A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label ஆதவன். Show all posts
Showing posts with label ஆதவன். Show all posts

27 May 2013

காகித மலர்கள் - ஆதவன் - 1977

சிறப்புப் பதிவர்: ஆர்.அனுராதா

எழுத்து எனக்கு ஒரு அலங்காரச் சேர்க்கையல்ல. யாரையும் பிரமிக்கச் செய்வதற்காகவோ, யாராலும் ஒப்புக்கொள்ளப் படுவதற்காகவோ நான் எழுதவில்லை. இது பொழுதுபோகாத பணக்காரன் வளர்க்கும் நாயைப்போல் அல்ல (நன்றி: Snap Judgment

முன்னெச்சரிக்கை: முதலிலேயே சொல்லிவிடுகிறேன். முழுக்க முழுக்க ரசித்துச் சிலாகித்துப் படித்த புத்தகம் இது என்பதால் இந்தக் கதை பற்றி எதிர்மறையாக நான் ஒரே ஒரு எழுத்தையும் இங்கே எழுதப் போவதில்லை. முழுவதும் ப்ளஸ் ப்ளஸ் ப்ளஸ் என்று நான் எழுதியிருப்பது உங்களுக்கு ஒரேயடியாக போரடித்தால், அதற்கு நான் பொறுப்பல்ல, ஆதவனே பொறுப்பு.

தைத் தலைப்புடன், ஆசிரியர் பெயருடன் கதை எழுதப்பட்ட வருடத்தையும் மேலே குறிப்பிட வேண்டிய அவசியம் என்னவென்றால், விமர்சனம் படிப்பவர்கள் தற்போதைய காலகட்டத்தில் வெளிவந்த நாவல் இது எனக் கருதி விடக்கூடாது என்பதற்காகத்தான்.

ஒற்றை வரியில் சொல்வதானால் டில்லியில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை மதிப்பீடுதான் கதை.

வெவ்வேறு குணாதிசயம் கொண்ட மூன்று சகோதரர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் அவர்களுக்கு வேண்டிய மற்றும் வேண்டாத நபர்கள் என இவர்களைச் சுற்றியே கதை வளைய வருகிறது. நாகரிகம் என்னும் பெயரால் ஒவ்வொருவரும் (பாத்திரங்கள்) செய்யும் பாசாங்குகள், அவை அவர்களுக்குத் தரும் திருப்தி அல்லது சலிப்பு, நாகரிக வாழ்க்கை குறித்த அவர்களது மதிப்பீடுகள் இவையே கதையின் மைய இழையாக இருக்கின்றது.

சில வருடங்களுக்கு முன் வெளிவந்த சேதன் பகத் எழுதிய ‘one night at call centre"ன் சில காட்சிகளை 77’ல் வெளிவந்த இந்தக் கதையின் காட்சிகளோடு (கதை, கதாபாத்திரங்களோடு அல்ல) ஒப்பிடும்போது அதிக வித்தியாசம் இல்லாமல் இருப்பது ஆச்சர்யம் தருவதாக இருக்கிறது. குறிப்பாக...பெண்கள் ரெஸ்டரண்டில் பீடி பிடிப்பது.... ஓ! ஸாரி.. சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, pre-marital sex (தமிழில் எழுத கூச்சமாயிருக்கு போங்கப்பா :) ).

இவையெல்லாம் அப்போதே... அந்த 70’களிலேவா? (அப்பாடா! டில்லியில்தான்). ஆனால் பாருங்கள், ஆதவன் இவ்விஷயங்களைக் கையாண்டிருக்கும் விதத்தால் மக்கள் யாரும் அவரை சேதன் பகத் அளவிற்கு எதிர்த்து அல்லது ஆதரித்துப் பிரபலம் ஆக்கவில்லை போலும்.

