A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label மாயக்கூத்தன். Show all posts
Showing posts with label மாயக்கூத்தன். Show all posts

23 Apr 2014

The Happiness Hypothesis - Jonathan Haidt


ஜொனாதன் ஹெய்ட் எழுதிய இந்தப் புத்தகம், மனம், அறம், உறவுகள், மகிழ்ச்சி பற்றிய மொத்தம் பத்து பகுதிகளைக் கொண்டது. சமீபத்திய அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளோடு கீழை நாடுகளின் தத்துவங்களையும் எடுத்துக் கொண்டு ஒப்பிட்டிருக்கிறார். சில இடங்களில் இத்தத்துவங்கள் ஆராய்ச்சிகளோடு ஒத்துப்போகின்றன, சில இடங்களில் இல்லை. மொத்தமுள்ள பத்து பகுதிகளில் ஐந்தாவதையும் பத்தாவதையும் பற்றி மட்டும் இங்கே எழுதப்போகிறேன். இந்த புத்தகத்தையும் வைத்து சில வருடங்களுக்கு முன்பு சொல்வனத்தில் நண்பர் எழுதிய விலங்குகளின் அறம் கட்டுரை இங்கே.

நாம் எல்லோருமே மகிழ்ச்சியை நோக்கிப் பயணிப்பவர்கள்; நம்முடைய ஒவ்வொரு செயலும் நமக்கு மேலும் மகிழ்ச்சியைத் தர வேண்டும் என்றே செய்கிறோம். அடைய விரும்புவது ஒன்றே என்றாலும், நம்முடைய பாதைகள் – செயல்கள் வெவ்வேறானவை. நாம் எவ்வளவு வித்தியாசப்பட்டாலும் நம்முடைய அடிப்படை நோக்கம் எப்போதுமே ஒன்றாகத்தான் இருக்கிறது. 

பற்றையும் ஆசைகளையும் விலக்கிவிட்டு நமக்குள்ளே தான் மகிழ்ச்சியைத் தேட வேண்டும், என்கிறார் புத்தர். (ஹெய்ட் புத்தரைப் பற்றிச் சொல்வதை பெளத்தம் படித்தவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே. செல்வச் செழிப்பில் வெளியுலகமே தெரியாமல் வளர்ந்த ஒருவனுக்கு திடீரென்று மரணத்தைப் பார்த்தால் அதிர்ச்சியாகத் தான் இருக்கும், சித்தார்த்தன் தன் தேரை விட்டு இறங்கி, சிலரிடம் பேசியிருந்தால், மரணமும் துக்கமும் சாதாரணமானது என்பதைப் புரிந்து கொண்டிருப்பான் என்கிறார்.) பௌத்தம் மட்டும் என்றில்லை, வேறு மதங்களும் தத்துவவாதிகளும் கூட, மகிழ்ச்சியை ஒருவன் தனக்குள் தான் தேடிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால், லெளகீகத்தில் இருப்பவர்கள் நாம்; பற்றை விட்டுவிடு என்றால்?, நமக்கு எப்படிப் பொருந்தும்? இந்த புத்தகத்தில், மகிழ்ச்சிக்கான ஒரு சமன்பாட்டை விளக்கியிருக்கிறார். அதற்கு முன், மகிழ்ச்சியைப் பற்றிய நமது புரிதல்களையும் உண்மைகளையும் பார்க்கலாம்.

10 Jul 2013

ஒருநாள் - க.நா.சுப்ரமண்யம்



சாத்தனூருக்குச் சரித்திரப் பிரசித்தம் கிடையாது. பூகோளப் பிரசித்தம் கிடையாது.

சாத்தனூரில், அதுவும் சர்வமானிய அக்ரஹாரத்தில், அடால்ஃப் ஹிட்லரையும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸையும் போன்ற பெரிய மனிதர்கள் கிடையாது.

சரித்தரத்தில் பொன்னெழுத்துக்களாலும் கரிக்கோடுகளாலும் வரைய வேண்டிய சம்பவங்கள் கிடையாது.

