A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

31 Jul 2013

மீறலின் புனிதப் பிரதி - சுகுமாரன்

மீறலின் புனிதப் பிரதி


நல்ல இலக்கியம் என்பது உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும்போது மனிதக் குரல்களையும் முகங்களையும்போல சாயல்களும் தனித்தன்மையும் வளமாகக் கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராணியில்லாதவர்கள் வேறு எவற்றுக்கெல்லாமோ ஆசைப்பட்டுத் தங்களையே நகல்களாக்கிக் கொண்டு விடுகிறார்கள்.

தி.ஜானகிராமன்

பார்த்துப் பார்த்துத் தீராதவையான கடல், கானகம் போன்றவற்றின் பட்டியல்போல வாசித்துமாளாத சில தமிழ்ப் படைப்புகளின் வரிசை என் மனதுக்குள் இருக்கிறது. அதில் ஒன்று தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’.

மீசை அரும்பத் தொடங்கிய பருவத்தில் முதன்முதலாக வாசித்த இந்த நாவலை மீசைவெளுத்திருக்கும் வயதுவரை பல்வேறு சூழ்நிலைகளில் வாசிக்க நேர்ந்திருக்கிறது. அந்தந்த வயதின் அறிவுக்கும் உணர் வுக்கும் ஏற்ப நாவலை அணுகும் விதங்களிலும் மாற்றங்கள் தொடர்ந்திருக்கின்றன. பதினெட்டு, பத்தொன்பது வயது வாசிப்பின்போது நாவல் விருப்பத்துக்குரியதாக இருந்ததன் காரணம் அதன் இலக்கியக் குணம் மட்டுமல்ல. ‘முன்னங்கையின் சதைத் திரட்சியும் மென்மையும் - தண்ணென்று நெருக்கிக் கட்டிய ஜவந்தி மாலைபோல - மார்பிலும் முதுகிலும் அழுந்திய’ அரூபப் பெண் ஸ்பரிசம் தந்த ரகசியக் கிறக்கமே அதைத் திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டியது. கிறக்கம் கலைந்த பின்னாள் வாசிப்புகளில் நாவல் வெவ்வேறு பொருள்களில் விளங்கியது. அதற்குள் இயங்கும் சிந்தனைத்தளம் தொடர் வாசிப்புக்கு ஈடு கொடுத்தது. நுண் தகவல்களும் காலத்தை மனவியக்கமாக மாற்றியிருக்கும் நேர்த்தியும் பாத்திர உருவாக்கத்தில் செலுத்தியிருக்கும் உளவியல் பின்னல்களும் அதை ஒவ்வொரு வாசிப்பிலும் புதுப்பித்தன. கடல்போல ஆழ்ந்தும் கானகம்போல அடர்ந்த வழிகளைக் காண்பித்தும் மனதில் நிரந்தர இருப்பை உருவாக்கிக்கொண்டிருந்தது; இருக்கிறது. முந்தைய வாசிப்பில் கவனிக்க மறந்தவையும் பிடிபடாமல் பதுங்கியவையுமான நுட்பங்களை மறுவாசிப்பில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பின்வரும் உதாரணத்தைச் சொல்லலாம்.

29 Jul 2013

பிறகு - பூமணி

சிறப்புப் பதிவர்: பாஸ்கர் லக்ஷ்மன்

நடைமுறை வாழ்க்கை அனுபவம் ஓரளவிற்கே பண்பட்ட செயல்பாட்டிற்கு உதவுகிறது. வாழ்வில் எதிர்கொள்ள முடியாத அனுபவங்கள், மனித மனத்தின் அலாதியான எண்ணங்கள், சமூகத்தின் மீதான விமர்சனம் எனப் பல முனைகளை இலக்கிய வாசிப்பு கொடுத்துதவுகிறது. அப்படியான ஓர் அனுபவத்தை எழுத்தாளர் பூமணியின் “பிறகு” கொடுத்தது என்றால் அது மிகையாகாது.

27 Jul 2013

The Fifth Woman - Henning Mankell


முன்னிரவு. பறவைகளை நேசிப்பவன், பறவைகளைப் பற்றிக் கவிதைகள் எழுதுபவன் ஒருவன், தன் பண்ணையில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தை நோக்கிச் செல்கிறான். பருவகாலப் பயணம் செய்யும் பறவைகளை அவன் கவனித்தாக வேண்டும். சாக்கடை ஒன்றைக் கடக்க அதன் மீதிருக்கும் மரப்பலகையில் நடந்து செல்கையில் அது உடைந்து விழுகிறது, அவனும் சாக்கடைக்குள் விழுகிறான். அதனுள் கூராக்கக்கப்பட்ட மூங்கில்கள் செருகி வைக்கப்பட்டிருக்கின்றன. அதன் கூர்முனைகள் துளைத்து அவன் மெல்லச் சாகிறான். காவல்துறையினர் இது திட்டமிட்ட கொலை என்பதை அவதானிக்கின்றனர் - யாரோ ஒருவன் மரப்பலகையை உடைத்து, அதன் கீழிருக்கும் சாக்கடைப் படுகையில் கூர்முனைகளை ஊன்றியிருக்க வேண்டும்.

