A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

28 Aug 2014

பாரீஸுக்குப் போ! – ஜெயகாந்தன்.


ஜெயகாந்தன் எழுதிய இந்த தொடர்கதை 1965 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. அதனால்தானோ என்னமோ கதையும் எல்லா திசைகளிலும் சிதறிச் செல்கிறது. பாதிக்கு மேல் காதல் கதை பாணியில் ஓர் ஒருமை கூடிவிடுவது என்னமோ நிஜம்தான் என்றாலும் நாவலாக இதைக் கருதமுடியாது. கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்குப் பிறகு இதை மீள்பார்வை பார்க்க வேண்டிய அவசியம்தான் என்ன? சாதுர்யமான கதைசொல்லல் என்பதாலா? அல்லது அவரது தனிப்பார்வைகள் அக்காலத்தில் புரட்சிகரமானவை என்பதாலா?  பழமைவாதத்தை மீறி புது உலகைச் சந்திக்கத் துடிக்கும் காலகட்டத்தைச் சேர்ந்த படைப்பு என்பதனால் இது முக்கியமாகிறது.

சுதந்தரம் கிடைப்பதற்காக தன் மண்ணுக்குரிய விழுமியங்களைப் பற்றிக்கொண்டிருந்த சமூகம் கிடைத்த விடுதலையைத் தொடர்ந்து தனது அடுத்த அடியை எப்பக்கம் வைப்பது என்ற தீர்மானமின்றி நின்றுகொண்டிருந்த தருணம். அழகியல் வகைப்பாட்டுக்காக அதை நவீனத்துவம் எனக் குறிப்பிடலாம். மிக முக்கியமான இந்த காலகட்டத்தை சரியானபடி திசைகாட்டும் சுய சிந்தனையாளர்கள் அரிதாகவே இருந்ததால், மேற்குலகை நகல் செய்யும் ‘வெஸ்டர்ன்’ சமூகம்தான் நவீனம் என சுலபமான பாதையைப் பலரும் எடுத்துக்கொண்டதாகத் தெரிகிறது. விஞ்ஞானம், சுயதொழில்கள், விவசாயம், கலை வெளிப்பாடு என சகலமும் இப்பாதையை எடுத்துக்கொண்டது எனலாம். அதாவது நூற்றாண்டுகளாக செழித்த சமூகத்தை வேரிலிருந்து மேல் நோக்கி பராமரிக்கத் தெரிந்த அறிவை உதாசீனம் செய்து நூறு ஆண்டுகள் மட்டுமே பழமையான அறிவை கேள்வி கேட்காமல் பலன் சார்ந்து உபயோகிக்கிறோம்.  ஸ்லோகங்களில் வரும் பலஸ்ருதிகூட சில பாடல்கள்தான் வரும், ஆனால் நமது அறிவு தேடல் முழுமையும் பலன் சார்ந்ததாக மாறியது.



25 Aug 2014

Immortals of Meluha - அமிஷ் த்ரிபாதி

                                                    சிறப்புப் பதிவர்: ஷாந்தி

நானாக புத்தகங்களை தேர்ந்தெடுக்காத ஆரம்ப காலங்களில் எனக்கு வாசிக்க கிடைத்தவை பெரும்பாலும் பெஸ்ட் செல்லர்ஸ் எனப்படும் "விற்று தீரும்" புத்தகங்கள்தான்.  

புதினங்கள், கற்பனை, மாயக்கதைகள், தன்முனைப்பு, சுயசரிதை என எல்லா பிரிவிலும் பெஸ்ட் ஸெல்லர் புத்தகங்கள் படிக்க கிடைத்தன. ஓரளவு வாசிப்பு மற்றும் இணையத்தில் புத்தக அறிமுகங்கள், குறை/     நிறை விமர்சனங்கள் படித்து புத்தகங்களை தேர்ந்தெடுக்க ஆரம்பித்த பிறகுதான் சிறந்த புத்தகங்களுக்கும் சிறப்பாக விற்பனையாகும் புத்தகங்களுக்கும் உள்ள வேறுபாடு புரிந்தது. 

அமிஷ் த்ரிபாதி எழுதிய "Immortals of Meluha" படிக்க எடுத்தபோது பெஸ்ட் செல்லர் அடைமொழியைத் தாண்டி Shiva trilogy என்ற குறிப்பே படிக்கத் தூண்டியது. புராண- இதிகாச கதைகள் அதிகம் தெரியாததால் இப்படியாவது தெரிந்துகொள்ளலாம் என்ற ஆர்வமே காரணம். ஆனாலும் கதைக்களம் புரியாமல் போகுமோ என்ற பயமும் இருக்கவே செய்தது.

22 Aug 2014

Neverwhere - Neil Gaiman

பதிவர்: பாலாஜி

Source: io9.com
                                               
தமிழில் குழந்தைகளுக்கான மாய மந்திர கதைகள் நிறைய உள்ளன. இவை இன்றும்கூட முக்கால்வாசி சமயங்களில் வெறும் நீதி போதனை கதைகளாகவும், மகிழ்ச்சிகரமான முடிவை நோக்கியே செல்லும் கதைகளாகவும் இருக்கின்றன என்பதுதான் வருத்தமான விஷயம்.

நெய்ல் கைமான் குழந்தைகளுக்காக எழுதிய "The Graveyard Book" இந்த வகை புத்தகங்களில் இருந்து பெரிதும் மாறுபட்டு உள்ளது. அது நெகிழ்ச்சியான முடிவை நோக்கி இழுத்துச் சென்றாலும், மிகையான கற்பனை உலகு ஒன்றை நமக்குக் காட்டினாலும், வாசகரை அதில் ஊன்றி படிக்க வைப்பதில் வெற்றி பெறுகிறது.