இந்தத் தலைமுறையின் ஞாபகத்திலே சாத்தனூரிலே ஞாபகம் வைத்துக்கொள்ளும்படியாகப் பொதுக்காரியங்கள் எதுவும் கிடையாது.

ஆனால், மனிதர்கள் தனித்தனி மனிதர்களாக வாழ்ந்தார்கள்.

தங்களுக்குத் தாங்களே தவிர, வேறு எவ்விதத்திலும் அடிமைப்படாமல் வாழ்க்கை நடத்தினார்கள்.  (பக். 106)

.நா.சு நம்மை மீண்டும் சாத்தனூருக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால், இம்முறை மேட்டுத் தெருவுக்கு அல்ல. சர்வமானிய அக்ரஹாரத்துக்கு அழைத்துச் செல்கிறார். படிப்பதற்காக ஜெர்மனிக்குச் செல்லும் மூர்த்தி, ஹிட்லரின் பிரச்சார வேகத்தால் அடித்துச் செல்லப்பட்டு, ஜெர்மனி ராணுவத்தில் இணைந்து உலகப்போரில் பங்கெடுத்து, பின் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பங்கெடுத்து, கடைசியில் மேஜர் மூர்த்தியாக ஊர் திரும்புகிறான்.. பத்திரிக்கைகளில் எல்லாம் பெயர் வருகிறதே தவிர, ஆனால் அவனுக்கு அதில் எந்தப் பிரயோஜனும் இல்லை, ஒன்றைத் தவிர. ஒரே உறவான, மாமா அவனை அடையாளங் கண்டு கொண்டு சாத்தனூருக்கு அழைப்பதைத் தவிர.

காலை சாத்தனூருக்கு எந்தவொரு இலக்கும் இல்லாமல் வருபவன், தன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி உந்தப்பட்டு இரவில் மீண்டும் பட்டணம் திரும்புகிறான். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தவனுடைய வாழ்க்கைக்குக்கு, சாத்தனூரும் அதன் மக்களும் ஒரே நாளில் ஒரு திசையேற்படுத்திக் கொடுக்கிறார்கள்.

.நா.சுவைப் பற்றிப் பேசும் போது பொய்த்தேவுவைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. என்னால் முடியாது. அதுவும் சாத்தனூர் பற்றிப் பேசும் போது முடியவே முடியாது. பொய்த்தேவு, மேட்டுத் தெருவைச் சேர்ந்த சோமு முதலியின் கதை. ஒருநாள் - மேஜர் மூர்த்தியின் வழியாக சொல்லப்படும் சாத்தனூர் சர்வமானிய அக்ரஹாரத்தின் கதை. உலகம் முழுவதும் சுற்றி வந்த மேஜர் மூர்த்தியைப் பற்றி சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை - உலகம் முழுவதும் சுற்றி வந்தான் என்பதைத் தவிர. மற்றவர்களுக்கு ஏற்படாத அனுபவம் ஒன்று அவனுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அளவிலேயே அவனுடைய அனுபவத்தை வைக்கிறார் ஆசிரியர். ஆனால், சர்வமானிய அக்கிரஹாரத்து மக்களைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது.

26 Apr 2013

அசுரகணம் – க.நா.சுப்ரமண்யம்


அசுரகணம், க.நா.சு-வின் மற்றுமொரு பரிசோதனை முயற்சி. நினைவோடை உத்தியைக் கொண்டு எழுதியிருக்கிறார். நினைவோடை உத்தியென்றால் நினைவுக்கு வருவது லா.ச.ராவும் அபிதாவும். இந்த உத்தியில் க.நா.சாவுக்கும் லா.ச.ராவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றன. லா.ச.ரா, தனக்குத் தானே பேசிக் கொள்வது மாதிரியிருக்கும்; சிந்தனைகள் எல்லாம் மனம் தனக்கே ஆறுதல் சொல்லிக் கொள்வது போல இருக்கும். ஆனால், க.நா.சுவின் நடை, மனத்தை இரண்டாகப் பிரித்து ஒருமனம் மற்றொன்றிடம் பேசுவது போல இருக்கிறது. மனத்தில் எழும் சிந்தனைகளை அப்படியே எழுதிப்போன மாதிரி. லா.ச.ராவுக்கு முன்னால் யாருமே இருக்கமாட்டார்கள்; க.நா.சுவுக்கு முன்னால் அவர் இருப்பார்; நாம் இருப்போம் என்றும் சொல்லலாம். 

