A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts

29 Dec 2015

சுஜாதாவின் '"சிறு சிறுகதைகள்"


சமீபத்தில் சுஜாதாவின் 'சிறு சிறுகதைகள்'  நூலை வாசித்தேன். முன்பு சுஜாதா 2003 வாக்கில் குமுதத்தில் தொடராக எழுதியதன் தொகுப்பு இது.  வெளியிட்டவர்கள் விசா ப்ப்ளிகேஷன்ஸ். புத்தகம்கூட சிறியதுதான் 96 பக்கங்கள். எளிதான, விரைவான வாசிப்பனுபவம்.



3 May 2013

கணையாழியின் கடைசி பக்கங்கள் - சுஜாதா

சுஜாதாவுக்குத் தன் அபார மேதைமையைக் காட்ட வேண்டும் என்ற நோக்கம் கிடையாது.வாசகருடைய ஆர்வத்தைத் தூண்ட வேண்டும், மீதியை அவராகவே தேடிப் படித்துக்கொள்வார்என்பது அவர் கொள்கை. - .முத்துலிங்கம்
 
உலக இலக்கியத்தின் வெற்றிகரமான சிறுகதைகளாக நமக்குக் கிடைக்கும் கதைகளில் எவற்றுக்கும் குறையாத பத்து கதைகளையேனும் சுஜாதா எழுதியுள்ளார் - ஜெயமோகன்
 
எண்பதுகளின் துவக்கத்தில் சுஜாதாவைப் படிக்கத் துவங்கிய நாட்களில் அவர் தான் நண்பர்களுக்கு வாத்தியார். எது தொடர்பான சந்தேகம் உண்டானாலும் வாத்தியார் ஏதாவது எழுதியிருப்பார் பாரேன் என்று உடனே சுஜாதாவின் புத்தகத்தைத் தேடி ஒடுவார்கள். அநேகமாக எழுதியிருப்பார். அல்லது எழுதிக் கொண்டிருப்பார்.  - எஸ்.ராமகிருஷ்ணன்
 
**
 
 
தமிழ் எழுத்துலகின் மாஸ்டர்களில் ஒருவரான சுஜாதா அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை ஆம்னிபஸ் தெரிவித்துக்கொள்கிறது! 
நவீனத் தமிழின் வயது 79.
 
கடந்த பிப் 28ஆம் தேதி ஒரு பதிவு போடலாமே என ஆம்னிபஸ் நண்பர் கேட்டபோது, சாகாவரம் பெற்ற சுஜாதாவின் சாதனைக்கு பிறந்தநாள் மட்டுமே முக்கியம் என ஒட்டுமொத்தமாக ஆம்னிபஸ் நண்பர்கள் கூறிவிட்டனர்.



20 Apr 2013

ஸ்ரீரங்கத்துக் கதைகள்- சுஜாதா


ஸ்ரீரங்கத்துக் கதைகள்
சுஜாதா
உயிர்மை
Photo Courtesy/To buy:NHM


ஆம்னிபஸ்சில் மறுபடியும் சுஜாதா எழுதின புத்தகம். 

போன வாரம் ரொம்ப உக்கிரமான வாரம் - வெயில் பற்றிச் சொல்லவில்லை. என்னுக்குள் ஏகப்பட்ட கேள்விகள், அதிலும் இருத்தல் பற்றிய கேள்விகள். இத்தனைக்கும் என்னுடைய வாழ்வில் மிக முக்கியமான தேவைகள் எல்லாம் நிறைவேறியுள்ளன. ஆங்காங்கே சின்னச்சின்னதாய்  நிறைய தோல்விகள், ஏமாற்றங்கள். எல்லாம் என்னுடைய முடிவுகள், என்னுடைய தவறுகள். இது அவ்வபோது எழும் Existential crisisதான். சென்ற வாரம் கொஞ்சம் அதிகமாகிவிட்டது. 

வருடபிறப்புக்கு ஊருக்கு செல்லும்போது, இந்தப் புத்தகத்தை எடுத்துச் சென்று படித்தேன். இந்த சுயபுராணத்துக்கும் புத்தகத்திற்க்கும் இருக்கும் ஒரே தொடர்ப்பு சொந்த ஊர் நினைவுகள். அதுவும் சின்ன வயதில் இருக்கும்போது இருந்ததுபோல் இல்லாமல் இப்போது வேகமாகவே மாறி வரும் ஊர்.  நம் ஊர் நம்மிலிருந்து அந்நியப்படும்போது நாமும் எங்கோ அழிந்துக் கொண்டே வருகிறோம் என்கிற பயமும் அதிகமாகி விடுகிறது.





13 Apr 2013

பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா

சில புத்தகங்களுக்கு ஆம்னிபஸ்சில் விமர்சன அறிமுகம் எழுதாமல் ஆம்னிபஸ்சை நாங்கள் ஆரம்பித்த நோக்கம் நிறைவேறாது என நினைத்துக் கொள்வேன். பெரும் இலக்கியங்களெல்லாம் இல்லை அவை. என்னைப் போன்ற ஒரு சராசரி வாசகனை நெருக்கமாகத் தொட்ட சில புத்தகங்கள். தொட்டால் தொடரும், கரையெல்லாம் செண்பகப்பூ, சிலநேரங்களில் சில மனிதர்கள் மற்றும் இன்னபிற. பொன்னியின் செல்வனையும் அடிக்கடி நினைப்பதுண்டு. May be, பொன்னியின் செல்வனுக்கு ஆம்னிபஸ் ஒரு வாரம் முழுக்க ஒதுக்கவேண்டியிருக்கலாம். பார்ப்போம்.

சரி, இன்றைய புத்தகத்திற்கு வருவோம். கிட்டத்தட்ட ஒரு வீம்புக்குத்தான் இந்தப் புத்தகத்தை மறுவாசிப்பிற்குக் கையில் எடுத்தேன். பலவருடங்களுக்கு முன் படித்தது.

வீம்பு? அதைப் பின்பு பார்ப்போம்.



23 Mar 2013

சுஜாதாவின் குறுநாவல்கள் -மூன்றாம் தொகுதி -கணேஷ்-வசந்த்

சுஜாதாவின் குறுநாவல்கள்
மூன்றாம் தொகுதி
கணேஷ்-வசந்த்


I think that novels that leave out technology misrepresent life as badly as Victorians misrepresented life by leaving out sex.
- Kurt Vonnegut, A Man without a Country

நம்மில் எத்தனை பேர் ஒரு குற்றத்தை நெருங்கிப் பார்த்திருக்கிறோம்? ஒரே ஒரு கொலை? சாலை விபத்துகூட நிறைய பேர் பார்த்திருப்போம். ஆனால் ஒரு கொலை?

நாம் நெருங்கிப் பழகாத காரணத்தால், கொலை செய்தவனின் மனநிலை நமக்கு குற்றவாளி யார் என்பதைவிட பெரிய மர்மமாக இருக்கிறது. நம்மில் பல பேருக்கு அந்த மாதிரி உணர்வெல்லாம் அந்நியம், இல்லையா? அதற்காக கொலையும் கற்று மற என்று சொல்ல வரவில்லை - கொலை செய்தவனின் எண்ணங்களை ஒரு நாவலாகவோ, கதையாகவோ படிக்கிறோம்.  அதிலிருந்து ஒரு விதமான திருப்தி அடைகிறோம். குற்றபுனைவு கதைகளின் அடிநாதமே மனித மனதின் தீராத கொலைவெறியை நிறைவேற்றித் தருவதுபோல் இருக்கிறது. வாத்தியாரைக் கேட்டால், இது தானடோஸ் இன்ஸ்டிங்க்ட் http://en.wikipedia.org/wiki/Thanatos#In_psychology_and_medicine  என்று சொல்லி சமகால அறிவுஜீவிகளிடம் திட்டு வாங்க வைத்திருப்பார்.