இதையடுத்து காவல் துறையினர் வழக்கை விசாரிக்கத் துவங்கும் இந்த ஆரம்ப நாட்களில் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. தன் பூக்கடைக்குள் யாரோ ஒருவன் திருட்டுத்தனமாக புகுந்திருக்கிறான் என்று அந்தப் பூக்கடையில் பணிபுரியும் உதவியாளர் புகார் செய்கிறார். ஒருவன் உள்ளே புகுந்தததற்கான தடயங்கள் கிடைக்கின்றன, ஆனால் கடையில் எதுவும் திருட்டுப் போகவில்லை - ஓரிடத்தில் ரத்தம் குளமாய் தேங்கியிருக்கிறது. இந்தக் குற்றம் குறித்து போலீசுக்கு இருக்கும் குழப்பம் வெகு நாள் நீடிப்பதில்லை. 



26 Jul 2013

Noi Chhoi- At Sixes And Sevens - Ashapurna Devi

பதிவர்  : ச. அனுக்ரஹா

242 நாவல்கள், 37 சிறுகதைத் தொகுப்புகள் 59 குழந்தைக் கதைகள் மற்றும் இன்னும் பல ஆக்கங்களைப் படைத்த பெரும் வங்க எழுத்தாளர் ஆஷாபூர்ண தேவி. சாஹித்திய அகாதமியின் 'ஃபெல்லோஷிப்' மற்றும் ஞானபீட விருதினைப் பெற்ற இவர் முறையாக பள்ளி, கல்லூரி சென்றவர் அல்ல. 1909-இல் பிறந்து கல்கத்தாவில் ஒரு விரிந்த குடும்பச் சூழலில் வளர்ந்தவர்.  பழமைவாதியான அவரது பாட்டி, வீட்டுப் பெண்கள் கல்வி கற்பதை அனுமதிக்கவில்லை. வீட்டில் தனது சகோதரர்கள் பாடம் சொல்லிக் கொள்ளும்போது உடனிருந்து தானாகவே எழுத படிக்க கற்றுக்கொண்டார். அவரது தாயின் புத்தக விருப்பம், அவருக்கு மிக இளமையிலேயே புத்தகங்களையும் வாசிப்பையும் அறிமுகப்படுத்தியது. சிறுவயதிலேயே கவிதைகளும் குழந்தைகளுக்கானக் கதைகளும் எழுத தொடங்கியவர், தன் திருமணத்திற்குப் பின் வளர்ந்தவர்களுக்கான கதைகளும் நாவல்களும் எழுதினார். தன் எழுத்துலகைப் பற்றி கூறுகையில், "நான் எப்பொழுதும் சாமானியர்களைப் பற்றிதான் எழுதுகிறேன். ஒரு சீரழிந்த சமூகத்தில், பெண்களே முதலில் சுரண்டப்படுகிறார்கள். அவர்களின் நிலை என்னை உலுக்குகிறது, அதை நான் சித்தரிக்க முயற்சித்திருக்கிறேன்" என்று கூறுகிறார்.


24 Jul 2013

உலகம் ஒரு புத்தகத்தில் படிக்கப்படுவதற்காகவே இருக்கிறது - பி.ஏ. கிருஷ்ணனின் கட்டுரைகள்

பதிவர் : நம்பி 

அமெரிக்காவில் அரசுப் பள்ளி ஒன்றில் படிக்கும் எனது ஒன்பது வயது மகன் பள்ளியிலிருந்து திரும்பி வந்து கட்டுரை எழுதும் பெரும் தலைவலி பற்றிப் புலம்புகிறான். இந்தியப் பள்ளிக் கல்வி சார்ந்த எனது ஏமாற்றங்களைப் பற்றிய என் நினைவுகளில், ஒவ்வொரு வாரமும் கட்டுரைகள் (காம்பொசிஷன்) எழுதுவதில் இருந்த அலுப்பை நினைவூட்டும் நினைவுகளுக்கு ஓர் இடம் உண்டு. உலகெங்கும் ஆசிரியர்கள் கட்டுரைகள்மீது ஒரு வெறுப்பைத் தூண்டுவதில் அமோக வெற்றி அடைந்திருப்பதைப் பார்க்கையில் மக்கள் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிக்கொண்டும் படித்துக்கொண்டும் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. ஆனால் கட்டுரையின் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையும் அதில் இருக்கும் ஏராளமான சாத்தியங்களும் எதற்கும் அசையாத உறுதியை அதற்குக் கொடுத்திருக்கின்றன. தினமும் காலை அலுவலகத்திற்குப் பயணிக்கும்போது நான் அவ்வப்போது சுந்தர ராமசாமியின் அல்லது புதுமைப்பித்தனின் கட்டுரைத் தொகுப்புகளைப் படிக்கிறேன். என் சக பயண வாசகர்களும் '2006இன் சிறந்த அமெரிக்கக் கட்டுரைக'ளைப் படிப்பதைப் பார்க்கும்போது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. கட்டுரை என்ற எழுத்து வகையைப் பற்றிச் சில அறிமுகக் குறிப்புகளோடு தொடங்குகிறேன்.

