யசுனாரி கவாபட்டாவின் நாவல், ‘தி சவுண்ட் ஆப் தி மௌண்டன்’, குடும்பம், முதுமை மற்றும் மரணம் பற்றிய சிக்கலான கதையைச் சொல்கிறது. துல்லியமான, மினிமலிச பாணி நடை கொண்ட கவாபட்டாவின் எழுத்து, ஓகாடா ஷிங்கோவின் குடும்பத்தில் நிலவும் சிடுக்குகள் மிகுந்த உறவுகளின் ஆழங்களுக்குள் அழைத்துச் செல்கிறது. ஓகாடா ஷிங்கோவும் அவரது மனைவி யாசுகோவும் தங்கள் மகன் ஷியுச்சி மற்றும் மருமகள் கிகுகோவுடன் காமகுராவில் வசிக்கிறார்கள். முதல் பார்வையில் வசதியாகவும், நெருக்கமாகவும் இருப்பது போல் தோன்றுகிற இந்தக் குடும்பத்திலும் அவர்களுக்கே உரிய ரகசியங்கள் இருக்கின்றன. போரில் மரணமடைந்த ராணுவ வீரன் ஒருவனின் மனைவியுடன் அவரது மகன் ஷியுச்சோ கள்ள உறவு வைத்திருக்கிறான். அவரது மகள் ஃபுசாகோவின் இல்லற வாழ்வும் முறியும் நிலைக்கு வந்து விட்டது. தன்னைச் சுற்றி நடப்பதை ஷிங்கோ எப்படி எதிர்கொள்கிறார் என்பதையும் எதையும் மாற்ற முடியாத அவரது இயலாமையையும் இந்த நாவல் விவரிக்கிறது.
A.J.Cronin
A.K.Ramanujan
Amartya Sen
Andrea Maria Schenkel
Anton Chekhov
Arthur Hailey
Bill Bryson
Deborah Eisenberg
Elizabeth Kostova
Gay Neck
Geoff Dyer
George Orwell
Harper Lee
Henning Mankell
Ian McEwan
Jared Diamond
Jilly Cooper
Jonathan Livingstone Seagull
Joseph Heller
Kenneth Anderson
Kiran Desai
Maugham
Michael McCarthy
O.Henry
Orhan Pamuk
P.G.Wodehouse
PB.ஸ்ரீனிவாஸ்
R.K.Narayan
Richard Bach
Ronald Wilks
Stephen King
Swami Tejomayananda
Upamanyu Chatterjee
William Sydney porter
dhan gopal mukerji
mark tully
okakura kakuzo
saggi
steven weinberg
vikram seth
ஃபெயின்மன்
அ. முத்துலிங்கம்
அ.கா.பெருமாள்
அகிலன்
அசோகமித்திரன்
அனார்
அறிஞர் அண்ணா
அறுசுவை அரசு நடராஜன்
அழகியசிங்கர்
ஆ. சிதம்பரகுற்றாலம்
ஆதவன்
ஆர்.கே.நாராயண்
ஆர்.ஷண்முகசுந்தரம்
ஆஸ்கார் ஒயில்டு
இடாலோ கால்வினோ
இந்திரா பார்த்தசாரதி
இந்துமதி
இரா. நாறும்பூநாதன்
இரா.நடராசன்
இரா.முருகன்
இரா.முருகவேள்
இலக்கிய வீதி இனியவன்
இலவச கொத்தனார்
உமா சம்பத்
என்.சொக்கன்
என்.ராமதுரை
எம் கோபாலகிருஷ்ணன்
எம். வி. வெங்கட்ராம்
எர்னெஸ்ட் ஹெமிங்வே
எஸ். ராமகிருஷ்ணன்
எஸ்.சந்திரமௌலி
ஏ.கே.ராமானுஜன்
ஏ.கோபண்ணா
ஒல்கா பெரோவ்ஸ்கயா
க.நா.சு
கண்மணி குணசேகரன
கரிச்சான் குஞ்சு
கலாப்ரியா
காப்கா
காலபைரவன்
கி. ராஜநாராயணன்
குமரி எஸ்.நீலகண்டன்
குல்தீப் நய்யார்
கே நெக்
கோபிநாத்
கோபுலு
சந்திரசேகர சர்மா
சமஸ்
சல்மான் ரஷ்டி
சா. கந்தசாமி
சா.பாலுசாமி
சாருநிவேதிதா
சாலீம் அலி
சி.சரவணகார்த்திகேயன்
சி.சு.செல்லப்பா
சிபி.கே.சாலமன்
சு. வேணுகோபால்
சுகுமாரன்
சுஜாதா
சுந்தர ராமசாமி
சுனில் ஜோகி
சுப்புடு
சுவாமி விவேகானந்தர்
செல்லம்மா பாரதி
செள.ராஜன்
சே. இரகுராமன்
சோம.வள்ளியப்பன்
ஜனனி ரமேஷ்
ஜான் பான்வில்
ஜி.நாகராஜன்
ஜிம் கார்பெட்
ஜெயகாந்தன்
ஜெயமோகன்
ஜே. ஹெச். வில்லியம்ஸ்
ஜோதிநரசிம்மன்
டாக்டர். சு.முத்து செல்லக்குமார்
டாக்டர். பி.எம்.ஹெக்டே
டாக்டர்.எல்.மகாதேவன்
தமிழ் மகன்
தரம்பால்
தி. ஜானகிராமன்
தி.ஜானகிராமன்
தியடோர் பாஸ்கர்
து.கணேசன்
ந.பிச்சமூர்த்தி
நகுலன்
நடிகர் சிவகுமார்
நமீதா தேவிதயாள்
நா.முத்துக்குமார்
நாகம்மாள்
நாகூர் ரூமி
நாஞ்சில் நாடன்
ப. சிங்காரம்
பல்லவி அய்யர்
பழ.அதியமான்
பழ.கருப்பையா
பவன் வர்மா
பவா செல்லதுரை
பஷீர்
பா.ராகவன்
பாம்பே ஜெயஸ்ரீ
பாரதியார்
பாலகுமாரன்
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
பாலு மகேந்திரா
பாவண்ணன்
பி.எச்.டேனியல்
பி.எம்.சுந்தரம்
பி.ஏ.கிருஷ்ணன்
பி.வி.ராமஸ்வாமி
பிரமிள்
பெஞ்சமின் ப்ளாக்
பெருமாள் முருகன்
பொ.கருணாகரமூர்த்தி
மகாகவி பாரதியார்
மதன்
மனுஷ்யபுத்திரன்
மருதன்
மலர்மன்னன்
மா.கிருஷ்ணன்
மார்க்வெஸ்
மாஸ்தி
மில்லி போலக்
முகில்
முஹமது யூனுஸ்
யதுகிரி அம்மாள்
யுவன் சந்திரசேகர்
ரகோத்தமன்
ரமணி சந்திரன்
ரா.கி.ரங்கராஜன்
ராஜாஜி
லலிதாராம்
லா.ச.ரா
லிவிங்ஸ்மைல் வித்யா
லூசியன் ஸ்ட்ரைக்
லெமூர்
வ.ரா
வண்ணதாசன்
வா.மு கோமு
வாலி
விட்டல் ராவ்
வின்சென்ட் ஷீன்