19 Mar 2013

சுஜாதாவின் புதிய பக்கங்கள்

சிறப்பு  பதிவர் : மாதவ சோமன்

கடந்த நாற்பத்து சொச்ச வருடங்களில் தம் எழுத்தில் சுஜாதா நடையின் பாதிப்பு இல்லாமல் எழுதவல்ல வாசக எழுத்தாளர்கள் இங்கே அபூர்வாபூர்வம். (ஹப்பா…. கடைசியாக நானும் இந்த வழமையான பத்தியை ஒருமுறை எழுதிப் பார்த்துவிட்டேன்  )

கணையாழி இதழின் கடைசிப் பக்கங்களில் சுஜாதா (1968 முதல் 1993 வரை)  எழுதிய நூற்று (அல்லது இருநூற்று) சொச்ச கட்டுரைகளில் நாற்பது கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து ‘குமரிப் பதிப்பகம்’ 1993’ல் வெளியிட்ட புத்தகமே இது.



2 Mar 2013

சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி

சுஜாதாவின் குறுநாவல்கள்

(கணேஷ்-வசந்த்)
நான்காம் தொகுதி
 Photo Courtesy:/to Buy:உயிர்மை

 சென்ற வாரம் சுஜாதாவின் குறுநாவல்கள் முதல் தொகுதியைத் தொடர்ந்து இந்த வாரம், கணேஷ்-வசந்த் தோன்றும் குறுநாவல்கள். தமிழில் ராஜேஷ்குமாரின் குற்றபுனைவுகள் நிறைய வாசித்து இருக்கிறேன். அதுதான் குற்ற புனைவு கதைகளுக்கும் எனக்குமான முதல் உறவு. அதற்கு அப்புறம் இரட்டையர் சுபா எழுதிய கதைகளும் கொஞ்சம் வாசித்திருக்கிறேன். சுஜாதா எழுதி, நான் முதலில் வாசித்த குற்றபுனைவு எது என்று இப்போது நினைவில் இல்லை. ஆங்கிலத்தில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் நிறைய வாசித்திருக்கிறேன். இவை தவிர இன்னும் கொஞ்சம் வாசித்திருக்கிறேன், எல்லாவற்றையும் பட்டியல் போடும் அளவுக்கு நினைவில்லை. ஆக என்னுடைய வாசிப்பு அனுபவம் குற்றபுனைவை பொறுத்தவரை மிகவும் சிறிது. இதை மனதில் இருத்திக் கொண்டு இந்தப் பதிவை வாசிக்க வேண்டும்.

                                              



25 Feb 2013

நிலா நிழல் – சுஜாதா


ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் லட்சியம் பல தடைகளைத் தாண்டி வெற்றிபெறும்போது அது சாதனையாகிறது. தடைகள் என்பது பெரும்பாலும் திசைதிருப்புதல்களாகவே அமையும். இலவசமாக கொடுக்கப்படுவதில் வெறுக்கப்படுவது அறிவுரைகள் மட்டுமே. நமக்கான பாதையில் ஒவ்வொரு சிக்னலிலும் ஒருத்தர் நின்று கொண்டு அவர்களின் பாதையை நமக்குள் திணிப்பார்கள். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று லட்சியம் நோக்க நடந்துகொண்டிருக்கும் நமக்கு வேறொரு வழி போகும் ஒரு சொகுசுப் பேருந்து மனதிலொரு சஞ்சலத்தை ஏற்படுத்தும். அந்த கணத்தில் சரியாக எடுக்கப்படும் ஒரு தவறான முடிவு நம்மை வேறொரு பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும்.

இந்த நாவல் சுற்றிவருவது ஒரு குடும்பம், குறிப்பாக ஒருவனை மட்டுமே. முகுந்த். முகுந்தனின் கிரிக்கெட் ஆசை. நம் நாட்டில் தேசப்பற்றினை பொங்கிவழியச்செய்யும் வஸ்துக்களில் கிரிக்கெட்டுக்கு எப்போதும் ஒரு முக்கிய இடமுண்டு. சச்சினை கடவுளாகக் கும்பிடுவதிலிருந்து மகனுக்கு சச்சின் என்று பெயர்சூட்டுவது வரை எல்லாமே இதில் அடக்கம். நான் கூட அதே மதம்தான். எங்கள் மதம் கிரிக்கெட், எங்களுக்கான கடவுள் சச்சின். இருபத்தி மூன்று வருடங்களாக பள்ளி, கல்லூரி, வேலை என்று இடங்களும், கடமைகளும் மாறுந்தோறும் எனக்குள் திணிக்கப்படும் பிரச்சினைகளை சமாளிக்கவேண்டிய கட்டாயங்களில், ஆறுதல் சொல்ல யாருமற்ற அரைவட்ட நிலவொளிகளில், பலநாட்களை கடந்து வந்திருக்கிறேன். சொல்ல விஷயங்கள் பலவிருந்தும் கேட்க யாருமற்ற ஒரு தனிமையில் இதயச்சிறைகளில் துயரத்தின் ஓலம் எதிரொலிக்கும் வேளைகளில், கதறி அழவிரும்பாத ஆண்மையில், இவற்றையெல்லாம் மறக்க ஒரு நேரக்கடத்தியாக அறிமுகமாகி ஒரு போதையாகி பின்னர் அதுவே ஒர் மருந்தாகவும் ஆனதெனக்கு கிரிக்கெட். முக்கியமாக சச்சின்.

முகுந்த், நன்றாக கிரிக்கெட் ஆடக்கூடிய ஒரு வளர்ந்த, கல்லூரி செல்லும் சிறுவன், இளைஞன். நன்றாய்ப் படிக்கும் ஒருவனுக்குத் தம்பியாகவும், படிப்பு மட்டுமே வாழ்வை உயர்த்தும் எனுமொரு உயர்கொள்கை கொண்ட தந்தைக்கும் மகனாகவுமானவன். லட்சியத்தின் போக்கில் நமக்காக வாய்ப்புகள் வருவதென்பதரிது. முகுந்தனின் விளையாட்டுத்திறனை அறிந்து பல்கலைக்கழக அணியில் ஆட வாய்ப்பு வருகிறது. அதுவும் பம்பாய்க்கு சென்று. படிப்புதான் உன்னை உயர்த்தும் என்று தடை போடுகிறார் அப்பா. வேறு வழியில்லை லட்சியத்தை விட்டு வேறு வேலை பார்ப்போம் என்று மனதொடிந்த நிலையில் ஆர்த்தி மூலமாக ஒரு வாய்ப்பு வருகிறது. முகுந்த் பொய் சொல்லி பம்பாய் செல்கிறான், கிரிக்கெட் ஆட.
ஒரே ஆறுதலாக இருக்கும் அம்மா, அப்பாவிடம் போட்டுக் கொடுக்கும் அண்ணன், ஒழுங்காக பயிற்சிக்கு செல்லமுடியாததால் திட்டும் கோச், நன்றாக பவுலிங் போடுவதால் தன்னை வெறுக்கும் சக விளையாட்டுக்காரன் என அனைத்தும் பாதகங்களாகி வெறுப்பிற்கு இட்டுச்செல்கிறது முகுந்தனை. அந்த சமயங்களிலெல்லாம் அதிகமாக நேசிக்கிறான் கிரிக்கெட்டை. தனது இயலாமைகள் மாறும் எனும் கனவோடு.

பொய் சொல்லி பம்பாய்க்கு சென்று கிரிக்கெட் ஆட, முதலிரண்டு மேட்ச்களில் முகுந்தன் தான் மேன் ஆப் த மேட்ச். மும்பையில் தூரத்து உறவுக்காரியான மாடர்ன் லல்லி மேல் காதலாகிறான். முந்தைய எல்லா சிக்கல்களின்போதும் பொறுமைகாத்து தனக்கான நாள் வருமென காத்திருந்தவன் லல்லியிடம் மயங்கி தனக்கான நாளை வீணடிக்கிறான். முகுந்தன் இல்லாது அவன் ஆடும் அணி தோற்கிறது. அவளிடம் பெற்ற முத்தமும், அவளின் ஸ்பரிசமும் முகுந்தனைத் தொலைக்கிறது. ஒவ்வொருத்தனின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாளோ இல்லையோ, தோல்விக்குப் பின் நிச்சயம் ஒருத்தி இருப்பாள். இந்த போதையிலிருந்து விடுபட்டவன் எப்படி லட்சியத்தை அடைகிறான் என்பதே மிச்சம்.

