A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label பாரதியார். Show all posts
Showing posts with label பாரதியார். Show all posts

20 Dec 2012

பாரதியின் குயில் பாட்டு - 2

தலைவியின் விரக தாபம் போல தன்னிடம் காதலைச் சொன்ன குயிலின் மனமாற்றத்தில் குழம்பி பரிதவிக்கும் நமது கவிஞர் கடுந்துகிலில் ஆழ்ந்துவிடுவதை முதல் பகுதியில் பார்த்தோம். நான்கு நாட்களுக்குப் பிறகு தன்னைச் சந்திக்க வரச்சொன்ன குயில் இடைப்பட்டவேளையில் குரங்கு, காளை எனப் புது காதல் முயற்சிகளில் ஈடுபட்டுவிட்டதைக் கண்டு கவிஞரின் மனம் பித்து பிடித்தலைந்தது. ஆனாலும் காலை புலர்ந்ததும், புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கி மண்ணத் தெளிவாக்கிய ஜோதி கவிஞரையும் தெளிவடையச் செய்துவிட்டதாம். `குயிலென்னை எய்துவிட்ட தாழ்ச்சியெல்லாம்` சற்றே ஒதுக்கிவைத்தவர், தன்னருகே பறந்த கரும்பறவை ஒன்றைக் கண்டார்.
 
மாஞ்சோலையைத் தேடிப் போகும் வழியில் இதென்ன புது குழப்பம்? காலை வெளிச்சத்தில் சரியாகத் தெரியாத காரணத்தால் வீதிக்கு வந்து கரும்பறவையைத் தொடரத் தொடங்குகிறார். ஒருவேளை இதுதான் நமது குருவியோ? மாரீசனைப் போல் ஏதேனும் கபடநாடக வேசத்தை பூண்டு தன்னை மீண்டும் வசப்படுத்தப் பார்க்கிறதோ எனும் குழப்பத்தில் கரும்பறவையைப் பார்த்து நிற்கிறார். தேவதூதனின் பிறப்பை அறிவித்த நட்சத்திரம் போல எதை அறிவிப்பத்ற்காக கரும்பறவை அவரை வலம் வருகிறது?
 
யான் நின்றால் தான் நிற்கும் யான் சென்றால் தான் செல்லும்


கரும்பறவையைத் தொடர்ந்தால் தனது மாஞ்சோலைக்கு சென்றுசேர்கிறார். ஆங்கு மரக்கிளையில் வீற்றிருந்த தனது `நீசக்` குயிலை பொய்வேஷம் போட்டதற்குக் கொன்றுவிடலாமோ எனும் எண்ணம் கவிஞருக்கு உதிக்கிறது. உடனடியாக அழத்தொடங்கும் குயில், தன் கதையைக் கேட்டபின்னும் நம்பிக்கை வராவிட்டால் நீயிற் தன்னை அழித்துவிடவேண்டுமெனக் கெஞ்சுகிறது.
 
 
 

15 Dec 2012

பாரதியின் கண்ணன் பாட்டு

பாரதி பாட்டுல எதாவது ஒரு நாலுவரி சொல்லேன் என்று எதிரில் பார்ப்பவர் நால்வரைக் கேளுங்களேன் ("இல்லே நான் டமில் கூட்டி கூட்டிதான் வாசிக்கும்" என்பவராய் இல்லாது  நாலு வரியேனும் தமிழ் வாசிக்கத் தெரிந்த ஜீவன்களாய் அவர்கள் இருக்கட்டும்)

அவர்களில் மூவர் நிச்சயம் இதைப் பாடுவர்,
“பிறர்வாடப் பலசெயல்கள் செய்து நரைகூடிக் கிழப்பருவமெய்து..... நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?..... இனி என்னை புதிய உயிராக்கி மதி தன்னை மிகத்தெளிவு செய்து என்றும் சந்தோசம் கொண்டிருக்க செய்வாய்”
அதென்னவோ என்னத்தை சாதிக்கவில்லை என்றாலும், இந்தப்பாடலைப் பாடினால் வீறுகொண்டு எழும் ஆவேசம் வருவதாய் ஒரு தோற்றம் நம்மவர்களுக்கு.


