A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்
Showing posts with label அபிதா. Show all posts
Showing posts with label அபிதா. Show all posts

17 Mar 2019

அபிதா - லா.ச.ரா.


என்ன எழுதுவது என்று தெரியவில்லை...


ஆம்னிபஸ்சில் லாசரா. எழுதிய அபிதா’ நாவலுக்கு இதற்கு முன்னமே ஒரு விமர்சனப் பதிவு வந்திருக்கிறதுநம்ம நட்டு ஏற்கனவே எழுதியது விமர்சனம் என்ற வகையில் நிச்சயம் வராதுபுத்தகத்தைப் படித்தவுடன் தனக்குத் தோன்றிய நாற்பது வார்த்தைகளையும் புத்தகத்தில் இருந்து சில மேற்கோள்களையும் காட்டி ஒரு வியப்புடன் அந்த பதிவை முடித்திருந்தார் நட்டுலாசரா'வின் விவரணைகளுக்கு நம்மால் விமர்சனமெல்லாம் எளிதில் எழுத ஏலாது என்று சிலிகான் ஷெல்ப் அண்ணன்கூட சொல்கிறார்நானும் ஒன்றும் விதிவிலக்கல்ல.

இந்த பதிவின் ஆரம்பத்தில் நான் எழுதித் தொடங்கிய அந்த மூன்று- நான்கு வார்த்தைகள் கூட நட்டு அந்த விமர்சனப் பதிவிற்குக் கொடுத்த தொடக்க வார்த்தைகளான அதே மூன்று-நான்கு வார்த்தைகள்தான்.



சரி, விஷயத்திற்கு வருவோம்.

எனக்கு அம்மாவின் வழியில் ஒரு கொள்ளுத் தாத்தா இருந்தார் - சென்ற நூற்றாண்டின் இருபதுகளில் அல்லது அதற்கு சற்றே முந்தைய காலகட்டத்தில். அவர் பெண் பார்க்கப் போய் இருக்கிறார். பார்த்த இடத்தில் இவருக்குப் பெண்ணை பிடிக்கவில்லை, அல்லது பெண் வீட்டாருக்கு இவரைப் பிடிக்கவில்லை. அந்த இடம் தட்டிப் போய் விட்டது.

அதன் பின் வேறொரு பெண்ணைப் பார்த்தார், மணந்தார். சில வருடங்களுக்குப் பிறகு இவர் மணந்த அந்தப் பெண் நோய்வாய்ப்பட்டு மறைந்துவிட்டார். அந்த மனைவியின் மூலமாக குழந்தைகள் ஏதுமில்லை.
இப்போது இரண்டாவது திருமணத்திற்கு வீட்டில் பார்த்தார்கள். ஒரு பெண்ணைப் பார்க்கப் போகிறார். பார்க்கப்போன இடத்தில் தன் முதல் கல்யாணத்திற்கு முன்னதாகத் தான் பார்க்கப் போய், தட்டிப் போன இடத்தின் அதே பெண் நின்று கொண்டிருக்கிறார். இப்போது மணப்பெண்ணாக அல்ல; மணப்பெண்ணின் தாயாக.

அந்தப் பெண்ணை இப்போது இரண்டாம் மணம் புரிகிறார். அதாவது தான் முதன்முதலில் பார்த்த பெண்ணின் மகளை இப்போது இரண்டாவதாக மணமுடிக்கிறார்.

கேட்பதற்கு எந்த விதத்திலும் உவப்பாக இல்லாத ஒரு கதை இது. இல்லையில்லை கதை இல்லை; நிஜம்தான். என்றாலும் கேட்பதற்கு அத்தனை உவப்பாக இல்லை பாருங்கள். தர்க்கரீதியாக, நியாய ரீதியாக அல்லது தர்ம ரீதியாக ஏதும் கேள்விகள் இருந்தால் இங்கே விடை சொல்ல சொல்ல முகம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனாலும் நிஜக்கதை.

இந்தக் கதைக்கும் அபிதாவுக்கும் என்ன தொடர்பு? இருக்கிறது என்றால் இருக்கிறது, இல்லை என்றால் இல்லை. அபிதாவை வாசித்துவிட்டுத்தான் சொல்லுங்களேன். முன்னமே வாசித்தவர் என்றாலும் சொல்லுங்கள்.

