A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label ஜெயமோகன். Show all posts
Showing posts with label ஜெயமோகன். Show all posts

6 Jun 2020

சங்க சித்திரங்கள் - ஜெயமோகன்

எழுதியவர்: டி.கே.காளீஸ்வரன்.

சங்கச் சித்திரங்கள்

“மாஸ்கோ”. 

2007 ல் கொங்கு பொறியியல் கல்லூரியில் நான் படிக்கும்போது எங்கள் “Applied Physics” சார் பெரும்பாலும் சுட்டப்பட்டது இப்பெயரில்தான். பள்ளிக்காலம் துவங்கி, இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரிப் படிப்பு என ஏறத்தாழ 15 வருடங்களில் எத்தனையோ ஆசிரியர்களை நாம் கடந்து வந்திருப்போம். அப்படியே அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர்களையும். என்றாலும் பெயரின் சிறப்பாலோ ஆசிரியரின் தன்மையாலோ நம்மால் மீண்டும் மீண்டும் சிலர் மட்டுமே நினைவு கூறப்படுவார்கள். எனக்கு அத்தகைய ஒருவர் தான் “பாலசுப்பிரமணி” சார். 

மொத்தமாக ஒரு செமஸ்டர் மட்டுமே அவர் எங்களுக்கு வகுப்பெடுத்திருந்த போதும், அவர் நினைவிலிருக்க காரணம், அவர் வகுப்பெடுக்கும் முறை. பெரும்பாலான விசயங்கள், எவ்வளவு சிக்கலாய் இருந்தாலும், அதை மிக எளிய உதாரணங்களோடு, நம் வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தி விளக்குவதில் கைதேர்ந்தவர். குறிப்பாக சொல்வதானால், நடிகர் விஜயகாந்தை வைத்து Semi / Super conductor களை விளக்கியது. “இப்ப நம்ம, விஜயகாந்த் சாரை பார்த்தீங்கன்னா, பெரும்பாலும் போலீசாதான் நடிப்பாரு, இடையில ஒண்ணு ரண்டு படத்துல மட்டும் மத்த வேஷங்கள்ல நடிப்பாரு. Semi/Super conductor களும் அப்படித்தான்யா, எப்பயுமே நார்மலான conductorஆ behave பண்ணிட்டு, ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் மட்டுமே super conductorஆ இருக்கும்.”. சிக்கலான விசயங்கள் என எண்ணிக்கொண்டிருப்பவைகள் கூட, சரியான விதத்தில் சொல்லப்படும்போது நமக்கு அணுக்கமாகிவிடுகின்றன என எனக்குப் புரியவைத்தது அச்சம்பவம். 

தமிழ்ப் பாடத்தின் மனப்பாடப் பகுதிகளைத் தாண்டி, சங்க இலக்கியத்துக்கும் எனக்கு யாதொரு தொடர்பும் இருந்ததில்லை. அந்த தொட்டகுறையும் பனிரெண்டாம் வகுப்புடனேயே விட்டகுறையாகிப் போனது. இடையிடையே ஆர்வத்துடன் வாசிக்க எடுத்த முயற்சிகள், அருஞ்சொற்பொருள், விளக்கவுரை திரண்ட கருத்து ரீதியிலான வாசிப்புகளால் மிரட்சியூட்ட, முடிந்துபோயின. அவை கடலை கைக்குட்டையில் அள்ளும் முயற்சிகளாகப் போனது. சங்க இலக்கியங்களின் விரிவையும், அது காட்டும் மாபெரும் தருணங்களையும், வாழ்க்கைச் சித்திரங்களையும், மொழியழகினையும் பிறர் சொல்லிக் கேட்குந்தோறும், மீண்டும் முயற்சிப்பதும் ஓரிரு நாட்களிலேயே அம்முயற்சியில் தேங்கி நிற்பதும் வழமையாகிவிட்டது. 

இந்நிலையில்தான், கடலின் விரிவை, அதன் ஆழத்தை, தெளிவை நடுக்கடலில் ஒரு படகில் நின்றும் பார்க்கும் அனுபவம் எனக்கு ஏற்பட்டது. ஒரு சங்கப் பாடல், அதன் பேருணர்ச்சிகளுடன் நம்மைப் பொருந்திப்போகச் செய்யும் வாழ்வியல் அனுபவங்கள், கூடவே அப்பாடலுக்கிணையான நவீனக் கவிதை வடிவம் என அருமையாக நம்மை அத்தளத்துடன் பிணைத்துக்கொள்ளும் மாயத்தை ஆசான் திரு.ஜெயமோகன் அவர்கள் எழுதிய “சங்கச் சித்திரங்கள்” நூல் செய்திருக்கிறது.

சமகாலக் கவிதைகளை எப்படி வாசிப்போமோ, சங்க காலக் கவிதைகளையும் அப்படியே வாசிக்க வேண்டும் என இந்நூலில் ஓரிடத்தில் சொல்லப்படுகிறது. சங்கப்பாடலின் நவீன வடிவமும், அப்பாடலின் தளத்தில் நம்மை இருத்தும் சமகால சம்பவங்களும் சங்க காலக் கவிதைகளை நாம் நெருங்க உதவுகின்றன. காதல், வீரம், பிரிவு, மரணம் உள்ளிட்ட உச்ச உணர்ச்சிகள் யாவுமே காலம் கடந்தவை. நம் அழுகைக்கும், பெருமைக்கும், ஆற்றாமைக்குமான சொற்களை பலநூறு வருடங்களுக்கு முன்னரே நாமறியா கவிஞன் சூல் கொண்டிருக்கிறான் என்பது எவ்வளவுக்கெவ்வளவு உண்மையோ, அச்சொற்கள் இப்பூமியின் மற்றொரு மூலையிலிருக்கும் இன்னொருவனின் வாழ்வுக்கும் பொருந்தக்கூடியவை என்பதும் அதே அளவு உண்மை. ஒரு கவிதையை நம் மனதுக்கு மிக நெருக்கமாக ஆக்குவது, நம்முடைய வாழ்பனுவத்திலிருந்து அது முளைத்தெழுகையில்தான். 

அப்படி 40 சங்கக் கவிதைகள் முளைத்தெழுந்த ஒரு முளைப்பாரி தட்டைப் போன்றது இந்நூல். இதையே வேராகக் கொண்டு ஒவ்வொரு வாசகனும் தனக்கான விரிவை அடையவியலும். இந்நூலின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் நாம் தனித்தனி கட்டுரைகளை எழுதமுடியும் எனும் அளவுக்கு அவை சிறப்பானவை. இருப்பினும், சோற்றுப்பதக் கணக்கில் சில அனுபவக் குறிப்புகள் மட்டும் இங்கே.

என் கல்லூரி நாட்களில், 45 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் ஒரு வகுப்பில் எப்படியும் 20 லிருந்து 30 செய்திகள் துண்டுச்சீட்டுகளினூடே இருபாலர்களுக்கிடையே கடத்தப்படும். அதிகபட்சம் இரண்டு நிமிடங்களுக்குள் மறுமொழி கிடைத்துவிடும் சாத்தியக்கூறுகள் இருந்தபோதும் அவ்விரண்டு நிமிடங்கள் கழிவது ஒரு யுகம் போலத் தோன்றும். இந்த வரலாறு கொண்ட என்னால், வேலை நிறுத்தத்தால் சென்று சேராத காதல் கடிதங்கள் எழுப்பும் உணர்வையும் (“கொதிக்கும் மத்தகம்” கட்டுரை), அதனூடே  நற்றிணையின் 182ஆவது பாடலையும் அணுக்கமாய் உணரமுடிந்தது. 