14 Apr 2013

வாழ்ந்தவர் கெட்டால் – கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம்



எனக்கு இருநூறு அறுநூறு பக்கங்கள் என்று நாவல்கள் எழுதுவதைவிட சிறிய சிறிய நாவல்கள் நூறு நூற்றிருபது பக்கங்களுக்கு அதிகம் போகாமல் எழுதுவதில் ஒரு அலாதியான திருப்தி. நூறு பக்கங்களில் சொல்ல முடியாத விஷயம் எதையும் இலக்கியாசிரியன் ஐநூறு பக்கங்களில் சொல்லிவிட முடியாது என்பது என் நினைப்பு. இது நாவல்களில் கருத்தாழமும் கட்டுக்கோப்பும் கனமும் சிறப்பாகவே வரக்கூடும் என்றுதான் நான் எண்ணுகிறேன். –க.நா.சு

என்னுடைய விருப்பம் அளவில் பெரிய நாவல்களே. ஆனாலும், க.நா.சு சொல்வது போல், குறைவான பக்கங்களிலும் ஒரு பெரிய நாவலின் அம்சங்களைக் கொண்டு வந்துவிட முடியும். முடியும் என்பதற்கு சாட்சி, வாழ்ந்தவர் கெட்டால், வாடிவாசல் போன்ற சிறிய நாவல்கள். விட்டால் ஆதவனுடைய குறுநாவல்களையும் இதில் சேர்த்துக் கொள்வேன்; விடமாட்டார்கள். இந்த நாவல்களை ‘சற்றே பெரிய சிறுகதைகள்’ என்று சொல்லவே முடியாது என்பது என் துணிபு. க.நா.சுவின் பரிசோதனை முயற்சிகளில்  இந்நாவல் ஒன்றாக இருந்திருக்கலாம். 

16 Mar 2013

புலிநகக் கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்


மரணத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தத்துவமாகச் சொல்லப்போனால், உலகம் சுற்றிக் கொண்டிருக்க மரணம் அவசியம் எனலாம். ஆனால், தன்னைச் சார்ந்தவர்களும், தான் சார்ந்தவர்களும் மரணிக்கும் போது தான் அதன் கிலி விளங்கும். எனக்கு மரணங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இன்றைக்கும் அப்படித்தான். வயதில் பெரியவர்கள் மரணமென்பதை ஏதோ பாற்பல் விழுந்ததைப் போல் எடுத்துக்கொள்ளும் போது ஆச்சரியமாக இருக்கும். அது அவர்களுடைய உண்மையான வெளிப்பாடா அல்லது பயத்தை மறைக்க அப்படிச் இருக்கிறார்களா? இன்றைக்கு கேள்விப்படும் மரணங்கள் மூப்பின் காரணமாக இல்லை என்பது என்னுடைய அச்சத்தை அதிகரித்திருக்கக்கூடும். என்னுடைய எல்லா பயத்திற்கும் அடிப்படைக் காரணமாக இந்த மரண பயம் இருக்கக்கூடும். மரணச் செய்திகளிலிருந்தும் துக்க வீடுகளுக்குச் செல்வதிலிருந்தும் என்னை விலக்கியே வைத்திருந்திருக்கிறேன். ஆனால், சிலருக்கு மரணத்தின் மீதொரு ஆர்வம் இருக்கிறது. யார் செத்துப் போனார்கள்? எப்படி செத்துப் போனார்கள்? என்பது மாதிரியான ஆர்வம். பள்ளியில் படிக்கும் போது, எங்காவது கல்வெட்டாங்குழியில் பிணம் கிடந்தால், பல கிலோ மீட்டர் சைக்கிள் மிதித்துப் போய்ப் பார்த்துவிட்டு வரும் நண்பர்கள்; என்றென்றைக்கு யார் வீட்டில் திவசம் என்று நினைவில் வைத்திருப்பவர்கள் (திவசத்தை மட்டும், கல்யாண காரியங்கள் இவர்களுக்கு நினைவில் இருக்காது), மரணத்தோடு முடியும் சினிமாக்களையும் கதைகளையும் ஒப்பற்ற படைப்புகளாக சித்தரிப்பவர்கள், விடிகாலை ஆறுமணிக்கு சாட்டில் வந்து ’மனைவியின் அலுவலகத்தில் நுழைந்து அவரைக் கொன்ற கணவன்’ என்ற செய்தியைக் கொடுக்கும் நண்பர் என்று பலரை இந்தப் பட்டியலில் வைக்கலாம்.

