A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

31 Mar 2013

இறுதிக் கோட்பாடு பற்றிய கனவு – ஸ்டீவன் வைன்பர்க்

சிறப்புப் பதிவர்: ரவி நடராஜன்




சாதாரணமாய் வாழ்க்கையில் நாம் அவ்வப்பொழுது கேட்பது, “அவருடைய அப்பாவின் கனவை நிறைவேற்றி, வெற்றி பெற்று விட்டார். எத்தனை பேருக்கு இப்படி வாய்க்கும்?” – என்பது போன்ற வாக்குமூலங்கள். தனி மனிதக் கனவுகள் சிலருக்கு, தங்கள் வாழ்நாளில் நனவாகின்றன. சிலருக்கு, பல தலைமுறைகளுக்குப் பிறகே நனவாகின்றன. பலருக்கும் அவை கனவாகவே இருந்துவிடுகின்றன. நாம் இங்கு பார்க்கவிருப்பது, பெளதிகத் துறையின் நிறைவேறாத கனவு பற்றிய ஒரு அருமையான புத்தகம்.


அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் பௌதிக இயக்கங்கள் அனைத்தும், நியூட்டன் என்ற 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலேய பெளதிக கோட்பாட்டாளர் உருவாக்கிய இயக்க கோட்பாட்டின்படியே (Newton Laws of Mechanics) இயங்குகின்றன. பெரிதளவில், இயந்திரவியலின் (mechanical engineering) அடிப்படையும் இதுவே. இதன் பிறகு, ஒரு 150 ஆண்டுகள்,  பெளதிகமும், வேதியலும் வெவ்வேறு பாதைகளில் முன்னேறி வந்தன. 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், அணு ஆராய்ச்சி இத்துறைகளின் அடிப்படைக் கொள்கைகள் ஒன்றே என்பதைத் தெளிவாக்கியது. இன்று, அணு வேதியலில் (nuclear chemistry) ஏராளமான அணு பெளதிகம் அடங்கியிருப்பதை எல்லோரும் படிக்கிறோம். 


30 Mar 2013

இருட்டு - எம். வி. வெங்கட்ராம்

எம். வி. வெங்கட்ராம் எழுதிய 'இருட்டு' நாவலின் முதல் பத்தி தமிழிலக்கிய வரலாற்றின் மிக முக்கியமான பத்திகளில் ஒன்று. நாவல்களின் சிறந்த துவக்கப் பத்திகள் என்று யாராவது தொகை நூல் வெளியிட்டால் அதில் இதற்கு நிச்சயம் ஒரு இடமுண்டு.

"குளிர் தாங்க முடியாதபடி இருந்தது. அடர்த்தியான பனியை அள்ளி வந்த காற்று, காரைக் கீழே தள்ள முயன்று முடியாததாலோ என்னவோ, எங்கள் மீது முழு வேகத்துடன் பாய்ந்தது. என் கை கால்கள், ஏன், உடம்பு முழுவதுமே விறைத்துக் கொண்டிருந்தது. நரம்புகள் தெரிக்க விரும்புகிறவை போல் புடைத்துக் கொண்டன; எலும்புகள்கூட மரத்தன. அந்தக் குளிர், நெருப்பு போல் சுட்டது."

"சென்னையிலிருந்து கும்பகோணத்துக்கு திரும்பிக் கொண்டு இருந்தது அந்த டாக்ஸி," என்ற அடுத்த பத்தியின் முதல் வாக்கியத்திலேயே ஏமாற்றமாகி விடுகிறது. இந்தப் பயணம் லெனின்கிராடிலிருந்து மாஸ்கோவுக்கு இருக்கக் கூடாதா! - 'என்ன பனி அது, இரண்டு அடியில் நிற்கிற ஆள்கூடக் கண்ணுக்குத் தெரியாதபடி! ஆகாசத்துக்கும் பூமிக்கும் சேர்த்து திரையிட்டதுபோல் கொட்டியது. விண்மீன்களும் களையிழந்து நடுங்கிக் கொண்டிருந்தன..."

 


29 Mar 2013

ஏசுவின் தோழர்கள் - இந்திரா பார்த்தசாரதி


ஏசுவின் தோழர்கள்
ஆசிரியர்: இந்திரா பார்த்தசாரதி
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 231
விலை: ரூ.90

ஐரோப்பிய யூனியனில் இருக்கும் நாடு - போலந்து. இரண்டாவது உலகப் போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்நாட்டை ஜெர்மனி, ரஷ்யா இரு நாடுகளும் ஆக்ரமித்துக் கொண்டன. பின்னர், சோவியத் யூனியனின் கீழ் ’மக்கள் குடியரசாக’ இருந்த இந்த நாடு, உலக சரித்திரத்திலேயே கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு எதிராக புரட்சி செய்த நாடாகும். 1989ல் கம்பூனிஸ்ட் அரசு தூக்கியெறியப்பட்டு ஜனநாயக ஆட்சி நிறுவப்பட்டது. இந்த புரட்சி உச்சகட்டத்தில் இருந்த 1981-86 காலத்தில் இ.பா, போலந்தின் தலைநகராகிய வார்ஸாவில், பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவர் கண்ட மக்கள் / நாட்டின் பிரச்னைகள், நண்பர்கள், அவர்களின் கதை ஆகியவற்றை ஒரு அழகிய நாவலாக எழுதியுள்ளார். 

28 Mar 2013

எட்டுத் திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்




இந்திய தொன்மத்தில், இந்த உலகை எட்டு யானைகள் திசைக்கு ஒன்றாக சுமந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் இவை தான் அந்த எட்டு யானைகள். இவற்றுக்கு மதம் பிடித்தால்? இவை சுமந்து கொண்டிருக்கும் பூமிக்கு என்னவாகும்? 

இந்தக் நாவலை வாசிக்க வேண்டுமென்று தூண்டியது அதன் பெயர் தான். ஆனால், நாஞ்சிலாரின் மற்ற படைப்புகள் போல (அதாவது தலைகீழ் விகிதங்கள், மற்ற சிறுகதைகள் போல) இது என்னைக் கவரவில்லை. ஒருவேளை, பரபரப்பாக ஆரம்பிக்கும் கதை, அதன் முடிவை அடையும் போது அங்கே இங்கே சுற்றிவிட்டு வருவதாலோ என்னவோ. தனித்தனியாக எடுத்துப் பார்க்கும் போது நிறைய அருமையான விஷயங்களை சொல்லிச் சென்றிருக்கிறார். சமூகத்தின் மீதான விமர்சனங்கள் வரும் இடங்கள் - விகடனில் அவரெழுதிய தீதும் நன்றும்-ஐ நினைவுபடுத்துகின்றன.

ஒரு பொய்யான குற்றச்சாட்டு; அதற்கு ஒரு விபரீத தண்டனை. இங்கே அடிபட்டவன் இரண்டு விஷயங்களைத் தேர்ந்தெடுக்கலாம். பொறுமையாக இருந்து தான் நிரபராதி என்று நிரூபிக்கலாம். அல்லது தன்னை தண்டித்தவர்களுக்கு பாடம் புகட்ட புறப்படலாம். இவற்றில், இரண்டாவதைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குற்றமாக செய்து கொண்டு, அவற்றிலிருந்து தப்பிக்க ஓடிக் கொண்டேயிருக்கும் ஒருவனுடைய கதை தான் ‘எட்டுத் திக்கும் மதயானை’. கடைசியில் பகை முளைத்த இடத்திலேயே அன்பும் பூக்கிறது. நாஞ்சிலாரின் தலைகீழ் விகிதங்களாகட்டும் எட்டுத் திக்கும் மதயானையாகட்டும், கதை முடிவுகளை இவ்வளவு விளக்கமாகச் சொல்லியிருக்க வேண்டாம் என்று தோன்றவைக்கிறது. அவற்றை குறிப்பால் மட்டுமே கூட உணர்த்தியிருக்க முடியும்.

27 Mar 2013

கிழவனும் கடலும் – எர்னெஸ்ட் ஹெமிங்வே



“என்னால் அதை ஒன்றும் செய்துவிட முடியாது. அதுவும் என்னை எதுவும் செய்துவிடாது என்று நினைக்கிறேன், இப்படியே போய்க்கொண்டிருந்தால்.’
- எர்னெஸ்ட் ஹெமிங்வே (கிழவனும் கடலும்)


ஆம்னிபஸ் நண்பர்களுக்குள் அவ்வப்போது முளைக்கும் சில விவாதங்கள் சுவாரசியமானவை. ஒரு நண்பர் வுட்ஹவுஸ் சந்தித்த அவருடைய ஆதர்ச எழுத்தாளர்களை பற்றி கேட்டுக்கொண்டிருந்த போது ஹெமிங்வே பற்றிய பேச்சு வந்தது. “தேவைக்கு அதிகமா ஒரு வார்த்தை இருக்காது என்பதுதான் இவரிடம் விசேஷம். பெரும்பாலும் மாறி மாறி பேசிக்கொள்வதுதான் கதை. ஆனால், வர்ணனைகள் இருக்கும் இடங்கள் பிரமாதமா இருக்கும். அழகா எழுதத் தெரியாதவரல்ல. நீட்டி முழக்கி கதை சொல்வதைப் பெண்மைன்னு நினைச்சார். எல்லாத்திலும் ஆண்மைதான் வேண்டும் - வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு சொல்றது ஆண்மை. Macho  என்பதை வழிபட்டவர்.  எழுத்துன்னா வீர்யமா இருக்கணும்.” என்று ஹெமிங்வேயின் எழுது முறை பற்றி மற்றொரு நண்பர் விவரித்தார். ஹெமிங்வேயை வாசிக்க கிழவனும் கடலும் மிகசரியான தொடக்கம் என்றார்..