“அப்புறம்” என்ற ஒற்றைச் சொல்லாலேயே பல காதல்களும், அதன் புண்ணியத்தில் செல்போன் கம்பெனிகளும் வாழ்ந்துவந்த ஒரு காலகட்டம் நம் கண்முன்னே கடந்துபோயிருக்கிறது. பேச வேண்டும் பேசுவதற்கு எதுவும் இல்லாதபோதும் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என கொளுந்து விட்டெரிந்த காதலை, “சரி சரி”, “வை”, “பாக்கலாம்” என ஒற்றை வார்த்தைகளில் சுருங்குவதில் திருமணம் பெரும்பாலும் வெற்றியடைகிறது. நெருப்பாய்த் தகித்த காதல், பெரும் சாம்பல் பூத்து, அவர்களால் மறக்கப்பட்டு, அடியாழத்தில் தன் இறுதி அனலை பொத்திப் பாதுகாக்க நேர்ந்திட்ட அவலத்தை ஒளவையாரின் குறுந்தொகைப் பாடல் காட்டுகிறது (மணலாறு). 

இத்தொகுப்பின் முக்கியமான கட்டுரைகளில் ஒன்றான “பெற்ற நெருப்பு”, நமக்கு நாமே கற்பித்துக் கொண்ட வீரமரணம், முன் வைத்த காலை பின் வைக்காத பெருமிதம், பெருந்தியாகம் அனைத்துக்கும் இருக்கக்கூடிய மறுபக்கத்தைக் காட்டுகிறது. பலவேறு பாடல்களினூடே அறியப்பெற்று அதன் நீட்சியென உரைகளாகவும் வரிகளாகவும் நம்முள் வேரூன்றிவிட்ட சீறிவரும் வேலுக்கு மார்புகாட்டிய வீரனின் குருதியை தன்னுடைய பாலாகவே காணும் அன்னையின் அபூர்வக்குரல் ஒளவையாரின் புறநானூற்று கவிதையாய் ஒலிக்கிறது. 

இவ்வருடம் மார்ச் மாதம் காஞ்சிக்கோவிலில் நடந்த புதிய வாசகர் சந்திப்பில் ஆசான் திரு.ஜெயமோகன் ஒரு சம்பவத்தைச் சொன்னார். காதலித்து மணம் புரிந்துகொண்ட இருவர் ஒற்றைச் சொல்லால் பிரிய நேர்ந்திடும் விசித்திரத்தின் கதை அது. அக்கதையை “உதிரச்சுவை” எனும் கட்டுரையாக இந்நூலில் படிக்க நேர்ந்தது. என்னதான் பிரிவு என்பது இருகூர் வாள்முனையாக இருப்பினும், அதிகக் காயம் அடையும் தலைவியின் துயரைப் பேசும் எயினந்தையாரின் (நற்றிணைப்) பாடலுக்கான கட்டுரை அது. 

உலோச்சனார் எழுதிய புறநானூற்றுப் பாடலுக்கான “போராட்டமும் கொண்டாட்டமும்” கட்டுரையின் மூலமாக, அப்பாடலில் காட்டப்படும் இளைஞனின் நீட்சியாக சமகாலத்தில் நிகழ்ந்த “துப்புக்கூலி” முறையை, களவை, இது எல்லாமுமே ஒருவகை விளையாட்டாக மாறிவிடும் மானுட இயல்பை அறியமுடிகிறது.

காலத்துக்கும் நிலைத்து நிற்கும் குன்றா அறிவுக்கு, எப்பிறப்பிலும் கடக்கவியலாத சாபம் ஒன்றுண்டு. சாதாரண உப்பு புளி சமாச்சாரத்துக்காக, அரை மழையில் கரைந்து போகும் அதிகாரத்தின் கதவை அண்ட நேரிடுவது அது. ”பாடல் எடு பரிசில் இதோ” என்பதில் துவங்கி “ரைட்டர்னா? என்ன எழுதுவீங்க?” என்பதுவரை தொடரும் கதை அது. “நாமார்க்கும் குடியல்லோம்” என்றும் “எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே” என்றும் பிறரிடம் கூறுதல் போலவெ விட தன்னிடமும் கூற நேரிடும் அவலத்தின் தற்கால வடிவம் “மூடிய வாசல்களுக்கு முன்”.

மேற்சொன்ன கட்டுரைகள் எல்லாம் முதல்வாசிப்பிலேயே என்னைப் பெரிதும் கவர்ந்த கட்டுரைகளுல் சில. தொகுப்பின் 40 கட்டுரைகளும் மிகவும் முக்கியமானவை. போலவே அது சார்ந்த சங்கப் பாடல்களும். ”கவிதையின் மர்மமுடிச்சு நம்மனதில் மலர்விரிவது போல எப்போது என்று சொல்ல முடியாத ஒரு தருணத்தில் அவிழ்வதே உண்மையில் கவிதை அனுபவம் என்பது” என இந்நூலில் கூறப்பட்டுள்ள விசயத்துக்கு சாட்சியாக மிளிரும் சம்பவங்களின் தொகுப்பு இப்புத்தகம். 

சங்கப்பாடல்கள் மீது காதல் கொண்டவர்கள், தன் அன்றாட வாழ்வின் தளத்தில் நின்று அப்பாடலின் விரிவை அனுபவிக்கும் ஆவல் கொண்டவர்கள் தவறவிடக்கூடாத புத்தகம் “சங்கச் சித்திரங்கள்”



சங்க சித்திரங்கள் வாங்க

13 Oct 2019

தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்- ஜெயமோகன்


தமிழில் நல்ல பேய்க்கதைகள் மிகக்குறைவே. பி.டி. சாமியின் கதைகள் எல்லாம் ரொம்ப அமெச்சூரிஷ் ஆக இருப்பதாகவே உணர்ந்திருக்கிறேன். பேய்க்கதைகள்/ அமானுஷ்யமான கதைகள் என்றளவில், நல்ல படைப்புகள் என்று சொன்னால், ஜாவர் சீதாராமனின், ‘உடல் பொருள் ஆனந்தி’, ராஜேந்திரகுமாரின், ‘இறந்தவன் பேசுகிறேன்,’ மற்றும், ‘இன்னமும் இருக்கிறேன்,’ இரண்டும் நல்ல படைப்புகள். இவை  ஆங்கில ஆக்கங்களின் தழுவலாக இருக்கலாம். சுஜாதாவின் ‘கொலையுதிர்காலம்’, மற்றும், ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ இரண்டுமே அவுட்ரைட் பேய்க்கதைகள் இல்லை என்றாலும், அமானுஷ்யமான சூழலை எழுத்தில் பிரமாதமாகக் கொண்டு வந்திருப்பார். 'ஆ' எனும் தொடரும் நினைவுக்கு வருகிறது. இவை போக,குமுதத்தில் கிருஷ்ணகுமார் (அநேகமாக எஸ்.ஏ.பி. அண்ணாமலை) எழுதிய ‘கோஸ்ட்’ எனும் தொடரில் சில கதைகள் மிக நன்றாக அமைந்தன. என் நினைவில் இவைதான் உள்ளன. தீவிர இலக்கிய பரப்பில் என்றால், புதுமைப்பித்தனின் 'காஞ்சனை' ஒரு மறக்க முடியாத படைப்பு.




27 May 2014

அழியா அழல்

“அறம் என்ற சொல்லை அறியாத எவரும் இல்லை. அறமென்றால் எதுவென்று முழுதறிந்தவரும் இல்லை” – ஆஸ்திகன், முதற்கனல்
காவியத்திற்கும் இதிகாசத்திற்கும் நுட்பமான வேறுபாடுண்டு. இதிகாசம் எனும் சொல் ‘இது இப்படி நடந்தது’ என்பதை குறிக்கும். காவியம் லட்சிய மனிதர்களைக் காட்டுவதாகும். ராமாயணத்தை காவியம் என்றும் மகாபாரதத்தை இதிகாசம் என்றும் வரையறை செய்யலாம். பாரதத்தின் மாந்தர்கள் கூர்மையானவர்கள் கட்டற்ற அதிகார விழைவும் காமமும் கொண்டவர்கள், குரோதத்தின், வன்மத்தின் பெருநெருப்பில் தங்களையே அவியாக்கிக் கொண்டவர்கள். காவிய நாயகர்கள் லட்சிய குணங்களுடன் காவிய தருணங்களில் வாழ்பவர்கள். இதிகாச மாந்தர்கள் மானுட குணம் கொண்டு காவிய தருணங்களில் வாழ்பவர்கள். அதன் காரணமாகவே நமக்கு மிகவும் நெருக்கமானவர்களும் கூட. 




