்களைப்படிக்கும்போது ஏதோ ஒரு கோழிக்குஞ்சினை கையில் வைத்திருப்பதான ஒரு பரபரப்பு உணர்வு. இறுக்கிப்பிடித்தால் இறந்துவிடுமோ என்றொரு மனநிலை. அவள் காதலனோடுதான் சேர்கிறாள் என்றபோதும், இவன் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டதை எண்ணும் தருணங்களில் என்னையறியாமல் கலங்கி விட்டேன். இதை வைத்து எத்துனையோ சினிமா பார்த்திருப்போம். இருந்தும் கூட எழுத்தில் அந்த வலியை உணரச்செய்தது மிக அருமை. அதுவும் அவள் காதலன் முன்பாக இவனை வந்து இறுக்க அணைத்துக்கொள்வாள் நாஸ்தென்கா. அப்போது வந்த உணர்வை எழுத்தில் சொல்வது மிகக்கடினம். உணரப்பட வேண்டியதது.

நாஸ்தென்கா, எங்கோ பீட்டர்ஸ்பெர்க் நகரில் உன்னையே எண்ணி வாழ்ந்த ஒருவனின் ஆன்மாவாக என்னை இப்போது கருதுகிறேன். உன்னை நான் ஒருபோதும் காதலித்து விடக்கூடாது என்று சொல்லி எந்தன் ஏமாற்றத்தை தடுத்ததிலாகட்டும், பெண்கள் குறித்த எனது தாழ்வு மனப்பான்மையை உடைத்தெறிந்து என்னை ஓர் ஆணாக உணரச்செய்ததிலாகட்டும், எந்தன் தனிமைப் பிணியைப் போக்கி என்றும் மறவா இனிய நினைவுகளைக் கொடுத்ததிலாகட்டும், எந்தன் காதலை உணர்ந்து இறுக அணைத்த அணைப்பிலாகட்டும், எனது அருமை நாஸ்தென்கா இன்றும் இப்போதும் ஒவ்வொரு கணமும் என் நினைவுகளில் நீ நிழலாடுகிறாய், உன்னை அதிகமதிகம் நேசித்துக்கொண்டேதான் இருக்கிறேன்.

குறுநாவல் | ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி | மொழிபெயர்ப்பு | ரா. கிருஷ்ணையா | நியூ செஞ்சுரி வெளியீடு | பக்கங்கள் 94 | விலை ரூ. 70

இணையத்தில் வாங்க: டிஸ்கவரி

19 May 2013

கவிழ்ந்த காணிக்கை - பாலகுமாரன்


சினிமாவாக எடுத்தால் கௌரவம் படத்தின் பழிவாங்கும் படலம் இல்லாத இரண்டாம் பாதிதான் ‘கவிழ்ந்த காணிக்கை’. அப்பாவிடம் சவால் விட்டு ஜெயிக்கும் சின்னஞ்சிறு பிள்ளைக் கதைதான் என்றாலும் சிவாஜி போல கண்கள் சிவக்க, கன்னக்கதுப்புகள் அதிர சவால் விடும் அப்பாவெல்லாம் இல்லை ஆதிச்சப் பெருந்தச்சன். சுருள்முடியைச் சுற்றிக் கொண்டு கண்களால் சவால் விடும் இன்னொரு சிவாஜியும் இல்லை மகனான சோமதேவன்.  தஞ்சை பெரிய கோயில் கட்டுமானம் நிகழும் ராஜராஜசோழனின் வரலாற்றுக் காலகட்டத்தில் நடக்கிறது கதை. 

தஞ்சைப் பகுதியானது பாறைகளின் பிரதேசமன்று. தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து பாறைகள் தருவிக்கப்பட்டு உலகின் தன்னிகரற்ற அந்தப் ”பெரிய” கோயில் கட்டப்பட்டது என்பது ஒரு ஆச்சர்யமான வரலாறு.