   

26 Mar 2013

எஸ் ராமகிருஷ்ணனின் 'வாசக பர்வம்' - அழகியலின் ஆதர்ச பிம்பங்கள்

எழுத்துக்களைப் போலவே எழுத்தாளர்களும் முக்கியமானவர்கள். எழுத்து எழுத்தாளனின் ஒரு தோற்றம் மட்டுமே என்றுகூடச் சொல்லலாம். ஆகவேதான்  உலகமெங்கும் எப்படி இலக்கியம் பேசப்படுகிறதோ அப்படி இலக்கியவாதிகளின் வாழ்க்கையும் பேசப்படுகிறது. பெரும்பாலும் அவற்றை பிற எழுத்தாளர்கள்தான் எழுதியிருக்கிறார்கள். தமிழின் முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்தக் குறிப்புகள் தமிழிலக்கியம் என்ற அமைப்பின் சென்ற அரை நூற்றாண்டு சலனத்தை மட்டுமல்ல… தமிழ் அறிவுலகின் அலைகளையும் காட்டக்கூடியவை.
- 2012 சிறந்த பத்து புத்தகங்கள், ஜெயமோகன்
எஸ் ராமகிருஷ்ணனின் 'வாசக பர்வம்' கட்டுரை தொகுப்பின் முன்னட்டையில் மஞ்சள் ஆடை அணிந்த ஒரு மேலை நாட்டு இளமங்கை, தான் தன் இடக்கையில் ஏந்தியிருக்கும் கையடக்கப் பிரதி ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கிறாள். மணிக்கட்டு வரை நீண்டிருக்கும் அவளது சட்டையின் கைகளும் அவற்றின் நுனியில் விரியும் சிறகுகள் போன்ற அலங்காரத் தையலும், வெண்பஞ்சு குஷன் போல் அவளது தலையைத் தாங்கும் அந்த கவுனின் வேலைப்பாடும், மார்ப்பகுதியில் பூத்திருக்கும் மலர் போன்ற ரிப்பன் மடிப்புகளும் இந்தப் பருவப்பெண் பதினெட்டு அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவளாக இருக்கலாம் என்று சந்தேகிக்க வைக்கிறது. அவளது கவிந்த முகத்தின் கண்கள் புத்தகத்தை உற்று நோக்குவதாய் தெரிந்தாலும், அவளது நேர் நிமிர்ந்த அமர்வில் இருக்கும் கவனமும், சற்றே முன்னோக்கிச் சரிந்த முகத்தின் துவளலும் அவள் தன்னில் ஆழ்ந்திருக்கிறாள் என்று நினைக்க வைக்கின்றன. நமக்குக் கோடுகளாய் தெரியும் அந்தப் புத்தகத்தின் சொற்கள் அவளை வேறொரு உலகுக்குக் கொண்டுச் சென்றிருக்க வேண்டும். இந்தப் பெண் ஒரு உன்னத வாசகி - வாசக பர்வத்தின் உள்ளடக்கத்தை அவளால் வாசிக்க முடியாது.

பின்னட்டையில் எஸ் ராமகிருஷ்ணன் ஒரு நாற்காலியில் சரிந்து அமர்ந்திருக்கிறார். அவர் அப்படி அமர்ந்திருப்பது ஒரு பிரம்பு நாற்காலியாக இருக்கலாம். முன்னட்டையில் உள்ள ஆதர்ச வாசகி போலன்றி, ராமகிருஷ்ணனின் கைகளில் கனத்த அட்டை கொண்ட ஒரு தடிமனான புத்தகம் இருக்கிறது. அவளைப் போல் ஒய்யாரமாய் இதை விரித்துப் பிடித்து வாசிக்க முடியாது - குறைந்தது நானூறு பக்கங்களாவது இருக்கக்கூடிய இந்த கனத்த புத்தகத்தை கால் மேல் கால் போட்டு அமர்ந்து, உயர்ந்திருக்கும் தன் இடது முழங்காலில் தாங்கிப் பிடித்திருக்கிறார் எஸ் ராமகிருஷ்ணன். அந்த ஆதர்ச பெண் புத்தகத்தின் பக்கங்களை அழுத்திப் பிடித்திருக்கிறாள் என்றால், எஸ் ரா வின் வலது கையின் முதலிரு விரல்கள் புத்தகத்தின் பக்கங்களை மிகுந்த பொறுமையின்மையுடனும் பேராசையுடனும் புரட்டிக் கொடுக்கின்றன.

ராஜபரம்பரையோ என்று எண்ண வைக்கும் உயர் வகுப்புக்குரிய அந்த வாசகியின் ஆடை அலங்காரங்கள் எதையும் நம் கதாசிரியர் பாவிப்பதில்லை - எளிய வெண்ணிறச் சட்டையில் வெளிர்நீலக் கோடுகள், மயிலின் இறகு போல் பாக்கெட்டில் நம் பார்வைக்குத் தப்ப முடியாத பேனா - புனைவெழுத்தாளனின் ட்ரேட் மார்க். இவரை ஒரு ஆதர்ச எழுத்தாளனாக எடுத்துக் கொள்ளலாம். தாழ்ந்த கண்களும் சிரிப்பில் விரியக் காத்திருக்கும் உதடுகளும் பரபரப்பாய் பக்கங்களைப் புரட்டிக் கொடுக்கத் தயாராயிருக்கும் விரல்களும் எஸ்ராவும் வேறொரு உலகில் வெகு வேகமாய் பயணப்பட்டுக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன.

வெவ்வேறு காலங்களையும் வெவ்வேறு பண்பாடுகளையும் சேர்ந்த இந்த வாசகியும் எழுத்தாளனும் சீசன் டிக்கெட் எடுத்த பயணிகளைப் போல் புத்தகத்தை எடுத்துக் கொண்டு மாற்று உலகொன்றில் வெவ்வேறு வேகங்களில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர். அகவயப்பட்ட மனோலயத்தால் ஒன்றுபட்ட இவ்விரு ஆதர்சங்களும் அதே காரணத்தால் ஒருவரையொருவர் உண்மையாக அறிந்து கொள்ளூம் வாய்ப்பையும் இழந்திருக்கின்றனர் என்று தோன்றுகிறது, ஆனால் அது முக்கியமில்லை.


25 Mar 2013

The Universe and Dr. Einstein – Lincoln Barnett

சிறப்புப் பதிவர்: ரவி நடராஜன்



அமரர்  சுஜாதா கதைகளில் அவரது பாத்திரங்கள் ஏதாவது ஒரு புதிய புத்தகத்தைப் பற்றி சொல்வது போலச் சித்தரிப்பார். புத்தகத்தைப் படிக்கும் வாசகனின் வாசிப்பை விரிவுபடுத்தும் ஒரு அழகிய உத்தியாக அது இருந்தது. கணேஷ் ஏதாவது ஒரு புதிய துப்பறியும் கதாசிரியரைப் பற்றிச் சொன்னால், உடனே அந்த கதாசிரியரை புத்தகக் கடையில் தேடி (அந்த காலத்தில் கூகிள் எல்லாம் கிடையாது), வாங்கி வாசிப்பது பழக்கமாகி இருந்தது. இப்படி, சுவாரசியமான நிகழ்வுகள் புத்தகப் படிப்பை மிக ஜாலியாக வளர்த்தது காலப் போக்கில் மாறி விட்டது.

இப்போதெல்லாம் வாரக் கடைசிகளில், சில சமயம் TED  என்ற அறிவார்ந்த கருத்தரங்கு விடியோக்கள் பார்ப்பது ஒரு உருப்படியான பொழுது போக்காக இருக்கிறது. அப்படி ஒரு வாரக் கடைசி மாலையில் பார்த்த விடியோ, ஒரு நல்ல புத்தகத்தைப் படித்து மகிழ உதவியது. அனில் அனந்தஸ்வாமி என்பவர், படித்த பல லட்சம் இளைஞர்களைப் போல மென்பொருள் துறையில் குப்பை கொட்டி வந்தவர். இவர், உலகின் மிகவும் ரிமோட்டான (சரியான தமிழ் வார்த்தை சிக்கவில்லை) இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு விஞ்ஞானிகள் பிரபஞ்சம் பற்றிய ரகசியங்களைத் தெரிந்து கொள்ள மனம் தளராமல் எப்படியெல்லாம் உழைக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்து, விவரணப் படங்கள் எடுத்து வருகிறார் - 'The Edge of Physics' 

24 Mar 2013

மோட்டார் சைக்கிள் டைரி - மருதன்

சிறப்பு  பதிவர் : கிருஷ்ணகுமார் ஆதவன்


அமெரிக்கா - வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என இரண்டாகப் பிளந்துள்ளது. யு.எஸ் என்று நாம் காலரைத் தூக்குவது வட அமெரிக்காவைத்தான். தென் அமெரிக்காவை அல்ல. அது உடலுறுப்பில் பாதத்தைப் போல, அதிலும் சகதியில் சிக்குண்ட பகுதி. அங்கு பல நாடுகள் - அர்ஜெண்டினா, சிலி, பெரு என்று. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் முன்பிருந்த சூழலில் அதன் மொத்த நாடுகளும் மக்களும், அவற்றின் அரசின், அதிகாரத்தின், அரசியலின் தலைவர்களின் குடுமியும் முழுக்க முழுக்க யு.எஸ்-ஸின் கைகளில் இருந்தது (இன்றும் கொஞ்சம் இருக்கிறது, இடையில் பிடி நழுவிவிட்டது).

