பட்டினத்தார் - ஒரு பார்வை
ஆசிரியர் : பழ.கருப்பையா
பக்கங்கள் : 102
விலை : ரூ.75
கிழக்கு பதிப்பகம்
ஆசிரியர் : பழ.கருப்பையா
பக்கங்கள் : 102
விலை : ரூ.75
கிழக்கு பதிப்பகம்
***
பட்டினத்தார். இயற்பெயர் சுவேதாரண்யன். திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார். பெரிய செல்வந்தராகப் பிறந்தவர், தக்க வயது வந்ததும் வாணிபம் செய்வதற்காக கடல் கடந்து அனுப்பப்பட்டார். திரும்பி வந்தவர், தன் சொந்தம் பந்தம் சொத்துக்கள் அனைத்தையும் துறந்து துறவி ஆனவர். பட்டினத்தார் பற்றி முதலில் படித்தது ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ புத்தகத்தில்தான். ஒரு தனி அத்தியாயம் முழுக்க இவரைப் பற்றியே எழுதி அதில் அவரது திருமண வாழ்க்கை, தொழில், பின் துறவு மற்றும் அவர் பாடிய பாடல்கள் என அனைத்தைப் பற்றியும் விளக்கியிருப்பார் கவியரசர். அதைத் தொடர்ந்து மேலும் பட்டினத்தாரைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமென்று வாங்கியதே இந்தப் புத்தகம். ஆனால், படிக்கும்போதே தெரிந்தது, இது பட்டினத்தாருடைய வாழ்க்கை வரலாறு கிடையாது என்பது. பின் வேறென்ன இருக்கிறது இந்தப் புத்தகத்தில்? இது பட்டினத்தாரைப் பற்றி ஆசிரியர் செய்த ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு.