12 Dec 2012

பாரதி கருவூலம் - ஆ.இரா.வேங்கடாசலபதி

சுப்ரமணிய பாரதியைப் பற்றி உணர்ச்சிவசப்படாமல் பேச முற்படுபவருக்கு ஒரு வருட டிடிஎச் கனெக்‌ஷன் இலவசமாகக் கொடுக்கலாம். முண்டாசு, இடுங்கிய கண்கள், ஆளுயரக் கைத்தடி, ஒடுங்கிய சரீரம் என மிடுக்கானத் தோற்றத்தைக் கற்பனை செய்ய நம்மிடையே எண்ணிலடங்கா திரைகாட்சிகளும், ஓவியங்களும் உள்ளன. ஆனால், நம்மை முதலில் வந்தடையும் இந்த சித்திரங்களையும் ஓரிரு கவிதை வரிகளையும் தாண்டி அவரது எழுத்தில் தெரியும் பாரதியாரோடு ஒரு நாள் பழக வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லையே எனும் ஏக்கம் நம் மனதில் நிச்சயம் இருக்கும். அவரது அருகில் நிற்க நமக்கு அருகதை இருக்கிறதோ, நேருக்கு நேர் விழிகளை நோக்கும் நேர்மை இருக்கிறதோ, அவரது கோபப் பார்வையை தாங்கும் சக்தி இருக்கிறதோ எனத் தெரியாது. ஆனால், தீயில் கருகும் விட்டில்பூச்சிகளான நமக்காகப் பகைவனுக்கு அருள்வாய் என சக்திதேவியிடம் மனமுருகிப் பாடியிருப்பார். புதுச்சேரி கடற்கரை மணற்பரப்பில், விரைந்தோடி வரும் அலைகளுக்கு அருளிய மானுடப் பாடல்களை இன்று வாசித்தாலும் நம்மால் உணர்ச்சி வசப்படாமல் இருக்க முடியாது. அதுவும் யதுகிரி அம்மாள் எழுதிய பாரதி நினைவுகளில் அவர் தினந்தோறும் மேற்கொள்ளும் கடற்கரை நடைப்பயணத்தைப் படித்ததிலிருந்து எனக்கு இவ்வகை சித்திரம் பெரும் உத்வேகத்தைத் தரும். பார்த்தீங்களா?! இலவச டிடிஎச்சுக்கு ஆசைப்பட்டு முறுக்கிக்கொண்டு நின்றாலும் கடைசியில் வழிக்கு வந்துவிடுவோம்.
 
 
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்
பொறையருந்துன்பப் புணர்பெலாம் நான்
நானெனும் பொய்யை நடந்துவோன் நான்

என பிரபஞ்சத்தின் முன் நிர்வாணமாய் நின்று தன்னை அறிய முற்பட்ட மகாகவி பாரதியின் வாரத்தை ஆம்னிபஸ் கொண்டாடி பெருமை சேர்த்துக்கொள்கிறது.
 
 


11 Dec 2012

பாரதியார் கவிதைகள்

சிறப்பு பதிவர் : கணேஷ் வெங்கட்ராமன்

போன வருடம் ஒரு கட்டுரையில் “பாரதி மாயை” என்ற சொற்றொடரை முதல் முறையாகப் படித்தேன். அப்போது பாரதியின் ”மாயையைப் பழித்தல்” என்ற கவிதையின் கீழ்க்கண்ட வரி என் நெஞ்சில் ஓடிற்று :-
“உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?”
எனக்கும் பாரதிக்குமிடையிலான உறவு எப்போது தொடங்கியது? கையடக்க ”பாரதியார் கவிதைகள்” புத்தகம் அன்பளிப்பாக கிடைத்தபோதுதான் என்று நினைக்கிறேன். ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்புத்தகம் கிடைத்தவுடன் நான் புத்தகத்தைப் பிரித்து படித்த முதல் பாடல் என்ன என்று எனக்கு இன்னும் நன்றாக ஞாபகமிருக்கிறது.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”
எங்கள் வீட்டின் பின்புறம் துணி துவைக்கும் கல் ஒன்று இருந்தது. என் அன்னையார் என்றும் அக்கல்லை துணி துவைக்கப் பயன்படுத்தியது கிடையாது. ஈரமே ஆகாமல், உட்கார ஏதுவாக இருக்கும். வீட்டின் பின்புறம் யாரும் இல்லாதபோது துணி துவைக்கும் கல் ஆசனத்தில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு ஒரு வித கர்வத்துடன் பாரதியின் கவிதைகளை சத்தம் போட்டு படிப்பது வழக்கமாகி விட்டது.


