ஒருமுறைதான் பெண் பார்ப்பதினால்வருகிற வலி அவள் அறிவதில்லை;கனவினிலும் தினம் நினைவினிலும்கரைகிற ஆண்மனம் புரிவதில்லை
அதற்கு முந்தின தினம்தான் ஒரு கல்யாணக் கச்சேரியில் அந்தப் பாடலைப் பாடியிருந்தான் அவன். பாடின மறுநாள் காலையில் இப்படி அவள் வாசலில் வந்து நிற்பாள் என்றோ பார்த்த மாத்திரத்தில் தடாரென அவள் மேல் வீழ்வான் என்றோ கனவிலும் நினைக்கவில்லை அவன்.
கண்டதும் காதலில் அவனுக்குத் தன் இருபத்தி சொச்ச வயதுவரை நம்பிக்கை இருந்ததில்லை. அவளைப் பார்த்த நொடியினில் அந்த நம்பிக்கையின்மை எங்கோ காணாமல் பொடித்துப் போனது.
“உலகத்தில் எத்தனைப் பெண்ணுள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒருமுறை வாழ்ந்திடத் திண்டாடுது
அது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது”