A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label என். ஆர். அனுமந்தன். Show all posts
Showing posts with label என். ஆர். அனுமந்தன். Show all posts

29 Apr 2013

என் சுயசரிதை - பம்மல் சம்பந்தம்

சிறப்பு பதிவர் : என். ஆர். அனுமந்தன்

தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த துவக்கப் பத்திகள் என்று ஒரு தொகுப்பு இருக்குமென்றால், அதில் பம்மல் சம்பந்தம் எழுதிய 'என் சுயசரிதை'யின் முதல் இரண்டு பத்திகளும் இடம்பெற வலுவாகப் பரிந்துரைப்பேன்.
என் இளம் பருவ சரித்திரம்

"பம்மல் விஜயரங்க முதலியார் இரண்டாவது விவாகத்தின் நான்காவது குமாரன் திருஞானசம்பந்தம் 1873ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 1ந் தேதிக்குச் சரியான ஆங்கீரச வருஷம் தை மாதம் 21ந் தேதி சனிக்கிழமை உத்திராட நட்சத்திரத்தில் ஜனனம் சென்னப்பட்டணத்தில்" என்று என் தகப்பனார் விஜயரங்க முதலியார் எழுதி வைத்துவிட்டுப்போன குடும்ப புத்தகத்தில் அவர் கையெழுத்திலிருக்கிறது. நான் இப்போது இதை எழுதத் தொடங்கும்போது வசிக்கும் ஆச்சாரப்பன் வீதி 70ஆம் நெம்பர் வீட்டில் முதற்கட்டில் வடகிழக்கு மூலையில் உள்ள அறையில் நான் பிறந்ததாக என் தாயார் எனக்கு சொன்னதாக ஞாபகமிருக்கிறது.

பூவுலகில் மனிதனாய் பிறக்கும் ஒவ்வொருவனைப்பற்றியும் இரண்டு விஷயங்கள் நிச்சயமாய் கூறலாம். அவன் ஒரு நாள் பிறந்திருக்கவேண்டும் அவன் ஒரு நாள் இறக்கவேண்டுமென்பதாம். ஆயினும் இவ்விரண்டு விஷயங்களைப்பற்றியும் அவன் நேராகக் கூறுவதற்கில்லை. பிறந்ததைப்பற்றி மற்றவர்கள் கூறுவதைத்தான் நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். இறந்ததைப் பற்றியும் மற்றவர்கள் பின்கூறவேண்டுமல்லவா?


இவ்வளவுதான். இந்த இரண்டே பத்திகள்தான் முதல் அத்தியாயம். தன் சுயசரிதையை எழுத முற்படும்போது பிறப்பும் இறப்புமே நிச்சயம், ஆனால் அதைப் பிறரே கூற வேண்டும் என்று சொல்லி தான் தன் வாழ்வைப் பற்றி சொல்வதத்தனையையும் சந்தேகத்தின் நிழலில் இருத்தும் பம்மல் சம்பந்தம் இதை எழுதிய ஒரு காரணத்தாலேயே நம் நேசத்துக்கும் நம்பிக்கைக்கும் உரியவராகிறார். தமிழ் இங்கு ஒரு உச்சத்தை அனாயசமாகத் தொட்டிருக்கிறது.

15 Apr 2013

Zona - A Book About a Film About a Journey to a Room, Geoff Dyer

சிறப்பு பதிவர் : என். ஆர். அனுமந்தன்

நல்ல உரைநடை கொடுக்கும் சந்தோஷமே தனி. Geoff Dyer என்பார் எழுதிய "Zona - A Book About a Film About a Journey to a Room" என்ற புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். Tarkovsky என்ற மேதை இயக்கிய Stalker என்ற திரைப்படத்தைப் பற்றிய புத்தகம் இது. 162 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில் 142 ஷாட்டுகள்தான் என்பது விசேஷம். படம் செம மொக்கையாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் தவறில்லை.

பணம் போட்டவர்கள் படத்தின் ப்ரிவ்யூ பார்த்துவிட்டு, "படம் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக இருக்கலாமே, அதிலும் படத்தின் ஆரம்பத்திலாவது...." என்று அழுகையை அடக்கிக் கொண்டு சொன்னபோது தார்கோவ்ஸ்கி கோபத்தில் பொங்கி விட்டாராம் - படத்தின் ஆரம்பம் இன்னும் மெதுவாகவும் மொக்கையாகவும் இருந்திருக்க வேண்டும், அப்போதுதான் தெரியாமல் தியேட்டருக்கு வந்தவர்களுக்கு ஆக்சன் ஆரம்பிப்பதற்குள் ஓடிப் போக நேரமிருக்கும், என்றார் அந்த மேதை.

அதற்கு பணம் போட்டவர்களில் ஒருத்தர், "படம் பார்ப்பவர்களுக்கு படம் எப்படியிருக்கும் என்றுதான் சொல்ல வந்தேன்..." என்று தயங்கித் தயங்கி ஆரம்பித்ததை, "ஆடியன்ஸைப் பற்றி எவனுக்குக் கவலை? எனக்கு இரண்டே பேர்தான் முக்கியம். Bresson and Bergman. இதை நீ பைப்பில் நிரப்பி புகைத்துப் பார்" என்று வெட்டிவிட்டாராம்.

அதெல்லாம் வேறு கதை. நல்ல உரைநடை என்று சொன்னனே, இது ஒரு வாரமாகத் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து கொண்டிருக்கிறது:

He's one of those barmen who has the knack of imbuing the simplest task with grudge, making it feel like one of the labours of a minimum-wage Hercules.

இதைப் படித்தபின் எல்லா இடத்திலும் இந்த மாதிரி ஆட்கள் தென்படுகிறார்கள். இதுவரை எப்படி இவர்களை கவனிக்காமல் விட்டேன் என்று ஆச்சரியமாக இருக்கிறது.


Related Posts Plugin for WordPress, Blogger...