3 Mar 2013

வாடிவாசல் – சி.சு.செல்லப்பா



சி.சு.செல்லப்பா பற்றி கடந்த சில மாதங்களாகவே நிறைய கட்டுரைகளைப் பார்க்கிறோம். சொல்வனத்தில் வெங்கட் சாமிநாதன் எழுதிவரும் சி.சு.செல்லப்பா ஒரு வாமனாராத நிகழ்வு என்ற தொடர் அவற்றுள் முக்கியமானது. இந்தக் கட்டுரைகள் எல்லாம் சி.சு.செல்லப்பா என்ற மனிதரையும் இலக்கியத்தில் அவர் எவ்வளவு தீவிரமாக சமரசம் இன்றி செயல்பட்டார் என்பதைச் சொல்வதாகவே இருக்கின்றன. ஆனால், சி.சு.செல்லப்பாவின் படைப்புகளில், வாடிவாசல் தவிர்த்து மற்ற படைப்புகள் பரவலாக அறியப்படவில்லை. இந்த புத்தகத்தின் பின்னால் கொடுக்கப்பட்டிருக்கும் நாவல்களும் எண்ணற்ற சிறுகதைகளும் இன்றைக்கு வாசித்து விவாதிக்கப்படுகிறதா என்பது சந்தேகமே. இதே நிலை தான் க.நா.சுவின் படைப்புகளுக்கும் என்று நினைக்கிறேன். அவருடைய பொய்த்தேவு பெரிதும் வாசிக்கப்படுவது தெரியும். ஆனால், அசுரகணம், ஒரு நாள், கோதை வந்தாள் இன்னும் பல நாவல்கள் பரவலான வாசிப்புக்கு வரவில்லை. இப்போது நற்றினை பதிப்பகம் க.நா.சுவின் நாவல்களைப் புதிய பதிப்பாக கொண்டு வந்திருக்கிறார்கள்.

2 Feb 2013

தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்

ஒரு படைப்பை அணுகும் போது, அது ஒரு புத்தகமாகவோ திரைப்படமாகவோ இருக்கலாம், வாசகன் தன்னை கொஞ்சம் தள்ளி வைத்துக் கொள்வது நல்லது. ஒரு படைப்பு, ஒருவருடைய வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்கும் போது, அந்த நபருக்கு அந்த படைப்பு படிக்கும் போதோ பார்க்கும் போதோ ஏற்படும் உணர்வுகளைக் கொண்டு அவர் அப்படைப்பு உயர்ந்தது சொல்லிவிடுவது எப்போதும் நடப்பதுதான், ஆனால் அவரது கணிப்பு சரியாக இருக்க வேண்டுமென்பதில்லை. உதாரணத்திற்கு, ஒரு திரைப்படம் உங்களுக்குப் புரிய/பிடிக்க நீங்கள் இளம்பிராயத்தில் காதலித்திருந்தால் மட்டுமே சாத்தியம் என்றால், எங்கே போய் முட்டிக் கொள்வது? காதல் அனுபவம் உள்ளவர் அப்படத்தை பார்க்கும் போது, அவருடைய பழைய நினைவுகள் மேலெழுந்து அவருக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடும். ஆனால், அந்த நினைவுகள் செய்யும் காரியத்தை, அந்த படைப்பு செய்வதாக புரிந்து கொண்டுவிட்டால்? இதுவரை படித்ததை மறந்துவிட்டு மேலே படியுங்கள்.