லட்சியத்தை மிக நேசிக்கும்பொருட்டு எந்தத் தடையோ மனப்பிறழ்ச்சியோ வந்தாலும் அந்த உயர் லட்சியம் நம்மை சரியான பாதைக்கு இழுத்துவிடும். ஒரு சுய-முன்னேற்றத்தனமான கதையாகத் தோன்றினாலும் சொல்லப்பட்ட விதம் நடுவில் எங்கும் இடைநிறுத்த முடியாத அளவு சுவாரஸ்யமானது. சில புத்தகங்களைப் படிக்கும்போது நாயகனோடு நம் மனம் பயணப்படும். சில புத்தகங்களில் மட்டுமே நாயகனாகவே தன்னை பாவித்துக் கொள்ளும். அத்தகைய வகையில் நான் கடந்து வந்த பாதையை ஒவ்வொரு பக்கத்திலும் நினைவூட்டிய ஒரு புத்தகமிது. கிரிக்கெட்டை காதலிப்பவர்களுக்கு நிச்சயம் பரிந்துரைப்பேன்.

நாவல் | சுஜாதா | பக்கங்கள் 168 | விலை ரூ. 115
இணையத்தில் வாங்க: கிழக்கு

23 Feb 2013

சுஜாதாவின் குறுநாவல்கள் 1

சுஜாதாவின் குறுநாவல்கள்
முதல் தொகுதி
 Photo Courtesy/to buy: உயிர்மை


சுஜாதாவின் பல புத்தகங்களை மூன்று வருடங்கள் முன்பு தொடர்ச்சியாக வாசித்தேன். அதற்கு அப்புறம் சில பல வேலைகள் இருந்ததால் புத்தகம் வாசிக்கும் பழக்கமே நின்று போய், இப்போது ஆம்னிபஸ்க்காக தொடர்ச்சியாக புத்தகம் வாசிக்கும் பழக்கம் மீண்டும் தொற்றிக் கொண்டுவிட்டது. ஏனோ சுஜாதாவின் புத்தகங்களை  மறு வாசிப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனத்தின் ஓரத்தில் இருந்து கொண்டே இருந்தாலும், புதிய புத்தகங்களை படிக்க முடியாமல் போய் விடுமே என்ற பயம் இருந்ததால் இதை ஒத்திப் போட்டுக் கொண்டே வந்தேன். அதைப் போக்கும் பொருட்டுதான் சென்ற இரண்டு வாரங்களாக சுஜாதாவின் இரண்டு (இலக்கிய) புத்தகங்களை அறிமுகம் செய்தேன். அதைத் தொடர்ந்து இந்த வாரம் அவரின் குறுநாவல்கள் (கால வரிசைப்படி தொகுக்கப்பட்டது)


                                      


9 Feb 2013

தூண்டில் கதைகள் -சுஜாதா



தூண்டில் கதைகள்
சுஜாதா
Photo Courtesy/To buy: Tamil books online



...சம்பிரதாயமான பழைய கால சிறுகதை வடிவம். முடிவில் ஒரு சொடக்கு அல்லது துடிப்பு இவைதான் இந்தக் கதைகளின் பொது அம்சம். இதைப் படிப்பவர்கள் இவை இலக்கியமா இல்லையா என்று கவலைப்பட வேண்டியது இல்லை. உற்சாகமாக, சுலபமாகப் படிக்க முடியும்...
                                                              சுஜாதா (முன்னுரையிலிருந்து)
 
                                                           

இது மாதிரி முன்னாடியே தெளிவாக சொல்லிவிட்டால் இதை இலக்கியமாகப் பொருட்படுத்தலாமா, இதன் உள் அர்த்தம் என்ன, இதில் படிமங்கள் உண்டா, உண்டெனில் அவற்றின் பொருள் என்ன, படிமங்கள் எந்த அளவுக்கு படிமப் பொருளைத் தாண்டிச் செல்கின்றன என்று எல்லாம் கேள்விகளைக் கேட்டு மண்டையைப் போட்டு பிய்த்து கொள்ள வேண்டாம் பாருங்கள். 

குமுதம் இதழில் 12 வார தொடராக வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பே இந்த புத்தகம். மொத்தம் 12 சிறுகதைகள் (12 வாரம் என்றால் 12  சிறுகதைகள், இதுகூடவா தெரியாது!). சுஜாதா முன்னுரையில் சொன்ன மாதிரி, ஒரு சின்ன அதிர்ச்சிதான் கதையின் நாடி, சில கதைகளில் இவை கதையின் கடைசி வரியில் வருகின்றன, சில கதைகளில் கடைசி பத்தியாக வருகின்றன. ஒருசில ஆண்டுகள் முன்னமேயே இந்தத் தொகுப்பைப் படித்திருந்தாலும், யாரைப் படிப்பது என்று குழப்பம் இருப்பதால், படித்ததையே மீண்டும் படிப்போம் என்று முடிவு செய்து விட்டேன். இந்த கதைகளின் முடிவை நீங்களே படித்து தெரிந்துக் கொள்ளுங்கள், கதையின் சுருக்கம் மட்டுமே, இங்கு சொல்ல விரும்புகிறேன்.



5 Jan 2013

சிறுகதை எழுதுவது எப்படி - சுஜாதா

சிறப்புப் பதிவர்: மாதவ சோமன்

”சிறுகதை எழுதுவது எப்படி?” - இந்தத் தலைப்பைப் பார்த்ததும் உங்களில் எத்துணை பேர் “சிறுகதை எழுதுவது எப்படி” என்பதைத் தெரிந்து கொள்ள இங்கே ஏதேனும் கிடைக்கும் என்று இதை வாசித்துக் கொண்டிருக்கிறீர்களோ நானறியேன்.  அப்படி யாரேனும் தடம்தவறி இதை வாசித்துக் கொண்டிருந்தால் முதலிலேயே அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு விடுகிறேன்.

நானும் ஒரு காலத்தில் யாரேனும் எழுதும் ஏதேனும் குறிப்புகளைக் கொண்டு சிறுகதை எழுதிவிட முடியும் என்று நினைத்திருந்தவன்தான். ஸ்டெய்ட்டா ஹீரோ என்கிற கனவெல்லாம் இல்லை நமக்கு. முதலில் சிறுகதை, பிறகு குறுநாவல், அதற்கு அப்புறம் நாவல், பின்னர் மெகாசீரியலுக்கு வசனம், வாய்ப்பு அமைந்தால் சினிமாவுக்கு வசனம், கூடவே கதையும், அதிஷ்டம் கதைவைத் தட்ட டைரக்‌ஷன், பிறகு டைரக்டர் கம் ஹீரோ வேடம், அரசியல் நுழைவு, எம்.எல்.ஏ., அமைச்சர், முதலமைச்சர் இப்படிப் படிப்படியாக வளர்ச்சி காணவேண்டும் என்ற கனவில் இருந்தவன் நான். அப்படிப்பட்ட கனவுகாண வல்ல வயதில் நம் கையில் சுஜாதா எழுதிய இந்தப் புத்தகம் அகப்பட்டது.



14 Nov 2012

ஆழ்வார்கள். ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்
ஆசிரியர் : சுஜாதா
பக்கங்கள் : 158
விலை : ரூ.80
கிழக்கு பதிப்பகம்.

***



தமிழ்ப் பற்று உள்ளவரா? ஆழ்வார்கள் தமிழை எப்படி கையாண்டுள்ளார்கள் என்று படிக்க வேண்டுமா?

