A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

12 Dec 2014

கெய்கோ ஹிகாஷினோவின் 'வன்மம்' (‘Malice’, Keigo Higashino)



கெய்கோ ஹிகாஷினோவின் இந்தப் புதிய நாவலை சப்னா புக் ஹவுஸில் பார்த்ததுமே வாங்கிவிட்டேன். இவர் இதற்கு முன் எழுதியுள்ள முன்னிரண்டு நாவல்களைப் போலவே இதுவும் அருமையாக இருக்கும் என்பதில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை. ஆனால் துரதிருஷ்டவசமாக, பணிச்சுமை மற்றும் பிறச்சுமைகள் காரணமாக இந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்க ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டது. அண்மையில் நீண்ட ஒரு ரயில் பயணம் செய்ய நேர்ந்தது, இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, இதை ஓரே மூச்சில் படித்து முடித்து விட்டேன்.



26 Sept 2014

Short Cuts - Raymond Carver

                                                           சிறப்புப் பதிவர்: ஷாந்தி

Image courtesy http://images.word-power.co.uk/

Short Cuts ரேமண்ட் கார்வரின் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 சிறுகதைகளின் தொகுப்பு. அமெரிக்க இலக்கியத்தில் கார்வரின் சிறுகதைகள் சமகால சிறுகதைகளுள் சிறந்த படைப்புகளாய் திகழ்கின்றன. அனேகமாய் இவர் கதைகளை படித்தவுடன் கார்வருக்கு நாம் வாசகர்களாகி விடுகிறோம். எத்தகைய தருணங்களையும் இவர் விவரிப்பு சுவாரஸ்யமாய் காட்டிவிடுகிறது. இவரின் விவரிப்புகளில் கதையின் கனம் அத்தனை கச்சிதமாய் வெளிப்பட்டு படித்து முடித்த பின்னும் அந்த சம்பவங்கள், கதாபாத்திரங்கள் நம்முள் அதிர்வலைகளை  உண்டாக்குகின்றன.


10 Sept 2014

கோவேறு கழுதைகள் - இமையத்தின் சுமையேற்றும் எழுத்து

சிறப்பு பதிவர் -த.கண்ணன்

அய்ன் ராண்ட எழுதிய ‘Atlas Shrugged’, பல இளைஞர்களின் ஆதர்ச நூலாக இருந்தது; இருப்பது. முதலாளிகளும், அறிவு ஜீவிகளுமே உலகத்தையும் அதன் சுமையையும் சுமப்பது போன்ற ஒரு சித்திரத்தை அளித்த நாவல் அது. அதற்கு முற்றிலும் எதிரான ஒரு சித்திரத்தை வரைகிறது இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’. சமூகத்தின் அடிநிலை மக்களின் முதுகில் ஒய்யாரமாய் அமர்ந்தே இந்தச் சமூகம் தன் சுகமான பயணத்தை மேற்கொள்கிறது. பலசமயங்களில் சுமையென்று கருதாமலே அவர்கள் இயல்பாகச் சுமக்கவும் செய்கிறார்கள்..

கோவேறு கழுதைகள்
இமயத்தின் முதல் நாவல் ‘கோவேறு கழுதைகள்’  (1994) இந்த நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு Beasts of Bruden  என்ற தலைப்பில் வெளியாயிருக்கிறது.

கோவேறு கழுதைகள் தலித் இலக்கியம் என்ற வகைமைகளுக்குள்ளெல்லாம் அடைபடாமல், என் பார்வையில், ஒரு மகத்தான இலக்கிய நூலாக மிளிர்கிறது

1 Sept 2014

The Sense of an Ending- Julian Barnes


நாற்பதுகளின் ரெண்டாம் பகுதியில் இருக்கும் ஒரு பெண்மணி பதினாறு வயது தன்னையே சந்திப்பதும் உரையாடுவதுமாக அலி ஸ்மித்தின் ஒரு சிறுகதை உண்டு. அலி ஸ்மித்தின் கதைகளில் என்ன வேண்டுமானாலும் நிகழும். 30 வருடங்களில் நம் ஆளுமையில் ஏற்படும் மாற்றம், நாம் இப்போது என்னவாக ஆகியிருக்கிறோமோ அதனை நாம் சிறுவயதில் எவ்வளவு வெறுத்திருப்போம் என்பதை, நினைவிலிருந்து தப்பிச் சென்றிருக்க கூடிய விஷயங்கள், சின்ன விசயங்களில் கூட மாறியிருப்பதை ஸ்மித்தின் கதை பேசுகிறது. ஜூலியன் பார்ன்ஸின் The Sense of an Ending இதை இன்னும் ஒரு புதினத்துக்கே உரிய விரிவான பார்வையிலிருந்து அணுகுகிறது.



28 Aug 2014

பாரீஸுக்குப் போ! – ஜெயகாந்தன்.


ஜெயகாந்தன் எழுதிய இந்த தொடர்கதை 1965 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. அதனால்தானோ என்னமோ கதையும் எல்லா திசைகளிலும் சிதறிச் செல்கிறது. பாதிக்கு மேல் காதல் கதை பாணியில் ஓர் ஒருமை கூடிவிடுவது என்னமோ நிஜம்தான் என்றாலும் நாவலாக இதைக் கருதமுடியாது. கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்குப் பிறகு இதை மீள்பார்வை பார்க்க வேண்டிய அவசியம்தான் என்ன? சாதுர்யமான கதைசொல்லல் என்பதாலா? அல்லது அவரது தனிப்பார்வைகள் அக்காலத்தில் புரட்சிகரமானவை என்பதாலா?  பழமைவாதத்தை மீறி புது உலகைச் சந்திக்கத் துடிக்கும் காலகட்டத்தைச் சேர்ந்த படைப்பு என்பதனால் இது முக்கியமாகிறது.

சுதந்தரம் கிடைப்பதற்காக தன் மண்ணுக்குரிய விழுமியங்களைப் பற்றிக்கொண்டிருந்த சமூகம் கிடைத்த விடுதலையைத் தொடர்ந்து தனது அடுத்த அடியை எப்பக்கம் வைப்பது என்ற தீர்மானமின்றி நின்றுகொண்டிருந்த தருணம். அழகியல் வகைப்பாட்டுக்காக அதை நவீனத்துவம் எனக் குறிப்பிடலாம். மிக முக்கியமான இந்த காலகட்டத்தை சரியானபடி திசைகாட்டும் சுய சிந்தனையாளர்கள் அரிதாகவே இருந்ததால், மேற்குலகை நகல் செய்யும் ‘வெஸ்டர்ன்’ சமூகம்தான் நவீனம் என சுலபமான பாதையைப் பலரும் எடுத்துக்கொண்டதாகத் தெரிகிறது. விஞ்ஞானம், சுயதொழில்கள், விவசாயம், கலை வெளிப்பாடு என சகலமும் இப்பாதையை எடுத்துக்கொண்டது எனலாம். அதாவது நூற்றாண்டுகளாக செழித்த சமூகத்தை வேரிலிருந்து மேல் நோக்கி பராமரிக்கத் தெரிந்த அறிவை உதாசீனம் செய்து நூறு ஆண்டுகள் மட்டுமே பழமையான அறிவை கேள்வி கேட்காமல் பலன் சார்ந்து உபயோகிக்கிறோம்.  ஸ்லோகங்களில் வரும் பலஸ்ருதிகூட சில பாடல்கள்தான் வரும், ஆனால் நமது அறிவு தேடல் முழுமையும் பலன் சார்ந்ததாக மாறியது.



25 Aug 2014

Immortals of Meluha - அமிஷ் த்ரிபாதி

                                                    சிறப்புப் பதிவர்: ஷாந்தி

நானாக புத்தகங்களை தேர்ந்தெடுக்காத ஆரம்ப காலங்களில் எனக்கு வாசிக்க கிடைத்தவை பெரும்பாலும் பெஸ்ட் செல்லர்ஸ் எனப்படும் "விற்று தீரும்" புத்தகங்கள்தான்.  

புதினங்கள், கற்பனை, மாயக்கதைகள், தன்முனைப்பு, சுயசரிதை என எல்லா பிரிவிலும் பெஸ்ட் ஸெல்லர் புத்தகங்கள் படிக்க கிடைத்தன. ஓரளவு வாசிப்பு மற்றும் இணையத்தில் புத்தக அறிமுகங்கள், குறை/     நிறை விமர்சனங்கள் படித்து புத்தகங்களை தேர்ந்தெடுக்க ஆரம்பித்த பிறகுதான் சிறந்த புத்தகங்களுக்கும் சிறப்பாக விற்பனையாகும் புத்தகங்களுக்கும் உள்ள வேறுபாடு புரிந்தது. 