அந்தப் பிடியை விடுவித்து அவற்றை ஒருமித்த லத்தீன் அமெரிக்காவாக உருவாக்கிவிட முனைந்த ஒரு இளைஞன் செயல்படுத்திய பல்லாயிரம் மைல் தொலைவு மோட்டார் சைக்கிள் பயணம் குறித்த தகவல்களை மருதன் எழுதிய 'மோட்டார் சைக்கிள் டைரி' விவரிக்கிறது.

 


23 Mar 2013

சுஜாதாவின் குறுநாவல்கள் -மூன்றாம் தொகுதி -கணேஷ்-வசந்த்

சுஜாதாவின் குறுநாவல்கள்
மூன்றாம் தொகுதி
கணேஷ்-வசந்த்


I think that novels that leave out technology misrepresent life as badly as Victorians misrepresented life by leaving out sex.
- Kurt Vonnegut, A Man without a Country

நம்மில் எத்தனை பேர் ஒரு குற்றத்தை நெருங்கிப் பார்த்திருக்கிறோம்? ஒரே ஒரு கொலை? சாலை விபத்துகூட நிறைய பேர் பார்த்திருப்போம். ஆனால் ஒரு கொலை?

நாம் நெருங்கிப் பழகாத காரணத்தால், கொலை செய்தவனின் மனநிலை நமக்கு குற்றவாளி யார் என்பதைவிட பெரிய மர்மமாக இருக்கிறது. நம்மில் பல பேருக்கு அந்த மாதிரி உணர்வெல்லாம் அந்நியம், இல்லையா? அதற்காக கொலையும் கற்று மற என்று சொல்ல வரவில்லை - கொலை செய்தவனின் எண்ணங்களை ஒரு நாவலாகவோ, கதையாகவோ படிக்கிறோம்.  அதிலிருந்து ஒரு விதமான திருப்தி அடைகிறோம். குற்றபுனைவு கதைகளின் அடிநாதமே மனித மனதின் தீராத கொலைவெறியை நிறைவேற்றித் தருவதுபோல் இருக்கிறது. வாத்தியாரைக் கேட்டால், இது தானடோஸ் இன்ஸ்டிங்க்ட் http://en.wikipedia.org/wiki/Thanatos#In_psychology_and_medicine  என்று சொல்லி சமகால அறிவுஜீவிகளிடம் திட்டு வாங்க வைத்திருப்பார்.


22 Mar 2013

ஸ்கூப்- குல்தீப் நய்யார்


வாழ வழியின்றி உடமைகளை துறந்து மன கசப்புடன் பிரிவினையின் காலகட்டத்தில் லாகூரிலிருந்து டெல்லிக்கு இடம்பெயர்வதில் தொடங்கும்  குல்தீப் நய்யாரின் இந்நூல், இறுதியில் அதிகம் மாற்றமடைந்திடாத அதே வழியில் இந்தியா - பாகிஸ்தான் நல்லிணக்க பேருந்து பயணத்தில் முடிகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் முதல் இன்றைய மன்மோகன் சிங் வரை அனைத்து பிரதமர்களையும் பேட்டி கண்டவர். உள்துறை அமைச்சராக இருந்த கோவிந்த் வல்லப் பந்த், மற்றும் லால் பகதூர் சாஸ்திரிக்கு செயலராக பணிபுரிந்தவர். சிறிதுகாலம் லண்டனில் இந்திய தூதராகவும் பணியாற்றியிருக்கிறார். UNI, PTI போன்ற செய்தி அமைப்புகளின் தலைமை பொறுப்புகளிலும் பங்கு வகித்திருக்கிறார்.  



21 Mar 2013

நீர் விளையாட்டு - பெருமாள் முருகன்

'வாழ்வின் பல்வேறு அடுக்குகளிலும் தான் எதிர்கொண்ட அனுபவங்களைச் சிடுக்குகளற்ற கதைகளாக்கியுள்ளார் பெருமாள்முருகன். தமிழ்க் கதையுலகம் இதுவரை தொடத் தயங்கிய சில கூறுகளை அனாயாசமாகக் கையாண்டு, தமிழ் இலக்கியத்தின் எல்லையைத் தன்னளவில் விரிவுபடுத்தும் பெருமாள்முருகன், சொற்களை மீறிய மனித மனோபாவங்களை வாசகர்களுக்கு உணர்த்துவதில் வெற்றிபெற்றுள்ளார். பாசாங்கின் சுவடுகள் பதியாத சிறுகதைகள் இத்தொகுப்பில் கிடைக்கின்றன'


பெருமாள்முருகனின் `நீர் விளையாட்டு` சிறுகதைத் தொகுப்பை சில வருடங்களுக்கு முன்னர் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வழக்கம் போல படிக்க வேண்டிய சிறுகதைகள் எனும்  கடந்த பத்து வருடங்களில் வெளியான வரிசையில் அவரது நீர் விளையாட்டு, பீ கதைகள் இடம்பெற்றிருந்தன. அவரது ஒரு கதையை (`எருக்கஞ்செடிகள்`) சிறுபத்திரிக்கையில் படித்த நினைப்பு இருக்கிறது. அது தவிர வேறெந்த கதையையும் நான் படித்ததில்லை. அவரது சிறுகதைகள் உலகத்தைப் படிக்கத் தொடங்கையில் ஒட்டுதல் இல்லாதது போன்ற உணர்வு ஏற்பட்டது. அது சகஜம் தான். சிறு நகரில் வளர்ந்த எனக்கு பெருமாள்முருகனின் உலகம் மிகவும் புதிது. கதை சொல்லப்பட்ட சுவாரஸ்யத்தில் மன விலக்கம் மறைந்தது. இலக்கியத்தைப் படிப்பதே நமக்குத் தெரியாத உலகைப் புரிந்துகொள்ளும் முயற்சி மட்டும்தான் எனும் எண்ணம் வலுத்தது.


இத்தொகுப்பில் அமைந்திருக்கும் கதைகள் திட்டமிட்ட நிகழ்வுகளைச் சுற்றி நடப்பவை அல்ல. மாறாக, வாழ்வின் பாதையில் எங்கோ எவரோ தொட்டுச் சென்ற உணர்வினைப் பிந்தொடர்ந்து ஒரே ஒரு கணத்தில் எழுந்த உணர்வுப்பொறியைப் பதிவு செய்ததால் உருவான கதைகள். இக்கதைகளை எழுதும்போது அவருக்கு படைப்பெழுச்சியை மிகுவித்த செயலாக இதை முன்னுரையில் குறிப்பிடுகிறார்.


20 Mar 2013

நிர்வாக குரு - பகவான் ஸ்ரீஇராமர்



நிர்வாக குரு - பகவான் ஸ்ரீஇராமர்
ஆசிரியர் : டாக்டர் சுனில் ஜோகி
தமிழில்: PVNK Translators
பக்கங்கள்:188
விலை: ரூ.125

***

* ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள்.
* பல இடங்களில் ஜுனூன் தமிழ் போல் வாக்கிய அமைப்புகள். 
* சில வாக்கியங்களை மறுபடி மறுபடி படித்தால்தான் புரியும் என்கிற நிலைமை. 

இப்படி பல பிரச்னைகள் இருந்தும், மனஉறுதியோடு இந்தப் புத்தகத்தை தொடர்ந்து வாசித்து முடித்தேன். ஏன்? ஸ்ரீராமரைப் பற்றி ஏதாவது புதிய / சுவாரசியமான விஷயம் இருக்கான்னு தெரிந்து கொள்வதற்கே. ஸ்ரீராமர். மாயாஜாலங்கள் / மந்திர-தந்திரங்கள் எதுவும் செய்யாமல், ஒரு மனிதனாகப் பிறந்து, வாழ்ந்து, எப்படி வாழவேண்டும் என்று உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்கியவர். ஓரிரு இடங்களில் அவரது செயல்கள் நம்மில் பலருக்கு பிடிக்காவிட்டாலும் / ஒப்புதல் இல்லாவிட்டாலும் வாழ்வியல் நெறிகளில் பெரும்பான்மையோருக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பவர் ஸ்ரீராமரே. ஆகவே அவரைப் பற்றி படிப்பதற்காக வாங்கிய புத்தகம்.