டில்லி மாநகரின் இடங்களை விவரிப்பதில் மாநகருடன் கதாசிரியருக்கு இருக்கும் பரிச்சயத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. (சுஜாதாவின் சில கதைகளைப் படித்தால் பெங்களூருவின் கீ-ப்ளான் உங்களுக்குக் கிடைக்கும்)


மனோதத்துவ நிபுணர் போல் கதாபாத்திரங்களின் மனவோட்டங்கள்; சமூக அக்கறை கொண்ட விஞ்ஞானி போல் செயற்கை உரங்கள், அதன் தொழிற்சாலைகளால் மண்ணுக்கும், மக்களுக்கும், நாட்டுக்கும் ஏற்படும் கேடுகள்; ஒரு தேர்ந்த அரசியல் விமர்சகர் போல் அரசாங்கம், அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் என ஆதவனின் ஆல்-ரவுண்ட் பர்ஃபார்மன்ஸில் கதையை ரசிக்க முடிகிறது.

அரசாங்க அலுவலகத்தில் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரைக்கும் அனைவரது செயல்பாடுகள் அவர்களுக்கு ஏற்படும் அழுத்தங்கள், புறக்கணிப்பு என விளக்கமாக எழுதியிருக்கிறார் ஆதவன். பல்வேறு துறைகள் பற்றி, விஷயங்களைப் பற்றி கதாபாத்திரங்களின் விவாதங்கள்  சிந்தனைகள் மூலம் தம் கருத்துகளைப் பதிவு செய்வதைப் படிக்கும்போது பல்வேறு துறைகளைப் பற்றிய கதாசிரியரின் ஆழ்ந்த ஞானம் நம்மை நிச்சயம் வியக்க வைக்கிறது என்றால்; இதில் எங்கும் தன் சிந்தனைகளை, யாரோ இருவரின் சம்பாஷனை அல்லது விவாதம் வழியே நம் மீது வலிந்து திணிக்காமல் கதையோட்டத்தோடே கொண்டு செல்லும், சொல்லும் பாங்கில் ஆதவனின்... மேதைமை என்றழைக்கலாமா அந்த பண்பை... அது நிச்சயம் நம்மை பிரமிக்க வைக்கிறது.

ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அதில் பிடித்த சிந்தனையைத் தூண்டும் வரிகளை அடிக்கோடிட்டு திரும்பத் திரும்பப் படிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அப்படிப்பட்டவர்கள் அடிக்கோடிட வேண்டும் என்று ஆரம்பித்தால் சில இடங்களில் பக்கம் பக்கமாக (முழுப்பக்கங்களையும்) அடிக்கோடிடும் அவசியம் ஏற்படும்.  Random-ஆக பிரித்து ஒரு பக்கத்திலிருந்து நான்கு வரிகளும் அதிக பட்சம் பக்கம் முழுவதையும் select செய்யலாம்.

என்னைப் பொருத்தவரையில் லைப்ரரியில் எடுத்த புத்தகம் இது என்பதால், அடிக்கோடிடும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. அதனால் புத்தகம் வாசித்து முடித்த பின் மேலே சொன்ன அதே random முறையில் புத்தகத்தை book cricket விளையாடும் பாங்கில் அங்கங்கே பிரித்த இடத்தில் பிடித்த வரிகளைக் குறிப்பிடுகிறேன்.

பெண் சிந்தனையால் அணுகப்பட வேண்டியவள்...... சிந்தனைக்கு முதலில் விடுதலையளித்து விட வேண்டும். அவள் உருவாக்குகிற பிரமைகளில் ஏமாறும் முட்டாளாக வேண்டும். புலப்படாதவை புலப்படுவது போலவும், புலப்படுவது புலப்படாதது போலவும் பாசாங்கு செய்ய வேண்டும். 
இயற்கையின், சூழ்நிலைகளின் இயல்பு ஒழுங்கீனம்தான். மனிதன் இவற்றிலிருந்து ஒழுங்கை உருவாக்க முயல்கிறான்.
ஒரு சாராரைப் பற்றி உருவாகும் பிம்பத்திற்கு அந்தந்த சாரார் பொறுப்பாளி என்பது உண்மையோ இல்லையோ! ஆனால் மக்கள் தாம் விரும்புகிற ரூபத்தில் - பிம்பத்தில் பிறரைக் காண்கிறார்கள் என்பது மிகவும் உண்மை 

வெவ்வேறு சூழ்நிலைகளில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு முடிவிற்காக வெவ்வேறு விதமான முடிவுகளை ஒரே சமயத்தில் ஏற்படுமாறு முடித்திருக்கிறார் ஆதவன். எனினும், அந்த முடிவு அத்தியாயம் எழுதிய விதத்தில் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். 

காகித மலர்கள் | ஆதவன் | உயிர்மை | இணையம் மூலம் வாங்க: உயிர்மை


23 May 2013

என் பெயர் ராமசேஷன்- ஆதவன்

 
இது நான் வாசிக்கும் ஆதவனுடைய இரண்டாவது நாவல். என்றைக்காவது உங்களுடைய எண்ணங்களைக் கூர்மையாக கவனித்தது உண்டா? ஒவ்வொரு நிகழ்வின்போதும் உங்கள் மனதின் எண்ணங்களைக் கொஞ்சமாவது உற்று நோக்கியது உண்டா? உங்கள் வாழ்வின் முக்கியமான காலகட்ட எண்ணங்களை உங்களால் இப்போதும் நினைவுகூர முடியுமா? இது மாதிரியான சில கேள்விகளுக்கு இந்நாவல் பதில் கூற முற்படுகிறது.

ஆதவனின் காகித மலர்கள் – என் பெயர் ராமசேஷன் இரண்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு, ஆனால் அது நம்மை நாவல் வாசிப்பதில் இருந்து அந்நியப்படுத்துவதில்லை. அப்படி என்றால் நாவலில் எனக்கு பிடிக்காத அம்சமே இல்லையா என்றால் உண்டு, அது பற்றி இடை இடையே.

4 Feb 2013

என் பெயர் ராமசேஷன் – ஆதவன்



அமெரிக்க ஏகாதிபத்தியமா, விஸ்வரூபம் வெளியாகவில்லையா, ராஜா சிறந்தவரா ரகுமான் சிறந்தவரா, ஆணாதிக்கமா, பெண்ணியமா, எகிப்தில் புரட்சியா? இப்படி உலகத்தின் எந்தவொரு மூலையில் என்ன பிரச்சினை நடந்தாலும் அதைத் தீர்க்கக் கருத்துச்சொல்லும் அல்லது புரட்சி பண்ணும் ஒரு அறிவுஜீவிக் கூட்டத்தினிடையே வாழ்வதென்பதொரு சாபம். இக்கூட்டத்தில் விஷயமறிந்து பேசுவோர் சிலர் மட்டுமே. அத்தகைய சிலரின் கருத்துக்கள் பாராட்டத்தக்கவை. ஆனால் மேற்சொன்ன கூட்ட்த்தில் பெரும்பான்மையினர் எக்ஸிபிஷனிஸ்டுகள் அல்லது விளம்பரப் பிரியர்கள். இத்தகையதான ஒரு சூழலை வாய்க்கப் பெற்றவன் தினசரி வாழ்க்கையில் போலி அறிவுஜீவித்தனத்தின் வெளிப்பாடுகளாக வெற்று வார்த்தைப் போர்களைக் கடந்துசெல்லும் தருணத்தில் ஏற்படும் ஆயாசத்தையோ மனவிரக்தி அல்லது வெறுமையையோ தீர்க்க ஒரு நல்ல படமோ ஒரு புனைவோ ஒரு இசையோ போதாது. தாந்தான் இண்டலெக்சுவல் என தனக்குத்தானே நிறுவிக் கொண்டு, நன்றாய்ப் பேசத்தெரிந்த ஒரு கூட்டத்தின் மௌனம்கூட பேரிரைச்சலாய் நாராசமாய் ஒலித்துக் கொண்டே இருக்கிறது காதுகளிலெப்போதும். நானிப்படியுணரும் எந்தச் சூழலிலும் மனதிற்கொரு நிம்மதி தருபவர் ஆதவன் மட்டுமே.

ஒரு விபத்தினைக் காணும்போதோ ஒரு ஆம்புலன்ஸ் கடந்து செல்லும்போதோ தானாகவே மனது பிழையாக ஒன்றும் இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்வது போல இத்தகைய போலி அறிவுஜீவிகளைக் கடந்து செல்லும் தருணத்தில் அனிச்சையாகவே கைகள் ஆதவனை எடுத்து வாசிக்கத் துவங்கியிருக்கின்றன. என்னளவில் இத்தகைய சங்கடங்களின் மீட்பராக ஆதவன் இருக்கிறார்.

இனி நாவலுக்குள் வருவோம். தன்னை நிறுவுதல் அல்லது அறிமுகம் செய்தல் என்பதொரு கலை. சிலர் பெயரைச் சொல்லுவார்கள், சிலர் குடும்பப் பின்னணியைச் சொல்லுவார்கள், சிலர் செய்யும் தொழிலைச் சொல்லுவார்கள். ஆனால் தன்னை ராமசேஷனாக அறிமுகம் செய்ய ஆதவனின் பிரயத்தனங்கள் இந்தப் புத்தகத்தின் முதல் வரியிலிருந்தே துவங்குகிறது. ராமசேஷனின் அறிமுகம் தன்மையிலிருந்து துவங்கவில்லை. தன் குடும்பம், தன் நண்பர்களிடமிருந்து துவங்குகிறார்.

அப்பாவை ஒரு சம்பிரதாயப் பிச்சு என்கிறார். கட்டிய மனைவியைவிட தாய்க்கும் சகோதரிக்கும் முக்கியத்துவம் கொடுக்குமொரு பழங்காலத்து ஆள். இருந்தாலும் மனைவி அவருக்கு உறவெனும்போது மட்டும் தேவைப்படுகிறார். மகனை மருமகள் கைக்குள் போட்டுவிடாதபடி அதிகாரம் செய்யும் பாட்டி, அவளிறந்தபின் அந்த அதிகாரம் தனக்கு வரவேண்டுமென நினைக்கும் அத்தை எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தானொரு இஞ்சினியரின் தாயாக வேண்டுமென்று நினைக்கும் அம்மா.

ஆங்கிலமும் பணமும் இருப்பதானால் மட்டுமே தன்னை உயர்ந்தவனாகக் காட்டிக்கொள்ளும் ராவ், வெறும் சினிமாவுக்காகவும் பணத்துக்காகவும் அவனிடம் நண்பனாக இருக்கும் மூர்த்தி எனும் விசுவாசநாய்என இத்தனை பேரின் முகமூடிகளையும் பாசாங்குகளையும் தோலுரித்து, இவைகள் யாவுமற்ற தானொரு இண்டலெக்சுவல் என்று தலைக்கு வரும் முதல் பவுன்சரியே சிக்சராக்கித் துவங்குகிறார். இருந்தும் ராவின் தங்கை மாலாவைக் காணும் தருணங்களின் தன் மனம் காமுறுவதைச் சுட்டி தானொரு அல்ஷேஷனாக மாறிவிடுவதாகவும் சொல்லுகிறார். தன்னியல்புகளில் தானே குறையுணரும் ஒரு புத்திசாலி.

உறவுகளில் இருக்கும் பாசாங்குகளைக் கட்டவிழ்க்கிறார். இயக்குனருக்கும் மிஸஸ்.ராவுக்கும் இடையே இருக்கும் உறவை அறிந்தபின் அவரிடம் நெருங்கும் சமயத்தில் அவளொரு சபலக்காரி என்று ஜட்ஜ்மெண்டலாக (தமிழில் என்ன?) முடிவெடுத்து நெருங்க அந்தச் சூழலை அவள் தன்வசமாக்கிக் கொள்கிறாள். தன் மகள் ஒரு போக்கிரியுடன் பழகுவதைத் தவிர்க்க நினைப்பவள் ராமசேஷனை ஒரு காமுகனாக்கி மகளிடம் பழகுவதைத் தடை செய்கிறாள். இந்தச் சூழலில் ஆணுக்கு காமம் எவ்வளவு பாதகம் என்றும் பெண்ணுக்கு அவளுடல் எவ்வளவு சாதகமென்றும் விளக்கியிருக்கிறார். அதே சமயம் பிரேமாவைக் கருப்பானவளாக சித்தரித்து அந்த மாதிரியான பெண்களிடத்தே இருக்கும் தாழ்வு மனப்பான்மையையும் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

இப்படியாகச் சில சம்பவங்களின் கோர்வைதான் நாவல் என்றாலும் சொல்லப்பட்ட விதமும் ஆளுமையும் தான் இதில் பிரதானம். தன்னை ஒரு காஸனோவாவாக நினைத்துக் கொள்ளும் ராமசேஷன் தோற்பதென்னவோ காமத்தின் முன்னிலையில் மட்டுமே. ராவுடன் ஏற்பட்ட ஈகோவில் பிரேமாவையும் விடுத்து பங்கஜம் மாமியிடம் போய் தோற்று நிற்கும்போது காமத்துக்கு இறைஞ்சுபவனாகவும், ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தில் தோற்றவனாகவும் தான் தெரிகிறான் ராமசேஷன். ஒரு பெண்ணுடல் ஆணுக்குள் செய்திடும் மாயையை எழுத்தில் கொணர்ந்திருக்கிறார், அவ்வளவுதான்.

கதவுகள் தாழிடப்பட்ட தனியறையிலாவது நாம் எப்போதும் சுமந்துகொண்டிருக்கும் கிரீடத்தையும், புத்திசாலியெனும் முகமூடியையும் ஒருவரும் அறியாதவாறு கழட்டிவைத்துவிட்டு எம்ப்டி த கப்என்று ஜென்னில் சொல்லுவார்களே அதுபோல நம்மை முன்னிலைப்படுத்தாமல் வாசிப்போமேயெனில் நல்லதொரு தரிசனம் கிட்டும் ஆதவனிடத்தே!

நாவல் | ஆதவன் | பக்கங்கள் 200 | விலை ரூ. 120 | இணையத்தில் வாங்க: கிழக்கு

22 Dec 2012

என் பெயர் ராமசேஷன் – ஆதவன்

முன்குறிப்பு: இந்த அறிமுகம்/ விமர்சனம்/ ஆய்வு/ கதைச் சுருக்கத்தை எழுதும்போது, பலருடைய கருத்துக்களை, இணையத்திலிருந்தும் ஆம்னிபஸ் நண்பர்களிடமிருந்தும் எடுத்துக்கொண்டேன். அவர்களனைவருக்கும் நன்றி.

மனைவிக்கு உடம்பு சரியில்லை. கணவன் வீட்டைச் சுத்தம் செய்து, சமையல் செய்து, துணிகளைத் துவைத்துக் காயப்போட்டு, பாத்திரம் தேய்த்து, மனைவியை எழுப்பி சோறு போட்டு, மாத்திரை கொடுத்து எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறான். மனைவி கொஞ்சம் சரியானவுடன் அடுப்படிக்குள் வருகிறாள். அடுப்பைத் துடைக்கத் தொடங்குகிறாள்; அங்கங்கே சிதறியிருக்கும் சாமான்களை எடுத்துவைக்கிறாள். மனைவியிடம் இன்றைக்காவது தன்னுடைய முக்கியத்துவத்தை உணர்த்திவிட வேண்டுமென்று காலையிலிருந்து பாடுபட்ட கணவனுக்கு மனைவியை அடுக்களையில் பார்த்ததும் சுருக்கென்கிறது.

10 Dec 2012

புழுதியில் வீணை - ஆதவன்

ஆதவனின் 'புழுதியில் வீணை' நாடகம் 292 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தக வடிவில் இப்போது என் கையில் இருக்கிறது. இதில் முதல் 92  பக்கங்கள் முன்னுரை - இதை வாசித்த எவரும் "ஒரு பிரபல விவாதத்தை நினைவூட்டிக் கொண்டு தொடங்குவோம்" என்ற இதன் துவக்கத்தை மறக்க முடியாது.

இந்த வாக்கியத்தில் துவங்கும் கட்டுரை, அடுத்த பத்தியில் விஷயத்தை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறது: 
"பாரதியார் தேச பக்தராக வாழ்க்கையைத் துவக்கி, கவியாக மலர்ந்து, இறுதியில் பக்குவமான வேதாந்தியாகப் பழுத்ததாக," ராஜாஜி தெரிவித்த கருத்து; இக்கருத்தை வ.ரா. எதிர்த்து, "பாரதியாரை வேதாந்தச் சிமிழில் போட்டு அடைக்க வேண்டாம்," என்று எழுதியது. இரண்டு கருத்துக்களுமே பாரதி பற்றின இரு பரிச்சயமான அணுகுமுறைகளைப் பிரதிநிதிப்படுத்துபவை."
"ஒருவன் ஒரே சமயத்தில் தேச பக்தனாகவும் கவியாகவும் வேதாந்தியாகவும் இருக்க முடியாதா?"" என்று இந்த விவாதத்தைத் தொடர்ந்து கேட்கிறார் ஆதவன். பாரதியைக் குறித்து எழுப்பப்படக்கூடிய மிகவும் முக்கியமான கேள்வி இது.

"இந்தக் கேள்வியைத்தான் வ.ரா. உண்மையில் கேட்டிருக்க வேண்டும். மாறாக, 'வேதாந்தி' என்ற சொல்லை வைத்துக் கொண்டு அவர் சிலம்பமாடியதன் மூலம் பிரச்சினை திசை திரும்பி விட்டதென்றே சொல்ல வேண்டும்" என்று ஆதவன் வருந்துவது அண்மையில் நடந்த ஒரு பிரபல விவாதத்தை நினைவூட்டுகிறது. மகாகவி என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு அந்த சிலம்பாட்டம் நடந்தது - அப்போது எரிச்சலாகவும் ஆத்திரப்படுத்துவதாகவும் இருந்தாலும், இப்போது நினைத்துப் பார்த்தால் அந்த விவாதத்தில்தான் பாரதியின் கூர்முனைகள் இணையத்தில் வெளிப்பட்டன.

17 Nov 2012

காகித மலர்கள்-ஆதவன்


பெயர் : காகித மலர்கள்
ஆசிரியர்: ஆதவன்
Photo Courtesy/பதிப்பகம்/ To buy:உயிர்மை

முதலில் சில சம்பவங்கள் :

1.தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடி ஆபீஸில் கணினி மேல் பலூன் கட்டி இருந்தாங்க, எனக்கு ஏனோ அது பிடிக்கவில்லை, என்னுடைய மற்ற குழு நபர்கள் அதை ரொம்ப ரசிச்சாங்க. கொஞ்ச நேரம் கழித்து ஒரு பெண், பலூன் + நாங்கள் வேலை செய்வதை படம் பிடிக்க வந்தாங்க. யாராவது என்னை கேட்காம புகைப்படம் எடுத்தா எனக்கு கோவம் வந்துரும் - இப்ப இல்லை சில வருடங்கள் முன்பு வரை. அப்படியே பல்லை கடிச்சுகிட்டு உக்காந்து இருந்தேன். சில வருடங்கள் முன்புன்னா, ஒண்ணு, என்னை கேட்காம ஏன் புகைப்படம் எடுத்தீங்கன்னு கோபப்பட்டு இருப்பேன், இல்லைன்னா டக்குன்னு வெளியே எழுந்து போயிருப்பேன். அங்கேயே உட்கார்ந்து இருந்ததால், நானும் எல்லோரையும் போலத்தான் அப்படின்னு ஒரு பிம்பம் எனக்கே உருவாகியாச்சு.