அபிதாவில் லாசரா. சொல்லும் கதை ரொம்பச் சின்னது. உண்மையாகப் பார்த்தால் இந்தக் கதையை ஒரு சிறுகதையாக கூட அவர் எழுதி இருக்க முடியும். ஆனால் சிறுகதையாக இதை எழுதி இருந்தால் அபிதாவிற்கு என்று தமிழ் நாவல் உலகில் ஒரு இடம் கிடைத்து இருக்குமா என்று தெரியவில்லை. ஏனெனின், அபிதாவின் விஷய கனம் கதையில் இல்லை. லாசரா'வின் விவரணையில் தான் இருக்கிறது.

கதை முழுக்கவே கதையின் நாயகன் பேசிக்கொண்டே நம்முடன் இருக்கிறார். நம்முடன் என்றா சொன்னேன்? இல்லை இல்லை... தன்னுடன் பேசிக் கொண்டே இருக்கிறார். அந்தப் பேச்சின் விஷயங்கள்தான் ஒட்டுமொத்த அபிதாவுமே. கதையின் நாயகன் தனக்குத்தானே பேசிக் கொள்ளும் விஷயத்தில் ஓராயிரம் விஷயங்கள் உள்ளன. நான் படித்து விழி விரித்துப் புருவங்கள் உயர்த்தி வியந்தவைகள் பத்து அல்லது பதினைந்து விஷயங்கள் இருக்கக்கூடும்.

இந்தக் கதைக்கு விமர்சனம் எழுதும்போது இந்தக் கதைக்கான இணைப்பைத் தந்து ஒரு மணி நேரத்தில் படித்து விட முடியும் என்று எழுதியிருந்தார் நட்டு. நிச்சயம் ஒரு மணி நேரத்தில் படித்துவிடக்கூடிய அளவுதான் அபிதா நாவல். ஆனால் கதையின் நாயகன் பேசும் பேச்சும், விவரணைகளும் பல முறைகள் படித்து உள்வாங்கிக் கொள்ளத்தக்கது.

கமல்ஹாசனின் நகைச்சுவைத் திரைப்படங்களைப் போல லாசரா'வின் ஒரே படைப்பைப் பலப்பல முறைகள் படித்துக் கொண்டே இருக்கலாம் போல. ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு பிம்பம் உங்களுக்கு வெளிப்படலாம்; ஒவ்வொரு விஷயம் உங்களுக்கு விளங்கலாம்.

கதிரில் லாசரா 'சிந்தாநதி' என்ற அனுபவத் தொடரை எழுதினார். உங்களுக்கு வாரம் ரெண்டு பக்கம் ஒதுக்கறேன், ஏதாவது எழுதுங்க, என்று ஆசிரியர் கேட்டுக் கொள்கிறார். ஆசிரியர் அறைக்கு நுழையும் முன் தினமணி கதிரில் லாசரா. எழுதிய சிறுகதைக்கு வந்த கடிதங்களை ஊழியர் ஒருவர் லாசரா. கைகளில் தருகிறார்.

"லாசரா என்னத்தை எழுதுகிறார்? ஒண்ணும் புரியலை. தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலத்தான் இருக்கிறது", என்கிறது அவற்றுள் ஒரு கடிதம். அடுத்த நிமிடம், உங்களுக்கு அடுத்த வாரத்தில் இருந்து இரண்டு பக்கங்கள், என்கிறார் ஆசிரியர்.

லாசராவின் தயக்கத்திற்கு - "தலையைப் பிய்த்துக் கொள்வோர் பிய்த்துக் கொள்ளட்டும். புரிவோர்க்குப் புரியட்டும். புரியவில்லை என்றால்தான் என்ன கெட்டுப் போச்சு. இரண்டு பக்கங்கள் தானே", என்கிறார் ஆசிரியர்.

‘சிந்தாநதி’ தொகுப்பாக வெளிவந்த போது அதன் முன்னுரையில் இப்படி எழுதுகிறார் லாசரா - " புரிந்தது, புரியாதது என்ற இரண்டு நிலைகளும் தற்காலிகமானவை. ஒருவருக்கு ஒருவகைப் புரிதல் இருக்கலாம். மற்றவருக்கு வேறொன்று. அதே மனிதருக்கே வேறொரு சந்தர்ப்பத்தில் அதே விஷயம் வேறொன்றாகப் புரியலாம்."

உங்களுக்கு இது புரியவில்லையா? – “விட்டுத் தள்ளுங்கள் நட்டமில்லைஎன்பதுதான் அது.

கதையைப் பாதி வாசித்துக் கொண்டிருந்த போது, இதை இன்னமும் யாரும் சினிமாவாக எடுக்க ஏன் முயலவில்லை என்று யோசித்துக் கொண்டேன். ஒருவேளை எடுத்து நமக்குத் தெரியாமற் போனதோ என்னவோ என்றும் எண்ணம். முழுக்க வாசித்தபின் தோன்றியது என்னவென்றால், இதையெல்லாம் சத்தியமாக எந்தக் கொம்பனாலும் படமாக்க முடியாது என்பதுதான்.