அமிஷ் த்ரிபாதி எழுதிய "Immortals of Meluha" படிக்க எடுத்தபோது பெஸ்ட் செல்லர் அடைமொழியைத் தாண்டி Shiva trilogy என்ற குறிப்பே படிக்கத் தூண்டியது. புராண- இதிகாச கதைகள் அதிகம் தெரியாததால் இப்படியாவது தெரிந்துகொள்ளலாம் என்ற ஆர்வமே காரணம். ஆனாலும் கதைக்களம் புரியாமல் போகுமோ என்ற பயமும் இருக்கவே செய்தது.

22 Aug 2014

Neverwhere - Neil Gaiman

பதிவர்: பாலாஜி

Source: io9.com
                                               
தமிழில் குழந்தைகளுக்கான மாய மந்திர கதைகள் நிறைய உள்ளன. இவை இன்றும்கூட முக்கால்வாசி சமயங்களில் வெறும் நீதி போதனை கதைகளாகவும், மகிழ்ச்சிகரமான முடிவை நோக்கியே செல்லும் கதைகளாகவும் இருக்கின்றன என்பதுதான் வருத்தமான விஷயம்.

நெய்ல் கைமான் குழந்தைகளுக்காக எழுதிய "The Graveyard Book" இந்த வகை புத்தகங்களில் இருந்து பெரிதும் மாறுபட்டு உள்ளது. அது நெகிழ்ச்சியான முடிவை நோக்கி இழுத்துச் சென்றாலும், மிகையான கற்பனை உலகு ஒன்றை நமக்குக் காட்டினாலும், வாசகரை அதில் ஊன்றி படிக்க வைப்பதில் வெற்றி பெறுகிறது.

குழந்தைகளுக்கான கைமானின் இன்னொரு புத்தகம் Neverwhere.  பிபிசி தொலைகாட்சியில் நெடுந்தொடராக வந்த இதை பின்னர் நாவலாக எழுதியிருக்கிறார். இது கொஞ்சம் பெரியவர்களுக்கான ஒரு இருண்ட- மிகைகற்பனைக் கதை என்று சொல்லலாம். இப்படி தமிழில் தம் கட்டிச் சொல்லும்போது, மிரட்டல் இலக்கிய வகைமையைச் சேர்ந்த புத்தம் புதிய செவ்வியல் நாவல் மாதிரி இருக்கிறது, ஆனால் அப்படியெல்லாம் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆங்கிலத்தில், "Dark Fantasy" நாவல் என்று சொன்னால், கொடு புத்தகத்தை என்று கேட்பீர்கள். இதைப் படிக்கும்போதோ, படித்து முடிக்கும்பொழுதோ இப்படி எல்லாம் நடக்குமா என்று கேள்வி கேட்காமல் இருந்தால் இந்த நாவல் மிகவும் ரசிக்கலாம்.


19 Aug 2014

திரைக்கு அப்பால் - எஸ் எல் பைரப்பாவின் ஆவரண


வரலாற்றுக்கு நோக்கம் இருக்கிறதா என்று நமக்கு தெரியாது. அது எங்கு, எதை நோக்கிப் போகிறது என்பதும் நாம் ஒரு போதும் அறிய முடியாதது. ஆனால் வரலாற்றைப் படிப்பதற்கும் வரலாற்றை நிறுவுவதற்கும் ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும். அது என்னவாக இருக்க முடியும்? இதுதான் முதுபெரும் கன்னட எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா  நம்முன் வைக்கும் கேள்வி. இந்த கேள்விக்கான விடையைத் தேடும் முயற்சியே இந்த நாவல் என்று பைரப்பா  கூறுகிறார்- 2010ல் வெளிவந்து, 5 மாதங்களிலேயே 17 பதிப்புகளைக் கண்டு சாதனை படைத்தது ஆவரண எனும் இந்த கன்னட நாவல். 

பைரப்பா ஏறக்குறைய தன் 80வது வயதில் எழுதிய இந்நாவலின் பெயர் வேதாந்தத்தில் மாயையின் மறைத்தல் ஆற்றலான ஆவரண சக்தியைச் சுட்டுகிறது. வெளிவந்தவுடன் மிகத் தீவிரமான சர்ச்சைகளை எழுப்பிய இந்நாவல், கன்னட இலக்கிய உலகின் இரு துருவங்களான பைரப்பா மற்றும் அனந்தமூர்த்தி இருவருக்கும் இடையே பல பத்தாண்டுகளாகத் தொடரும் கொள்கை பனிப்போரின் ஒரு புது அத்தியாயம் என்றும் கூறலாம்.

பைரப்பாவின் பருவம் மற்றும் வம்சவ்ருக்ஷா ஆகிய நாவல்களைப் படித்திருக்கிறேன். அவற்றில் பைரப்பாவைப் பற்றிக் கிடைத்த சித்திரத்திலிருந்து முற்றிலும் வேறானதொரு சித்திரம் ஆவரணவில் கிடைக்கிறது. பருவம் மகாபாரதத்தின் மாயமறுத்து அதைச் சாதாரண, யதார்த்த தளத்தில் அணுகிய நாவல். வம்சவ்ருக்ஷா ஹிந்து சமூகத்தின் ஆழமான புண் போல ஆகிவிட்ட சாதியமைப்பை கேள்விக்குள்ளாக்கும் நாவல். இந்த இரண்டு நாவல்களும் பைரப்பாவை நிச்சயமாக ஒரு இந்துத்துவராகக் காட்டுவதில்லை. ஆனால் இப்போது ஆவரண அவரை முழுக்க முழுக்க ஒரு இந்துத்துவவாதியாக வெளிப்படுத்துகிறது என்றே அவரது விமர்சகர்களால் குற்றம் சாட்டப்பட இடம் கொடுக்கிறது.

அப்படி என்னதான் உள்ளது இந்த நாவலில்? உண்மையிலேயே மிக மிக சர்ச்சைக்குரிய ஒரு விஷயத்தையே சம்பிரதாய அரசியல் சரிநிலைகளை மீறி கையாண்டு இருக்கிறார் பைரப்பா. திப்பு சுல்தான், ஔரங்கசீப் போன்ற இஸ்லாமிய மன்னர்களின் வரலாற்றுப் பாத்திரங்கள்தான் என்ன? அவர்கள் முழுக்க முழுக்க மதவெறியர்களா அல்லது வேறு சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்வது போல் அவ்வப்போதைய அரசியல் சூழ்நீலைகளைக் கருத்தில் கொண்டு எடுத்த நடவடிக்கைகளால் மதச்சாயம் பூசப்படுபவர்களா? இது போன்ற வரலாறு சம்பந்தமான கேள்விகள் ஒரு புறமும் தற்கால வாழ்வில் இந்து இஸ்லாம் மதத்தினருக்கிடையே உள்ள உறவையும், மதம் தாண்டிய திருமணங்கள் தனிமனிதர்கள்மீது ஏற்படுத்தும்  பாதிப்பையும் மறுபுறம் வைத்துப் புனையப்பட்டதே ஆவரண, அதாவது திரை.


30 Jul 2014

மிளிர் கல் - இரா. முருகவேள்


சில மாதங்களுக்கு முன் ஜெயமோகன் தமிழ் ஹிந்து பத்திரிக்கையில் தனது பத்தியில் 'நமக்குத் தேவை டேன் ப்ரௌன்கள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தொலைகாட்சியின் ஆதிக்கம் காரணமாக வணிகப் பத்திரிக்கைகளில்  கோலோச்சிக் கொண்டிருந்த தொடர்கதைகள் அனேகமாக நின்று போனதையும் சுஜாதா போன்ற பெரும் ஆளுமைகள் உருவாகாததையும் அதனால் தமிழில் வாசகர் பரப்பு சுருங்குவதையும் சுட்டிக்காட்டி அப்படி ஒரு எழுத்தாளர் உருவாவதன் அவசியத்தைக் கூறியிருந்தார்.  டேன் பிரவுன் போல் தொன்மத்தையும் நவீன வாழ்வையும் இணைத்து, தமிழ், இந்திய கலாச்சாரத்தை மையமாக வைத்து எழுதக்கூடிய ஒரு எழுத்தாளரையும் அப்படியான ஒரு எழுத்தையும் நானும் சில காலமாக ஏக்கத்துடனேயே எதிர்பார்த்திருந்தேன். மேலும் ஆங்கிலத்தில் அமிஷ் திரிபாதி (The shiva Trilogy) , அசோக் பன்கர் (Ramayana series), மற்றும் அஷ்வின் சாங்கி (The Krishna key, Rozabal line) போன்றோரின் எழுத்துக்களை வாசிக்கும்போது தமிழில் அவ்வாறான ஒரு எழுத்து இல்லையே என்று நிஜமாகவே ஏங்கினேன்.