2.என்னோட ரொம்ப நெருங்கிய நண்பர், நான் இந்த வேலையில் சேர்ந்தவுடன், நீயே இந்த வேலைக்கு வந்துட்டியா!, உன்னோட கல்யாணகுணங்களுக்கு இந்த வேலை ஒத்துப் போகாதே, அப்படின்னு ரொம்ப நேரம் லெக்சர் குடுத்துக்கிட்டு இருந்தாரு. நானும் இப்போ உஜாலாவுக்கு மாறிட்டேன் அப்படின்னு சொல்லி பேச்சைத் துண்டித்தேன். இப்போ என்னோட நெருங்கிய நண்பரிடம், எனக்கு ரெண்டு விதமான பிம்பம்.

3. ஆபீஸில் மேலாளர் + மற்றவர்கள், நீ ஏன் அதிகம் ஆங்கில படம் பார்க்கிறாய்ன்னு கேள்வி, நீ ஏன் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது இல்லைன்னு கேள்வி, இவன் பட்டாசு வெடிக்காத, ஆங்கில படம் பார்ப்பவன் அப்படின்னு ஒரு பிம்பம்.

4. இன்னொரு நண்பர், எப்ப கல்யாணம், எப்ப கல்யாணம்னு ஒரே கேள்வி. எவ்ளோ தூரம் என்னோட கருத்தை எடுத்துச் சொல்லியும், கடைசியில் விவாதத்தை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு, சரி பார்ப்போம், அப்படின்னு சொல்லி விவாதத்தை முடிச்சேன். இப்போ இந்த நண்பரிடம் ஒரு பிம்பம், இதே மாதிரி வீட்டில் என்னை பற்றி ஒரு பிம்பம், ட்விட்டர் மற்றும் ஆம்னிஸ்பஸில் வேற ஒரு பிம்பம்.








6 Aug 2012

இரவுக்கு முன் வருவது மாலை – ஆதவன்


இப்புத்தகம் ஆதவனால் எழுதப்பட்ட ஆறு குறுநாவல்களின் தொகுப்பு. ஆதவன், நவீனத்துவத்தின் மிக முக்கியமான நபர். இப்புத்தகத்தில் ஆங்காங்கே அதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. இயந்திரத்தனமான வாழ்க்கையில் தன் சுயம் தொலைத்து ‘ரொட்டீன்’னாக தினசரி பழக்கப்பட்ட வாழ்க்கைக்கு பாயும் பலரை வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு ஆண். இதே குணாதிசயங்கள் கொண்ட மற்றொரு பெண். இருவரும் தங்களை அறிவாளிகளாக, இன்டெலக்சுவல்’களாக காட்டிக்கொள்ள முற்படும் இருவருக்குமான உரையாடல்கள் இவையே “இரவுக்கு முன் வருவது மாலை” எனும் குறுநாவலின் சாராம்சம்.