ருத்ரன் அபிதாவை நாடகமாக்க முயன்று படுதோல்வி கண்டதாகத் தெரிகிறது. நாடகம் எல்லா விதத்திலும் தோல்வி என்று தன் பதிவில் குறிப்பிடுகிறார் ருத்ரன். ஆச்சர்யம் ஏதுமில்லை எனக்கு.

அப்புறம்... எழுதினால் எழுதிக் கொண்டே இருக்கலாம். அபிதா வாசிக்காதவர் நீங்கள் என்றால் முதல் வேலையாக புத்தகத்தை வாங்கி வாசியுங்கள். முன்னமே வாசித்தவர் என்றால் ஃபேஸ்புக், வாட்சாப்புகளை கொஞ்சம் எறிந்து தொலைத்துவிட்டு இன்னொரு முறைதான் வாசியுங்களேன்.


12 Aug 2012

அபிதா – லா.ச.ரா

என்ன எழுதுவதென்று தெரியவில்லை. லா.ச.ரா நல்ல எழுத்தாளர். எப்படியாவது ஒரு இருநூறு இருநூற்றைம்பது வார்த்தைகள் எழுதிவிட்டால், அப்புறம் புத்தகத்திலிருந்து ரெண்டு மூணு பத்திகளை எடுத்துப் போட்டுவிடலாம். லா.ச.ரா என்றாலும் லா.ச.ராமாமிருதம் என்றாலும் ஒரே எண்ணிக்கையில்தான் எம்.எஸ் வேர்டு எண்ணுகிறது. லா.ச.ராமாமிருதம் நல்ல எழுத்தாளர். மனவோட்டத்திலேயே அவர் கதைகளை எழுதினாலும், சாதாரண மனவோட்டத்திற்கும் அவருடைய மனவோட்டத்திற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. நம்மால் அவர் போல் சிந்திக்க இயலாது. ஐம்பது வார்த்தைகள் சேர்ந்துவிட்டது. ஒரு சமயம், வண்டியின் என்று ஆரம்பித்து எரிந்து கொண்டிருந்தது வரை ஒரே மூச்சில் எழுதிவிட்டாரோ என்று தோன்றுகிறது.

சோசியல் நெட்வொர்க்களில் எழுதும் ஒருவர், தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் நடந்த உரையாடலை அதீதமாக ரொமாண்டிஸைஸ் பண்ணியிருந்தார். அவ்வளவு செயற்கைத்தனம். அபிதாவும் ஒரு தம்பதியருக்கிடையே இருக்கும் கசப்பை விளக்குவதில்தான் தொடங்குகிறது. (இது கணவன்-மனைவி கதையில்லை).

லா.ச.ரா எழுதுகிறார், “பிடிபடாத தாது இந்தக் கசப்பு, புரியாத கோபம், இனம் தெரியாத ஏக்கம், காரணம் காட்டாது ஏய்க்க ஏய்க்க, அதன் மூட்டம் மட்டும் எங்கள் உறவில் கவிந்தது.” இதுதான் நிஜம். நீங்கள் இருவரும் ஒன்று; நீ ஒரு பாதி அவள்/அவன் ஒரு பாதி என்று சொல்லிவிட்டபின், தத்தம் மறுபாதியின் ஆசைகளையும் பலவீனங்களையும் காலாகாலத்திற்கும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம். “ஒரு கூட்டில் இரு புலிகள் வளைய வந்தன. ஒன்றையொன்று கவ்விக் கிழித்துக் கொண்டு ஒன்றில் ஒன்று புதைந்து ஒரு பந்தாகி உருள்கையில் எந்தச் சமயம் சண்டையிலிருந்து சமாதானம், சமாதானத்திலிருந்து சண்டையென்று அவைகளே அறியா. மூலக் குரூரத்தின் இரு விள்ளல்கள் ” இது எவ்வளவு உண்மை. என்னால்தான் நீ முழுமையாகிறாய் என்ற ஆணவமோ, உன்னைவிட்டால் அதிகாரம் செய்வதற்கு எனக்கு கதியேதும் இல்லையென்ற இயலாமையோ, எதுவோ ஒன்று. புலிகள் ஒன்றை ஒன்று காயப்படுத்திக் கொண்டு, பின் இதுவும் இல்லையென்றால் எங்கு போவது என்றெண்ணித் தன் மீதே பரிதாபப்பட்டுக் கொண்டு, சக புலியை அரவணைத்து, பின் பிறாண்டி…