சுதாகரின் '6174' என்ற நாவல் அத்தகைய ஒன்றாக வந்திருக்கக் கூடியது. ஆனால் ஆசிரியருக்குத் தன் பேசுபொருள் மீதும் நாவலின் வடிவத்தின் மீதும் சரியானதொரு பிடிமானம் இல்லாத காரணத்தால் நல்ல கருப்பொருள் கொண்ட ஒரு நாவல் அதன் முழு வீச்சை அடையாமல் தோல்வியுற்றது என்றே எனக்கு தோன்றியது. கே. என். சிவராமனின் 'கர்ணனின் கவசம்' அது போன்றதொரு நாவல் என்று வகைப்படுத்தப் பட்டாலும் நான் மேலே சொன்ன ஆங்கில நாவல்களுடன் அதை நேர்மறையாக ஒப்பிட்டு எழுதப்பட்ட    விமர்சனங்கள் ஏதும் நான் பார்க்கவில்லை. அந்தப் புத்தகத்தையும்  நான்  இன்னும் படிக்கவில்லை.

இந்த நிலையில்தான் இரண்டு நாட்களுக்கு முன் இரா. முருகவேள் எழுதியுள்ள மிளிர் கல் என்ற நாவலையும் அதற்கு ஓர் அமைப்பு இந்த வருடத்தின் சிறந்த நாவல் என்ற பரிசு அளித்திருப்பதாகவும் ஒரு தகவலைப் படித்தேன். அன்று மாலையே என் நல்லூழாக அந்தப் புத்தகம் என் கைக்குக் கிடைத்தது (வழக்கம் போல் கோவை தியாகு புத்தக நிலையத்தில்தான்).

அன்று இரவு படிக்க ஆரம்பித்தவன் ஒரு நான்கு ஐந்து மணி நேரத்தில் ஒரே மூச்சில் நாவலை முடித்துவிட்டுதான் உறங்கப் போனேன். உண்மையிலேயே கையில் எடுத்தால் கீழே வைக்க முடியவில்லை என்று சொல்வார்களே அந்த ரகம். இப்படி ஒரு தமிழ்   நாவலை ஒரே மூச்சில் படித்து வெகு காலம் ஆகிவிட்டது.


17 Jul 2014

வேப்பெண்ணெய்க் கலயம் - பெருமாள் முருகன்

சிறப்புப் பதிவர்: ஷாந்தி   

சிறுகதை தொகுப்புகள் படிக்க எண்ணி நூலகத்தில் தேடியபோது, இணைய நண்பர்கள் பரிந்துரையான பெருமாள் முருகன் பெயரே முதலில் ஞாபகம் வந்தது. .

இது பெருமாள் முருகனின் நான்காவது சிறுகதை தொகுப்பு. பல்வேறு இதழ்களில் வெளியான 23 கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. சிறுகதை வாசிப்பு வார/மாத இதழ்கள் தாண்டி அதிகம் இல்லாததால் தொடக்கத்தில் கதையோட்டம் அத்தனை சுவாரஸ்யமாக இருக்கவில்லை. ஆனால் ஒரு கதை படித்து முடிந்ததும் அந்த எண்ணம் காணாமலே போனது. மிக நிதானமான நுண்ணிய விவரிப்புகள், நான் கண்டிராத கிராமத்தை, பொறுமையாக என் கற்பனையில் கொண்டுவர உதவுவதாகவே இருந்தன, உரையாடல்கள் வழி மெல்லிய உணர்வுகளும் புலப்படுவது சுவாரஸ்யம்.

இத்தொகுப்பின் கதைகள் பெரும்பாலும் கணநேர உணர்ச்சி வெளிப்பாட்டினை மையமாக கொண்டதாகவே இருக்கின்றன. சிறுசிறு வார்த்தைகள், செயல்கள் எப்படி படிப்படியாக ஒரு பெரும் விளைவினை உண்டாக்குகின்றன என்பதை விவரிக்கும் கதைகள்.. கணநேரத்தில் பெரும் கோபம், சோகம், விரக்தி போன்றவற்றை ஒரேயொரு நிகழ்வு கொடுத்து விடுவதில்லை. நம் மனநிலை,படிப்படியாக உருவாகும் உணர்ச்சிகள் அதன் போக்கை  தீர்மானிக்கும் மற்றவரது செயல்கள் என நம் கட்டுப்பாடுகளை தாண்டி நம் செயல்கள் ,எதிர்வினைகள் வெளிப்படும் அந்த தருணங்களை கதைகள் பதிவு செய்கின்றன.

Courtesy: Thinnai


29 Jun 2014

ஓநாய் குலச்சின்னம் - ஒரு புனைவும் சில எண்ணங்களும்


ஜாரட் டைமண்டின்  ‘துப்பாக்கிகள், கிருமிகள், மற்றும் எக்கு’ நூலில் அவர் வரலாற்று எழுச்சி வீழ்ச்சி  நிகழ்வுகளில்,  மார்க்சிய பொருள்முதல்வாத முரண் இயக்கம் எனும் கோட்பாட்டுக்கு வெளியே இருக்கும் வேறு பல காரணிகள் குறித்து தனது சிந்தனையை முன்னெடுக்கிறார். உதாரணமாக முதல் உலகப்போருக்கு முன்னான காலக்கட்டத்தில், ராணுவ நடவடிக்கைக்கு அடிப்படையான குதிரைகள் மீதான ஆளுமை கொண்டோரின் எழுச்சி தருணத்தை ஜாரெட் முன்னிலைப்படுத்துகிறார். கி மு 1674இல் எகிப்த்தில் ஹிக்ஸோ எனும் குழு, பாரோக்களுக்கு சொந்தமான குதிரைகளின் பரிபாலகர்களாக இருக்கிறார்கள். குதிரை மீதான தேர்ச்சி அக்குழுவுக்கு கைவந்தவுடன் ஒரு சிறிய படையெடுப்பு மூலம், அரசை வென்று அவ்வினக்குழு சில காலம் பாரோக்களாக ஆட்சி புரிகிறார்கள்.

ஜாரெட்டின் இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு, ஒரு முறை தனது உரையாடலில் ஜெயமோகன், பாலை நில மக்கள், இந்தியாவை வென்று அடக்க அடிப்படைக் காரணிகளாக அம் மக்கள், தங்கள் அன்றாட உயிர் பிழைத்தலுக்கு, பாலைநில சூழலுடன் புரிந்த சமரில் அடைந்த தகவின் பலனாய்க் கிடைத்த மூர்க்கம், மற்றும் சோர்வே அற்ற உறுதி குலையாத அரேபியக் குதிரைகள் மீது, அதன் திறன்கள் மீது,  அவர்கள் அடைந்திருந்த தேர்ச்சியை முன்வைத்தார். தொடர்ந்து மேய்ச்சல் சமூகமாக இருந்து, முகமதிய அரசர்களின் குதிரைகளுக்கு பரிபாலகர்களாக மாறி, அதன் பலனாக கைவரப்பெற்ற குதிரைகள் மீதான ஆளுமைத்திறனை அடிப்படையாகக் கொண்டு, உயர்ந்து வந்த நாயக்க மன்னர்களின், அடித்தளத்தை இதே சிந்தனை வரிசை கொண்டு விளக்கினார். இந்தப் பாலைநில ஆற்றலுக்கு, நிகராக எழுந்துவந்த சத்ரபதி சிவாஜி, மற்றும் நாயக்க வம்சம் இரண்டின் ஆற்றலுக்கான அடித்தளமும் இதேதான் என்று தொடர்ந்தார்.

நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றை,ஒரு புதிய சிந்தனைத் தளத்தில் நிறுத்தி, அதன் வெளிச்சத்தில் விஷயங்கள் புதிதாக துலங்குகையில் அளிக்கும் உவகையில் அன்றெல்லாம் திளைத்திருந்தேன். சில வருடங்களுக்கு முன் ஒரு திரைப்படம் கண்டேன். செர்ஜி பாத்ரோ இயக்கி, மங்கோலிய மொழியில் வெளியான, செங்கிஸ்கான் வாழ்வின் சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ‘மங்கோல்’ எனும் படம் அது. அதன் தருணங்களும், கானின் எழுச்சியும், இந்த சிந்தனைத் தொடரில் பொருந்தி, மேலும் பல சிந்தனை பாதைகளுக்கு என்னை அழைத்துச் சென்றன.