31 May 2013

வாழ்விலே ஒரு முறை - ஜெயமோகன்

’இந்நூலைத் தொடுபவன் என்னைத் தொடுகிறான்’ என்றார் ஓர் எழுத்தாளர் . இச்சிறு நூலைப் பற்றி அதைச் சொல்லத் துணிவேன் - முன்னுரையில் ஜெயமோகன்
நனவிடைதோய்தல் என்ற வார்த்தையை சில மாதங்களுக்கு முன்புதான் கேள்வியுற்றேன். Nostolgia என்பார்கள் ஆங்கிலத்தில். பழைய நினைவுகளை அல்லது அனுபவங்களை அசைபோடுதல். சினிமாவில் கொசுவத்தி சுழற்றுவார்கள். தூர்தர்ஷனில் மலரும் நினைவுகள் என்று சொல்லுவார்கள். பொதுஜன உதாரணம் என்றால் சுஜாதாவின் ”ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்” ஒரு நல்ல உதாரணமாகச் சொல்லலாம்.

நனவிடைதோய்தல் எழுதுதல் தனிக்கலை. அது எல்லோருக்கும் நன்றாக வாய்த்துவிடுவதில்லை. இது எல்லோருக்கும் சாத்தியம்தான். எழுத்து சாத்தியப்படுபவனுக்கு மட்டும் தனிரூட்டிலா வாழ்க்கை நடக்கிறது? தத்தமது தோழமை வட்டத்தில் விழிவிரியப் பகிருவதுடன் நிறைந்து போகின்றது இங்கே பலரது நனவிடைதோய்தல்கள். எழுத வாய்த்தவன் வார்த்தைகளில் அதைக் கொஞ்சம் தன் சரக்கையும் சேர்த்துவிட்டுத் தோய்த்துவிட முடிகிறது.



30 May 2013

சொல்முகம் - ஜெயமோகன்

சிறப்புப் பதிவர் - R.கோபி

பூவிடைப்படுதல் என்ற தலைப்பில் 2011 டிசம்பர் மாதக் கடைசியில் ஜெமோ சென்னையில் குறுந்தொகை குறித்து ஒரு உரை_நிகழ்த்தினார்.  அதைக்கேட்கும் வாய்ப்பு அப்போது எனக்கு வாய்க்கவில்லை. ஆனால் அதுபற்றியஒரு முன்னோட்டத்தை அந்த வருடத்தின் டிசம்பர் மாத மத்தியில்அறிந்துகொள்ள முடிந்தது.

அது ஒரு மறக்க முடியாத நாள். எழுத்தாளர் திரு. பூமணி அவர்களுக்கு அந்த வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டிருந்த மாலைப்பொழுது. விழா இனிதே நிறைவுற்றதும் இரவு ணவிற்குப் பின் ஜமா கூடியது. ஜெமோ தங்கியிருந்த அறையில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம்.

நள்ளிரவிற்கு மேல் காலாறக் கோவை சந்திப்பைச் சுற்றியிருந்த தெருக்களில் சுற்றியலைந்தோம். கவிதைகள் பற்றிப் பேச்சு திரும்பியபோது இந்த உரை குறித்துச் சில விஷயங்களை ஜெமோ பகிர்ந்துகொண்டார்.' நீர்முள்ளிபற்றி அவர் சொன்னவை இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

எப்போதேனும் இந்த உரை புத்தக வடிவில் கிடைத்தால் வாங்கிவிடுவது என்று அப்போதே முடிவு செய்திருந்தேன்.  'சொல்முகம்என்ற தலைப்பில் நற்றிணை ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறது. வசீகரமான தலைப்பு. ஜெமோ ஆற்றிய சில உரைகளின் எழுத்து வடிவம். இந்த ஏப்ரல் மாதம் வாங்கினேன்.நேற்றுப் படித்து முடித்தேன். உரைகளின் எழுத்து வடிவத்தைப் புத்தகத்தில் படிப்பது ஒரு அலாதி இன்பம்.



29 May 2013

நாவல் கோட்பாடு - ஜெயமோகன்



வ்வொரு காலகட்டத்திலும் ஒரு புத்தகம் புது எழுத்து இயக்கத்தைத் தோற்றுவிக்கும். அந்தந்த புத்தக எழுத்தாளர்களுக்கு அவர்களது எழுத்தின் பாதிப்பு இன்னின்னது என எழுதும்போது தெரியாது. கா.நா.சு-வின் பொய்த்தேவு, புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம், சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள், ஜெயமோகனின் காடு என ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் இலக்கியத்தின் புனைவு மையங்கள் திட்டவட்டமான மாற்றங்களைக் கொண்டுள்ளன. தமிழ் சூழலில் நாவல் எனும் வடிவத்தை முன்வைத்த ஆரம்ப கட்ட படைப்பாக பொய்த்தேவு நாவலையும், சராசரித்தனம் ஏதுமில்லாமல் புது எண்ணங்களின் வீச்சை முன் நடத்தக்கூடிய ஜே.ஜே எனும் ஆளுமையின் சித்திரம் கொண்ட படைப்பாகட்டும், கவித்துவ ரசனை எழுத்தை புனைவின் சாத்தியங்கள் கொண்டு படைப்பாக்கிய காடு நாவலாகட்டும் எல்லாமே தமிழ் படைப்பு உலகத்தில் பெரும் பாய்ச்சலை உருவாக்கியவை.

சிறுகதைகளில் நாம் செய்துபார்த்த புதுமைகளிலிருந்து மிகக் குறைந்த சதவிகிதமே நாவல் உலகில் வெளிப்பட்டுள்ளது. நாவலில் காட்டிய பாய்ச்சலில் மிகச் சொற்பமான பங்கு குறுநாவல்களில் வெளிப்பட்டுள்ளது. மேற்கூறிய பகுப்புகள் மேற்கு இலக்கிய உலகிலிருந்து கிளைத்தவை என்றாலும் இலக்கியத்தின் தரப்பகுப்பாய்வுக்கு மிகவும் தேவையான ஒன்றாக அமைந்துள்ளது. ஆனால், தமிழ் இலக்கிய உலகில் விமர்சனத்துறை அதிக வளர்ச்சி அடையவில்லை எனப் பொதுவான எண்ணம் நிலவுகிறது. அது ஓரளவுக்கு உண்மை என்றாலும், ஏற்கனவே நம்முன் இருக்கும் இலக்கிய தரங்களை நாம் எந்தளவு மதித்து வருகிறோம் என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்.


21 Feb 2013

ஆழ்நதியைத் தேடி - ஜெயமோகன்

தமிழிலக்கியத்தின் ஆன்மிக சாரம் என்ன? எனும் வினாவை பிந்தொடர்ந்து சென்ற ஜெயமோகனின் தேடல்கள் கட்டுரைகளாக இத்தொகுப்பில் உள்ளன. ஆன்மிக நோக்கு என்பதை முழுமையான உண்மையை நோக்கிய ஒரு நகர்வு, ஒட்டுமொத்தமான அணுகுமுறை என விளக்குகிறார். முழுமையான என்பதை holistic என்பதன் தமிழாக்கமாகப் பார்க்கலாம். மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை மையமாகக் கொண்டது மதநோக்கு/தத்துவ நோக்குள்ள ஆன்மிகம். அண்டத்தில் மனிதனின் இருப்புக்கு அர்த்தம் என்ன? உண்மையில் எல்லயற்ற பரிமாணம் கொண்ட பிரபஞ்சத்துக்கும் சராசரியாக எண்பது வருடம் வாழ்ந்து செல்லும் மனிதனுக்கும் என்ன உறவு இருந்துவிட முடியும். புலன்களின் சங்கமமான அகத்தில் `தான்` எனும் இருத்தலின் உணர்வில் பிற அனைத்தையும் வரையறை செய்ய விழைகிறான் மனிதன். தனது இருப்புக்கு முன்னால் சிறு குருவியின் இருப்பையும், ஒரு கருப்புத்துளையின் இருப்பையும் நிர்ணயிக்கப் பார்க்கிறான்.