20 Jul 2013

Where the Wild Things Are – Maurice Sendak

பதிவர் : சரவணன்

    மொத்தம் முப்பத்து மூன்றே பக்கங்கள். எண்ணிப் பார்த்தபோது முன்னூற்று முப்பத்து சொச்சம் வார்த்தைகள் மட்டுமே, மொத்தப் புத்தகத்திலும்! கவிதை நடை; கூடவே பக்கத்துக்குப்  பக்கம் ஆயிரம் வார்த்தைகள் பேசும் படங்கள். இதற்குள்ளாக ஒரு அதிசய உலகத்தைப் படைத்துக் காட்டுகிறார் மௌரிஸ் சென்டாக். இதில் வருகிற மேக்ஸ் என்ற சிறுவனின் கற்பனை பெரிதா அல்லது அவனது கற்பனை உலகைக் காண முடிந்த கதாசிரியரின் கற்பனை பெரிதா என்ற வியப்பு ஏற்படுகிறது.   

 

19 Jul 2013

தமிழ்நாட்டில் காந்தி - தி.செ.சௌ.ராஜன்

  
பதிவர் - கடலூர் சீனு 


தமிழில் இப்போது காந்தியை அறிந்து கொள்ளச் செறிவான பல நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன . தவறவிடக்கூடாத  நூல்களென லூயி ஃபிஷெர்  எழுதிய 'நான் கண்ட காந்தி'  [தமிழில் தி.ஜ.ரா., சித்தக்கடல் பதிப்பகம்],  'காந்தியின் இறுதி 200 நாட்கள்' [பாரதி புத்தகாலயம்] ஆகியவற்றை குறிப்பிடலாம். முந்திய நூல் காந்தி எனும் பேராற்றலின் வாழ்வை நமக்கு அண்மையாக்கும்.  பிந்தையது சமூக வாழ்வெனும் அறிய இயலா பெரும்புதிர்முன் தனது ஆத்மீக நம்பிக்கைகள் சிதறி, சரிவின் இருட்குகைக்குள் சென்று மறையும் மகாத்மாவைப் பின்தொடரும்.

காந்தி குறித்து தமிழில் இனி எத்தனை நூல்கள் வந்தாலும் அவற்றுடன் தவறாமல் இணைத்து வாசிக்கப்பட வேண்டிய நூல் தி.செ.சௌ. ராஜன் எழுதிய 'தமிழ்நாட்டில் காந்தி''. 1934, பிப்ரவரி 23 முதல் மார்ச் 22 வரை தமிழ்நாட்டில் ஒருமாத காலம் சுற்றுப்பயணம் செய்து 120 மேடைகள் வழியே தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அதனுடன் ஹரிஜன சேவா நிதி, பிஹார் நிலநடுக்க நிதி சேகரித்தார் காந்தி. காந்தியின் மேடை உரைகளுக்கு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டு அவருடன் பயணித்த ராஜன், காந்தியின் தமிழக பயணத்தைப் பற்றி எழுதிய குறிப்புகள் அடங்கியதே இந்நூல்.                                                                                                                                                                                                                                                   
தமிழ்நாட்டில் காந்தி
1934ஆம் ஆண்டில் ஹரிஜன இயகத்திற்காக மகாத்மா காந்தி மேற்கொண்ட தமிழக சுற்றுப்பயண நிகழ்வுகளின் தொகுப்பு இந்நூல்.
பதினெட்டு நாட்களில் இரண்டாயிரம் மைல் பயணம்...
112இடங்களில் காந்தியைக் காணக் குவிந்த இரண்டு கோடி தமிழர்கள். சென்ற இடங்களில் எல்லாம் வரவேற்பும் பணமுடிப்பும் அன்பும் ஆரவாரமும்... இவற்றை பதிவு செய்துள்ளது தி.சே.சௌ.ராஜன் காந்தியின் தமிழகச் சொற்பொழிவுகளை உடனிருந்து மொழிபெயர்த்தவர்.
தி.சே.சௌ.ராஜன், சந்தியா பதிப்பகம்                                            

17 Jul 2013

The Inspector and Silence - Hakan Nesser


மௌனமே எவரும் எதிர்கொள்ளக்கூடிய ஆகப்பெருஞ்சுவர். ஹக்கான் நசெர் எழுதிய இந்த நாவலில் இன்ஸ்பெக்டர் வான் வீட்ரன் தகர்க்கமுடியாத மௌனத்தையே தன் விசாரணைகளில் எதிர்கொள்கிறார்.

ஸ்வீடனில், சொர்பினோவோ என்றழைக்கப்படும் தொலைதூர, அழகிய கிராமத்துக்கு வெளியே தனித்திருக்கும் காடுகளில் ஒன்றில் 'தூய வாழ்வு' என்ற மதக்குறுங்குழு ஒன்று 12 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான சம்மர் கேம்ப் நடத்துகிறது. இந்த முகாமில் இருக்கும் சிறுமிகளில் ஒருத்தி காணாமல் போய்விட்டாள் என்ற தகவலை தான் யார் என்பதைக் காட்டிக் கொள்ளாத பெண் குரல் ஒன்று தொலைபேசியில் காவல் துறையை அழைத்துச்  சொல்கிறது. 'தூய வாழ்வு' முகாமைக் காவல்துறை தொடர்பு கொண்டு விசாரிக்கும்போது அங்கு எல்லா பெண்களும் பத்திரமாக இருக்கின்றனர், எந்தச் சிறுமியும் காணாமல் போகவில்லை என்று தெரிய வருகிறது.