விளதீமிர் பகமோலவ்
வீயெஸ்வி
வுடி ஆலன்
வெரியர் எல்வின்
வேதவல்லி
வைக்கம் முகமது பஷீர்
வைணவச் சுடராழி ஆ. எதிராஜன்
வைரமுத்து
ஷோபா சக்தி
ஹென்னிங் மான்கெல்
Showing posts with label எஸ்.சுரேஷ். Show all posts
Showing posts with label எஸ்.சுரேஷ். Show all posts
22 Jan 2019
Yasunari Kawabata: The Sound of the Mountain
Posted by
நட்பாஸ்
யசுனாரி கவாபட்டாவின் நாவல், ‘தி சவுண்ட் ஆப் தி மௌண்டன்’, குடும்பம், முதுமை மற்றும் மரணம் பற்றிய சிக்கலான கதையைச் சொல்கிறது. துல்லியமான, மினிமலிச பாணி நடை கொண்ட கவாபட்டாவின் எழுத்து, ஓகாடா ஷிங்கோவின் குடும்பத்தில் நிலவும் சிடுக்குகள் மிகுந்த உறவுகளின் ஆழங்களுக்குள் அழைத்துச் செல்கிறது. ஓகாடா ஷிங்கோவும் அவரது மனைவி யாசுகோவும் தங்கள் மகன் ஷியுச்சி மற்றும் மருமகள் கிகுகோவுடன் காமகுராவில் வசிக்கிறார்கள். முதல் பார்வையில் வசதியாகவும், நெருக்கமாகவும் இருப்பது போல் தோன்றுகிற இந்தக் குடும்பத்திலும் அவர்களுக்கே உரிய ரகசியங்கள் இருக்கின்றன. போரில் மரணமடைந்த ராணுவ வீரன் ஒருவனின் மனைவியுடன் அவரது மகன் ஷியுச்சோ கள்ள உறவு வைத்திருக்கிறான். அவரது மகள் ஃபுசாகோவின் இல்லற வாழ்வும் முறியும் நிலைக்கு வந்து விட்டது. தன்னைச் சுற்றி நடப்பதை ஷிங்கோ எப்படி எதிர்கொள்கிறார் என்பதையும் எதையும் மாற்ற முடியாத அவரது இயலாமையையும் இந்த நாவல் விவரிக்கிறது.
5 Jan 2016
After the Crash – மிஷேல் புஸ்ஸி
Posted by
நட்பாஸ்
பிரெஞ்சு எழுத்தாளர் மிஷேல் புஸ்ஸியின் ‘After the Crash’ ('Un avion sans elle'- ஆங்கில மொழியாக்கம் சாம் டெய்லர்) ஒரு த்ரில்லர்தான், ஆனால் அதில் நல்ல கற்பனையைப் பார்க்க முடிகிறது. கதையின் அடிப்படையில் முதற்கோள் (premise) ஒன்றுண்டு, அது இந்த நாவலை ஒருங்கிணைக்கும் சரடாய் அமைந்திருக்கிறது.
1980ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரிலிருந்து பாரிஸ் செல்லும் விமானம் ஒன்று பிரெஞ்சு- ஸ்வட்ஸர்லாந்து எல்லைப் பகுதியில் உள்ள மலை மீது மோதி வீழ்கிறது. அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் இறக்கின்றனர்- பிறந்த மூன்று மாதங்களே ஆன பெண் குழந்தை ஒன்றைத் தவிர. அவள் விமானத்திலிருந்து வெளியே தூக்கி வீசப்படுகிறாள். எலும்பை உறைய வைக்கும் குளிரில் அவளை எரியும் விமானத்தின் வெம்மை பாதுகாக்கிறது.
12 Dec 2014
கெய்கோ ஹிகாஷினோவின் 'வன்மம்' (‘Malice’, Keigo Higashino)
Posted by
நட்பாஸ்
கெய்கோ ஹிகாஷினோவின் இந்தப் புதிய நாவலை சப்னா புக் ஹவுஸில் பார்த்ததுமே வாங்கிவிட்டேன். இவர் இதற்கு முன் எழுதியுள்ள முன்னிரண்டு நாவல்களைப் போலவே இதுவும் அருமையாக இருக்கும் என்பதில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை. ஆனால் துரதிருஷ்டவசமாக, பணிச்சுமை மற்றும் பிறச்சுமைகள் காரணமாக இந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்க ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டது. அண்மையில் நீண்ட ஒரு ரயில் பயணம் செய்ய நேர்ந்தது, இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, இதை ஓரே மூச்சில் படித்து முடித்து விட்டேன்.
9 Jun 2014
வங்காள நாவல்: நபநீதா தேவ் சென்னின் ஷீத் சஹாசிக் ஹேமந்தோலோக் (கூதிர்ப்பருவத்தை எதிர்நிற்றல்)
Posted by
நட்பாஸ்
"நாவலின் கதையைத் திரும்பச் சொல்வதுதான் இவரது விமரிசனமாக இருக்கிறது," என்பதுதான் புக் ரிவ்யூ செய்யும் ஒருவன் எதிர்கொள்ளக்கூடிய முக்கியமான கண்டனமாக இருக்கிறது. ஆனால் அதுதான் நபநீதா தேவ் சென்னின், “ஷீத் சஹாசிக் ஹேமந்தோலோக்” என்ற குறுநாவலைப் பற்றி எழுதுவதில் மிகவும் சந்தோஷமளிக்கும் விஷயமாகவும் இருக்கிறது. இதில் எந்தக் கதையும் சொல்லப்படுவதில்லை.
கதை சொல்வதற்கு பதிலாக, நபநீதா தேவ் சென், "அந்திக் காப்பக"த்தில் இருப்பவர்களின் பார்வையில் அவர்களைச் சுற்றி விரியும் பரவலான சமூகத்தைச் சித்திரிக்கிறார், முதுமை குறித்து சிந்திக்கவும் செய்கிறார். அந்திக் காப்பகம் பெண்களுக்கான முதியோர் இல்லம். இங்கு வாழும் வெவ்வேறு பெண்களைப் பற்றி பேசிச் செல்கிறது கதை.