22 Dec 2012

என் பெயர் ராமசேஷன் – ஆதவன்

முன்குறிப்பு: இந்த அறிமுகம்/ விமர்சனம்/ ஆய்வு/ கதைச் சுருக்கத்தை எழுதும்போது, பலருடைய கருத்துக்களை, இணையத்திலிருந்தும் ஆம்னிபஸ் நண்பர்களிடமிருந்தும் எடுத்துக்கொண்டேன். அவர்களனைவருக்கும் நன்றி.

மனைவிக்கு உடம்பு சரியில்லை. கணவன் வீட்டைச் சுத்தம் செய்து, சமையல் செய்து, துணிகளைத் துவைத்துக் காயப்போட்டு, பாத்திரம் தேய்த்து, மனைவியை எழுப்பி சோறு போட்டு, மாத்திரை கொடுத்து எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறான். மனைவி கொஞ்சம் சரியானவுடன் அடுப்படிக்குள் வருகிறாள். அடுப்பைத் துடைக்கத் தொடங்குகிறாள்; அங்கங்கே சிதறியிருக்கும் சாமான்களை எடுத்துவைக்கிறாள். மனைவியிடம் இன்றைக்காவது தன்னுடைய முக்கியத்துவத்தை உணர்த்திவிட வேண்டுமென்று காலையிலிருந்து பாடுபட்ட கணவனுக்கு மனைவியை அடுக்களையில் பார்த்ததும் சுருக்கென்கிறது.

2 Dec 2012

பொய்த் தேவு - க.ந.சுப்பிரமணியம்

மனிதனுடைய மனசிலே, உள்ளத்திலே, அந்தரங்கத்திலே விதவிதமான சக்திகள், நவநவமான உணர்ச்சிகள் வினாடிக்கு வினாடி மூளுகின்றன - மூண்டு மூண்டுபோராடுகின்றன.

இந்தப் போராட்டமே மனிதனுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைகிறது.


ஒரு சக்தி, ஓர் உணர்ச்சி வெற்றி பெற்று ஒரு வினாடி தலை தூக்கி நிற்கும். ஆனால் அடுத்த வினாடியே இன்னொரு சக்தி தோன்றி அதை வீழ்த்திவிட்டு அவன்மீது ஆட்சி செலுத்தத் தொடங்குகிறது. இந்தச் சக்தியினுடைய ஆதிக்கம் நீடிப்பதும் ஒரே வினாடிதான்.


இந்தப் போராட்டத்துக்கெல்லாம் பின்னணியாக இருக்கும் மனிதன் தன் உள்ளத்திலே ஒரு லக்ஷ்யத்தை, ஒரு தெய்வத்தை கற்பனை பண்ணிக்கொண்டு வாழ ஆரம்பித்துவிட்டானானால் அவனை பாக்கியசாலி என்றே சொல்ல வேண்டும்.
(பக்.256)

இங்கே எல்லாமே தெய்வங்கள். ஆசைகள், லக்ஷ்யங்கள், சிந்தனைகள் எல்லாமே தெய்வங்கள். இந்த நொடியில் எதற்காக ஆசைப்படுகிறோமோ, அது தெய்வம்; எது சிந்தையில் இருக்கிறதோ, அது தெய்வம்; எதில் நம்பிக்கை வைக்கிறோமோ, அது தெய்வம். மற்றவை எல்லாம் அந்த நொடியில் அசுர கணங்கள், தீய சக்திகள். எல்லா தெய்வங்களையும்விட பணம்தான் சக்தி மிகுந்த தெய்வம். 