விழுப்புரம் மாவட்டத்தில் புதுவைக்கு அருகே ‘திருவக்கரை’ என்னும் சிவத்தலம் உண்டு. வக்ரகாளியம்மன் திருக்கோயில் இந்தத் தலத்தின் பெருஞ்சிறப்பு. நம்மூர் பக்தி சிகாமணிகள் பெரும்பாலானவர்கள் இந்த ஊரில் நிச்சயம் கால் பதித்திருப்பார்கள். நானும் சமீபத்தில் இங்கே சென்று வந்தேன். நம் ஆன்மிக அன்பர்கள் பெரும்பாலானோர் அறியாத மற்றுமோர் சிறப்பு இந்த ஊருக்கு உண்டு. ”திருவக்கரையில் கிடைக்கும் பாறைகள் போல் உலகில் வேறெங்கும் கிடைக்காது”, என்பதுதான் அது. 

திருவக்கரை ஆதிச்சப் பெருந்தச்சனைத் தேடி ராஜராஜன் வருகிறான். பெரிய கோயில் லிங்கமும், நந்தியும் திருவக்கரையில் வடிக்கப்பட வேண்டும் என்பது அவன் வேண்டுகோள். பெருந்தச்சன் அதை ஏற்கிறார். நந்தீஸ்வரரின் வருகைக்குப் பிறகே லிங்கம் எந்தக் கோயிலுக்குள்ளும் புகவேண்டும் என்பது விதி.  சம்பிரதாய தோஷமாக முதலில் பெருவுடையார் தஞ்சை புகுகிறார். 

அடுத்ததாக பெரிய நந்தியின்  பிரயாணத்தின் போது நிகழும் சவாலும் ஆதிச்சப் பெருந்தச்சனின் தலைகுனிவும், நந்தீஸ்வரரின் பயண mission failiure'மே மிச்சக் கதை.

பாலகுமாரனின் எழுத்து லாவகத்தைத் தனியே குறிப்பிடும் அவசியம் இல்லை. கதைக்குள்ளே நம்மை அநாயசமாக அழைத்துச் சென்றுவிடுகிறார். தஞ்சைக் கோயிலோடு நெருங்கிய தொடர்புடைய திருவக்கரை பற்றி பாலகுமாரன் எழுதியிருக்கிறார். திருவக்கரை வரலாறை வேறு யாரும் எங்கும் எழுதியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை (லலிதாராமிடம் கேட்கலாம்?).


கார்ட்டூனிஸ்ட் மதன் விகடனின் இணை ஆசிரியர் பதவியைத் துறந்த காலகட்டத்தில் என்று நினைவு.... அப்போது “விண் நாயகன்” என்றொரு மாதமிருமுறை இதழ் வெளிவரத் தொடங்கியது. ஒன்றிரண்டு வருடங்கள் வந்தபின் நின்றுபோன இதழ் அது. தொடங்கிய புதிதில் மதன், சுஜாதா, பாலகுமாரன் என்று ஃப்ரண்ட்லைன் பிரபலங்கள் எழுத்துகள் மிளிர்ந்த இதழ் அது. 

காதல் பற்றிய தொடரை மதன் எழுதினார்; கடவுள் பற்றி சுஜாதா எழுத; இந்த வரலாற்று நிகழ்வை ஒட்டிய இந்தக் குறுந்தொடரை பாலகுமாரன் எழுதினார்.  அப்போது அந்த மூன்று தொடர்களையும் அந்த காலகட்டத்தினையொட்டிய ஆர்வக்கோளாறுடன் கத்தரித்து எடுத்து வைத்து, நம் வாழ்க்கையின் எல்லா கட்டங்களிலும் தொடரும் சோம்பேறித்தனத்தினையொட்டி இன்றுவரை பைண்ட் பண்ணாமல் வைத்திருக்கிறேன்.

சொக்கனின் ‘மென்கலைகள்’ புத்தகத்தின் “நூறு போதும்” படித்துவிட்டுப் பரணைக் குடாய்ந்து கொண்டிருந்த போது இந்த கத்தரிப்புகள் கண்ணில் ஆப்ட.... கடவுளையும், காணிக்கையையும் மறுவாசிப்பு செய்ய நேர்ந்தது.

திருவக்கரை சென்று வந்தபின் நான் எழுதிய பதிவில் இந்தத் தகவலைப் பகிர்ந்திருந்தேன்; இந்தப் புகைப்படத்துடன்...