12 Mar 2014
Jed Rubenfeld – Interpretation of a Murder
Posted by
நட்பாஸ்
ஜெட் ரூபன்ஃபெல்ட் எழுதிய இந்த நாவலின் அடிப்படைக் கருத்து சுவையானது. உளப்பகுப்பாய்வுத்துறையில் புதிய திறப்புகளையளித்து அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பிரபலமடைந்து வரும் சிக்மண்ட் ப்ராய்ட் தன் சகாக்கள் கார்ல் யூங் மற்றும் பலருடன் ந்யூ யார்க் வருகிறார். அவர் அமெரிக்க மண்ணில் கால் வைக்கும் நாளில், பணக்கார அபார்ட்மென்ட் ஒன்றின் பெண்ட்ஹவுஸில் ஒரு இளம் நடிகை கட்டி வைத்து அடித்துக் கொல்லப்படுகிறார். இந்தக் கொலை குறித்து விசாரிக்கும்படி ந்யூ யார்க் நகர மேயர் கொரோனரிடம் கேட்டுக் கொள்கிறார். அடுத்த நாள், நோரா ஆக்டன் என்ற இன்னொரு பெண்ணும் அதே போல் கட்டி வைத்து கடுமையாக தாக்கப்படுகிறாள். கொலைகாரன் அவள் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சிக்கும்போது அவள் பெருங்குரலெடுத்து அலறுகிறாள். இதனால் பதட்டமடைந்து அவளை அப்படியே விட்டுவிட்டுத் தப்பியோடி விடுகிறான் கொலைகாரன்.
6 Feb 2014
பெத்ரு பாராமொ - வொன் ரூல்ஃபோ
Posted by
Natarajan Venkatasubramanian
வொன் ரூல்ஃபோவின் உலகப் புகழ்பெற்ற 'பெத்ரு பாராமொ' நினைவுகளின் புத்தகம்.
அதன் துவக்கத்தில், மரணப்படுக்கையில் இருக்கும் தொலோரெஸ் என்ற பெண், தன்
மகன் வொன்னிடம் கொமாலா என்ற ஊருக்குச் சென்று அவன் தன் தந்தை பெத்ரு
பாராமொவைச் சந்திக்க வேண்டுமென்று சொல்கிறாள். வொன் தன் பயணத்தைத் துவக்கி,
வெறிச்சோடிக் கிடக்கும் கொமாலா சென்று சேர்கிறான். வாழ்பவர்கள்,
இறந்தவர்கள் என்று இருவகைப்பட்ட பலரின் நினைவுகளைக் கொண்டும் தன் தந்தையை
அறிந்து கொள்கிறான்.
இந்த நாவல் விவாதிக்கும் பெரிய விஷயங்களைப் பேசுவதற்குமுன் இந்த நாவலின் நடையைப் பேசுவது பொருத்தமாக இருக்கும். மாய யதார்த்தத்தின் போக்கைத் தீர்மானித்த முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் ரூல்ஃபோ என்று சொல்லப்படுகிறது. இந்த நூலில் அருமையான முறையில் மாய யதார்த்த பாணி கதைசொல்லலை நிகழ்த்தியிருக்கிறார் இவர். பெத்ரு பாராமொ என்ற மனிதனின் முழுக்கதையும் துண்டுத் துணுக்குகளாக, காலக்கணக்கு கலைக்கப்பட்ட வரிசையில் சொல்லப்படுகிறது. ஏதோ நாம் இருளில் இருப்பது போலவும் நாமிருக்கும் அறையின் சுவற்றில் ஒரு அழகிய ஓவியம் இருப்பதைப் பார்ப்பது போலவும் ஒரு அனுபவத்தை இந்தக் கதை தருகிறது. அறையில் ஒரு ஜன்னல் திறந்து கொள்கிறது. ஒளிக்கீற்று ஒன்று ஓவியத்தின் ஒரு பகுதியை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அந்த ஜன்னல் மூடிக் கொள்கிறது, வேறொன்று திறக்கிறது. இப்போது ஓவியத்தின் வேறொரு பகுதி வெளிச்சமிடப்படுகிறது. ஓவியம் அதன் முழுமையான வடிவில் மெல்ல மெல்ல நம் மனக்கண்ணில் துலக்கம் பெறத் துவங்குகிறது.
இந்த நாவல் விவாதிக்கும் பெரிய விஷயங்களைப் பேசுவதற்குமுன் இந்த நாவலின் நடையைப் பேசுவது பொருத்தமாக இருக்கும். மாய யதார்த்தத்தின் போக்கைத் தீர்மானித்த முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் ரூல்ஃபோ என்று சொல்லப்படுகிறது. இந்த நூலில் அருமையான முறையில் மாய யதார்த்த பாணி கதைசொல்லலை நிகழ்த்தியிருக்கிறார் இவர். பெத்ரு பாராமொ என்ற மனிதனின் முழுக்கதையும் துண்டுத் துணுக்குகளாக, காலக்கணக்கு கலைக்கப்பட்ட வரிசையில் சொல்லப்படுகிறது. ஏதோ நாம் இருளில் இருப்பது போலவும் நாமிருக்கும் அறையின் சுவற்றில் ஒரு அழகிய ஓவியம் இருப்பதைப் பார்ப்பது போலவும் ஒரு அனுபவத்தை இந்தக் கதை தருகிறது. அறையில் ஒரு ஜன்னல் திறந்து கொள்கிறது. ஒளிக்கீற்று ஒன்று ஓவியத்தின் ஒரு பகுதியை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அந்த ஜன்னல் மூடிக் கொள்கிறது, வேறொன்று திறக்கிறது. இப்போது ஓவியத்தின் வேறொரு பகுதி வெளிச்சமிடப்படுகிறது. ஓவியம் அதன் முழுமையான வடிவில் மெல்ல மெல்ல நம் மனக்கண்ணில் துலக்கம் பெறத் துவங்குகிறது.
12 Jan 2014
Borkmann's Point - Hakan Nesser
Posted by
நட்பாஸ்
பதிவர்: எஸ். சுரேஷ் (@raaga_suresh)
வான் வீட்ரன் காவல்துறை பணியில் இணையும்போது அதன் தலைமை பதவியில் இருக்கும் போர்க்மன் ஒரு விஷயத்தை அவதானிக்கிறார். அது வான் வீட்ரனின் மனதில் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது - "கொஞ்சம் ஒழுங்காக யோசித்தால் போதும், குற்றவாளியைக் கண்டுபிடித்து விடலாம் என்று சொல்லுமளவுக்குத் தேவையான தகவல்கள் கிடைத்துவிடும் கட்டம் ஒன்று ஒவ்வொரு வழக்கிலும் வரும். அந்தக் கட்டத்தை அடையும்போது அதை உணர்வதில்தான் நம் சாமர்த்தியம் இருக்கிறது," என்று சொல்கிறார் அவர். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கில் துப்பு துலக்க முற்படுகையில் வான் வீட்ரன் இந்த விஷயத்தை யோசித்துப் பார்க்கிறான்.