இரண்டு நாட்கள் சென்ற பின்னர் அதே பெண் போலீசை மீண்டும் அழைக்கிறாள். காணாமல் போன பெண்ணைக் கண்டுபிடிக்க காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை என்று கேட்கிறாள். அந்த ஊரின் போலீஸ் தன் விசாரணையில் உதவச் சொல்லி இன்ஸ்பெக்டர் வான் வீட்ரன்னுக்கு அழைப்பு விடுக்கிறது.


12 Jul 2013

Absolute Friends - John le Carré




“Tell him I sent you," she implores him as the train mercifully pulls out. "He is a graduate but democratic. Everyone in Berlin knows Sasha," which to Mundy sounds as convincing as everybody in Bombay knows Gupta.

“Go to Kruzeberg,” Ilse is howling after him, as he waves his last tragic farewells from the carriage window. “Ask for him there. And look after him Teddy”, she commands as a peremptory afterthought, which he has no time to explore before the train conveys him to the next stage of his life."

அவனது வாழ்வின் அடுத்த கட்டம் அவனை சாஷாவுக்கு நெருக்கமாக கொண்டு செல்கிறது. அவனும் சாஷாவும் 'பூரண நண்பர்களா’கின்றனர் (Absolute Friends). நாவலின் தலைப்பு உணர்த்துவது போல், இது ஒரு பூரண உறவைப் பற்றிய நாவல். சாதாரண மனித தர்க்கத்துக்கு அப்பால் இந்த உறவுகள் செயல்படுகின்றன என்பதே இதன் அடிப்படைப் பொருள்.

நாவலின் துவக்கத்தில் டெட் மண்டி நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஜெர்மானிய மன்னர் லுட்விக்கின் லிண்ட்ராஃப் கோட்டைக்கு வரும் ஆங்கிலம் அறிந்த சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக இருக்கிறான் அவன். குழந்தை ஒன்றுக்குத் தாயாய் தனித்திருக்கும் ஒரு முஸ்லிம் பெண்ணைத் தன் உயிர்த்துணையாக கண்டடைந்திருக்கிறான், அவளது மகனைத் தன் மகனாக ஏற்றுக் கொண்டிருக்கிறான். இறந்த காலம், மண்டியின் நெடுங்கால நண்பன் சாஷாவின் உருவில் இவர்களின் அமைதியான வாழ்வுள் மெல்ல நுழைகிறது. 

10 Jul 2013

ஒருநாள் - க.நா.சுப்ரமண்யம்



சாத்தனூருக்குச் சரித்திரப் பிரசித்தம் கிடையாது. பூகோளப் பிரசித்தம் கிடையாது.

சாத்தனூரில், அதுவும் சர்வமானிய அக்ரஹாரத்தில், அடால்ஃப் ஹிட்லரையும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸையும் போன்ற பெரிய மனிதர்கள் கிடையாது.

சரித்தரத்தில் பொன்னெழுத்துக்களாலும் கரிக்கோடுகளாலும் வரைய வேண்டிய சம்பவங்கள் கிடையாது.

இந்தத் தலைமுறையின் ஞாபகத்திலே சாத்தனூரிலே ஞாபகம் வைத்துக்கொள்ளும்படியாகப் பொதுக்காரியங்கள் எதுவும் கிடையாது.

ஆனால், மனிதர்கள் தனித்தனி மனிதர்களாக வாழ்ந்தார்கள்.

தங்களுக்குத் தாங்களே தவிர, வேறு எவ்விதத்திலும் அடிமைப்படாமல் வாழ்க்கை நடத்தினார்கள்.  (பக். 106)

.நா.சு நம்மை மீண்டும் சாத்தனூருக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால், இம்முறை மேட்டுத் தெருவுக்கு அல்ல. சர்வமானிய அக்ரஹாரத்துக்கு அழைத்துச் செல்கிறார். படிப்பதற்காக ஜெர்மனிக்குச் செல்லும் மூர்த்தி, ஹிட்லரின் பிரச்சார வேகத்தால் அடித்துச் செல்லப்பட்டு, ஜெர்மனி ராணுவத்தில் இணைந்து உலகப்போரில் பங்கெடுத்து, பின் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பங்கெடுத்து, கடைசியில் மேஜர் மூர்த்தியாக ஊர் திரும்புகிறான்.. பத்திரிக்கைகளில் எல்லாம் பெயர் வருகிறதே தவிர, ஆனால் அவனுக்கு அதில் எந்தப் பிரயோஜனும் இல்லை, ஒன்றைத் தவிர. ஒரே உறவான, மாமா அவனை அடையாளங் கண்டு கொண்டு சாத்தனூருக்கு அழைப்பதைத் தவிர.

காலை சாத்தனூருக்கு எந்தவொரு இலக்கும் இல்லாமல் வருபவன், தன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி உந்தப்பட்டு இரவில் மீண்டும் பட்டணம் திரும்புகிறான். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தவனுடைய வாழ்க்கைக்குக்கு, சாத்தனூரும் அதன் மக்களும் ஒரே நாளில் ஒரு திசையேற்படுத்திக் கொடுக்கிறார்கள்.