பின்னர் சமீபத்தில் ஜாரெட்டின் அந்த நூல் தமிழில் வாசிக்கக் கிடைத்தது. [வெளியீடு பாரதி புத்தகாலயம்] ஜாரெட் அவரது நூலின்  பக்கங்களில், வெவ்வேறு தருணங்களில் சொல்லியவற்றை, ஒரு வரிசையில் வகுத்துக் கொண்டேன்.

முதலில் வேட்டைச்சமூகம். இங்கே வலியது எஞ்சும் எனும் வன நீதிதான் அடிப்படை. அடுத்து வேட்டையுடன் இணைந்த மேய்ச்சல் சமூகம். இங்கே இயற்கையுடன் ஒரு உடன்படிக்கை நிகழ்கிறது. தேவைக்கு மட்டுமே இயற்கை நுகர்வு, ,பேராசைக்கு அல்ல  அதுதான் இங்கு அடிப்படை. அடுத்து வேளாண் சமூகம். வேட்டை சமூகம் கொண்ட ஸ்தரமின்மை இங்கே இல்லை. தங்கி வாழும் தன்மையால் பிறப்பு விகிதம் அதிகரிக்கிறது. உணவு சேமிக்கப்படுகிறது. சமூக நிர்வாகமும், சேமிப்பு பாதுகாக்கப்பட ராணுவமும் தேவையாக, அதை உருவாக்க உபரியும், உபரியின் வழி மையமான அரசாங்கமும் உருவாகின்றன. படிநிலையில் இந்த வேளாண் மைய அமைப்பைக் காக்க, ஒரு மைய அரசு. அது முதலில் ஒடுக்குவது, அல்லது அழிப்பது வேட்டைச் சமூகமாக இருக்கிறது. இன்று மக்கள் தொகையில் முன்னணியில் இருக்கும் சீனா கிமு 7000 அளவிலேயே விவசாயம், மற்றும்  பட்டுப்புழு வளர்ப்பில் அடித்தளம்  அமைத்து விட்டது என்பதை இதனுடன் இணைத்து சிந்திக்க, சுவாரஸ்யம் கூடுகிறது.

இந்த அடிப்படை சிந்தனைகளின் இலக்கிய சாட்சியமாக, மைய அரசால் ஒடுக்கப்படும் வேட்டை சமூகம் ஒன்றின் இறுதி நாட்களை அடிப்படையாகக் கொண்டு, இயற்கைமீது மனிதன் செலுத்தும் வன்முறையால், எதிர்வரும் சுய அழிவு, இவற்றை சரடாகக் கொண்டு, ஒரு இயற்கை தரிசனத்தை முன்வைத்த அற்புதமான  புனைவு ஒன்று வாசிக்கக் கிடைத்தது.

ஜியாங் ரோங் எழுதிய, [ஆங்கிலம் வழி தமிழில்] சி.மோகன் அவர்களின் சரளமான மொழிபெயர்ப்பில், ‘’ஓநாய் குலச்சின்னம்’’ எனும் நாவல் அது.


12 Jun 2014

மேற்கத்திய ஓவியங்கள் - பி. ஏ. கிருஷ்ணன்

பி ஏ கிருஷ்ணன் எழுதி காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் "மேற்கத்திய ஓவியங்கள் - குகை ஓவியங்களிலிருந்து பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரை" என்ற நூல், ஒரு பெரிய சாதனையை நிகழ்த்த முயற்சிக்கிறது. ஏறத்தாழ முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குகை ஓவியங்களில் துவங்கி, எகிப்திய ஓவியங்கள், கிரேக்க ஓவியங்கள், ரோமானிய ஓவியங்கள் என்று பண்டைக்கால ஓவியங்களைத் தொட்டு இத்தாலி, ஹாலந்து, வெனிஸ், இங்கிலாந்து, பிரான்சு என்று பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி காலகட்டம் வரை உள்ளவற்றின் சிறப்பை முந்நூற்றுக்கும் குறைவான பக்கங்களில் அறிமுகப்படுத்திவிட வேண்டும் என்பது ஒரு அசாத்திய லட்சியம். இவற்றோடு ஏறத்தாழ இதே எண்ணிக்கையில் வண்ணப்படங்களை அச்சிட்டு மிக உயர்ந்த தாளில் ஓரளவுக்கு பெரிய அளவு புத்தகமாக பதிப்பித்து விற்பனை செய்வது காலச்சுவடு பதிப்பகத்தாரின் அசாத்திய லட்சியம். இருவரின் துணிச்சலையும் பாராட்ட வேண்டும் என்றாலும் சிலபல வரைகள் எந்த அளவுக்கு தம் முயற்சியில் இவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர் என்ற கேள்வியை எழுப்புகின்றன.


9 Jun 2014

வங்காள நாவல்: நபநீதா தேவ் சென்னின் ஷீத் சஹாசிக் ஹேமந்தோலோக் (கூதிர்ப்பருவத்தை எதிர்நிற்றல்)




"நாவலின் கதையைத் திரும்பச் சொல்வதுதான் இவரது விமரிசனமாக இருக்கிறது," என்பதுதான் புக் ரிவ்யூ செய்யும் ஒருவன் எதிர்கொள்ளக்கூடிய முக்கியமான கண்டனமாக இருக்கிறது. ஆனால் அதுதான் நபநீதா தேவ் சென்னின், “ஷீத் சஹாசிக் ஹேமந்தோலோக்” என்ற குறுநாவலைப் பற்றி எழுதுவதில் மிகவும் சந்தோஷமளிக்கும் விஷயமாகவும் இருக்கிறது. இதில் எந்தக் கதையும் சொல்லப்படுவதில்லை.

கதை சொல்வதற்கு பதிலாக, நபநீதா தேவ் சென், "அந்திக் காப்பக"த்தில் இருப்பவர்களின் பார்வையில் அவர்களைச் சுற்றி விரியும் பரவலான சமூகத்தைச் சித்திரிக்கிறார், முதுமை குறித்து சிந்திக்கவும் செய்கிறார். அந்திக் காப்பகம் பெண்களுக்கான முதியோர் இல்லம். இங்கு வாழும் வெவ்வேறு பெண்களைப் பற்றி பேசிச் செல்கிறது கதை.


6 Jun 2014

இனி நான் உறங்கட்டும் - பி.கே.பாலகிருஷ்ணன்


வாசிப்பின் துவக்கம். கற்பனையில் உழல, பகல் கனவில் திளைக்க வாசித்துத் தள்ளினேன். வாசிப்பது கற்பனையில் திளைக்க மட்டுமல்ல, அதை கருவியாகக் கொண்டு இந்த வாழ்வையும் அறிய வேண்டும் எனும் பிரக்ஞையை தனது ‘சுய தரிசனம்’ சிறுகதை வழியே ஜெயகாந்தன் எனக்குள் உருவாக்கினார். இந்த போதத்துடன் நான் வாசித்த முதல் கதை. ஜெயமோகனின் ‘விரித்த கரங்களில்’. அடுத்த கதை அதே ஆசிரியரின் ‘விஷ்ணுபுரம்’. மூன்றாவது கதை, பி.கே.பாலக்ருஷ்ணன் மலையாளத்தில் எழுதி, ஆ.மாதவன் தமிழில் மொழிபெயர்த்த ‘இனி நான் உறங்கட்டும்’ என்ற தலைப்பிட்ட மகாபாரதக் கதை. கர்ணனின் கதை.

---                      

மகாபாரதம் மானுடத்தின் காவியம். தோன்றிய நாள் முதல் இன்று ஜெயமோகன் வரை மீண்டும் மீண்டும் அது மறுஉருவாக்கம் செய்யப்படுவதன் காரணம், மகாபாரதம் அன்றும், இன்றும், இனியும் விகசிக்கப்போகும் மனிதனின் அனைத்து மனோ தத்துவங்களையும், உன்னதங்களையும் பரிசீலிக்கிறது என்பதே. குல,குடும்ப, தனிமனித அறங்களை, எக்காலகட்டமாகிலும் அக்காலகட்டத்து வாழ்வை உரைகல்லாகக் கொண்டு எழும் பேரறம் ஒன்றை நோக்கிய காலாதீதத் தேடல் அதில் உறைகிறது என்பதே.

27 May 2014

அழியா அழல்

“அறம் என்ற சொல்லை அறியாத எவரும் இல்லை. அறமென்றால் எதுவென்று முழுதறிந்தவரும் இல்லை” – ஆஸ்திகன், முதற்கனல்
காவியத்திற்கும் இதிகாசத்திற்கும் நுட்பமான வேறுபாடுண்டு. இதிகாசம் எனும் சொல் ‘இது இப்படி நடந்தது’ என்பதை குறிக்கும். காவியம் லட்சிய மனிதர்களைக் காட்டுவதாகும். ராமாயணத்தை காவியம் என்றும் மகாபாரதத்தை இதிகாசம் என்றும் வரையறை செய்யலாம். பாரதத்தின் மாந்தர்கள் கூர்மையானவர்கள் கட்டற்ற அதிகார விழைவும் காமமும் கொண்டவர்கள், குரோதத்தின், வன்மத்தின் பெருநெருப்பில் தங்களையே அவியாக்கிக் கொண்டவர்கள். காவிய நாயகர்கள் லட்சிய குணங்களுடன் காவிய தருணங்களில் வாழ்பவர்கள். இதிகாச மாந்தர்கள் மானுட குணம் கொண்டு காவிய தருணங்களில் வாழ்பவர்கள். அதன் காரணமாகவே நமக்கு மிகவும் நெருக்கமானவர்களும் கூட. 




11 May 2014

மோகமுள் - உயிர்த்திரளின் ஆதார விதி


பயன்பாட்டில் உள்ளவை அனைத்தும் அப்பழுக்கில்லாமல் தொடர்ந்து இருப்பதில்லை. நம் பூஜை அறைகளில் தினமும் ஏற்றி வைக்கப்படும் குத்துவிளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும், அதில் எண்ணை வடிந்து பச்சை பூத்துவிடுகிறது. வழக்கமாக நாள் கணக்கு வைத்துக்கொண்டு நாம் அவற்றை புளி போட்டுத் தேய்த்து விளக்குவதுபோல் இலக்கியப் படைப்புகளையும் புதுப்பித்துக் கொள்ள முடிந்தால் நன்றாக இருக்கும். தொடர் வாசிப்பில் இருக்கும்போதுகூட  உயர்ந்த இலக்கிய ஆக்கங்கள் தேய்வழக்குகளாகக் குன்றி விடுகின்றன. நண்பர்களுடனான விவாதங்கள் மட்டுமே புதிய வாசிப்புக்கான தேவையை உருவாக்குகின்றன.

அத்தகைய ஒரு விவாதத்தில் என்னுடன் முரண்பட்ட நண்பர்கள் சிலர், தி ஜானகிராமனின் மோகமுள்ளைப் பற்றி  மீண்டும் சிந்திக்கத்  தூண்டினார்கள்.  அவர்களின் முக்கியமான விமர்சனம் தி.ஜா காமம் பற்றிய விசாரணைகளை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லவில்லை என்பதும், உன்னதமாக்கல் நிகழவில்லை என்பதும், யமுனா இதற்குத்தானா என்ற கேள்வியை அடைய நாவல் அனாவசியமாக நீள்கிறது என்பதுமாக இருந்தது.

அவர்களுக்கு நன்றி சொல்லி விவாதத்தின் தொடர்ச்சியாக என்னுள் எழும் எண்ணங்களை இங்கு பதிவு செய்கிறேன், வாசகர்கள் இந்தப் பார்வையைத் தொடர் விவாதங்களின்மூலம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் உண்டு. விவாதங்களே நவீன தமிழ் இலக்கியத்தின் சிறந்த ஆக்கங்களில் ஒன்றான தி ஜானகிராமனின் மோகமுள் நாவலுக்கு துலக்கம் தருவதாக இருக்கும்.




4 May 2014

தற்கொலை குறுங்கதைகள் - அராத்து


18ம் நூற்றாண்டு தொழிற்புரட்சிக்குப் பின்னான தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் பிரமிக்கத்தக்கது. நூற்றாண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்கள் பத்தாண்டுகளில் நிகழத் தொடங்கின. 20ம் நூற்றாண்டின் மத்தியில் பிறப்பெடுத்த கணினித் தொழில்நுட்பம் இந்த வேகத்தை மேலும் பன்மடங்காக்கியது. இந்த 21ம் நூற்றாண்டில் மனிதன் தான் உருவாக்கிய தொழில்நுட்பத்தின் அடிமையாகிவிட்டான் என்றால் அது மிகையாகாது.

தொழில்நுட்ப புரட்சி பிரம்மாண்டமான நகரங்களை உருவாக்கியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மனிதர்களை நகரங்களில் கொண்டு குவித்துள்ளது. பாரம்பரியத் தொழில்கள் அழிந்து ஆண்களும் பெண்களும் இன்று புதிய புதிய தொழில்களிலும் சூழ்நிலைகளிலும் பணிபுரியும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே பாரம்பரிய ஆண் பெண் உறவுகள்  வெகு வேகமாக காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன. பொருள் தேடுவதில் நாம் அடைந்துள்ள மாற்றம் நம் கலாச்சாரம் என்று இதுவரை நாம் பொத்தி வைத்திருந்ததில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது.

பெருநகரங்களில் மனிதன் ஒரு சிதறுண்ட வாழ்வை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது மேலும் மேலும் அதிக இளம் பெண்களை  மிக அந்நியமான சூழ்நிலையில் அந்நிய ஆண்களின் மத்தியில் பணிபுரியும், வாழும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அடிமைத்தனம் அதிகம் இருப்பினும் ஒரு சிறு உறவு வட்டம் அல்லது கிராமம்  அளித்து வந்த பாதுகாப்பு முற்றிலும் தகர்ந்து பெண் தன்னைத் தானே காத்துக் கொள்ளும் அவசியத்தை உருவாக்கியுள்ளது.

பொருளாதாரமே அடிக்கட்டுமானம், கலாச்சாரம் மேல்கட்டுமானம்தான் என்ற மார்க்சிய கருத்துவாக்கத்தை இன்று நிகழும் மாற்றங்கள் நினைவு கொள்ள வைக்கின்றன. சிதறுண்ட வாழ்க்கை, அந்நியத்தன்மை, புதிதாகக் கிடைத்துள்ள பொதுவெளியில் தனியாக நடமாடும் சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் ஆகியவை ஒரு புது மாதிரியான யுவர்களையும் யுவதிகளையும் இன்று அநேகமாக இந்தியாவின் ஒவ்வொரு  மாநிலத் தலைநகரங்களிலும் உருவாக்கியுள்ளது. இவர்கள் இன்றைக்கு எழுதப்படும் தமிழின் தீவிர இலக்கியத்தில் சித்தரிக்கப்படுகிறார்களா? 

மானுடம் என்றென்றும் எதிர்கொள்ளக்கூடிய கேள்விகளுக்கே நீண்டகால இலக்கிய மதிப்பு உண்டு எனினும் இன்று நம் கண் முன்னே நிகழும் மாற்றங்களும் இலக்கியத்தில் பதிவாவது மிக முக்கியமானது  என்றே நான் நினைக்கிறேன். அந்த வகையில்தான்  அண்மையில் படித்த அராத்துவின் தற்கொலை குறுங்கதைகள் என்னைக் கவர்ந்தன.


28 Apr 2014

அம்மா வந்தாள்- தி. ஜானகிராமன்


ஆம்னிபஸ் தளத்தில் திரு. சுகுமாரன் காலச்சுவடுக்காக எழுதி இருந்த மீறலின் புனித பிரதி முன்னுரை  பாதி படித்துக் கொண்டு இருக்கும்போதே வேறு வேலை வந்துவிட , இந்த நாவலைப் படிக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு, அடுத்த வேலையை கவனிக்க சென்றுவிட்டேன். அப்புறம் சில மாதங்களில் இந்த நாவலை படித்து முடித்தேன். என்ன சொல்ல, எப்படிச் சொல்ல, என ரொம்ப நாளைக்கு யோசித்தபின் இப்போது எப்படியோ எழுத ஆரம்பித்துவிட்டேன். நல்லது. 

எனக்கு ஒரு சந்தேகம். இந்த நாவலைப் புகழ்ந்து எழுதுபவர்கள் எல்லாம் இந்த நாவலின் மத்தியில், வாவ் மேன் என்று சொல்லிக்கொண்டு இரு கைகளையும் தேய்த்துக் கொண்டு இருப்பார்களோ? யாராவது ஒரு கல்யாணமான பெண் புருஷனைத் தவிர வேறு யாருடன் உறங்கினாள்,- ஆங்கிலத்தில் சொல்வது என்றால், it was kind of interesting to know with whom the lady slept and also got three children, right? தமிழில் இதை எழுதினால் இவ்வளவு தெளிவாக இருக்காது என்பதால்தான் ஆங்கிலம். எல்லாமே கிசுகிசுவில் இருக்கும் ஆர்வம் தவிர வேறில்லை. நம் அனைவரிடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது, அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதுதான். "என் பெயர் ராமசேஷன்" நாவலில் வரும் இந்த வரி "உன் மூக்கு இவ்ளோ ஏன் நீளமா இருக்கு,"  இதுதான் நினைவுக்கு வருகிறது.


27 Apr 2014

சிச்சுப்புறா - அல்கா (தமிழில் - சுகானா)

பதிவர்: கடலூர் சீனு


 சமீபத்தில்  ஒரு  காட்சி  கண்டேன். 2 வயது  அழகான  பெண்குழந்தை. நல்ல சுறுசுறுப்பு, உற்சாகம். கைக்கெட்டும்  உயரத்தில்  இருந்த  எதையும் தாவிப்பற்றி  இழுத்து  கீழே  போட்டு, ஏந்தி  ஆராய்ந்து, தூக்கி எறிந்து, மழலை மொழிந்து, களத்தையே துவம்சம்  செய்துகொண்டிருந்தது. சமையல்  நேரம். அம்மாவால்  அவளை சமாளிக்க  இயலவில்லை. எடுத்தார்  மொபைலை, இயக்கினார்  ஒளிப்பாடல்  துணுக்கு  ஒன்றினை, குழந்தை  ஆவலுடன் வாங்கி, காட்சியில்  விழிகள்  விரிய, உறைந்து  அமர்ந்தது. ரிபீட் மோடில் அப்பாடல் திரும்ப திரும்ப  ஒலிக்க,  சமையல்  முடியும்  வரை,  ''ஜிங்கின மணியில்'' உறைந்து  ஸ்தம்பித்துக்  கிடந்தது குழந்தை.

வேறொரு  இல்லம்,  பாலகன் ஒருவன், சோபா  மீது  ஏறி, சோட்டா  பீம் மாற்றச்  சொல்லி, தொலைகாட்சி  பார்த்துக்கொண்டிருந்த  தந்தையை, பீம் போலவே  எகிறி எகிறி  உதைத்துக்  கொண்டிருந்தான்.

மற்றொரு  சமயம், வேறொரு  மாணவன், பன்னிரண்டாம்  வகுப்பு, அவனது மேன்மைகள்  குறித்து  அவனது  பெற்றோர்களுக்கு  சொல்லிமுடிய  இன்னும் ஒரு ஆயுள்  தேவை.  அவனது  பொழுது  கொல்லி, கணிப்பொறி விளையாட்டு.  முகத்தில்  வெறி  தாண்டவமாட, ஒரு  அரைப் பைத்தியம் போல  மாய உலகின்  எதிரிகளை, சுட்டுத்தள்ளி  புள்ளிகளை அள்ளிக்கொண்டிருந்தான்.

எதிர்காலத்தில்  இலக்கிய வாசிப்பு  எனும்  பண்பாட்டு நிகழ்வு  அஸ்தமிக்கும் எனில்  அதன்  வேர்  இங்குதான்  பதிந்துள்ளது. வாசிப்பு  என்பது  உங்களது சுயம்  போல, உங்களுடன்  அணுக்கமாக  இருந்து, உங்களுடன் வளரவேண்டிய  ஒன்று.  ஒரு  கால்  நூற்றாண்டுக்கு  முன், எந்தக் குழந்தையும்  தன்னை  வாசிப்புடன்  இணைத்துக்  கொள்ள  அனைத்து சாதகமான  சூழலும்  தமிழகத்தில்  நிலவியது.

23 Apr 2014

கோட்பாட்டுக் கலப்பற்ற வாழ்வனுபவங்கள்.- பெருமாள் முருகனின் "சாதியும் நானும்" தொகுப்பு


அண்மையில் ஜெயமோகன் எழுதிய, 'நேருக்கு நேராகப் பேசும்போது'  கட்டுரை படித்தபோது பெருமாள் முருகன் தொகுத்து வெளிவந்த 'சாதியும் நானும்' கட்டுரை நூல் நினைவுக்கு வந்தது. இந்த நூல் பற்றி முதலிலேயே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் ஜெயமோகன் எழுதிய கட்டுரையின் உள்ளடக்கத்தைப் படித்தபின்தான் இதைச் செய்வதற்கான உந்துதல் கிடைத்திருக்கிறது.

'சாதியும் நானும்' தொகுப்பு நூலை ஒரு புதுமையான, துணிச்சலான முயற்சி என்று சொல்லலாம், பெருமாள் முருகனையும் சேர்த்து 32 பேர் தங்கள் சாதியையும் இளவயதிலிருந்து அது தங்கள் வாழ்வில் தங்களை பாதித்த விதத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

பெரும்பாலும் தலித் மற்றும் மிகவும் பின்தங்கிய (சேவை) சாதிகளில் பிறந்தவர்களே கட்டுரையாளர்களில் அதிகம். இவர்களில் நிறைய பேர் கல்வித்துறையில் பணியாற்றுபவர்கள். பெரும்பாலும் 1970களிலும் 80களிலும் பிறந்தவர்கள். 60களில் பிறந்தவர்கள் பெருமாள் முருகனோடு சேர்ந்து மிகச் சிலரே. ஒரே ஒரு பிராமணர்தான் இதில் உண்டு, அதில் ஒன்றும் வியப்பில்லை. மூன்றே மூன்று பெண் கட்டுரையாளர்கள்தான் இந்தத் தொகுப்பில் உள்ளனர் என்பதிலும் வியப்பதற்கு எதுவும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.


The Happiness Hypothesis - Jonathan Haidt


ஜொனாதன் ஹெய்ட் எழுதிய இந்தப் புத்தகம், மனம், அறம், உறவுகள், மகிழ்ச்சி பற்றிய மொத்தம் பத்து பகுதிகளைக் கொண்டது. சமீபத்திய அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளோடு கீழை நாடுகளின் தத்துவங்களையும் எடுத்துக் கொண்டு ஒப்பிட்டிருக்கிறார். சில இடங்களில் இத்தத்துவங்கள் ஆராய்ச்சிகளோடு ஒத்துப்போகின்றன, சில இடங்களில் இல்லை. மொத்தமுள்ள பத்து பகுதிகளில் ஐந்தாவதையும் பத்தாவதையும் பற்றி மட்டும் இங்கே எழுதப்போகிறேன். இந்த புத்தகத்தையும் வைத்து சில வருடங்களுக்கு முன்பு சொல்வனத்தில் நண்பர் எழுதிய விலங்குகளின் அறம் கட்டுரை இங்கே.

நாம் எல்லோருமே மகிழ்ச்சியை நோக்கிப் பயணிப்பவர்கள்; நம்முடைய ஒவ்வொரு செயலும் நமக்கு மேலும் மகிழ்ச்சியைத் தர வேண்டும் என்றே செய்கிறோம். அடைய விரும்புவது ஒன்றே என்றாலும், நம்முடைய பாதைகள் – செயல்கள் வெவ்வேறானவை. நாம் எவ்வளவு வித்தியாசப்பட்டாலும் நம்முடைய அடிப்படை நோக்கம் எப்போதுமே ஒன்றாகத்தான் இருக்கிறது. 

பற்றையும் ஆசைகளையும் விலக்கிவிட்டு நமக்குள்ளே தான் மகிழ்ச்சியைத் தேட வேண்டும், என்கிறார் புத்தர். (ஹெய்ட் புத்தரைப் பற்றிச் சொல்வதை பெளத்தம் படித்தவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே. செல்வச் செழிப்பில் வெளியுலகமே தெரியாமல் வளர்ந்த ஒருவனுக்கு திடீரென்று மரணத்தைப் பார்த்தால் அதிர்ச்சியாகத் தான் இருக்கும், சித்தார்த்தன் தன் தேரை விட்டு இறங்கி, சிலரிடம் பேசியிருந்தால், மரணமும் துக்கமும் சாதாரணமானது என்பதைப் புரிந்து கொண்டிருப்பான் என்கிறார்.) பௌத்தம் மட்டும் என்றில்லை, வேறு மதங்களும் தத்துவவாதிகளும் கூட, மகிழ்ச்சியை ஒருவன் தனக்குள் தான் தேடிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால், லெளகீகத்தில் இருப்பவர்கள் நாம்; பற்றை விட்டுவிடு என்றால்?, நமக்கு எப்படிப் பொருந்தும்? இந்த புத்தகத்தில், மகிழ்ச்சிக்கான ஒரு சமன்பாட்டை விளக்கியிருக்கிறார். அதற்கு முன், மகிழ்ச்சியைப் பற்றிய நமது புரிதல்களையும் உண்மைகளையும் பார்க்கலாம்.

3 Apr 2014

Crime and Punishment - Fyodor Mikhailovich Dostoevsky

பதிவர் : பாலாஜி
"Crime and Punishment,
ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி, பெங்குவின், ரூ. 235

"தலைசிறந்த சிந்தனையாளர்களான வால்டர் பெஞ்சமின், மிகையில் பக்தின் போன்றோரால் மேதை எனப் போற்றப்பட்டு தமிழ் இணைய உலகில் “எலக்ஸ்” என்று அறியப்படும் தாஸ்தாயெவ்ஸ்கியின் மறக்கவியலாத நாவல். இன்று இலக்கிய திரில்லர் என்ற அடைமொழியுடன் பல நாவல்கள் வருவதைப் பார்க்கிறோம். குற்றமும் தண்டனையுமை மிஞ்சிய இலக்கிய திரில்லரை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை (எனது ‘ஒரு லோட்டா இரத்தத்தைத் தவிர). இந்நாவலை ஓர் உளவியல் மர்மக் கதையாகப் படிக்கலாம். வட்டிக்கடை ஆயாவைக் கொல்ல விரிவாகத் திட்டமிடும் இளம் வெட்டி ஆபீசரான ரஸ்லோநிகோவ் (ரஸ்கோல்நிகாவ்) அவளைக் கொன்றானா? அவளையும் அவள் தங்கையையும் அவன் கொன்ற பின்பு போலீஸ் எப்படித் திணறுகிறது? ரஸ்லோநிகோவ் போலீசுக்குத் தன் மீது சந்தேகம் வருமாறு நடந்துகொள்கிறானா? கொலைக் கருவிகளை ஒளித்துவைத்த இடம் குறித்து வலியச் சென்று போலீசுக்குத் தெரியப்படுத்துகிறானா? கடைசியில் எப்படி அவனே போலீசிடம் சரணடைந்து சிறை செல்கிறான்? படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்."

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஒரு இளைஞன், ரோத்யா (ரஸ்லோநிகோவ் என்கிற ரஸ்கோல்நிகாவ்). அவனுக்கு ஒரு அம்மா, ஒரு தங்கை. அம்மாவும் தங்கையும் கஷ்டப்பட்டு இந்த இளைஞன் வக்கீலுக்குப் படிக்க பணம் அனுப்புகிறார்கள். ஆனால் இவன் சூதாடுகிறான். மது அருந்துகிறான். அத்தனை பணத்தையும் செலவழிக்கிறான். கல்லூரி பக்கமே செல்வதில்லை.

இந்த நாவலைப் படிக்கும்போது பழைய தமிழ் படம் பார்த்த மாதிரி இருந்தது. எல்லோருக்கும் கஷ்டம், எல்லோருமே ஏழை, யாருமே சந்தோஷமாக இல்லை.

ஒரு நாள் ரோத்யாவுக்கு அம்மாவிடமிருந்து கடிதம் வருகிறது. அதில் அவனது தங்கை வேலை செய்யும் இடத்தில் தவறாக குற்றம் சாட்டப்பட்டாள் என அம்மா எழுதுகிறார். கூடவே, அதில் இருந்து அவள் எப்படி மீண்டாள் என்றும், அந்த சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு ஒரு பிரபு அவளை மணந்து கொள்ள விரும்புகிறார் என்றும் இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் என்றும் இருக்கிறது. இதைப் படித்தபின் ரோத்யாவின் மனசாட்சி விழித்துக் கொள்கிறது. இந்தப் பிரபுவை மணம் செய்துக் கொண்டு நமக்காக நம் தங்கை தன் வாழ்க்கையை தியாகம் செய்கிறாள், இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என உறுதி கொள்கிறான். இங்கே ஒரு திருப்புமுனை. ரோத்யாவுக்கு ஒரு நண்பன், அவன் நல்லவன், வல்லவன். தன் தங்கைக்கு அவனைத் திருமணம் செய்து வைத்தால் என்ன என்று ரோத்யாவுக்கு ஒரு எண்ணம்.
 
மிகையுணர்ச்சியும், அன்றாட வாழ்வில் நாம் பார்க்க முடியாத ஆகிருதி கொண்ட பாத்திரங்களுமாக அந்த காலத்திலேயே ஒரு நாவலை இவர் எழுதியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதையே நாவல் முழுவதும் கடைபிடிக்கிறார். உம் என்றால் உணர்ச்சிகரமான காட்சி, உர் என்றால் சோகமான காட்சி.



23 Mar 2014

The Graveyard Book, Neil Gaiman

பதிவர் : பாலாஜி

The Graveyard Book
Neil Gaiman
A Novel
நாவல் நன்றி :http://iloveread.in/
இணையத்தில் வாங்க : The Graveyard Book

சிறு வயதில் அம்புலிமாமாவில் வரும் கதைகளை மிகவும் விரும்பிப் படித்ததுண்டு, அதில் வரும் பேய்க் கதைகள் சிறு வயதில் மிகவும் ஆர்வத்தை தூண்டியதுண்டு. அந்த மாதிரி கதைகள் அதற்கு அப்புறம் படிக்க முடியாமல் போய், மிகத் தீவிரமான கதைகள் படிக்க நேர்ந்தது. சில வருடங்கள் முன்பு ஸ்டார்டஸ்ட் என்ற ஃபான்டஸி படம் பார்க்க நேர்ந்தது. அந்த படம் பற்றி மேலும் அறியும் ஆவல் ஏற்பட்டது. அதே பெயர் கொண்ட ஒரு நாவலில் இருந்து படமாக்கப்பட்ட கதை அது. அதை எழுதியவர் நெய்ல் கைமான்.

நேரம் கிடைக்கும்போது இவரைப் பற்றி படிக்க வேண்டும் என்று என் மனதில் நினைத்து வைத்துக் கொண்டேன். சில மாதங்கள் முன்னால் இந்த நாவலை படிக்கக் கிடைத்தது. கைக்கு கிடைக்கும்வரை இந்த நாவலைப் பற்றி சிறிதுகூட அறிந்ததில்லை. முதல் சில பக்கங்களைப் புரட்டியபோது  இது குழந்தைகளுக்கான நாவல் என்று அறிய வந்தபோது சிறிது ஏமாற்றம் இருந்தது என்னவோ உண்மை. ஆனால் முதல் பக்கத்தில் துவங்கி இந்த நாவல் என்னை உள்ளிழுத்துக் கொண்டது.
 

20 Mar 2014

ஏழு தலைமுறைகள் - அலெக்ஸ் ஹேலி

பதிவர் : பிரசன்னா  (@prasannag6)

கருப்பென்றால் தாழ்ச்சி, அசிங்கம், கருப்பர்களுக்கு எதுவும் தெரியாது, காட்டுமிராண்டிகள் போன்ற கருதுகோள்கள் நம்மிடையே வெகு பிரபலம். இத்தகைய கருத்துக்கள் எப்படி உருவாகின, யார் உருவாக்கியது, ஏன் அவை வெள்ளையர்களுக்கு மிக முக்கியமாக இருந்தன? கருப்பர்களை வெறும் உடைமையாக, செருப்பு பழசாகிடுச்சு, தூக்கி போட்டுட்டு வேற வாங்கணும் என்பது மாதிரி மட்டும் எப்படி அவர்களால் கருத முடிந்தது?  அவர்களின் உழைப்பை முழுக்க சுரண்டி தன்னை வளர்த்துக்கொண்ட வெள்ளையர்கள் எத்தனை பேர்? அவர்களின் உழைப்பில் அமெரிக்காவே வளர்ந்தது!

இப்படி முற்றிலும் அநியாயமான, மனசாட்சிக்கு விரோதமான ஒன்றை நடத்த ஒரு பெரும் தர்க்கம் வெள்ளையர்களுக்கு தேவைப்பட்டது. எப்படி மத/சாதிக்கலவரங்களில் கொலை, கற்பழிப்பு போன்றவற்றை 'ஆமா, அவனுங்கள இப்படி செஞ்சாத்தான் அடங்குவாங்க' என்று சொல்லி நம்மையே திருப்திபடுத்திக்கொள்கிறோமோ, அது மாதிரி.. அந்த நியாயம்தான் முதல் பத்தியில் சொல்லப்பட்ட கருதுகோள்கள். 'அவர்களுக்கு ஒன்னும் தெரியாது, மிருகங்கள். நாம்தான் வாழ்க்கை தந்தாக வேண்டும்' என்பது மாதிரி. ஆனால் அவர்களின் வாழ்வு எத்தகையது? எப்படிப்பட்ட மண்ணில் இருந்து அவர்களை பிடுங்கி வேறு இடத்தில் நட்டார்கள்?