சண்டைக்குப் பின் சமாதானத்திற்கு வரும்  மனைவி-

என் காலடியில் தரையில் அமர்கிறாள்.
புலி. “

புலி அடுத்த சண்டைக்குத் தயாராகிறது என்கிறார் லா.ச.ரா. பின், “இப்படித் தணிந்து, அவளை இயற்கைக்கு விரோதமாய்ப் பார்க்கவும் பிடிக்கவில்லை. ஒருவருக்கொருவர் ஒருவரிடமிருந்து ஒருவர் என்னதான் வேண்டுகிறோம்? வாழ்க்கையில் இதற்குள்ளேயே இவ்வளவு தெவிட்டல். பாக்கி நாள் கழிவதெப்படி?” 

வேறு யாரையாவது கல்யாணம் செய்து கொண்டிருந்தால் தன் வாழ்வு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதுதான் பலருடைய எண்ணம். இந்த விஷயத்தை ஒருவரும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை.  அப்பாவிடம் இது பற்றி பேசும்போது, உனக்கு ஒண்ணும் தெரியாது. கல்யாணம் பண்ணிக்கிற வழியைப் பார்” என்பார். 

லா.ச.ரா-வின் எண்ண ஓட்டத்துடனேயே ஓட வேண்டும். மனிதர் தனக்குத் தானே பேசிக் கொள்கிறார். அல்லது தன்னைப் போன்ற ஒருவருடன். “என்னுள் நான் காணும் சூன்யத்தில், எனக்கு வைக்கும்  பெரிய சூன்யத்தில் மறைந்து போன சின்ன சூன்யம்” என்னவென்று புரிகிறதா? மீண்டும் வாசித்துப் பார்ப்போம். “என்னுள் நான் காணும் சூன்யத்தில், எனக்கு வைக்கும்  பெரிய சூன்யத்தில் மறைந்து போன சின்ன சூன்யம்” இப்போது? புரியவில்லையா? இருக்கட்டுமே. என்னவொரு வார்த்தை அடுக்கு. எல்லாவற்றையும் அப்படியே வெட்டும் துண்டுமாகத்தான் சொல்ல வேண்டுமோ? நமக்கு ஏன் புரிய வேண்டும்? அவர் அவருடன் அல்லவா பேசிக் கொண்டிருக்கிறார்.

தன் மனம் தரும் ஆறுதலைவிடச் சிறந்தது உண்டோ. “உண்மை, தெய்வம், விடுதலை என்கிற பெயரில் ஏதோ மாயா சத்யத்தைத் தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்புவதும் வாழ்வதும் என்னவோ வாசனைகள், பிம்பங்கள், நினைவுகள், கனவுகள் என்னும் சத்ய மாயையில் தான் இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடித்தாலும் இருப்பதை மறுப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நிழல்களில் தெளிந்த நிழல்தான் மனம், உணர்வு, புத்தி, ஞானம், தரிசனம், உண்மை, தெய்வம், முக்தி என்று இந்த அனுமான நிலைக்கு என்னென்ன பேர்கள் உண்டோ அவை அத்தனையும். அப்பவும் அந்தத் தெளிந்த நிலையும் ஒரு தெளிந்த நிழலன்றி வேறில்லை என்று என்ன நிச்சயம்?

பேசிக் கொண்டிருக்கும்போதே அங்கங்கே எள்ளல். திருவேலநாதரைப் பற்றிப் நினைக்கும் போது, அவருக்கு அந்த மொட்டை மண்டை தான் நினைவுக்கு வருகிறது. பளப்பளா, பளப்பளா. நமக்கு கவலையைக் கொடுத்த கவலையற்ற கடவுள் கொடுத்து வைத்தவர். ஒரே ஒரு சாம்பிள், “அந்தப் பிராம்மணன் இன்னமும் வரல்லியே? எனக்குத் தெரியும். அங்கேயே குளத்துல குளிச்சுட்டு, நேத்து சோத்தையே சாமிக்குக் காட்டிப்பிட்டு ஒரு நடை மிச்சம் பண்ணிண்டு வந்திடுவார்-”
அடுத்த ஒரு மணிநேரத்தில் படித்து விட முடியும். PDF | Archive.org

*சாய்வெழுத்தில் இருக்கிறதெல்லாம் அபிதாவிலிருந்து எடுத்த வரிகள்.

அபிதா | லா.ச.ராமாமிருதம் | பக்கங்கள் 120 | விலை ரூ.75 | கிழக்கு பதிப்பகம்

Related Posts Plugin for WordPress, Blogger...