இந்த நாவலின் அடிப்படையாக இருக்கும் குற்றத்தில் கோடரியைக் கொண்டு கொலை செய்யும் ஒருவன் சம்பந்தப்பட்டிருக்கிறான். மிகக் கூர்மையான கோடரியைக் கொண்டு இருவரைக் கொன்றவன் அவன், அந்தக் கோடரியின் வீச்சு இருவரின் தலைகளையும் உடலிலிருந்து ஏறத்தாழ துண்டித்திருக்கிறது. முதலில் கொலை செய்யப்பட்டவன் போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையானவன், போதை மருந்து விற்பவன். இரண்டவதாக கொல்லப்பட்டவன் ரியல் எஸ்டேட் ஏஜண்ட். இந்த இரு கொலைகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கும்போதே கோடரிக் கொலைகாரன் மூன்றாவது கொலையைச் செய்கிறான் - இம்முறை சாவது ஒரு டாக்டர். கடலோரத்தில் இருக்கும் சிற்றூரான கால்ப்ரிங்கனில் பதட்டம் பரவுகிறது, அந்தி சாய்ந்தபின் எவரும் வீட்டை விட்டு வெளியே வர தயாராக இல்லை.
இரண்டாம் கொலைக்குப்பின் குற்றவாளியைக் கண்டுபிடிக்க கால்ப்ரிங்கன் காவல்துறைக்கு உதவும் பொறுப்பை வான் வீட்ரனிடம் தலைமை அதிகாரி ஒப்படைக்கிறார். வான் வீட்ரன் அந்நகரின் காவல்துறை தலைமை அதிகாரி பாஸனின் நண்பனாகிறான். பாஸனும் அவரது ஒயின் சேகரமும் வான் வீட்ரனுக்குப் பிடித்துப் போகிறது. பாஸன் விரைவில் ஓய்வுபெறப் போகிறார். அதற்குள் அவர் குற்றவாளியைக் கைது செய்துவிட விரும்புகிறார்.
ஆனால் இவர்கள் துப்புத் துலக்கிக் கொண்டிருக்கும் வேளையில் மூன்றாவது கொலை நிகழ்ந்துவிடும்போது கால்ப்ரிங்கன் காவல் துறையில் டிடெக்டிவாகப் பணியாற்றும் பீட் மோர்க் வான் வீட்ரனின் சகாவுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறார். அதில் அவர் இந்த வழக்கு சம்பந்தமாக வித்தியாசமான ஒரு விஷயத்தைத் தான் கண்டுபிடித்திருப்பதாகக் கூறுகிறார். ஆனால் சில மணி நேரங்களில் அந்தப் பெண் அதிகாரி காணாமல் போய் விடுகிறார் - கோடரி கொலைகாரன்தான் அவரைக் கடத்திச் சென்றிருக்க வேண்டும்.
5 Dec 2013
அலெக்ஸ் - பியர் லிமாதே
Posted by
நட்பாஸ்
பதிவர்: எஸ். சுரேஷ் (@raaga_suresh)
அலெக்ஸ் அழகிய இளம் பெண். அவள் போகுமிடமெல்லாம் ஒருவன் தன்னைத் தொடர்ந்து வருவதை அவள் கவனிக்கிறாள். எதற்காக அவன் தன் பின் வருகிறான் என்பது அவளுக்குக் குழப்பமாக இருக்கிறது. ஒரு நாள் இரவு அவள் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வரும் வழியில் அவளைப் பின்தொடர்பவன் ரோட்டில் வைத்தே அவளை அடித்து உதைத்து ஒரு வேனுக்குள் தள்ளி ஓட்டிச் செல்கிறான். இந்தக் கடத்தலைப் பார்த்த ஒருவர் போலீசுக்கு குற்றச்சம்பவத்தைத் தெரிவிக்கிறார்.
பயன்பாட்டில் இல்லாத, ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கும் பாக்டரி மாதிரியான இடத்துக்கு அலெக்ஸ் கொண்டு செல்லப்படுகிறாள். கடத்தியவன் அவளை ஒரு மரக்கூண்டுக்குள் தள்ளி பூட்டி வைக்கிறான். அந்தக் கூண்டு மெல்ல மெல்ல மேலே உயர்த்தப்படுகிறது. கூரையிலிருந்து தொங்கும் அலெக்ஸிடம், நீ கொஞ்சம் கொஞ்சமாகச் சாவதை நான் பார்க்க வேண்டும், என்று சொல்கிறான் அவன்.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் போலீஸ்காரர்கள் கடத்தல் நடந்த இடத்துக்கு வந்து துப்பு துலக்குகிறார்கள். ஆனால் அவர்களால் உருப்படியான எதையும் தெரிந்து கொள்ள முடிவதில்லை. கடத்தப்பட்டது யார், கடத்தியது யார் என்ற அடிப்படைத் தகவல்கள்கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை. கமி வர்ஹூவன் தயக்கத்துடன் இந்தக் குற்றத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறார். விசாரணையின் எதிர்பாராத திருப்பங்கள் கமாண்டன்ட் வர்ஹூவனையும் நம்மையும் உள்ளிழுத்துக் கொள்கின்றன.
18 Nov 2013
The Thief - Fuminori Nakamura
Posted by
நட்பாஸ்
பதிவர்: எஸ். சுரேஷ் (@raaga_suresh)
பலமுறை ஜப்பானுக்கு சென்று வந்தவன் என்ற முறையில், இந்த நாவலில் என்னை வசீகரித்த முதல் விஷயம் ஜப்பானில் பிக்பாக்கெட்டுகள் இருக்கிறார்கள் என்ற தகவல்தான். மிக நெரிசலான ரயில் பயணங்களில்கூட என் பாக்கெட்டில் பர்ஸ் பத்திரமாக இருக்கிறதா என்று நான் கவலைப்பட்டதில்லை. ஜப்பான் மிகவும் பாதுகாப்பான இடம் என்பதில் எனக்கு அத்தனை நம்பிக்கை இருந்திருக்கிறது. இதுவரை என் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும்படியாக எதுவும் நடக்கவுமில்லை. எனவேதான் ஒரு ஜேப்படி திருடனை நாயகனாகக் கொண்ட ஃபூமிமோரி நகமுராவின் "The Thief" நாவலைப் படிப்பது ஒரு ஆச்சரியமான அனுபவமாக இருந்தது.