அல்லது

பக்தியில் ஈடுபாடு உண்டா? ஆழ்வார்கள் இறைவனை, திருமாலை எப்படியெல்லாம் வர்ணித்து, அவனை புகழ்ந்து பாடி, போற்றி துதித்தார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

அல்லது

சங்க காலத்தில் சைவ மற்றும் இதர சமயங்கள் எப்படி இருந்தன? வைணவ ஆழ்வார்கள் யாரெல்லாம் மற்ற சமயத்தாரோடு எப்படியெல்லாம் வாதாடி வென்றார்கள் என்ற விவரங்கள் வேண்டுமா?

இதெல்லாம் தெரிந்து கொள்வதற்கு, ஆழ்வார்கள் பற்றி, அவர்களின் பாடல்களை படிக்க வேண்டும். ‘ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்’ என்று அழைக்கப்படும் மொத்தம் நாலாயிரம் பாடல்கள்.

18 Oct 2012

சுஜாதாவின் ‘ஓரிரு எண்ணங்கள்’



வெகுஜன பத்திரிக்கைகளில் ’பத்தி’ எழுத்தை பரவலாக அறிமுகப்படுத்தியவர் சுஜாதா. அதுவரை கட்டுரைகள் என்றால் - ஒற்றைச் சங்கதிகளை மையமாகக் கொண்டு தீவிரமானச் சமூகக் கட்டுரைகள் பாரதியார், வ.உ.சி போன்றவர்கள் தொடங்கி வைத்த உரைநடை பாணியில் இருந்தன. தமிழில் column என்பதைப் பிரபலமாக்கியதோடு மட்டுமல்லாது, அமெரிக்க நாளிதழ்களான டைம்ஸ், சயிண்டிஃபிக் அமெரிக்கன் போன்றவற்றில் வந்த பத்திகளின் பாணியில் கலவையான வடிவத்தைத் தொடங்கிவைத்தவரும் சுஜாதா தான். சிறுகதைகள் தவிர அவரது எழுத்து இன்றளவும் பேசப்படுவதற்கு பத்தியாளராக அவர் எழுதிய கடைசி பக்கங்கள், நீர்குமிழி, கற்றதும் பெற்றதும், இன்னும் சில எண்ணங்கள் போன்றவை முக்கியமானக் காரணம்.

சுருக்கமாகவும் அதே சமயம் மிக கூர்மையான அவதானிப்புகளைக் கொண்ட அவரது பத்தி எழுத்துகளைக் கொண்டே அவரது எழுத்துலக வாழ்வின் பரிமாணங்களை நாம் அளந்துவிட முடியும். இது முழுமையான வாசிப்பு இல்லையென்றாலும் அரை நூற்றாண்டுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருந்த படைப்பாளியை அணுக நம்மிடையே இருக்கும் பல சாத்தியங்களில் இதுவும் ஒன்று.



17 Oct 2012

இன்னும் சில சிந்தனைகள் - சுஜாதா



இன்னும் சில சிந்தனைகள்
ஆசிரியர் : சுஜாதா
உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள்:143
விலை: ரூ. 85

அம்பலம் இணையதளத்திற்காக வாராவாரம் சுஜாதா எழுதிய கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு இது. ஜனவரி 2005லிருந்து, ஆகஸ்ட் 2006 வரையிலான கட்டுரைகள் - மொத்தம் 69. சுஜாதாவின் கட்டுரைகள்னு சொன்னாலே, பற்பல விஷயங்களை தொட்டிருப்பார்னு தெரியும். அதே போல் இந்த புத்தகத்திலும், ஆழ்வார்கள், சினிமா, தொலைக்காட்சி, யாப்பு, சமகால இலக்கியம் என்று எல்லாவற்றைப் பற்றியும் கட்டுரைகள் உள்ளன.

தன் விரிவான வாசிப்பிலிருந்தும், அனுபவத்திலிருந்தும் சுஜாதா நமக்குத் தந்திருக்கும் இந்த கட்டுரைகள் நமக்கு பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துகின்றன. ஏற்கனவே தெரிந்த விஷயங்கள் அவரின் நகைச்சுவை மூலமாக புதிய பரிமாணத்துடன் தெரிய வருகின்றன. கடினமான தொழில்நுட்பங்களை எளிய தமிழில் அறிந்துகொள்ள இந்த கட்டுரைகள் உதவுகின்றன.

பல தலைப்புகளில் கட்டுரைகள் இருப்பதாலும், அனைத்தையும் இங்கே பார்க்க முடியாது என்பதாலும், மிகச்சில தலைப்புகளை மட்டும் சுருக்கமாக பார்ப்போம்.

ரியாலிட்டி ஷோ

நம்ம தொலைக்காட்சிகளின் ரியாலிட்டி ஷோக்களில் நடத்தப்படும் போலிச் சண்டைகள் / நாடகங்களைப் பற்றி சொல்லிவிட்டு, அவருக்கே ஏற்பட்ட ஒரு அனுபவத்தை சொல்லி சிரிக்க வைக்கிறார். ஒரு முறை மதன், சுஜாதாவுக்கு புத்தகங்கள் அடங்கிய ஒரு பெட்டியை பரிசாக அளிக்க, அதை சுஜாதா திறக்கும்போது படம்பிடிக்க தொலைக்காட்சியினர் வந்திருந்தனர். சுஜாதாவை போலியாக ஆச்சரியப்பட்டு, பெட்டியைத் திறந்து பார்க்குமாறு சொல்ல, இவரும் அதே போல் ‘நடித்து’ கொடுத்தாராம்.

திருவாசகம் ஆரட்டோரியோ

திருவாசகம் ஒலி வெளியீட்டு விழா பற்றி இரு கட்டுரைகள். அந்த விழாவில் பேசிய பிரபலங்கள் யாருக்குமே ஆரட்டோரியோ பற்றிய அனுபவம் இல்லாததால், சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதையோ பேசினார்கள் என்ற பகடியுடன் துவங்கி, கூட்டம் நிறைந்திருந்த ம்யூசிக் அகாடமியில் இளையராஜாவின் இருபது நிமிட ஆரட்டோரியோவில் மக்கள் ஒரு சின்ன சத்தமும் இன்றி ரசித்ததே அவருக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு என்று சொல்லி முடிக்கிறார்.

தேர்தல்

அந்த காலகட்டத்தில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றிருப்பதால், அதைப் பற்றி சில கட்டுரைகள் எழுதியிருக்கிறார். வேட்பாளர்களை பிடிக்குதோ, இல்லையோ, ஓட்டு போடாமல் இருக்கக்கூடாது என்று பார்த்தவர்களையெல்லாம் வற்புறுத்திய இவரது தொகுதியில் இரு நடிகர்கள் நின்றார்களாம். எஸ்.வி.சேகர் மற்றும் நெப்போலியன். இவர்களுக்கு போடாமல் ஐ.ஐ.டி படித்தவர்கள் யாரேனும் நின்றால் ஓட்டு போடலாமென்றால், அப்படி யாரும் இல்லை, ஆகவே காசு சுண்டிப் போட்டுதான் முடிவெடுக்க வேண்டும் என்று எழுதுகிறார்.

EVM

இந்தியத் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வடிவமைப்பில் சுஜாதாவும் பங்கேற்றிருந்ததால், அதைப் பற்றியும் ஒரு பதிவு இருக்கிறது. இயந்திரத்தின் தொழில்நுட்பத்தை விளக்கிவிட்டு அதிலிருக்கும் பிரச்னைகளைப் பற்றியும் கோடிட்டு காட்டியிருக்கிறார்.

புதுமைப்பித்தன் & சுந்தர ராமசாமி

புதுமைப்பித்தனைப் பற்றி ஒரு விரிவான அறிமுகம் கொடுத்துவிட்டு அவரின் படைப்புகளில் அனைவரும் படிப்பதற்காக ஒரு பட்டியலைக் கொடுக்கும் அதே சமயத்தில், சுந்தர ராமசாமியைப் பற்றியும் ஒரு தனி கட்டுரையை கொடுக்கிறார். கனடாவின் இயல் விருது கிடைத்த சுராவிற்கு, சாகித்ய அகாடமி விருது கிடைக்கவில்லை; அதனால் இழப்பு அகாடமிக்கே என்று முத்தாய்ப்பாக முடிக்கும் முன், அவரின் எழுத்துலக வாரிசாக பலர் விண்ணப்பம் போட்டிருப்பதைப் பற்றியும் பகடி செய்கிறார்.