19 Mar 2013

சுஜாதாவின் புதிய பக்கங்கள்

சிறப்பு  பதிவர் : மாதவ சோமன்

கடந்த நாற்பத்து சொச்ச வருடங்களில் தம் எழுத்தில் சுஜாதா நடையின் பாதிப்பு இல்லாமல் எழுதவல்ல வாசக எழுத்தாளர்கள் இங்கே அபூர்வாபூர்வம். (ஹப்பா…. கடைசியாக நானும் இந்த வழமையான பத்தியை ஒருமுறை எழுதிப் பார்த்துவிட்டேன்  )

கணையாழி இதழின் கடைசிப் பக்கங்களில் சுஜாதா (1968 முதல் 1993 வரை)  எழுதிய நூற்று (அல்லது இருநூற்று) சொச்ச கட்டுரைகளில் நாற்பது கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து ‘குமரிப் பதிப்பகம்’ 1993’ல் வெளியிட்ட புத்தகமே இது.



18 Mar 2013

பேங்கர் டு த புவர் - முஹமது யூனுஸ்



சிறப்பு பதிவு - செல்வா ஜெயபாரதி 


முகமது யூனுஸ் கிழக்குவங்கத்தைச் சேர்ந்தவர்.  தற்போது பெரிய அளவில் இந்தியாவில் அறிமுகமாகியிருக்கும் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் சிறுகடன் (Micro Finance) போன்ற எளிய மக்களுக்கான திட்டங்களை பெரிய அளவில் நடைமுறைப்படுத்தி வெற்றிகண்டவர். இப்புத்தகம் முகமது யூனுஸ் பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்து எப்படி கிராமீன் வங்கியை நிறுவி வறுமை ஒழிப்பில் பெரிய பங்காற்றினார், அதில் கிராமீன் வங்கியின் பங்கு என்ன, இச்சிந்தனைக்கான விதை, நடைமுறைப்படுத்துவதில் எவ்வளவு போராட்டங்களைக் கடக்க வேண்டியிருந்தது போன்ற விஷயங்களைப்பற்றி விரிவாக பேசுகிறது.


17 Mar 2013

THE JAPANESE WIFE -KUNAL BASU

 THE JAPANESE WIFE
KUNAL BASU
SHORT STORIES
HarperCollins Publishers India

Photo Courtesy/To Buy: Flipkart



சில வருடங்கள் முன்பு “The Japanese Wife” என்றொரு திரைப்படம் வெளிவந்தது, எவ்வளவோ படங்கள் வருகின்றன. எல்லா படங்களையும் நினைவு வைத்துக் கொள்வது கடினம்தான். ஆனால் இந்தப் படம் இந்தியாவின் முக்கிய இயக்குனரான அபர்ணா சென்னால் இயக்கப்பட்டது. அதைவிட முக்கியமான விஷயம் இதனுடைய கதைக்கருதான். 

பேனா நண்பர்களான ஒரு ஆணும் பெண்ணும், தங்கள் கடிதங்கள் மூலமே பழகி, திருமணம் செய்து கொண்டு இருபது வருடங்களாக வாழ்க்கை நடத்துக்கின்றனர். இதுதான் நான் இந்தப் படத்தை பற்றி படித்தது, இன்னமும் பார்க்கவில்லை.  நூலகத்தில் என்ன புத்தகம் எடுக்கலாம் என்று சுற்றி வந்தபோது, இது கண்ணில் படவே சட்டென எடுத்து வைத்துக் கொண்டேன். வீட்டுக்கு வந்து புத்தகத்தைப் பிரித்து உள்ளடக்கம் பார்த்தப்போதுதான் திரைப்படமாக கதை ஒரு சிறுகதை என்பதை அறிந்தேன்.

16 Mar 2013

புலிநகக் கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்


மரணத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தத்துவமாகச் சொல்லப்போனால், உலகம் சுற்றிக் கொண்டிருக்க மரணம் அவசியம் எனலாம். ஆனால், தன்னைச் சார்ந்தவர்களும், தான் சார்ந்தவர்களும் மரணிக்கும் போது தான் அதன் கிலி விளங்கும். எனக்கு மரணங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இன்றைக்கும் அப்படித்தான். வயதில் பெரியவர்கள் மரணமென்பதை ஏதோ பாற்பல் விழுந்ததைப் போல் எடுத்துக்கொள்ளும் போது ஆச்சரியமாக இருக்கும். அது அவர்களுடைய உண்மையான வெளிப்பாடா அல்லது பயத்தை மறைக்க அப்படிச் இருக்கிறார்களா? இன்றைக்கு கேள்விப்படும் மரணங்கள் மூப்பின் காரணமாக இல்லை என்பது என்னுடைய அச்சத்தை அதிகரித்திருக்கக்கூடும். என்னுடைய எல்லா பயத்திற்கும் அடிப்படைக் காரணமாக இந்த மரண பயம் இருக்கக்கூடும். மரணச் செய்திகளிலிருந்தும் துக்க வீடுகளுக்குச் செல்வதிலிருந்தும் என்னை விலக்கியே வைத்திருந்திருக்கிறேன். ஆனால், சிலருக்கு மரணத்தின் மீதொரு ஆர்வம் இருக்கிறது. யார் செத்துப் போனார்கள்? எப்படி செத்துப் போனார்கள்? என்பது மாதிரியான ஆர்வம். பள்ளியில் படிக்கும் போது, எங்காவது கல்வெட்டாங்குழியில் பிணம் கிடந்தால், பல கிலோ மீட்டர் சைக்கிள் மிதித்துப் போய்ப் பார்த்துவிட்டு வரும் நண்பர்கள்; என்றென்றைக்கு யார் வீட்டில் திவசம் என்று நினைவில் வைத்திருப்பவர்கள் (திவசத்தை மட்டும், கல்யாண காரியங்கள் இவர்களுக்கு நினைவில் இருக்காது), மரணத்தோடு முடியும் சினிமாக்களையும் கதைகளையும் ஒப்பற்ற படைப்புகளாக சித்தரிப்பவர்கள், விடிகாலை ஆறுமணிக்கு சாட்டில் வந்து ’மனைவியின் அலுவலகத்தில் நுழைந்து அவரைக் கொன்ற கணவன்’ என்ற செய்தியைக் கொடுக்கும் நண்பர் என்று பலரை இந்தப் பட்டியலில் வைக்கலாம்.

15 Mar 2013

உலகம் குழந்தையாக இருந்தபோது – வெரியர் எல்வின்



.உலகம் எப்படி உருவானது? ஏன் உருவானது? அதன் அன்றாட இயக்கத்தை தீர்மானிப்பது யார்? இத்தனை நிறங்களில் பூக்கள் ஏன் பூக்க வேண்டும்? புலிகளின் உடலில் உள்ள வரிகள் வந்ததெப்படி? பறவைகளுக்கு சிறகு முளைத்தது எப்படி? இத்தனை விதமான பறவைகளின் குரல்கள் ஏன் உலகெங்கும் ஒலிக்க வேண்டும்? மனிதர்கள் எங்கிருந்து வந்தார்கள்? மனிதர்கள் எங்கு செல்கிறார்கள்? வாழ்வின் நோக்கம் என்ன? மரணம் என்றால் என்ன? மரணத்திற்கு பின் என்ன? மனிதன் பெருவியப்புடன் ஒவ்வொன்றையும் கேள்வி கேட்கிறான். காலந்தோறும் கேள்விகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. விடைகளை நெருங்க நெருங்க மேலும் கேள்விகள் எழுந்து கெக்கலித்து சிரிக்கின்றன. தன்னை மூடியிருக்கும் அஞ்ஞான பிசினை கேள்விகுறி கோடரியை கொண்டு கிழித்து பிளந்து தன்னை புதிதாக கண்டடைய முயன்றுக்கொண்டே இருக்கிறான். கேள்விகளே செயலின்மையில் இருந்து அவனை மீட்கும் மீட்பர். கேள்விகளே அவனை அலைக்கழித்து நொடிந்து உதிர செய்கின்றன.       


14 Mar 2013

ஹர ஹர சங்கர... - ஜெயகாந்தன்

நான் பாட்டில் எங்கேயாவது கிராமத்தில் ஏகாந்தமாக இருந்துகொண்டு, பூஜையைப் பண்ணிக்கொண்டு, தியானம் செய்துகொண்டு நிம்மதியாக இருக்கலாம். மடம் நடப்பதற்கு இப்போது நீங்கள் பட்டணத்தில் தருகிற மாதிரி இவ்வளவு பணம் வேண்டுமென்பதே இல்லை. மடங்களுக்குப் பணபலம், ஆள்பலம் எல்லாமே குறைச்சலாக இருக்க வேண்டும் என்பதுதான் என் அபிப்பிராயம். பரிவாரம், சிப்பந்திப் பட்டாளங்கள் நிறைய வேண்டியதில்லை. மடத்தில் அதிபதியாக இருக்கப்பட்டவரின் யோக்கியதை தான் அதற்குப் பணம், பலம் எல்லாம்.
- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

2004’ஆம் வருடம் தீபாவளி விடுமுறை நிறைந்து பட்சணங்கள் நிறைய தின்று முடித்த அலுப்பில் அலுவலகம் நுழைகிறேன்.

“என்னய்யா கிரி! கவனிச்சியா? உங்காள அரஸ்ட் பண்ணிட்டாங்க போல?”, என்று வரவேற்றார் வேலு சார்.

“எங்காளா? யார் சார் அவரு?”