கோயிலின் பின்னணியில் இந்த மலை தென்பட்டது. உடைந்த கற்குவியல்களாலான ஒரு மலை. அதென்ன என்று விசாரித்தபோதுதான் தெரிந்தது அது பக்கத்தில் கல்குவாரிகளில் உடைபடும் பெரிய கற்களிலிருந்து சிதறும் சிறிய (தேவையற்ற) கற்களின் குவியல் என்று. கர்மசிரத்தையாக அது ஒரு மலையாக உருவாகி நிற்கிறது.

”கவிழ்ந்த காணிக்கை” அப்போது வாசித்தபோது மனதில் பதியாத ‘திருவக்கரை’ இப்போது பழகிவிட்ட தலமாகி நிற்கிறது. இப்போது மறு வாசிப்பு செய்தபின், “அடடா! அந்த ஊரில் ஏதேனும் ஒரு பாறைக் கொல்லைக்கு விசிட் அடிக்காமல் வந்துவிட்டோமே” என்று நினைத்துக் கொண்டேன்.

’கவிழ்ந்த காணிக்கை” - பெருநாவலாக வந்திருக்க வேண்டியதை எழுத்துச் சித்தர் குறுநாவலாக வடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். முழு நாவலுக்கான அத்தனை ஸ்கோப்பும் உள்ளதொரு கதைக்களம். விண் நாயகனுக்காய் இந்தக் கருவைத் தாரை வார்க்கத் தலைப்பட்டதால் ”நான்கு அல்லது ஆறு வாரம் வெளிவர்றாப்ல சார், ஒரு குறுநாவல்?”, என்ற வேண்டுகோளுக்கு இந்தக் குறுநாவலை அவசரமாக எழுதித் தந்தாரோ அல்லது வேறு எழுத்துப் பணிகளுக்கிடையே எழுத நேர்ந்ததால் இந்தக் கதையை சுருக்கமாக முடித்துக் கொண்டாரோ, நாம் அறியோம்.

’பொன்னியின் செல்வனு’க்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்கோப் தந்திருக்கலாம், தஞ்சை பெரிய கோயில் புகழை கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக பாடியிருக்கலாம், பெருவுடையார் பிரதிஷ்டையைச் சுற்றிய நிகழ்வுகளை அத்தனைச் சுருக்கமாய்ச் சொல்லியிருக்க வேண்டாம் என எனக்கே படிக்கையில் தோன்றும் போது, எழுதும்போது அல்லது எழுதி முடித்தபின் எழுத்துச் சித்தருக்குத் தோன்றாமல் போயிருக்குமா என்ன?

ஓகே... தஞ்சை வரை பயணப்படாத அந்த ‘கவிழ்ந்த காணிக்கை’யான நந்தீஸ்வரர் விழுப்புரம் மாவட்டத்தில் திருவக்கரையிலிருந்து புதுவை செல்லும் வழியில் திருவக்கரை எல்லையில் இன்னமும் கவிழ்ந்த கோலத்தில் காட்சி தருகிறாராம். அந்தப்புறம் செல்பவர்கள் மறக்காமல் தரிசனம் செய்வீராக.

இந்தக் குறுநாவலானது பாலகுமாரனின் ஏதோவொரு புத்தகத் தொகுப்பில் வெளிவந்துள்ளது. அந்தத் தகவல் தெரிந்த பாலகுமார ரசிக அன்பர்கள் அந்தத் தகவலை இங்கே பின்னூட்டமாய்க் குறிப்பிட்டால் இந்தப் பதிவைப் படிக்கும் பிற பாலகுமார கண்மணிகள் பயன் பெறுவார்கள். 

அப்படி எங்கும் இந்தக் குறுநாவலின் வடிவம் கிடைக்காத பட்சத்தில்.... ....இந்தக் குறுநாவலின் தட்டச்சு வடிவம் வேண்டுவோர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால் ( rsgiri @ gmail ) அவர்களுக்கு மின்னஞ்சலில் குறுநாவலை அனுப்பி வைக்கிறேன் (என் பதில் அஞ்சலின் வேகம் என் சோம்பேறித்தனத்தின் வீரியத்தின் அளவைப் பொறுத்தது என்பதை மனதில் கொள்ளவும்). 