சுஜாதாவின் 70வது வயதின் பிறந்த நாள் கட்டுரையை யாராலும் மறக்க முடியாது. அந்தக் கட்டுரை எழுதியபின் அவருக்கு வந்த தொலைப்பேசி அழைப்புகள், விசாரிப்புகளைப் பற்றியும் நகைச்சுவையுடன் குறிப்பிடுகிறார். பலர் உணர்ச்சிவசப்பட்டு அவர்களின் வயதை இவருக்கு தந்துவிடுகிறேன் என்றதும், தமிழின் மிகப் பிரபலமான க்ளிஷேவான ‘வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்’ என்றதையும் அன்று மட்டும் பல முறை கேட்க நேரிட்டதாகவும் சொல்கிறார்.

இதைத்தவிர, கணிணி, ரெட்ஹேட் லினக்ஸ் பற்றி விளக்கும் தொழில் நுட்பக் கட்டுரைகளும் உள்ளதால் இந்தப் புத்தகம் பாதுகாத்து, படிக்க வேண்டிய ஒன்றேயாகும்.

***



16 Oct 2012

என்றாவது ஒரு நாள் - சுஜாதா


எண்பதுகளின் ஆரம்பத்தில் சுஜாதா எழுதிய ஒரு மிக சுவாரசியமான சின்ன நாவல்.

வெளியே பார்த்தான். சோர்ந்த மாடு ஒன்று வாயில் நுரையுடன் வர்ணக் கொம்புகளை ஆட்டிக் கொண்டு வண்டியிழுக்க அதை அனாவசியமாக, “இந்த!” என்று அதட்டி வண்டிக்காரன் ஒரு வீறு வீறினான்.

சுளீர் என்று புண்ணியகோடியின் உடம்பில் அந்த அடி பட்டது!

“ஏண்டா! அடிமடியிலேயே கையை வைக்கறீயா! போனாப்போறதுன்னு ஏழை அனாதைன்னு வீட்டில வேலை கொடுத்து வீட்டோட வைச்சுக்கிட்டா இந்த வேலை செய்றீயா நீ! ராஸ்கல்” பழையபடி ஒரு சுளீர்

ஒரு காட்சியின் முடிவைக் “கட்” செய்து அதே காட்சியில் முடியும் நிகழ்வை வைத்து அடுத்த காட்சியை “ஓபன்” செய்யும் டெக்னிக் சமீபகாலமாக நம் சினிமாக்கள் கற்ற வித்தை. இதை இப்படி எண்பதுகளின் ஆரம்பத்திலேயே தன் நாவலில் புகுத்தியிருக்கிறார் சுஜாதா. நம் சினிமா ஜனங்கள் அவரிடம் கட் செய்துகொண்டு தங்களிடம் அந்த வித்தையை ஓபன் செய்து கொண்டுவிட்டன.


நாராயணன் என்று ஊர் உலகுக்குத் தன்னை சொல்லிக் கொள்ளும் புண்ணியக்கோடி ஒரு லோக்கல் கிரிமினல். சின்னத் திருட்டு, பெரிய கொள்ளை, கிட்டத்தட்ட கொலை என்று செய்தவன். இந்தக் கதையின் நாயகன். ஜெயிலுக்குப் போய் அங்கிருந்து தப்பி வந்தவன். விதிவசத்தால் துரத்தப்பட்ட, துணையற்ற திலகம் அவனுக்கு அறிமுகம் ஆகிறாள். இவளுக்குத் துணையாய் அவனும், அவனுக்கு ஆதரவாய் அவளும் என நாட்கள் நகர்கின்றன. 

எல்லா ஜில்லாக்களிலும், மாநிலங்களிலும் தேடப்படுபவன். சிறை தப்பியவனைத் தேடும் உள்ளூர் இன்ஸ்பெக்டராக தர்மலிங்கம் வருகிறார். நாராயணன் தப்பியோடும் தடங்களைத் தொடர்ந்து அவனை நெருங்கி நெருங்கி வருகிறார். கட்டிட வேலை, தச்சு வேலை, எனத் தப்பியோடலில் பிழைப்பை மாற்றிப் பிழைத்துக் கொண்டிருக்கிறான் நாராயணன். 

திலகத்தின் வருகை அவனது ஓட்டம் கொண்ட வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறது. அவன் வீட்டில், தினப்படி செயல்களில் நேர்த்திகளைக் கொண்டு வருகிறாள் அவள். தன் வாழ்க்கையின் தப்பியோடும் ஓட்டத்தை ஒருபுறம் நிறுத்திவிட்டு அவளுக்காய் உலகின் ஏதோ மூலை ஒன்றில் வாழ்ந்துவிட விழைகிறது அவன் மனம்.

திலகத்தின் வாழ்க்கைப் புதிரின் முடிச்சுகளை அவன் அவிழ்க்கையில் அது ஒரு சுவாரசிய முடிவை நோக்கி அவனைக் கொண்டு செல்கிறது. கதை நிறைகிறது. கதை நிறைகையில் ஒரு நல்ல த்ரில்லர் சினிமா பார்த்த அனுபவ்த்தைத் தருகிறார் சுஜாதா.

கதையின் அந்த அழகான முடிவு இன்றைக்கு நிறைய சினிமாக்களுக்கு குறும்படங்களுக்கு இன்ஸ்பிரேஷனாகக்கூடும்.

குற்றவாளிகள் எப்படி உருவாகிறார்கள், குற்றங்கள் நடப்பதன் பின்னணி என்ன, குற்றங்களை எப்படித் தடுக்க வேண்டும் என்ற வியாக்கியான ஜல்லியடிகள் கதையில் இருந்தாலும்,  அவற்றையெல்லாம் ஓங்கியொலிக்கும் குரலாய்த் தனியே தராமல் கதையின் போக்கில் சாமர்த்தியமாய்ச் சொல்கிறார் ஆசிரியர்.

தொடக்கம் முதல் இறுதிவரை நாராயணனோடே பயணிக்கிறது கதை. முதலாளி தன் மீது கொள்ளும் நம்பிக்கையில் அவன் பெறும் சந்தோஷம், திலகம் அவன் மேல் காட்டும் பிரத்யேகக் கரிசனத்தின் பேரானந்தம், அவனது தப்பியோடல்கள், வேலை செய்யும் இடத்தில் தன் அடையாளம் மறைக்கும் சாமர்த்தியம், திலகத்தைக் கத்தி வீசிக் காப்பாற்றுவது என்று கதை பயணிக்க ஒரு கட்டத்தில் அந்தக் கதையின் பயணத்தில் நாமே நாராயணன் ஆகிவிடுகிறோம்.

தர்மலிங்கம் நாராயணனை நெருங்க நெருங்க நாம் கொள்ளும் பதைபதைப்பும், எழுத்தில் வாழும் அந்தத் திலகத்தின் வசீகரத் தோற்றம் நமக்குத் தரும் கிளர்ச்சியும், நாராயணனுக்குத் திலகம் கிடைத்துவிட வேண்டும் என்ற நம் அவாவும் ஆசிரியரின் எழுத்து சாமர்த்தியம். 

கதையின் ஆரம்பத்தில் தர்மராஜனாக அறிமுகமாகும் இன்ஸ்பெக்டர் ஆசிரியரின் / (நான் வாசித்த 2008 பதிப்பின்) ப்ரூஃப் ரீடர்களின் கவனமின்மையால் கதையின் போக்கில் தர்மலிங்கமாக மாறிவிடுவது நல்ல வேடிக்கை.