தமிழ்நாட்டிலிருந்து டில்லிக்குப் போய் வாழும் ஒரு தமிழ்க் குடும்பம், அதிலொரு இளைஞி, படித்ததனால் மட்டுமே தனக்கு சிறகு முளைத்து விட்டதாய் எண்ணி சமூகத்தில் ஒரு நல்ல வேலைக்குப் போக முடிவெடுத்து பறக்க நினைக்கிறாள். பாத்திரம் கழுவுவதையும், சங்கீதம் கற்பதையும் அறவே துறந்து ஒரு புரட்சியாகவோ, சமூக மாற்றமாகவோ இதை செய்ய எத்தனிக்கையில் படும் அவமானங்கள், கண்ட காட்சிகள் கண்டு பயந்து தன்னிலை உணர்ந்து மீண்டும் கூட்டுக்கே திரும்புகிறாள். இது “சிறகுகள்”, இரண்டாம் குறுநாவல். எழுபதுகளின் கதை.

திருவையாற்றில் பிறந்து டில்லி சென்று வாழும் ஒரு இளைஞன், தாய் மண்ணுக்குத் திரும்புகையில் அவன் அங்கு காண்பவற்றையெல்லாம் தான் இழந்தவைகளாக காண்கிறான், தான் அடிப்படையிலிருந்து மாறிவிட்டதாக உணர்கிறான். மேலும் அந்த ஊரில் ஏற்பட்ட மாற்றங்கள் கூட அவனுக்கு அன்னியமாகப் படுகின்றது.  இவையெல்லாம் கண்டு மீண்டும் டில்லிக்கே திரும்புகையில் அவனுக்கான மீட்சி எது என்பதை உணருகிறான். எங்கோ பிறந்து எங்கோ வேலைக்குப் போகும் அனைவருக்கும் எக்காலத்திலும் அவர்களுக்கான மீட்சியையோ அல்லது நினைவுகளையோ தரவல்லது, “மீட்சியைத் தேடி” மூன்றாம் குறுநாவல்.

ஒரு பதவியிலிருக்கும் ஒருவர் ஓரிரு நாள்கள் விடுப்பில் செல்ல நேர்ந்தால், அவருக்கு கீழே வேலை செய்யும் ஒருவர் அவருக்கு இன்-சார்ஜாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால், அதை உடன் வேலை செய்யும் மற்றவர்களால் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையின் கீழ் ஒரு நாள் அல்லது அதிகாரி விடுப்பில் போகும்போதெல்லாம் இன்-சார்ஜ்’ஆக இருந்து தன்னிலை வெறுக்கும் ஒரு ஊழியனின் கதை, “கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன்”.

ஆண் என்பவன் மலை, பெண் என்பவள் நதி. ஒரு நதி மலையை அரவணைக்கையில் ஒரு நீர்வீழ்ச்சி உண்டாகிறது. மனைவி இறந்த பின் தன் முன்னாள் காதலியின் நிலை கண்டு அவரைக் காணச்செல்லும் ஒரு மலையின் நினைவுகள்தான் “நதியும், மலையும்”.

வேலைக்குப் புதிதாய் சேர்ந்திருக்கும் ஒரு சாதாரணப் பெண், உடன் உள்ளோர்களால் கெட்டவன் என்று விமர்சிக்கப்படுபவனிடம் உள்ள நற்பண்புகள் கண்டு அவனின் தோழியாகிறாள். பின் வரும் நிகழ்வுகளாய் அலுவலக யூனியன் தேர்தலின் தலைவியாகிறாள். அவளுக்குள் ஏற்படும் மாற்றங்களைப் பேசுவது “பெண், தோழி, தலைவி”.

வெறும் சோப்புத் தண்ணீரானது சகல நிறங்களையும் தாங்கி நீர்க்குமிழாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி, சட்டென்று வெடித்து முகத்தில் தெறித்தால் ஒரு குழந்தை என்ன உணருமோ அதுபோலொரு உணர்ச்சிப் பிரவாகத்தை தரவல்ல ஒரு புத்தகம் – இரவுக்கு முன் வருவது மாலை.

வெளியான வருடம் – 1974
மறுபதிப்பு – கிழக்கு பதிப்பகம்

Related Posts Plugin for WordPress, Blogger...