இத்தனை நாட்கள் எங்கு ஒளிந்து கொண்டிருந்தானோ தெரியாது, நிஷிமுரா டோக்கியோவுக்குத் திரும்புகிறான். அவன் அங்கு தனக்கு நன்றாகத் தெரிந்த தொழிலைத் தொடர்கிறான் - பிக்பாக்கெட் அடிப்பது. நிஷிமுராவுக்கே தான் ஏன் டோக்கியோவுக்குத் திரும்ப வந்தோம் என்று குழப்பமாக இருக்கிறது - அவன் தன் தொழிலைத் தொடர்வதர்காகத் திரும்பி வருகிறானா, அல்லது ஒரு காலத்தில் தனக்கு ஆசானாகவும் நண்பனாகவும் இருந்தவன் என்ன ஆனான் என்பதைக் கண்டுபிடிக்கத் திரும்புகிறானா? திரும்பிய நோக்கம் எதுவாக இருந்தாலும், இப்போது கடந்த காலத்தில் நடந்தது என்ன என்று முழுமையாக அறிந்து கொள்ள விரும்புகிறான். ஆனால் அவன் கனவிலும் நினைத்துப் பார்க்காத வகையில் கடந்த காலம் சமகால நிகழ்வுகளைக் கைப்பற்றிக் கொள்கிறது - இதனால் நிஷிமுரா கடும் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியதாகிறது.
7 Nov 2013
Black Seconds - Karin Fossum
Posted by
நட்பாஸ்
பதிவர்: எஸ். சுரேஷ் (@raaga_suresh)
காரின் ஃபோஸ்சுவின் "Black Seconds' நாவலின் பின்னட்டை வாசகம், பத்தே வயதான ஒரு பெண் காணாமல் போவதைப் பற்றிய கதை இது, என்று சொல்கிறது - சிறு குழந்தைகள் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்படும் உலகை விவரித்தாலும் வழக்கமான மர்ம நாவல்களின் பாதையில்தான் இதுவும் பயணிக்கும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் நான் ஆச்சரியப்படும் வகையில் ஃபோஸ்சுவின் கதை வழக்கமான தடத்தில் செல்லவில்லை, மாறாக மிகவும் நிறைவளிக்கும் மாற்றுப் பாதையொன்றினுள் நுழைகிறது.
பின்னட்டை வாசகம் சொன்னபடிதான் கதை துவங்குகிறது - இன்னும் பத்து நாட்களில் பத்தாம் வயது பிறந்த நாள் கொண்டாடப்போகிற ஐடா, தன் அம்மாவுக்கு டாட்டா காட்டி கையசைத்தபடியே சில இனிப்புகள் வாங்கிக் வர சைக்கிளை ஓட்டிக் கொண்டு ஊரின் மையப்பகுதியை நோக்கிச் செல்கிறாள். மாலை இரவாகிறது, மகள் திரும்பி வருவதில்லை. அவளது நண்பர்களை தொலைபேசியில் அழைத்துப் பேசுகிறாள் அம்மா, ஆனால் ஐடா இந்த நண்பர்கள் எவர் வீட்டிற்கும் செல்லவில்லை. அதன் பின் தனது இளைய சகோதரியை அழைக்கிறாள். இருவரும் ஐடா எங்காவது விளையாடிக் கொண்டிருக்கிறாளா என்று காரோட்டிக் கொண்டு தேடிச் செல்கின்றனர். அவள் எங்காவது நேரம் காலம் மறந்து விளையாடிக் கொண்டிருக்கலாம். ஆனால் அது வீண் தேடல். கடைசியில் காவல்துறையை உதவிக்கு அழைக்கிறார்கள். இதையடுத்து குற்றத்தை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் சயிர் இவர்கள் வீட்டுக்கு வந்து தகவல்களைச் சேகரித்துச் செல்கிறார்.
1 Aug 2013
The Singing Sands - Josephine Tey
Posted by
சிறப்புப் பதிவர்
பதிவர்: எஸ். சுரேஷ் (@raaga_suresh)
த்ரில்லர் புத்தகங்கள் இருவகைப்பட்டவை: முதல் வகை புத்தகம் உங்களைச் சட்டையைப் பிடித்து நிறுத்தி வைத்துக் கொள்ளும். ஞாயிற்றுக் கிழமை இரவுத் தூக்கம் கெட்டாலும் பரவாயில்லை ஒரே மூச்சில் அது அத்தனையையும் படித்து முடிக்கும்வரை விடாது. மூச்சுத் திணறும் வேகத்தில் செல்லும் இந்தக் கதைகளில் அடுத்து வரும் திடுக்கிடும் திருப்பம் என்னவாக இருக்குமோ என்ற ஆவலுடன் நீங்கள் வாசித்துக் கொண்டே செல்வீர்கள். இரண்டாம் வகை புத்தகங்கள் உங்களைக் கதைக்குள் மெல்ல இழுத்துக் கொள்கின்றன. என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குமுன் நீங்கள் இந்தக் கதைகளில் உள்ள பாத்திரங்களைக் குறித்தும் இனி கதை எந்த திசையில் செல்லுமோ என்றும் கொஞ்சம் அதிகமாகவே கவலைப்பட ஆரம்பித்து விடுகிறீர்கள். இங்கே புனைவுக்கென்று தனியொரு தர்க்கமும் வாழ்வும் இருப்பதாகத் தோன்றுகிறது, திடீர் திருப்பங்களைத் தந்து உங்களைத் திக்குமுக்காடச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கதாசிரியரால் அலைக்கழிக்கப்படும் கதை இதிலெல்லாம் கிடையாது.
முதல் வகை கதைகள் உங்கள் ரயில் பயணங்களுக்குத் தேவைப்படலாம், இரண்டாம் வகை கதைகள் சோம்பல் நிறைந்த மழைக்கால வாரயிறுதி நாட்களுக்குத் துணையிருக்கும் - உங்கள் வசமிருக்கும் அபரிதமான அந்த ஓய்வு நேரத்தில் முறையான இடைவெளிகளில் கோப்பை கோப்பையாக தேநீர் பருகியவாறே மர்மத்தின் சுவையை ரசித்து அனுபவிக்கலாம். ஜோசபைன் தே'யின் "The Singing Sands' இரண்டாம் வகையைச் சேர்ந்த மர்ம நாவல் (இதில் மூன்றாம் வகை த்ரில்லரும் உண்டு - இவற்றின் முப்பது நாற்பது பக்கங்களில் நீங்கள் வாசிப்பின் எல்லையைத் தொட்டு அதற்கு மேல் தொடர முடியாமல் நிறுத்தி விடுவீர்கள் - அந்தப் பேச்சு இங்கே வேண்டாம்!).