திலகத்தை விரட்டும் உள்ளூர் ரௌடிகள் பகுதியின் லேசான சினிமாத் தன்மையும், அவளது ஃப்ளாஷ்பேக் பகுதியின் அதீத சினிமாத் தன்மையும் தவிர்த்துப் பார்த்தால் “என்றாவது ஒருநாள்” மிகமிக சுவாரசியமான ஒரு நாவல்.

என்றாவது ஒருநாள் - சுஜாதா
136 பக்கங்கள் - ரூ.80/-
இணையம் மூலம் வாங்க: கிழக்கு / 600024.காம்

15 Oct 2012

விபரீதக் கோட்பாடு – சுஜாதா




சுஜாதா, இவருக்கு அறிமுகம் தேவை இருக்காது. பெரும்பாலும் பலரின் வாசிப்பின் துவக்கம் வாத்தியார்தான். இருந்தும் வெகு சிலரே சுஜாதாவை முழுதாக படிக்க விரும்புவர். பெரும்பாலும் அவர்கள் அனைவரையும் முழுதாய் படிக்க விரும்புபவர்களாக இருப்பர். அப்படியாத் தெரிந்த ஓரிரு நண்பர்களுள் ஒருவர் எப்போதும் அதிகம் பேரிடம் சென்றடையாத சுஜாதா புத்தகங்கள் நிறைய இருக்கிறது என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார். உண்மையாகக் கூட இருக்கலாம். அப்படி அவர் எனக்களித்த ஒரு புத்தகம்தான் விபரீதக் கோட்பாடு.


கணேஷ்-வசந்த் கதைதான். ஒரு குட்டி நாவல். தன்னை விட்டு ஓடிப்போன மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு வரும் சாமிநாதன், அவனை மணக்க விரும்பும் தருணா. தருணா சாமியின் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண். சாமியின் அப்பாவித் தனத்தால் ஈர்க்கப்பட்டு அவனை மணந்து கொள்ள விரும்புகிறவள். முதல் மனைவி தன்னை விட்டு ஓடிப் போன விரக்தியில் இருக்கும் சாமிக்கு நல்ல ஆறுதல். இருவரின் திருமணத்திற்கும் ஒரே பிரச்சினை, சாமியின் ஓடிப்போன மனைவி பிரதிமா. எனவே விவாகரத்து வேண்டியிருக்கிறது. அதற்கு முதலில் பிரதிமாவைக் கண்டு பிடிக்க வேண்டுமே? இருவரும் கணேஷ்-வசந்த்திடம் செல்கின்றனர்.


பல துப்பறியும் திரைப்படங்களைப் பார்த்துப் பழகிய பின்னரும், இந்த புத்தகத்தை வாசிக்கையில் அப்படி ஒரு ஈர்ப்பு. அது துப்பறியும் படங்கள்/புத்தகங்களுக்கே உரிய ஒரு ஸ்பெஷாலிட்டி போலும். இவ்வகையான நாவல்களுக்கு ட்விஸ்ட்கள் தான் மிக முக்கியம். ஏதோ ஒரு பக்கத்தில் கடந்து போகும் ஒரு சாதாரண விஷயம் அடுத்த ஐம்பதாவது பக்கத்தில் ஒரு ட்விஸ்ட்டாக முடியும் போது வாவ்வ்.... என்று சொல்லாமல் தொடர முடிவதில்லை. பெரும்பாலும் ஊகிக்க முடிந்த ட்விஸ்ட்களாகவே இருந்தாலும் அந்த ட்விஸ்ட்டை வெளிக்கொணரும் தருணத்தில் இருக்கும் சுஜாதத்தனத்தினை விவரிக்க வார்த்தைகள் இல்லை.


பிரதிமாவைக் கண்டு பிடிக்க வேண்டும். அடுத்து என்னவாக இருக்கும், சாமியின் வீட்டிற்கு சென்று சோதனை, அவர்கள் சம்மந்தப் பட்டவர்களிடம் விசாரணை. வித்தியாசமான நம்பிக்கை கொண்ட சாமியின் சித்தப்பா. எல்லாம் யூசுவலான விஷயங்கள் தான். ஆனால் அங்கு கிடைக்கும் காகிதங்கள், முத்திரைகள், அவர்களின் பேச்சுகள் இவற்றை எல்லாம் கோர்த்து இதுதான் கதை என்று நம்மை அழைத்து செல்வதில்தான் இப்புத்தகத்தின் வெற்றியே. ஜோசியத்தை அன்றே கிண்டலடித்திருக்கிறார் சுஜாதா. கூட்டம் சேர்த்து நல்லது செய்கிறேன் பேர்வழிகளையும்.


பிரதிமாவின் அறையில் கிடைத்த லெட்டர்பேட் காகிதத்தில் படிந்திருக்கும் அச்சை வைத்து அவள் இருக்குமிடத்தை கண்டுபிடித்து விடுகின்றனர். அவளிடம் தொலைபேசுகையில் ஒரு விஷயம் புலப்பட அவளை சந்திக்க விரும்புகிறனர். பிரதிமாவை இவர்கள் சந்திக்கும் முன்னரே அவள் கொல்லப்படுகிறாள். கணேஷ்-வசந்தின் சந்தேகம் வலுக்கிறது. சாமினாதன் மற்றும் அவன் சித்தப்பாதான் கொலைக்கு காரணமாக இருக்கவேண்டும் என்பதை ஊகித்து அதை கண்டுபிடித்து முடிக்கும்போது ஒரு நல்ல சேசிங் பார்த்த அனுபவம் மனதில் வந்தமர்கிறது.


இந்த புத்தகத்தை படித்து முடித்ததும் மனதில் வந்த வருத்தம், வாத்தியார் இருக்கும்போதே இந்த புத்தகம் கேவிஆனந்த் கையில் கிடைக்காமல் போயிற்றே என்றுதான். இந்தகாலத்துக்கு தகுந்தபடி கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து சினிமாவாக எடுத்தால் படம் நிச்சயம் சூப்பர் ஹிட்.


“பெரும்பாலான இலக்கியங்கள் யாவும் வாசகனுக்கு மனச்சிதைவையே தருகின்றன” இது நண்பர் நட்ராஜின் (@nattu_g) யின் ஒரு புகழ்பெற்ற ட்வீட். அத்தகைய இலக்கியங்கள் மத்தியில் இந்த புத்தகம் ஒரு நல்ல மாற்று.

நாவல் | சுஜாதா | 1980 | குமரி பதிப்பகம் | பக்கங்கள் 112 | ரூ. 20


9 Oct 2012

ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் - சுஜாதா

உங்கள் சிந்தனை என்னும் ஜலப்பரப்பில் எறியப்படும் சிறிய கல் ஹைக்கூ - சுஜாதா

தொண்ணூறுகளில் பாக்கெட் நாவல்கள் பிரபலமாயிருந்த சமயம் என்று நினைக்கிறேன், அப்போது இந்த ஹைக்கூவானது தமிழின் கடைநிலை வாசகன் வரையினில் சென்று சேர்ந்தது, தப்புந்தவறுமாக. (இவற்றை ஹைக்கூ என்றே குறிப்பிட வேண்டுமாம், ஹைக்கூக் கவிதை என்றால் அது சுடுதண்ணி என்று சொல்வதற்கு ஒப்பாம்)

அப்போதெல்லாம் மாதம் ஒருமுறை ஏதேனும் ஒரு புத்தகத்தில் யாரேனும் ஒருவர் இப்படி ஒரு கேள்வி எழுப்புவார். டியர் அரசு /  டியர் மதன் / டியர் குருவியாரே / டியர் அல்லி /  டியர் ஜூனியர்.... இந்த ஹைக்கூ என்பது என்ன?

மூன்று வரிக் கவிதை. இரண்டு வரிகளில் ஒரு நிகழ்வை ஒரு முடிச்சுடன் விவரிக்க வேண்டும், மூன்றாவது வரியில் சரேலென ஒரு திருப்பம். படிப்பவரைத் திகைக்க வைக்கும் அந்தத் திருப்பத்தில் முடியவேண்டும் கவிதை. இதுதான் ஹைக்கூ என்று தவறாமல் பதில் தரப்பட்டது. இவற்றின் ஆதிமூலம் ஜப்பான் என்ற கூடுதல் தகவலும் சுமந்து வரும் அந்தப் பதில். 