.நா.சுவைப் பற்றிப் பேசும் போது பொய்த்தேவுவைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. என்னால் முடியாது. அதுவும் சாத்தனூர் பற்றிப் பேசும் போது முடியவே முடியாது. பொய்த்தேவு, மேட்டுத் தெருவைச் சேர்ந்த சோமு முதலியின் கதை. ஒருநாள் - மேஜர் மூர்த்தியின் வழியாக சொல்லப்படும் சாத்தனூர் சர்வமானிய அக்ரஹாரத்தின் கதை. உலகம் முழுவதும் சுற்றி வந்த மேஜர் மூர்த்தியைப் பற்றி சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை - உலகம் முழுவதும் சுற்றி வந்தான் என்பதைத் தவிர. மற்றவர்களுக்கு ஏற்படாத அனுபவம் ஒன்று அவனுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அளவிலேயே அவனுடைய அனுபவத்தை வைக்கிறார் ஆசிரியர். ஆனால், சர்வமானிய அக்கிரஹாரத்து மக்களைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது.

8 Jul 2013

The Invention of Hugo Cabret - Brian Selznick

பதிவர் - சரவணன்

    இந்த அபூர்வமான புத்தகத்தைப் படித்திருக்காவிட்டாலும் மார்டின் ஸ்கோர்ஸசி எடுத்த படமாகத் திரையில் பலர் பார்த்திருக்கக்கூடும். அபூர்வம் என்பது வடிவம், உள்ளடக்கம் இரண்டிலுமே.

    வடிவத்தை முதலில் பார்க்கலாம். ஐநூறு பக்கங்களுக்குமேல் உள்ள இந்தப் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்துவிட முடியும். காரணம், பாதிக்கு மேலான பக்கங்கள் (ஆசிரியரே வரைந்த) படங்களாலேயே ஆனவை. படங்களிலும் ஒரு சிறப்பு. மற்ற புத்தகங்களில் ஓவியர், தன் கதாசிரியர் வார்த்தைகளால் சித்தரித்திருக்கும் அதே காட்சிகளையே ஓவியமாகத் தீட்டியிருப்பார். இந்தப் புத்தகத்தில் அப்படிக் கிடையாது. இங்கே கதையானது வார்த்தைகள் வழியாகவும், சித்திரங்கள் வழியாகவும் மாறி மாறிப் பயணிக்கிறது. அதாவது, எழுதப்பட்ட வரிகளை எப்படி வாசிப்பீர்களோ, அதே மாதிரி படங்களையும் ‘வாசிக்க’ வேண்டும். பிறகு விட்ட இடத்திலிருந்து மீண்டும் சொற்கள் கதையைத் தொடரும். பிறகு கொஞ்சம் படங்கள்... இப்படியே புத்தகம் முழுவதும். சித்திரங்கள் அனைத்தும் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போன்ற மிக நேர்த்தியான பென்சில் டிராயிங்ஸ். (இதில் சிலவற்றை கூகுள் இமேஜ் தேடலில் புத்தகப் பெயரைக் கொடுத்துப் பார்க்க முடியும்.)

    ஹியூகோ படத்தைப் பார்த்தவர்கள் அதன் ஆரம்பக் காட்சிகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். லாங் ஷாட்டில் ஈஃபில் டவர், கொஞ்சம் கொஞ்சமாக ஜூம் செய்து பாரிஸ் நகரம், அதிலொரு புகைவண்டி நிலையம், பரபரப்பாக அலைந்துகொண்டிருக்கும் மக்கள் திரளுக்கிடையில் ஓடி, சந்து பொந்துகளில் புகுந்து, பிரமாண்டமான கடிகார அறையிலிருந்து அதன் முகப்பு (டயல்) ஊடாக எட்டிப் பார்க்கும் சிறுவன்... அந்தக் காட்சி அப்படியே ஒரு ஸ்டோரிபோர்டு மாதிரி இப்புத்தகத்தின் துவக்கத்தில் வரையப்பட்டிருப்பதுதான்!

  
     உள்ளடக்கமும் புதுமையானதே. குழந்தைகளின் உலகில் நடக்கும் திருப்பங்களும், வியப்புகளும் நிறைந்த கதை; அதனூடாக ஆரம்பகால ஃப்ரெஞ்ச் சினிமா வரலாறு, இல்யூஷனிஸ்ட்கள் எனப்படும் அந்தக்கால மாயவித்தைக்காரர்கள் பற்றிய தகவல்கள், ஆட்டோமேட்டான் என அழைக்கப்பட்ட அன்றைய முன்னோடி இயந்திர மனிதர்கள் பற்றிய வியப்பூட்டும் செய்திகள் என இந்தப் புத்தகத்தில் புதைந்துள்ள எண்ணற்ற பொக்கிஷங்கள் நம்மைக் கட்டிப்போட்டு விடுகின்றன.