10 Dec 2012

புழுதியில் வீணை - ஆதவன்

ஆதவனின் 'புழுதியில் வீணை' நாடகம் 292 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தக வடிவில் இப்போது என் கையில் இருக்கிறது. இதில் முதல் 92  பக்கங்கள் முன்னுரை - இதை வாசித்த எவரும் "ஒரு பிரபல விவாதத்தை நினைவூட்டிக் கொண்டு தொடங்குவோம்" என்ற இதன் துவக்கத்தை மறக்க முடியாது.

இந்த வாக்கியத்தில் துவங்கும் கட்டுரை, அடுத்த பத்தியில் விஷயத்தை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறது: 
"பாரதியார் தேச பக்தராக வாழ்க்கையைத் துவக்கி, கவியாக மலர்ந்து, இறுதியில் பக்குவமான வேதாந்தியாகப் பழுத்ததாக," ராஜாஜி தெரிவித்த கருத்து; இக்கருத்தை வ.ரா. எதிர்த்து, "பாரதியாரை வேதாந்தச் சிமிழில் போட்டு அடைக்க வேண்டாம்," என்று எழுதியது. இரண்டு கருத்துக்களுமே பாரதி பற்றின இரு பரிச்சயமான அணுகுமுறைகளைப் பிரதிநிதிப்படுத்துபவை."
"ஒருவன் ஒரே சமயத்தில் தேச பக்தனாகவும் கவியாகவும் வேதாந்தியாகவும் இருக்க முடியாதா?"" என்று இந்த விவாதத்தைத் தொடர்ந்து கேட்கிறார் ஆதவன். பாரதியைக் குறித்து எழுப்பப்படக்கூடிய மிகவும் முக்கியமான கேள்வி இது.

"இந்தக் கேள்வியைத்தான் வ.ரா. உண்மையில் கேட்டிருக்க வேண்டும். மாறாக, 'வேதாந்தி' என்ற சொல்லை வைத்துக் கொண்டு அவர் சிலம்பமாடியதன் மூலம் பிரச்சினை திசை திரும்பி விட்டதென்றே சொல்ல வேண்டும்" என்று ஆதவன் வருந்துவது அண்மையில் நடந்த ஒரு பிரபல விவாதத்தை நினைவூட்டுகிறது. மகாகவி என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு அந்த சிலம்பாட்டம் நடந்தது - அப்போது எரிச்சலாகவும் ஆத்திரப்படுத்துவதாகவும் இருந்தாலும், இப்போது நினைத்துப் பார்த்தால் அந்த விவாதத்தில்தான் பாரதியின் கூர்முனைகள் இணையத்தில் வெளிப்பட்டன.

9 Dec 2012

பாரதி கண்ட கல்வியும் பெண்மையும்


பாரதி கண்ட கல்வியும் பெண்மையும்
ஆசிரியர்: பேராசிரியர் டாக்டர் மு.கோவிந்தராசன்
பக்கங்கள்: 160 
முத்துக்குமரன் பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை : 14

***

பாரதியின் படைப்புகளைக் குறித்து எழுதப்பட்ட ஆராய்ச்சி நூல் இது என்றாலும், ஆசிரியரும் ஒரு கவிஞர் என்பதால் நடுநடுவே அவருடைய கவிதைகளோடும், தொல்காப்பியம், திருக்குறள் முதல் பற்பல நூல்களிலிருந்தும் தகுந்த மேற்கோள்களையும் எடுத்துக் காட்டியுள்ளார். கல்வி, பெண்மை ஆகிய இரண்டைப் பற்றி பாரதி பாடியுள்ள அனைத்தையும் அருமையாக தொகுத்து எழுதியுள்ளார். குழந்தைக் கல்வி, பெண் கல்வி, தேசியக் கல்வி ஆகியவற்றைப் பற்றி பாரதியின் கருத்து என்ன என்பதை இந்தப் புத்தகம் அழகாக விளக்கியுள்ளது. ’மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என ஆவேசப்பட்டு, ‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்கும்’ என அறிவுறுத்தி, ‘காதல் செய்யும் மனைவியே சக்தி, கடவுள் நிலை அவளாலே எய்த வேண்டும்’ எனப் பெண்மையை போற்றும் பாரதியை ‘பெண்மை’ பகுதியில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