“அதான்யா காஞ்சி பெரியவரு”


13 Mar 2013

இனி வரும் உலகம் - பெரியார்

சிறப்பு  பதிவர் : கிருஷ்ணகுமார் ஆதவன்

1944-ம் ஆண்டு பெரியார் எழுதிய நூல் இது. வரும் காலங்களில் சமூகத்திலும், விஞ்ஞானத்திலும் எப்படிப்பட்ட மாற்றங்களெல்லாம் ஏற்படும், மக்களின் வாழ்வு நிலை எப்படி இருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் யூகித்து சொல்லியிருக்கிறார். இந்த சின்ன புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் ஆச்சரியமும், வருத்தமும் ஒருசேர மிஞ்சியது.  செல்போனும், ஃபேஸ்புக்கும், ஸ்கைப்புமாக இன்று தொழில்நுட்பத்தில் கண்டறிந்து உபயோகிப்பவைகளை அவர் 40 வருடங்களுக்கு முன்னரே சொல்லிவிட்டார் என்ற பெருமையோடு ஐந்து நிமிடங்களில் புத்தகத்தில் நுழைந்து வெளியேறலாம்.



புத்தகத்திலிருந்து:
  • கம்பியில்லாத் தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும் - செல்போன்
  • உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும் - ஃபேஸ்புக், ஸ்கைப்
  • இன்று இருக்கும் சாட்டிலைட் வழிக் கல்விமுறை - ஓர் இடத்தில் இருந்துகொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கச் சாத்தியப்படும்
  • மருத்துவத்தில் இன்று இருக்கும் டெஸ்ட் டியூபின் மூலம் குழந்தை பெறுதலை- பிள்ளைப்பேறுக்கு ஆண் பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக பொலிகாளைகள் போல் தெரிந்தெடுத்து மணிபோன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு, அவர்களது
  • வீரியத்தை இன்ஜெகஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகளைப் பிறக்கச் செய்யப்படும். ஆண் பெண் சேர்க்கைக்கும்,குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும்.
  • பேட்டரி கார் - பெட்ரோலுக்குப் பதில் மின்சார சக்தியே உபயோகப்படுத்தலாம்.
  • அதிசயப்பொருளும், அற்புதக் காட்சிகளும், அவற்றின் அனுபவங்களும் மக்கள் எல்லோரும் ஒன்று போலவே அனுபவிப்பார்கள் - தீம் பார்க்


12 Mar 2013

எப்படி ஜெயித்தேன்?


எப்படி ஜெயித்தேன்?
ஆசிரியர்: எம்.ஜி.ஆர்
நாதன் பதிப்பகம்.
பக்கங்கள்: 88
விலை: ரூ.50

***

எனக்குத் தெரிந்த மென்பொருள் நிறுவன உதாரணங்களிலிருந்து சொல்றேன். ஒரு திட்டம் ஆரம்பிக்கப் போறாங்கன்னா, அதுக்கு சிலபல பேர் தேவைப்படுவார்கள். மேலாளர் என்ன பண்ணுவார்னா, நிறுவனத்தில் சும்மா இருக்கும் - ஆனா தகுதியுடைய சிலருக்கு தொலைபேசி, இந்த மாதிரி திட்டம் இருக்கு. நீங்க வந்து வேலை செய்தீங்கன்னா, உங்களுக்கும் நல்லது. வருங்காலத்தில் இப்படி இப்படி ஆகலாம்னு, குதிரைக்கு முன் கேரட் காட்டுவது போல் காட்டி, ஆள் சேர்ப்பாரு. ஒருவழியா ஆட்கள் சேர்ந்து, திட்டமும் துவங்கிடும். பிறகு அவர் கண்லேயே படமாட்டாரு. குழுத்தலைவர்களே திட்டியவாறு, வேலை கொடுத்து, வேலை வாங்கி ஒப்பேத்திடுவாங்க. திட்டமும் முடிஞ்சிடும். ஒரு வேளை நல்லவிதமா முடிஞ்சிடுச்சுன்னாதான் விளையாட்டே இருக்கும். அந்த பலனை யார் அடைவது? அப்போதான் திட்ட மேலாளர் மறுபடி ‘எண்ட்ரி’ கொடுப்பாரு. மொத்த பெருமையையும் தானே எடுத்துக்கிட்டா நல்லாயிருக்காதேன்னு குழுவில் உள்ள (அவருக்கு மிகப் பிடித்த) சிலருக்கு பாராட்டுகளை அள்ளி வீசுவாரு. அதுக்குப் பிறகு, இவர்களை சுத்தமா மறந்துட்டு அடுத்த திட்டத்திற்கான அடுத்த செட் ஆட்களைத் தேடி ஓடுவாரு. இப்படியெல்லாமா நடக்கும்னு கேட்கக்கூடாது. கண்டிப்பா இப்படித்தான் நடக்கும்(!!).

நாடோடி மன்னன். MGR. கதைக்கு உதவி செய்து, இரு வேடங்களில் நடித்து, இயக்கி, தயாரிக்கவும் செய்த படம். படம் நன்றாக ஓடினால் நான் மன்னன், ஓடவில்லையென்றால் நாடோடி என்று சொன்னாராம். ஆனால், படம் சூப்பர் ஹிட். அதன் வெற்றி விழாவில், வாத்யார் பேசிய பேச்சின் விவரம்தான் இந்தப் புத்தகம். மொத்தம் 23 கட்டுரைகள். முதல் பதிப்பே நவம்பர் 2012ல்தான் வந்திருக்கிறது. ஏன் இவ்வளவு தாமதம்? தெரியவில்லை. போகட்டும். முதல் பாராவில் ஒரு மேலாளரைப் பற்றி பார்த்தோம். அதைப் போலவே செய்தாரா MGR? யாரையெல்லாம் நினைவு கூர்ந்தார்? யாருக்கெல்லாம் நன்றி கூறினார்? மேலே படிங்க.

1937-38ல் வாத்யார் கல்கத்தாவில் ஒரு படம் பார்த்தாராம். If I were King. அப்போதே இந்த படத்திற்கான (நாடோடி மன்னன்) கருப்பொருள் அவருக்கு தோன்றிவிட்டதாம். பிறகு இந்தப் படத்தை உருவாக்க முற்பட்டபோது, இது ‘The Prisoner of Zenda' படத்தின் தழுவல் என்று பேசப்பட்டதாம். ஆனால் அது நிஜமில்லை, அந்த படத்திற்கும் நாடோடி மன்னனிற்கும் உள்ள (ஆறு!) வித்தியாசங்கள் என ஒரு பட்டியலைக் கொடுக்கிறார். இன்னொரு விஷயம்: இதே போன்ற கதையுடன், இன்னொரு படத்தை நடிகை பானுமதி எடுத்துக் கொண்டிருந்தாராம். அதைக் கேள்விப்பட்ட MGR பேசப் போனபோது பானுமதி என் படத்தை நிறுத்திவிடுகிறேன், நீங்களே தொடர்ந்து எடுங்கள் என்று பெருந்தன்மையாகக் கூறிவிட்டாராம். பின்னர் அவரையே இந்தப் படத்திலும் நடிக்க வைத்தார் MGR.

ஏகப்பட்ட பேர்களுக்கு நன்றிகள் சொல்கிறார். படத்தின் துவக்கத்திலிருந்து வேலை செய்தவர்கள், நடுவில் வந்து சேர்ந்தவர்கள், நடுவில் விட்டுப் போனவர்கள், வேலை செய்தவர்களுக்கு உதவி செய்தவர்கள் என எவரையும் விட்டுவைக்கவில்லை. ஒவ்வொரு கடைநிலை பணியாளரையும் பேர் சொல்லி குறிப்பிட்டு நன்றி தெரிவிக்கிறார்.

உதாரணத்திற்கு சொல்லப் போனால், படத்தின் ஒளிப்பதிவாளரான இராமுவிற்கு வண்ணத் திரைப்படத்திற்கான ஒளிப்பதிவு பயிற்சி கிடையாது. ஆகவே அவர் MGRஇடம் வேறு யாரையாவது வைத்து எடுத்துக் கொள்ளவும் என்றிருக்கிறார். அதற்கு MGR, நீங்களே கற்றுக் கொண்டு எடுங்கள், அப்படியில்லையென்றால் இந்தப் படம் கருப்பு-வெள்ளையிலேயே இருக்கட்டும் என்றாராம். திறமைக்கு மதிப்பு கொடுக்கும் நல்ல பண்பை வாத்யார் வெளிப்படுத்தியதற்கான சம்பவம் இது. இதே போல் ஒலிப்பதிவும். மேனன் என்பவர் செய்த ரிகார்ட்டிங்கில் திருப்தியுற்ற MGR அவரையே ரீ-ரிகார்டிங் செய்ய வைத்தாராம். பொதுவாக மிகுந்த திறமையுள்ள யாரையாவது வைத்தே செய்யப்படும் அந்த வேலையை மேனன் மேல் வைத்த நம்பிக்கையால் அவரையே வைத்து செய்து முடித்தாராம்.