ஆம்னிபஸ்ஸில் எழுதும் பாஸ்கர் ஒரு இலக்கிய விவாதத்தில் கூறியது - தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து பிரபஞ்சாகார தரிசனங்களை எட்டிப் பிடிப்பதுதான் இலக்க்கியத்தின் பிரதான நோக்கம். அவ்வகையில் தனிப்பட்ட அனுபவங்களை மானுடப் பொதுமைக்கான தத்துவமாக மாற்றும் கலையே இலக்கியம் எனச் சொன்னார். அடிப்படையான அக எழுச்சிகளுக்குக் காரணத்தை அறிந்துகொள்ளாவிட்டால், ஒரு கதையோ நாவலோ அந்தந்த சூழ்நிலைக்குள்ளாகவே முடங்கிப் போய்விடும் அபாயம் உள்ளது. ஏதோ ஒரு கட்டத்தில் காலத்தை கடந்து நிற்கும் சாத்தியத்தை முழுமெய் நோக்கு எனவும் சொல்லலாம். தத்துவத் தளத்தில் மீனின் வயிற்றில் கடல் என்பது ஒரு முழுமெய்யானப் பார்வையைத் தரும் உண்மை.



26 Jan 2013

ஜெயமோகன் குறுநாவல்கள்

ஜெயமோகன் குறுநாவல்கள்
முழுத்தொகுப்பு


ஜெயமோகன் எழுதியவற்றில், இவர்தான் ஜெயமோகன் என்று தெரியாதபோது, அதாவது நான் பள்ளி செல்லும் வயதில், “பனி மனிதன்” நாவலை மட்டும் அது சிறுவர் மணி - தினமணியில் தொடர்கதையாக வந்தபோது வாசித்திருக்கிறேன். அதற்கு அப்புறம் பெரிதாக, ஜெயமோகன் எழுதியதை நான் வாசித்ததில்லை, ஒரு சில ஆண்டுகளுக்கு முன், “விசும்பு” என்ற அறிவியல் புனைவு கதை தொகுதியை, நண்பர் :-) ஒருவர் பரிந்துரையின் பேரில் வாசித்தேன். அதில் சில கதைகளுடன் என்னால் உடன்பட முடியவில்லை, அதைப் பற்றி இங்கு பேசப்போவது இல்லை. இந்த வாரம், ஜெயமோகன் எழுதிய குறுநாவல்கள் பற்றி.பதினொரு குறுநாவல்கள் கொண்ட இந்தத் தொகுப்பை வாசிக்கும்போதும், வாசித்து முடித்த பின்னும் எனக்கு ஏற்பட்ட எண்ணங்களை இங்கு பதிவு செய்கிறேன்.

26 Dec 2012

உலோகம் - ஜெயமோகன்

ஜெயமோகனின் உலோகம் அவரது இணையதளத்தில் தொடராக வந்தபோது நான் ஏனோ வாசிக்கவில்லை. புத்தகமாக வந்தபின்னும் முதலில் வாங்கவில்லைதான். 

“இலங்கைத் தமிழருக்காய்க் குரல் கொடுக்கிறேன் என்பவர்களுக்கு, எது நடந்தால் என்ன என்று இருப்பவர்க்கு, குரல் கொடுக்க மாட்டேன் என்பவர்களுக்கு, தமிழர் நலனுக்காய் உழைக்கிறோம் நாங்கள் என்று மார்தட்டுவோருக்கு என்று யாரை எடுத்துக் கொண்டாலும் இலங்கையின் உண்மை நிலவரம் இங்கிருக்கும் யாருக்கும் நிச்சயமாகத் தெரியாது என்பது என் துணிபு” என்றார் அலுவலக நண்பர்.

”இப்போ என்ன திடீர்ன்னு இதைச் சொல்றீங்க?”, என்றவனிடம், “உலோகம் வாசிச்சேன்”, என்றார்.

“ஓ”

’உலோகம்’ வாசித்தால் உமக்கு அந்த இலங்கை அரசியல் பத்தி ஏதும் தெரியாவிட்டாலும் அகதிகள் பத்தி ஒரு அவுட்லைன் கிடைக்கும் பாருங்க”, என்றார்.

“வாசிக்கறேனுங்க”, என்றேன்.

"அவங்க லைஃப் பத்தி தெரிஞ்சிட்டா, நம்ம பி.பீ.ஓ. லைஃப் பத்தி அதன் பிறகு நிச்சயம் குறை சொல்லமாட்டீங்க. வாழ்வாங்கு வாழறோமய்யா  நாமெல்லாம்."

"மேனேஜரிசம் பேசறீங்களோ?"

“ஜெமோ வாசகர்தானே நீங்க? இன்னும் வாசிக்கலைன்றீங்க?

“வாசிக்கலாமுங்க. புக்கு எங்க போயிடப் போவுது” 


பின்னொரு நாளில் ஒரு 'கான்ஃபரன்ஸ் கால்' வேளையில் நம் நண்பருக்கும், மறுமுனையில் மேற்கு தேசமொன்றில் வசித்த புலம்பெயர்ந்த ஒருத்தருக்கும் நிகழ்ந்த முடிவுறா ஒரு விவாதம் என்னை உடனடியாக உலோகம் வாங்கச் செய்தது.

“உங்களுக்கு என்ன தெரியும்னு அந்த நாவலைக் கொண்டாடறீங்க”

“எதுவுமே தெரியாததாலதான் கொண்டாடறேன்னு வெச்சுக்கோங்களேன்”

“எதுவும் தெரிஞ்சா நிச்சயம் கொண்டாடமாட்டீங்க”

“சொல்லுங்க பாஸ். தெரிஞ்சிக்கறேன்”

“இல்லை. உங்க மாதிரி ஆசாமிக்கு புரிய வைக்கறது அத்தனை எளிமையில்லை”

“பிறகு எதுக்கு உங்களுக்கு என்ன தெரியுமுன்னு கேக்கறீங்க”

“இல்லை. நாம நிறுத்திக்குவோம். லெட்ஸ் கோ பேக் டு தி பிஸினஸ். டெல் மீ டிசம்பர் நம்பர்ஸ். லெட்ஸ் கோ த்ரூ”

நான் சிரித்துக் கொண்டேன்.

லோகம்.....!

அயல்தேசத்து நண்பர் சொன்னதுபோல, ’உலோகம்’ நிஜத்தின் பிம்பம் துளியும் இல்லாது முழுக்க முழுக்க புனைவாகவே கூட இருக்கலாம்.  எனினும் நம் நண்பர் சொன்னதுபோல் அகதி ஒருத்தனின் வாழ்வின் அவுட்லைனையேனும் குறைந்தபட்சம் நமக்குத் தருகிறது. தீவிரமான, அழுத்தந்திருத்தமான ஒரு அவுட்லைன்.

னக்குத் தெரிந்த த்ரில்லர் நாவல்கள் வேறுவிதமானவை. புலரும் நல்காலைப் பொழுதின் புள்ளினங்களின் சங்கீதத்துடனான இனிமை போல சந்தோஷமாகக் கதை தொடங்கும். இரண்டொரு அத்தியாயங்களுக்குள் ஒரு கொலை அரங்கேறும். டிடெக்டிவ் ஏஜென்ஸி நடத்துபவர் கதாநாயகராக கதையுள் நுழைவார். அவர் காதலியோ அல்லது மனைவியோ அவருடன் எப்போதும் உதவி டிடெக்டிவாக வளைய வருவார். கதைமாந்தர் மூவர், நால்வர் மீது சந்தேக நிழல் இருக்கும். ஒவ்வொரு சந்தேக முடிச்சாக நம் கதாநாயகர் அவிழ்க்க இறுதி அத்தியாயத்தில் கொலையாளி அடையாளம் காணப்படுவார்.

உலோகம் அந்த வகையிலான பத்தோடொன்றான த்ரில்லர் அன்று. துப்பாக்கியில் பொருத்தப்பட்ட குண்டு போன்று தனக்குத் தரப்பட்ட ஒரு குறிக்கோளுடன் இந்தியா வந்து இறங்குபவன் சார்லஸ் என்கிற சாந்தன்.  தன்னை இயக்கும் கை எந்தக் கை என்பதை அறியாத குண்டு அவன் என்பதுதான் ஒட்டுமொத்தக் கதையின் த்ரில்லையும் நம்மிடம் தக்க வைக்கும் காரணி.

சார்லஸ் செய்யும் கொலையில் துவங்குகிறது கதை. பொன்னம்பலத்தார் என்னும் பிரபல மனிதரைக் கொல்கிறான் சார்லஸ். கதை பின்னோக்கிச் செல்கிறது. ”கிளம்பு” என்றொரு ஒற்றை வார்த்தை ஆணை கிடைக்க அகதிகளோடு அகதியாக இந்தியா வந்திறங்குகிறான் சார்லஸ். அவனது பயணங்களும், சந்திக்கும் மனிதர்களும், ஒவ்வொரு கட்டமாக நகர்ந்து அவன் தனக்குத் தரப்பட்ட குறிக்கோளை நோக்கித் தன்னையறியாமலேயே பயணிப்பதுவும் இறுதி நிகழ்வாக பொன்னம்பலத்தாரைக் கொல்வதுமாகக் கதை நிறைகிறது. 

தமிழ் இயக்கங்களாலேயே கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் பத்தாயிரத்தைத் தொடும் என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை வடகிழக்குப் பிராந்தியத்தின் முன்னாள் முதலமைச்சர் தெரிவித்தார். போராட்ட இயக்கங்களைப் பொருத்தவரையில் தம்மைப் பற்றி சரிவர அறியாத எதிரியைவிட தம்மைப் பற்றி நன்கு அறிந்த துரோகி மிகவும் ஆபத்தானவன். அதனால்தான் துரோகிகளாகத்  தாங்கள் அடையாளம் கண்டுகொள்பவர்களைக்  களையெடுப்பதில் இயக்கங்கள் பெருமுனைப்பு காண்பிக்கின்றன.

இயக்கத்தால் அப்படிப்பட்ட துரோகியாக அடையாளம் காணப்பட்டவரான பொன்னம்பலத்தாரை மற்றொரு துரோகத்தின் துணையைக் கொண்டே முடிப்பதுதான் ஒட்டுமொத்தக் கதையும்.

அந்தக் கொலையும் அதற்கான காரணமும் அது அரங்கேறும் விதமும் மட்டுமே கதையாகியிருந்தால் உலோகம் ஒரு சராசரி த்ரில்லராக இருந்திருக்கும். உலோகம் சம்பவங்களின் வழியே சொல்லப்படுவதாக அல்லாமல் சார்லஸின் உள்ளம் வழியே பயணிக்கிறது. நம்மருகே அமர்ந்து சம்பவங்களைச் சொல்பவனாக சார்லசின் பார்வையில் விரிகிறது கதை. வாழ்க்கையின் சில விசித்திர கணங்களையும், பல தீவிர கணங்களையும்  சார்லஸ் வழியே ஜெயமோகன் நம்முன் வைக்கிறார். 

துப்பாக்கித் நம்மைத் துளைக்கும் தருணத்தில்  நாம் அதை உணர்வது எப்படி இருக்கும் , நடுக்கடலில் துப்பாக்கிகளின் முழக்கங்களில் இருந்து தப்பிக்கும் தருணம் தரும் போதை, சித்திரவதையின் வலி, அதை அனுபவிக்கும் ஒருவனின் அந்தக் கண நேர சிந்தனை.... இப்படிக்  கதை நெடூக ஒரு சராசரி மனிதன் சந்தித்திராத தீவிர சம்பவங்களின் கோர்வையால் கோர்க்கப்பட்டு நம்மைக் கட்டிப்போடுகிறது புத்தகம்.

இந்நாவலை வாசித்தவர்கள், நுனிப்புல் மேய்ந்தவர்கள், வாசிக்காதவர்கள் என அனைவருமே பொதுவாக இது இயக்கங்களுக்கு எதிரான நாவலாகப் பார்க்கிறார்கள்.  உன்னிப்பான வாசிப்பில் இந்திய உளவுத்துறையின் தேவை சார்ந்த விளையாட்டுகளும் அது சார்ந்த சம்பவங்களையும் கதையில் காணலாம்.

உலக அரங்கில் இலங்கை சதுரங்கப் பலகையாகி, அதன் விடுதலை இயக்கங்களும் கூட இந்தியா இயக்கிய சதுரங்கப் பொம்மைகளான தோற்றம் நாவல் வாசிக்கையில் உங்களுக்குக் கிடைத்தால் அது ஆச்சர்யமில்லை.

உலோகம் - ஜெயமோகன்
த்ரில்லர் நாவல்
பக்கங்கள் 216 / விலை ரூ. 50/-
இணையம் மூலம் வாங்க: கிழக்கு / 600024.காம்
இணையத்தில் வாசிக்க: ஜெயமோகன்.இன்

3 Dec 2012

அனல் காற்று - ஜெயமோகன்



பாலுமகேந்திராவுக்காக எழுதப்பட்ட கதை. என்ன காரணத்தினாலோ திரையாக்கம் பெறவில்லை. காதல், காமம் என்றெல்லாம் பெயர்வைத்து நாம் பிதற்றிக் கொள்ளும் மனித உறவுகளைப் பற்றிய கதைதான். நமக்கு ஒருவரைப் பிடித்துப் போய் விட்டால் அவரின் அருகாமை வேண்டி, இன்மை இல்லாதிருக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம். எந்த உறவாக இருப்பினும் நெருக்கம் அதிகரிக்குந்தோறும் அந்த உறவுக்கான மரபு மீறப்படும். மன மகிழ்ச்சி மட்டுமே முதன்மையாக இருக்கும். சிலநேரங்களில் 

இப்படியாக மகிழ்ந்த வாழ்வின் உறவென்பது முதிர்ச்சி அடையும். ஒரு கட்டத்தில் வந்த பாதை கசக்கும். மனம் வேறொரு உறவை நாடும். பழைய உறவைத் தொடர முடியாமலும், புதிய உறவில் நெருங்க முடியாமலும் மனம் அல்லாடும். அந்த நேரத்தில் எடுக்கப்படும் ஒரு முடிவு எதோ ஒரு உறவை காய்ந்த சிறகு இறந்து உதிர்வதைப் போல மரணிக்கச் செய்யும். இப்படிப்பட்ட ஒரு கதைதான் அனல் காற்று.

அருணின் ஃபிளாஷ்பேக்கில் கதை துவங்குகிறது. கணவன் தன்னை ஏமாற்றியதால் வாழ்க்கையில் நொடிந்து போனவளான அம்மா, தனியாய் அருணை நல்லவனாக வளர்க்க எண்ணுகிறாள். அம்மாவின் தோழியான கணவனை இழந்த சந்திரா, தகப்பன் இல்லாத அருண் இருவருக்குள்ளான உறவு காதல், காமம் என எல்லை தாண்டிப் போகிறது. அந்த நேரத்தில் வந்து சேர்கிறாள் அருணின் முறைப்பெண்ணான சுசீலா. சந்திராவுடனான உறவில் முதிர்ச்சியடைந்த அருண் சுசீலாவை விரும்புகிறான். அவளைத் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். இதற்கு சந்திரா தடையாக இருக்க, இவர்கள் உறவு அம்மாவிற்கும் தெரிய வருகிறது. 

இறுதியில் என்ன ஆனது, யார் யாரை மணக்கிறார்கள் என்பதுதான் கதை.

இந்தக் கதையில் நம்மை மிகவும் கவர்வது கதாபாத்திரங்களின் உருவாக்கமும் சொல்லப்பட்ட விதமும்தான். கணவன் ஏமாற்றியதால் தன் மகனை நல்லவனாக வளர்க்க வேண்டும் என்ற முனைப்பில் கண்டிப்பாக இருக்கும் அம்மா. தன்னை ஏமாற்றிய கணவன் இறந்தபோது கூட அவர் மேல் சிறு பரிதாபம் கூட காட்டாதது இயல்பே. வளர்ந்த பின்னரும் தன் மகன் தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும், தன் மகன் இன்னும் வளரவில்லை குழந்தை என்றெண்ணி கொள்ளும் ஒரு தாய். தன் மகன் தந்தை நினைப்பில்லாமல் வளரவேண்டும் என்று பக்குவமாக வளர்த்தும் கடைசியில் அவன் தந்தையின் இன்னொரு குடும்பத்திற்கு உதவியாக இருப்பதைக் கண்டு உடைந்து போகிறார். இருந்தாலும் இறுதியில் உண்மை உணர்ந்து மகனின் மனிதாபிமானத்தை மெச்சுகிறார்.

தந்தை இல்லை, தாயும் மிகக் கண்டிப்பு என்பதால் தன்னுள் இருக்கும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள ஓரிதயம் தேடும் அருண். அம்மாவின் தோழி என்றாலும் கூட, தன்னை விட பெரியவள் என்றாலும் கூட ஆதரவாக இருக்கும் சந்திராவிடம் எல்லை மீறுகிறான். அதே சமயம், தந்தை என்னதான் துரோகம் செய்திருந்தாலும் அவர் மேலும் கரிசனம் கொண்டு அவர் குடும்பத்தை கவனிக்கிறான். தன் மீது மிகுந்த காதல் கொண்டிருக்கும் சுசீலாவையும் நேசிக்கிறான். சந்திராவிடம் ஒரு குழந்தையாக, புதைந்து அழுது சோகங்களைத் தீர்த்துக் கொள்பவனாகவும், சுசீலாவிடம் ஒரு ஆணாக, அவளை அரவணைத்து நேசிக்கும் ஒருவனாகவும் இருக்கிறான். இதுவே அவனைக் குழம்பச் செய்கிறது. கணவன் இறந்த பின் அருணை நேசிக்கும் சந்திரா. தவறென்று தெரிந்தும் உறவை விட முடியாமல் சுசீலா வந்ததும் பொறாமை கொள்ளும் குணாதிசயம் கொண்டவள்.

மனித மனம் மிக விசித்திரமானது. சோகத்தில் அது நம்மை விரும்புபவர்களையும், மகிழ்ச்சியில் நாம் விரும்புபவர்களையும் நாடும். அருணின் நிலையும் அதுதான். அம்மாவின் கண்டிப்பில் வளர்ந்ததனால் என்னவோ அருணுக்கு உறவுகளின் வலி தெரிந்திருக்கிறது. அப்பாவின் குடும்பத்தை, சித்தியை, தங்கைகளை நேசிக்கிறான். இருந்தும் அவனுள் இருக்கும் வாலிபத்தின் எண்ணச் சிதறல்கள் சந்திராவுடன் அவனை நெருக்கமாக்குகிறது.

இந்தக் கதையில் சுசீலாவின் பாத்திர அமைப்பு மட்டுமே கொஞ்சம் குழப்பமானதாக இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து வந்தவள், அருண் மீதான காதல், கலாச்சார மிக்கவள் என்றெல்லாம் இருந்தாலும் சுசீலாவின் பெண்களுக்கே உரிய அந்த ‘இன்ஸ்டின்க்ட்’ அருண் தவறு செய்வதைக் காட்டிக் கொடுக்கிறது. அருணை வெறுக்கிறாள். இறுதியில் அருணின் குணம் கண்டு விரும்புகிறாள். சுசீலா பாத்திரத்தை கொஞ்சம் கூட அழகாக்கி இருக்கலாமோ?.

பாலு மகேந்திரா என்று படித்த உடனேயே, தொடர்ந்து கதை வாசிக்க வாசிக்க மனதில் காட்சிகள் ஓடத் தொடங்கி விட்டன. அருணாக ஜெயம் ரவி, சந்திராவாக பிரியாமணி & சுசீலாவாக அனன்யா. நான் கற்பனை செய்தது இப்படித்தான்.

வெப்பம் கூடிச் சென்றால் ஒன்று மிதமிஞ்சி குளிர்ந்து மழையாகி விடவேண்டும் இல்லையேல் அது ஊரையே எரித்து விடும். உறவைப் பேசும் வகையில் இது ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைத் தரும் நாவல்.

நாவல் | ஜெயமோகன் | தமிழினி | ரூ. 90
இணையத்தில் வாங்க: கிழக்கு


16 Nov 2012

பனிமனிதன் - ஜெயமோகன்




குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் ஆம்னிபஸ் தளம் குழந்தைகள் இலக்கியத்தைக் கொண்டாடுகிறது.  சிறார் இலக்கியத்தை பற்றிய எனது அடிப்படை புரிதல்களைப் பகிர்ந்துக்கொண்டு முன்செல்வதே சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.  ஓரளவு கோர்வையாக வாசிக்கத் தெரிந்த நாள் முதல் தினமலர் இதழின் சிறுவர் இணைப்பாக வெள்ளிதோறும் வரும் சிறுவர் மலரை வாசித்தது நினைவில் நிற்கிறது. இதழின் கடைசி பக்கத்தில் வரும் பலமுக மன்னன் ஜோ, பேய்ப் பள்ளி, சோனிப் பையன், எக்ஸ்- ரே கண், சிண்டன் போன்ற படக்கதை பாத்திரங்களின் உருவங்களைத் தெளிவாகவே நினைவுக்கூர முடிகிறது. பின்னர் கோகுலம், சந்தாமாமா, டின்கில் என்று சென்ற வாசிப்பு பதின்ம பருவத்தில் ஹாரி பாட்டருக்குத் தாவியது. ஏறத்தாழ அதே சமயத்தில் தமிழில் கல்கியும், தேவனும் எனக்கு அறிமுகமானார்கள்.

Image 1

30 Oct 2012

ஏழாம் உலகம் - ஜெயமோகன்



நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது 'ஜெயமோகனின் காடு நாவல் காமத்தைப் பற்றியது. முழுக்க முழுக்க மனிதனின் காதலைப் பற்றிப் பேசிய நாவலாக அவரது ஏழாம் உலகத்தைப் பார்க்கிறேன்' எனச் சொன்னேன். உண்மையில் இதுதான் எனது அபிப்ராயம். அவரைச் சீண்டுவதற்காகச் சொன்ன வழக்கமான வார்த்தை என எடுத்துக்கொண்டு பயங்கரமாகச் சிரித்தார். நான் முகத்தை சீரியசாக வைத்திருப்பதைப் பார்த்துவிட்டு, ’சும்மா விளையாடாதப்பா, அப்பழுக்கற்ற குரூரம வெளிப்பட்ட நாவலாகத்தான் எனக்கு ஏழாம் உலகம் தெரிந்தது’ எனச் சொன்னார்.

விஷ்ணுபுரத்தில் நோய்மை பற்றியும் குஷ்டரோகிகளும, சாக்கடைகளும் நிரம்பியதையும் பக்கம் பக்கமாக எழுதியவர் ஏழாம் உலகில் அத்தனை ஆழத்துள் போகவில்லை பார்த்தியா? முடம், கூனன் என எல்லாரின் புறத்தோற்றத்தை  மிகக் கொடூரமாகச் சித்தரிக்க முடியும். ஆனால் அவர்கள் எல்லாருக்குள்ளும் இருந்த காதலை ஆசையை மட்டுமே முதன்மைப்படுத்திய படைப்பு. இவர்களது உலகம் அன்பே உருவானது. அதைச் சுற்றியிருக்கும் சமூகக் குரூரங்கள் எத்தனை எத்தனை? 

சாதாரண வாழ்வை நினைத்து ஏங்குபவர்கள், மாறாத விதிப்படி வாழ்வு நடத்தினாலும் பதினைந்தாவது குழந்தையைப் பெற்றெடுத்து பாசத்தைப் பொழியும் முடமானத் தாய், பெருநோய்வாய்ப்பட்ட பிச்சைக்காரர்களாக இருந்தாலும் மற்றவர்களது உடம்பு உபாதைக்கு மருத்துவம் சொல்பவர்கள் எனப் பலதரப்பட்ட மனிதர்கள். உடலில் குறையோடு நோயுள்ள இவர்களைப் பார்த்து அருவருப்பொடு விலகி ஓடும் பெருவாரியான மக்களுக்கு தங்களது சமூக நோய்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. நோயற்ற உடம்பு, சிறு சந்தோஷங்களுக்கு ஒப்புகொடுக்கப்பட்ட வாழ்வு எனச் சின்னஞ்சிறு வட்டத்துக்கு அதிபதியாக இருந்துகொண்டு மற்ற மனிதர்களை அடிமைப்படுத்துபவர்கள்.


20 Sept 2012

புதியகாலம் - ஜெயமோகன்




’விமரிசனம் எதுவாக இருந்தாலும் அது படைப்புகளை வாசிப்பதற்கான ஒரு பயிற்சி மட்டுமே. என் வாசிப்பு இன்னொருவர் வாசிப்புக்கு சில புதிய சாத்தியங்களை அளிக்கும். அதன் மூலம் அவர் இன்னும் விரிந்த வாசிப்பு ஒன்றை அடைகிறார். எந்த விமரிசனமும் படைப்பை ‘மதிப்பிட்டு’ விட முடியாதென்றே நினைக்கிறேன். இது ஒரு வாசிப்பு மட்டுமே.’

- புதியகாலம் முன்னுரை.

புனைவாசிரியராக இருந்தபடி சமகால எழுத்தாளர்கள் பற்றி காத்திரமான விமர்சனப் பார்வையை முன்வைக்க அசாத்திய துணிச்சல் வேண்டும். 'நாவல் எனும் சாத்தியத்தை முழுவதும் உணர்ந்து படைக்கப்பட்ட நாவல்கள் தமிழில் இல்லை', என அகிலன் விருது விழா மேடையில் முன்வைத்தது தொடங்கி, 'அறுவைச் சிகிச்சைக்குக் கடப்பாரை' எனப் பெரியார் பற்றிய கட்டுரை போன்ற பொதுபுத்தி சார்ந்த கற்பிதங்களை மறுபரிசீலனைக்கு தூண்டுவது என கலைஞனுக்கு இருக்க வேண்டிய உருத்தல்களைப் பேசி வருகிறார் ஜெயமோகன். இத்தொகுப்பில் அவர் குறிப்பிடுவது போல, ‘கலகம் என்பது எது சமூகத்தின் ஆதாரமாக அதனால் பொத்திப் பாதுகாக்கப்படுகிறதோ எதைச் சொன்னா அச்சமூகமே கொந்தளித்தெழுமோ அதைச் சொல்வது. அதற்கு அறுவை சிகிச்சைக் கத்திபோல ஊடுருவிச் செல்லும் ஆய்வுப் பார்வை தேவை. ஒவ்வொன்றையும் அதன் மிகச் சிக்கலான வடிவிலேயே எதிர்கொள்ளும் மனவிரிவும் தேவை’, என போலி நம்பிக்கைகளையும் அடிப்படையற்ற தரவுகளையும் ஆய்வு செய்வதன் முக்கியத்துவத்தை கூறுகிறார். 

விமர்சகராக இவர் முன் நிறுத்தும் படைப்பாளிகளின் தரத்தேர்வில் குறைவில்லை. கோட்பாடுகளுக்குள் நுழையாமல் தனது நுண்மையான ரசனை மூலம் பலவகைப்பட்ட எழுத்தாளர்களை தெளிவாக இவரால் அடையாளம் காண முடிகிறது. சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா போன்ற இலக்கிய ஆளுமைகளால் ஆற்றுப்படுத்தப்பட்டு அவர்கள் வழியில் சென்று தனக்கென புது கூழாங்கற்களை கண்டுள்ளார். கடற்கரை மணலில் கூழாங்கர்களுக்கிடையே ரத்தினம் தேடுபவனைப் போலில்லாமல், ஒவ்வொரு கல்லையும் பொறுமையாகச் சோதித்து ரத்தினங்களைச் சேகரிக்கிறார். படைப்பாளிகளை அல்ல படைப்புகளைத் தேடிக் களித்தபின் படைப்பாளியை முன் நிறுத்துவது அவர்களுக்கு கூடுதல் போனஸ் மட்டுமே. வெண்ணிலை, காவல்கோட்டம், மணல் கடிகை எனக் கடந்த இருபது வருடங்களாக தமிழ் இலக்கியப் பொதுப்பரப்பில் இவர் கவனத்துக்குக் கொண்டு வந்த தரமானப் படைப்புகள் ஏராளம்.


28 Aug 2012

சங்கச் சித்திரங்கள் - ஜெயமோகன்

”சிற்பி செதுக்கியதுதான் தெய்வச் சிலை. ஆனால் தெய்வம் அவனுக்குக் கட்டுப்பட்டதல்ல”
(சங்கச் சித்திரங்கள் புத்தகத்திலிருந்து)

”கவிதைகள், நாவல் போல, பழந்தமிழ் பாடல்கள், செய்யுள், பா'க்கள் படிக்க விருப்பம் தோன்றியிருக்கிறது. ஆர்வக்கோளாறில் சில பதவுரைகள் முயன்று பார்த்தேன். புரியவில்லை. ஒரு கட்டத்தில் ஆர்வமில்லாமல் போய்விடுகிறது. எதிலிருந்து துவங்கினால் சங்கத்தமிழ் வாசிப்பு சீராகும்? உதவுங்கள் அனுபவஸ்தர்களே!”

இப்படி இணையக் குழுமம் ஒன்றில் நண்பர் ஒருவர் கேள்வி ஒன்றைக் கேட்டிருந்தார்.

இந்தக் கேள்விக்கு மற்றோர் குழு உறுப்பினர் சொன்ன பதிலில் தொடங்கியது இந்தப் பதிவை எழுதுவதற்கான உந்துதல். அந்த பதிலைக் கடைசியில் பார்ப்போம், சங்கச் சித்திரங்கள் புத்தகம் பற்றி அதற்குமுன் பார்க்கலாம்.

ஒரு படைப்பு நம்முள் ஒரு அதிர்வை ஏற்படுத்த அது என்னவாக இருக்க வேண்டும்? எத்தகையதாக இருக்க வேண்டும்? அது ஒரு மூன்று வரிப் புதுக்கவிதையாக இருக்கட்டும், முப்பது வரித் திரைப்பாடலாக இருக்கட்டும், சிறுகதை, பெருங்காவியம், நாடகம், திரைப்படம் என்னவாக வேண்டுமானால் இருக்கட்டும். அது ஏற்படுத்தும் அதிர்வு எதனால் எங்கிருந்து ஏற்படுகிறது? 

