A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label ஹென்னிங் மான்கெல். Show all posts
Showing posts with label ஹென்னிங் மான்கெல். Show all posts

31 Jan 2013

Henning Mankell - Faceless Killers

எடை கூடிக் கிழப் பருவம் எய்தியது போன்ற சோர்வுடையவர், சர்க்கரை வியாதியும் உண்டு, சிதறிய குடும்பத்தின் முற்காலத்து குடும்பத் தலைவர், அறியாத ஒரு கணத்தில் பனை முறிந்தது போல காரணமற்று உறவு முறிந்த மகளின் நினைவில் வாழ்பவர், தனது இருப்பை மறந்து நினைவுச் சிதறிய தந்தையை வாரம் ஒரு முறை சந்திப்பவர், அலுவலகத்திலும் பெயரற்றவர், அலுவலக காரியங்களுக்காக வேண்டி தவம் இருந்து பணத்தைப் பெறுபவர், வாங்கும் சம்பளம் போதாவிட்டாலும் எஞ்சும் பணத்தில் குடிப்பவர், விவாகாரத்தானது மட்டுமல்லாது புது பெண் உறவுகளையும் பேணத் தெரியாதவர் - இதைப் படிக்கும்போதே நமக்கு கெட்ட ஆவி - அதான் கொட்டாவி வருகிறதே! இப்படி ஒரு பாத்திரத்தை நாவல் முழுவதும் வைத்திருந்தால் எத்தனை எரிச்சலாக இருக்கும்? அதுவே ஒரு துப்பறியும் இன்ஸ்பெக்டராக அவர் இருந்தால் புத்தகத்தை வாங்குவோமா என்ன?

வெல்கம் டு இன்ஸ்பெக்டர் வலாண்டர் சீரிஸ்!

இவர் பெயர் தாங்கிய புத்தகங்களை ஐரோப்பிய கடைகளில் பார்த்திருக்கிறேனே தவிர படிக்கும் எண்ணம் சுத்தமாக இருந்ததில்லை. குற்றப் புனைவு நூல்களைப் படிப்பதில் பெரிய ஒவ்வாமை இருந்தது. கல்லூரி நாட்களில் படித்த அலிஸ்டர் மேக்லின், மைக்கேல் கிரைடன் போன்றவர்களின் சாகசக் கதைகள் படிக்கும் ஆர்வம் இருந்தாலும், குற்றப் புனைவு படிப்பதில் ரொம்பவும் தயக்கம் இருந்தது. ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் பலதைப் படித்திருக்கிறேன். அதில் ஷெர்லாக் ஒரு புத்திசாலி, குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் அவருக்கு இருக்கும் attention to detail வேறு யாருக்கும் இல்லை எனும்படியான சாகச நாயகன் பிம்பத்தை ஒரு எல்லைக்கு மேல் ரசிக்க முடியவில்லை. குற்றங்கள் மிக மெத்தனமாகக் கையாளப்படுவதை தினசரி செய்திகளில் படிக்கிறோம். மிகக் கைதேர்ந்த இன்ஸ்பெக்டர்/உளவாளிக்குக் கூட எல்லாமே கை மேல் கிடைத்துவிடுவதில்லை. சாகச மனநிலையில் படிக்கும்போது இருக்கும் சுவாரஸ்யம், படித்தபின் காணாமல் போய்விடுகிறது. இதெல்லாவற்றுக்கும் மேலாக, ஜேம்ஸ் பாண்ட் கதைகளில் வருவது கற்பனையிலும் சாத்தியமாகாத ஒன்று. கணக்கில்லா சாத்தியங்களில் பணமும், அதிகாரமும், நாடு விட்டு நாடு செல்லும் அனுமதியும், எக்கணமும் கைக்குக் கிடைக்கும் ஆயுதங்களும், அணுவைப் பிளந்து ஏழ் கடலைப் புகுத்தி அதில் காதலியுடன் உல்லாசப் படகில் செல்லும் வசதிகளும் எல்லா இன்ஸ்பெக்டர்/உளவாளிகளுக்குக் கிடைத்துவிடுவதில்லை.

அப்படி ராசியில்லாத ஒரு யதார்த்தமான இன்ஸ்பெக்டர் நம் வலாண்டர்.
 
 


Related Posts Plugin for WordPress, Blogger...