இப்படியே நம்பியார், M.N.ராஜம், சரோஜா தேவி, சந்திரபாபு, P.S.வீரப்பா இன்னும் பலருடன் வேலை பார்த்த அனுபவத்தைச் சொல்லி அவர்களை பெருமைப்படுத்துகிறார் தலைவர். பலரது கூடவே ஸ்டூடியோ & மற்ற உபகரணங்களைக் கொடுத்து உதவிய நாகிரெட்டி, வாசன் ஆகியவர்களுக்கும் நன்றி கூறுகிறார்.

புத்தகத்தின் கடைசி கட்டுரை, MGRயும், திரைப்படத்தையும் புகழ்ந்து அறிஞர் அண்ணா பேசிய பேச்சு.

88 பக்கங்களே கொண்ட சின்ன புத்தகம்தான். ஆனால் வாத்யாரைப் பற்றி அறிந்து கொள்ளவும், வெற்றியாளர்களிடம் இருக்கவேண்டிய பண்பு பற்றி தெரிந்து கொள்ளவும், படிக்க வேண்டிய புத்தகம்.

***


11 Mar 2013

ஆகஸ்ட் – 15 – குமரி. எஸ். நீலகண்டன்



மனிதனுக்கு தன் வாழ்வின் கதையை மீள மீள சொல்வதில் ஒரு இனம்புரியாத ஆனந்தம் இருக்கும் போலிருக்கிறது. தான் பெற்ற வெற்றிகள், அம்முயற்சிகளில் தாம் பெற்ற தோல்விகள், நினைவெச்சமாக உலர்ந்த வடுக்கள், வலி கொடுக்கும் ஆறாத காயங்கள். உலகில் பிறந்து மரிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உலகத்திற்கு விட்டுச் செல்ல ஏதோ ஒரு வாழ்க்கை செய்தி இருக்கத்தான் செய்கிறது. வரலாற்று நிகழ்வுகளுடன் தனி மனித சரிதைகளை சேர்ந்து வாசிப்பது அபாரமான அனுபவம். ஒற்றை நிகழ்வின் கணக்கற்ற பரிமாணங்களை அவை நமக்குக் காட்டக்கூடும். காந்தியின் செயலராக பணிபுரிந்த கல்யாணம் அவர்களின் வாழ்வைப் பேசும் இந்த நாவலை வாசித்தவுடன் வரலாற்றின் மாற்று பரிமாணங்கள், சாத்தியகூறுகள் குறித்த சிந்தனைகள் தொற்றிக்கொண்டன.


நாவலாசிரியர் குமரி எஸ்.நீலகண்டன் சென்னை வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர். அவர் எழுதிய ;ஒரு ராஜகுமாரனின் கதை' எனும்  கவிதை (இந்த நாவலின் ஒரு பகுதியாக வருவது) 'காந்தி இன்று' தளத்தில் ஏற்கனவே பிரசுரம் ஆகியிருக்கிறது. 490 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் இதுவரை நாம் அறிந்திடாத பல வரலாற்று நிகழ்வுகளை நமக்கு சொல்லி செல்கிறார். அத்துடன் நில்லாமல் பிற்சேர்க்கை பகுதியிலும் நாவலின் பகுதியாகவும் காந்தியுடன் கல்யாணம் மற்றும் பிரபலங்கள் இருக்கும் அறிய புகைப்படங்கள், காந்தி கைப்பட திருத்திய கடித குறிப்புகள் , வெளிவராத கடிதங்கள, வெவ்வேறு முறையில் காந்தியை விளித்து எழுதப்பட்ட தபால் அட்டைகள், நாளேட்டு செய்தி பிரதிகள் என பல அரிய ஆவணங்களையும் தொகுத்துள்ளார்.

10 Mar 2013

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை - நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் முன்னுரையில் எழுதுவது இது :
"பனை உயரம் மண்ணுக்குக் கீழே இருந்து முளைத்த நான், பிறப்பால் நாஞ்சில் நாட்டு வெள்ளாளன். வெள்ளாளன் எனும் சொல் எந்தக் காலத்திலும் எனக்கோர் கவசமோ குண்டலங்களோ அல்ல. மாறாக வாகாக அடிவாங்கும் ஒரு மர்மஸ்தானம். ஆனாலும் அதிகமாக அறிந்த, பெரும்பாலும் எனது படைப்புகளில் கையாண்ட சமூகம் இது.

"எனவே நாஞ்சில் நாட்டு வெள்ளாளருக்கு எதிரான படைப்புகளைச் செய்பவன் என்றும் அவர்தம் காலாவதியான பெருமைகளைத் தாங்கிப் பிடிப்பவன் என்றும் இரண்டு முரண்பட்ட குற்றச்சாட்டுகள் என் மீது உண்டு. சற்றுத் தீவிரமான கண்ணோட்டத்தில் வெள்ளாளத் துரோகி என்றும் வெள்ளாள சாதி வெறியன் என்றும்கூட முகம் கூடியதுண்டு. ஆனால் மேற்சொன்ன இரண்டும் இல்லை நான். யாருடைய சாயத்தையும் பூசி, அடைப்பத்தையும் தாங்கி நடப்பவனும் இல்லை. பெர்ட்டோல்ட் பிரெக்ட் சொல்வதைப்போல், "நீங்கள் தேடுவது யாராக  இருந்தாலும் அது நானில்லை..."
"சம்பந்தமில்லாத மூன்றாவது ஆளாக விலகி நின்று இந்தக் கட்டுரையை எழுத முற்பட்டிருக்கிறேன்,"" என்று நாஞ்சில் நாடன் கூறிக் கொண்டாலும், ஒரு நாஞ்சில் நாட்டு வெள்ளாளராகவே இதை எழுதியிருக்கிறார். தலைக்கட்டு வரி கட்டும் கடமை தன் குடும்பத்தினருக்கு இருப்பது குறித்து இப்படி எழுதுகிறார் :
"ஓலைக்கூரை வீடு என்றாலும், ஈசானமூலையில் இருந்ததால், எனது தாத்தா, அந்த ஊரின் முதல் வரி. இப்போது கூரைவீடு என்பது ஓட்டுவீடாக மாறியுள்ள நிலையில், வீட்டுக்கு மூத்த ஆண்பிள்ளையாகிய நான், க. சுப்பிரமணியம் முதல் வரி. இது சாதியில் ஒரு இடம் முன்பதிவு செய்து கொண்ட ஏற்பாடு என்று எனது வாசகர்களுக்குத் தோன்றும். எனது மண்ணும் மக்களும் என் இலக்கிய வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகிப் போன நிலையில் எனது கடைசிப்பயணம் நான் பிறந்த வீரநாராயணமங்கலத்தின் பாறையாற்றின் மேலக் கரையில் இருக்கும் சுடுகாட்டை நோக்கி அமைய வேண்டும் என்பதற்கான முன்பதிவுதான் அது, என்னைப் பொறுத்தவரையில்"

9 Mar 2013

உபமன்யு சட்டர்ஜியின் English, August

சிறப்பு  பதிவர் - அஜய்

மேற்கில் 'Slacker Novel' என்ற ஒரு ழானர் உண்டு. எந்த வேலையையும் செய்ய விருப்பமில்லாத, வெறுமனே பொழுதைக் கழிக்க விரும்புகிற முக்கிய பாத்திரம் பற்றிய நாவல்கள் இவை. வேலை செய்வது என்பது இவர்களுக்கு வேப்பங்காய் மாதிரி. இத்தகைய தங்கள் இயல்பால் பாத்திரங்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் இந்த வகை நாவல்களில் இருண்மையான நகைச்சுவையுடன் சொல்லப்பட்டிருக்கும். Lucky Jim (Kingsley Amis), A Confederacy of Dunces (John Kennedy Toole) போன்ற நாவல்கள் உடனே நினைவுக்கு வருகின்றன. ஒரு விதத்தில் 'Catch-22' நாவலில் நாம் பார்த்த யோசாரியன்கூட ஒரு slackerதான். 

உபமன்யு சட்டர்ஜியின் 'இங்கிலீஷ், ஆகஸ்ட்' நாவலையும் இந்த வகைமையில் நாம் சேர்க்க முடியும்.  ஆனால் அது மட்டுமே இந்த நாவல் இல்லை. தான் இத்தனை நாள் வரை அனுபவித்த சொகுசு வாழ்க்கையைத் தவிர வேறொரு உலகமும் இருப்பதை ஒரு இளைஞன் உணரும் நாவலாகவும் இதை வாசிக்கலாம் (coming of age novel). இந்திய அரசு நிர்வாக அமைப்பைப் பகடி செய்யும் நாவலாகவும் இது விரிகிறது.  இதை எழுதிய உபமன்யுவே இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக இருப்பது ஒரு சிறப்பம்சம்.


8 Mar 2013

கஜல் (பாடப்பாடப் பரவசம்) – அபுல் கலாம் ஆசாத்



சென்னையில் சில வருடங்களுக்கு முன் இசை நிகழ்ச்சி ஒன்று நிறைவடைந்து வெளியில் வரும்போது தந்த பேட்டி ஒன்றில் எஸ்.வி.சேகர் இப்படிக் குறிப்பிட்டார்:
“இனிமே நாம ராத்திரி வீட்டுக்குப் போகும் போது கையில மல்லிப்பூ சரத்தை சுத்திக்கிட்டுப் போனாலோ, இல்லை நம்ம கார்ல மல்லிப்பூ உதிர்ந்து கிடந்தாலோ வீட்டு அம்மணி கிட்ட பயப்பட வேணாம்”. அப்போதுதான் சுடச்சுட பிரபல பாடகர் ஹரிஹரன் பாடி முடித்த கஜல் கச்சேரி ஒன்றை ரசித்துவிட்டு வெளியே வந்திருந்தார் சேகர்.