இதை அப்படியே நம்பினர் நம் மகாசனங்கள். பின்னர் தினத்தந்தியின் குடும்பமலரிலும், ராணி வார இதழிலும் இந்த விதிகளைப் பயன்படுத்திக் கொண்டு மக்கள் ஹைக்கூகள் எழுதித் தள்ளத் துவங்கினார்கள்.

கடவுளுடன்
ஒப்பிடமாட்டேன் உன்னை
அம்மா*
செத்த பின்னாலும்
சிரிக்கிறான்
புகைப்படத்தில்*
அணைத்தும் எரியுது
தீ, அணைத்தது
நீ*
இப்படியெல்லாம் எழுதித் தள்ளிச் சாகடித்தார்கள் நம்மவர்கள்.  இன்னமும் இன்னமும் இவை மற்ற பத்திரிக்கைகளுக்குப் பரவின. எல்லாப் பத்திரிக்கைகளும் ஹைக்கூ கார்னர் என்று பக்கங்களை ஒதுக்கத் துவங்கின. ஜானி வாக்கரில் பாக்கெட் வாட்டர் கலந்து அடித்தால் என்னவாகுமோ அப்படியாகிப் போனது நிலைமை.

ஆழ்வார்கள், சிலப்பதிகாரம், புறநானூறு எனப் பல  ”எளிய அறிமுகங்கள்” எழுதிய சுஜாதா இந்தக் கொடுமைகளையெல்லாம் பார்த்தார். இந்த ஹைக்கூகளுக்கும் ஒரு அறிமுகம் தேவை என்று உயிர்மை’யில் எழுதியதே இந்த “ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்.

சுஜாதா வார்த்தைகளில் இதுதான் ஹைக்கூ:

நம் தின வாழ்வில் ஆச்சரியகரமான வசீகரமான பரவசமான சோகமான கணங்கள் பலப்பல உள்ளன.காலை நடந்து செல்லும்போது குட்டி நாய் உன்று உங்களைப் பார்த்து வாலாட்டுகிறது.அல்லது ஜன்னல் வழியாக ஒரு குழந்தை எட்டிப் பாரத்துச் சிரித்துவிட்டு டாட்டா காட்டுகிறது.பஸ்ஸில் ஒரு இளம் பெண் உங்களை அதிகப்படியாகப் பார்க்கிறாள்.முற்றிலும் அன்னியர் ஒருவர் ஓடிவந்து பஸ் கிடைத்த சந்தோஷத்தில் உங்களைப் பார்த்து புன்னகைக்கிறார்.திடீர் என்று காய்ந்த சருகுகளை குப்பைத் தொட்டியில் போட்டுக் கொளுத்தும்போது மூக்கில் படரும் வாசனை உங்களுக்குப் பிடித்திருக்கிறது.அலுவலகத்து மாடிப்படியில் ஒருவருடன் மோதாமல் தப்பிக்கிறீர்கள்.அல்லது மோதிக்கொண்டு லேசாக நெற்றியில் வலிக்க தடவிக்கொள்கிறீர்கள்.இவ்வாறு எத்தனை கணங்கள் ! உன்னதக் கணங்கள்! சின்ன சின்ன இன்ப துன்பங்களை நமக்கு இறைவன் பரிசுப் பொருட்கள் போல தினம் தினம் கிடைக்கின்றன.

ஹைக்கூ எழுதுவதும் படிப்பதும் இவ்வகையான கணங்களை மற்றவருடன் பகிர்ந்துகொள்வதுதான்.அனுபவம் உணர்வு இரண்டையும் பிறருக்கு தர முயல்வதுதான் ஹைக்கூ.


மூன்று மணிநேர சினிமாவை நாவல் எனவும், பத்துநிமிடக் குறும்படத்தை சிறுகதை எனவும், கொண்டால்,  முப்பது வினாடி விளம்பரம் ஹைக்கூ எனப் புரிந்து கொள்ளலாம். மூன்று வடிவங்களிலும் கலைஞனானவன் தன் உணர்வுகளை, தன் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறான். அது விளம்பரத்திலோ அல்லது ஹைக்கூவிலோ மிகக் குறுகிய காலகட்டத்தில் சொல்லப்படுகிறது.

இந்த சரேல் திருப்ப ஜல்லியடிகளையெல்லாம் மறந்துவிடுங்கள். அவை ஹைக்கூ அல்ல.

புத்தகத்தில் தமிழில் ஹைக்கூ என்றொரு அத்தியாயம். பாக்கெட் நாவல்களையும், குடும்ப மலர்களையும் சுஜாதா துணைக்கு அழைக்கிறார் போல என்று பார்த்தால்.... இல்லையில்லை. நம் பழங்காலப் பழமொழிகளிலும், இலக்கியங்களிலும், திருக்குறளிலும் கூட ஒளிந்திருக்கும் ஹைக்கூ வடிவங்களைப் புட்டுப் புட்டு வைக்கிறார். 
யான் நோக்கின்
நிலம் நோக்கும்
என்பதுவே நேரடி ஹைக்கூ என்கிறார். உண்மைதானே. இதைத்தானே இன்றுவரை நிஜம், நிழல், கவிதை, சினிமாப் பாடல் எல்லாவற்றிலும் ஜல்லியடிக்கிறோம்.  இந்த அனுபவம் எல்லோருக்கும் (இந்திய நாகரிகத்தில்) வாய்க்கக் கிடைக்கிறது. நோக்கி நோக்கும் அந்நிகழ்வில் நாம் கிறங்கித்தான் போகிறோம். 

உனக்கும் உண்டு அந்த அனுபவம், எனக்கும் உண்டு அந்த அனுபவம்.  நீ சொல்ற, எனக்குப் புரியுது. அவ்ளோதான் ஹைக்கூ.

ந்த ஜப்பானிய ஹைக்கூவின் ஒரிஜினல் வடிவம் என்பது சுருக்கமானதே ஒழிய அந்த மூன்று வரி வரையறைகள் எல்லாம் அவை மேற்கத்திய உலகிற்குப் போய்விட்டு நம்மவர்களை வந்தடைந்தபோது அறுக்கப்பட்ட வரை’யாம்.


நிஜத்தில் சம்பிரதாய ஜப்பானிய ஹைக்கூவானது தூண்போல ஒரே வரியில் நிற்குமாம். ஒரே வரி என்றால் நம் பாணியில் இடமிருந்து வலமாக எழுதப்படும் எழுத்துக்களின் ஒருவரி அல்ல. ஜப்பானியர்களின் சித்திர வடிவிலான எழுத்துகளில் ஒரு தூண். யோசித்துப் பாருங்கள். 

ஹைக்கூ அல்லாத மற்ற வடிவங்கள் குறித்தும் ஒரு அளவளாவல் இருக்கிறது. தென்கா, ரங்கா, சென்றியு என்று பேசுகிறார் சுஜாதா. இவையெல்லாம் ஹைக்கூ வடிவங்களேதான் என்றாலும் தனியாட்சி கேட்டுப் பிரிந்து போனவையாம்.

ரெங்கா வடிவம் ஒன்று:
கரை இடித்தது
முனகிவிட்டு நீரில்
படகு நகர்கிறது
சென்றியு என்னும் வடிவம் இது:
நள்ளிரவில் வாங்கினோம்
இன்னும்
விடியவில்லை
இந்த சென்றியு மனித மனங்களின் அபத்தம், நகைச்சுவைகளைப் பிரதிபலிப்பது. இந்த இதர வடிவங்களைப் புரிந்தால் படிக்கலாம். இல்லையேல் ஹைக்கூவே போதும் என்று விட்டுவிடலாம்.

ல்ல ஹைக்கூ, நச்’சென்ற ஹைக்கூ ஒன்றுக்கு சுஜாதா தரும் உதாரணத்துடன்தான் புத்தகம் துவங்குகிறது. அந்த ஹைக்கூவை இங்கே அளிப்பதன் மூலம் புத்தகத்தின் மைய சுவாரசியத்தைக் குலைக்க விரும்பவில்லை நான். எவையெவை நல்ல ஹைக்கூக்கள் என்பதை சுஜாதா எழுத்திலேயே வாசியுங்கள்.


கடைசியாக..... இல்லையில்லை புத்தகத்தின் முன்னுரையிலேயே ஒன்றை சொல்லிக் கொள்கிறார் சுஜாதா:
இதைப் படித்தபின் பல ஹைக்கூக்கள் எழுதப்படாமல் இருந்தால் இப்புத்தகத்தின் குறிக்கோள் நிறைவேறுகிறது
வாத்தியாரா கொக்கான்னேன்!

பிகு1*: மேலே எழுதப்பட்டுள்ள மூன்று மொக்கை ஹைக்கூக்களும் என் கலத்திலிருந்து கொட்டியவையே.

பிகு2: என் கைவண்ணத்தில் மேலும் சில மொக்கை ஹைக்கூக்கள் இங்கே

பிகு3: இவை எவையும் ஹைக்கூக்கள் அல்ல. தயை கூர்ந்து வாத்தியாரின் புத்தகத்தை வாங்கி வாசித்து விடுங்கள்.

ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் - சுஜாதா
உயிர்மை பதிப்பகம்
கட்டுரைகள்
விலை ரூ.40/-
இணையம் மூலம் வாங்க: கிழக்கு

29 Sept 2012

அனிதா இளம் மனைவி - சுஜாதா

...- சிறப்புப் பதிவர்: பாஸ்கர் லக்ஷ்மன்


குமுதத்தில் வந்த நைலான் கயிறு சுஜாதாவின் முதல் தொடர்கதை. சுஜாதா எழுதிய அடுத்த தொடர்கதை அனிதா. அன்றிருந்த எஸ்.ஏ பி குமுதம் அனிதா என்ற பெயரை "அனிதா - இளம் மனைவி" எனப் பெயரிட்டு வெளியிட்டது. கொலை - கொலையாளி யார்? இதுதான் கதைக்கரு. தமிழில் இதைப் போன்ற கதைகளை இறுதிவரை சுவை குறையாமலும், சஸ்பென்ஸுடனும் எழுதுவதில் சுஜாதாவுக்கு நிகர் எவருமில்லை என நினைக்கிறேன்.
ஷர்மா - கொலை செய்யப்பட்டவர் - கடுமையான உழைப்பாளி.- ஏகப்பட்டச் சொத்து. 
அனிதா - ஷர்மாவின் 29 வயதான இளம் இரண்டாவது மனைவி. 

 மோனிக்கா - ஷர்மாவின் ஒரே மகள் - தன் அம்மாவை குழந்தைப் பருவத்தில் இழந்தவள் - ஹாஸ்டலில் வளர்ந்து அமெரிக்காவுக்குப் படிக்கச் செல்கிறாள்.
பாஸ்கர் - ஷர்மாவின் செக்ரடரி 
கோவிந்த் -  விசுவாசமான வேலையாள் 
வசந்த் இல்லாத கணேஷ் - வக்கீல் 
ராஜேஷ் - அவ்வப்போது வந்து போகும் இன்ஸ்பெக்டர் 
காரில் கோவிந்துடன் 14 ஆயிரம் (அந்த காலகட்டத்தில் பெரிய பணம்) எடுத்துக் கொண்டு செல்லும்போது வழியில் ஏற்படும் விபத்தில் ஷர்மா இறந்து போகிறார். இறந்த உடலில் சாட்டையால் அடித்த குறிகள் இருக்கின்றன. இறந்தது ஷர்மாதான் என அவரது இளம் மனைவி அனிதா அடையாளம் காட்டுகிறாள்.  கோவிந்தின் உடல் சம்பவ இடத்தில் இல்லை, அவன் காணாமலும் போய் விடுகிறான். எனவே அவன்தான் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கிறான் என எல்லோரும் கருதுகிறார்கள். ஆம், அது விபத்தல்ல கொலையாகவே இருக்கும், என போலீஸுக்கும் சந்தேகம். இன்ஸ்பெக்டர் ராஜேஷ்தான் இந்தக் கேஸை எடுத்து நடத்துகிறார். 

24 Sept 2012

பூக்குட்டி - சுஜாதா

சிறப்புப் பதிவர்: உமாக்ரிஷ்

புனைவு, கணினி, வரலாறு, மருத்துவம், அறிவியல், இலக்கியம் என்று சுஜாதா கால்தடம் பதிக்காத (கைத்தடம் என்றும் சொல்லலாம்) துறையே இல்லை எனலாம். பூக்குட்டி சிறுவர் இலக்கியத்தில் சேர்த்தி. குழந்தைகளுக்காக இங்கே நிறைய புத்தகங்கள் வருகின்றன. ஆனால் அவை நிஜத்தில் குழந்தைகளோடு குழந்தை மனதில் பேசுகிறதா என்பது பெரிய கேள்விதான். 

சுஜாதா ஒரு சிறுமியின் பார்வையில் எழுதியது இந்தப் பூக்குட்டி. இந்தப் புத்தகத்தைப் படிக்க ஒன்றா குழந்தை மனம் இருக்க வேண்டும் அல்லது குழந்தையின் மனதை வெகுவாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். கதை படிக்கும் போதே ஒரு சின்னக் குறும்படம் பார்ப்பது போன்ற உணர்வு. குழந்தையின் குரல், அதன் கூடப் பேசும் பொம்மை, அந்தப் பூக்குட்டி என்று கதை என்னும் கேமெரா ஒவ்வொரு ஆங்கிளாகச் செல்கின்றது. புத்தகம் எடுத்ததும் முடிக்கும் வரை கீழே வைக்கவே இல்லை. இரண்டு சின்னஞ்சிறு சிறுமிகளுக்கிடையேயான பூச்சில்லாத இயல்பான நட்பு. அதைப் பெரியவர்கள் பார்க்கின்ற பார்வை, அந்தக் குழந்தைகளின் உலகம் என்று வெகு இயல்பாக சொல்லியிருக்கிறார் சுஜாதா. எவருக்கும் தெரியாத புரியாத இலக்கிய வார்த்தைகள் எல்லாம் இல்லாமல் எளிய தமிழில். அட்டைப்படம் வெகு பொருத்தம் கதைக்கு.


16 Sept 2012

தலைமைச் செயலகம் - சுஜாதா


பொறுப்புத் துறப்பு: மூளையைப் பற்றிய கட்டுரைகள், புத்தகங்கள் என்று எதைப் படித்தாலும் அவற்றிலுள்ள பெயர்களையும் தகவல்களையும் குழப்பிக் கொண்டுவிடும் ஒரு விசித்திர குணமா வியாதியா என்று தெரியாத ஒன்று எனக்குண்டு. நான் எழுதியிருப்பதை நீங்கள் உங்கள் வாசிப்பின் மூலம் சரி செய்து கொள்ளுங்கள். சுருக்கமாக, என்னை நம்பாதீர்கள்.

ப்ளஸ் டூ பயாலஜி பாடத்தில், Human Physiology என்று பல பக்கங்கள் கொண்ட பாடம் உண்டு. ஜூவாலஜியின் மூன்றில் இரண்டு பங்கு இந்த Human Physiology. எங்கள் திறமையான ஆசிரியர் ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை’ இரண்டு மணிநேரத்தில் நடத்தி முடித்துவிட்டார். வேறொரு பாடத்தில் ஆட்டு மூளையை வரைந்து, பாகங்கள் குறிக்க வேண்டும். நியூரான் படம் வேறு உண்டு. இதெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், அன்றைக்கு ஒன்றுமே புரிந்ததில்லை. ஆனால், பின்னர் ஒரு நாள், இன்றைக்கு நானாக அதைப் படிக்கும்போது ரொம்ப எளிதாக இருக்கிறது.


Related Posts Plugin for WordPress, Blogger...