சிறப்பு பதிவு - செல்வா ஜெயபாரதி
முகமது யூனுஸ் கிழக்குவங்கத்தைச் சேர்ந்தவர். தற்போது பெரிய அளவில் இந்தியாவில் அறிமுகமாகியிருக்கும் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் சிறுகடன் (Micro Finance) போன்ற எளிய மக்களுக்கான திட்டங்களை பெரிய அளவில் நடைமுறைப்படுத்தி வெற்றிகண்டவர். இப்புத்தகம் முகமது யூனுஸ் பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்து எப்படி கிராமீன் வங்கியை நிறுவி வறுமை ஒழிப்பில் பெரிய பங்காற்றினார், அதில் கிராமீன் வங்கியின் பங்கு என்ன, இச்சிந்தனைக்கான விதை, நடைமுறைப்படுத்துவதில் எவ்வளவு போராட்டங்களைக் கடக்க வேண்டியிருந்தது போன்ற விஷயங்களைப்பற்றி விரிவாக பேசுகிறது.