கவிழ்ந்த காணிக்கை | பாலகுமாரன் | குறுநாவல் | வரலாறு


25 Apr 2013

Different Seasons - Stephen King

சில மாதங்களுக்கு முன் ஸ்டீபன் கிங் எழுதிய Different Seasons புத்தகத்தைப் படித்தேன். கல்லூரி நாட்களில் சில நண்பர்கள் ஸ்டீபன் கிங் பற்றி சொல்லியிருந்தும் நான் படிக்கவில்லை. பின்னர் ஏதோ ஒரு சிறுகதை தொகுப்பில் அவரது கதை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அது ஒரு பேய் கதை போலவோ ஒரு மீயியல்புவாதக் (paranormal) கதையாகத் தெரிந்தது. அப்புறம் அவரது சில கதைகளை அவ்வப்போது படித்து வந்திருந்தாலும் ஸ்டீபன் கிங் எனத் தேடிப் பார்த்துபடித்ததில்லை.
 
சில வருடங்களுக்கு முன் The Shining படம் பார்த்துவிட்டு நாவலைப் படித்தபின் ஸ்டீபன் கிங் எனும் சுவாரஸ்யமானக் கதை சொல்லியிடம் சிக்கிக்கொண்டேன்.
 
 







 

4 Oct 2012

இவான் - விளதீமிர் பகமோலவ்


பெயர்                         : இவான்
ஆசிரியர்                    : விளதீமிர் பகமோலவ்
தமிழில்                      : நா. முகம்மது செரீபு எம்.ஏ
பதிப்பகம்                   : ராதுகா பதிப்பகம், மாஸ்கோ-ரஷ்யா


பத்துப் பதினோரு வயசில் நாம என்ன செஞ்சு இருப்போம்? ஸ்கூலுக்கு போவோம்; விளையாடுவோம்; எதோ முடிஞ்சா கொஞ்சம் படிப்போம். நான் சொல்றது பத்து, பதினஞ்சு வருஷம் முன்னாடி. இப்பத் தான் எல்லோரும் ஸ்கூல் முடிஞ்சா டியூஷன், ஸ்கூலுக்கும் டியூஷனுக்கும் நடுவுல ஒரு கிளாஸ், டியூஷன் முடிஞ்சு ஹிந்தி கிளாஸ், இப்படி வகை வகையா அனுப்பறாங்க. நான் எல்லாம் ஸ்கூல் முடிஞ்சு வந்தா ஸ்கூல் பையை ஒரு ஓரம் தூக்கி வீசிட்டு இருட்டற வரை விளையாடுவேன். கவலையே இல்லாத வாழ்க்கை.  
                                   


24 Aug 2012

பால்யகால சகி- வைக்கம் முகம்மது பஷீர்



பால்ய பருவத்து காதலின் நினைவுகள் முளைவிடாத களை விதைகள். சடாரென்று உடலெங்கும் பரவி மயிர்கால்களை சிலிர்க்கச் செய்யும், எதிர்பாரா கணத்தில் தோற்றம் கொள்ளும் அந்த பால்ய கால நினைவுகள் உக்கிரமானவை. கண்களை இறுக்கிப் பூட்டி, நினைவுக் கம்பளத்தால் நம்மைப் போர்த்தும் வெம்மை மிகுந்த அந்தத் தருணங்கள் வலிமையானவை, வழிந்தோடும் தூரத்து குழலோசையைப்  போல் காற்றில் அளையும் மென் சுகந்தமாய் நம்மை சுற்றிச் சுழலும் அதன் நினைவுச் சுருள்கள். சுகந்தமும், இசையும், இன்பமும் மெல்ல இறந்து, காட்டு விலங்கின் தொலைதூர  ஓலத்தின் தொடர் எதிரொலி போல் நினைவுகளின் வலியில் மனம் மீண்டும் மீண்டும் அதிரும். முதுகுத் தண்டின் வேரில் ஒரு குளிர்ந்த சிலிர்ப்பாய் குபுக்கென்று வியர்த்து விழிக்கும் நிகழ் காலம், ஒரு குரூர கனவாக. மனம் தரிசாகும்போது அந்த விதைகளின் முனைகளில் துளிர்ந்த  பசுங்கனவுகள் இதயத்தைத் தைக்கும் கூர் அம்புகளாகி மனம் முழுவதையும் துளைக்கின்றன.


19 Aug 2012

தொடரும் நினைவுகளுக்கு எதிராக : சா கந்தசாமியின் "வேலையற்றவன்"




"நீ புறப்படு ரேணு. பிரண்ட் ரொம்ப நேரமா நிற்கிறார்"

இவன் காரில் ஏறி உட்கார்ந்தான். பக்கத்தில் அவள் அமர்ந்தாள். டிரைவர் கதவை அடித்துச் சாத்தினான். வந்தனாதேவி கை அசைத்தாள்.  கார் புறப்பட்டுச் சென்றது.

கொஞ்ச நேரம் வரையில் அவள் ஒன்றும் பேசவில்லை. கன்னத்தில் கைவைத்து, யோசனையில் மூழ்கி இருப்பது மாதிரி இருந்தாள். கார் பள்ளத்தில் இறங்கி மேட்டில் ஏறியது. இவன் மேலே சாய்ந்தாள். அப்புறம் நிமிர்ந்து உட்கார்ந்து, "பிரசாத் எப்படி?" என்று கேட்டாள்.

"ஒன்னும் தெரியல"

"அவன் ரொம்ப நல்லவன். பெரிய திறமைசாலி. பணத்தைப் பணம் என்று பார்க்கவே மாட்டான். குடிக்கும் பெண்ணுக்கும் என்ன வேண்டுமானாலும் செலவு செய்வான். எங்கள் சொந்தத்தில்தான் கல்யாணம் பண்ணிக் கொண்டான். நாலு வருஷம் வரையிலும் ஒரு பிராப்ளமும் இல்லை. அப்புறம் மனைவி இவனை விட்டுவிட்டுப் போய் விட்டாள். பிரசாத் அப்புறம் எங்கெல்லாமோ சுற்றினான். ஒரு வருஷம் பாரீசில் இருந்தான். பாரீசில்தான் சுசீலாவைப் பிடித்தான். இவன் கெட்ட குணத்தை எல்லாம் பொறுத்துக் கொண்டு சுசீலா கூட இருக்கிறாள். அவள் மட்டும் இல்லை என்றாள் இவன் இல்லை... அழிந்து போயிருப்பான்"

கார் வேகம் குறைந்தது.

"மனித மனதின் விசித்திரம் பற்றி யார் என்ன சொன்னாலும், அது சரியா இருக்கறது இல்ல..."

இவன் பதிலொன்றும் சொல்லாமல் அவளையே பார்த்தபடி இருந்தான்.




மூன்று குறுநாவல்கள் - வேலையற்றவன், ஏரிக்கரையில், எட்டாவது கடல்.  இந்தக் கதைகள். தனி மனிதன் சமூகத்துடனும், பிழைப்பு மண்ணுடனும், நிகழ்வுகள் நினைவுடனும் பிணைந்திருப்பதைப் பேசுவதாகக் கொள்ளலாம் : முதல் இரண்டு கதைகளில் தொழில்நுட்ப வளர்ச்சியால்  உருவாகும் சமூக நிர்பந்தங்கள் கடந்த காலத்தை கடந்து செல்லப்பட வேண்டியதாக்குகின்றன : முதுகைத் திருப்பிக் கொள்ளுதல் இயல்பான தேர்வாகிறது.  கடைசி கதையில் கருணையால் இந்த முதுகைத் திருப்பிக் கொள்ளுதல், நினைவுகளைவிட்டு, தன்னியல்பைவிட்டுத் திரும்பி நிற்றல் நிகழ்கிறது.

6 Aug 2012

இரவுக்கு முன் வருவது மாலை – ஆதவன்


இப்புத்தகம் ஆதவனால் எழுதப்பட்ட ஆறு குறுநாவல்களின் தொகுப்பு. ஆதவன், நவீனத்துவத்தின் மிக முக்கியமான நபர். இப்புத்தகத்தில் ஆங்காங்கே அதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. இயந்திரத்தனமான வாழ்க்கையில் தன் சுயம் தொலைத்து ‘ரொட்டீன்’னாக தினசரி பழக்கப்பட்ட வாழ்க்கைக்கு பாயும் பலரை வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு ஆண். இதே குணாதிசயங்கள் கொண்ட மற்றொரு பெண். இருவரும் தங்களை அறிவாளிகளாக, இன்டெலக்சுவல்’களாக காட்டிக்கொள்ள முற்படும் இருவருக்குமான உரையாடல்கள் இவையே “இரவுக்கு முன் வருவது மாலை” எனும் குறுநாவலின் சாராம்சம்.

