A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label Elizabeth Kostova. Show all posts
Showing posts with label Elizabeth Kostova. Show all posts

10 Feb 2013

வரலாற்றாய்வாளர் - எலிசபெத் கொஸ்தோவா

சிறப்பு பதிவர் : அஜய் 

எக்காலத்திலும் நம்மை அச்சத்தில் உறைய வைக்கும் இயல்பு கொண்ட ஒரு தொல்கதையை 'வரலாற்றாய்வாளர்' நவீனப்படுத்துகிறது.  பல திரைப்படங்களுக்கும் புத்தகங்களுக்கும் கதைக்கருவைக் கொடுத்த தொல்கதை இது - ப்ராம் ஸ்டோகர் தன் டிராகுலாவை உருவாக்க அடிப்படையாக இருந்த 'கவுண்ட் டிராகுலா' (Count Dracula) அல்லது 'வ்லாத் தெபஸ்' (Vlad Tepes) என்ற அந்த நிஜ மனிதரைத்தான் சொல்கிறேன். டிவிலைட் (Twilight) தொடரை அதன் வெற்றியின் பாதிப்பில் நகல் செய்து எழுதப்பட்ட நாவல் இல்லை இது. இரத்தக் காட்டேரிகள், vampirism   போன்ற விஷயங்கள் அதிக அளவில் இல்லாத, முற்றிலும் வேறொரு தளத்தில் இயங்கும் கதை எலிசபெத் கொஸ்தோவாவின் 'வரலாற்றாய்வாளன்'. இது டான் ப்ரௌவுனும் அவரது சகாக்களும் பொங்கலிட்டுப் பரிமாறும் பழகிய சரக்கில்லை. சிறப்பான கதையமைப்பு கொண்ட இந்த நாவலில் அவற்றைவிட தேர்ந்த கதை சொல்லல் உண்டு. 

இந்த நாவல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பெயர் சொல்லப்படாத கதைசொல்லியின் பார்வையில் இதன் முதல் பகுதி துவங்குகிறது. நாவலின் எந்த இடத்திலும் இவரது பெயர் குறிப்பிடப்படுவதில்லை. எழுபதுகளில் நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறார் இவர். இந்தப் பகுதியில், ஒரு விடலைப் பருவ மாணவியான கதைசொல்லி தன் தந்தை பால் உடன், ஆம்ஸ்டர்டாம் நகரில் வசிக்கிறார். பால் சமூக அமைதி மையம் ஒன்றை நிர்வகிக்கிறார், அது மனிதாபிமான சேவைகளைச் செய்கிறது.  சொர்க்கம் போன்ற கதைசொல்லியின் வாழ்க்கையில் ஒரு புத்தகம் குறுக்கிடுகிறது - அவரது தந்தையின் நூலகத்தில் ஒரு நாள் அது எதிர்ப்படுகிறது. மரக்கட்டையில் செதுக்கிய வடிவங்களில் மசி பூசி அச்சிடப்பட்ட அதன் ஓவியங்களில் டிராகுலாவோடு தொடர்புடைய டிராகனின் ஒற்றை உருவமும் இருக்கிறது. அது குறித்து தன் தந்தையிடம் விளக்கம் கேட்கிறார், ஆனால் அவருக்கு எதுவும் பேசும் விருப்பம் இல்லை. ஆனால் எப்படியோ தன் தந்தையிடமிருந்து உண்மையை வரவழைத்து விடுகிறார். கதை சொல்லியின் தந்தை கொஞ்சம் கொஞ்சமாகப் பேசத் துவங்குகிறார்.

Related Posts Plugin for WordPress, Blogger...