A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label Jonathan Livingstone Seagull. Show all posts
Showing posts with label Jonathan Livingstone Seagull. Show all posts

11 Nov 2012

ஜொனாதன் லிவிங்ஸ்டோன் எனும் கடற்புள்ளு

சிறப்பு பதிவர் : ரா. கிரிதரன்.


நண்பர் பாஸ்கர் ரொம்ப நாட்களாக ஆம்னிபஸ் தளத்தில் நடக்கும் புத்தக விமர்சன முயற்சிகள் பற்றி குறிப்பிட்டு வந்துள்ளார். தினம் ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதுவது என்பது சாதாரண காரியமல்ல. அதுவும் ஆம்னிபஸ் தளத்தில் எழுதப்படும் பலவகையான புத்தகங்களைப் பார்க்கையில் சமயத்தில் பொறாமைகூட வந்துவிடுகிறது. தினம் சமையலா என முணுமுணுப்பதைக் காட்டிலும் தினம் சாப்பிட வேண்டுமா என கேள்வி கேட்பவர் குறைவு என்பதை நமது ஹோட்டல்களில் கூடும் கூட்டத்தை வைத்தே சொல்லிவிடமுடியும். அது போலத்தான் இந்த தளத்தை நடத்தும் அன்பர்கள் யாரும் சாப்பிட முணுமுணுப்பதில்லை, சமைப்பதில் ரோட்டா போட்டு ஒவ்வொருவர் ஒரு நாள் எனப் பிரித்துக்கொண்டிருப்பதால் பெரும் பாரமாகத் தெரிவதில்லை என்றார். மிக மகிழ்ச்சியான விஷயம்.

இங்கிலாந்துப் பகுதியில் கூடும் பறவைகள் பற்றி முன்னர் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். How to be a bad birdwatcher எனும் புத்தகத்தைப் படித்தபின் பறவைகளைக் கவனிப்பதில் (எலெக்ட்ரிக் கம்பியைப் பார்ப்பது போல ஏனோ பறவைகளைப் பார்ப்பது என எழுதமுடிவதில்லை) இருக்கும் ஏற்பாடுகள் கொஞ்சம் புரியத் தொடங்கியது. நான் வசிக்கும் ரிக்மேன்ஸ்வொர்த் எனும் கிராமத்தில் தடுக்கி விழுந்தால் Funeral directors எனும் கடைசி பயண ஏற்பாடுகளைச் செய்யும் கடையில்தான் விழ வேண்டும். இப்படிப்பட்ட இடத்தில் பொதுவாக அரசு சவுகரியங்கள் அளவுக்கதிகமாக இருக்கும். வயதானவர்களுக்கென ஷாப்பிங் வண்டிகள், வீட்டையும் தோட்டத்தையும் சுத்தப்படுத்த கவுன்சில் எனப்படும் ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் என ராஜ வாழ்க்கை வாழ்பவர்கள். தோட்டத்துக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், அட்டைப்பெட்டிகள் என மண்ணில் மக்கி அழியக்கூடிய பொருட்களையும் இதர கழிவுகளையும் சரியாகப் பிரித்து வைக்க தனித்தனி குப்பைத் தொட்டிகள் உள்ளன. ஒழுங்காக தரம் பிரித்து குப்பை கொட்டவே வாரயிறுதியைச் செலவு செய்கிறார்கள். இப்படியாக இங்கு வசிக்கும் பலருக்கும் பொதுவாகவே இயற்கை பற்றிய அக்கறை அதிகமாக உள்ளது. தனது வீட்டுத் தோட்டத்தில் செர்ரிப் பழங்களைத் தின்ன வரும் பறவைகள் குறைவது போலத் தெரிந்தால் அவசர போலிஸைக் கூப்பிட்டுவிடுவார் என் பக்கத்து வீட்டுப் பாட்டி. RSPB எனும் பறவைகள் பாதுகாப்பு அமைப்பு போலிஸ் வந்ததும் அவரது பதற்றம் குறையும்.

இப்படித்தான் வாழவேண்டும் எனத் தங்களுக்குள் திட்டமிட்ட சட்டகத்துள் வாழும் மனிதர்களுக்கிடையே ஜொனாதன் லிவிங்ஸ்டோன் போன்ற ’கடற்புள்ளு’ (seagull - நன்றி : நாடோடித்தடம், கவிஞர் ராஜ சுந்தரராஜன்) வாழ்ந்தால் எப்படி இருக்கும்? வெளியான முப்பது வருடங்களுக்குப் பின்னும் விற்பனையில் உலக அளவில் சக்கப்போடு போடுவதில் பைபிளுக்குப் பிறகு இந்த புத்தகம்தான் எனச் சொல்லலாம். அந்தளவுக்கு படிக்கும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் இந்த புத்தகம் பாதித்திருக்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...