“ஹரிஹரன் கச்சேரிக்குப் போயிட்டு வந்தேன்’னு சொல்லிக்கலாம்”, என்றார் சேகர். கஜலின் போதைக்கு மேலும் போதையூட்ட அந்த கஜல் அரங்குக்கு வந்தவர்கள் கையில் மல்லிகைப்பூச் சரம் தரப்பட்டதாம். என்னே ஒரு ரசனை!

கையில் சுற்றின மல்லிகைச் சரம் போலத்தான் கஜல் பாடல்கள். கையில் சுற்றின சரத்தின் வாசம் நம்மைக் கிறங்கடிக்கும். சரத்தை அவிழ்த்த பின்னாலும் அதன் வாசம் காற்றில் நம்மைச் சுற்றிவரும்; நம் கையோடு சிலப்பல மணிநேரங்கள் அதன் வாசம் கலந்திருக்கும்.

கஜல் பாடல்களைக் கேட்கும்போதும் அப்படித்தான். கேட்கையில் மல்லிகையின் வாசமாய் மனத்தில் நிறைந்து நம்மைக் கிறங்க வைக்கும் கஜல்கள், நிறைந்தபின்னும் நம்மை விட்டு அகலாமல் மனத்தை அழுத்திக் கொண்டிருக்க வல்லன.

ஜக்ஜித் சிங், குலாம் அலி, மெஹ்தி ஹசன், அனூப் ஜோட்லா, பங்கஜ் உதாஸ் என்று கஜல் வானில் உஸ்தாத்’கள் பலர் இருந்தாலும் நமக்கு நன்கு பரிச்சயமான ஹரிஹரனின் கஜல்கள்தான் எனக்கு ஃபேவரிட். எனக்குக் கொஞ்சமே கொஞ்சமேனும் புரியும் வகையில் அவை சுலபமாக இருப்பது காரணமாயிருக்கலாம். கொஞ்சம் மேலே போனால் அஹ்மத் & முஹ்மத் ஹசன் பாடல்கள் சில நம் ஃபேவரிட் லிஸ்டில் உண்டு.

மல்லிகைச் சரத்திற்கு வருவோம்.

லபோ பர்ழ் ஹே ரப்ஸா குலாபி குலாபி
நிகாஹோங் கே ஜூம்பிஷ் ஷராபி ஷராபி
துமாரே ஏ ச்செஹரா க்கித்தாபி கித்தாபி…
துமே ப்யாரு கர்னே கோ ஜீ ச்சா ஹதா ஹை

…இப்படி காதலியின் இதழ், பார்வை, முக வனப்பு பற்றி ’அஷோக் கோஸ்லா’ பாடும் கீத் கேட்கும்போது ஆகட்டும்,…

பஹுத்(து) ஹஸீன்(னு) ராத்(து) ஹே
தேரா ஹஸீன்(னு) ஸாத்(து) ஹே
நஷே மே குச் நஷா மிலா
ஷராப் லா ஷராப் தே…

இப்படி “அழகிய இரவில் அதியுன்னத அழகாய்த் தோன்றும் காதலியை மயக்கம் சூழ் இரவில் (அல்லது மது சூழ் நேரத்தில்) மேலும் மயக்கம் (போதை) சேர்க்க வாராய்”, என்று ஹரிஹரன் அழைக்கும் கஜல் ஆகட்டும்…..

ஆப் ஹமாரே சாத் நஹீ
சலியே கோயீ பாத் நஹீ
ஆப் கிஸீ கே ஹோ ஜாயே
ஆப் கே பஸ் கீ பாத் நஹீ

என்ற, “எங்கிருந்தாலும் வாழ்க” ரக “போனால் போகட்டும் போடா” ரக புலம்பல்கள் ஆகட்டும்….

…இவையெல்லாமும், இவை போன்ற பல கஜல்களும் எனக்கு மயக்கும் மல்லிகைச் சரங்கள்.

ஹிந்திக்காரர்களுடன் புழங்க நேரிடுகையிலோ அல்லது கஜல் பாடலொன்றைக் கேட்கையில் அர்த்தம் புரியாமல் தவிக்கையிலோ ஹிந்தி மொழியைக் சரிவர கற்காமல் விட்டதற்காக வருந்துவதுண்டு. எனினும், கஜல் சரிவர புரிதல் ஹிந்தி அறிந்தவர்களுக்கே சிரமமான காரியம். காரணம் கஜல் பாரசீக மொழி வழியாக உருதுவிற்கு வந்து இறங்கிய வடிவம் என்பதுவே. எனவே, ஹிந்தியில் கஜல்கள் வடிக்கப்பட்டாலும் அவற்றில் உருதுத் தூவல்கள் அவசியம் ஆகிறது.

கஜல்களுக்கான அர்த்தம் தேடி நம்மூரில் ஹிந்தி அறிந்தவர்களை அணுகினால், “பாஸ், இது நியாயமா? நமக்குத் தெரிஞ்சதே அரைகுறை. டென்னிஸ் பால் கிரிக்கெட்டருக்கு கிரிக்கெட் பால்’ல பவுன்ஸர் போட்றீங்களே” என்பார்கள். ”உங்களுக்குத்தான் ஹிந்தி தெரியுமே பாஸ்”, என்றால், “அட தெரியாததை தெரிஞ்சாப் போல சமாளிக்கிறோம் பாஸ்”, என்பார்கள்.

சரி போகட்டும் என வடக்கத்திய நண்பர்கள் யாரையேனும் கேட்கப் போனால், விஸ்வரூபம் படத்தில் தீபக்கைப் பார்த்து ஃபாரூக் சிரிக்கும் சிரிப்பைச் சிரிப்பார்கள். அதற்கு அர்த்தம் மிக எளிது. நான் கொண்டு போன கஜல் பாடலை துப்பாக்கியால் பின்னே சுட்டுப் பொசுக்கி அதன் அர்த்தத்தைக் கொல்லப் போகிறார்கள் என்பதுவே அது. 

இப்படியாக கஜல்களைப் புரிந்து கொள்வது எப்படி என்று நாம் பாயைப் பிராண்டிக் கொண்டிருந்தபோது கண்ணில் அகப்பட்டதுதான் “கஜல்” பற்றிய அபுல் கலாம் ஆசாத் எழுதிய இந்தப் புத்தகம். என்னைப் போன்ற அரைகுறை கஜல் ரசிகர்களுக்கு என்றே கிழக்கு பதிப்பக வெளியீடாக இந்தப் புத்தகம் வந்துள்ளதாகத் தோன்றுகிறது. இதன் ஆசிரியர் அபுல் கலாம் ஆசாத் சவுதியில் வசிப்பவர்.

தென்னிந்தியா தாண்டினால் வீணை சித்தார் ஆகி, ஜலதரங்கம் சந்தூராக உருமாறி, மாண்டலின் சரோடாக மாறி கர்நாடக இசை ஹிந்துஸ்தானியாக மாறிவிடும். இதுதான் எனக்குத் தெரிந்தவரையில் சாஸ்திரிய இசை என்பது. ஆக, தென்னிந்தியா தாண்டினதும் சினிமா இசை தவிர்த்து எதைக் கேட்டாலும் அது ஹிந்துஸ்தானி என்று நினைத்திருந்தவனுக்கு முதலில் கஜல் அறிமுகமாயிற்று. சரி, ஹிந்துஸ்தானி தவிர்த்த மற்றவை எல்லாம் கஜல் வடிவங்களா? பின்னர் கீத் என்று ஏதோ சொல்கிறார்கள். அந்த வடிவத்திற்கும் கஜல்களுக்கும் லேசாகத்தான் எனக்கு வித்தியாசம் தெரிந்தது. எனினும் அவை சரிவர பிடிபடவில்லை. 

இந்தப் புத்தகத்தில் கஜல், கீத், ருபை, நக்ம், ஷாய்ரி என்று ஒவ்வொரு வடிவம் பற்றியும் தெளிவாகவும் சுருக்கமாகவும் குறிப்பிடுகிறார் ஆசிரியர். 

கீத் என்பது “பாடல்”,. ”நக்ம்”  என்பது நாம் குறிப்பிடும் விருத்தத்திற்கு நிகர். ஷாய்ரி என்பது இலக்கணம் ஏதுமற்ற புதுக்கவிதை. ருபை என்பது நான்கு அடிகளால் அமைந்த பாடல். இவை குறித்து மேலும் நீங்கள் புத்தகத்தில் படித்து அறிந்து கொள்தலே நலம்.

நக்ம் என்ற சொல்லில் இருந்தே நக்மா என்ற பெயர் வந்ததாம். விருத்தம் போன்ற ஓர் அழகி என்பதே அர்த்தம். ”ஹிஹ்ஹீ! கரீட்டுதாம்பா”, என்ற உங்கள் மனக்குரல் எனக்குக் கேட்கிறது பாருங்கள்.