7 Oct 2012

புதுவையில் பாரதி - ப.கோதண்டராமன்


ஒரு கடையில் பாரதியார் பற்றிய புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்த போது, இந்தப் புத்தகம் அகப்பட்டது. முன்னட்டை மடிந்து உடைந்து போய், மொத்தப் புத்தகமும் பழுப்பேறிப்போய் இருந்தது. முதல் பதிப்பு 1980ல் வெளிவந்திருக்கிறது. நான் வாங்கியது 1990ல் வெளியான இரண்டாவது பதிப்பு. இருபத்தைந்து வருடத்திற்கு மேல் அந்தப் புத்தகம் பத்திரமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்திருக்கிறது. அதற்கு முன் அறிந்திராத பல விஷயங்களை இந்தப் புத்தகத்திலிருந்து தான் அறிந்து கொண்டேன் என்பதால், இதை ஒரு முக்கியமான ஆவணமாக நினைக்கிறேன்.


15 Aug 2012

மகாகவி பாரதியார் - வ.ரா



யதுகிரி அம்மாள் நமக்குக் காட்டும் பாரதியின் சித்திரத்திற்கும் வ.ரா காட்டும் சித்திரத்திற்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. ஆனால் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை புத்தகத் தலைப்புகளிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். ‘பாரதி நினைவுககளில் யதுகிரி அம்மாள் தன்னுடைய நினைவுகளை அப்படியே பகிர்ந்து கொள்கிறார். ஆனால், வ.ரா-வின் ‘மகாகவி பாரதியார்’ என்ற தலைப்பிலேயே அவர் பாதி விஷயங்களை விளக்கிவிடுகிறார். யதுகிரி அம்மாள் சுருங்க எழுதியிருக்கிறார்; வ.ரா எழுத்தாளர் என்பதால் அங்கங்கே வாக்கிய விஸ்தரிப்புகள் உண்டு. இரண்டு புத்தகங்களிலுமே தகவல் அடர்த்தி அதிகம். 

யதுகிரி பதிவில், காந்தன் ஐயா அவர்கள் ரிக்‌ஷாத்தோழனுக்கு பாரதி கோட் கொடுத்த விஷயத்தை பற்றிச் சொல்லியிருந்தார். அது ரிக்‌ஷாக்காரர் இல்லை. புஷ் வண்டிக்காரர்கள். அவர்கள் பாரதியாரை ஏற்றிக் கொண்டு போவார்களாம். ஆனால் அவரிடம் காசு கேட்கமாட்டார்களாம். அவருடைய அங்கவஸ்திரம் தான் அவர்களுக்கு கூலி. 

வ.ரா பாரதியின் சில குணங்களைச் சொல்கிறார். அதில் ஒன்று 

போய்க்கொண்டிருக்கும்பொழுது,  பலர் பயபக்தியுடன் நின்றுகொண்டு பாரதியாரை நமஸ்கரிப்பதைக் கண்டேன். யார் நமஸ்கரித்தாலும் உடனே தமது இரண்டு கைகளையும் நன்றாய்ப் பொருத்தி இசைத்து, முகத்துக்குக் கொண்டுபோய், பாரதியார் கும்பிடுவார். சில சமயங்களில் சிலரிடம், சிறிது பேசவும் செய்வார். நடந்துகொண்டே கும்பிடுவதில்லை; நின்றுவிடுவார்.

புத்தகத்தின் பத்தாவது அத்தியாயத்தில் வ.ரா பாரதியாரின் உருவத்தை சித்தரிக்கிறார். பாரதியார் சுந்தர ரூபன் என்று தொடங்கும் விவரிப்பு, அவருடைய கண்கள், மூக்கு, நெற்றி, மீசை, கேசம் வரை போகிறது. அவருடைய வழுக்கையை மறைப்பதற்காக அரைமணி நேரம் வரை செலவு செய்வார் என்கிறார் வ.ரா. அடுத்தது உடை, 

உடம்பிலே எப்பொழுதும் ஒரு பனியன் சட்டை இருக்கும். வேஷ்டிகளையோ, சட்டைகளையோ, அவர் சலவைக்குப் போட்டு நான் பார்த்ததில்லை. யாராவது ஒரு பக்தனோ, வீட்டு வேலைக்காரியோ துவைத்துக் காய வைத்திருப்பார்கள். பனியனுக்குமேல் ஒரு ஷர்ட்டு. அது கிழிந்திருக்கலாம். அனேகமாய்ப் பித்தான் இருக்காது. இதற்குமேல் ஒரு கோட்டு. அதற்கு மரியாதைக்காக ஒரு பித்தான் போட்டுக் கொள்வார்.