27 Jul 2013
The Fifth Woman - Henning Mankell
Posted by
நட்பாஸ்
பதிவர்: எஸ்.சுரேஷ் (@raaga_suresh)
முன்னிரவு. பறவைகளை நேசிப்பவன், பறவைகளைப் பற்றிக் கவிதைகள் எழுதுபவன் ஒருவன், தன் பண்ணையில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தை நோக்கிச் செல்கிறான். பருவகாலப் பயணம் செய்யும் பறவைகளை அவன் கவனித்தாக வேண்டும். சாக்கடை ஒன்றைக் கடக்க அதன் மீதிருக்கும் மரப்பலகையில் நடந்து செல்கையில் அது உடைந்து விழுகிறது, அவனும் சாக்கடைக்குள் விழுகிறான். அதனுள் கூராக்கக்கப்பட்ட மூங்கில்கள் செருகி வைக்கப்பட்டிருக்கின்றன. அதன் கூர்முனைகள் துளைத்து அவன் மெல்லச் சாகிறான். காவல்துறையினர் இது திட்டமிட்ட கொலை என்பதை அவதானிக்கின்றனர் - யாரோ ஒருவன் மரப்பலகையை உடைத்து, அதன் கீழிருக்கும் சாக்கடைப் படுகையில் கூர்முனைகளை ஊன்றியிருக்க வேண்டும்.
இதையடுத்து காவல் துறையினர் வழக்கை விசாரிக்கத் துவங்கும் இந்த ஆரம்ப நாட்களில் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. தன் பூக்கடைக்குள் யாரோ ஒருவன் திருட்டுத்தனமாக புகுந்திருக்கிறான் என்று அந்தப் பூக்கடையில் பணிபுரியும் உதவியாளர் புகார் செய்கிறார். ஒருவன் உள்ளே புகுந்தததற்கான தடயங்கள் கிடைக்கின்றன, ஆனால் கடையில் எதுவும் திருட்டுப் போகவில்லை - ஓரிடத்தில் ரத்தம் குளமாய் தேங்கியிருக்கிறது. இந்தக் குற்றம் குறித்து போலீசுக்கு இருக்கும் குழப்பம் வெகு நாள் நீடிப்பதில்லை.
17 Jul 2013
The Inspector and Silence - Hakan Nesser
Posted by
நட்பாஸ்
பதிவர்: எஸ்.சுரேஷ் (@raaga_suresh)
மௌனமே எவரும் எதிர்கொள்ளக்கூடிய ஆகப்பெருஞ்சுவர். ஹக்கான் நசெர் எழுதிய இந்த நாவலில் இன்ஸ்பெக்டர் வான் வீட்ரன் தகர்க்கமுடியாத மௌனத்தையே தன் விசாரணைகளில் எதிர்கொள்கிறார்.
ஸ்வீடனில், சொர்பினோவோ என்றழைக்கப்படும் தொலைதூர, அழகிய கிராமத்துக்கு வெளியே தனித்திருக்கும் காடுகளில் ஒன்றில் 'தூய வாழ்வு' என்ற மதக்குறுங்குழு ஒன்று 12 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான சம்மர் கேம்ப் நடத்துகிறது. இந்த முகாமில் இருக்கும் சிறுமிகளில் ஒருத்தி காணாமல் போய்விட்டாள் என்ற தகவலை தான் யார் என்பதைக் காட்டிக் கொள்ளாத பெண் குரல் ஒன்று தொலைபேசியில் காவல் துறையை அழைத்துச் சொல்கிறது. 'தூய வாழ்வு' முகாமைக் காவல்துறை தொடர்பு கொண்டு விசாரிக்கும்போது அங்கு எல்லா பெண்களும் பத்திரமாக இருக்கின்றனர், எந்தச் சிறுமியும் காணாமல் போகவில்லை என்று தெரிய வருகிறது.
இரண்டு நாட்கள் சென்ற பின்னர் அதே பெண் போலீசை மீண்டும் அழைக்கிறாள். காணாமல் போன பெண்ணைக் கண்டுபிடிக்க காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை என்று கேட்கிறாள். அந்த ஊரின் போலீஸ் தன் விசாரணையில் உதவச் சொல்லி இன்ஸ்பெக்டர் வான் வீட்ரன்னுக்கு அழைப்பு விடுக்கிறது.
Labels:
Hakan Nesser,
The Inspector and Silence,
எஸ்.சுரேஷ்,
குற்றபுனைவு,
நாவல்
12 Jul 2013
Absolute Friends - John le Carré
Posted by
சிறப்புப் பதிவர்
பதிவர்: எஸ்.சுரேஷ் (@raaga_suresh)
“Tell him I
sent you," she implores him as the train mercifully pulls out. "He is a
graduate but democratic. Everyone in Berlin knows Sasha," which to Mundy
sounds as convincing as everybody in Bombay knows Gupta.
“Go
to Kruzeberg,” Ilse is howling after him, as he waves his last tragic
farewells from the carriage window. “Ask for him there. And look after
him Teddy”, she commands as a peremptory afterthought, which he has no
time to explore before the train conveys him to the next stage of his
life."
அவனது
வாழ்வின் அடுத்த கட்டம் அவனை சாஷாவுக்கு நெருக்கமாக கொண்டு செல்கிறது.
அவனும் சாஷாவும் 'பூரண நண்பர்களா’கின்றனர் (Absolute Friends). நாவலின்
தலைப்பு உணர்த்துவது போல், இது ஒரு பூரண உறவைப் பற்றிய நாவல். சாதாரண மனித
தர்க்கத்துக்கு அப்பால் இந்த உறவுகள் செயல்படுகின்றன என்பதே இதன்
அடிப்படைப் பொருள்.
நாவலின்
துவக்கத்தில் டெட் மண்டி நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஜெர்மானிய
மன்னர் லுட்விக்கின் லிண்ட்ராஃப் கோட்டைக்கு வரும் ஆங்கிலம் அறிந்த
சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக இருக்கிறான் அவன். குழந்தை
ஒன்றுக்குத் தாயாய் தனித்திருக்கும் ஒரு முஸ்லிம் பெண்ணைத் தன்
உயிர்த்துணையாக கண்டடைந்திருக்கிறான், அவளது மகனைத் தன் மகனாக ஏற்றுக் கொண்டிருக்கிறான். இறந்த காலம், மண்டியின் நெடுங்கால நண்பன்
சாஷாவின் உருவில் இவர்களின் அமைதியான வாழ்வுள் மெல்ல நுழைகிறது.
4 Jul 2013
The Draining Lake - Arnaldur Indriðason
Posted by
சிறப்புப் பதிவர்
பதிவர் : எஸ்.சுரேஷ் (@raaga_suresh)
ஐஸ்லாந்திலிருக்கும் ஒரு ஏரி மர்மமான முறையில் வற்றிக் கொண்டிருக்கிறது; அந்த ஏரிக்குள் இறங்கும் பெண்ணொருத்தி ஒட்டுக் கேட்கும் கருவியொன்று கட்டப்பட்டிருக்கும் ஒரு எலும்புக் கூட்டை காண்கிறாள். காவல் துறை சம்பவ இடத்துக்கு வருகிறது; அந்த ஒட்டுக் கேட்கும் கருவியில் "Made in Russia" என்று பொரிக்கப்பட்டிருப்பதை கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்கள்; உளவறியும் நோக்கங்களுக்கு அது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். கருவியின் தொழில்நுட்ப விபரங்களைக் கொண்டு மேலும் துப்பு துலக்கி, அந்த எலும்புக்கூடு 1970களிலிருந்தே ஏரியில் கிடக்கிறது என்ற முடிவுக்கு வருகிறார்கள். இன்ஸ்பெக்டர் எர்லண்டர் ஸிவன்ஸன் தலைமையில் விசாரணை துவங்குகிறது; 1970களில் காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுகிறார்கள். காவல் துறைக்கு இந்த விசாரணையில் எந்த ஆர்வமும் இல்லை. விசாரணையைக் கைவிட அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், எர்லண்டர் அதெல்லாம் முடியாது என்று விசாரணையைத் தொடர்கிறார். பல தசாப்தங்களுக்கு முன்னர் நடந்திருக்கக்கூடிய என்ற ஒரு கொலையை, எந்தவொரு துப்பும் இல்லாமல், எப்படிப் படிப்படியாக எர்லண்டர் கண்டுபிடிக்கிறார் என்பது இந்த மர்ம நாவலில் ஒரு இழை.
இந்நாவலில் இரண்டு வெவ்வேறு இழைகள் ஓடுகின்றன. ஒன்று, விசாரணை இழை. மற்றொன்று கொலைக்கு பின்னாலிருக்கும் காரணத்தை விளக்கும், கடந்த காலத்தைத் திரும்பக் கோர்க்கும் இழை. இரண்டாவது இழைதான் ஆர்வமூட்டுவதாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது. அது, லட்சியவாதியான ஒரு இளம் மாணவனைப் பற்றியது. கம்யூனிசத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்படும் அவன், பனிப்போர் காலத்தில் கிழக்கு ஜெர்மனியின் லைப்சிஷ் நகரத்தில் தன் மேற்படிப்பைத் தொடர முடிவு செய்கிறான். தீவிரமான கொள்கைப் பிடிப்புள்ள இளமையின் ஆர்வத்தோடு லைப்சிஷ் வரும் அவன், தன்னுடைய கம்யூனிசக் கொள்கைகளால் உலகையே தன்னால் மற்றிவிட முடியும் என்று நம்புகிறான். ஆனால், அவனுடைய நிஜ உலகம் அவனுடைய லட்சிய உலகத்தைக் காட்டிலும் வித்தியாசமாய் இயங்குகிறது என்பதைப் பின்னர்தான் உணருகிறான். தொடர்ந்த கண்காணிப்பு, அரசுக்கும் அதன் லட்சியங்களுக்கும் தான் விசுவாசமாக இருப்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டிய தேவை, எப்போதுமிருக்கும் பயமும் மூச்சுமுட்டலும் - கிழக்கு ஜெர்மனியின் ஃபாசிசப் போக்கு அவனுக்கு புரியத் தொடங்குகிறது. அந்தச் சூழலில், யாரையுமே - நெருங்கிய நண்பர்கள் உட்பட - யாரையுமே நம்ப முடியாது. பெரியண்ணன் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய உளவாளிகள் மூலம் மட்டுமல்ல, உங்களுடைய நண்பர்கள், அக்கம்பக்கத்தவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்று அனைவரைக் கொண்டும் பெரியண்ணன் உங்களை கவனித்துக் கொண்டேயிருக்கிறார்.
25 Jun 2013
The Devotion of Suspect X - Keigo Higashino
Posted by
சிறப்புப் பதிவர்
சிறப்புப் பதிவர்: எஸ். சுரேஷ் (@raaga_suresh)
தன்
கணவனிடமிருந்து விவாக ரத்து பெற்ற யாசுகோ டீனேஜ் மகளுடன் வாழ்ந்து
கொண்டிருக்கிறாள். சாப்பாட்டுக் கடையொன்றில் வேலை செய்யும் அவள், தான் தன்
கடந்த காலத்தைக் கடந்து வந்துவிட்ட நினைப்பில் இருக்கிறாள். ஆனால், அவள்
வேலை செய்து கொண்டிருக்கும் கடைக்கு அவளது முன்னாள் கணவன், டோகாஷி,
வரும்போது கடந்த காலம் அவளைப் பிடித்துக்கொள்கிறது.
வேலை
செய்யும் இடத்தில் அவனோடு சண்டை போட்டுக் கொண்டிருக்க மனமில்லாத அவள்,
அவனை ஒரு ரெஸ்டாரண்டில் சந்திக்க ஒப்புக் கொள்கிறாள். அங்கு அவனிடம்
பேசிவிட்டு இனி நீ என்னைத் தொல்லை செய்யக்கூடாது என்று சொல்லி வீடு
திரும்புகிறாள் யாசுகோ. ஆனால் அவளைப் பின்தொடர்ந்து டோகாஷியும் அவளது
வீட்டுக்கு வந்து விடுகிறான்.
அபார்ட்மெண்ட்டில்
மற்றவர்கள் முன்னால் அவனோடு சண்டை போட்டுக் கொண்டிருக்க மனமில்லாமல்
வேண்டா வெறுப்பாக அவனைத் தன் வீட்டுக்குள் வர அனுமதிக்கிறாள் யாசுகோ. அவன்
வந்த கொஞ்ச நேரத்திலேயே அவளது மகள் மிசாடோ ஸ்கூல் விட்டு வீடு
திரும்புகிறாள். மிசாடோவுக்கு டோகாஷி வளர்ப்புத் தந்தை முறை.
பணம்
கொடுத்து தன் முன்னாள் கணவனை வீட்டைவிட்டு வெளியேற்றப் பார்க்கிறாள்
யாசுகோ. அவள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளும் டோகாஷி, மிசாடோ பற்றி
மோசமாகப் பேசுகிறான். அதனால் கோபமடைந்த மிசாடோ ஒரு பூச்சட்டியை எடுத்து
டோகாஷியைத் தாக்குகிறாள். அடி விழுந்ததும் டோகாஷிக்குக் கோபம் வந்து
விடுகிறது. மிசாடோவை பதிலுக்குத் தாக்குகிறான். தன் மகளை அவன் கொன்று விடப்
போகிறான் என்ற பயத்தில் யாசுகோ மின்சார வடத்தைக் கொண்டு டோகாஷியின்
கழுத்தை இறுக்கிக் கொலை செய்து விடுகிறாள்.