புத்தகத்தில் மொத்தம் இருபத்தி ஐந்து அத்தியாயங்கள். முதலில் கஜல் பற்றிய அடிப்படை அறிமுகம். அதன் வரலாறு, இந்தியாவில் அதன் வருகை பற்றிய தகவல்கள், தென்னிந்தியாவிற்கு கஜல் என்ற வடிவம் பயணப்பட்ட சேதி, பின்னர் அதன் கட்டமைப்பு பற்றிய நுட்பத் தகவல்கள் என்று சுருக்கமாக முன்னுரையாக வரும் முதல் இரண்டு முன்னுரை (அல்லது) முன்-அத்தியாயங்களில் விவரித்துவிட்டு முதல் அத்தியாயத்தில் டாப் கியர் எடுக்கிறது புத்தகம்.

இருபத்தி ஐந்து கஜல்களைத் (சில கீத்’கள்) தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ஆசிரியர். அபுல் கலாம் ஆசாத் தமிழிலும் வலுவான ஞானம் கொண்டதால் அந்த உருதுப் பாடல்களை சந்தம் சிதையாமல் மொழி பெயர்த்துத் தந்திருக்கிறார். இந்த பிரபலப் பாடல்களைத் தேடிப் பிடித்து இந்தப் புத்தகத்தின் துணைக்கொண்டு கேட்கவும் அவற்றின் அர்த்தத்தை உள்வாங்கவும் நாம் தயாராகலாம். அதன்மூலம் மேலும் பல நல்ல கஜல்களைக் கண்டடைய இந்தப் புத்தகம் நமக்கு ஒரு திறப்பாகவும் அமையலாம். 

இந்தப் புத்தகத்தை வாசிக்காமல் அந்தப் பாடல்களையும் அவற்றின் மொழிபெயர்ப்பையும் சிலாகித்தல் சிரமம் என்பதால் அந்த மொழிபெயர்ப்புகளை நீங்கள் புத்தகத்திலேயே பார்த்துக் கொள்ளல் நலம் என்று இங்கே அவற்றைக் கொண்டு வாராது தவிர்க்கிறேன்.

மொழி ஞானத்தினையும் தாண்டி ஒரு நல்ல கஜலின் அர்த்தத்தை நாம் உள்வாங்க அது உருவான பின்னணி, அதன் காலகட்டம் மட்டுமல்லாது அந்த கஜல் உருவான மண்ணின் கலாசாரத்தையும் அறிவது அவசியம் என்று குறிப்பிடும் ஆசிரியர் அதற்கு உதாரணமாகத் தமிழ்ப் பாடல் ஒன்றினைக் குறிப்பிடுகிறார்

“மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் உனைப் பூசுகிறேன்”,

இந்த வரிகளை உள்வாங்க மன்மதனையும், சந்தனம் பூசும் சம்பிரதாயத்தையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். இது கஜல் குறித்த ஆரம்ப அறிமுகத்தில் ஆசிரியர் முன் வைக்கும் ஒப்பீடு.

ஒரு மிகத் தேர்ந்த வாசகனால்தான் ஒரு நல்ல நூலாசிரியன் ஆக இயலும் என்பதை மறுபடியும் அபுல் கலாம் ஆசாத் மூலம் தெரிந்து கொண்டேன். இந்தப் புத்தகத்தில் ”காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்”, என்று வாலியையும் அழைக்கிறார், “அவர்கள் என்னை அடிக்கவில்லை; அவளுக்குப் பிடித்தவளாய் என்னைச் செதுக்குகிறார்கள்”, என்று கவிக்கோ கவிதையையும் குறிப்பிடுகிறார். இப்படிப் புத்தகம் நெடுக நமக்குப் புரியும் ஒப்பீடுகள் வாயிலாக ஒரு கஜல் உருவாகும் சூழலை, அதன் அர்த்தத்தை விளக்கியிருப்பதே புத்தகத்தின் தனிச் சிறப்பு எனலாம்.

கஜல்களில் நிறைய உபயோகிக்கப்படும் ஷராப், ஷராபி என்னும் சொற்கள் (மது, போதை) குறித்து நான் இதுவரை கொண்டிருந்த அர்த்தத்தை அப்படியே போட்டு உடைத்துவிட்டார் அபுல் கலாம் ஆசாத். அவை ஒரு மது மயக்க மன்னனின் குழறல் என்று நான் நினைத்திருக்க, அது ஒரு குறியீட்டுச் சொல்லே என்கிறார் ஆசிரியர்.

அதற்கான உதாரணம்:

ஆண்: அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக் கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்
பெண்: கன்னத்திலிருக்கும் கிண்ணத்தை எடுத்து மதுவருந்தாமல் விடமாட்டேன்.

இங்கே பெண் குறிப்பிடும் மதுவானது ‘country liquor” அல்லது “jhonny walker” வகையறா அல்ல. 

மேலும் கவிமணி’யின் “வெயிற்கேற்ற நிழலுண்டு” பாடலின் “ கலசம் நிறைய மதுவுண்டு”, என்பது சாராயத்தையா குறிக்கிறது என்ற ஆசிரியரின் கேள்வி அதி அற்புதமானது. 

பின்னர் வரும் அத்தியாயத்தில் ஆசிரியரே மதுவை முதலில் மதுவல்ல என்றேன், அதை நானே தற்காலிகமாக வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று உண்மையிலேயே மதுவையும் போதையையும் குறிப்பிடும், ”யே கமே ஸிந்தகி முஜ்கோ தே மஷ்வாரா”, எனும் பாடலில் பங்கஜ் உதாஸ் அவள் இல்லத்திற்கும் மதுச்சாலைக்கும் இடையில் நின்று திண்டாடும் நிலை பாடும் பாடலைப் பற்றிப் பேசுகிறார். ஆக, மது என்பது குறியீட்டுச் சொல்லா அல்லது மதுவே தானா என்பதை அந்தந்தப் பாடலின் தன்மையை வைத்து உணரவேண்டும் என்று புரிகிறது.

இப்படி தத்துவம், உளறல், உவமை, காதல், வர்ணிப்பு, மது மயக்கம் என்று கஜலின் முக்கிய வடிவங்கள் எல்லாவற்றுக்கும், கஜலின் முக்கியப் பாடகர்களின் பிரபலப் பாடல்கள் சிலவற்றின் துணைக் கொண்டு மொழிபெயர்ப்பு தந்திருக்கிறார் அபுல் கலாம் ஆசாத். கஜல் பாடல்களை இயற்றிய முக்கிய கவிஞர்களின் சுருக்கமான வரலாறும் பிற்சேர்க்கையாகத் தரப்பட்டுள்ளது.

கஜல் பாடல்களை ரசிப்பதில் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்களுக்கு நல்ல அறிமுக நூல். 

கஜல் (பாடப்பாடப் பரவசம்) – அபுல் கலாம் ஆசாத் – 112 பக்கங்கள், விலை ரூ. 45/- (2005 பதிப்பு) – இணையம் மூல்ம் புத்தகம் வாங்க: கிழக்கு

7 Mar 2013

மங்கல இசை மன்னர்கள் - பி.எம்.சுந்தரம்


சிறப்புப் பதிவர்: லலிதா ராம் (@lalitha_ram)

குடும்பத்திலும், (எழுத்தாலும் இணையத்தாலும் அமையாத) நண்பர்களிடையிலும் எப்போதாவது நான் எழுதுவதைப் பற்றி பேச்சு வந்தால், “சுப்புடு மாதிரி எழுதுவியா?”, என்ற கேள்வி தவறாமல் வரும். என்றாவது ஒரு நாள் “பி.எம்.சுந்தரம் மாதிரி எழுதுவியா?”, என்று யாரேனும் கேட்பார்களா என்று நான் ஏங்குவதுண்டு.




யார் இந்த பி.எம்.சுந்தரம்?

ஆய்வாளர், எழுத்தாளர், பாடகர், வாக்கேயக்காரர் என்ற அவருடைய பன் முகங்களில் ஒவ்வொன்றிலும் ஆழ்ந்து தேர்ந்தவர். இசை ஆய்வாளர் என்றால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் சமஸ்கிருதத்தில் எழுதிய நூலைப் படித்து அதில் குறிப்பிட்டுள்ளவை 22 ஸ்ருதிகளா 32 ஸ்ருதிகளா என்றெல்லாம் ஒரு சிலருக்கு மட்டுமே புரிவது போலத் தோன்ற வைக்கும்படி பேசுபவர் என்று எனக்கிருந்த எண்ணத்தை முற்றிலும் மாற்றியவர். இசையும் இலக்கியங்களும் முறைப்படி கற்று அவற்றில் அவர் செய்துள்ள ஆய்வுகளின் அகலமும் ஆழமும் அசாதாரணர்களுக்குரியவை. சிறியதும் பெரியதுமாய் அவர் தொகுத்தும் எழுதியும் வெளியிட்டிருக்கும் நூல்கள் ஏராளம். கடந்த இருநூறு ஆண்டுகளுக்குள் நம்மிடை இருந்த இசைக் கலைஞர்கள் என் ஆர்வத்துக்கு உரியவர்கள் என்பதால் பி.எம்.சுந்தரத்தின் இரு நூல்கள் எனக்கு ஆதர்சமானவை.
 

Related Posts Plugin for WordPress, Blogger...