இது எனக்கு நிகழ்ந்த போது நன்றாயிருந்தது என எதையோ அசைபோட வைக்கிறது ஒரு படைப்பு. இந்த நிகழ்வு எனக்கு நிகழாமற் போகட்டும் என எதையோ பார்த்து அச்சமுறச் செய்கிறது இன்னொன்று. இப்படி ஒரு நிகழ்வு எனக்கும் நிகழ்ந்தால் எப்படி இருக்கும் என ஏக்கமுறச் செய்கிறது மற்றும் ஒன்று. அதிர்வின் காரணம் படைப்பில் இல்லை. படைத்ததைச் சொன்னவன் சொன்ன முறையினில் இல்லை. ஆனால், அதை வாங்கிக் கொண்டவன் வாங்கிக் கொண்ட விதத்தினில் இருக்கிறது. 

ஒரு படைப்பின் சுவையை நாம் நம் சொந்த வாழ்வின் நுட்பமான அனுபவங்களின் வாயிலாக அறிதலே அழகு. சங்கப் பாடல்கள் நோக்கிய நம் அணுகுமுறையும் இத்தகையதாகவே இருக்கட்டும் என்று வலியுறுத்துபவர் ஜெயமோகன். 

சங்கப்பாடலின் அர்த்தத்தை எளிய நடையில் மொழிபெயர்ப்பது என்பது நாம் பள்ளியில் படித்த அருஞ்சொற்பொருள் அறிதல் மட்டுமேயன்றி வேறில்லை. புத்தகத்தை வைத்துக் கொண்டு யோகா, தியானம், சமையல், கராத்தே கற்பது எல்லாம் எப்படி சாத்தியமற்ற விஷயங்களோ அதே போன்றுதான் அருஞ்சொற்பொருள் விளக்கத்தின் வாயிலாக சங்கப் பாடல்களை அறிவதுவும்.  அருஞ்சொற்பொருள் தந்தவுடன் நின்றுவிடுவதில்லை அவற்றுள் பொதிந்துள்ள அர்த்தங்கள். 

சரி! சங்கச் சித்திரத்திற்கு வருவோம்.

சங்கச் சித்திரங்கள் ஆனந்த விகடனில் தொடராக வெளி வந்தது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு சங்கப்பாடலை (அல்லது அதன் ஒரு பகுதியை) நமக்கு அறிமுகப்படுத்துகிறார் ஜெயமோகன். 

சங்கப்பாடல் ஒன்று, புதுக்கவிதை வடிவில் எளியநடையில் அதற்கான மொழிபெயர்ப்பு, அந்தப் பாடல் சார்ந்த அர்த்தம் பொதிந்த தன் வாழ்வின் உக்கிர அனுபவம் ஒன்று என ஒவ்வொரு அத்தியாயத்தையும் மூன்று லேயர்களாகப் பிரித்துச் சொல்கிறார் ஜெயமோகன். 

அந்த நாற்பது பாடல்களில் ஒரு உதாரணம் பார்ப்போம்:

காதலனோடு ஓடிப் போகும் தன் மகளின் பயணப் பாதையெங்கும் நிழலும், குளுமையும் நிறைந்ததாய் இருக்கட்டும் என எண்ணி  அவள் அன்னை பாடும் பாடல் இது. குறுந்தொகையை ஏதோ ஒட்டுமொத்தமாகக் காதல் கவிதைகளின் தொகுப்பு மட்டுமே என்று நினைத்திருந்த எனக்கு இந்தப் பாடல் வேறொரு பரிமாணத்தைப் புரிய வைத்தது. 

 ஞாயிறு காணாத மாண்நிழற் படீஇய
மலைமுதல் சிறுநெறி மணல்மிகத் தாஅய்
தண்மழை தலைய வாகுக – நம் நீத்துச்
சுடர்வாய் நெடுவேல் காளையோடு
மடமா அரிவை போகிய சுரனே
- (குறுந்தொகை 378, கயமனார்).

மனிதனின் மனதில் மாறாமல் தேங்கிப் போன சாதீய உணர்வுகளின் உக்கிர சொரூபத்தை ஜெயமோகன் தரிசித்த ஓர் வாழ்வனுபவம் இந்தப் பாடலின் அர்த்தத்தை நம் முகத்தில் அறைந்து புரிய வைக்கிறது. இந்த உக்கிரத்தின் வெம்மை நாம் ஒவ்வொருவரும் எங்கேனும் தரிசிப்பதே. 

சங்கப் பாடல்களோடு பரிச்சயம் பண்ணிக் கொள்ள விரும்புபவர்கள்  இந்தப் புத்தகத்தின் நாற்பது அத்தியாயங்களையும் வாசித்தல் நலம்.

இதையேதான் நம் இணையக் குழு நண்பர் இந்தப் பதிவின் ஆரம்பத்தில் மற்றொரு நண்பருக்குப் பதிலாய்ச் சொன்னார், இப்படி:

”ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள்தான் சரியான துவக்கம்.
சங்கக் கவிதைகள் என்றில்லை, தமிழ் மொழியின் தனித்தன்மையையே உணர்வுகளோடு அறிய அதுதான் சரியான துவக்கம்.
அந்தப் புத்தகத்தை வாசித்தபின் பல சமயம் அவர் அதில் சொல்லியிருக்கும் கருத்துகளை, அவர் முன்வைக்கும் பார்வையை நினைத்துப் பார்த்திருக்கிறேன்.
இன்னமும் சொல்லப்போனால், இன்று நவீன விஷயங்களை எழுதவும்கூட சங்கச் சித்திரங்களை வாசிப்பது உதவக் கூடும்.
அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று”

ஜெயமோகன், 
சங்கச் சித்திரங்கள், 
288 பக்கங்கள், 
கவிதா பப்ளிகேஷன் 
டிசம்பர், 2002 பதிப்பு 
விலை ரூ.100
இணையத்தில் கிழக்கு / உடுமலை 

26 Aug 2012

ஜெயமோகனின் அந்தரங்கச் சமையலறை- "மேற்குச்சாளரம் - சில இலக்கிய நூல்கள்"

நாம் எவ்வளவு சாதாரண மனிதர்களாக இருந்தாலும், நமக்கு எவ்வளவு அவசர வேலைகள் இருந்தாலும் நாம் பல்வேறு கவனக் குறுக்கீடுகளைத் தாண்டிதான் நம் வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. ஒரு சாலையைக் கடப்பதானாலும்கூட நாம் நம் வேலையைப் பார்த்துக் கொண்டு போக முடிவதில்லை. கண்டதையும் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. அட, அப்படிதான் பார்க்கிறோமே, உருப்படியாக ஒரு விஷயத்தைப் பார்க்கிறோமா, ஆற அமர அதன் அழகை, அதிசயத்தை ரசிக்கிறோமா என்றால், அதுவும் கிடையாது - அபூர்வமான விஷயங்கள் எத்தனையோ நம் கண்களைத் தாண்டிச் சென்று விடுகின்றன. நாம் பார்க்க விரும்புவதை மட்டுமே பார்க்கிறோம் என்பதுதான் பெரும்பாலான சமயங்களில் உண்மையாக இருக்கிறது.




விஷயத்துக்கு வருகிறேன். கல்கி, பாரதி, தி ஜானகிராமன், சுஜாதா, பாலகுமாரன், நகுலன் என்று ஜெயமோகன் அவர்களால் அண்மையில் போட்டுத் தள்ளப்பட்டவர்களின் பட்டியல் கௌரவமானது - வாசகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை, மறந்தாலும் மன்னித்திருக்கும் வாய்ப்பு சுத்தம். மிகையாகப் புகழப்பட்ட ஒவ்வொருத்தரையும் அவரவருக்குரிய இடத்தில் வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் ஜெயமோகன் இந்த விமரிசனங்களை எழுதவே காரணமாக இருக்கிறதோ என்ற சந்தேகம்கூட இத்தனை நாட்களாக இருந்திருக்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...