5 Jul 2013

ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் - தோப்பில் முஹம்மது மீரான்


பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. இதில் உள்ள இவரது கதைகள் ஏறத்தாழ எல்லாமே நெகட்டிவாக இருக்கின்றன. யாரையும் நம்ப முடியாது, எல்லாரும் துரோகம் செய்கிறார்கள், எல்லாம் செத்துக் கொண்டிருக்கிறது, எவன்டா ஏமாறுவான் என்று உலகம் காத்துக் கொண்டிருக்கிறது என்பது போல்  நினைக்க வைக்கும் கதைகள், ஒரு நண்பர் சொன்ன மாதிரி, "உலகம் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்ற தொனி,' இவற்றில் இருக்கிறது. கடைசி கதையில் மட்டும் கொஞ்சம் நம்பிக்கை - ஆனால் அதுவும் யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்ற முழுகிக் கொண்டிருக்கிறவனின் நம்பிக்கை.

பாராட்டி எழுதுவதற்கு இருக்கும் விஷயங்கள் இரண்டு. முதலாவது, வட்டார வழக்கு. இதிலுள்ள கதைகள் ஒரு வாழ்க்கை முறையை நமக்குத் தெரிவிக்கின்றன, இதன் பேச்சு மொழி தமிழுக்கு வளம் சேர்க்கிறது. இரண்டாவதாகப் பார்த்தால், இதிலுள்ள மத நம்பிக்கைகள். மரத்தின் உச்சிக்குப் போகும் சிறுவன் ஒருவன் மேகத்திலிருந்து ஒரு பாம்பு கிளை விட்டுக் கிளைக்குப் பறந்து தாவி வருவதைப் பார்த்து பயந்துபோய் இறங்கி விடுகிறான் - அல்லாஹூ தன் வீட்டை யாரும் பார்த்துவிடக் கூடாது என்று இந்த மாதிரி பாம்புகளை அனுப்பி வைப்பாராம், அவை கொத்துவது கண்களில் (பக்கம் 8). இதே மாதிரி ஜின்னுகளை வைத்துக் கொண்டு தகடு வைப்பது எடுப்பது, அரேபியா சார்ந்த நம்பிக்கைகள் என்று கொஞ்சம் இருக்கின்றன. இதெல்லாம் வாசிக்க சுவாரசியமாக இருக்கின்றன. தோப்பில் முஹம்மது மீரான் இதை இன்னும் கொஞ்சம் சீரியஸாக எடுத்துக் கொண்டு செய்திருக்கலாம்.



4 Jul 2013

The Draining Lake - Arnaldur Indriðason


ஐஸ்லாந்திலிருக்கும் ஒரு ஏரி மர்மமான முறையில் வற்றிக் கொண்டிருக்கிறது; அந்த ஏரிக்குள் இறங்கும் பெண்ணொருத்தி ஒட்டுக் கேட்கும் கருவியொன்று கட்டப்பட்டிருக்கும் ஒரு எலும்புக் கூட்டை காண்கிறாள். காவல் துறை சம்பவ இடத்துக்கு வருகிறது; அந்த ஒட்டுக் கேட்கும் கருவியில் "Made in Russia" என்று பொரிக்கப்பட்டிருப்பதை கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்கள்; உளவறியும் நோக்கங்களுக்கு அது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். கருவியின் தொழில்நுட்ப விபரங்களைக் கொண்டு மேலும் துப்பு துலக்கி, அந்த எலும்புக்கூடு 1970களிலிருந்தே ஏரியில் கிடக்கிறது என்ற முடிவுக்கு வருகிறார்கள். இன்ஸ்பெக்டர் எர்லண்டர் ஸிவன்ஸன் தலைமையில் விசாரணை துவங்குகிறது; 1970களில் காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுகிறார்கள். காவல் துறைக்கு இந்த விசாரணையில் எந்த ஆர்வமும் இல்லை. விசாரணையைக் கைவிட அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், எர்லண்டர் அதெல்லாம் முடியாது என்று விசாரணையைத் தொடர்கிறார். பல தசாப்தங்களுக்கு முன்னர் நடந்திருக்கக்கூடிய என்ற ஒரு கொலையை, எந்தவொரு துப்பும் இல்லாமல், எப்படிப் படிப்படியாக எர்லண்டர் கண்டுபிடிக்கிறார் என்பது இந்த மர்ம நாவலில் ஒரு இழை.