25 Nov 2012

What do you care what other people think? - Richard Feynman




ரிச்சர்ட் ஃபெயின்மன் பற்றி சேதுபதி அருணாசலம் எழுதிய இந்தக் கட்டுரையின் மூலம் தான் தெரியவந்தது. அவருடைய இரண்டு புத்தகங்களையும் படித்தபின், மிகத் தாமதமாக அவரைப் பற்றித் தெரிந்து கொண்டதற்கு நொந்து கொண்டேன். ஃபெயின்மனுடைய புத்தகங்களை சில வருடங்களுக்கு முன் படித்திருந்தேன் என்றால், என்னுடைய கல்வியை நான் அணுகிய முறை முழுதும் மாறுபட்டிருக்கக் கூடும். ஒரு அறிவியலாளரின் சரிதை எப்படியிருக்க வேண்டும்? அல்லது ஒரு பெரிய மனிதருடைய, சாதனையாளருடைய சரிதை எப்படியிருக்க வேண்டும்? அவர் இதைச் செய்தார், அதைச் செய்தார், அப்படிச் செய்தார், இப்படிச் செய்தார்; யாராலுமே செய்ய முடியாதசைச் செய்தார்; மற்றவர்களைவிட புத்திசாலித்தனமாக யோசித்தார்; இப்படித் தான் பல சரிதைகள் புகழ் பாமாலைகளாக மட்டுமே நின்றுவிடுகின்றன. அக்கினிச் சிறகுகளை எடுத்துக் கொண்டால், அதைப் படிப்பவர்களுக்கு தானும் உழைத்து ஒரு விஞ்ஞானி ஆகி தேசத்திற்கும் சமூகத்திற்கும் உதவ வேண்டும் என்றொரு எண்ணம் வரச் செய்யும். அந்த புத்தகத்தின் நோக்கமும் அதுதான். ஆனால், அந்தப் புத்தகம் ஒரு ஆசையை விதைக்கிறது, அதற்காக பெரிய உழைப்பை கோருகிறது. ஆனால் எப்படி உழைக்க வேண்டும்? அறிவியலாளனுடைய குணங்கள் என்ன? என்பதைப் பற்றி அக்கினிச் சிறகுகளில் தெரிந்து கொள்ள முடியாது. 

23 Nov 2012

சமைப்பது எப்படி? - வேதவல்லி

God may send a man good meat, but the devil may send an evil cook to destroy it. - an English saying

சமைப்பது என்பது அத்தியாவசியம் என்பதில் தொடங்கி, ஒரு கலையாக மாறி இப்போது ஒரு பெரும் சுமையாகிவிட்டது. சமைப்பது கூடப் பிரச்சனையில்லை. இந்தப் பாத்திரம் தேய்ப்பது தான் மகா கொடுமை. தொலைபேசியில் அழைத்தால், அரைமணியில் சுடச்சுட இத்தாலி ரொட்டி வந்துவிடுகிறது. பாக்கெட்டை பிரித்து, வெந்நீரில் சிறிது நேரம் உமிழ வைத்தால் வேகாத பொங்கலும் சாம்பாரும் கிடைக்கிறது; சாக்லேட்டை எடுத்து பிடித்துக் கடித்தால் பசி போய்விடும் என்கிறார்கள். பதினைந்து ரூபாய் போகிறது என்பது வரை உண்மை. ஹோட்டலில் ஒரு பரோட்டா சாப்பிட்டால் ஒரு அண்டா தண்ணீர் வேண்டியிருக்கிறது. இரவு இரண்டு மணிக்கு தூக்கம் கெட்டுப் போகிறது. இந்தக் கொடுமைக்கு நாமே சோறு பொங்கி சாப்பிட்டுவிடுவது நல்லது. ஆனாலும், இந்தப் பாத்திரம் தேய்ப்பது என்பது ஒரு மகா கொடுமை என்பதில் மாற்றமில்லை.