12 Mar 2014

Jed Rubenfeld – Interpretation of a Murder



ஜெட் ரூபன்ஃபெல்ட் எழுதிய இந்த நாவலின் அடிப்படைக் கருத்து சுவையானது. உளப்பகுப்பாய்வுத்துறையில் புதிய திறப்புகளையளித்து அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பிரபலமடைந்து வரும் சிக்மண்ட் ப்ராய்ட் தன் சகாக்கள் கார்ல் யூங் மற்றும் பலருடன் ந்யூ யார்க் வருகிறார். அவர் அமெரிக்க மண்ணில் கால் வைக்கும் நாளில், பணக்கார அபார்ட்மென்ட் ஒன்றின் பெண்ட்ஹவுஸில் ஒரு இளம் நடிகை கட்டி வைத்து அடித்துக் கொல்லப்படுகிறார். இந்தக் கொலை குறித்து விசாரிக்கும்படி ந்யூ யார்க் நகர மேயர் கொரோனரிடம் கேட்டுக் கொள்கிறார். அடுத்த நாள், நோரா ஆக்டன் என்ற இன்னொரு பெண்ணும் அதே போல் கட்டி வைத்து கடுமையாக தாக்கப்படுகிறாள். கொலைகாரன் அவள் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சிக்கும்போது அவள் பெருங்குரலெடுத்து அலறுகிறாள். இதனால் பதட்டமடைந்து அவளை அப்படியே விட்டுவிட்டுத் தப்பியோடி விடுகிறான் கொலைகாரன்.




26 Feb 2014

மாதொருபாகன் - பெருமாள் முருகன்

பதிவர் : Paval MV (@paval)


பொன்னாளை கல்யாணம் கட்டிய புதிதில், மொட்டையாக மரங்கள் எதுவுமின்றி இருந்த தன் மாமனார் வீட்டு வாசக்களத்தில், ஒரு பூவரசங்கொம்பை கொண்டு நட்டுவைத்த காளி, இந்த பன்னிரெண்டு வருடத்தில் அது வளர்ந்து, கிளைபடர்ந்து, நிழல்பரப்பி, பூச்செறிந்து நிற்பதை, அதன்கீழ் போட்ட ஒரு கயிற்றுக்கட்டிலில்  படுத்தபடி தனிமையில் ரசித்துக்கொண்டிருப்பதாக ஆரம்பிக்கும் அந்த முதல் அத்தியாயத்திலேயே நாவலின் கதை தொடங்கிவிடுகிறது.


23 Feb 2014

அசீஸ் பே சம்பவம் - அய்ஃபர் டுன்ஷ்

சிறப்பு பதிவு- கடலூர் சீனு 

கொண்ட கலைக்கும், அதன் கலைஞர்களுக்குமான உறவை, அதன் முரண் இயக்கங்களை  கருப்பொருளாக கொண்ட கதைகள் என்றுமே முக்கிய எழுத்தாளர்களின்  அகம் குவியும் களம்.


தமிழில் உடனடியாக  நினைவில் எழுவது இரு துருவங்களின் பிரதிநிதியாக, அசோகமித்திரனின் புலிக் கலைஞன் மற்றும் ஜெயமோகனின் லங்கா தகனம். இன்றைய உலக இலக்கிய வரிசையில்  இக் கருப்பொருளுடன், மனித அக விசித்திரங்களின், புரிந்துகொள்ள இயலா மர்ம இயல்புகளின், கலை வெளிப்பாடாக வெளிவந்திருக்கும், சித்தரிப்பின் செறிவும், உணர்சிகரத்தின் ஆழமும் கூடிய துருக்கிதேச குறுநாவல் 'அஸீஸ் பே சம்பவம் '.

6 Feb 2014

பெத்ரு பாராமொ - வொன் ரூல்ஃபோ





வொன் ரூல்ஃபோவின் உலகப் புகழ்பெற்ற 'பெத்ரு பாராமொ' நினைவுகளின் புத்தகம். அதன் துவக்கத்தில், மரணப்படுக்கையில் இருக்கும் தொலோரெஸ் என்ற பெண், தன் மகன் வொன்னிடம் கொமாலா என்ற ஊருக்குச் சென்று அவன் தன் தந்தை பெத்ரு பாராமொவைச் சந்திக்க வேண்டுமென்று சொல்கிறாள். வொன் தன் பயணத்தைத் துவக்கி, வெறிச்சோடிக் கிடக்கும் கொமாலா சென்று சேர்கிறான். வாழ்பவர்கள், இறந்தவர்கள் என்று இருவகைப்பட்ட பலரின் நினைவுகளைக் கொண்டும் தன் தந்தையை அறிந்து கொள்கிறான்.

இந்த நாவல் விவாதிக்கும் பெரிய விஷயங்களைப் பேசுவதற்குமுன் இந்த நாவலின் நடையைப் பேசுவது பொருத்தமாக இருக்கும். மாய யதார்த்தத்தின் போக்கைத் தீர்மானித்த முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் ரூல்ஃபோ என்று சொல்லப்படுகிறது. இந்த நூலில் அருமையான முறையில் மாய யதார்த்த பாணி கதைசொல்லலை நிகழ்த்தியிருக்கிறார் இவர். பெத்ரு பாராமொ என்ற மனிதனின் முழுக்கதையும் துண்டுத் துணுக்குகளாக, காலக்கணக்கு கலைக்கப்பட்ட வரிசையில் சொல்லப்படுகிறது. ஏதோ நாம் இருளில் இருப்பது போலவும் நாமிருக்கும் அறையின் சுவற்றில் ஒரு அழகிய ஓவியம் இருப்பதைப் பார்ப்பது போலவும் ஒரு அனுபவத்தை இந்தக் கதை தருகிறது. அறையில் ஒரு ஜன்னல் திறந்து கொள்கிறது. ஒளிக்கீற்று ஒன்று ஓவியத்தின் ஒரு பகுதியை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அந்த ஜன்னல் மூடிக் கொள்கிறது, வேறொன்று திறக்கிறது. இப்போது ஓவியத்தின் வேறொரு பகுதி வெளிச்சமிடப்படுகிறது. ஓவியம் அதன் முழுமையான வடிவில் மெல்ல மெல்ல நம் மனக்கண்ணில் துலக்கம் பெறத் துவங்குகிறது.

27 Jan 2014

நான் மலாலா - மலாலா யூசுப்சாயின் வாழ்க்கை சரித்திரம்

மேற்கத்திய ஊடகங்களின் செல்லப்பிள்ளையாக உலகெங்கும் அவர் கொண்டாடப்பட்ட காலத்தில், என் முன் நிறுத்தப்பட்ட பிம்பம் ஒன்றும் அத்தனை உவப்பானதாக இல்லை. குழந்தைகளின் இளமையையும் துடுக்குத்தனத்தையும் களவாடி வாழ்க்கை வணிகத்திற்கு தேவையான சரக்கு மூட்டைகளை முதுகில் ஏற்றி முதிரா இளம் பருவத்திலேயே போட்டிக் களத்தில் இறக்கி ஓடவிட்டு ஆராதிக்கும் அன்னையர்களும் தந்தையர்களும் நிறைந்த சமூகத்தில் பலிகடா ஆவதென்னவோ குழந்தைகள்தான். தம் பிள்ளைகள் பிறவி மேதைகள் என்று நம்பும் உரிமை ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டுதான் எனினும், பெரும்பாலும் அவர்களுடைய நியாயமற்ற எதிர்பார்ப்புகளின், கனவுகளின் சுமையில் மழலை மேதைகள் தங்கள் சுயத்தை கண்டறிவதற்கு முன்னரே போலியான பாவனைகளில் தங்களை இழந்து சுவடின்றி மறையும் நிகழ்வுகள்தான் இங்கு மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. மலாலாவும் அரசியல் காரணங்களுக்காக அப்படி ஊதிப்பெருக்கபட்ட பிம்பம் என்றொரு மனப்பதிவு எனக்கிருந்தது. அவர் பங்குகொண்ட ஒரு உரையாடல் நிகழ்ச்சி அந்த மனப்பதிவை மறுபரிசீலனை செய்ய வைத்தது. அதன் பின்னர்தான் சென்றாண்டு வெளியான அவருடைய சுயசரிதையை வாசிக்கத் தொடங்கினேன். 


Related Posts Plugin for WordPress, Blogger...