மேலும் சட்டையில் தினமும் ஒரு பூ வைத்துக் கொள்வது; பென்சிலால் மட்டுமே எழுதுவது; சந்தனப் பொட்டைப் போல ஒற்றெழுத்துக்களுக்குப் பொட்டு வைப்பது; அவருடைய முண்டாசு, இடக்கால் பாதத்தில் முக்கால் பைசா அளவுக்கு இருந்த ஆணி வரை அடுக்குகிறார் வ.ரா.

பாரதியாரின் புதுவை வாழ்க்கை குறித்து நமக்கு மிகுதியான தகவல்கள் கிடைக்கின்றன. யதுகிரி அம்மாள், வ.ரா, பாரதிதாசன், கனகலிங்கம், கோதண்டராமன் என்று பலர் பாரதியின் புதுவை வாழ்க்கை குறித்து எழுதியிருக்கிறார்கள். புதுவையில்  பாரதியார் உட்பட, பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து வந்தவர்களை சுதேசிகள் என்றே அழைத்திருக்கிறார்கள். ஆனால், புதுவையில் அவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை இருந்தது என்று சொல்லமுடியாது. சுதேசிகளை எப்போதும் பிரிட்டிஷ் இந்தியப் போலீஸ் கண்காணித்துக் கொண்டே இருந்தது. அவர்களுடைய கடிதங்கள் ஒழுங்காகப் போய்ச் சேராது. மணியார்டர் வராது. பாரதியாருக்கு வர வேண்டிய பணம் தடைப்பட்டதால், மிகவும் துன்பப்பட்டுப் போயிருக்கிறார். சுதேசிகளை புதுவையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று பிரிட்டிஷ் இந்தியா, புதுவை கவர்னருக்கு பல நெருக்கடிகளைக் கொடுத்திருக்கிறது. திருநெல்வேலிச் சதி வழக்கிலும் (ஆஷ் துரை கொல்லப்பட்ட வழக்கு) புதுவை சுதேசிகளுக்கு தொடர்பிருக்கிறது, என்று கூடச் சந்தேகப்பட்டிருக்கிறார்கள். பாரதியாரின் ‘சின்னச் சங்கரன் கதை’யை பாரதியாரிடம் வேலை பார்த்த பையன் ஒருவர் எடுத்துக் கொண்டுபோய் போலீஸிடம் கொடுத்துவிட்டான் என்கிறார் வ.ரா. ஆனால், அந்தப் பையன் தான் அதைச் செய்தான் என்பதை பாரதி நம்பவில்லை. 

பாரதியார் காந்தியைச் சென்னையில் சந்தித்த போது, ராஜாஜி, சத்தியமூர்த்தி மற்றும் வ.ரா அவருடன் இருந்திருக்கிறார்கள். ஆனால், வ.ரா-வைத் தவிர வேறு யாரும் அதைப் பதிவு செய்ததாகத் தெரியவில்லை. 

மகாகவி பாரதியார் | வ.ரா | சந்தியா பதிப்பகம் | 136 பக்கங்கள் | விலை ரூ.75 | இணையத்தில் வாங்க


7 Aug 2012

பாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள்


“ஐயா எனக்கு ஏதாவது கொடுங்கள்” என்று கேட்கும் பாம்பாட்டிக்கு, மேல் வேட்டியை அரையில் கட்டிக் கொண்டு அரை வேட்டியை கொடுக்கும் மனிதரை என்னவென்று சொல்வீர்கள்?

இப்படிச் செய்கிறீர்களே என்று கேட்டால், “எனக்கு நாலு பேர் கொடுப்பார்கள். அவனுக்கு யார் கொடுக்கிறார்கள்? நானே யோசிக்கவில்லை. உனக்கென்ன யோசனை?” என்று கேட்பவரை என்னவென்று சொல்வீர்கள். 


யதுகிரி, பாரதியின் தோழராகிய ஸ்ரீநிவாஸாச்சாரியாரின் மகள். ‘சுதேசி’களான பாரதி,  ஸ்ரீநிவாஸாச்சாரியார், வ.வே.சு ஐயர், அரவிந்தர் போன்றவர்கள் அப்போது புதுவையில் வசித்திருக்கிறார்கள். யதுகிரி அம்மாள், பாரதியின் மகள்களைவிடச் சற்றே பெரியவர் என்று தெரிகிறது. பாரதியின் சிஷ்யையாகவே தன்னை அறிவித்துக் கொள்கிறார். பாரதி இறந்து பலவருடங்களுக்குப் பின் தன்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறார். புத்தகம் வெளிவந்தது 1954ம் வருடம். அப்போது யதுகிரி அம்மாளும் காலமாகிவிட்டிருக்கிறார். 