அந்தந்த ஊர்களில் அவரவர் குடும்பங்களுக்குத் தெரிந்த பதார்த்தங்களை மட்டுமே செய்து கொண்டிருந்த நிலைமை மாறி, வெளிமாநில வெளிநாட்டு உணவு வகைகளும் சாதாரண குடும்பங்களில் சமைக்கப்படும் நிலை உருவாக காரணமாக, பெண்களுக்கான அக்கால சஞ்சிகைகள் இருந்திருக்கும் என்பது என் எண்ணம். சில சமயம் ஆர்வம் அளவுக்கு மீறி சில மகா கொடுமைகளையும் நுழைத்துவிட்டது (இங்கே பாத்திரம் தேய்ப்பதைப் பற்றிச் சொல்லவில்லை). குழம்பு நீர் மாதிரி இருந்தால், அதைக் கெட்டியாக்க அரிசிமாவைப் போடும் பழக்கம் எப்போது ஆரம்பித்தோ தெரியவில்லை. ஆனால், பலர் தவறாகப் புரிந்துகொண்டு அதை நிரந்தரமாகவே ஆக்கிவிட்டார்கள். இது தான் மகா கொடுமை நம்பர் 2. கேட்டால், “எங்கள் பக்கத்துல எல்லாம் இப்படித்தான் சமைப்பாங்க” என்கிறார்கள். எதையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதே இந்நாட்டினுடைய பெரிய நோய்.




28 Oct 2012

அக்கிரகாரத்தில் பெரியார் – பி.ஏ.கிருஷ்ணன்

ஒரு சமயம் எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு மூத்த ஐரோப்பிய பெண்மணியோடு உரையாடிக்கொண்டிருந்தோம். கொல்கத்தாவில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி பேச்சு திரும்பியது. அவரவர்க்கு தெரிந்த இடங்களைச் சொல்லிக் கொண்டிருந்தோம் (விக்டோரியா மஹாலைத் தவிர எனக்கு ஒன்றும் தெரியாது). அவர், Black hole of Calcutta பற்றிக் கேட்டார். என் நண்பர் ஒருவருக்கு மட்டும் அப்படியொரு இடம் உண்டு என்று தெரிந்திருந்தது, ஆனால் அது என்ன என்று அவருக்குத் தெரியவில்லை. எங்களுக்கு Black Hole of Calcutta பற்றித் தெரியவில்லை என்றவுடன், அந்தப் பெண்மணியின் முகம் சுருங்கிவிட்டது. எங்கள் நால்வரையும் பார்த்து, “இந்தியாவில் பிறந்துவிட்டு, அதன் வரலாறு உங்களுக்குத் தெரியவில்லை. You should be ashamed of it.” என்றார்.

6 Oct 2012

தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம் - காந்தி


I do not write this book for merely writing it. Nor is it my object to place one phase of history of South Africa before the public. My object in writing the present volume is that the nation might know how Satyagraha, for which I live, for which I desire to live and for which I am equally prepared to die, originated and how it was practiced in a large scale – M.K.Gandhi

காந்தியின் மீது ஆச்சரியமும் அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பமும் காந்தி திரைப்படத்தைப் பார்த்த பின் தான் உருவானது. பலரும் இந்த திரைப்படமே தங்களை காந்தியின் பால் ஈர்த்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். அத்திரைப்படம் ஒரு சாதனை; சில மணிநேரத்தில் காந்தியைப் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றும் வல்லமை அதற்கிருந்தது. அதற்காக அடுத்த நாளிலிருந்து நான் காந்தியவாதியாகிவிட்டேன் என்றில்லை; ஆனால், காந்தியை நோக்கித் திருப்பிவிட்டது அந்தப் படம் தான் என்பதை உறுதியாகச் சொல்வேன். சத்தியாகிரகம் என்றால் என்ன? அது எப்படித் தொடங்கியது என்ற அடிப்படை விஷயங்களை அதை உருவாக்கியவர் வழியாக புரிந்துகொள்வதே எளிதாக இருக்கும். மற்றவர்கள் எழுதும் போது அதன் மீதான தங்களுடைய கருத்துக்களையும் ஏற்றிவிடக்கூடும். காந்தி, முன்னுரையிலேயே சொல்லிவிடுகிறார், “இதில் எதையும் கூட்டிச் சொல்லவில்லை”. அதே போல், படிக்கும் போது அதிகப்படுத்திச் சொல்லப்பட்டதாக ஒரு வாக்கியத்தைக் கூட உணரமுடியவில்லை.




Related Posts Plugin for WordPress, Blogger...