இந்நாவலில் இரண்டு வெவ்வேறு இழைகள் ஓடுகின்றன. ஒன்று, விசாரணை இழை. மற்றொன்று கொலைக்கு பின்னாலிருக்கும் காரணத்தை விளக்கும், கடந்த காலத்தைத் திரும்பக் கோர்க்கும் இழை. இரண்டாவது இழைதான் ஆர்வமூட்டுவதாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது. அது, லட்சியவாதியான ஒரு இளம் மாணவனைப் பற்றியது. கம்யூனிசத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்படும் அவன், பனிப்போர் காலத்தில் கிழக்கு ஜெர்மனியின் லைப்சிஷ் நகரத்தில் தன் மேற்படிப்பைத் தொடர முடிவு செய்கிறான். தீவிரமான கொள்கைப் பிடிப்புள்ள இளமையின் ஆர்வத்தோடு லைப்சிஷ் வரும் அவன், தன்னுடைய கம்யூனிசக் கொள்கைகளால் உலகையே தன்னால் மற்றிவிட முடியும் என்று நம்புகிறான். ஆனால், அவனுடைய நிஜ உலகம் அவனுடைய லட்சிய உலகத்தைக் காட்டிலும் வித்தியாசமாய் இயங்குகிறது என்பதைப் பின்னர்தான் உணருகிறான். தொடர்ந்த கண்காணிப்பு, அரசுக்கும் அதன் லட்சியங்களுக்கும் தான் விசுவாசமாக இருப்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டிய தேவை, எப்போதுமிருக்கும் பயமும் மூச்சுமுட்டலும் - கிழக்கு ஜெர்மனியின் ஃபாசிசப் போக்கு அவனுக்கு புரியத் தொடங்குகிறது. அந்தச் சூழலில், யாரையுமே - நெருங்கிய நண்பர்கள் உட்பட - யாரையுமே நம்ப முடியாது. பெரியண்ணன் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய உளவாளிகள் மூலம் மட்டுமல்ல, உங்களுடைய நண்பர்கள், அக்கம்பக்கத்தவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்று அனைவரைக் கொண்டும் பெரியண்ணன் உங்களை கவனித்துக் கொண்டேயிருக்கிறார்.

3 Jul 2013

தமிழவன் கதைகள்

பதிவர் : சரவணன்

    தமிழவன் தமிழின் முக்கியமான இலக்கியத் திறனாய்வாளர்களில் ஒருவர். பின் நவீனத்துவம், அமைப்பியல்வாதம், கட்டுடைத்தல் போன்றவற்றைத் தமிழ் இலக்கியச் சூழலில் அறிமுகப்படுத்திய ஒரு முன்னோடி. இவருடைய 'படைப்பும் படைப்பாளியும்' என்ற முதல் புத்தகம் சுவாரசியமான ஒன்று. அதில், கவிஞர் இன்குலாப், 'போராடு', 'புரட்சிசெய்' என்கிற ரீதியில் தொழிலாளிக்குச் சொல்வதுபோல எழுதிய கவிதை ஒன்றைக் கட்டுடைத்து, தொழிலாளிக்கு ஆதரவானதுபோலத் தோன்றும் அக்கவிதை உண்மையில் எப்படி தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரானதாக இருக்கிறது என்று காட்டியிருப்பார். அப்புராணித் தொழிலாளி கவிதையில் எங்கும் பேசுவதில்லை, நிஜ உலகைப்போலக் கவிதையிலும் குரலற்று இருக்கிறான் என்று அவர் சுட்டிக்காட்டியதைப் படிக்கும்போது, 'அட, சரிதானே' என்று தோன்றும். அதற்குப் பின் தமிழவன் எழுதிய புத்தகங்கள் அதே சுவாரசியத்தை எனக்குத் தரவில்லை.

    பரிசோதனைகள் இல்லாமல் அறிவியல் வளர முடியாது. அதேபோல இலக்கிய வளர்ச்சிக்கும் பரிசோதனைகள் அவசியம். தமிழைப் பொருத்தவரை இன்றைக்குச் சாதாரணமாக இருக்கும் நாவல், சிறுகதை, புதுக்கவிதை, ஏன் உரைநடையேகூட ஒருகாலத்தில் சோதனை முயற்சிகளாக ஆரம்பிக்கப்பட்டவைதானே. இந்தக் காரணத்தாலேயே இலக்கியத்தில் சோதனை முயற்சிகளை வரவேற்க வேண்டும். மேலும் அறிவியலோ, இலக்கியமோ— பரிசோதனைகளில் தோல்வி என்ற ஒன்று கிடையாது, விளைவு எப்படியிருந்தபோதிலும் அதிலிருந்து எதையேனும் கற்றுக்கொள்ளவே செய்கிறோம் என்பதால்.

    தமிழவன் கதைகள்  தொகுதியில் 13 கதைகள் அடங்கியுள்ளன. தலைப்பில் சிறுகதைகள் என்ற பிரயோகம் தவிர்க்கப்பட்டு, 'கதைகள்' என்றே குறிப்பிடப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இவற்றில் ஒன்றிரண்டு தவிர மற்ற கதைகள் யதார்த்த பாணியில் எழுதப்பட்டவையல்ல. அப்படிப்பட்ட கதைகளை நான் முழுதாகப் 'புரிந்துகொண்டு'விடவும் இல்லை. இருந்தாலும் எனக்குத் தெரிந்தவரை, புரிந்தவரை அவற்றைப் பற்றிய என் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவே இப்பதிவு. கதைகளை புத்தகத்திலிருக்கும் வரிசையில் அல்லாமல் எனக்குத் தோன்றிய வரிசையில் கூறுகிறேன்.