யதுகிரி அம்மாளின் பார்வையில் பாரதியின் இயல்பான குணங்கள் நமக்குக் கிடைக்கின்றன. அந்த அம்மாளுக்கு பாரதியின் வாழ்க்கையை சொல்ல வேண்டும் என்பது மட்டுமே எண்ணமாக இருந்திருக்க வேண்டும். பாரதியை தன்னுடைய தகப்பன் ஸதானத்தில் வைத்துப் பார்க்கும் யதுகிரி அம்மாள், அவருடைய நற்குணங்களையும் நேர்மையையும் சொல்லும் அதே நேரத்தில், அவரிடம் தான் கண்ட குறைகளையும் சொல்கிறார்.

புகுந்தவீடு செல்லும் யதுகிரியிடம் பாரதி,

“நீ இரண்டு வீட்டிற்கும் விளக்கைப் போல் பிரகாசிக்க வேண்டும். இரண்டு குடும்ப வாழ்க்கை கலப்பது முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும். பழகியபின் வழக்கமாய் விடும். கேவலம், அடிமைத்தனத்திற்கு ஒத்துக்கொள்ளாதே. உனக்கு உரிமை உண்டு; புத்தி உண்டு. ஸ்வதந்திரம் உண்டு. தலை நிமிர்ந்து நட, உன் இருபுறமும் உள்ள இயற்கையைக் கண் குளிரப் பார், நேர்ப் பார்வையில் பார், கடைக்கண் பார்வையில் பார்க்கத் தகுந்தவன் கணவன் ஒருவனே. தந்தை சகோதரர்கள், பிள்ளைகள் முதலியோரை நிமிர்ந்து பார். இவர்களைக் கடைக் கண்ணால் பார்க்காதே. நிமிர்ந்து உட்கார். பேசுவதை ஸ்பஷ்டமாகப் பேசு. தைரியமாகப் பேசு. இதில் கற்பு கெடுவதில்லை. மேலுக்கு வேஷம் அவசியம் இல்லை.”

“பாரதியார் வாயால் பெண்கள் சுதந்திரம் பாடினாரே ஒழியச் செல்லம்மாவைத் தம் நோக்கத்தின்படியேதான் நடக்கும்படி செய்தார். செல்லம்மா தமதிஷ்டப்படி நடப்பது வெகு அபூர்வமே.” என்கிறார் யதுகிரி. 

மாறுவேடம் போட்டுக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் பதினைந்து நாட்கள் பாரதியார் எங்கோ போய் வந்திருக்கிறார். செல்லம்மா தன்னுடைய பிறந்த வீட்டிற்கு போய்விட, தான் மறு விவாகம் செய்து கொள்ளப்போவதாய் சொல்லியிருக்கிறார் பாரதி. பல நாட்கள் தொடர்ந்து மெளனவிரதம் அனுஷ்டித்திருக்கிறார். கஞ்சா பழக்கத்தினால் மற்றவர்களின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். திருமணமாகிச் சென்று பின் பிறந்தவீடு வரும் யதுகிரி, பாரதியின் கண்களில் முன் போல் ஒளியில்லை என்கிறார். 

ஒரு ஆறேழு பாடல்கள் உருவான சூழ்நிலைகள் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. யதுகிரியின் தம்பி இறந்த போது பாடியது, நல்லதோர் வீணை. யதுகிரியின் ருது ஸ்நான வைபவத்தின் போது எழுதியது “கண்ணன் திருவடி எண்ணுக மனமே”. சில பாடல்களில், பாரதி நேரில் பாடியதற்கும் இப்போது அச்சாகியிருப்பதற்கும் உள்ள வித்தியாசங்களையும் சொல்கிறார். பாரதியின் எந்த படைப்புகளிலும் வெளிவராத “இந்த தெய்வம் நமக்கநுகூலம் இனிக்கவலைக் கிடமில்லை” என்ற பாடலும் இந்த புத்தகத்தில் இருக்கிறது.


Related Posts Plugin for WordPress, Blogger...