குழந்தைகளுக்கான கைமானின் இன்னொரு புத்தகம் Neverwhere.  பிபிசி தொலைகாட்சியில் நெடுந்தொடராக வந்த இதை பின்னர் நாவலாக எழுதியிருக்கிறார். இது கொஞ்சம் பெரியவர்களுக்கான ஒரு இருண்ட- மிகைகற்பனைக் கதை என்று சொல்லலாம். இப்படி தமிழில் தம் கட்டிச் சொல்லும்போது, மிரட்டல் இலக்கிய வகைமையைச் சேர்ந்த புத்தம் புதிய செவ்வியல் நாவல் மாதிரி இருக்கிறது, ஆனால் அப்படியெல்லாம் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆங்கிலத்தில், "Dark Fantasy" நாவல் என்று சொன்னால், கொடு புத்தகத்தை என்று கேட்பீர்கள். இதைப் படிக்கும்போதோ, படித்து முடிக்கும்பொழுதோ இப்படி எல்லாம் நடக்குமா என்று கேள்வி கேட்காமல் இருந்தால் இந்த நாவல் மிகவும் ரசிக்கலாம்.


19 Aug 2014

திரைக்கு அப்பால் - எஸ் எல் பைரப்பாவின் ஆவரண


வரலாற்றுக்கு நோக்கம் இருக்கிறதா என்று நமக்கு தெரியாது. அது எங்கு, எதை நோக்கிப் போகிறது என்பதும் நாம் ஒரு போதும் அறிய முடியாதது. ஆனால் வரலாற்றைப் படிப்பதற்கும் வரலாற்றை நிறுவுவதற்கும் ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும். அது என்னவாக இருக்க முடியும்? இதுதான் முதுபெரும் கன்னட எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா  நம்முன் வைக்கும் கேள்வி. இந்த கேள்விக்கான விடையைத் தேடும் முயற்சியே இந்த நாவல் என்று பைரப்பா  கூறுகிறார்- 2010ல் வெளிவந்து, 5 மாதங்களிலேயே 17 பதிப்புகளைக் கண்டு சாதனை படைத்தது ஆவரண எனும் இந்த கன்னட நாவல். 

பைரப்பா ஏறக்குறைய தன் 80வது வயதில் எழுதிய இந்நாவலின் பெயர் வேதாந்தத்தில் மாயையின் மறைத்தல் ஆற்றலான ஆவரண சக்தியைச் சுட்டுகிறது. வெளிவந்தவுடன் மிகத் தீவிரமான சர்ச்சைகளை எழுப்பிய இந்நாவல், கன்னட இலக்கிய உலகின் இரு துருவங்களான பைரப்பா மற்றும் அனந்தமூர்த்தி இருவருக்கும் இடையே பல பத்தாண்டுகளாகத் தொடரும் கொள்கை பனிப்போரின் ஒரு புது அத்தியாயம் என்றும் கூறலாம்.

பைரப்பாவின் பருவம் மற்றும் வம்சவ்ருக்ஷா ஆகிய நாவல்களைப் படித்திருக்கிறேன். அவற்றில் பைரப்பாவைப் பற்றிக் கிடைத்த சித்திரத்திலிருந்து முற்றிலும் வேறானதொரு சித்திரம் ஆவரணவில் கிடைக்கிறது. பருவம் மகாபாரதத்தின் மாயமறுத்து அதைச் சாதாரண, யதார்த்த தளத்தில் அணுகிய நாவல். வம்சவ்ருக்ஷா ஹிந்து சமூகத்தின் ஆழமான புண் போல ஆகிவிட்ட சாதியமைப்பை கேள்விக்குள்ளாக்கும் நாவல். இந்த இரண்டு நாவல்களும் பைரப்பாவை நிச்சயமாக ஒரு இந்துத்துவராகக் காட்டுவதில்லை. ஆனால் இப்போது ஆவரண அவரை முழுக்க முழுக்க ஒரு இந்துத்துவவாதியாக வெளிப்படுத்துகிறது என்றே அவரது விமர்சகர்களால் குற்றம் சாட்டப்பட இடம் கொடுக்கிறது.

அப்படி என்னதான் உள்ளது இந்த நாவலில்? உண்மையிலேயே மிக மிக சர்ச்சைக்குரிய ஒரு விஷயத்தையே சம்பிரதாய அரசியல் சரிநிலைகளை மீறி கையாண்டு இருக்கிறார் பைரப்பா. திப்பு சுல்தான், ஔரங்கசீப் போன்ற இஸ்லாமிய மன்னர்களின் வரலாற்றுப் பாத்திரங்கள்தான் என்ன? அவர்கள் முழுக்க முழுக்க மதவெறியர்களா அல்லது வேறு சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்வது போல் அவ்வப்போதைய அரசியல் சூழ்நீலைகளைக் கருத்தில் கொண்டு எடுத்த நடவடிக்கைகளால் மதச்சாயம் பூசப்படுபவர்களா? இது போன்ற வரலாறு சம்பந்தமான கேள்விகள் ஒரு புறமும் தற்கால வாழ்வில் இந்து இஸ்லாம் மதத்தினருக்கிடையே உள்ள உறவையும், மதம் தாண்டிய திருமணங்கள் தனிமனிதர்கள்மீது ஏற்படுத்தும்  பாதிப்பையும் மறுபுறம் வைத்துப் புனையப்பட்டதே ஆவரண, அதாவது திரை.


Related Posts Plugin for WordPress, Blogger...