    இன்னொன்று, தமிழவன் பிரதானமாகப் புனைகதையாளர் அல்ல என்பதால் நல்ல கதையாக வந்திருக்கக்கூடிய சாத்தியப்பாடு உள்ள சில கதைகள் சரிவர உருப்பெறாமல் போயிருக்கின்றன. அதாவது, வேறு புனைகதையாளர்கள் நன்றாகக்கொண்டு வந்திருக்கக்கூடிய கதைகளை, தான் ஒரு ஸ்ட்ரக்சுரலிஸ்ட் என்பதால் அப்படியெல்லாம் நேரடியாக எழுதிவிடக் கூடாது என்று வேண்டுமென்றே ஒரு சிரமமான நடையை வலிந்து உருவாக்கி எழுதியிருக்கிறார் தமிழவன் என்றே தோன்றுகிறது! இந்தக் கதையின் மேற்பரப்பை இலேசாகச் சுரண்டிப் பார்த்தால், உள்ளே இருப்பது வழக்கமாக நாம் வாசித்துப் பழக்கப்பட்ட ஒரு சிறுகதை, வலிந்து புரியாத மொழியில் எழுதப்பட்டுள்ளது என்ற எண்ணம் பல கதைகளைப் படிக்கையில் ஏற்படவே செய்கிறது.

    அப்படிப்பட்ட கதைகளை, இந்தக் கதையை மட்டும் தமிழவனுக்குப் பதில் வேறொருவர் எழுதியிருந்தால் மீட்டிருக்கலாம் என்று தோன்றியது. அப்படி வேறு யார் எழுதியிருக்க வேண்டும் என்பதையும் (சற்று அதிகப்பிரசங்கித்தனமாக) குறிப்பிட்டிருக்கிறேன்! ஒரு சுவாரசியத்துக்காகத்தான்  .

   


2 Jul 2013

My Heroes - Ranulph Fiennes


ஒரு பின்மாலைப் பொழுதில் நண்பர்களுடன் உலக விவகாரங்களை, இலக்கிய வம்புகளை, இலக்கியவாதிகளின் சின்னத்தனங்களை ஆவேசமாக தர்க்கித்துவிட்டு உலகில் உள்ள அனைத்தையும் சற்றே விலகி நின்று நிதானமாகவும் தெளிவாகவும் பார்த்த திருப்தியுடன் வீடு திரும்புகிறீர்கள். யாருமற்ற இருண்ட தெரு முனையில் தெரு நாயின் கிர்ர் என்ற எச்சரிக்கை ஒலி தெளிவாக கேட்கிறது. என்ன செய்வீர்கள்? எல்லா அறச்சீற்றங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு தெருவில் நுழைய தயங்குவீர்கள்தானே? இதை என்னவென்று எடுத்துக் கொள்ளலாம்? தைரியமின்மையா விவேகமா?

போர் முனையில் இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் அல்லது தலையைத் தூக்கினாலே எதிரியின் தோட்டா துளைக்கும் சாத்தியம் ஏராளம் என்று உறுதியாகத் தெரிந்தும் கூட்டம் கூட்டமாக முன்னேறிச் செல்லும் நபர்களை என்னவென்று வகைப்படுத்துவீர்கள்? வீரர்கள்? முட்டாள்கள்? தனக்கு சாவும் மெடலும் மட்டுமே நிச்சயம் என்று தெரிந்தும் முன்னேறுவது என்ன மாதிரியான அசட்டுத்தனம்?

உங்களைக் கவர்ந்த அல்லது பாதித்த மனிதர்கள், உங்கள் மனமெனும் மேடையில் நாற்காலி போட்டு அமர்த்தியிருக்கும் ஹீரோக்கள், யார் யார் என்று கேட்டால் உங்களால் ஒரு பட்டியல் தயார் செய்ய முடியுமா?

பிரிட்டிஷ்காரர், ரனால்ஃப் பியான்ஸ் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்திற்கு போவதிற்கு முன்னால் இவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் நிச்சயம் தேவை - நீங்கள் பிரிட்டிஷாராக இல்லாத பட்சத்தில் இவரைப்பற்றி தெரிவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.

இவர் பிரிட்டிஷ்  ராணுவத்தில் ஒரு சிறப்புப் படையில் பணிபுரிந்தவர் (SAS). வட மற்றும் தென் துருவங்கள் - இரண்டையும் தரை வழியே அடைந்த முதல் மனிதர். அண்டார்டிக் மற்றும் ஆர்டிக் பெருங்கடல்களை கடந்த முதல் மனிதர் (கூட சார்லஸ் பர்டன் என்று துணையுடன்).

எவரெஸ்ட்டை அடைந்த பிரிட்டிஷார்களில் வயதானவர் (சீனியர் சிட்டிசனுக்கான பஸ் பாஸ்ஸுடன்! 65 வயது!). அதுவும் ஒரு தடவையில்லை. திபெத் வழி, நேபாளம் வழி என்று மூன்று முறை ஏறியிருக்கிறார், சாரிட்டிக்காக. இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

எனது அருமை கேப்டன் ஸ்காட் (Great Scott!) பற்றி இவர் எழுதிய புத்தகத்தின் மூலம்தான் என் கண்ணில் பட்டார்.

இந்த My Heroes புத்தகத்தில் இவர் ஹீரோவாக கருதுபவர்களைப் பற்றி பதினோரு அத்தியாயங்களில் விவரிக்கிறார். ஒரு பிரிட்டிஷ் பார்வையிலிருந்து சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு விதமான துடுக்கு நடையுடன், சற்று உணர்ச்சிபூர்வமாக, பிரிட்டிஷ் சினிக்குடன் வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களை கவனப்படுத்துகிறார்.


Related Posts Plugin for WordPress, Blogger...