21 Jun 2013
Miss Smilla’s Sense of Snow - Peter Hoeg
Posted by
சிறப்புப் பதிவர்
சிறப்புப் பதிவர்: எஸ்.சுரேஷ் (@raaga_suresh)
![]() |
aka. Miss Simlla's Feeling for Snow |
ஆறு வயதுச் சிறுவன் ஒருவன், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல்தளத்திலிருந்து கீழே விழுந்து செத்துப் போகிறான். அது வெறும் விபத்து என்று சொல்லி வழக்கை முடிவுக்குக் கொண்டு வர காவற் துறையினர் விரும்புகின்றனர். அதே குடியிருப்பில், அந்தச் சிறுவனோடு நட்பாக இருக்கும் மிஸ் ஸ்மில்லாவுக்கு அச்சிறுவனின் மரணம் விபத்து என்பதில் நம்பிக்கையில்லை.நடந்ததை அறிய அவரே தொடங்கும் விசாரணை அவர் உயிருக்கே உலை வைக்கப் பார்க்கிறது.
நாவலின் கதையென்று எடுத்துக் கொண்டால், த்ரில்லர் வகையைச் சேர்ந்த எந்த ஒரு நாவலின் கதையாகவும் இது இருக்கலாம். கதையின் நாயகமாக ஒரு பெண்; அவள் அபரிதமான திறமை கொண்டவள், ஆனால் சமூக உறவுகளில் சிக்கல். அமைதியான, ஆனால் பலசாலியான ஒரு ஆண், அவனிடம் நாயகிக்கு ஒரு ஈர்ப்பு; இக்கட்டான சமயத்தில் அவளுக்கு உதவ அவன் இருக்கிறான்; தங்களுடைய லாபத்தில் மட்டுமே குறியாக இருக்கும் ஒரு நாசகார நிறுவனம்; பதினைந்து நிமிட புகழுக்காக ஈவு இரக்கமில்லாமல் கொலை செய்யத் தயாராக இருக்கும் ஒரு வில்லத்தனமான விஞ்ஞானி. இப்படி ஒரு சாதாரண த்ரில்லருக்குத் தேவையான மசாலாக்கள் அத்தனையும் இங்கே உண்டு. ஆனால் பீட்டர் ஹாக்கின் பனி குறித்தப் புரிதலும், அவருடைய எழுத்து நடையும் படித்துவிட்டுத் தூக்கி வீசும் இன்னொரு நாவலாக இல்லாமல் திரும்பத் திரும்ப வாசிக்கும் நாவலாக Miss Smilla’s Sense of Snowவை காப்பாற்றி விடுகின்றன.
12 Jun 2013
Roseanna (A Martin Beck Novel) - Sjöwall & Wahlöö
Posted by
சிறப்புப் பதிவர்
சிறப்புப் பதிவர்: எஸ். சுரேஷ் (@raaga_suresh)
பெங்குவின் இந்தியாவின் பதிப்பாசிரியராக டேவிட் டாவிதார் இருந்த காலத்தில், தி ஹிந்து நாளிதழின் சண்டே மேகசினில் ஒவ்வொரு வாரமும் ஒரு புத்தகம் அல்லது எழுத்தாளரைப் பரிந்துரைத்து பத்தி ஒன்றை எழுதி வந்தார். அதில்தான் நான் முதலில் பெர் வாஹ்லூ, மாயி கொவால் ஆகிய இருவரையும், அவர்கள் எழுதிய "Laughing Policeman" என்ற நாவலையும் அறிந்தேன். அந்தப் புத்தகம் இங்கேயே கிடைத்தது என் அதிர்ஷ்டம். அதை வாசித்து முடித்ததும் இந்தத் தொடரின் பிற நாவல்களைத் தேடித் தேடி வாசித்தேன். இருவரும் இணைந்து எழுதிய பத்து புத்தகங்களையும் கண்டெடுத்து வாசித்த பிறகுதான் ஓய்ந்தேன்.
இந்தத்
தம்பதியர் எழுதிய முதல் நாவல்தான் ரோஸன்னா. ஸ்வீடனில் உள்ள ஏரிகளில்
ஒன்றில் தூர்வாரும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒரு இளம் பெண்ணின்
உடல் கண்டெடுக்கப்படுகிறது. அந்தப் பெண் உடலில் உடையேதும் இல்லை. அவள்
கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது. ஆனால் அவள் யார்
என்பதையோ எப்போது கொலை செய்யப்பட்டாள் என்பதையோ உள்ளூர் போலீஸ்காரர்களால்
கண்டுபிடிக்க முடியவில்லை. தலைமையகத்திலிருந்து இன்ஸ்பெக்டர் பெக்
வரவழைக்கப்படுகிறார், அவரிடம் இந்த மர்ம வழக்கு ஒப்படைக்கப்படுகிறது.
இன்ஸ்பெக்டர் பெக் மற்றும் அவரது சகாக்கள் இந்தக் கொலை வழக்கை எப்படி
துப்பறிகிறார்கள் என்பதுதான் நாவலின் மையம்.
5 Mar 2013
The Music Room - நமீதா தேவிதயாள்
Posted by
சிறப்புப் பதிவர்
சிறப்புப் பதிவர்: எஸ். சுரேஷ் (@raaga_suresh)
எத்தனையோ வருடப் பாரம்பரியம் இருக்கும் போதும், இந்தியத் தொல்லிசை பற்றியும் இசைக்கலைஞர்கள் பற்றியும் புத்தகங்கள் மிகக் குறைவாக இருப்பது ஆச்சரியம். குறிப்பாக, மேற்கத்திய இசையின் ஒவ்வொரு வகையையும் சார்ந்த இசைக்கலைஞர்களைப் பற்றிய புத்தகங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, நம்மிடையே இருப்பது சொற்பம். தொல்லிசையை மட்டும் எடுத்துக் கொண்டால் கூட, மகா கலைஞர்களின் வாழ்க்கைகள் விரிவாக ஆவணப்படுத்தப்படவில்லை. செய்தித்தாள்களிலும் பத்திரிக்கைகளிலும் சிதறிக் கிடக்கும் கட்டுரைகளைக் கொண்டு தான் இவர்களில் பலரைப் பற்றி அறிய முடிகிறது. சிலரைப் பற்றி, இது மாதிரி சிதறல்கள் கூட இல்லை. பெரிய கலைஞர்களைப் பற்றிய புத்தகங்களும் வெறும் தனி மனித வழிபாட்டோடு நின்றுவிடுகின்றன. அக்கலைஞர்களைப் பற்றி மிகக் குறைவான அளவிலேயே விமர்சன ஆய்வு செய்யப்பட்டிருக்கும் அல்லது அவர்கள் எப்படிப்பட்ட காலத்தில் வாழ்ந்தார்கள் என்பதைப் பற்றி நாம் எதுவும் அறிந்துகொள்ள முடியாமலிருக்கும்.
Subscribe to:
Posts (Atom)