தமிழ்நாட்டிலிருந்து டில்லிக்குப் போய் வாழும் ஒரு தமிழ்க் குடும்பம், அதிலொரு இளைஞி, படித்ததனால் மட்டுமே தனக்கு சிறகு முளைத்து விட்டதாய் எண்ணி சமூகத்தில் ஒரு நல்ல வேலைக்குப் போக முடிவெடுத்து பறக்க நினைக்கிறாள். பாத்திரம் கழுவுவதையும், சங்கீதம் கற்பதையும் அறவே துறந்து ஒரு புரட்சியாகவோ, சமூக மாற்றமாகவோ இதை செய்ய எத்தனிக்கையில் படும் அவமானங்கள், கண்ட காட்சிகள் கண்டு பயந்து தன்னிலை உணர்ந்து மீண்டும் கூட்டுக்கே திரும்புகிறாள். இது “சிறகுகள்”, இரண்டாம் குறுநாவல். எழுபதுகளின் கதை.

திருவையாற்றில் பிறந்து டில்லி சென்று வாழும் ஒரு இளைஞன், தாய் மண்ணுக்குத் திரும்புகையில் அவன் அங்கு காண்பவற்றையெல்லாம் தான் இழந்தவைகளாக காண்கிறான், தான் அடிப்படையிலிருந்து மாறிவிட்டதாக உணர்கிறான். மேலும் அந்த ஊரில் ஏற்பட்ட மாற்றங்கள் கூட அவனுக்கு அன்னியமாகப் படுகின்றது.  இவையெல்லாம் கண்டு மீண்டும் டில்லிக்கே திரும்புகையில் அவனுக்கான மீட்சி எது என்பதை உணருகிறான். எங்கோ பிறந்து எங்கோ வேலைக்குப் போகும் அனைவருக்கும் எக்காலத்திலும் அவர்களுக்கான மீட்சியையோ அல்லது நினைவுகளையோ தரவல்லது, “மீட்சியைத் தேடி” மூன்றாம் குறுநாவல்.

ஒரு பதவியிலிருக்கும் ஒருவர் ஓரிரு நாள்கள் விடுப்பில் செல்ல நேர்ந்தால், அவருக்கு கீழே வேலை செய்யும் ஒருவர் அவருக்கு இன்-சார்ஜாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால், அதை உடன் வேலை செய்யும் மற்றவர்களால் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையின் கீழ் ஒரு நாள் அல்லது அதிகாரி விடுப்பில் போகும்போதெல்லாம் இன்-சார்ஜ்’ஆக இருந்து தன்னிலை வெறுக்கும் ஒரு ஊழியனின் கதை, “கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன்”.

ஆண் என்பவன் மலை, பெண் என்பவள் நதி. ஒரு நதி மலையை அரவணைக்கையில் ஒரு நீர்வீழ்ச்சி உண்டாகிறது. மனைவி இறந்த பின் தன் முன்னாள் காதலியின் நிலை கண்டு அவரைக் காணச்செல்லும் ஒரு மலையின் நினைவுகள்தான் “நதியும், மலையும்”.

வேலைக்குப் புதிதாய் சேர்ந்திருக்கும் ஒரு சாதாரணப் பெண், உடன் உள்ளோர்களால் கெட்டவன் என்று விமர்சிக்கப்படுபவனிடம் உள்ள நற்பண்புகள் கண்டு அவனின் தோழியாகிறாள். பின் வரும் நிகழ்வுகளாய் அலுவலக யூனியன் தேர்தலின் தலைவியாகிறாள். அவளுக்குள் ஏற்படும் மாற்றங்களைப் பேசுவது “பெண், தோழி, தலைவி”.

வெறும் சோப்புத் தண்ணீரானது சகல நிறங்களையும் தாங்கி நீர்க்குமிழாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி, சட்டென்று வெடித்து முகத்தில் தெறித்தால் ஒரு குழந்தை என்ன உணருமோ அதுபோலொரு உணர்ச்சிப் பிரவாகத்தை தரவல்ல ஒரு புத்தகம் – இரவுக்கு முன் வருவது மாலை.

வெளியான வருடம் – 1974
மறுபதிப்பு – கிழக்கு பதிப்பகம்

Related Posts Plugin for WordPress, Blogger...